You are on page 1of 12

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று


குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று


ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது


பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது – அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது – அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது – அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது – அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று


குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது


உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது – நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது – நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது – பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது – பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று


குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் – அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார் – அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் – என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் – என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று


குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

அள்ளி அள்ளி கொடுத்த போதும் குறைவில்லாதது ……


கள்ளருக்கும் காவலர்க்கும் இனிமையானது ……
உள்ளம் என்பதுள்ளவர்க்கு உண்மையானது …..
உலகம் என்பதுள்ளவரை உறுதியானது …..
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது

மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது


மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது (அன்பு என்பதே )
அறிவில்லாத மனிதர் உள்ளம் அருள்ளிலாதது
அருள்ளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது
பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது (அன்பு என்பதே )

பொன் படைத்த மனிதர் கோடி நகைகள் வாங்கலாம்


பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்
அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம் ?
நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும் மனையில்
வாங்கலாம் (அன்பு என்பதே)
சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா (சின்னப்)
நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா-நீ
எண்ணிப் பாரடா சின்னப்

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்


அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்)
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ
தரும் மகிழ்ச்சி (ஆசை)

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்


காலம் தரும் பயிற்சி-உன்
நரம்போடுதான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி-உன் (நரம்) சின்னப்

மனிதனாக வாழ்ந்திட வேணும்


மனதில் வையடா-தம்பி
மனதில் வையடா (மனிதனாக)
வளர்ந்து வரும் உலகத்துக்கே-நீ
வலது கையடா-நீ
வலது கையடா (வளர்ந்து)
தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா-நீ
தொண்டு செய்யடா! (தனி)
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா-எல்லாம்
பழைய பொய்யடா!

வேப்பமர உச்சியில் நின்னு


பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போதும்போது
சொல்லி வைப்பாங்க-உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே-நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே-நீ
வெம்பி விடாதே!-சின்னப்

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்

கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்


கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் யார் தந்தது
கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் யார் தந்தது
எல்லையில்லா நேரம் நிலமும் நான் தந்தது
எங்கும் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது
இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதரின் கொள்கை தெரியவில்லை
ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம்
பச்சை பிள்ளை மழலை மொழியில் தன்னை கண்டானாம்
பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம்
பச்சை குழந்தை சிரிப்பில் தன்னை கண்டானாம்
உள்ளம் எங்கும் செல்லம் பொங்கும் அன்பை கண்டானாம்
உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றானாம்
கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை


வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி
இல்லை
புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி
இல்லை

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை


மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்
புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி
இல்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை


காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை


வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி
இல்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைபதெல்லாம் கனவு


அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி கான்பதில்லை


வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை புத்திசாலி
இல்லை

உலகம் பிறந்தது எனக்காக


ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே


கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நான் அறிவேன்
என்னை அவனே தான் அறிவான்

தவழும் நிலவாம் தங்கரதம்


தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்

எல்லாம் எனக்குள் இருந்தாலும்


என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்

முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா ..


உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..

எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..


நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..
ஒ ..ஹே தோழா ..
முன்னால் வாடா ..
உன்னால் முடியும் ..
தளதலபதி தளபதி நீதான் நீதான் ..
அன்புத் தலைவா வெற்றி நமக்கே ..
அழகிய தமிழ் மகன் நீதானே நீதானே ..

ஆ ஆ ….
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே..

முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா ..


உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா..

நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே ..


நீ இன்றை இழக்காதே ..நீ இன்றை இழக்காதே ..
இன்றை விதைத்தால் நாளை முளைக்கும் ..
அதை நீ மறக்காதே ..
நீ அதை நீ மறக்காதே ..
நீ அதை நீ மறக்காதே ..
நேற்று நடந்த காயத்தை எண்ணி ..
ஞாயத்தை விடலாமா ?
ஞாயம் காயம் அவனே அறிவான் ..
அவனிடம் அதை நீ விட்டுச் செல் ..
ஹே ..தோழா முன்னால் வாட ..
உன்னால் முடியும் ..
தளதலபதி தளபதி நீதான் நீதான் ..
அன்புத் தலைவா வெற்றி நமக்கே ..
அழகிய தமிழ் மகன் நீதானே ..

ஏய் …
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாட ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா ..

மாணவன் மனது வைத்தால் முடியாதென்பது இல்லை ..


கடல் போல் , மலை போல், காற்றை போல் , பூமி போல் ..
நீ பெருமை செரட ..
பிறந்தோம் இருந்தோம் சென்றோம் ..
என்ற வாழ்வை தூக்கிப் போடடா ..
மாணவன் மனது வைத்தால்..

எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..


நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..
எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே ..
நீ நதி போல ஓடிக்கொண்டிறு ..
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே ..
உண்மை உள்ளத்தில் தூர் வைக்குமே ..
ஒ ஒ ஒ ஒ தோழா முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் ..
ஒ ஒ ஒ ஒ தோழா முன்னால் வாடா ..
உன்னால் முடியும் உன்னால் முடியும் ..
தளதலபதி தளபதி நீதான் நீதான் . .
அன்புத் தலைவா வெற்றி நமக்கே ..
அழகிய தமிழ் மகன் நீதானே ..
மாணவன் மனது வைத்தால் ..

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே


வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே


இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!


மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

உள்ளம் என்பது எப்போதும்


உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே


மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!


மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே


வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!

மனிதா! உன் மனதைக் கீறி


விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!

மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!


மலையோ அது பனியோ நீ மோதிவிடு!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே


வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே


இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!


மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!

You might also like