You are on page 1of 265

சவுந்தரிய லஹரி

1. எல்லா நன்மைகளும் பெற

ஸிவ: ஸக்த்யா யுக்தோ யதி பவதி

ஸக்த: ப்ரபவிதும்

ந சேதேவம் தேவோ ந கலு குஸல:

ஸ்பந்திது-மபி

அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-

விரிஞ்சாதிபி-ரபி

ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத-

மக்ருத-புண்ய: ப்ரபவதி

இன்ப அலைப்பெருக்கு (தமிழ்)

சிவன் எனும் பொருளும் ஆதி

சக்தியொடு சேரின் எத்தொழிலும்

வல்லதாம்;

இவள் பிரிந்திடின்

இயங்குதற்கு அரிதரிது என மறை

இரைக்குமால்
நவபெரும் புவனம் எவ்வகைத்

தொழில், நடத்தி யாவரும்

வழுத்து தாள்,

அவனியின் கண், ஒரு தவம் இலார்,

பணியல் ஆவதோ? பரவல் ஆவதோ?

பொருள்: அன்னையே! பராசக்தியான

உன்னுடன் பரமசிவன்

சேர்ந்திருந்தால்தான்

ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம்

(ஆக்கல், காத்தல், அழித்தல்)

என்னும் முத்தொழில்களையும்

செய்ய முடியும்.

அவ்வாறில்லையேல் அவரால்

அசையவும் இயலாது. எனவே ஹரி,

ஹரன், பிரம்மன் ஆகியோர்

அனைவரும் போற்றித் துதிக்கும்

பெருமை பெற்றவளான உன்னைத்


துதிக்க முற்பிறவிகளில்

புண்ணியம் செய்யாதவனால்

எப்படி முடியும்?

ஜபமுறையும் பலனும்

12 நாட்கள் தினந்தோறும்

காலையில் கிழக்கு முகமாக

அமர்ந்து இந்த ஸ்லோகத்தை 1000

தரம் தொடர்ந்து ஜபித்தால்,

தடைகளெல்லாம் நீங்கி, எடுத்த

காரியம் அனைத்தும்

நிறைவேறும். எல்லா

நன்மைகளையும் பெறலாம் என்பது

நம்பிக்கை.

2. ஜடப்பொருள்களால் தடை நீங்க

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-

பங்கேருஹ-பவம்

விரிஞ்சி: ஸஞ்சிந்வந் விரசயதி


லோகா-நவிகலம்

வஹத்யேநம் ஸெளரி: கதமபி

ஸஹஸ்ரேண ஸிரஸாம்

ஹர: ஸம்ட்சுத்யைநம் பஜதி பஸிதோத்தூளந-விதிம் டி

பாத துளியின் சிறப்பு (தமிழ்)

பாத தாமரையின், நுண்துகள், பரம

அணுவினில், பல இயற்றினால்,

வேத நான்முகன் விதிக்க,

வேறுபடு விரிதலைப் புவனம்

அடைய; மால்,

மூது அரா வடிவு எடுத்து, அனந்தமுது

கணபணாடவி பரிப்ப; மேல்

நாதனார், பொடிபடுத்து,

நீறணியின் நாம் உரைத்தது என்?

அவள் பாண்மையே!

பொருள்: தாயே! தாமரை மலர்களைப் போன்று

உன் திருவடிகளிலிருந்து எழுந்த மிக நுண்ணிய தூளியை சேர்த்து


வைத்துக் கொண்டு பதினான்கு

உலகங்களையும் பிரம்மா

விசாலமாகப் படைக்கிறார்.

அதுபோன்றே, மகாவிஷ்ணுவும்

ஆதிசேஷன் என்னும் உருவில்

பதினான்கு உலகங்களையும்

மிகுந்த சிரமத்துடனாவது

தாங்குகிறார். பரமசிவனோ, இதை

நன்றாகப் பொடி செய்து கொண்டு,

விபூதி பூசுவதைப் போன்று உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்.

ஜபமுறையும் பலனும்

55 நாட்கள் தினமும் காலையில்,

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால் ஞானம்,

செல்வம், புத்ர ஸந்ததி, பதவி,

புகழ் முதலிய ஸகல நன்மைகளும்


உண்டாகும். ஜடப்பொருள்களால்

ஏற்படும் தடைகள் நீங்கும்

என்பது நம்பிக்கை.

3. வேதப் பொருள் நீங்க

அவித்யாநா-மந்தஸ்திமிர-மிஹிர-

த்வீப-நகரீ

ஜடாநாம் சைதந்ய-ஸ்தபக-மகரந்த

ஸ்ருதிஜரீ

தரித்ராணாம் சிந்தாமணி-

குணநிகா ஜந்மஜலதௌ

நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா

முரரிபு-வராஹஸ்ய பவதி

பாத துளி - அறிவின்மையை

போக்கவல்லது (தமிழ்)

அறிவு இலர்க்கு, இதய திமிரம்

ஈரும் அளவு அற்ற ஆதவர், அளப்பு

இலா
எறி கதிர் ப்ரபை, குழைத்து

இழைத்தனைய தீவி, யாமளை

நினைப்பு இலார்.

செறி மதிக்கு, இணரின் ஒழுகு

தேன் அருவி தெறு கலிக்கு அருள்

மணிக்குழாம்

பிறவி மைக்கடல் விழாது

எடுப்பது ஓர் பெரு வராக வெண்

மருப்பு அரோ.

பொருள்: அம்பிகையே! உன்

திருவடித் துகள் அஞ்ஞானிகளின்

உள்ளத்தில் உள்ள இருளைப்

போக்கும் கதிரவனின் உதயத்

தீவைப் போலும், விவேகமற்ற மூடர்களுக்கு ஞானம்

என்னும் கற்பக விருட்சத்திலிருக்கும் பூங்கொத்தின் மகரந்தத்தைப்

போலும், ஏழையருக்கு நினைத்ததைத் தரக்கூடிய

சிந்தாமணியைப் போலும், பிறவிக்கடலி


மூழ்கித் தத்தளிப்பவர்களுக்கு, வராகமாய்த் தோன்றிப் பூமியைத்

தாங்கிய விஷ்ணுவின் கோரைப்

பல்லைப் போன்றும்

விளங்குகிறது.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், வடகிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

2000 தடவை ஜபித்து வந்தால்

வேதங்களிலும், சகல கலைகளிலும்

வல்லமை உண்டாகும். செல்வம்

உண்டாகும் என்பது நம்பிக்கை.

4. வியாதிகள் நீங்க

த்வதந்ய: பாணிப்ப்யா-மபயவரதோ

தைவதகண:

த்வமேகா நைவாஸி ப்ரகடித-

வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச

வாஞ்ச்சா ஸமதிகம்

ஸரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ

நிபுணௌ

பாத கமலங்கள்-யாவையும்

அளிக்கும் (தமிழ்)

தேவெனப் புகழ, அதில்

நிமிர்ந்து நிகர் செப்புவார்

அபய வரதமாம்

பாவகத்து, அபினயத் தொடு உற்ற, கை

பரப்பி, என் பயம் ஒறுக்குமே?

யாவருக்கும் அஃது அரிது,

நின்பதம் இரப்ப, யாவையும்

அளிக்குமால்,

மூவருக்கும் ஒரு தாவரப் பொருள் என, மூலமே தழையும் ஞாலமே!

பொருள்: அம்பிகையே! உன்னைத்

தவிர, மற்ற தேவர்களெல்லாம்


அபயம், வரதம் என்னும் ஹஸ்த

முத்திரைகளைக்

காட்டுகிறார்கள். நீ ஒருவள்

தான் அந்த அபிநயங்களைச்

செய்வதில்லை. ஏனென்றால்,

உன்னுடைய திருவடிகளே

பயத்திலிருந்து காக்கின்றன.

அவைகளே, அவரவர்

விரும்பியதற்கு அதிகமாகவே

வரம் அளித்து விடுகின்றன.

ஜபமுறையும் பலனும்

36 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

3000 தடவை ஜபித்து வந்தால் எல்லா

விதமான நோய்களும், மற்ற

பயங்களும் நீங்கும். பட்டம்,


பதவிகள் கிடைக்கும் என்பது

நம்பிக்கை.

5. பகை நீங்கி நட்பு வளர

ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜந-

ஸெளபாக்ய-ஜநநீம்

புரா நாரீ பூத்வா புரரிபுமபி ÷க்ஷப-மநயத்

ஸ்மரோசபி த்வாம் நத்வா ரதி-நயந-

லேஹ்யேந வபுஷா

முநீநா-மப்யந்த: ப்ரபவதி ஹி

மோஹாய மஹதாம்

தேவியின் அருளினின்றி

ஒருவருக்கும் வலி இல்லை (தமிழ்)

தொடுகரச் சிலை தொடப் பொறா மலர்

கருப்பு நாண், இடுவது ஐந்து

கோல்

அடுபடைத் தலைவனார் வசந்தம்,

அலை தென்றல் தேர், உருவம்


அருவம் ஆம்

உடுகு ஒற்ற மதன், ஒருவன்

இப்புவனம் முற்றும்

வெற்றிகொள், முடிவு இலா

நெடுமலர்க் கண்அருள், சிறிது

அளித்தனை கொல் நீலியே! கர

கபாலியே.

பொருள்: சகல

சௌபாக்கியங்களையும்

வணங்குவோருக்கு அருளும் தேவி!

உன்னை முன்னொரு சமயத்தில் பூஜை செய்து தான், விஷ்ணு

பெண் உருவம் கொண்டு,

முப்புரங்களை எரித்த

சிவனையும் மோகமுறச் செய்தார்.

மன்மதனும் உன்னை

வணங்கித்தான், ரதி தேவியே

கண்டு மயங்கும் அளவிலான எழில்


பொங்கும் வடிவத்தைப் பெற்று,

மகான்களையும், முனிவர்களையும்

தனிமையில் மதிமயக்கம் கொள்ள

வைக்கும் அளவில் சக்தியைப்

பெறுகிறான் என்பது உறுதி.

ஜபமுறையும் பலனும்

8 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

2000 தடவை ஜபித்து வந்தால் ஆண்,

பெண்களிடையே ஏற்பட்டுள்ள

கருத்து வேற்றுமை நீங்கி

ஒற்றுமை உண்டாகும்.

எல்லோரையும் வசீகரிக்கும்

சக்தி உண்டாகும் என்பது

நம்பிக்கை.

6. கணவன் மனைவி பிரச்சனை தீர


தநு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ

பஞ்ச விஸிகா;

வஸந்த: ஸாமந்தோ மலயமரு-தாயோதந-

ரத;

ததாப்யேக; ஸர்வம் ஹிமகிரிஸுதே

காமபி க்ருபாம்

அபாங்காத்தே லப்த்வா ஜகதித-

மநங்கோ விஜயதே

பூசித்தவர், அடையப்படாத வரமெல்லாம்

அடையலாம் (தமிழ்)

மாயன் வணங்கி உன்மால் வடிவம்

கொள வாடும் அரன் துயர் போதாதோ

தூய மதன் தொழ ஆண் வடிவம் புணர் தோகை கண் வண்டு அயில்

தேனே போல்

மேய வழங்கும் உரூபது என் சொல மேலிது கண்டவர் வாழ்வாரோ

நீ அதி ரஞ்சகி மோகன வஞ்சகி நீ

செய்வது ஒன்றல மாதாவே


பொருள்: பனிமலையான

கயிலையங்கிரியை ஆள்பவனின்

மகளே! மன்மதனின் வில்,

மலர்களாலானது. நாண்

தேனீக்களால் ஆனது. ஐந்து

பாணங்களும், மலர்கள், மந்திரி

வஸந்தருது, நீ போர் செய்யப் பூட்டிவரும் தேர்,

தென்றல் காற்று.

அப்படியிருந்தும் உடலில்லாத

மன்மதன் தனியாகவே, உன் கடைக்கண்

பார்வையால் உன் பூரணமான கிருபையைப் பெற்று உலகனைத்தையும்

வெற்றி பெறுகிறான்.

ஜபமுறையும் பலனும்

21 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 500 தடவை


ஜபித்து வந்தால்,

தம்பதிகளிடையே ஒற்றுமை

உண்டாகும்.

ஆண்மையற்றவனுக்கும்

ஆண்மையுண்டாகி, புத்திர

சந்ததியும் ஏற்படும் என்பது

நம்பிக்கை.

7. எதிரிகளை வெற்றி கொள்ள

க்வணத் காஞ்சீ-தாமா கரிகலப-

கும்ப-ஸ்தந-நதா

பரிக்ஷீணா மத்த்யே பரிணத-

ஸரச்சந்த்ர-வதநா

தநுர்-பாணாந் பாஸம் ஸ்ருணி-மபி

ததாநா கரதலை:

புரஸ்தா-தாஸ்தாம் ந: புரமதிது-

ராஹோ-புருஷிகா
தேவியின் தோற்றம் - பகை களைய

(தமிழ்)

மேகலை பொங்க மதாசல கும்பமெ

னாமுலை கண்டு இடை சோரா, நீர்

மாகம் வளம் கெழு நாள் நிறை

அம்புலி வாள்முகம் அம்புவில்

ஏடார் போது

ஏக நெடுங்கழை, பாச மொடு

அங்குசம் ஏற் பெற வந்து அருள்,

காபாலி!

நீ கமலம் திகழ் தாள் வருடு

என்று அரன் நீர்மையின்

விஞ்சிய கோமாதே!

பொருள்: அம்பிகை, சலங்கைகள்

ஒலிக்கும் தங்க ஒட்டியாணத்தை

அணிந்தவள்; யானையின்

மத்தகத்தைப் போன்ற பெரிய


தனங்களைக் கொண்டு சற்று

வணங்கிய வடிவுடையவள்; மெலிந்த

இடையையுடையவள்; சரத் காலத்தில் தோன

பூர்ணசந்திரன் போன்ற முகம் படைத்தவள். கைகளில்

கரும்பு வில், மலர் பாணம்,

பாசம், அங்குசம் ஆகியவற்றை

ஏந்தியிருப்பவள்.

முப்புரங்களையும் எரித்த

ஆச்சர்யமான சிவனுடைய அகம்பாவ

வடிவினளுமாவாள். இத்தகைய

பராசக்தி எங்களுக்கு முன்னே

எழுந்தருளிக்

காட்சியளிக்கட்டும்.

ஜபமுறையும் பலனும்

12 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை


1000 தடவை ஜபம் செய்தால் அரசாங்க

காரியங்கள் அனைத்தும்

நிறைவேறும். பகைவரை வெல்லலாம்

என்பது நம்பிக்கை.

8. ஸம்ஸார பந்தம் நீங்க

ஸுதா-ஸிந்தோர்-மத்யே ஸுரவிடபி-

வாடீ-பரிவ்ருதே

மணித்வீபே நீபோபவநவதி

சிந்தாமணி க்ருஹே

ஸிவாகாரே மஞ்சே பரமஸிவ-

பர்யங்க-நிலயாம்

பஜந்தி த்வாம் தந்யா: கதிசந

சிதாநந்த-லஹரீம்

தேவி யோக நித்திரை கொள்ளும்

கோலம் (தமிழ்)

ஆர் அமுது இன்கடல் வேலி செழும்

தருவாய் மணி பம்பிய தீவு ஊடே


பார கடம்பு அடர் கானில்

அருங்கொடை பாய்மணி மண்டப வீடு

ஊடே

கோர சிவன் பரமேசன் உன் மஞ்சம்,

ஓர் கூர் பரி அங்கம் எனா மேலே

சீர் அடரும் பரஞானம் உறும் களி தேவர் அருந்துவர் பூமாதே!

பொருள்: அமுதக் கடலின்

மத்தியில் கற்பக விருட்சங்கள்

அடர்ந்த தோப்புகள் நிறைந்த

ரத்தினத் தீவில் கதம்ப

மரங்கள் நிறைந்த வனத்தினிடையே

அமைந்துள்ள சிந்தாமணிகள்

நிறைந்த அழகிய மாளிகையில்,

மங்கள வடிவமுள்ள

சிம்மாசனத்தின் மீது

பரமசிவனின் மடியில்

அமர்ந்துள்ள ஞானானந்தக்
கடலின் அலை போன்ற உன்னை,

புண்ணியவான்களான சிலரே

வழிபட்டு வருகிறார்கள்.

ஜபமுறையும் பலனும்

12 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால் சம்ஸார

பந்தங்கள் நீங்கும்; சிறைவாச

பயம் நீங்கும்; எண்ணியவை

நிறைவேறும் என்பது நம்பிக்கை.

9. வியாதிகள் நீங்கி உடல்நலம்

பெற

மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்

ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டாநே

ஹ்ருதி மருத-மாகாஸ-முபரி
மநோசபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்

ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா

விஹரஸே

ஆனந்தமுறும் பொருளை அறிய

(தமிழ்)

மூல மண்பூரகத்தோடு இலிங்க மார்பு முதுகளம் வில்புருவ நடு

மொழிவது ஆறு

ஞாலமும் மென்புனலும் அனல்

பிழம்பும் காலும் நாதமுறு

பெருவெளியும் மனமும் ஆக

மேல் அணுகிக் குளபதத்தைப்

பின்னிட்டு அப்பால்

மென்கமலத்து ஆயிரம்தோட்டு

அருணபீடத்து

ஆலவிடம் பருகிய தன் மகிழ்

நரோடும் ஆநந்தமுறும் பொருளை

அறியலாமே.
பொருள்: அம்பிகையே! மூலாதாரத்தில் பூமி

தத்துவத்தையும், மணிபூரகத்தில் நீர்

தத்துவத்தையும்,

ஸ்வாதிஷ்டானத்தில் அக்னி

தத்துவத்தையும், இருதயம்

என்னும் அனாஹதத்தில் வாயு

தத்துவத்தையும்,

புருவங்களிடையே ஆக்ஞாவில்

உள்ள மனஸ் தத்துவத்தையும்,

இவ்வாறாக ஸுஷும்னா

மார்க்கத்திலுள்ள எல்லாச்

சக்கரங்களையும் ஊடுருவிப்

பிளந்து சென்று மேலே

ஸஹஸ்ராரமாம் ஆயிரம் இதழ்களைக்

கொண்ட ரகசியமான இடத்தில் உன்

கணவனான பரமசிவனுடன் நீ

களிப்புற்றிருக்கிறாய்.
ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்தால்,

விட்டுப்பிரிந்த பந்துக்கள்

வந்து சேருவர். அவர்கள் சென்ற

திக்கை நோக்கி ஜபம் செய்ய

வேண்டும். பஞ்ச பூதங்களும் சுவாதீனமாகும் என்பது

நம்பிக்கை.

10. தியானம் வெற்றி பெற

ஸுதாதாராஸாரைஸ்-

சரணயுகலாந்தர்-விகலிதை:

ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புநரபி

ரஸாம்நாய மஹாஸ:

அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்த்யுஷ்ட-

வலயம்
ஸ்வமாத்மாநம் க்ருத்வா

ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி

துஞ்சும் சக்தியைக் காண்பது

காட்சி (தமிழ்)

தாள் இணைக் கமலம் ஊறித்தரும் அமிழ்து உடலம் மூழ்க

மீள அப்பதங்கள் யாவும் விட்டு முற் பழைய மூலம்

வாள் அரவு என்ன, ஆகம் வளைத்து,

உயர் பணத்தினோடு

நாளும் மைக்கயல் கண் துஞ்சும்

ஞான ஆனந்த மின்னே.

