You are on page 1of 9

பெயர் : கண்ணன் ரகுராமன்

நாள் : செவ்வாய்
திகதி : 24/03/2020
பாடம் : BTMB 3043 தமிழ் மொழி இலக்கணம் 1
` மனிதநேயம்

இந்த உலகில் நாம் நம் கண்

முன்னால் காணும்

ஒவ்வொருவரையும் நேசிக்க

இயலவில்லை என்றால்

கண்ணுக்குத் தென்படாத

கடவுளிடம் எவ்வாறு அன்பைச் செலுத்த இயலும்

-அன்னை தெரெசா-

மேற்காணும் கூற்றைப் படித்தாலே மனிதநேயத்தின் அழகான பொருள் தெல்லத் தெளிவாகப்


புரிகின்றது. மனிதநேயம் என்றவுடன் நம் சிந்தையில் தோன்றுவது மனிதர் மனிதர் மேல்
கொண்டுள்ள நேயமே ஆகும். மனிதன் என்பவன் பல உணர்ச்சிகளை உணர்வுகளை கலந்து
உருவமெடுப்பவனாவான். அந்த உணர்ச்சிகளிலும் உணர்வுகளிலும் நேயம் என்ற அந்த அன்பு,
கருணை, இரக்கம் மற்றும் சமுக நுண்ணறிவு இருக்கின்றன. மனிதனும் நேயமும் சேரும்
பொழுது அந்த அற்புதமான மனிதநேயம் பிறக்கிறது என்று அன்னை தெரெசா அக்கூற்றில்
மிக அழகாகச் சித்தரித்துள்ளார். நம் வாழ்வில் வரும் அனைத்து ஜீவராசிகளிடம் அந்த
அழகான நேயத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அவர் கூறிய
கருத்தில் மனிதநேயம் இருக்கிறது நான் புரிந்துகொண்டேன். இப்பூவுலகில் 6.7 பில்லியனுக்கு
மேற்பட்ட தொகையில் மனிதர்கள் உலகில் வாழ்கின்றனர். இவற்றுல் சிலரே மனிதநேயத்துடன்
வாழ்கின்றனர் என்று ஆணித்தரமாகக் கூறலாம். ஏனென்றால் அனைத்து மனிதனும்
மனிதநேயத்துடன் வாழ்ந்தால் இவ்வுலகமே சீரும் சிறப்புமாய் அமையும்

மனிதநேயம் என்பது வெறும் எழுத்துக்களான வார்த்தைகள் கிடையாது. இவ்வாறு


எழுத்துக்கும் எவ்வளவு மகிமை, பெருமை, வலிமை,ஆற்றல் என்பதனை வார்த்தையால் விவரித்து
கூற முடியாது. அச்சொல்லின் அருமை பெருமை எண்ணிலடங்கா. இச்சொல்லின் பொருளை
உட்நோக்கி பார்த்தோமானால் அதன் பொருள்கள் சிந்திக்க வைக்கும் அளவிற்கு பெருமை
வாய்த்தது. இறைவனின் படைப்பில் சிறந்த படைப்பு மனிதன் ஆகும். அதிலும் நேயத்தோடு
இருக்கும் மனிதர்கள் சாலச் சிறந்தவர்கள் என்று கூறினால் மிகையாகாது. மனிதநேயம்
கொண்டவர்கள் மக்கட்பிறப்பில் மேன்மையான பண்புடையவர்களாக வைரமாய் மிளிர்வார்கள்.
இந்த மனிதநேயமே மக்களின் வாழ்க்கைக்கு மேலான ஊன்றுகோலாக கருதப்படுகிறது. ஆனால்,
இன்றைய நவீன காலக்கட்டத்தில் பணத்தைத் துரத்திக் கொண்டு செல்லும் மனிதர்களிடையே
எங்கே இருக்கிறது மனிதநேயம்?

