Professional Documents
Culture Documents
15 02 1983
15 02 1983
ராபர்ட் முல்லர் (ஐ.நா. சபையின் துணை பொதுச் செயலாளர்) அவர்களுக்காக மகா வாக்கியம்:
நீங்கள் சேவையில் உயர்ந்ததிலும் உயர்ந்த பங்கு ஏற்றுச் செய்யும் ஆத்மா. எந்தக் காரியத்திற்குப்
பொறுப்பாளர் ஆகியிருக்கிறேனோ அதைச் செய்தே காண்பிப்பேன் என்ற உயர்ந்த எண்ணத்தை
மனதில் வைத்திருக்கிறீர்கள். இந்த எண்ணம் பாப்தாதா மற்றும் முழு பிராமண பரிவாரத்தின்
சகயோகம் மூலம் நடைமுறையில் வந்து கொண்டேயிருக்கும். மிக நல்ல எண்ணம்
வைத்திருக்கிறீர்கள். மிக நல்ல நல்ல திட்டத்தையும் யோசிக்கிறீர்கள். இப்பொழுது இதே திட்டத்தின்
நடுவில் ஆன்மீக சக்தி சேர்ந்து விட்டது என்றால் இந்த திட்டம் நடைமுறை ரூபத்தை எடுத்துக்
கொண்டே இருக்கும். குழந்தை களின் அனைத்து ஊக்கங்களும் பாப்தாதாவிடம் வந்து சேர்ந்து
கொண்டே இருக்கின்றன. எப்பொழுதும் உறுதியாக இருக்க வேண்டும். தைரியம் உள்ளவராகி
முன்னேறிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். உலக அமைதிக்கான கொடி உலகின்
நாலாபுறங்களிலும் பறக்கும், அந்த நாளும் இந்தக் கண்களுக்குத் தென்படும். எனவே முன்னேறிச்
சென்றுக் கொண்டேயிருங்கள். உலகத்தினர் உங்களை மனமுடைந்து போகுபவராக ஆக்குவார்கள்.
ஆனால் நீங்கள் ஆகாதீர்கள். ஒரு பலம், ஒருவர் மேல் உள்ள நம்பிக்கை என்ற இந்த நிச்சயத்தில்
சென்று கொண்டேயிருங்கள். எந்த நேரம் ஏதாவது சூழ்நிலை வருகிறது, என்றால் தந்தையை
துணைவனாக ஆக்கிவிடுங்கள், பிறகு நான் தனியாக இல்லை என்னுடன் விசேஷ சக்தி இருக்கிறது
என்று அனுபவம் செய்வீர்கள். கனவு நனவாகி விடும். எங்கு தந்தை இருக்கிறாரோ அங்கு எவ்வளவு
தான் புயல் இருந்தாலும்அது பரிசாக ஆகிவிடும். நிச்சயபுத்தி உடையவர் வெற்றி அடைவார் - நான்
நிச்சயபுத்தியுள்ள வெற்றியடையும் இரத்தினம் என்ற இந்தப் பட்டத்தை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள். நல்லது.