பொருள்: தேவியே, உன்

திருவடிகளிடையே பெருகும்

அமிர்த தாரையின் வெள்ளத்தால்

(பாய்ச்சலால்) ஐம்பூதங்களான உடலிலுள்ள

எழுபத்திரண்டாயிரம் நாடிகளை

நனைக்கிறாய். பிறகு அமிர்த கிரணங்க

பொழியும் சந்திர மண்டலத்திலிருந்து


மூலாதாரத்தை அடைந்து, பாம்பைப் போல வட்ட வடிவா

சுருக்கிக் கொண்டு தாமரைக் கிழங்கு

துவாரமுள்ள மூலாதார குண்டத்தில் யோக நித்திரை புரிகிறாய்.

ஜபமுறையும் பலனும்

6 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால் சரீர

சுத்தியுண்டாகும்.

ஆண்மையற்றவருக்கு ஆண்மையும்,

மாதவிடாய் சரியாக

இல்லாதவர்களுக்குச்

சரியாதலும், தாய்ப்பால்

இல்லாத குழந்தைகளுக்கு

தாõ ய்ப்பால் கிடைத்தலும்

ஏற்படும் என்பது நம்பிக்கை.


11. சந்தான(குழந்தை) பாக்கியம்

பெற

சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: ஸிவ

யுவதிபி: பஞ்சபிரபி

ப்ரபிந்நாபி: ஸம்போர்-நவபிரபி

மூலப்ரக்ருதிபி:

சதுஸ்சத்வாரிம்ஸத்-வஸுதல-

கலாஸ்ர-த்ரிவலய-

த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ

சரணகோணா: பரிணதா:

தேவி இருக்கும் சக்கரம் (தமிழ்)

சிவகோணம் முன் பகர்வது ஒரு

நாலு சத்திநெறி செறி கோணம்

அத்தொடு ஒரு மருவுகோள்

நவகோணம் உட்படுவது எழுமூ இரட்டி ஒரு நவில் கோணம் உற்றதுவும்

வலயமாய்

இவரா நிரைத்த தளம் இருநாலும்


எட்டு இணையும் எழிலாய வட்ட

மொடு சதுரமாய்

உவமானம் அற்ற தனி தனி மூவகைக்கணும் என் உமை பாதம் உற்ற

சிறு வரைகளே.

பொருள்: நான்கு

சிவசக்கரங்களாலும்,

சிவசக்கரங்களிலிருந்து

வேறுபட்ட சக்தி சக்கரங்கள்

ஐந்தினாலும் ஒன்பதாய்

உள்ளதும், பிரபஞ்சத்தின் மூலகாரணமான

தத்துவங்களுடன் கூடியதுமான உன் இருப்பிடமான ஸ்ரீ சக்கரத்தின்

கோணங்கள் எட்டுத் தளம்,

பதினாறு தளம், மூன்று மேகலை வட்டங்கள், மூன்று

பிரகாரக் கோடுகள் ஆகியவற்றுடன் கூடி நாற்பத்து நான்கு

கோணங்களாக அமைந்துள்ளன.

ஜபமுறையும் பலனும்

8 நாட்கள் தினந்தோறும்
காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால்

புத்திர சந்ததி

இல்லாதவர்களுக்கு ஸத்புத்ர

லாபம் உண்டாகும் என்பது

நம்பிக்கை.

12. கவிதை உண்டாக

த்வதீயம் ஸெளந்தர்யம்

துஹிநகிரிகந்யே துலயிதும்

கவீந்த்ரா: கல்பந்தே கதமபி

விரிஞ்சி-ப்ரப்ருதய:

யதாலோகௌத்ஸுக்யா-தமரலலநா

யாந்தி மநஸா

தபோபிர்-துஷ்ப்ராபாமபி கிரிஸ-

ஸாயுஜ்யபதவீம்
தேவியின் திருவழகு வியந்தது

(தமிழ்)

ஆதி சுந்தரி வடிவினை

அயன்முதல் புலவோர்

ஏது கண்டு அளவிடுவது தமை இகழ்

இமையோர்

மாதர், இங்கு, இவள் மகிழ்நரோடு

உறைகுவம் எனின் ஓர்

பேதை கொங்கைகள் பெறுகுவம் என

மறுகுவரால்!

பொருள்: பனிமலையரசனின்

புதல்வியே! உன் உடலழகை

வர்ணிப்பதற்கு கவிதையில்

வல்லவர்களாலும், பிரம்மா போன்றவர்

கூட இயலாது. அழகுக்கு சரியான உவமை கூற எப்படியெல்லாமோ

முயன்று பார்த்தும் அவர்களால்

முடியவில்லை. அழகில் சிறந்த


தேவர் உலக மகளிரும்

பரமசிவனின் கண்களை கொண்டுதான்

அதைப் பார்க்க முடியும் என்று

நினைத்து அடைதற்கரிதான பரமசிவ

ஸாயுஞ்ய பதவியை மானசீகமாய்

அடைகிறார்கள்.

ஜபமுறையும் பலனும்

முதலில் ஒரு பாத்திரம் நிறைய

ஜலம் எடுத்து, அந்த ஜலத்தில்

ஒரு நீள்வட்டத்தில் நாற்கோணம்

எழுதி, அதன் நடுவே ஸெள: ஸெள:

என்று எழுதி, அந்த ஜலத்தின்

முன் 45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து, பின் அந்த

ஜலத்தை அருந்தச் செய்தால்


ஊமையும் பேசுவான். படித்தவன்

பேச்சில் வல்லவனாவான்.

கவிதையும் புனைவான் என்பது

நம்பிக்கை.

13. நல்ல மனைவி அமைய

நரம் வர்ஷீயாம்ஸம் நயநவிரஸம்

நர்மஸு ஜடம்

தவாபாங்காலோகே பதித-

மநுதாவந்தி ஸதஸ:

கலத்வேணீபந்தா: குசகலஸ-

விஸ்ரஸ்த-ஸிசயா

ஹடாத் த்ருட்யத்-காஞ்ச்யோ

விகலித-துகூலா யுவதய:

தேவியின் கருணை வியந்தது

(தமிழ்)

அறக்கிழவன் மனிதன் விரகு

இல்லாக் கொச்சை அழகு இருந்த


ஊரில் இருந்து அறியானேனும்

உறக்கருணை கொழிக்கும், உனது

அமுதவாரி ஊடு அணுகின் அவனை,

அரமகளிர் எல்லாம்

நறைக்குழலும் சரிந்திட,

உத்தரீயம் சோர நாண் அழிய,

வளைசிதற, உடுத்த ஆடை

புரத்துவிழ, மயலொடும்

பின்தொடர்வர் என்றால்

பொற்கொடி, நின்புதுமை எவர்

புகழவல்லார்!

பொருள்: அம்பிகையே! உன்

கடைக்கண் பார்வையில் விழுந்த

ஒருவனை, அவன் முதியவனாகவோ,

குரூபியாகவோ, சிற்றின்பக்

கேளிக்கைகளில்

விருப்பமற்றவனாகவோ
இருப்பினும், நூற்றுக்கணக்கான அழகிய இளம்

மகளிர் வெட்கத்தை விட்டு

ஆசையோடு அவனைப் பின்

தொடர்ந்து ஓடிவருவார்கள்.

ஜபமுறையும் பலனும்

6 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால்

தார்மீக முறையில் தாம்

விரும்பும் பெண்ணை அடைவதற்கு

ஏற்பட்ட தடைகள் நீங்கி அந்த

ஸ்த்ரீ லாபம் ஏற்படும். (அதர்ம

வழியில் முயற்சித்தால் விபரீத

பலன்தான் கிடைக்கும்) என்பது

நம்பிக்கை.

14. பில்லி, சூனியம் விலக


க்ஷிதௌ ஷட்பஞ்சாஸத்-

த்விஸமதிக-பஞ்சாஸ-துதகே

ஹுத்õ ஸே த்வாஷஷ்டிஸ் சதுரதிக

பஞ்சாஸ-தநிலே

திவி த்விஷ் ஷட்த்ரிம்ஸந்-

மநஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே

மயூகாஸ்-தேஷா-மப்யுபுரி தவ

பாதாம்புஜ-யுகம்

தேவியின் பாதாரவிந்தம்

உறையும் இடம் (தமிழ்)

பணை, பார், புனல், கனலி, வளி, வான்

மனத்தில் அறு பதில் நால்

ஒழித்தது முன் அடைவிலே

இணை நால் ஒழித்தது, இருகதிர் ஏற உற்றது மூ

இணை போயது எட்டினோடு கதிர்கள்

நால்

அணையா நிரைத்தது உறுகதிர்நால்


அடுத்ததன் அளவாய் இலக்கம்

அறுவகையினால்

உணரா உரைத்த கதிர்களின் மேல்

இருக்குமெனது உமைபாத செக்கர்

விரிகமலமே!

பொருள்: தேவியே! பூமி தத்துவமாகிய மூலாதாரத்தில்

56, ஜல தத்துவமாகிய மணிபூரகத்தில் 52, அக்னி

தத்துவமாகிய

ஸ்வாதிஷ்டானத்தில் 62, வாயு

தத்துவமாகிய அநாஹதத்தில் 54,

ஆகாச தத்துவமாகிய

விசுக்தியில் 72,

மனஸ்தத்துவமாகிய ஆக்ஞையில் 64

என கிரணங்கள் உள்ளன. இந்த

கிரணங்களுக்கும் மேலாக உள்ள

ஸஹஸ்ரார கமலத்தின் மத்தியில்


உன் திருவடிகள்

விளங்குகின்றன.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால்

நாட்டிலோ, வீட்டிலோ

ஏற்பட்டிருக்கும்

பற்றாக்குறைகளும்,

கலவரங்களும் நீங்கி

சுபிக்ஷமும் அமைதியும்

ஏற்படும் என்பது நம்பிக்கை.

15. கவிதைகள் சொந்தமாக இயற்ற

ஸரஜ்-ஜ்யோத்ஸ்நா ஸுத்தாம்

ஸஸியுத-ஜடாஜூட-மகுடாம்

வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக கடிகா-
புஸ்தக-கராம்

ஸக்ருந் நத்வா ந த்வா கதமிவ

ஸதாம் ஸந்நிதததே

மது-க்ஷீர-த்ராக்ஷ-மதுரிம-

துரீணா: பணிதய:

தேவியின் தோற்றம்-துரகவி பாட

அருள் பெற (தமிழ்)

உனது சரற்காலமதி அனைய

மெய்யும், உடல் குழைத்த பிறைச்

சடையுங் கரங்கள் நான்கும்

அனவரதம் உறும், அபய, வரத, ஞான

அருட் பளிங்கு வடமொடு

புத்தகமும் ஆக

நினைகிலர், முன்வழுத்திலர்

பின் வணங்கார் எங்ஙன் நிறைத்த

பசும் தேனும், அடுபாலும், தூய

கனியுமென, மதுரம் விளைந்து


ஒழுகு பாடல் கவிதை பொழிவது

கயிலைக் கடவுள் வாழ்வே!

பொருள்: அம்பிகையே! சரத்கால

நிலவைப் போன்ற நிர்மலமான

வடிவுடையவளும், சந்திரனுடன்

சடைமுடியும் கிரீடமும்

உடையவளும், வரத அபய முத்திரை,

ஸ்படிக மாலை, புத்தகம்

ஆகியவற்றைக் கரங்களில்

ஏந்தியுள்ளவளுமான உன்னை

ஒருமுறை வணங்கும்

பக்தர்களுக்கு தேன், பால்,

திராட்சை ஆகியவை கலந்தாற்

போன்ற இனிய சொற்கள் ஏன் என்

வசமாகி வந்து சேராது?

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்
காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து ஜலத்தில் ஒரு வட்டம்

வரைந்து, அதன் நடுவே 6 முறை ஸம்

என்னும் பீஜாக்ஷரத்தையும்

எழுதி, மேற்கண்ட ஸ்லோகத்தை 1000

தடவை ஜபித்தால் நல்ல கவிதைகள்

இயற்றும் வல்லமையும்,

பரீட்சையில் வெற்றியும்

ஏற்படும் என்பது நம்பிக்கை. (ஜப

முடிவில் ஜலத்தை அருந்தவும்)

16. கல்வி, ஞானம் பெற

கவீந்த்ராணாம் சேத: கமலவந

பாலாதப-ருசிம்

பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா-மேவ

பவதீம்

விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-

ஸ்ருங்காரலஹரீ
கபீராபிர்-வாக்பிர்-விதததி

ஸதாம் ரஞ்ஜநமமீ

தேவியின் தோற்றம்-இன்பச்சுவை

பெறுங்கவிதை பாட அருள் பெற

வாரின்ப முலை மலை மடந்தை கவி

நாவலர் மனக்கமல வனம் அலர நீள்

தேர் இன்ப இளவெயில் தழைக்கும்

ப்ரபை செய்ய செவ்வி நிறம்

உணரும் உரவோர்

தார் இன்ப நறவு ஒழுகு சுருள்

ஓதி இருள் விரவு தவள நிற வாணி

கலைதேர்

பேர் இன்ப மதுரவலை எறி அமுத

கவிதை கொடு பேர் உலகை

மகிழ்விப்பரே.

பொருள்: அம்பிகையே! கவிஞர்களின் உள்

என்னும் தாமரை வனத்திற்கு சிவந்த கி


உதயசூரியனைப் போல் பிரகாசிப்பவளும், அதன் காரணமாக அரு

எனப் பெயர் பூண்டவளுமாகிய உன்னைப் பணிந்து தொழும்

சான்றோர்க்கு பிரம்மாவின்

புத்திரியும், வாக்குக்குத்

தெய்வமுமான சரஸ்வதி தேவியின்

அருளுடன் சிருங்கார ரசத்தின்

வெள்ளத்தைப் போன்ற கம்பீரமான

வாக்குவன்மை உண்டாகி

சாதுக்களுக்கு மகிழ்ச்சி

உண்டாக்குகிறார்கள்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால் வேத

வேதாங்க சாஸ்திர ஞானம்

ஏற்பட்டு சபைகளில் முதன்மையாக


விளங்குவார்கள். பேய், பிசாசு

பிடித்தவர்களுக்காக

ஜபித்தால் அவை அகன்று ஓடி

விடும் என்பது நம்பிக்கை.

17. ஸகல கலைகளிலும்

வல்லமையுண்டாக

ஸவித்ரீபிர்-வாசாம் ஸஸிமணி-

ஸிலா-பங்க-ருசிபிர்-

வஸிந்யாத்யாபிஸ்-த்வாம் ஸஹ

ஜநநி ஸஞ்சிந்தயதி ய:

ஸ கர்த்தா காவ்யாநாம் பவதி

மஹதாம் பங்கிருசிபிர்

வசோபிர்-வாக்தேவீ-வதந-கமலாமோத-

மதுரை:

தேவியின் தோற்றம் - காவியம்

புனைய (தமிழ்)
இந்து சிலையைப் பிளந்து

உள்நிறம் வகுத்து அனைய எழில்

வசினி ஆதி மடவார்

அந்த இணை நால்வர் புடைசூழ மலைமங்கை தனது அருண வடிவு

உணர அறிவோர்

கொந்து அவிழ விரி தவள மலர்

மங்கை முககமல கோல பரிமள

கவிதையால்

செந்தமிழின், வடகலையின்,

முதுமொழிக்காவியத் தெளி பாடல்

செய்யும் அவரே.

பொருள்: தாயே! நீ வசினி முதலிய எண்வகை

சக்திகளுடன் கூடியிருப்பவள். அந்த சக்தி

தேவியர் சந்திர காந்தக்

கல்லைப் பிளந்தது போல்

வெண்மைநிறப் பொலிவை

பெற்றவர்கள். இத்தகைய வாக் தேவதைகளு


கூடிய உன்னைச் சிந்தித்துத் தொழுபவர் யாராக இருப்பினும்,

அவர் சரசுவதி தேவியின் தாமரை

மலர் போன்ற முகத்தின் நறுமணம்

மிக்கதும், பெருங்

கவிஞர்களின் காவியப்

படைப்புகளைப் போன்றதுமான

சொற்சுவை நிரம்பிய

காவியங்களைப் படைக்கும்

வல்லமை பெற்றவர் ஆவார்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால் சகல

கலைகளிலும் வல்லமையும்,

வாக்குச்சாதுர்யமும்,
சபைகளில் பெருமதிப்பும்

உண்டாகும் என்பது நம்பிக்கை,

18. ஸ்த்ரீ வசியம்

தநுச்சாயாபிஸ்-தே தருண-தரணி-

ஸ்ரீ ஸரணிபிர்-

திவம் ஸர்வா-முர்வீ-மருணிம-

நிமக்நாம் ஸ்மரதி ய:

பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வந ஹரிண-

ஸாலீந-நயநா:

ஸஹோர்வஸ்யா வஸ்யா: கதிகதி ந

கீர்வாண-கணிகா:

தேவியின் தோற்றம் - மகளிர்

வசியம் வேண்டுதல் (தமிழ்)

உனது நிறம் எனும் இளைய கதிர்

இரவி வெயில் முழுகும் உலகு

அடைய என நினைகுவோர்

வினை கெழுமு கொலை மறலி அனைய வழி


உருவசிமுன் விரவும் அரமகளிர்

விழைவோர்

அனவரதம் எனதமுது பொழி கவியும் உனது

உயிரும் உயிர்சூழ்

மனமும் அதில் உணர்வும்

வருகளியும் என நினவுருக மலை

அரையன் உதவும் மயிலே!

பொருள்: அம்பிகையே! இளஞ்சூரியனின்

அழகினைப் போன்ற உன் உயிர்

ஒளியால் பரவும் கிரணங்களால்

தேவருலகத்தையும், பூவுலகத்தையும்

இளஞ்சிவப்பு வண்ணத்தில் மூழ்கியிருப்பதாய் எண்ணி யார்

உன்னைத் தியானம் செய்கிறானோ

அவனுக்கு, மருண்ட விழிகளுடன்

மிரண்டோடும் மானின் விழிகளைப்

பெற்ற ஊர்வசி உள்ளிட்ட

தேவமாதர் பலரும் வசமாவர்.


ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால்

விரும்பிய பெண் வசியமாவாள்.

சித்திரக் கலைஞன் ஜபிக்க,

வல்லவனெனப் புகழ் பெறுவான்,

செல்வாக்கு உண்டாகும் என்பது

நம்பிக்கை.

19. மூவுலகையும் வெல்லும் ஆற்றல்

முகம் பிந்தும் க்ருத்வவா

குசயுக-மதஸ் தஸ்ய தததோ

ஹரார்த்தம் த்யாயேத் யோ

ஹரமஹிஷி தே மந்மதகலாம்

ஸ ஸத்ய: ஸம்÷க்ஷபம் நயதி வநிதா

இத்யதிலகு
த்ரிலோகீ மப்யாஸு ப்ரமயதி

ரவீந்து- ஸ்தநயுகாம்

தேவியின் தோற்றம் - மகளிரை

மோகிப்பிக்க வேண்டிய அருள்

பெற

ஆதி விந்துவை முகம் என இணை முலை

கீழ் இரண்டு அதன் வடிவு என,

அருகு தாழ்

கோதறும் சுடர் எழ அழகு

ஒழுகுத்ரி கோணம் ஒன்று என உனது

எழில் இரதிதோய்

காதலன் கலை தமது இடம்

நினைப்பவர் காணும் மங்கையர்

கலைகொளல் அரியதோ

ஒதில், இங்கு இரு சுடர் முலை

அணைய உலோக மங்கையை மயல்

செய்வர் கமலையே!
பொருள்: பரமசிவ பத்தினியே!

