மதிப்பிற்குரிய பள்ளி தலைமையாசிரியரும் சங்கத்தின் ஆலோசகருமான ஐயா
திரு ஆறுமுகம் அவர்களே, பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத்தலைவர் திரு
தமிழ்செல்வம் அவர்களே, சங்க உறுப்பினர்களே ஆசிரியர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம். கோவிட் தொற்று அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில் நாம் அனவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை என்றால் சில முக்கிய நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதன் தொடர்பாக தான் நமது இந்த செயல் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டது.நமது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முதலாவது கூட்டத்தின் நோக்கம் நமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டிய செயல் திட்டங்களை பற்றிதான் கலந்துறையாட போகிறோம். ஏற்புடைய எந்த திட்டமானாலும் உறுப்பினர்கள் முன் வைக்கலாம் . நாம்மால் அந்த திட்டத்தைச் செயல் படுத்த முடியும் என்றால் நிச்சயமாக ஏற்றுகொள்ளப் படும்.ஆகவே நல்ல தரமான செயல் திட்டங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அடுத்ததாக நமது இந்த பத்தாக் ராபிட் தமிழ்ப்பள்ளி ஒரு குறுகிய காலத்தில் பல மாற்றத்திற்குள்ளாகிறுப்பது மிக பெருமைக்குரிய விஷயம்.முதலில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி பற்றி கூறுவதற்கு வார்த்தை யில்லை அவ்வளவு அரிய வெற்றிகள் குவித்த வண்ணம் உள்ளனர் நம் மாணவர்கள் அவர்களை பயிற்று வித்த ஆசிரியர்களுக்கு பாராட்டுகள். அதோடு இந்த வெற்றிக்கு எல்லாம் மூலக் கர்தாவாக திகழவது நம் பள்ளி தலைமையாசிரியர்தான் அவர் ஆற்றி வரும் சேவை அளப்பெரியது. அவருக்கு இவ்வேளையில் என்னுடய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.ஐயா திரு ஆறுமுகம் அவர்களின் சேவை என்றேன்றும் மறக்க இயலாது. தலைமயாசிரியரரின்அயராது உழைப்பிற்கும் ஒத்துழைப்பிற்கும் எனது மனமார்தந்த வாழ்த்தும் பாரட்டும். இந்த பள்ளியில் என் மகளும் படிக்கிறாள் என்று கூறுவதில் நான் பெருமைக்கொள்கிறேன். மேலும் இந்த பள்ளிக்கு பல வெற்றிகளே வந்து குவிய வேண்டும் என்பதே என்னுடய ஆசையாகும்.எனவே வருகின்ற காலங்களில் பள்ளியின் வளர்ச்சிக்காக தேவைபாடும் அனைத்து ஒத்தழைப்புகளையும் சங்க வழங்கும் என்று கூறி விடைப்பெருகின்றேன்.