‘ஒத்தறி வான் உயிர் வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்’

என்று பொய்யா மொழிப்புலவர் கூறியது போல், மற்றவர்களுக்கு மனிதநேயத்தோடு நம்மால்


இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். உதவும் மனப்பான்மை இல்லாதவர்கள் உயிரோடு
இருந்தாலும் அவர்கள் பிணத்திற்குச் சமம் என்று அன்றே குறிப்பிட்டுச் சென்றுள்ளார் பெருந்தகை
வள்ளுவர். மனிதனை மனிதனாய் காட்டுவது இந்த மனிதநேயக் குணமே. ஆக,நெஞ்சகத்தில்
நேயம் இல்லாதவர்களுடைய வாழ்க்கை நீர் பசை இல்லாத கெட்டியான நிலத்தில் முளைத்துவிட்ட
மரமாகும். அது உயிரோடு இருந்தாலும் செழிப்போடு இருக்காது ; வாழ்க்கை நடந்தாலும் இன்பமே
இருக்காது. இந்நற்குணம் இல்லாதவர்களைச் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை மதிக்க மாட்டர்.
ஆக, இந்த சிறப்பு மிக்க குணத்தைப் பெற்றொர்கள் பிள்ளைகளின் மனதில் சிறுவயதிலிருந்து
பழக்கப்படுத்த வேண்டும்.

இந்த உலகம் பல உயிர்களின் தோட்டம். மனித பூக்கள் அதில் ஏராளாம். அந்த பூக்கள்
யாவும் ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பு மட்டுமே மனிதநேயமாக இருக்காது.
ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு ஒருவருக்கு நேரிடும் கஷ்டங்களை உணர்ந்து முழு
மனத்துடன் உதவி செய்வதும் ஒரு வகையான மனிதநேயம்தான். உதவிகளில் பல வகைகள்
உண்டு அதாவது பண ரீதியான உதவி, பொருள் ரீதியான உதவி, சேவை ரீதியான உதவி
மற்றும் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு உதவி புரிவது. இம்மாதிரியான உதவிகள் புரியும்
மனிதனிடம் மனிதநேயம் உள்ளங்கை நெல்லிக்கணியாகக் காணலாம். உதாரணத்திற்குப்
பேருந்தில் ஒரு மூதாட்டிக்கு ஒரு சிறுவன் உட்காருவதற்கு இடம் தந்தால் இது
மனிதநேயத்தைக் குறிக்கும் செயலாக அமைகிறது.

தொடர்ந்து, இன்றைய மானிடர்களிடம் குறைந்து காணப்படும் மனிதநேயத்தைத் தட்டி


எழுப்பவே உலக மனிதநேய தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் அனுஷ்டிக்கப்பட்டு
வருகிறது. அன்றைய நாளில், உலகளாவிய ரீதியில் நோய்வாய்ப்பட்டு, யுத்தம்,இயற்கைப்
பேரிடர்களில் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்களை நினைவுக்கூறும் வகையில் இத்தினம்
இன்றுவரை அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது என்பது வெள்ளிடைமலை. ஆனால், என்ன ஒரு
வருத்த்தக்க செய்தி என்றால் இன்று பலரும் இத்தினத்தின் நோக்கத்தை அறியாமலே
இருக்கின்றனர். முந்தைய காலத்தில் அன்போடும் அருளோடும் தன்னலமற்ற பொதுநலத்துடன்,
மனிதநேயக் குணத்தோடு சில உத்தமர்கள் இருந்த காரணத்தால்தான் இன்றைய மனிதக்குலம்
தழைத்து நிற்கிறது என்ற ஆணித்தரமான உண்மையை மறுக்க இயலாது.

மேலும், நம் நாட்டில் இன்று தலைத்தூக்கிக் கொண்டு நம் சமுதாயத்தையே அவல


நிலைக்குக் கொண்டு செல்லும் சமூக சீர்கேடுகளை ஆராய்ந்தால் எல்லாவற்றிற்கும்
மூலக்காரணம் மனிதநேயமின்மையே ஆகும். அன்னை தெரேசா, நெல்சன் மண்டேலா, எ.பி.ஜே
அப்தூல் கலாம் போன்ற மனிதநேயத்தின் தலைச்சிறந்த சான்றோர்களைப் படித்து வளர்ந்த
இன்றைய இளைஞர்கள் எப்படி சமூக சீர்கேடுகளில் ஈடுபட முடியும் என்ற கேள்விகளுடன்
பலர் இன்றைய தமிழ் நாளிதழ்களைப் புரட்டுகின்றனர். சமீபத்தில் காட்டு தீ போல் பரவிக்
கொண்டிருந்த பகடிவதை என்ற பிரச்சனைக்கு இன்று வரை சரியான தீர்வு இல்லை. மக்களின்
வாழ்வில் மனிதநேயம் என்பது அவசியமான ஒன்று; அந்த குணத்திற்கு மட்டுமே வாழ்வை
இனிமையாக நகர்த்திச் செல்கின்ற சக்தி உண்டு.