பிந்துவை உன் முகமாக தியானம்

செய்து கொண்டு அதன் கீழே இரு

தனங்களையும், அதன் கீழே சிவனின் பாதி

உன் அருள் சக்தி சொரூபத்தையும் கண்டு உன் க்லீம் என்ற பீஜ

மந்திரத்தை எவன் அந்த

அங்கங்களில் தியானம்

செய்கிறானோ, அவன் உடனே காம

சக்திகளை வசமாக்கிக்

கொள்ளுதல் எளிதாகும். சூரிய

சந்திரர்களையே தனங்களாகக் கொண்ட மூவுலகின் வடிவான

மடந்தையையும் மயக்கி

விடுவான். இவ்வாறு தியானம் செய்பவன்

ஸ்வரூபமாகவே மாறி காம எண்ணங்களை வெல்வான்.

ஜபமுறையும் பலனும்

25 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக


அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால்

தர்மமுறையில் விரும்பிய பெண்

வசமாவாள். பேய் அகலும்.

மிருகங்கள் பணியும்.

அரசாங்கத்தில் செல்வாக்கு

ஏற்படும் என்பது நம்பிக்கை.

20. விஷ பயம் நீங்க

கிரந்தீ-மங்கேப்ப்ய: கிரண-

நிகுரும்பாம்ருதரஸம்

ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகர-

ஸிலா-மூர்த்திமிவ ய:

ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் ஸமயதி

ஸகுந்தாதிப இவ

ஜ்வரப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா

ஸுகயதி ஸுதாதார ஸிரயா


தேவியின் தோற்றம்-விஷமும்,

சுரமும் தீர்த்து அருள் பெற

(தமிழ்)

ஆடல் அம்பிகை, இமகர சிலை வடிவு

ஆளும் நெஞ்சினுள் வழிவுறு

கிரணம் மேல்

ஓடி, எங்கணும் உடல் பெருகு

அமிழ்தென ஊடெழும் ப்ரபை தமது

இடம் உணர்குவோர்

நாடவும் கொடும் விடம் ஒரு

கலுழனை நாடும் வெங்கொலை

அரவெனமுறியும் மேல்

மூடு அருஞ்சிரம் விழிபொழி அமுதினின் மூழ்க என்பொடு அழல் உடல்

குளிருகே.

பொருள்: தாயே! உன்

திருமேனியிலிருந்து கிரண

வடிவில் அமிருத ரஸம்


வெளிப்படுகிறது. இத்தகைய உன்

திருக்கோலத்தை எவன்

உள்ளத்தில் நிலைநிறுத்தி

தியானம் செய்கிறானோ அவன்,

பறவைகளின் அரசனான கருடனைப்

போல், பாம்புகளின் கர்வத்தை

அடக்குவான். அமிர்த நாடியோடு கூடியுள்ள தன்

பார்வையாலேயே ஜுரத்தால்

வருந்துபவர்களைக்

குணப்படுத்துவான்.

இம்மந்திரப் பாடல் சகலவிதமான

விஷங்களையும் போக்குவதால்

இதைப் பதினாறு முறைக்குக்

குறையாமல் சொல்லி

தீர்த்தத்தையோ, விபூதியையோ அளித்து நோயை

நீக்கலாம்.
ஜபமுறையும் பலனும்

25 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால்

தீராதென முடிவுசெய்த விஷ

சுரம் நீங்கும். பூரான், செய்யான்

முதலிய விஷ ஜந்துக்கள்

தீண்டியதால் ஏற்பட்ட

வியாதிகள் மற்றும் திருஷ்டி

தோஷத்தால் ஏற்படும்

தீங்குகளும் நீங்கும் என்பது

நம்பிக்கை.

21. பகைமை நீங்கி வெற்றி உண்டாக

தடில்லேகா-தந்வீம் தபந-ஸஸி-

வைஸ்வாநர-மயீம்

நிஷண்ணாம் ஷண்ணா-மப்யுபரி
கமலாநாம் தவ கலாம்

மஹாபத்மாடவ்யாம் ம்ருதித-மல

மாயேந மநஸா

மஹாந்த: பஸ்யந்தோ தததி

பரமாஹ்லாத-லஹரீம்

தேவியின் தோற்றம்-சமாதியும்,

நிட்டையும் உடையோர்

தரிசிப்பது (தமிழ்)

ஆன மின் கொடி போலும் என் முண்டகம் ஆ

மூவகையின் கண் ஓர்

பானு அம்புலி தீயின், நிறம்

கிளர் பான்மை கொண்டு இதழ் ஆயிர

கஞ்சம் நீள்

கானில் உன் களிஞானம் உறும் கலை காழ் மலங்களின் மூவகை

பொன்றியே

போன சிந்தையின் மாயை


ஒழித்தவர் போதம் இன்புறும்

ஆதியோடு அந்தமே.

பொருள்: அன்னையே! ஆறு

கமலங்களுக்கு மேலுள்ள ஸஹஸ்ரார

கமலத்தில் அமர்ந்ததும், சூரியன்,

சந்திரன், அக்னி என்னும்

உருவில் உள்ளதும்,

மின்னற்கொடி போன்றதுமான உன்

கலையை, காமம் முதலிய

அழுக்குகளும், அவித்யை முதலிய மயக்

நீங்கப்பெற்ற தூய்மையான மனத்தினால் கண்டு தியானம் செய்யும்

மகான்கள், அலையலையாகப்

பொங்கியெழும் பேரானந்தத்தை

அடைவார்கள்.

ஜபமுறையும் பலனும்

11 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக


அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால்

எல்லோரும் மரியாதை

செலுத்துவர். மற்றவர்கள்

காரணமில்லாமல் தன் மீது பகைமை

பாராட்டுதல் நீங்கும். எந்த

விஷயத்திலும் தைரியமும்

வெற்றியும் உண்டாகும் என்பது

நம்பிக்கை.

22. இஹலோக ஸுகம் பெற

பவாநி த்வம் தாஸே மயி விதர

த்ருஷ்டிம் ஸகருணாம்

இதி ஸ்தோதும் வாஞ்சந் கதயதி

பவாநி த்வமிதி ய:

ததைவ த்வம் தஸ்மை திஸஸி நிஜ-

ஸாயுஜ்ய-பதவீம்
முகுந்த-ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட-

மகுட-நீராஜித-பதாம்

தேவி விரைந்து வரம் கொடுத்தல்

(தமிழ்)

பேர் உறும் கயிலாசன் மகன் பெறு

பேரன் அன்புறு பேரன் எனும்

சொலால்

வாரம் அன்பொடு பார்வை வழங்கென

வாய் திறந்திட ஓடி வழங்கினாய்

வேரி முண்டகன் மால்

மகுடங்களின் வீசரும் ப்ரபை

தீபம் உவந்ததாள்

சேரு நன் பெரு வாழ்வும்

வழங்குவை தேடரும் சிவமாய

மதங்கியே!

பொருள்: பவானி என்ற

பெயருடையவளும் பரமசிவனின்
பத்தினியுமான தேவியே! உன் அடிமையாகி

என்னை கருணையுடன் கூடிய உன் கடைக்கண்ணால் பார்ப்பாயாக

என்று கேட்க நினைக்கும்

ஒருவன், பவானி! நீ என்று சொல்லத்

தொடங்கி, முடிக்கும் முன்பே,

அவனுக்கு விஷ்ணு, பிரம்மா,

இந்திரன் ஆகியோரின்

கிரீடங்களால் மங்கள ஆரத்தி

செய்யப்பெற்ற

திருவடிகளையுடைய உனது மேலான

ஸாயுஜ்ய பதவியையே அளித்து

விடுகிறாய்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால் அரச


பதவி, மந்திரி பதவி போன்ற உயர்

பதவிகள் ஏற்படும்.

தேர்வுகளில்

வெற்றியுண்டாகும். கோயில்

அல்லது நதிக்கரையில் ஜபிக்க

வேண்டும். இம்மைப்

பயன்களெல்லாம் சித்திக்கும்

என்பது நம்பிக்கை.

23. வியாதி, கடன் தொல்லை நீங்க

(ருண, ரோகம் நீங்க)

த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-

ரபரித்ருப்தேந மநஸா

ஸரீரார்த்தம் ஸம்போ-ரபரமபி ஸங்கே

ஹ்ருதமபூத்

யதேதத் த்வத்ரூபம் ஸகல-மருணாபம்

த்ரிநயநம்
குசாப்யா-மாநம்ரம் குடில-ஸஸி-

சூடால-மகுடம்

சக்தியிடம் சிவாம்சம் அடக்கம்

(தமிழ்)

ஆதி சங்கரர் பாதி உடம்பு இனிது

ஆளும் அம்பிகை பாதியும்

விஞ்சுமோ

நீதி அன்று என, நாயகர்

பங்கையும் நீ கவர்ந்தனையால்

அவர் எங்குளர்

சோதி செங்கதிர் மேனி நிறைந்தது தூய கண்களும் மூவகை

கொங்கையோ

ஈது இரண்டு உடல் கூனும் இளம்பிறை ஏர் பொழிந்தது நீள் முடி

எங்குமே.

பொருள்: அம்பிகையே! என்

இதயத்தில் குடிகொண்டு

பிரகாசிக்கும் உன் வடிவம்


முழுவதும் சிவந்த ஒளியுடனும்,

முக்கண்களுடனும், இரு தனங்களால் சற

வளைந்தும் பிறைச்சந்திரனைச் சூடிய திருமுடியுடனும்

விளங்குவதால், நீ பரமசிவனின்

இடது பாகத்தை அபகரித்துக்

கொண்டு, மனம்

திருப்தியடையாமல் அவருடைய

மற்றொரு பாதியையும்

அபகரித்துக் கொண்டாயோ என்று

சந்தேகம் கொள்கிறேன்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால் தீராத

வியாதிகள், கடன் தொல்லைகள்

நீங்கும். பல வழிகளில் பணம்,


பொருள் வந்து சேரும் என்பது

நம்பிக்கை.

24. பேய், பூதம் முதலியவை நீங்க

ஜகத்ஸூதே தாதா ஹரி-ரவதி ருத்ர: க்ஷபயதே

திரஸ்குர்வந்-நேதத் ஸ்வமபி

வபு-ரீஸஸ்-திரயதி

ஸதா-பூர்வ: ஸர்வம் ததித-

மநுக்ருஹ்ணாதி ச ஸிவஸ்

தவாஜ்ஞா-மாலம்ப்ய க்ஷண-சலிதயோர் ப்ரூ-

லதிக-யோ:

தேவி புருவத்தினால் ஏவும்

ஏவலை வியந்தது (தமிழ்)

ஆதி முண்டகன், மால், சிவன்,

அண்டர்ம மகேசன், அந்த சதாசிவன்,

ஐந்து பேர்

மேதகும் தொழில் போல, வனைந்து

அருள் வீறும் அங்கு அதன்


ஊறலும் உண்டென

யாதும் இன்றியும், மேனியொடு

எங்கணும் மாயை தந்ததும் ஞானம்

இரங்கு மோர்

நீதியும், திருவே! புருவங் கொடு

நீ சொல் இங்கித ஏவலை புரிந்ததே.

பொருள்: பராசக்தி அன்னையே!

பிரம்மா இவ்வுலகைப்

படைக்கிறார். விஷ்ணு

காக்கிறார். ருத்ரன் உரிய

காலத்தில் அழிக்கிறார். இவர்களுக்

மேற்பட்ட மகேசுவரன் இம்மூவரையுமே தம் சொரூபத்தில் மறையுமாறு

செய்து தம் உடலையும்

மறைத்துக் கொள்கிறார். ஸதா

என்ற அடைமொழியை முன்னால்

கொண்ட ஸதாசிவன், கொடி போன்ற

புருவங்களை நீ சற்று
அசைத்தால், அதை ஆதாரமான

கட்டளையாய் ஏற்று கொண்டு

மறுபடியும் பிரம்மன், விஷ்ணு,

ருத்திரன், ஈசுவரன் என்னும்

நான்கு தத்துவங்களையும்

படைக்கிறான்.

ஜபமுறையும் பலனும்

20 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால் பேய்,

பிசாசு முதலியவைகள்

ஓடிவிடும். அடிக்கடி வரும்

சிறிய நோய்கள்

நிவர்த்தியாகும் என்பது

நம்பிக்கை.

25. உயர் பதவி கிடைக்க


த்ரயாணாம் தேவாநாம் த்ரிகுண-

ஜநிதாநாம் தவ ஸிவே

பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா

ததா ஹி த்வத் பாதோத்வஹந

மணிபீடஸ்ய நிகடே

ஸ்திதா ஹ்யேதே ஸஸ்வந்-முகுலித-

கரோத்தம்ஸ-மகுடா:

தேவியின் பாத பூஜை சிறப்பு (தமிழ்)

மூவருக்கு முதற் பிறப்பு நின் முக்குணக் கடல் என்று, முன்

சேவடிக்கண் இருப்பர், சென்னி

குவித்த செங்கை பிரிக்கிலார்;

பூ எடுத்து அவர் சென்னி வைத்திடு போதம் உற்றவர், அம்மை!

நின்

கா அலர்ப் பொதி தாளில் வைக்கவும் மூவர் சென்னி களிக்குமே.

பொருள்: சிவனின் பத்தினியான

அன்னையே! உன் திருவடிகளில் செய்யப்படும் பூஜை ஸத்வம்,

ரஜஸ், தமஸ் என்னும் உன்


முக்குணங்களால் தோன்றிய

பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய

மும்மூர்த்திகளுக்கும் செய்யும் பூஜையாகும். ஏனென்றால்

உன் திருவடித் தாமரைகளைத் தாங்கும்

கிரீடங்களின் மீது கைகளைக்கூப்பிக் கொண்டே நின்று

கொண்டிருப்பதால், உன் திருவடிகளைப்

பூஜித்தாலே அவர்களையெல்லாம் பூஜித்ததாக ஆகிவிடுமன்றோ!

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால் முறைப்படி

கிடைக்க வேண்டிய உயர்பதவி

கிடைக்கும். அரசியல்

செல்வாக்கு உண்டாகும் என்பது

நம்பிக்கை.
26. பகைமை நீங்க

த்ரவிரிஞ்சி: பஞ்சத்வம்

வ்ரஜதி ஹரிராப்நோதி விரதிம்

விநாஸம் கீநாஸோ பஜதி தநதோ யாதி

நிதநம்

விதந்த்ரீ மாஹேந்த்ரீ

விததிரபி ஸம்மீலித-த்ருஸா

மஹா-ஸம்ஹாரேசஸ்மிந் விஹரதி

ஸதி த்வத்பதி-ரஸெள

தேவியின் மங்கல நாண் சிறப்பு

(தமிழ்)

வேத ரஞ்சகன், மால், புரந்தரன்,

வேக சண்ட குபேரனோடு

ஆதி எண் திசை பாலர் பொன்றவும்

ஆதி அந்த மிலாத தோர்

நாதர், பொன்றிலர், ஏது? உன்

மங்கல நாண் உறும் திறம்!


ஆதலால்,

நீ தழைந்தது யோகம் அம்பிகை,

நீலி என்பது பாவமே!

பொருள்: பதிவிரதையான தாயே!

மகாப் பிரளய காலத்தில்

பிரம்மா, விஷ்ணு, யமன், குபேரன்,

இந்திரர்கள் 14 பேர் ஆகிய

எல்லோருமே அழிவை

அடைகிறார்கள். ஆனால் உனது

நாயகனான சதாசிவன் மட்டுமே உன்

பதிவிரதா தன்மையால் அந்தப்

பிரளய காலத்திலும் அழியாமல்

உன்னுடன் இருந்து

விளையாடுகிறார். (பிரளய காலத்திலும் கூட

சிவனும் சக்தியும் அழிவற்று

நிலைத்து நிற்பார்கள்.)
ஜபமுறையும் பலனும்

ஒவ்வொரு மாதமும் வரும்

அமாவாசை அன்று (6 அமாவாசை

தினங்களில்) தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால் தம்

மீது பகைமை பாராட்டுபவர்கள்

பகைமை நீங்கி வசமாவார்கள்

என்பது நம்பிக்கை.

27. ஆத்ம ஞானம் உண்டாக

ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி

முத்ரா-விரசநா

கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-

மஸநாத்யாஹுதி-விதி:

ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-

மாத்மார்ப்பண-த்ருஸா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே

விலஸிதம்

தேவியிடம் தன்னையே

அர்பணித்துக் கொள்ளுதல்

(தமிழ்)

மொழிவது உன் செப முத்திரை

பாணியின் முயல்வது, எங்கு

நடப்பன கோயில்

சூழ்தொழில், அருந்துவ முற்றும் உன்

ஆகுதி, துயில் வணங்கல், களிப்பன

யாவும் நீ,

ஒழிவு அறும் களி, என் செயல்

யாவையும் உனது நன்செய் பரிச்

செயலாகவே

அழிவு அறும் பதம் வைத்தருள்,

பேரொளி! அளி விளைந்து

களிப்பெழு நாதமே.
பொருள்: அம்பிகையே! எல்லாமே

உனக்கு அர்ப்பணம் என்று ஆத்ம

சமர்ப்பண பாவனையுடன் நான்

பேசும் வெற்றுப் பேச்சு

ஜபமாகவும், என் உடல் அசைவுகள்

உன் முத்திரைகளின்

விளக்கமாகவும், நடையெல்லாம்

உனக்குச் செய்யும்

பிரதட்சிணமாகவும், நான்

புசிப்பதெல்லாம் உனக்குச்

செய்யும் ஹோமமாகவும், நான்

படுப்பது உனக்குச் செய்யும்

நமஸ்காரமாகவும், இம்மாதிரி என் சுக

நான் செய்யும் மற்ற செயல்களும் உனக்குச் செய்யும் பூஜையாக

நிறைவேறட்டும்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்
காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால்

தன்னிலை அறிதலாகிய ஆத்ம ஞானம்

உண்டாகிப் பேரின்ப வழி

திறக்கும் என்பது நம்பிக்கை.

28. மரண பயம் நீங்க

ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய-

ஜராம்ருத்யு-ஹரிணீம்

விபத்யந்தே விஸ்வே விதி-

ஸதமகாத்யா திவிஷத:

கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத:

காலகலநா

ந ஸம்போஸ் தந் மூலம் தவ ஜநநி தாடங்க-மஹிமா

தேவியின் தோடுகளின் சிறப்பு

(தமிழ்)
பிரமன், இந்திரன், முன்பிற

தேவர்கள், ஊண் எல்லாம்,

நரை பெருந்திரை அற்றநல்

ஆரமுதே கொலாம்,

ஒருவர் தங்கிலர்! நின் சிவன்

ஊண்விடம் வாழ்வன்! மாது!

இரு பெருங்கழைஇட்ட

பொன்னோலையின் வாசியே!

பொருள்: தாயே! பயங்கரமான மூப்பு, மரணம்

ஆகியவற்றை போக்கக்கூடிய அமிர்தத்தைப் பருகியும் பிரம்மா,

இந்திரன் முதலிய

தேவர்களெல்லாம் பிரளய

காலத்தில் அழிந்து

விடுகிறார்கள். ஆனால் மிகக்

கொடிய நஞ்சைப் பருகியும்

சிவன் அழியாதிருக்கிறார்.

