You are on page 1of 1

நன்றியுரை

என் தாய் தந்த தமிழுக்கு வணக்கம். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதற்கு ஏற்ப
என்னை ஆட்குவித்து இவ்வாய்வு இனிதே நிறைவேற இன்னருள் புரிந்த எல்லாம் வல்ல
இறைவனுக்கு என் நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன்.

மேலும், இவ்வாய்வு பணியை மேற்கொள்ள எனக்கு வாய்ப்பளித்த தெங்கு அம்புவான்


அப்சான் ஆசிரியர் பயிற்சிக் கழக மொழிப்பிரிவின் தமிழ் பகுதியினருக்கும், இவ்விடுபணியை நான்
செவ்வனே செய்து முடிக்க அவ்வப்போது எங்களை வழி நடத்திச் சென்ற விரிவுரையாளர் திருமதி
உமாதேவி வீராசாமி அவர்களுக்கும் என் நன்றியினைச் சமர்ப்பிக்கின்றேன்.

அதுமட்டுமின்றி, எனக்குப் பண உதவியையும் ஊக்கத்தையும் கொடுத்து இப்பணியை


எந்தவொரு தடுமாற்றமின்றி செய்யத் துணையாக இருந்த என் பெற்றோர்களுக்கும்
இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள மறக்கவில்லை.

இத்தருணத்தில் எனக்குப் மிக உதவியாகவும் துணையாகவும் இருந்துச் செயல்பட வைத்த


என்னுடைய நண்பர்களுக்கும் என் நன்றியினைக் கூற நான் கடமைப்பட்டுள்ளேன். நான் துவண்டு
பின் வாங்கிய நேரத்தில் ஆறுதலாக இருந்து பின்பு தகுந்த அறிவுரைக் கூறி என்னை
உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும் என் நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன்.

இறுதியாக, இப்பயிற்றுப் பணியைச் செய்து முடிக்க உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும்


மீண்டும் என் நன்றி துளிகளைச் சமர்ப்பிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்.

You might also like