Professional Documents
Culture Documents
18 02 1983
18 02 1983
பாப்தாதாவின் அன்பின் கயிறு இழுத்துக் கொண்டு வந்தது தான் இல்லையா! எப்பொழுதும் இந்த
நேரம் என்ன நினைவு இருக்கிறது? எப்பொழுதும் உள்ளத்திலிருந்து பாபா தான் வெளியாகிறது
இல்லையா! மனதின் குஷி, நினைவின் அனுபம் மூலமாக அனுபவம் செய்தீர்கள். இப்பொழுது
ஒருமுகப்பட்டு என்ன நினைப்பீர்களோ, அவை அனைத்தும் முன்னேறிச் செல்வதற்கான சாதனமாகி
விடும். ஒரு பலம் ஒருவர் மேல் நம்பிக்கையில் இருந்து மட்டும் ஒருமுகத்தோடு யோசியுங்கள்.
ஒருவேளை நிச்சயத்தில் ஒரு பலம் மற்றும் ஒருவர் மேல் நம்பிக்கை இருக்கிறது என்றால்,
என்னவெல்லாம் நடக்குமோ, அது நல்லதாகவே நடக்கும்,. பாப்தாதா எப்பொழுதும் உடன்
இருக்கிறார் மேலும் எப்பொழுதும் உடன் இருப்பார். நீங்கள் தைரியம் நிறைந்தவர்கள் தான்
இல்லையா! பாப்தாதா குழந்தைகளின் நிச்சயம் மற்றும் தைரியத்தைப் பார்த்து நிச்சயம் மற்றும்
தைரியத்திற்காக வாழ்த்துக்களைக் கூறுகிறார். கவலையற்ற மஹாராஜாவின் குழந்தைகள்
நீங்களும் மகாராஜா தான் இல்லையா! நாடகத்திலிருந்த காரணத்தினால் நெருக்கமான
இரத்தினமாக ஆக்கியேவிட்டது. துணையும் மிக நல்லதாக கிடைத்திருக்கிறது. சாகாரத்திருக்கும்
துணையும் சக்திசாலியான வர்தான். ஆத்மாவின் துணையாகவோ தந்தை சிவபாபா இருக்கவே
இருக்கிறார். இரட்டை லிஃப்ட் இருக்கிறது. எனவே கவலையற்ற மஹாராஜா, தேவையான
நேரத்தில் புண்ணிய ஆத்மாவாகி புண்ணியக் காரியம் செய்திருக்கிறீர்கள். எனவே பாப்தாதாவின்
சகயோகத்திற்கு எப்பொழுதும் பாத்திரமானவர் நீங்கள். எவ்வளவு புண்ணியத்தின் அதிகாரி
ஆகியிருக்கிறீர்கள். புண்ணிய ஸ்தானத்தின் பொறுப்பாளர் ஆகியிருக்கிறீர்கள். ஏதாவது ஒரு
வழியில் குழந்தைகளின் பாக்கியத்தை உருவாக்கியே விட்டீர்கள் தான் இல்லையா! புண்ணியத்தின்
முதலீடு ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது.. முரளீதரனின் முரளி, மாஸ்டர் முரளி தந்தையின் கை
எப்பொழுதும் உங்கள் கை மேல் இருக்கிறது. எப்பொழுதும் நினைவு செய்து கொண்டும், சக்தியை
எடுத்துக் கொண்டும் இருங்கள்.
யு.கே.குரூப்புடன் சந்திப்பு::
நீங்கள் அனைவரும் தங்களை சுயராஜ்ய அதிகாரியாக இருப்பவரிலிருந்து உலக இராஜ்ய அதிகாரி
என்று நினைக்கிறீர்களா? லண்டனும் தலை நகரம் தான் இல்லையா? எனவே தலை நகரில்
வசிப்பவர்களுக்கு தன்னுடைய இராஜ்யம் எப்பொழுதும் நினைவு இருக்கிறது தான் இல்லையா?
இராணியின் மாளிகையைப் பார்த்து தன்னுடைய மாளிகை நிû வு வருகிறது. உங்களுடைய
மாளிகை எவ்வளவு அழகாக இருக்கும் என்று தெரிந்திருக்கிறீர்கள் தான் இல்லையா? உங்களுடைய
இராஜ்யம் அந்த மாதிரியானது. அந்த மாதிரி வேறு எந்த இராஜ்யமும் இருந்ததும் இல்லை,
இருக்கவும் முடியாது. அந்த மாதிரி போதை இருக்கிறதா? இப்பொழுதோ அனைத்தும் விநாசம்
ஆகிவிடும். ஆனால் நீங்களோ பாரதத்திற்கு வந்து விடுவீர்கள் தான் இல்லையா? இதுவோ உறுதி
தான் இல்லையா? எங்கெல்லாம் பிராமணர்கள் இவ்வளவு சேவை செய்திருக்கிறார்களோ அவை
அனைத்தும் பொழுதுபோக்கு ஸ்தானம் ஆகிவிடும். மக்கள் தொகை குறைந்து விடும். இவ்வளவு
விஸ்தாரமான இடத்திற்கு அவசியம் இருக்காது. நல்லது. தன்னுடைய வீடு, தன்னுடைய கடமை,
இவை அனைத்தும் நினைவு இருக்கட்டும்.
கேள்வி:
எப்பொழுதும் முன்னேறிச் செல்வதற்கான வழி என்ன?
பதில்:
ஞானம் மற்றும் சேவை,. எந்தக் குழந்தைகள் ஞானத்தை நல்ல முறையில் தாரணை
செய்கிறார்களோ மேலும் சேவை செய்வதற்கான ஆர்வம் இருந்து கொண்டே இருக்கிறது என்றால்
முன்னேறிச் சென்று கொண்டேயிருப்பார்கள். ஆயிரம் புஜங்கள் உள்ள தந்தை உங்கள் துணையாக
இருக்கிறார். எனவே துணைவனை எப்பொழுதும் துணையாக வைத்து முன்னேறிச் சென்று
கொண்டே இருங்கள்.
கேள்வி:
குடும்ப வாழ்க்கையில் யார் எப்பொழுதும் சமர்ப்பணம் ஆகி இருக்கிறார்களோ, அவர்கள் மூலமாக
எந்த சேவை இயல்பாகவே நடந்து விடுகிறது?
பதில்:
அந்த மாதிரி ஆத்மாக்களின் சிரேஷ்ட சகயோகம் மூலம் சேவை என்ற மரம் மிகப் பசுமையாக
வளர்ந்து விடுகிறது. அனைவரின் சகயோகம் தான் மரத்திற்கு தண்ணீர் ஆகிவிடுகிறது. எப்படி
மரத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது என்றால் மரத்திலிருந்து எவ்வளவு நல்ல பழம் உருவாகிறது. அந்த
மாதிரி சிரேஷ்ட சகயோகி ஆத்மாக்களின் சகயோகத்தினால் மரம் நன்றாக பசுமையாக வளர்ந்து
பூத்துக் குலுங்குகிறது. அந்த மாதிரி பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும்,
சேவையின் ஆர்வத்திலேயே எப்பொழுதும் இருக்கும் குழந்தைகள், குடும்ப வாழ்க்கையிலும்
சமர்ப்பணம் ஆகி இருக்கும் குழந்தைகள் தான் இல்லையா? நல்லது. ஓம் சாந்தி