Professional Documents
Culture Documents
……………………………………………………………………………………………………………
வருகை புரிந்திருக்கும் பெரியோர்களே, தாய்மார்களே, சிறப்பு வருகையாளரே உங்கள்
அனைவரையும் நாங்கள் தேசிய வகை சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு விழாவிற்கு வருக
வருக என அன்புடன் வரவேற்கிறோம்.
அடுத்து, சிறப்பு பிரமுகர் உரை. காலந் தாழ்த்தாமல் சிறப்பு பிரமுகர் உரையை ஆற்றுவதற்கு
உயர்திரு அமரேந்திரா கந்தசாமி அவர்களைப் பணிவன்புடன் அழைக்கின்றோம்.
வார்த்தைகளைக் கோர்வையாய் தொடுத்து உரையாற்றிச் சென்ற நம் சிறப்பு பிரமுகர் உயர்திரு.
அமரேந்திரா கந்தசாமி அவர்களுக்கு நன்றி.
அவையினரே,
நம் விழாவின் முதல் படைப்பாக கவிதை பாராயணம். இதை வழங்குவதற்கு ஆறாம் ஆண்டு
மாணவர்களை அன்போடு அழைக்கின்றோம்.
அடுத்து, நம் கண்களுக்கு விருந்தாக ஒரு நடனம். இதை வழங்குவதற்கு பாலர் பள்ளி
மாணவர்களை அன்போடு அழைக்கின்றோம்.
ஆம் அவையினரே, விழாவின் அடுத்த அங்கமானது பாலர் பள்ளி, முதலாம், இரண்டாம் மற்றும்
மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புசார் மதிப்பீட்டின் பரிசளிப்பு நிகழ்வு.
அவையினரே,
நிகழ்வின் அடுத்த அங்கமாக, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் நடன
படைப்பு. இதனை வழங்குவதற்கு அவர்களை மேடைக்கு அழைக்கின்றோம்.
சிறப்பாக நடனம் ஆடிச் சென்ற முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு
நன்றி.
நமது விழாவில் அடுத்த அங்கமாக மலர்கிறது பாலர் பள்ளியின் பட்டமளிப்பு நிகழ்வு. முதலில்
ஆறு வயது கம்பர் வகுப்பில் இருந்து
……………………………………
அதனைத் தொடர்ந்து பாலர் பள்ளியின் ஐந்து வயது மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு.
ஐந்து வயது திருவள்ளுவர் வகுப்பில் இருந்து
……………………………………
பாலர் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துகள்.
அடுத்து ஒரு நடனம். மீண்டும் நம் கண்களுக்கு இதமான நடனத்தை வழங்க வருகின்றனர்
மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள். அவர்களை மேடைக்கு அன்போடு
அழைக்கின்றோம்.
தங்களின் சிறப்பான நடனத்தால் நம்மை மெய் மறக்கச் செய்த மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு
மாணவர்களுக்கு நன்றி.
ஆம் அவையினரே,
அவையினரே,
நமது பரிசளிப்பு விழாவின் அடுத்த அங்கமானது பள்ளிக்கு மட்டம் போடாமல் முழு வருகை
புரிந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
அவையினரே,
நிகழ்வின் அடுத்த அங்கமாக 2019-ஆம் ஆண்டின் இணைக்கல்வியில் சிறந்த அருந்தகை
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
அவ்வகையில்………………..
நமது பரிசளிப்பு விழா நிறைவைக் காண்பதற்கு முன்பதாக ஒரு நன்றியுரை. இதனை வழங்க
வருகிறார் விழாவின் செயலாளர் திருமதி ஜெய பிரியா பங்கார நாயுடு.
நன்றியுரை ஆற்றிச் சென்ற திருமதி ஜெய பிரியா பங்கார நாயுடு அவர்களுக்கு நன்றி.
*தென்றல் இசைத்து
பூக்கள் நடனமாடி
ஆனந்தமாய் பரிசு பெற்று
விழா கொண்டாடிட
மீண்டும் அடுத்த ஆண்டு
உங்களை வரவேற்கிறோம்.*
உங்களிடம் இருந்து விடைப்பெற்று கொள்வது
இவர் உங்கள் கலையரசி கணேசன்
இவர் உங்கள் மணிமாறன் ஆறுமுகம்