அவருக்கு மட்டும் காலத்தின்


முடிவு இல்லையென்றாலும்

அதற்குக் காரணம் உன்

செவிகளில் அணிந்திருக்கும்

தாடங்கம் என்னும் காதணியின்

மகிமைதான்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால் தாம்

தொடங்கிய எல்லாக்

காரியங்களிலும்

வெற்றியுண்டாகும். விஷ வ்யாதி

பயங்கள் அகலும் என்பது

நம்பிக்கை.

29. முரட்டுத்தனம் நீங்க


கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர:

கைடபபித:

கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி

ஜம்பாரி மகுடம்

ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப

முபயாதஸ்ய பவநம்

பவஸ்யாப்யுத்தாநே தவ

பரிஜநோக்திர் விஜயதே

தேவிக்கு ஏவல் செய்வோர்

சொல்லும் மங்கல மொழி (தமிழ்)

முது மறை சொல் இளவனிதை, அயனோடு,

அரி, குலிசன் உனை முறை பணியும்

நெறியின் இடையே

பதறி, உனது அருகு வரும் அரனை,

எதிர் கொள உனது பரிசனம், உன்

அடிவளமையால்,

இதுபிரமன்மகுடம்,
அரிமகுடம்இது, குலிசன்முடி

இது கடினம், இடறும் இருதாள்

கதி அமர அமர வழி விலகி வரவர,

எமது கடவுள் எனும் மொழி தழைகவே!

பொருள்: தாயே! உன்னை பிரம்மா,

விஷ்ணு, இந்திரன் ஆகியோர்

நாள்தோறும் வணங்க வரும்போது

எதிரிலுள்ள பிரம்மாவின்

கிரீடத்தை விட்டு விலகி

வாருங்கள். விஷ்ணுவின்

கிரீடத்தில் தவறிப் போய்

இடறிக் கொள்ளாதீர்கள்.

இந்திரனின் கிரீடத்தை

ஒதுக்கிவிட்டு வாருங்கள்

என்றெல்லாம் உன்னுடைய

பணிப்பெண்கள் சொல்லிக்

கொண்டிருக்கும் பொழுதே, உன்


மாளிகைக்கு பரமசிவன்

வருவதையறிந்து நீ எழுந்து

சென்று எதிர்கொண்டு வரவேற்பது

சிறப்பாயுள்ளது.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால்

வீட்டில் பிள்ளை, பெண்

முதலியவர்களின்

முரட்டுத்தனம் நீங்கும்.

வீட்டில் பிரசவம் ஆக

வேண்டியவர்களுக்கு

சுகப்பிரசவம் உண்டாகும்

என்பது நம்பிக்கை.

30. அஷ்ட சித்தி பெற


ஸ்வதேஹோத்பூதாபிர்-க்ருணிபி-

ரணிமாத்யாபி-ரபிதோ

நிஷேவ்யே நித்யே த்வா-மஹமிதி

ஸதா பாவயதி ய:

கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயந-

ஸம்ருத்திம் த்ருணயதோ

மஹாஸம்வர்த்தாக்நிர்-விரசயதி

நீராஜந-விதிம்

தேவியின் மேனியை தன் மேனியாக

சிந்தித்தல் (தமிழ்)

அம்மே நின் மெய்ப் பிரிவாம்

அணிமாதி தொழும் அழியா

இம்மேனி தம்மேனி எனத்

தெளிந்து பாவிப்பார்

செம்மேனி அரன் வாழ்வுஞ்

சிதைவது எனப் புறக்கணித்து


வெம்மேனி ஊழி அனல் தீபமிட

விளங்குவார்.

பொருள்: ஆதியும் அந்தமும்

இல்லாத நிலையான பரம்பொருளான

தாயே! உன் உடலிலிருந்து தோன்றிய அணி

எண்வகைச் சித்திகளாகிய தேவதைகளால் சூழப்பெற்றவளே!

எவன், உன்னைத் தன் ஆத்மா என்றெண்ணி எ

சிந்திக்கிறானோ அவனுக்கு சிவசாயுஜ்யமெனும் செல்வத்தைக் கூடப்

பெரிதாகக் கருதாத அவனுக்கு,

பிரளய காலத்தில் எழும் ஊழித் தீ கூட, மங்கள ஆரத்தி

செய்யும் என்பதில் என்ன

வியப்பு?

ஜபமுறையும் பலனும்

96 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால்


அணிமாதி அஷ்ட சித்திகள்

உண்டாகும். எந்தக்

காரியத்தைத் தொடங்குவதிலும்

அதைரியம் நீங்கி தைரியம்

உண்டாகும். கூடுவிட்டுக் கூடுபாய்தலென்னும் பரகாய

ப்ரவேச சக்தியும்

சித்திக்கும் என்பது

நம்பிக்கை.

31. தேவியின் உபாசனை பெற

சது:ஷஷ்ட்யா தந்த்ரைஸ் ஸகல-மதி

ஸந்தாய புவநம்

ஸ்தி தஸ்-தத்தத் ஸித்தி-ப்ரஸவ-

பரதந்த்ரை: பசுபதி:

புநஸ்-த்வந்நிர் பந்தா-தகில-

புருஷார்த்தைக-கடநா-

ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம்

க்ஷிதிதல-மவாதீதர-திதம்
தேவியினுடைய வித்தை வந்தவாறு

(தமிழ்)

பசுபதி தன் நீதி கொண்டு,

அறுபத்துநாலு பல கலை ஞானமும்,

கருணையால்

வசிவுஅற நெடும்புவனம்

மாயையின் மயக்கி, அதன்

வழிவரும் பெரும்பயன் எலாம்,

இசை பெற விளைத்ததுவும்,

பின்னும் உனது ஏவலால், இணையில்

உனது ஆகமம் எலாம்,

விசைபெற விளைத்து, எவையும் இது

தர அளித்தும் விமலை! உனது உரிமை

அலவோ!

பொருள்: பராசக்தி தாயே!

பரமசிவன் இவ்வுலகில் அவரவர்

விரும்பும் சித்திகளை மட்டும்


அளிக்கும் 64 சாஸ்திரங்களால்

திருப்தியடையச் செய்துவிட்டு

பேசாதிருந்துவிட்டார். ஆனால்

பின்னர் உன்னுடைய

நிர்ப்பந்தத்தின் பேரில் அந்த

64 சாஸ்திரங்களின் வாயிலாகவும் அடையக்கூடிய பிறவிப்

பயன்களையெல்லாம் ஒருங்கே கிடைக்கச் செய்யக்கூடிய ஆற்றல்

வாய்ந்த முக்கியமான பஞ்சதசீ என்னு

முறையே இப்பூவுலகில் வெளியிட்டார்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால் ராஜ

வசியமும், பொன், பொருள், மனைவி,

மக்கள், வீடு, வாகனம் போன்ற சகல


விதமான செல்வமும் உண்டாகும்

என்பது நம்பிக்கை.

32. சுவர்ணாபரணங்கள் பெற

ஸிவ: ஸக்தி: காம: க்ஷித-ரத ரவி:

ஸீதகிரண:

ஸ்மரோ ஹம்ஸ: ஸக்ரஸ்-ததநு ச பரா-

மார ஹரய:

அமீ ஹ்ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-

ரவஸாநேஷு கடிதா

பஜந்தே வாணாஸ்தே தவ ஜநநி

நாமாவயவதாம்

தேவியின் மூலமந்திரம் (தமிழ்)

அரியதாகும் சிவம், சக்தி, மதன்,

அவனி, பின்பு ஆதித்தன், மதி, மதன

வேள்,

பெருகுவான், இந்திரன்,

பின்புபரை, மதனன், மால் பேசின்


முக்கண்டம் அடைவே

உரியதாம் அந்தத்தின் மாயை

மும்முறை அமைத்து உறு மெழுத்

தடைய உணர்வால்

தெரியின், நாமத்தினொடும் உனது

உறுப்பாம் என்று செப்பும்,

நான் மறைகள், உமையே!

பொருள்: அம்பிகையே! சிவ

பீஜாக்ஷரமான க; சக்தி

பீஜாக்ஷரமான ஏ; காம

பீஜாக்ஷரமான ஈ; பிருதிவி

பீஜாக்ஷரமான ல ; சூரிய பீஜாக்ஷரமான ஹ;

சந்திர பீஜாக்ஷரமான ஸ; மன்மத

பீஜாக்ஷரமான க ; ஆகாச

பீஜாக்ஷரமான ஹ; இந்திரனின்

பீஜாக்ஷரமான ல ; பரா பீஜமாகிய ஸ;

மன்மத பீஜமாகிய க ; ஹரி பீஜமாகிய ஸ ஆகி


இந்த உன்னுடைய அட்சரங்கள் புவனேசு

மூன்றுடன் சேர்ந்து 15 அட்சரங்களும்

மகாமந்திரத்தின் பகுதிகள்

ஆகின்றன.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால்

செப்பைத் தங்கமாக மாற்றும்

சக்தி ஏற்படும். மற்றும்

வியாபாரத்தில்

எதிர்பார்த்ததற்கு மேலாக அதிக

லாபம் உண்டாகும் என்பது

நம்பிக்கை.

33. செல்வம் செழிக்க


ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்

த்ரிதயமித-மாதௌ தவ மநோ:

நிதாயைகே நித்யே நிரவதி-

மஹாபோக-ரஸிகா:

பஜந்தி த்வாம் சிந்தாமணி-குண-

நிபத்தாக்ஷ-வலயா:

ஸிவாக்நௌ ஜுஹ்வந்த:

ஸுரபிக்ருத-தாராஹுதி-ஸதை:

எல்லா நலங்களையும் தரும்

மந்திரம்

மோக போக விழைவினார், உன் மூல வித்தை

தன்னின் முன்னாக,

மாரன், யோனி, பொன், அணங்கு,

அமைத்து நெய்யினால்

யோகம் ஆர் சிவத்தழற்குள், ஓமம்

உற்று, விமலையே
தியாக மா மணிக் கொடு, அக்க

வலயம் உள் செவிப்பரே.

பொருள்: ஹே தேவியே! உன்

பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின்

முதலில் காம பீஜமான க்லீம்,

புவனேஸ்வரி பீஜமான ஹ்ரீம், லக்ஷ்மி

பீஜமான ஸ்ரீம் ஆகிய மூன்று அக்ஷரங்களையும் சேர்த்து

இடைவிடாமல் ஜபித்து அதன்

மகிமையை உணர்ந்த சிலர்,

தொடர்ந்து ஜபம் செய்து, சக்தி

முக்கோணத்திலுள்ள அக்னியில்

(சிவாக்னி) காமதேனு தந்த

நெய்யைப் போன்ற

மனமகிழ்ச்சியைக் கொண்டு

எண்ணற்ற அர்ப்பணங்களைச்

செய்து ஆராதித்து

வருகிறார்கள்.
ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால்

செல்வம் மேன்மேலும் வளரும்.

மற்றும் இந்த சுலோகத்தைப்

பாராயணம் செய்யும் போது, தம் கையில்

மூடி வைத்துக் கொள்ளும் பணத்தைப் போல் பத்துமடங்கு பணம்

அதிகமாகக் கிடைக்கும் என்பது

நம்பிக்கை.

34. சந்தேகம் நீங்க

ஸரீரம் த்வம் ஸம்போ: ஸஸி-மிஹிர-

வ÷க்ஷருஹ-யுகம்

தவாத்மாநம் மந்யே பகவதி

நவாத்மாந-மநகம்

அத: ஸேஷ: ஸேஷீத்யய-முபய-


ஸாதாரணதயா

ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ-

பராநந்த-பரயோ:

சக்தி வடிவும் சிவன் வடிவும்

ஒன்று (தமிழ்)

இருசுடர் முலைத்துணைச் சிவன்

வடிவு நீ, அதனை யானும்  நவமாக

நினைவேன்

உருவு நிறை தன்னில் அளவு ஒத்த

பரமானந்தம் உடைய பரனோடு,

பரையுமாய்,

மருவும் இனிதாம், உங்கள் கூட்டம், அது

சேடமும் கொல்? மறுத்து அதனை,

உடையதுவுமாய், அருகில்,

இருவர்க்கும் ஒரு பொதுவாகி,

நிற்கும் அழிவு அற்ற ஞான முதலே.


பொருள்: பராசக்தி! சூரிய,

சந்திரர்களைத் தனங்களாக உடைய

நீ பரமசிவனுக்கு உடல் என்றும்,

காலம், குலம், நாமம், ஞானம்,

சித்தம், நாதம், பிந்து, கலை, ஜீவன்

ஆகிய ஒன்பது வியூகங்களின் சொரூபியான சிவனை உன்னுடைய

உடல் என்றும் மனக்கண்ணால்

என்னால் காண முடிகிறது.

ஆகையால் உடைமை, உடையவர்

என்னும் இந்த உறவு சமரசப்பட்ட

ஆனந்த பைரவர், ஆனந்த பைரவி என்ற

உங்களில் இருவருக்கும்

சமமாகவே தோன்றுகிறது.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை


1000 தடவை ஜபித்து வந்தால்

எல்லாவிதமான சந்தேகங்களும்

நீங்கும். மற்றும் ஜலோதரம்,

தீராச்சளி, சீதள ஜ்வரம் போன்ற

சகல ஜலரோகங்களும் நீங்கும்

என்பது நம்பிக்கை.

35. இதயநோய் நீங்க

ஸ்மமநஸ்த்வம் வ்யோம த்வம்

மருதஸி மருத்ஸாரதி-ரஸி

த்வ-மாபஸ்-த்வம் பூமிஸ்-த்வயி

பரிணதாயாம் ந ஹி பரம்

த்வமேவ ஸ்வாத்மாநம்

பரிணமயிதும் விஸ்வ-வபுஷா

சிதாநந்தாகாரம் ஸிவயுவதி-

பாவேந பிப்ருஷே

ஆறு சக்கரங்களிலும்

வியாபிக்கும் தேவி (தமிழ்)


மனமும் நீ, வெளியும் நீ, வளியும்

நீ, கனலும் நீ, மறிபுனலும் நீ,

புவியும் நீ

நினையில் நீ பரம் அறவளர்ந்து

ஒளிபரந்து விடில் நீ அன்றி

ஒன்றும் உளதோ?

உனது, மா ஞான ஆனந்த உருவைப்,

புவன உரு என வகுத்து அருளவோ?

அனையுமாய், மகவும் ஆமாறு போல்

நீ சக்தி அருண வடிவு ஆயது

உமையே!

பொருள்: அம்பிகையே! நீயே ஆக்ஞா

சக்கரத்தில் மனமாக

விளங்குகிறாய். விசுத்தி

சக்கரத்தில் ஆகாசமாக

விளங்குகிறாய். அநாஹதத்தில்

வாயுவாக இருக்கிறாய்.
ஸ்வாதிஷ்டானத்தில்

அக்கினியாக இருக்கிறாய். ஜல

தத்துவமும் பிருதிவி

தத்துவமும் ஆன நீயே

பிரபஞ்சமாகவும்

வடிவெடுக்கும் போது உன்னைத்

தவிர வேறுபொருள் இல்லை.

இவ்வாறாக நீ வடிவெடுப்பதற்காக

சிவபிரானின் பத்தினி என்ற

நிலையை ஏற்றுக் கொள்கிறாய்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால்

மார்பு நோய் நீங்கும்.

கடுக்காயில் ஜபம் செய்து, அதை


நீரில் உறைத்துச் சாப்பிடச்

செய்யவும் என்பது நம்பிக்கை.

36. சகல நோய்களும் நீங்க

தவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் தபந-ஸஸி-

கோடி த்யுதிதரம்

பரம் ஸம்பும் வந்தே பரிமிலித-

பார்ஸ்வம் பரசிதா

யமாராத்த்யந் பக்த்யா ரவி-ஸஸி-

ஸுசீநா-மவிஷயே

நிராலோகேசலோகே நிவஸதி ஹி

பாலோக-புவநே

ஆக்கினைச் சக்கரத்தில் காட்சி

(தமிழ்)

அருளும்உனது ஆக்கினைத்

திகிரிக்குள் உட்பட்டு,

அருக்கன், மதி, அனைய வடிவாய்ப்

பருவமுதிர் பர சின்மயத்தோடு
உறு பான்மையாம் பரமசிவனைப்

பணிகுவாம்,

ஒரு பொழுதில் இப்பரமசிவனை,

எழுகதிர் மதிய ஒளி கடந்து,

ஒளிரும், ஒருபால்

பெருகு பரமானந்த விழைவு ஒளி,

நினைப்பது கொல்? பெறுமுத்தி,

சக்தி ஒளியே!

பொருள்: அம்பிகை தாயே! உன்

ஆக்ஞா சக்கரத்தில்

இருப்பவரும், கோடி சூர்ய சந்திரர்களின்

பிரகாசத்தை கொண்டவரும், ஸகுண,

நிர்க்குண சக்திகளை இரு

பக்கமும் அணைக்கப்

பெற்றவருமான பரமசிவனை

வணங்குகிறேன். அப்படி பரமசிவனை பக்

வணங்கும் ஒருவன் சூரியன், சந்திரன், அக்கினி ஆகி


மூவரின் ஒளியும் பரவாத பரஞ்சோதி வடிவமான உன்னுடைய ஸாயுஜ்ய

பதவியைப் பெற்று மகிழ்வான்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

1000 தடவை ஜபித்து வந்தால்

சாதாரண நோய்களும், தீராத

நோய்களும் தீரும்.

பிரம்மராக்ஷஸ் பிடித்தவர்களை

அது விட்டு ஓடி விடும் என்பது

நம்பிக்கை. சுலோகத்தை

ஜலத்தில் எழுதச் செய்து

ஸ்நானம் செய்விக்கவும்.

37. பிசாசு பீடை நீங்க

விஸுத்தௌ தே ஸுத்தஸ்படிக-

விஸதம் வ்யோம-ஜநகம்
ஸிவம் ஸேவே தேவீமபி ஸிவஸமாந-

வ்யவஸிதாம்

யயோ: காந்த்யா யாந்த்யா:

ஸஸிகிரண-ஸாரூப்ய-ஸரணே:

விதூதாந்தர்-த்வாந்தா விலஸதி சகோரீவ

ஜகதீ

விசுத்தி சக்கரத்தில் காட்சி

(தமிழ்)

இறைவி! நின் விசுத்தித்

தலத்திடை பளிங்கு நிற எழிலொடு,

உலகருள் தந்தையாய்,

உறையுமொரு சிவனையும், அவன்

போலும் ஆரம்பம் உடைய உனையும்

பணிகுவாம்,

நிறை மதி ஒளிக்கு ஒத்த, நெறி

ஏகும், உமது ஒளியின் நிலவுண்டு,

பசி களைவது ஓர்


முறை பெறு சகோதரம் என, உலகு

பாதக இருள் முடித்துக்

களித்து உறையுமே.

பொருள்: தாயே! உன்னுடைய

விசுத்தி சக்கரத்தில் தெளிவான

பளிங்கைப் போன்ற வடிவினரும்,

ஆகாச தத்துவத்தைத்

தோற்றுவிப்பவருமான சிவனையும்

அதே போன்ற நிலையினளான

உன்னையும் வணங்குகிறேன்.