மனிதர், மனிதர் மேல் மட்டுமே கொண்டுள்ளது நேயம் கிடையாது. மனிதர் இயற்கை,


பிராணிகள் மீது கொண்டுள்ள அன்பும் மனிதநேயத்தையேச் சேரும். ‘வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம் வாடுகிறார் வள்ளலார்’என்ற வரியை வள்ளலார் காட்டிய மனு நீதி என்ற
புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. வள்ளார் என்னும் மகான் மனிதனிடம் மட்டும்
அன்பு செலுத்தாமல் பிராணிகள், தாவரங்களிடம் அன்பு செலுத்துவதை நாம் நம் வாழ்க்கைப்
பாடமாக எடுத்துக் கொண்டு நம் வாழ்வில் அமல்படுத்த வேண்டும். ஆக, அந்த மகான் போல்
இல்லாவிடினும் நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக பசியாக இருக்கும்
பிராணிகளுக்கு உணவு கொடுப்பது, செழிப்பு இன்றி இருக்கும் தாவரங்களுக்கு நீர் ஊற்றுவது
என்ற சிறு சிறு வேலைகளைச் செய்தாலே போதும் அழிந்து வரும் மனிதநேயத்தை
உயிர்ப்பிக்கலாம்.

எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு மனிதநேயம் இருக்கும் “இறைவனை எப்போதும்


உள்ளத்தில் கொண்டுள்ளவர்கள் இறைவனால் காக்கப்படுவர்" இப்தார் நோன்பு திறப்பு
நிகழ்ச்சியில் இந்திய அமைச்சர் ஜெயலலிதா பேசினார். அவர் பேசிய கூற்றிலிருந்து நாம்
அனைவரும் புரிந்து கொண்டது என்னவென்றால் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு நிச்சயம்
மனிதநேயம் இருக்கிறது. பெற்றோர்கள் தத்தம் பிள்ளைகளைச் சிறு வயதிலிருந்தே சமய
கல்விகளைக் கற்று கொடுத்து, வாரத்திற்கு ஒரு முறையாவது கோவிலுக்குக் கூட்டிச் சென்று
இறை மீது இருக்கும் நம்பிக்கையை மேலும் வளர்க்கச் செய்தால் அது சாலச் சிறந்தது.
இவ்வாறு செய்தால் அடுத்து வரும் தலைமுறையினர்களிடம் மனிதநேயத்தைப் பார்க்கலாம்.

இனம், மொழி, மதம், வர்ணம், சாதி இவை எல்லாவற்றுக்கும் ஒரு அடையாளம் உண்டு.
ஆனால் எந்த அடையாளமும் இல்லாமல் எல்லாவற்றுக்கும் மேலாக போற்றப்படுவது
மனிதநேயம். இனம் மதம் பாராமல் அனைவரையும் சமமாகப் பார்த்து திறந்த
எண்ணங்களுடன் உதவி அல்லது அன்பு செலுத்துவரிடம் தான் மனிதநேயத்தைக் காணலாம்.
“பசித்தவனுக்கு சோறு போடாத மதம் எனக்கு தேவையில்லை" என்றார் விவேகானந்தர். பசி
என்பது வெறும் வயிற்றுப்பசி மட்டுமல்ல. அறிவுப்பசி, வாழ வழியற்று தவிப்பது இவற்றை
போக்குவதுதான் உண்மையான மதம். அதில் இருந்து வெளிப்படுவதுதான் மனிதநேயம். கூடி
வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழியின்படி மக்கள் வாழ்ந்தால் மனிதநேயம்
தழைத்தோங்கும்.

