தாய்க்கு முதல் வணக்கம், தாய் கொடுத்த தமிழுக்கு முதல் வணக்கம்.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கறிவனின் பொற்பாதங்கள் வணங்கி எனது நன்றியுரையைத் துவங்குகின்றேன்.
முதற்கண் இன்று இந்நிகழ்வினை நமது பள்ளியில் நடத்துவதற்குத்
தேர்ந்தெடுத்த _____________________________________________________ குழுவினருக்குப் பள்ளியின் சார்பில் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நிகழ்வானது எங்களது பள்ளிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் நற்பயனை வழங்கியுள்ளது என்பதில் சிறிதெனினும் ஐயமில்லை. இவ்வேளையில் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. முனியாண்டி அவர்களுக்கும், பள்ளியின் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும், ஏற்பாட்டுக் குழுவினரின் சார்பில் எங்களது நன்றி மலர்களைச் சமர்ப்பிக்கின்றோம்.
இந்நிகழ்வின் ஏற்பாட்டில் ஏதெனும் குறைகள் இருப்பின் அவற்றிற்காக
மன்னிப்புக்கோரி, மீண்டும் இதேபோல் ஒரு நல்ல நிகழ்வில் சந்திப்போம் எனக்கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.