சந்திரனின் சந்திரகிரணத்தைப்

போல வெளிவரும் உங்கள்

இருவரின் ஒளியினால் உலகம்

முழுவதும் அஞ்ஞானமென்னும்

அகவிருள் நீக்கப் பெற்று,

நிலவில் களிக்கும்

சகோரப்பக்ஷி போல்
விளங்குகிறது. (இருள்

நீங்கினால் சகோரங்கள் கண்

தெரிந்து ஒன்றோடொன்று

சேருமென்பது கவிமரபு.)

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

5000 தடவை ஜபித்து வந்தால் பேய்,

பிசாசு, பூதம், பிரும்ம ராக்ஷஸ்

போன்றவை நீங்கி விடும் என்பது

நம்பிக்கை.

38. குழந்தைகள் நோய் நீங்க

ஸமுந்மீலத்-ஸம்வித்-கமல-

மகரந்தைக-ரஸிகம்

பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி

மஹதாம் மாநஸசரம்
யதாலாபா-தஷ்டாதஸ-குணித

வித்யாபரிணதி;

யதாதத்தே தோஷாத் குணமகில-

மத்ப்ய: பய இவ

அனாகத சக்கரத்தில் தோற்றம்

(தமிழ்)

முன்னைத் தபோதனர் தம் இதயமான

தவாவி முது ஞான முளரி நறவு

ஆர்ந்து,

அன்னத்தின் வடமொழி பெயர்

பெற்று, மொழி பயிலும் அறு மூன்று விஞ்சை விரிவால்,

பன்னப் பொதிந்த, தீவினை நீரில்,

நற்குணப்பால் பிரித்து உண்டு,

களியா,

மன்னப் படுஞ்சிறைப் புள்

இணையை, நாடொறும் வழுத்ததும்,

மலர்க்கமலையே!
பொருள்: பராசக்தியே! நான்

இரண்டு அன்னப்பறவைகளை

வணங்குகிறேன். அவை நன்றாக

மலர்ந்த ஞானம் என்னும்

தாமரையிலிருந்து ஆனந்தம்

என்னும் இனிய தேனைப் பருகுபவை.

மகான்களின் மனம் என்னும்

தடாகத்தில் நீந்துபவை. அவை

பேசிக் கொள்ளும் இன்பப்

பேச்சிலிருந்தே பதினெட்டுக்

கலைகளும் தோன்றுகின்றன.

அன்னங்கள் நீரையும் பாலையும்

பிரித்து விடுவதைப் போல, இவை

குற்றங்களையும் குணங்களையும்

பிரிக்கின்றன. (இங்கு சிவனும்

சக்தியுமே அன்னப்பறவைகள் எனக்

குறிப்பிடப்படுவன.)
ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு முகமாக

அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை

5000 தடவை ஜபித்து வந்தால்,

குழந்தைகளுக்கு ஏற்படும்

பாலாரிஷ்டம் என்பது நீங்கி

சுகமாகும் என்பது நம்பிக்கை.

39. கெட்ட கனவுகள் வராமல் இருக்க

தவ ஸ்வாதிஷ்ட்டாநே ஹுதவஹ-

மதிஷ்ட்டாய நிரதம்

தமீடே ஸம்வர்த்தம் ஜநநி

மஹதீம் தாஞ்ச ஸமயாம்

யதாலோகே லோகாந் தஹதி மஹஸி

க்ரோதகலிதே

தயார்த்ரா யா த்ருஷ்டி: ஸிஸிர

முபசாரம் ரசயதி
சுவாதிட்டானத்தில் காட்சி

(தமிழ்)

நிலை பெறு சுவாதிட்டான நின்

சிவ அனலும், நீயும்,

இலகிய தன்மை நெஞ்சத்து

இறைஞ்சுவம், உரைக்கமாட்டோம்;

உலகம் அப்பார்வை செந்தீக்கு

உருகில், நின் கருணை பொங்கி

அலை எறி அமுதப் பார்வை அளித்து,

இனிது அருளும் அம்மே!

பொருள்: அம்பிகையே! உன்

ஸ்வாதிஷ்டான சக்கரத்தில்

அக்னி தத்துவத்தைச்

சிந்தித்து அதில் எப்பொழுதும்

ஒளிர்கின்ற பிரளய கால அக்னி

வடிவினரான ருத்ரனையும், மஹத்

என்னும் மகிமை வாய்ந்தவளான


பராசக்தியையும் போற்றித்

துதிக்கின்றேன். அந்தப்

பரமசிவனின் பார்வையாகிய அக்னி

உலகங்களையெல்லாம்

எரிக்கும்போது குளிர்ச்சி

மிகுந்த கருணை பொழியும் உன்

திருவிழிப் பார்வைதானே

குளிர்வித்துக் காக்கிறது!

ஜபமுறையும் பலனும்

12 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 108 தடவை

ஜபித்து வந்தால் பயத்தை

உண்டாக்கும் கெட்ட கனவுகள்

நீங்கும் என்பது நம்பிக்கை.

40. வருங்காலம் உணர


தடித்வந்தம் ஸக்த்யா திமிர-

பரிபந்த்தி-ஸ்புரணயா

ஸ்புரந்-நாநாரத்நாபரண-

பரிணத்தேந்த்ர-தனுஷம்

தவ ஸ்யாமம் மேகம் கமபி மணிபூரைக-ஸரணம்

நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர-

தப்தம் த்ரிபுவநம்

மணிபூரக சக்கரத்தில் தரிசனம் (தமிழ்)

விரித்த இருள் விழுங்கும்

சக்தி மின்னொடும் பன் மணி

இந்திர வில்லினோடும்,

தரித்தமறை பரவு சிவ தபனகதிர்

எறிப்ப, அதில் தழன்று, தீயில்

பிரித்து உலகம் குளிர, ஒளி

தழைத்து ஒளிரப், பொழி அமுத தாரை

மாரி
பரித்த மணி பூரகத்துள், பச்சை முகில்

பணிவன், அருள் பழுத்த கொம்பே!

பொருள்: ஹே பகவதி, நீலமேக ரூபமான உனது

ஸதாசிவ தத்வத்தை நான்

வணங்குகிறேன். அந்த மேகம் மணிபூரகமென்னும்

சக்கரத்தையே இருப்பிடமாகக்

கொண்டது; அங்குள்ள

இருளையகற்றும் சக்தியாகிய

மின்னல்களை உடையது; பல்வேறு வர்ணமு

ரத்தின ஆபரணங்களின் ஒளியாகிய வானவில்லுடன் கூடியதும்;

கறுத்ததும் காலாக்னி ருத்ரனால் பி

மூவுலகையும் அமிர்தமாகிய மழையைப் பொழிந்து குளிரச்

செய்வதுமாகிய உன் சதாசிவ

தத்துவத்தை வணங்குகிறேன்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது


வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால்,

வருங்காலத்தை அறியலாம். தாம்

விரும்பிய பொருளை அடையும்

வகையைக் கனவில் காணலாம்

என்பது நம்பிக்கை.

41. வயிற்று வலி நீங்க

தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய-பரயா

நவாத்மாநம் மந்யே நவரஸ-

மஹாதாண்டவ-நடம்

உபாப்யா-மேதாப்யா-முதய-விதி-

முத்திஸ்ய தயயா

ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநகஜநநீமத்

ஜகதிதம்

மூலாதார சக்கரத்தில் தாண்டவம் (தமிழ்)


நீ நந்து மூல ஆதாரத்தில், ஆனந்த

நிர்த்தமிடும் இறைவி!

நின்னோடு

ஆனந்தத் தாண்டவம் விளைத்து, நவ

வடிவுபெறும் ஆதி சிவனைப்

பரவுவாம்;

வானம் தொடுத்து, உலகம்

அடையப்படைத்து இடும்,

இவ்வகையின் புணர்ச்சி அலவோ?

ஞானங்கொள், அனை, தந்தை, என, உலகு

தெளிவுற நடத்துவது, ஞான ஒளியே!

பொருள்: தாயே! உன்னுடைய மூலாதாரமென்னும்

சக்கரத்தில் நர்த்தனம்

புரிபவளான ஸமயா தேவியோடு

சிருங்காரம் முதலிய 9 ரஸங்கள்

பொருந்திய தாண்டவமென்னும் நடனம் பு

மஹாபைரவமென்னும் உன் ரூபத்தைத் தியானம் செய்கிறேன்.


பிரளயத்திற்குப் பின்

மறுபடியும் தோன்றுகிற இந்த

உலகத்திற்கு, மஹாபைரவர்,

மஹாபைரவி என்னும் நீங்கள் இருவரும் கருணையால் ஒன்றுகூடி

இந்த உலக ஜீவர்களுக்குத்

தாயும் தந்தையுமாகிறீர்கள்.

ஜபமுறையும் பலனும்

30 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 4000 தடவை

ஜபித்து வந்தால், வயிற்று வலி

நீங்கும். குல்மம் என்னும்

வயிற்றுக் கட்டியும் நீங்கி

சௌக்கியம் உண்டாகும் என்பது

நம்பிக்கை.
42. வயிற்றில் ஏற்படும் நோய்கள்

நீங்க

கதைர்-மாணிக்யத்வம் ககநமணிபி:

ஸாந்த்ர-கடிதம்

கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே

கீர்த்தயதி ய:

ஸ நீடேயச்சாயா-ச்சுரண-ஸபலம்

சந்த்ர ஸகலம்

தநு: ஸெளநாஸீரம் கிமிதி ந

நிபத்நாதி திஷணாம்

அழகின்

அலைப்பெருக்கு(சௌந்தர்ய லஹரி)

கிரீட வர்ணனை-வசியம் பெருக்க

அந்தரம் மணித்தபனர் பலமணியின்

வடிவெடுத்து அமரும் உனது

அம்பொன் முடிமேல்

இந்த கலை நவமணியின் ஒழுகு பல


நிறமடைந்து இலகும் அதிசய

வடிவினால்,

சந்திரகலை நன்று நன்று என்பர்

சிலர்; அன்று அன்று சந்திர கலை

இந்த நிறமே

இந்திர சிலை இந்திர சிலை

என்பர் சிலர் ஆதலால் யாது என

வழுத்த உமையே.

பொருள்: மலையரசனின் மகளே!

உனக்குச் சேவை செய்யும் பொருட்டு மா

உருவெடுத்துள்ள பன்னிரண்டு சூரியர்களால் நன்கு இழைக்கப்பட்ட

உன் பொற்கிரீடத்தை வர்ணிக்க

எவன் மனம் விரும்புகிறதோ அவன்,

கிரீடத்தில்

பதிக்கப்பட்டுள்ள

நவரத்தினங்களின் ஒளியால்

விந்தையான வர்ணம் உள்ளது


போலத் தோற்றமளிக்கும்

சந்திரகலையை இந்திரனுடைய வில்

என்று நினைத்துக் கொள்ள

மாட்டானா?

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், மஹோதரம்

என்னும் நோய் விலகும். மற்றும்

பசு, பக்ஷி, மனிதர்கள், தேவர்கள்

அனைவரையும் வசீகரிக்கும்

சக்தியும் ஏற்படும் என்பது

நம்பிக்கை.

43. ஜயம், புகழ் பெறவும், வியாதி

நீங்கவும்
துநோது த்வாந்தம் நஸ்-துலித-

தலிதேந்தீவர-வநம்

கந-ஸ்நிக்த-ஸ்லக்ஷ்ணம் சிகுர-

நிகுரும்பம் தவ ஸிவே

யதீயம் ஸெளரப்யம் ஸஹஜ-

முபலப்தும் ஸநமநஸோ

வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதந-

வாடீ-விடபிநாம்

கூந்தல் அழகு-சகல காரியங்களில்

வெற்றி பெற (தமிழ்)

அலர்ந்த கரு நெய்தல் அங்காடு

எனக் கடை குழன்று அற நெய்த்து

இருண்டு செறிவோடு

இலங்குறும் இயற்கை மணம் எண் திசை அளப்ப அதில் இதழ் மூழ்கு

நறை விழைவினால்

பொலன் கொள் முடி ஆகண்டலேசன்

பொற்று உணர்விரி பொதும்பர்


மது மலர் படிவதோர்

சிலம்பு அளி பரந்த உனது ஓதி என்

மனத்திருள் செறிவு தெற அருள்

கமலையே.

பொருள்: அம்பிகையே! உன் கருங்கூந்தல் மலர்ந்த

கருநெய்தல் காடு போல அடர்ந்து,

வழவழப்பாயும், மிருதுவாயும்

உள்ளது. அது எங்கள் அகஇருளை

அகற்றட்டும். அதிலுள்ள

இயற்கையான நறுமணத்தை அடைய

விரும்பியே இந்திரனின்

நந்தவனத்திலுள்ள கற்பக

மலர்களெல்லாம் அந்தக்

கேசத்தில் வாசம் செய்கின்றன

என எண்ணுகிறேன்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்
காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால் எடுத்த

காரியங்கள் எல்லாவற்றிலும்

வெற்றியுண்டாகும்.

நோய்களெல்லாம் நீங்கும்

என்பது நம்பிக்கை.

44. ஜனங்களின் மனதைக் கவர

தநோது ÷க்ஷமம் நஸ் தவ வதந-

ஸெளந்தர்யலஹரீ

பரீவாஹ-ஸ்ரோத:-ஸரணிரிவ ஸீமந்த-

ஸரணி:

வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபல-கபரீ-பார-திமிர-

த்விஷாம் ப்ருந்தைர்-பந்தீ-

க்ருதமிவ நவீநார்க்க-கிரணம்
வகுட்டின் வர்ணனை-எல்லா

நோயினின்றும் விடுதலை பெற

(தமிழ்)

மோதிய வெங்கதிர் மீள வெருண்டு இருள் மூட ஒதுங்கிய வாறேயோ

சோதி முகம் கவின் ஏறி வழிந்தன

சோரவிடும் கவர் காலேயோ

ஓதி பிணைந்து பின் வீழ

வகிர்ந்து அதன் ஊடு எழுதும்

ப்ரபை யாதேயோ

கோதறு சிந்துர ரேகை வளம் பிறர் கூறுவது அன்று இது மாதாவே.

பொருள்: பராசக்தியே! உன்

திருமுகத்தின் அழகு வெள்ளம்

பெருகிப் பொழிவது வழிந்தோடும்

வாய்க்காலைப் போலுள்ளது. அது உன்

கரிய கற்றைக் கூந்தல் என்னும் பலம்மிக்க பகைவர்களால்

இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்ட இளஞ்சூரியனின் கிரண

ஒளியைப் போன்று தெரிகிறது.


குங்குமம் அப்பியதுமான அந்த

வகிடு எங்களுக்கு ÷க்ஷமத்தை

அளிக்கட்டும்.

ஜபமுறையும் பலனும்

12 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், எல்லோரையும்

வசீகரிக்கும் சக்தி உண்டாகும்

என்பது நம்பிக்கை.

45. முக்காலத்தையும் உணர

அராலை: ஸ்வாபாவ்யா-தலிகலப-

ஸஸ்ரீபி-ரலகை:

பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி

பங்கேருஹ-ருசிம்

தரஸ்மேரே யஸ்மிந் தஸநருசி


கிஞ்ஜல்க-ருசிரே

ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மர-தஹந-

சட்சுர்-மதுலிஹ:

குஞ்சத்தின் வர்ணனை-திருவின்

நோக்கு பெற, வாக்கு

பலிதத்திற்கு (தமிழ்)

கூர் எயிற்றின் அக இதழுங் கொண்கர் விழி வரி வண்டும் குழற்

படிந்த மதுகரத்தின் குழாமும் கூடிப்

பேரியற்கை மணம் பொதிந்து புன்மூரல் முகை அவிழப் பிறழும் உனது

அருணமுக கமலம் என்றால்

ஒரியற்கை வாடுமிதழ் பொறிவண்டே

படிவது மற்று ஒரியற்கை

செயற்கை மணம் போது செய்யும்

நீரியற்கை மலர்க்கமலம்

இதற்குடைந்து பங்கமுறல்

நீதியென்பது யாரறியார்

நிகரில் மாதே.
பொருள்: அம்பிகையே!

புன்னகையால் சிறிது

மலர்ந்தாற் போலவும், அழகிய

பல்வரிசைகளுடன்

பிரகாசிப்பதும், தாமரை மலரின் நறும

கூடியதுமான, உன் முகமாகிய தாமரை

மலரில், மன்மதனை எரித்த

சிவனின் கண்கள் என்னும் தேன்

வண்டுகள் மயங்குகின்றன.

அத்தகைய உன் முகம் இயல்பாகவே

சுருள் சுருளாகவும், சிறு

வண்டுகள் மொய்த்திருப்பன

போன்ற அழகைக் கொண்டதாகவும்

உள்ள முன்நெற்றி மயிர்கள்

பரவியுள்ளதால் உன் முகம்

தாமரை மலரைப் பரிகாசம்

செய்வது போல் இருக்கிறது.


ஜபமுறையும் பலனும்

12 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால் வருங்காலத்தை

உணரும் சக்தியுண்டாகி

சொன்னதெல்லாம் பலிக்கும்

என்பது நம்பிக்கை.

46. புத்ர பாக்கியம் பெற

லலாடம் லாவண்ய-த்யுதி-விமல-

மாபாதி தவ யத்

த்விதீயம் தந்மந்யே மகுட-

கடிதம் சந்த்ரஸகலம்

விபர்யாஸ-ந்யாஸா துபயமபி ஸம்பூய ச மித:

ஸுதாலேப-ஸ்யூதி: பரிணமதி ராகா-

ஹிமகர:
நுதல் தோற்றம்-புத்திரப்

பேற்றுக்கு

கோதை நீண்டமுடி கொண்டொளிர்

திங்கள் சேர்

பாதி வாள் நுதல் என்று

படிந்ததோ

வீது கூடி இரண்டு நிறைந்ததோ

சீத பூரணத் திங்கள் சிறந்ததே.

பொருள்: ஹே பகவதி! உன்னுடைய

நெற்றியானது உன் கிரீடத்தில்

கீழ்நோக்கி தொங்கவிடப்பட்ட

மற்றொரு சந்திரகலை போல்

காட்சி தருகிறது. ஏற்கனவே மேல்

நோக்கிக் கிரீடத்திலுள்ள சந்திரகலை

சந்திர கலையையும் மாற்றி வைத்தால்

பூர்ணசந்திரனாகக் காட்சி தரும். (தேவியின்

நெற்றி, மனத்தின் அதிஷ்டான


தேவதை என்பதால், அதைச் சந்திர

கலையாகத் தியானம் செய்தால்

மனஜயம் உண்டாகும்.) இவ்வாறு

மனத்தில் எண்ணி அமாவாசையன்று

வானில் முழுநிலவைக் கொணர்ந்து

காட்டிய அபிராம பட்டரின்

சாதனை வியக்கத்தக்கது.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால்

பிள்ளையில்லாதவருக்குக்

குணமுள்ள பிள்ளை உண்டாகும்.

தவிர, கோரிய பலன்களெல்லாம்


வெற்றியடையும் என்பது

நம்பிக்கை.