இறுதியாக, பல உயிரினங்கள் இருந்தாலும் மனிதநேயத்தால் தான் மனித இனத்துக்கு


மரியாதை. எத்தனையோ பேர் கண்ணுக்குத் தெரியாமல் மனிதநேயத்தோடு வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். இத்தரணியில் வாழும் அவர்களால் தான் மனித குலம் மனித குலம்
இயங்கி கொண்டிருக்கிறது. புத்தம் புது பூமி வேண்டுமென்றால் ஒவ்வொரு மானிடரிடையே
மனிதநேயம் மலர வேண்டும். சர்வதேச அளவில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி
உலக மனிதநேய தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக மனிதநேய நாளில் மட்டுமே
நாம் மனிதநேயத்தைக் காட்டினால் போதாது. நம் தினசரி வாழ்க்கையை மனிதநேயத்துடன்
தொடங்கி தினம் ஒரு நன்மை புண்ணியம் சேரும்மனிதர்களாகிய நாம் மனிதநேயத்தைப் பல
கோணங்களில் பார்க்கலாம். கண்ணதாசன் சொன்னது போல் ‘அன்பும் இரக்கமும் பொங்கும்
உள்ளம் தான் கடவுள் வாழ்கின்ற இல்லமாகும்’.இரக்கக் குணம் அதாவது மனிதநேயத்தை
மறந்து வாழும் மக்கள் கடவுளைத் தேடி எங்கு அலைந்தாலும் அவரைக் கண்டுகொள்ள
முடியாது. ஆக, விதைப்போம் மனிதநேயத்தை! உயர்த்துவோம் நம் சமுதாயத்தை!

இலக்கியத்தில் இருந்து பிறந்ததுதான் இலக்கணம். இலக்கணத்தைப் பார்த்தோமானால்


பல கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் உள்ள மூன்றினை அதாவது எழுத்தியல்,
சொல்லியல் மற்றும் தொடரியல் கூறுகளை என் மனிதநேயம் கட்டுரையை வைத்து ஒப்பிடு
செய்கிறேன். முதலில் எழுத்தியல், சொல்லியல் மற்றும் தொடரியல் இம்மூன்றுக்கும்
மேலோட்ட விளக்கத்தைப் பார்ப்போம். மொழி சொற்களால் ஆனது. சொல் எழுத்தால்
ஆனது. ஆதலால், எழுத்தே சொல்லுக்கு அடிப்படையாகும் எழுத்து வகை சார்ந்த
தலைப்புகள் யாவும் எழுத்தியலில் அடங்கியுள்ளது. அடுத்து சொல்லியல் என்றால்
பொருளை அறிவதற்குக் கருவியாய் இருப்பது சொல். தொடரியல் எனப்படுவது ஒரு
சொற்றொடரில் சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் முறையைக் கட்டுப்பத்துகின்ற விதிகள்
அல்லது ஒழுங்கமைந்த தொடர்புகள் பற்றிய ஆய்வாகும். தொடரியல் விளக்கமுறை
இலக்கணத்தை ஒழுங்குபடுத்த முயல்கிறது.

