Professional Documents
Culture Documents
நாள் : செவ்வாய்
திகதி : 24/03/2020
பாடம் : BTMB 3043 தமிழ் மொழி இலக்கணம் 1
` மனிதநேயம்
முன்னால் காணும்
ஒவ்வொருவரையும் நேசிக்க
இயலவில்லை என்றால்
கண்ணுக்குத் தென்படாத
-அன்னை தெரெசா-
இந்த உலகம் பல உயிர்களின் தோட்டம். மனித பூக்கள் அதில் ஏராளாம். அந்த பூக்கள்
யாவும் ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பு மட்டுமே மனிதநேயமாக இருக்காது.
ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு ஒருவருக்கு நேரிடும் கஷ்டங்களை உணர்ந்து முழு
மனத்துடன் உதவி செய்வதும் ஒரு வகையான மனிதநேயம்தான். உதவிகளில் பல வகைகள்
உண்டு அதாவது பண ரீதியான உதவி, பொருள் ரீதியான உதவி, சேவை ரீதியான உதவி
மற்றும் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு உதவி புரிவது. இம்மாதிரியான உதவிகள் புரியும்
மனிதனிடம் மனிதநேயம் உள்ளங்கை நெல்லிக்கணியாகக் காணலாம். உதாரணத்திற்குப்
பேருந்தில் ஒரு மூதாட்டிக்கு ஒரு சிறுவன் உட்காருவதற்கு இடம் தந்தால் இது
மனிதநேயத்தைக் குறிக்கும் செயலாக அமைகிறது.
இனம், மொழி, மதம், வர்ணம், சாதி இவை எல்லாவற்றுக்கும் ஒரு அடையாளம் உண்டு.
ஆனால் எந்த அடையாளமும் இல்லாமல் எல்லாவற்றுக்கும் மேலாக போற்றப்படுவது
மனிதநேயம். இனம் மதம் பாராமல் அனைவரையும் சமமாகப் பார்த்து திறந்த
எண்ணங்களுடன் உதவி அல்லது அன்பு செலுத்துவரிடம் தான் மனிதநேயத்தைக் காணலாம்.
“பசித்தவனுக்கு சோறு போடாத மதம் எனக்கு தேவையில்லை" என்றார் விவேகானந்தர். பசி
என்பது வெறும் வயிற்றுப்பசி மட்டுமல்ல. அறிவுப்பசி, வாழ வழியற்று தவிப்பது இவற்றை
போக்குவதுதான் உண்மையான மதம். அதில் இருந்து வெளிப்படுவதுதான் மனிதநேயம். கூடி
வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழியின்படி மக்கள் வாழ்ந்தால் மனிதநேயம்
தழைத்தோங்கும்.