47. இறை அருள் பெற

ப்ருவெள புக்நே கிஞ்சித்புவந-

பய-பங்க வ்யஸநிநி

த்வதீயே நேத்ராப்யாம் மதுகர-

ருசிப்யாம் த்ருத-குணம்

தநுர்-மந்யே ஸவ்யேதர கர-

க்ருஹீதம் ரதிபதே:

ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தர-முமே:

புருவ அழகு-எல்லா

காரியங்களில் வெற்றி பெற

(தமிழ்)

கருவிழிச் சுருப்பு நாண் உன்

கண்மலர் அம்பு, கன்னல்

புருவவில், நடுவொழித்தல்

போன்றது வளைத்துப் போர்மேல்


வருமதன் பிடித்த கைக்குள்

மறைந்தது போலும் என்றால்

திருமகள் பரவும் அம்மே சிலை

இது புருவம் அன்றே.

பொருள்: தாயே! உலக மக்கள்

அனைவரின் அச்சத்தை

அகற்றுவதிலேயே மிகுந்த அக்கறை

கொண்டவளே! சற்று வளைந்து

காணப்படும் உன் புருவங்கள்,

வண்டுகள் போன்ற நாண் பூட்டப்பட்டும், இடக்கையில்

பிடிக்கப்பட்டு,

முழங்கையாலும்

மணிக்கட்டாலும்

மறைக்கப்பட்டு அதன்

நடுப்பாகத் தோற்றம்

தெரியாமலும் உள்ளதால், அது


மன்மதனின் வில் என்றே

எண்ணுகிறேன்.

ஜபமுறையும் பலனும்

25 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், சகல

தேவதைகளும் வசியமாவார்கள். அதன்

மூலம் விரும்பிய காரியங்களிலெல்லாம் வெற்றி உண்டாகும் என்பது

நம்பிக்கை.

48. சகல தோஷங்களும் விலக

அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயந-மர்க்காத்மகதயா

த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி

ரஜநீ-நாயகதயா

த்ருதீயா தே த்ருஷ்டிர்-

தரதலித-ஹேமாம்புஜ-ருசி:
ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ-

நிஸயோ-ரந்தரசரீம்

கண்களின் எழில்-

நவகோள்களினின்று விடுபெற

(தமிழ்)

ஒரு மலர்க்கண் இரவி

வலத்துதித்து அருளு நண்பகலும்

ஒரு மலர்க்கண் மதியம் இடத்து

உதித்து அருளும் பேரிரவும்

திருநுதற்கண் பொற் கமலச்

செந்நிறத்தீ விளைத்தருளும்

விரவு செக்கர் மாலையும் உன்

விழை வகலா விழுப்பொருளே.

பொருள்: தாயே! உன் வலது கண் சூரியனாக இருப்பதால்

அது பகலையும், உன் இடது கண்

சந்திரனாக இருப்பதால்

இரவையும் தோற்றுவிக்கிறது.
உன்னுடைய மூன்றாவது கண் சற்று மலர்ந்த தங்கத் தாமரை மலர்

போலிருப்பதால், இரவுக்கும்

பகலுக்கும் இடையேயுள்ள காலை

மாலைச் சந்தியா காலங்களை

அமைக்கிறது.

ஜபமுறையும் பலனும்

9 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால்,

நவக்ரஹங்களால் உண்டாகும்

தோஷங்களும், சிரமங்களும்

நீங்கி சுகம், சம்பத்து

உண்டாகும் என்பது நம்பிக்கை.

49. வியாபாரம் விருத்தியாக


விஸாலா கல்யாணீ ஸ்புடருசி-

ரயோத்யா குவலயை:

க்ருபாதாரா தாரா கிமபி மதுரா

போக-வதிகா

அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுநகர-

விஸ்தார-விஜயா

த்ருவம் தத்தந்-நாம-வ்யவஹரண-

யோக்யா விஜயதே

எண்வித கண்ணோட்டம்-நிறைந்த

வெற்றி பெற (தமிழ்)

கோல நகர் விசாலையாய் நிரந்தர

கல்யாணியாய்க் குவலயத்தால்

அயோத்தியாய்க் குல மதுரை

தானாய்ச்

சால ஒளிர் போகவதியாய்

அமுததாரையாய்த் தண்ணளியால்

அவந்தியாய்ச் சகவிசயை எனலாய்


நீல விழி புடைபரந்து

நெடுநகரப் பெயர் கவர்ந்து

நீண்டு சேந்து அரிபரந்து நிக

ரொழிக்கும் என்றால்

ஆலவிடம் அமுதமெனக் கொண்டு

அருந்திய உன்மத்தர்புரம்

அதனில் ஒரு புறங்கவர்தல்

அதிசியமோ தாயே!

பொருள்: அம்பிகையே! உன்

கண்ணோட்டம் பரந்து

விரிந்ததாகும். அது

மங்களகரமாகவும், மலர்ந்து ஒளி

வீசுவதாகவும், கருநெய்தல்

மலர்களையும் மிஞ்சும் அழகு

வாய்ந்ததாகவும், கருணைப்

பெருக்கிற்கு ஆதாரமாகவும்,

வர்ணிக்க முடியாத
அழகுமிக்கதாகவும், ஆழங்காண

முடியாத அளவுக்கு

நீண்டதாகவும், அடியவர்களைக்

காப்பதாகவும், பல

நகரங்களிலும் பார்வையின் பிரவாகம்

இருப்பதால் அந்தந்த நகரங்களில் கு

அனைத்தையுமே வெல்லக்கூடியதாகும்.

ஜபமுறையும் பலனும்

10 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், புதையல் உள்ள

இடத்தைக் காணலாம். இதற்குரிய

யந்திரத்தை மஞ்சளில் எழுதி,

அந்த மஞ்சளைச் சுட்டு,

நல்லெண்ணெயில் உறைத்து
மையாக்கி, பூனைக் கண்ணுள்ள பெண் கையால் மை

தீட்டிக் கொண்டால் புதையல்

உள்ள இடம் காணப்படும் என்பது

நம்பிக்கை.

50. அம்மை நோய் நீங்க

யாகவீநாம் ஸந்தர்ப-ஸ்தபக-

மகரந்தைக-ரஸிகம்

கடாக்ஷ-வ்யா÷க்ஷப-ப்ரமர-கலபௌ-

கர்ணயுகலம்

அமுஞ்சந்தௌ த்ருஷ்ட்வா தவ

நவரஸாஸ்வாத-தரலௌ

அஸூயா-ஸம்ஸர்கா-தலிக-நயநம்-

சிஞ்சிதருணம்

மூன்றாவது கண்-தூரபார்வைக்கு, வைசூரி நோய் நீங்க

(தமிழ்)

இரு செவியுண் பலகவிதை

இணரொழுகு பசுந்தேனில்
பெருகும் நவரசமருந்திப்

பிறழ்ந்திடும் உன் பிணை

விழியாம்

கருநிற வண்டு இணைகளிப்பக்

கண்டு பொறாது என்னேயோ

வரி நுதல்கண் அளி சிவந்த

வளம்பாராய் மலர்க்கொடியே.

பொருள்: தாயே! உன்னுடைய இரண்ட காதுகளு

கவிகளின் காவியப் படைப்பாகிய புஷ்

பருகும் ஆவலுடன் கூடியவை. அந்தக்

காதுகளைச் சற்றும் பிரியாமல்

உள்ள உன் கண்கள் இரண்டும்

குட்டி வண்டுகளைப் போலத்

துள்ளித் திரிந்து

கவிதைகளிலுள்ள நவரசங்களையும்

அனுபவித்து மகிழும் ஆவல்

கொண்டவை. எனவே, உன் இரண்டு


கண்களையும் பார்த்துப்

பொறாமையினால் தான் உன்னுடைய

நெற்றிக்கண் சற்றே சிவந்து

காணப்படுகிறது என்பது

நம்பிக்கை.

ஜபமுறையும் பலனும்

5 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து

வந்தால் வைசூரியனால் உடலெரிச்சல், கை கால்கள்

முடமாதல், கண்பார்வை இழத்தல்

போன்ற சிரமங்களெல்லாம்

நீங்கிச் சுகம் உண்டாகும்

என்பது நம்பிக்கை.

51. புகழ் பெற


ஸிவே ஸ்ருங்காரார்த்ரா

ததிதரஜநே குத்ஸநபரா

ஸரோஷா கங்காயாம் கிரிஸநயநே

விஸ்மயவதீ

ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ-

ஸௌபாக்யஜநநீ

ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜநநி

த்ருஷ்டி: ஸகருணா

தேவியின் பார்வையில் எண்

ரசங்கள்-மக்கள் வசியம் அடைய

(தமிழ்)

அரனிடத்தில் பேரின்பம்

அருளும், அவனல்லார் பால்

அருவருக்கும், அவன் முடிமேல்,

அணி நதியைச் சீறும்

பரவு நுதல் விழியழல் முன்

பார்த்தில போல் அதிசயிக்கும்,


பணியான பணிவெகுளப் பயந்தன

போல் ஒடுங்கும்

விரைமுளரிப் பகைதடிந்து

வீராதம் படைக்கும்

வினவு துணைச் சேடியர்க்கு

விருந்து நகை விளைக்கும்

இரவு பகல் அடிபரவும் எளியனைக்

கண்டு அருள் புரியும்

இத்தனையோ படித்தன உன் இணை

விழிகள் தாயே.

பொருள்: தாயே! உன்னுடைய

பார்வையில் எண்வகை ரஸங்களும்

பொதிந்துள்ளன. அதாவது,

சிவபிரானிடம் மட்டும் உன்

பார்வை சிருங்கார ரஸத்தைப்

பிரதிபலிப்பதாகவும், அவரைத்

தவிர மற்றவர்களிடம்
வெறுப்பைக் காட்டுவதாகவும்,

கங்கா தேவியிடம்

கோபமுடையதாகவும், சிவனின்

திருவிளையாடல்களில்

வியப்புடையதாகவும், சிவன்

அணிந்துள்ள பாம்புகளிடம்

பயமுடையதாகவும், தாமரை மலரை

விடச் சிவந்தும், வீர ரஸம்

ததும்புவதாகவும், தோழிகளிடம்

இனிய நகைச்சுவை உடையதாகவும்

என்னிடம் கருணை

நிரம்பியதாகவும்

விளங்குகிறது.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து


மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், நல்ல புகழ்

உண்டாகும். (சந்தனத்தின் மீது

நீண்ட சதுரம் எழுதி, அதன் நடுவில் க்

என்ற மூன்று முறை எழுதி, பொட்டு இட்டுக் கொண்டு உடலில் பூசிக்

கொள்ளவும்.) சர்வஜன வசியம்

உண்டாகும் என்பது நம்பிக்கை.

52. கண் நோய், காது நோய் நீங்க

கதே கர்ணாப்யர்ணம் கருத இவ

பக்ஷ்மாணி தததீ

புராம் பேத்துஸ்-சித்தப்ரஸம-

ரஸ-வித்ராவண-பலே

இமே நேத்ரே கோத்ராதரபதி-

குலோத்தம்ஸ-கலிகே

தவாகர்ணாக்ருஷ்ட-ஸ்மரஸர-

விலாஸம் கலயத:
மன்மத பாணங்களைப் போன்ற

கண்கள்-காமம் வெல்ல, காது,

கண்களின் நோய்கள் நீங்க (தமிழ்)

இகல் பொரக் குழையை முட்டும் இமைமயிர் ஒழுங்கிற்றூவல்

நிகராறு நித்தர் யோகம் நீக்கி

வெம் போகம் நல்கும்

சிகர வெற்பரசன் தொல்லைத்

திருமரபு என்னும் தெய்வம்

மகுட மாமணி நின் கண்கள் வயமதன்

வாளி தானே.

பொருள்: அம்பிகையே! மலையரசனின்

குலவிளக்கே! உன் திருவிழிகள்

இரண்டும் காதுகள் வரை

நீண்டிருப்பதாலும்,

பாணங்களின் இருபுறமும்

கட்டப்படும் இறகுகளைப் போன்ற

இமை உரோமங்களைக்
கொண்டிருப்பதாலும்,

முப்புரங்களையும் எரித்த

சிவபிரானின் மனத்தில்

சாந்தியை விலக்கி, சிருங்கார

நினைவைத் தோற்றுவிப்பதை

நோக்கமாய்க் கொண்டு காது வரை

இழுக்கப்பட்ட மன்மத

பாணத்தையும்

நினைவுபடுத்துபவை போல உள்ளன.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், கண்களின்

பார்வை மங்குதல், எரிச்சல்,

காதுகளில் சீழ் வடிதல்,


குத்துதல் போன்ற

நோய்களெல்லாம் நீங்கும்

என்பது நம்பிக்கை.

53. சகல காரியங்களும் வெற்றி பெற

விபக்த-த்ரைவர்ண்யம்

வ்யதிகரித-லீலாஞ்ஜந-தயா

விபாதி த்வந்நேத்ர-த்ரிதய-மித-

மீஸாந-தயிதே

புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிண

ஹரி-ருத்ரா-நுபரதாந்

ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி

குணாநாம் த்ரய்மிவ

முக்குணங்கள் படைத்த கண்கள்-

தேவி தோன்ற, உலகையாள (தமிழ்)

வரிவிழிச் செம்மை வெண்மை வனப்புறு கருமை மூன்றும்

எரிதெறு கற்ப காலத்து இறந்த

முப்பொருளும் தோன்றும்
கருஎனக் குணங்கள் மூன்றின் காரணம் என்னப் பெற்றால்

அரு மறைப் பொருளே உன்றன்

அருளலாது உலகம் உண்டோ.

பொருள்: பரமேசுவரனின்

அன்புக்குரியவளே, நீ

விளையாட்டிற்காகக் கண்களில்

மையைத் தீட்டியிருக்கிறாய்.

எனவே, உன்னுடைய மூன்று கண்களும் சிவப்பு,

வெளுப்பு, கருப்பு என்னும் மூன்றும் வர்ணங்களைக்

கொண்டிருக்கின்றன. இதைப்

பார்த்தால், பிரளய காலத்தில்

உன்னில் அடங்குகிற பிரம்மா,

விஷ்ணு, ருத்திரன் என்னும்

தேவர்களை மறுபடியும்

படைப்பதற்காக முறையே

ரஜோகுணம், ஸத்வகுணம், தமோகுணம்

என்பவைகளை உன் கண்கள்


தாங்குகின்றனவா என்று எண்ணத்

தோன்றுகிறது.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், தேவியின்

அருள் கிடைக்கும். குத்து

விளக்கேற்றி அதனடியில் ஜபம்

செய்ய வேண்டும். சகல காரியங்களும்

அனுகூலமாகும் என்பது நம்பிக்கை.

54. துஷ்ட ரோகங்கள் நீங்க

பவித்ரீ-கர்த்தும் ந: பஸுபதி-

பராதீந-ஹ்ருதயே

தயாமித்ரைர்-நேத்ரை-ரருண-தவல-

ஸ்யாம ருசிபி:
நத: ஸோணோ கங்கா தபந-தநயேதி

த்ருவமமும்

த்ரயாணாம் தீர்த்தாநா-முபநயஸி

ஸம்பேத-மநகம்

கண்களின் வர்ணனை-உலக பீடை

நீங்க (தமிழ்)

அம்மை நின்கருணை பொங்கி

அலையெறி நயன வேலை

மும்மணி கெழும் உன் தொண்டர் மும்மலம் களைய மூழ்கச்

செம்மை தன் சோணையாறு தெளிகங்கை யமுனை மூன்றும்

தம்மயத் தொடும் வந்துற்ற

தன்மை ஈதென்பர் மிக்கோர்.

பொருள்: பரமசிவனிடம் உள்ளத்தை

அர்ப்பணித்த தாயே! உன்னுடைய

கண்களில் சிவப்பு, வெளுப்பு,

கருப்பு என்னும் மூன்றுவிதமான ரேகைகள் வெவ்வேறு வழியாகச்

செல்கின்றன. அவைகள் மேற்கு


நோக்கிச் செல்லும் சிவப்பு

வர்ணமுள்ள சோணா நதி, கிழக்கு

நோக்கிச் செல்லும் வெளுப்பான

கங்கை, கிழக்கு நோக்கிச்

செல்லும் கருப்பு வர்ணமுள்ள

யமுனை இவைகளின் சங்கமத்தை

எங்களைப் புனிதம் செய்வதற்காக

அமைத்திருக்கிறாய் என்றே

எண்ணுகிறேன்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், பெண்களுக்கு ஏற்படும் சூதக

நோய் முதலிய கொடிய


நோய்களெல்லாம் நீங்கும்

என்பது நம்பிக்கை.

55. எதிரிகளின் பயம் நீங்க

நிமே÷ஷாந் மேஷாப்யாம் ப்ரலய-

முதயம் யாதி ஜகதீ

தவேத்யாஹுஸ் ஸந்தோ தரணிதர-

ராஜந்ய-தநயே

த்வதுந்மேஷாஜ்ஜாதம் ஜகதித-

மஸேஷம் ப்ரலயத:

பரித்ராதும் ஸங்கே பரிஹ்ருத-

நிமேஷாஸ்-தவ த்ருஸ:

கண்கள் இமையாது இருக்கும்

காரணம்-அருள் பாலிக்கும்

சக்தி, எல்லா வியாதிகள் அகல

(தமிழ்)

இணைவிழி இமையா நாட்டம்

எய்தியது அலரத் தோன்றும்


பணை நெடும் புவனம் இந்தப்

பார்வை சற்று இமைக்குமாயில்

துணையிழந்து அழிவதெண்ணித்

துணிந்த நின் கருணை என்றால்

கணையினும் கொடியது என்னக்

கடவதோ கடவுள்மாதே.

பொருள்: மலையரசனின் மகளே! உன்

கண்ணின் இமைகளை மூடுவதாலும், திறப்பதாலும்

உலகம் அழிவதும், மீண்டும் தோன்றுவது

நிகழ்வதாகச் சான்றோர் கூறுகிறார்கள். உன் கண்கள்

திறப்பதால் தோன்றும் இந்த

உலகம் முழுவதையும், அழியாமல்

காப்பதற்காகவே உன் கண்கள்

இரண்டும் இமைக்காமலே

இருக்கின்றனவா என நான்

எண்ணுகிறேன்.
ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 2500 தடவை

ஜபித்து வந்தால், நம்மை அழிக்க

நினைக்கும் பகைவன் அழிவான்.

விரைவாதம் முதலான அண்ட

நோய்களும் நீங்கும் என்பது

நம்பிக்கை.

56. நல்ல நண்பர்கள் கிடைக்க

தவாபர்ணே கர்ணே-ஜப-நயந-பைஸுந்ய-

சகிதா

நிலீயந்தே தோயே நியத-மநிமேஷா:

ஸபரிகா:

இயஞ் ச ஸ்ரீர்-பத்தச்சத-புட-
கவாடம் குவலயம்

ஜஹாதி ப்ரத்யூஷே நிஸி ச விகடய்ய ப்ரவிஸதி

அழகினால் வெல்லும் கண்கள்-

விடுதலை பெற, கண் நோய் நீங்க

இடம் படர் கொடியே நின்கண்

இருசெவிக்கு உரைப்பது ஏதென்று

அடர்ந்து எழு கயலின் கண்கள்

அடைப்பில பயப்பட்டு அம்மா

கடும்பகல் கமலவீடும் கங்குல்

வாய் நெய்தல் வீடும்

அடைந்தனள் கமலை ஒன்றொன்று

அடைப்பன கண்டு கொண்டாய்.