முதல் அங்கமாக எழுத்தியல் பகுதியை ஆராய்ந்தால் முதன்மையாகத் தோன்றுவது


உயிரெழுத்தாகும். உயிர் எழுத்துகள் மொத்தம் 12. அவை
(அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ). உயிர் எழுத்தில் உயிர் குறில் மற்றும் உயிர் நெடில்
என்று இருவகையுள்ளது. உயிர் குறிலில் ஐந்து எழுத்துகள் அதாவது (அ,இ,உ,எ,ஒ)
உள்ளன. இவை குறுகிய ஒலியுடைய எழுத்துகளாகும். உயிர் நெடிலில் ஏழு எழுத்துகள்
அதாவது (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ) உள்ளன. இவை நீண்ட ஒலியுடைய எழுத்துகளாகும்.
உதாரணத்திற்கு என் மனிதநேயக் கட்டுரையில் முதல் பத்தியில்
(அழகான,இந்த,உலகில்,என்றவுடன் மற்றும் ஒவ்வொருவரையும்) அந்த சொல்கள் யாவும்
உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களாகும் மற்றும் அவை யாவும் உயிர் குறில்
எழுத்துகளாகும். நான்காம் பத்தியில் (ஆனால்) என்ற சொல் உயிர் நெடிலைக்
குறிக்கின்றது. உயிரெழுத்துக்குப் பிறகு மெய்யெழுத்து ஆகும். மெய்யெழுத்து 18 உள்ளன.
அவை 3 வகையாகப் பிரிக்கப்படும். வல்லினம் (க்,ச்,ட்,த்,ப்,ற்), மெல்லினம்
(ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்) மற்றும் இடையினம் (ய்,ர்,ல்,வ்,ழ்,ள்). எடுத்துகாட்டாக, இரண்டாவது
பத்தியில் (இருக்காது, தோட்டம், மனத்துடன்,கஷ்டப்படும்) என்ற சொற்களில் வல்லின
மெய்யெழுத்துகள் அடங்கியுள்ளன. மெல்லின சொற்கள் என்னவென்று பார்த்தோமானால்
முடிவுரையில் (உயிரினங்கள்,கண்ணுக்குத்,இருந்தாலும்,நன்மை). இடையினம் மூன்றாவது
பத்தியில் (இவ்வாறு,செய்தல்,அவர்,என்னவென்றால்,கொண்டுள்ளவர்கள்) எனும்
சொற்களில் தென்படுகின்றன.

எழுத்தியலில் அடுத்ததாகச் சுட்டு எழுத்துக்கள். ஒரு சொல்லில் முதலெழுத்தாக


இருந்து ஒரு பொருளைச் சுட்டிக்காட்டுவது சுட்டெழுத்தாகும். சுட்டெழுத்து மூன்றாகும்
அவை (அ,இ,உ). அ எழுத்தில் ஒரு சுட்டெழுத்து சொல் அங்கு, இ எழுத்தில் ஒரு
சுட்டெழுத்து சொல் இவன் மற்றும் உ எழுத்தில் ஒரு சுட்டெழுத்து சொல் உது.
சுட்டெழுத்து 2 வகைப்படும். அகச்சுட்டு புறச்சுட்டாகும். அகச்சுட்டு என்றால் ஒரு
சொல்லின் உள்ளே சுட்டெழுத்து அடங்கி வருமாயின் அகச்சுட்டாகும். எடுத்துக்காட்டாக
முதல் பத்தியில் (அவர்) என்ற சொல்லில் அடங்கியுள்ள சுட்டெழுத்தைப் பிரித்து விட்டால்
அது தனிச் சொல்லாக இயங்காமல் இருப்பதுதான் அகச்சுட்டு. ஒரு சொல்லுக்குப் புறத்தே
சுட்டெழுத்து நின்று இயங்குவதால் அது புறச்சுட்டாகும். சொல்லில் உள்ள சுட்டெழுத்தைப்
பிரித்தால் அது தனிச் சொல்லாக இயங்கும். எடுத்துக்காட்டாக முதல் பத்தியில்
(அக்கூற்றில்) என்ற சொல் அ + கூற்றில் என்று பிரித்தால் (கூற்றில்) என்ற சொல் தனிச்
சொல்லாக இயங்கும். மேலும், உயிர்மெய் எழுத்தும் எழுத்தியலில் அடங்கியுள்ளது.
உயிர்மெய் எழுத்து என்றால் மெய்யெழுத்தும் உயிரெழுத்தும் சேரும் போது ஆவதே
ஆகும். உதாரணத்திற்கு முதல் பத்தியில் (நம்) என்ற சொல்லில் (ந) எழுத்து உயிர்மெய்
எழுத்தாகும். (ந் + அ = ந).