பொருள்: அபருணா எனப் பெயர்

பெற்ற தாயே! உன் கண்கள் உன்

காதுகளின் அருகில் சென்று

கோள் செய்கின்றனவோ என்ற

பயத்தால் உன்னைப் போல்


இமைக்கொட்டாத மீன்கள்

தண்ணீரில் மறைந்து

விடுகின்றன. இந்த உன் கண்களிலுள்ள ஒ

லக்ஷ்மி விடியற்காலையில் இதழ்களாகிய கதவுகளால் மூடப்பெறும்

கருநெய்தல் புஷ்பத்தை விட்டு

அகல்வதைப் போலவும்,

மறுபடியும் இரவில் அந்த

இதழ்களைத் திறந்து கொண்டு

உள்ளே புகுவதைப் போலவும்

தோன்றுகிறது.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 20,000 தடவை

ஜபித்து வந்தால், தடைகள்


விலகும். பந்த விமோசனம்

உண்டாகும் என்பது நம்பிக்கை.

57. சுபிட்சம் ஏற்பட

த்ருஸா த்ராகீயஸ்யா தரதலித-

நீலோத்பல-ருசா

தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய

க்ருபயா மாமபி ஸிவே

அநேநாயம் தந்யோ பவதி ந ச தே

ஹாநி-ரியதா

வநே வா ஹர்ம்யே வா ஸமகர-நிபாதோ

ஹிமகர:

நிலவென பொழியும் அருள்-எல்லா

நன்மையுடைய (தமிழ்)

நெடிய கண் கரிய நெய்தல்

நிறையருள் சலதி எய்தாக்

கொடியனேன் பிறவித்துன்பக் குறைகடல் கடந்து மூழ்க

விடின் அதின் குறைவதுண்டோ


மெத்தவர்க்கு ஒழிந்துறாதோ

கடிநகர் நிலவு காட்டிற்

காயுமே கருணை வாழ்வே.

பொருள்: சகல மங்களங்களையும்

அளிப்பவளே! உன் கடைக்கண்

பார்வை சற்றே மலர்ந்த

கருநெய்தல் புஷ்பம் போல்

விளங்குகின்றது. காது வரை

நீண்டுள்ளது. உன்னை

நெருங்காமல் உள்ள இந்த ஏழையை

அந்தப் பார்வையால் தயவு

செய்து ஸ்நானம் செய்துவை.

அதனால் நான் புண்ணியமும்

செல்வமும் பெறுவேன். இதனால்

உனக்கு எந்தக் குறையும் இல்லை.

சந்திரன்; காட்டிலும்,

அரண்மனையிலும் பாரபட்சமின்றி
ஒரே விதமாகத்தானே

காய்கின்றான்?

ஜபமுறையும் பலனும்

6 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 25,000 தடவை

ஜபித்து வந்தால்,

ஒவ்வொருவருக்கும் வீடு,

வாகனம், மனை, மனைவி முதலான ஸகல

சுகங்களும் உண்டாகும்.

நாட்டில் சுபிட்சம் ஏற்படும்

என்பது நம்பிக்கை.

58. புகழ் பெறவும், நோய்

நீங்கவும்

அராலம் தே பாலீயுகல-

மகராஜந்யதநயே
ந கேஷா-மாதத்தே குஸுமஸர-கோதண்ட-

குதுகம்

திரஸ்சீநோ யத்ர ஸ்ரவணபத-

முல்லங்க்ய விலஸந்

அபாங்க-வ்யாஸங்கோ திஸதி

சரஸந்தாந-திஷணாம்

கடைக்கண் பார்வை-காமனை வெல்ல,

நோய் நீங்க (தமிழ்)

கருங்குழல் நுதற்கட் பின்னற்

கவின் கடைக் கபோலந் தாழ்ந்த

அருங்குழை கடந்த கண்ணின்

அயிற்கடை அனங்கசாப

நெருங்குறத் தொடுத்த ஏவின்

நிமிர்தலை ஏய்க்கும் என்றால்

மருங்கில் பொற்றிருவே யாருன்

மதர்விழி பரவ வல்லார்.


பொருள்: பர்வதராஜனின்

புத்திரியே! வளைந்த

கண்ணுக்கும் காதுக்கும்

இடைப்பட்ட இரு பகுதிகளையும்

பார்த்தால், மலர்ப்

பாணங்களையுடைய மன்மதனின் வில்

போன்ற தோற்றத்தை

யாருக்குத்தான்

ஏற்படுத்தாது? உண்மையில்

குறுக்காகச் செல்லும் உன்

கடைக்கண் பார்வை, காதுகளின்

வழியே ஊடுருவிப் பாய்வது,

மன்மதன் பாணங்களைப்

பயன்படுத்துவதைப் போன்றுதானே

உள்ளது? (அம்பிகையின் கடைக்கண் பார்

நலன்களையும் நல்கக்கூடியது.)
ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், எங்கும்

செல்வாக்கும், புகழும்

உண்டாகும். சகல நோய்களும்

நீங்கும் என்பது நம்பிக்கை.

59. மனைவியின் அன்பைப் பெற

ஸ்புரத்கண்டாபோக-ப்ரதிபலித-

தாடங்க-யுகளம்

சதுஸ்சக்ரம் மந்யே தவமுகமிதம்

மந்மதரதம்

யமாருஹ்ய த்ருஹ்யத்-யவநிரத-

மர்கேந்து-சரணம்
மஹாவீரோ மார: ப்ரமதபதயே

ஸஜ்ஜிதவதே

ரதம் போன்ற முகம்-சர்வ ஜன

வசியம் (தமிழ்)

தோகை நின் கபோலம் சார்ந்த

துணைநிழல் சுவடும் தோடும்

ஆக இவ்வுருளை நான்கின் ஆனன

விரதம் வாய்த்தோ

ஏக நன் புடவி வட்டத்து இரு

சுடராழித் திண்தேர்ப்

பாகரைப்பொருது மாரன் பழம்பகை

தீரப்பெற்றான்.

பொருள்: ஹே தேவி! உன்னுடைய தாடகங்கள்

ஸ்ரீசக்ர ரூபமான வைரத் தோடுகள் உன் கன்னங்களில்

பிரதிபலிக்கின்றன. அவைகளுடன் கூடிய உன்

திருமுகத்தை நான்கு சக்கரங்களுடன் கூடிய மன்மதனின் ரதமெனக்

கருதுகிறேன். இந்த ரதத்தில் ஏறிக் கொ


மன்மதன் சூரியனையும் சந்திரனையும் சக்கரங்களாகக் கொண்ட

பூமியாகிய ரதத்தில் ஏறி, திரிபுரங்களை

அழித்த பரமசிவனை எதிர்த்துப்

போரிடுகிறானோ?

ஜபமுறையும் பலனும்

3 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 25,000 தடவை

ஜபித்து வந்தால், மனைவியின்

அன்பைப் பெறலாம், சிறந்த

பதவியும் கிடைக்கும் என்பது

நம்பிக்கை.

60. கல்வி அறிவு பெற

ஸரஸ்வத்யா: ஸூக்தீ-ரம்ருத-லஹரீ-

கௌஸலஹரீ:

பிபந்த்யா: ஸர்வாணி ஸ்ரவண-


சுலுகாப்யா-மவிரலம்

சமத்கார-ஸ்லாகாசலித ஸிரஸ:

குண்டலகணோ

ஜணத்காரைஸ்-தாரை: ப்ரதிவசந-

மாசஷ்ட இவ தே

சொல்லின் இனிமை-வாக்கு பலிதம்,

ஊமை பேச (தமிழ்)

வேரி நாள் மலர்க்குள் வாணி

விலையில் பாடல் அமுதெலாம்

சேர மாமடந்தை நின் செவிக்குணா

வருத்தவே

ஆரமாலை முடியசைப்ப ஆடியெற்று

குண்டலம்

பூரை பூரை யென்ற சொல் பொலிந்த ஓசை பெற்றதே.

பொருள்: பரமேஸ்வரனின்

பத்தினியே! அமுதப் பெருக்கின்

இனிமையையும் வெல்லும் வல்லமை


மிக்கது உன் இனிய சொல்லமுதம்.

அதை இடைவிடாது தன் காதுகளாகிய

பாத்திரங்களால் பருகிக்

கொண்டிருப்பவரும், அதைப்

பாராட்டும் வகையில் அடிக்கடி

தலையை அசைத்துக்

கொண்டிருப்பவருமான சரசுவதி

தேவி, தன் காதணிகளாகிய

குண்டலங்களை அசைத்து ஜணத்ஜணத்

என்ற உயர்ந்த ஒலி கேட்பது, உன்

சொல்லினிமையை ஆம் ஆம் என்று

பாராட்டுவதைப் போல்

தெரிகிறது.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து


மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், ஸகலகலா

ஞானமும், சென்றவிடமெல்லாம்

செல்வாக்கும் உண்டாகும்

என்பது நம்பிக்கை.

61. கல்வி அறிவு பெற

அஸௌ நாஸாவம்ஸஸ்-

துஹிநகிரிவம்ஸ-த்வஜபடி

த்வதீயோ நேதீய: பலது பல-மஸ்மாக-

முசிதம்

வஹத்யந்தர்-முக்தா: ஸிஸிரகர-

நிஸ்வாஸ-கலிதம்

ஸம்ருத்த்யா யத்தாஸாம் பஹிரபி

ச முக்தாமணிதர:

மூக்குத்தி முத்தின் அழகு-மனோ வெற்றி (தமிழ்)

இமய மன்னன் மரபில் வெற்றி

இடுபதாகை அனைய என்


அமலை உன்றன் வதன துண்ட அணி

சிறந்த மணியையோ

விமலு மன்னு கவிஞர் முத்தை

வெற்பில் வல்லி யலர்வதோர்

கமல மன்னு குமிழ் அளித்தல்

கண்டதல்ல என்பதே.

பொருள்: பனிமலையரசனின்

குலக்கொடியே! மூங்கில் தண்டைப் போன்ற உன்

அழகிய மூக்கின் உள்ளே பளபளக்கின்ற அழகிய முத்துக்கள் நிறைய

இருக்கின்றன போலும்! அதனால்

தான் உன் இட நாசித் துவாரத்தின் வழி

என்னும் மூச்சுக்காற்று, முத்துக்களை

வெளியேயும் கொண்டு வருகிறதென

எண்ணுகிறேன். அத்தகைய அழகிய

நாசி, எங்களுக்குத்

தேவையானதும், விரைவில் பலன் தரக்கூடியதுமான


நன்மைகளை அளித்துக்

காக்கட்டும்.

ஜபமுறையும் பலனும்

8 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 12,000 தடவை

ஜபித்து வந்தால், எடுத்த

காரியம் எல்லாவற்றிலும்

தடையின்றி வெற்றியுண்டாகும்

என்பது நம்பிக்கை.

62. சுகமான தூக்கம் பெற

ப்ரக்ருத்யா ரக்தாயாஸ்-தவ

ஸுததி தந்தச்சதருசே:

ப்ரவக்ஷ்யே ஸாத்ருஸ்யம் ஜநயது

பலம் வித்ருமலதா

ந பிம்பம் தத்பிம்ப-ப்ரதிபலந-
ராகா-தருணிதம்

துலா-மத்யாரோடும் கதமிவ

விலஜ்ஜேத கலயா

இதழ்களின் அழகு-நல்ல நித்திரை

இறைவி நின் இதழ்ச்சிவப்பு

இயற்கை இத்தொடு இணைசொனா

நிறைகொள் கொவ்வை இந்நிறத்தின்

நீழல் பெற்று விம்பமாய்

உறைதல் கொண்டு நாணும் மற்றோர்

உவமை இல்லை உண்டெனா

அறை கடல் துகிர்ப் பழுக்கின்

அன்று சொல்வன் அளியனே!

பொருள்: அழகிய பற்கள் அமைந்த

தேவி, இயல்பிலேயே

சிவந்திருக்கும் உன்னுடைய

உதடுகளின் வர்ணம் இயற்கையாகவே

சிவப்பு. இதற்கு உவமை கூற முற்படுகிறேன்.


பவழக்கொடிக்குப் பழம்

கிடையாது. அது பழத்தைத் தோற்றுவித்

உவமையாகக் கூறலாம். கோவைப்பழமும்

இயற்கையாகச் சிவந்ததல்ல; உன்

உதட்டின் சிவப்பு அதில்

பிரதிபலித்திருப்பதால் தான்

அதுவும் சிவப்பாக இருக்கிறது.

ஆகவே, கோவைப்பழம் பதினாறில் ஒரு பங்கு கூட உன் உதட்டுச்

சிவப்புடன் ஒப்பிட

முடியாமையால்

வெட்கமுற்றிருக்கிறது.

ஜபமுறையும் பலனும்

8 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், தூக்கம் இல்லாமல்


வருந்துபவர்களுக்கு நல்ல தூக்கம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

(ஒரு தங்கத் தகட்டில்

சதுரமாகக் கோடு அடித்து, அதன்

மத்தியில், மம், மம், மம் என்று

எழுதி வைத்து ஜபம் செய்தபின்

தலைகாணிக்கு அடியில் வைத்துப்

படுக்கவும்.)

63. உயர்ந்த பதவி, அதிகாரம் பெற

ஸ்மித ஜ்யோத்ஸ்நாஜாலம் தவ வதந-

சந்த்ரஸ்ய பிபதாம்

சகோராணா-மாஸீ-ததிரஸதயா சஞ்சு-

ஜடிமா

அதஸ்தே ஸீதாம்ஸோ-ரம்ருதலஹரீ-

மாம்லருசய:

பிபந்தி ஸ்வச்சந்தம் நிஸி

நிஸி ப்ருஸம் காஞ்ஜிகதியா


சிரிப்பின் அழகு-எல்லா

உயிர்களும் விரும்ப (தமிழ்)

அன்பு முற்றி வடிவாய, அம்மை

நினது ஆனனத்து மதி நகைநிலா

நன்புறத்தமுதம் ஒழுகும்

மாமதுர நறை கொள்

சீதளமயின்றவாய்

இன் புளிப்பலது உவட்டுறாதினி

யெனத் தெவிட்டிய சகோரம் வான்

முன்பரப்பு நிலவு உண்ணுமால் உனது மூரலுக்கு நிகர் மூரலே.

பொருள்: அம்பிகையே! உன்னுடைய

முகமாகிய சந்திரன் பொழியும்

புன்சிரிப்பாகிய அமுதம் போன்ற

நிலவொளியை அளவின்றிப் பருகும்

சகோர பக்ஷிகள், அதன் மிகையான

தித்திப்பால் தங்கள் அலகுகள்

உணர்விழந்தனவாக ஆகிவிட்டன
எனக் கருதி, மாற்று ரஸமாகப்

புளிப்பை விரும்பி சந்திரனின்

கிரணங்களான அமுதப் பெருக்கை,

புளித்த கஞ்சியாக எண்ணி

வேண்டியவரை ஒவ்வோர் இரவிலும்

அதைத் திருப்தியாகப் பருகி

மகிழ்கின்றன.

ஜபமுறையும் பலனும்

30 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 30,000 தடவை

ஜபித்து வந்தால், உயர்ந்த

பதவியையும், அதிகாரத்தையும்

பெறலாம். இவ்வுலகில்

எல்லோரையும் மோகிக்கச்
செய்யும் சக்தியும் உண்டாகும்

என்பது நம்பிக்கை.

64. ஸ்த்ரீகளின் வியாதி நீங்க

அவிஸ்ராந்தம் பத்யுர்-குணகண-

கதாம்ரேடநஜபா

ஜபாபுஷ்பச் சாயா தவ ஜநநி

ஜிஹ்வா ஜயதி ஸா

யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷத்-

தச்சச்சவி-மயீ

ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி

மாணிக்யவபுஷா

நாவின் எழில்-நாமகள் அருள்

விள்ள நாவுரை எழுந்தொறும்

தலைவர் வீரமும் புகழும்

அழகுமே

தெள்ளு பாடல் மதுரம்

பழுத்தனைய செய்ய கேழ் ஒளி


வனப்பினால்

அள்ளன் மாமலரை விட்டு

வாணியுனது அருண நாவுறைய

வெள்ளையாய்

உள்ள மேனியும் என் அம்மை நீ

அருள உன் நிறம் பெறுவது ஒத்ததே.

பொருள்: தாயே! உன்னுடைய நாவானது

உன் பதியாகிய பரமசிவனின் மங்களகரமா

இடைவிடாமல் எந்நேரமும் திரும்பத்

சொல்லி வருவதால் செம்பருத்திப் பூவைப் போலச் சிவந்து

காணப்படுகிறது. அந்த நாக்கின்

நுனியில் சரஸ்வதி தேவி

வசிக்கின்ற காரணத்தால் தான்,

தெளிவான ஸ்படிகம் போன்று வெண்மையா

சரஸ்வதியின் திருமேனிகூட, மாணிக்கத்தைப்

போல் சிவந்து மாறிக்

காணப்படுகிறது.
ஜபமுறையும் பலனும்

18 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 25,000 தடவை

ஜபித்து வந்தால், பெண்களுக்கு

ஏற்படும் எல்லா நோய்களும்

நீங்கும். நினைத்த காரியமும்

நிறைவேறும் என்பது நம்பிக்கை.

65. சகலத்திலும் வெற்றி பெற

ரணே ஜித்வா தைத்யா-நபஹ்ருத-

ஸிரஸ்த்ரை: கவசிபி:

நிவ்ருத்தைஸ் சண்டாம்ஸ-

த்ரிபுரஹர-நிர்மால்ய-விமுகை:

விஸாகேந்த்ரோபேந்த்ரை:

ஸஸிவிஸத-கர்ப்பூரஸகலா
விலீயந்தே மாதஸ்தவ வதந-தாம்பூல-

கபலா:

தாம்பூல சிறப்பு-வாக்கு வெற்றி

அற்றை யருள் சிவசேடம்

சண்டனுண்ண அது பொறாது ஆவல்

தீரக்

கற்றை மலர்க் குழல் உமை! நின் கருப்பூரச்

சகலமதிச் சகலம் போல

உற்ற திருத் தம்பலத்தின் ஒரு

சகல மேனும் இனி துண்டு வாழப்

பெற்றிலரேல் அமரரெனும்

பெயர்பெறவும் இருத்தனரோ

பிழைப்பில் விண்ணோர்.

பொருள்: தாயே! தேவசேனாதிபதியான

சுப்ரமண்யர், தேவேந்திரன்,

மகாவிஷ்ணு ஆகியோரெல்லாம்

அசுரர்களை வென்று திரும்பி


உன் அருகில் வரும்பொழுது,

மரியாதைக்காகத் தலைப்பாகையை

எடுத்துத் தம் கைகளில்

வைத்திருக்கிறார்கள். அவர்கள்

சண்டிகேசுவரரின் பாகமாகிய

பரமசிவனின் நிர்மால்யத்தைப்

பொருட்படுத்தாமல், வெண்மையான பச்சை

கற்பூரப் பொடியுடன் கலந்ததும், நீ வாயில் மென்று கொடு

தாம்பூலக் கவளங்களைப் பெற்று நன்கு மென்று தின்கிறார்கள்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், எடுத்த

காரியம் எதுவாக இருந்தாலும்

தோல்வியென்பதே இல்லாமல்
வெற்றி உண்டாகும். வாக்கு

வசியம் உண்டாகும் என்பது

நம்பிக்கை.