சொல்லியலில் பெயர்வகை 6 உண்டு. அவை (பொருட்பெயர், இடப்பெயர்,


சினைப்பெயர், தொழிற்பெயர், காலப்பெயர், பண்புப்பெயர்). என் கட்டுரையில் முதல்
பத்தியில் பண்புப்பெயர் சொற்களைக் கண்டெடுத்தேன்(அன்பு, கருணை, இரக்கம்). ஒரு
குணத்தை அல்லது பண்பைக் குறிப்பதுதான் பண்புப்பெயர். பெயர்ச்சொல்லின் பொருளை
வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையாகும். வேற்றுமை உருபு எட்டு வகைப்படும். என்
கட்டுரையில் இரண்டாம், நான்காம், ஐந்தாம் வேற்றுமையைக் காணலாம். முதல் பத்தியில்
(கூற்றை) எனும் சொல்லில் இரண்டாவது, (பில்லியனுக்கு) எனும் சொல்லில் நான்காவது
மற்றும் மூன்றாவது பத்தியில் (வயதிலிருந்து) எனும் சொல்லில் ஐந்தாவது வேற்றுமை
உருபுகளாக அமைகிறது. அடுத்து சொல்லியல் கூறாக வினைச்சொல் அமைகிறது. ஓர்
எழுவாயின் தொழிலை அல்லது செயலைக் காட்டும் சொல் வினைச்சொல்லாகும்.
உதாரணத்திற்கு மூன்றாம் பத்தியில் (ஜெயலலிதா பேசினார்) எனும் சொற்றொடரில்
வினைச்சொல்லும் வினைமுற்றும் அடங்கியுள்ளது. ஒரு வினையின் கருத்து முழுமையாக
முடிந்திருக்கும் போது வினைமுற்றாகும். வினைமுற்று காலம், எண், இடம், பால்
ஆகியவற்றைக் காட்டுவதைப் பின்வரும் அட்டவணையின் வழி காணலாம்.
வினைமுற்று காலம் திணை எண் இடம் பால்
ஜெயலலிதா இறந்த உயர்திணை ஒருமை படர்க்கை பெண்பால்
பேசினார் காலம்
அட்டவணை 1

சொல் வகையில் அடுத்தாக இடைச்சொல். இடச்சொற்கள் பெயர் அல்லது


வினைச்சொல்லோடு சேர்ந்து வரும். தனித்து நிற்க இயலா. இடச்சொற்களை எட்டு வகையாகப்
பிரிக்கலாம். அவையானவை :
i. வேற்றுமை உருபுகள் : எ.கா: முதல் பத்தியில் [மனிதநேயத்தின்](இன்)
ii. பால் காட்டும் விதிகள் :எ.கா: இரண்டாவது பத்தியில்:[காணலாம்](ஆம்),[அமைகிறது]
(அது)
iii. காலம் காட்டும் இடைநிலைகள்:எ.கா: முதல் பத்தியில் : கூறியுள்ளார்(இறந்தகாலம்)
இரண்டாவது பத்தியில்: அமைகிறது(நிகழ்காலம்)
மூன்றாவது பத்தியில் : பார்க்கலாம்(எதிர்காலம்)
iv. சாரியைகள்:எ.கா: இரண்டாவது பத்தியில் (உதாரணத்திற்கு)
(உதாரணம் + அத்து + இன் + கு)
=அத்து, இன் முதலியன சாரியைகள் ஆகும்
v. உவமை உருபுகள் : என் கட்டுரையில் பயன்படுத்தவில்லை.
போல, புரைய, அன்ன, ஒப்ப முதலியன ஆகும்
vi. சுட்டெழுத்துகள் :எ.கா: அவர்(முதலாவது பத்தியில்)
vii. வினா எழுத்துக்கள் : பயன்படுத்தவில்லை.
(அவனா?அவன் தானே?)
viii. செய்யுள் அசைகள் : என, ஏ, அம்ம முதலியன ஆகும்
ix. இவற்றைத் தவிர்த்துத் தொடர்களை இணைக்கப்பயன்படும் ஆனால், ஏனென்றால், எனவே,
ஆகையால், போன்றவையும் தற்காலத்தில் இடைச்சொற்களாகக் கருதப்படுகின்றன. எ.கா :
முதலாம் பத்தியில் : ஏனென்றால்
: நான்காவது பத்தியில் : ஆனால்
அதனையடுத்து உரிச்சொல் சொல்லியலில் இடம்பெருகிறது. உரிச்சொல் ஒரு பொருள் குறித்த
பல சொற்களாகவும் பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக
மூன்றாவது பத்தியில் (சாலச் சிறந்தது) எனும் சொல் உரிச்சொல்லாகும்.

You might also like