66. சர்வ ரோக நிவாரணம்

விபஞ்ச்யா காயந்தீ விவித-

பதாநம் பஸுபதே:

த்வயாரப்தே வக்தும் சலிதஸிரஸா

ஸாதுவசநே

ததீயைர்-மாதுர்யை ரபலபித-

தந்த்ரீ-கலரவாம்

நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி

சோலேந நிப்ருதம்

தேவியின் குரலினிமை-சங்கீத

ஞானம்

பசுத்த மலர்க் கொடி! கருணை

பழுத்தனைய கொம்பே! நின் பரமர்

பொன்தோள்
விசைத் தொழிலை கலைவாணி

தனிற்பாடிப் பாடியவள்

மெலிவதல்லால்

அசைத்திலர் பொன்முடி உனது

மதுர மொழிக்கு அசைத்தன ரென்று

அதற்கு நாணி

இசைத் தொழிலைக் கைவிட்டாள்

எழில் வீணை உறையிலிட்டாள் ஏது

செய்வாள்.

பொருள்: தாயே! சரஸ்வதிதேவி

பரமசிவனுடைய பலவிதமான

அருள்விளையாட்டு லீலைகளை தனது

வீணையில் பாடுகிறாள். நீ

அதைக்கேட்டு மகிழ்ச்சியோடு

தலையை அசைத்து, ஆஹோ என்று சொல்ல

ஆரம்பித்தாய். அந்த உன்

பேச்சின் இனிமை, தன் வீணைத்


தந்தியின் ஒலியைப் பரிகாசம்

செய்வது போலிருப்பதால்

ஓசைப்படாமல் சரஸ்வதி தேவி

உறைத்துணியால் தன் வீணையை

மறைத்து விடுகிறாள்.

ஜபமுறையும் பலனும்

3 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 5000 தடவை

ஜபித்து வந்தால், எல்லாவித

நோய்களும் நீங்கும். வீணை,

பிடில், மிருதங்கம் முதலிய

வாத்தியங்களை கற்றுக்

கொள்பவர்கள் இதைப் பாராயணம்

செய்தால் அவைகளில் மிக்க


வல்லவர்களாகி விடுவார்கள்

என்பது நம்பிக்கை.

67. பதவி உயர

கராக்ரேண ஸ்ப்ருஷ்டம்

துஹிநகிரிணா வத்ஸலதயா

கிரீஸேநோதஸ்தம் முஹுரதர-

பாநாகுலதயா

கரக்ராஹ்யம் ஸம்போர்-

முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே

கதங்காரம் ப்ரூமஸ்-தவ-சுபுக-மௌபம்ய-

ரஹிதம்

முகவாய்க்கட்டை-தேவியின்

பிரசன்னம் (தமிழ்)

மகவாசையால் இமயமலை அரையன்

மலர்க்கை தொட மனத்துள் அன்பு

புகவாசையால் இறைவன்

கரத்தேந்தப் பொலிவுறு நின்


சிபுகம் போற்றின்

முகவாசி அரன் படிமக்கலம்

பார்க்க விட்டமுகிழ்க் காம்பு

போலுஞ்

சக வாழ்வை இகழ்ந்து இதயம்

தனித்தவர்தம் தவக் கொழுந்து

தழைத்த கொம்பே.

பொருள்: மலையரசனின்

புதல்வியாகிய தாயே! உன் மோவாய்

உன் தந்தையான இமவானால்

அன்புப் பெருக்கால் அடிக்கடி

தன் நுனிக்கையால்

தொடப்பட்டது. அதரபானம்

செய்யும் ஆவலுடன் பரமசிவனின்

திருக்கரத்தால் அடிக்கடி

உயர்த்திப் பிடிக்கப்பட்டது.

பரமசிவனின் திருக்கரத்தால்
அவ்வாறு தொடுதற்குரியதும்,

முகமாகிய கண்ணாடிக்குப் பிடி

போன்றதுமான அந்த மோவாயை நான்

எப்படி வர்ணிப்பேன்?

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால் நினைத்த

காரியம் அனைத்தும்

நிறைவேறும். அரசாங்க அலுவல்களில் அனுகூலம்

உண்டாகும் என்பது நம்பிக்கை.

68. ராஜபதவிகள் கிடைக்க

புஜாஸ்லேஷாந்நித்யம்

புரதமயிது: கண்டகவதீ

தவ க்ரீவா தத்தே முக-கமலநால-


ஸ்ரியமியம்

ஸ்வத: ஸ்வேதா காலாகரு-பஹுல-

ஜம்பால-மலிநா

ம்ருணாலீ-லாலித்யம் வஹதி யததோ

ஹாரலதிகா

கழுத்தின் வர்ணனை-ராஜவசியம்

வயங்குறு நின் தரளவடம்

மான்மதச் சேர் அளைய முமது

த்தர் மேனி

முயங்கு தொறும் எழுபுளகம்

முட்பொதிந்த பசுங்கழுத்தும்

முகமும் கண்டால்

இயங்கு புனல் கருஞ்சேற்றின்

எழும் வலய முள்ளரைத்தாள் ஈன்ற

கஞ்சம்

பயம்புகுதல் கடனன்றோ
மாற்றிலாப் பசுமை யொளி பழுத்த

பொன்னே.

பொருள்: பராசக்தி தாயே!

பரமசிவனின் கைகள் தோள்களைத் தழுவு

ஏற்பட்டு தாமரை மலரின் முள்ளுடன் கூடிய தண்டைப் போல் உன்

கழுத்து காட்சி தருகிறது. அது

உன் முகமாகிய தாமரைக்குக்

காம்பைப் போல் விளங்குகிறது.

அதற்கும் கீழ் நீ கழுத்தில்

அணிந்துள்ள முத்துமாலை

இயல்பாக வெண்மை

நிறத்தினதாயினும், கறுப்பான அகிலு

கூடிய சந்தனக் குழம்பால் பூசப்பட்டு சேற்றில் அழுக்கடைந்த

தாமரைக் கொடி போல்

காணப்படுகிறது.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்
காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், தேவியின்

அருளால் அரசாங்கத்தில் நன்மை

ஏற்படும் என்பது நம்பிக்கை.

69. எடுத்த காரியம் நிறைவேற

கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-

கீதைக நிபுணே

விவாஹ-வ்யாநத்த-ப்ரகுணகுண-

ஸங்க்யா-ப்ரதிபுவா:

விராஜந்தே நாநாவித-மதுர-

ராகாகர-புவாம்

த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதி-

நியம-ஸீமாந இவ தே

கழுத்தின் மூன்று ரேகைகள்-சங்கீத ஞானம்

(தமிழ்)
செந்திரு நின் திருமணத்தில் சேர்ந்த சரம் மூன்றெழுந்தித் திகழ்வது

என்கோ

மந்தர மத்திம தார மூவகை நாதமும் எல்லை வகுத்த தென்கோ

கொந்திரையுந் துணர்ப்பூகங் கொழுத்த பசுங்கழுத்தின் வரைக்

குறிகள் மூன்றும்

இந்திரையும் சயமகளும்

கலைமாதும் புகழ் வதல்லால்

யான் என் சொல்வேன்.

பொருள்: கதி, கமகம், கீதம் என்னும் மூவகையான

சங்கீதத்தில் ஒப்புயர்வற்ற

திறமை பெற்ற அம்பிகையே! உன் கழுத்தி

காணப்படும் மூன்று கோடுகள், உன் திருமண காலத்தில்

உன் கழுத்தில் கட்டிய மாங்கல்யச் சாட்டின் மூன்று நூல்களைக்

குறிப்பிடும் பாக்கிய

ரேகைகளா? மேலும் இசையில் உள்ள

பலவிதமான இனிய

இராகங்களுக்கும் அடிப்படையாக
உள்ள ஷட்ஜமம், மத்யமம், காந்தாரம் என

மூன்று தொகுதிகளுக்கும் இடத்தையும் எல்லையையும் பிரித்துக்

காட்டுவன போலவும் அவை

விளங்குகின்றன.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், சகல

காரியங்களிலும்

சித்தியுண்டாகும் என்பது

நம்பிக்கை.

70. எடுத்த காரியம் நன்கு

நிறைவேற

ம்ருணாலீ-ம்ருத்வீநாம் தவ

புஜலதாநாம் சதஸ்ருணாம்
சதுர்ப்பி: ஸெளந்தர்யம்

ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதநை:

நகேப்ய: ஸந்த்ரஸ்யந் ப்ரதம-

மதநா-தந்தகரிபோ:

சதுர்ணாம் ஸீர்ஷாணாம் ஸம-மபய-

ஹஸ்தார்ப்பண-தியா

தோளின் வர்ணனை-அபராத சாந்தி

முன்னமொரு தலைசின உன்

முதல்வரால் இழந்த அயன்

முகங்கள் நான்கால்

உன்னழகுக்கு ஏற்ற பசுங்

கழைமணித் தோள் ஒரு நான்கும்

வழுத்துகின்றான்

இன்னமொரு சீற்றம் எழுந்து

அரிதலையை எனினும் இவள் தடமென்

தோளைச்

சொன்ன தலைக்கு அழிவிலையென்று


அதில் துணிந்த துணிவன்றோ

சுருதி வாழ்வே.

பொருள்: தாயே! உன்னுடைய நான்கு

அழகிய கைகளும் தாமரைக்

கொடிகளைப் போல் மிருதுவானவை.

ஒரு சமயம் பிரம்மாவின் இந்த

ஐந்தாவது தலையைப் பரமசிவன்

நகத்தால் கிள்ளி எறிந்து

விட்டார். அதற்குப் பயந்து

பிரமன் மீதமுள்ள தன்

தலைகளுக்கு ஒரே காலத்தில்

அபயமளிக்க வேண்டுமென்று உன்

நான்கு கைகளின் அழகைத் தன்

நான்கு வாய்களாலும் துதி

செய்கிறார்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்
காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், எடுத்த

காரியம் அனைத்தும்

நிறைவேறும். வியாபாரத்தில்

வெற்றியும், அதிக லாபமும்

உண்டாகும். பயம் நீங்கும்

என்பது நம்பிக்கை.

71. தேவதைகள் வசியமாக

நகாநா-முத்யோதைர் நவநலிந-

ராகம் விஹஸதாம்

கராணாம் தே காந்திம் கதய கதயாம:

கதம் உமே

கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா

ஹந்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷ்மீ சரண-தல-

லாக்ஷ-ரஸ-சணம்

கையின் வர்ணனை-திருமகள் அருள்

திருமகள் தன் சீறடியால்

துவண்டும் அதில் செம்பஞ்சால்

செங்கேழ் பெற்றும்

மருமுளரி எழில் படைத்தது

இதுவோ நம் இயற்கை எதிர்

அலர்வது என்றே

இருகரமும் நகைத்த நகை ஒளியை

உனது எழிலுகிர் என்றிறைஞ்சி

நாளும்

அருமறைகள் வழுத்துகின்றது

அதிசயமோ பேதைமையோ அன்போ அம்மே.

பொருள்: பார்வதி தாயே! சிறந்த

ஒளி சிந்தும் உன் கை நகங்களில்

அன்றலர்ந்த தாமரையின்
சிவப்பையும் மிஞ்சும்

பிரகாசம் மின்னுகிறது.

அத்தகைய அழகிய உன் கரங்களை

நான் எப்படி வர்ணிப்பேன்? சொல்.

செந்தாமரை மலரில் உறைகின்ற மஹாலக்

பூசப்பட்ட மருதோன்றியினாலல்லவா அவ்வளவு ஒளி வந்துள்ளது.

அந்தச் செயற்கையொளியும்

பதினாறில் ஒரு பங்குதான் உன்

கை நகங்களின் அழகுக்கு ஈடாக

முடியும் எனத் தோன்றுகிறது.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 12,000 தடவை

ஆலமரத்தடியில் உட்கார்ந்து

ஜபித்து வந்தால், யக்ஷிணி


முதலிய தேவதைகள்

வசியமாவார்கள் என்பது

நம்பிக்கை.

72. யாத்திரையில் பயம் நீங்க

ஸமம் தேவி ஸ்கந்த-த்விபவதந-

பீதம் ஸ்தநயுகம்

தவேதம் ந: கேதம் ஹரது ஸததம்

ப்ரஸ்நுத-முகம்

யதாலோக்யாஸங்காகுலித-ஹ்ருதயோ

ஹாஸஜநக:

ஸ்வகும்பௌ ஹேரம்ப: பரிம்ருஸதி

ஹஸ்தேந ஜடிதி

நகில்கள் அமைப்பு-இரவில்

பயமின்மை

நித்தரொரு பக்கர் மயில்

நிற்களிறு உன் வட்டமுலை

நிற்கும் எழிலில் தனது சீர்


மத்தக மெனத்தனில் அயிர்த்து

ஒரு கரத்தை முடி வைத்து

உறவுறத்தடவுமால்

முத்தமுலை செப்புவது என்களிறு

பின் குமரன் முற்புதல்வர்

துய்த்த அமுதால்

அத்தலைமை பெற்றனர் அதில்

திவலை கிட்டினும் என் அற்ப

உயிர் முத்தி பெறுமே.

பொருள்: அம்பிகையே! பால் சுரக்கும்

காம்புகளுடன் கூடியதும்; கணபதி, சுப்ரமணியன் ஆகிய

இரு குழந்தைகளாலும் ஒரே நேரத்தில் பால் பருகக்கூடியனவும் ஆன

உன் தனங்கள் இரண்டு எங்கள்

துன்பங்களையெல்லாம்

அகற்றட்டும்! யானைத் தலையரான

கணபதி, உன் தனங்களைப்

பார்த்துவிட்டு,
சந்தேகப்பட்டு, கலங்கிய

உள்ளத்துடன் தன் தலையிலுள்ள

இரு குடங்களும் இருக்கின்றனவா

என்று தடவிப் பார்த்துக்

கொள்கிறார். (யானையின் தலையில்

இருபகுதியாக, மேடான அமைப்பில்

காணப்படுவது கும்பஸ்தலம்

எனப்படும்.)

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால்,

யாத்திரையில் பேய், பிசாசு,

சத்ரு, சிறைவாசம் போன்ற


எல்லாவிதமான பயங்களும்

நீங்கும் என்பது நம்பிக்கை.

73. பால் பெருக

அமூ தே வ÷க்ஷஜா-வம்ருதரஸ-மாணிக்ய-

குதுபௌ

ந ஸந்தேஹஸ்பந்தோ நகபதி-பதாகே

மநஸி ந:

பிபந்தௌ தௌ யஸ்மா-தவதித-வதூஸங்க

ரஸிகௌ

குமாராவத்யாபி த்விரதவதந-

க்ரௌஞ்ச-தலநௌ

நகில்கள் கலசங்கள்-ஜீவன்

முக்தி

முக்கண் இறைவாக்கு மயல்முற்ற

எழில் முற்றும் முலை முட்டிய

சுரப்பொழுகு பால்

மக்களிருவர்க்கு அருள
அக்களிறும் இக்குகனும்

மட்டிளமை முற்று கிலரால்

அக்கடலுதித்த அமுதத்தனை

எடுத்து அதில் அடைத்திருகண்

முத்திரையின் வாழ்

செக்கர் மணி மெய்க்கலசம்

அத்தனை உன் வட்ட முலை செப்பல

மலைப்புதல்வியே.

பொருள்: மலையரசனின் மகளான

குலக்கொடியே! உன்னுடைய இரு

தனங்களும் அமிருதம் நிரம்பிய

மாணிக்கக்குடங்கள் என்பதில்

எங்கள் மனத்தில் எந்தவித

சந்தேகமும் இல்லை. ஏனெனில்

அவற்றிலிருந்து

பாலைப்பருகும் காரணத்தால்

தான் யானை முகத்தோனான


கணபதியும், அசுரனை வதைத்த

சுப்ரமண்யனும் பெண்களின்

சங்கமம் என்பதையே இன்னும்

அறியாத குழந்தைகளாகவே

இருக்கிறார்கள் போலும்!

ஜபமுறையும் பலனும்

8 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து, ஜலத்தில் ஒரு வட்டம்

வரைந்து, அதன் நடுவே காம் என்று

எழுதி அந்த ஜலத்தை

அருந்தினால்,

தாய்ப்பாலில்லாதவருக்குப்

பாலுண்டாகும், பசுக்களுக்கும்
பால் அபிவிருத்தியாகும்

என்பது நம்பிக்கை.

74. புகழ் உண்டாக

வஹத்யம்ப ஸ்தம்பேரம தநுஜ-

கும்பப்ரக்ருதிபி:

ஸமாரப்தாம் முக்தாமணிபி-

ரமலாம் ஹாரலதிகாம்

குசாபோகோ பிம்பாதர-ருசிபி-

ரந்த: ஸபலிதாம்

ப்ரதாப-வ்யாமிஸ்ராம்

புரதமயிது: கீர்த்தி மிவதே

முத்துமாலை-நற்கீர்த்தி

(தமிழ்)

கொற்ற வாரண முகமகன் பொரு

குஞ்சரானன நிருதனார்

இற்ற கோடுதிர் ஆரமாலிகை இதழ்

மணிப்ரபை தழையவே
பெற்ற பாக பினாக பாணி

ப்ரதாபமோடு அணை புகழெனா

உற்ற தாயினும் உனது பொற்றனம்

உரை படா நிறை செல்வியே

பொருள்: தாயே! உன்னுடைய

மார்பகத்தின் மத்தியப் பகுதி

கஜாசுரனின்

கும்பஸ்தலத்திலிருந்து

தோன்றிய சிறந்த முத்துக்களால்

கோர்க்கப்பட்ட முத்து

மாலையைத் தாங்கி நிற்கிறது.

நிர்மலமான அந்த முத்து

மாலையானது கோவைப்பழத்தைப் போல

சிவந்த உன் உதட்டின் ஒளியால்,

உட்புறம் விந்தையான வண்ணங்களை

உடையதாயும், முப்புரத்தை

எரித்த சிவபிரானின்
பராக்கிரமத்தோடு கலந்து இந்த

மாலையாக வந்ததோ என

எண்ணும்படியும் அழகுடன்

தோற்றமளிக்கின்றது.

ஜபமுறையும் பலனும்

3 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 108 தடவை

தெய்வ சந்நிதியில் ஜபித்து

வந்தால், நல்ல புகழ் உண்டாகும்

என்பது நம்பிக்கை.

75. கவிதா சக்தி உண்டாக

தவ ஸ்தந்யம் மந்யே

தரணிதரகந்யே ஹ்ருதயத:

பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத

மிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடஸிஸு-

ராஸ்வாத்ய தவ யத்

கவீநாம் ப்ரௌடாநா-மஜநி கமநீய:

கவயிதா

நகில்களின் வர்ணனை-கவிபாடும்

திறமை (தமிழ்)

தருண மங்கலை உனது சிந்தை

தழைந்த பாலமுது ஊறினால்

அருண கொங்கையில் அது

பெருங்கவி அலை நெடுங்

கடலாகுமோ

வருண நன்குறு கவுணியன் சிறு

மதலை அம்புயல் பருகியே

பொருள் நயம்பெரு

கவிதையென்றொரு புனித மாரி

பொழிந்ததே.
பொருள்: மலையரசனான இமவானின்

புதல்வியே! உன்

ஸ்தனங்களிலிருந்து பெருகும்

பால், இதயத்தில் தோன்றிய

பாற்கடல் போலவும், வாக்குத்

தேவதையான சரஸ்வதியின்

அருளுருவமே பொங்கி வந்தாற்

போலவும் எனக்குத்

தோன்றுகிறது. உன் பாலை

அருந்தித் திராவிட நாட்டில்

பிறந்த (சங்கரன்) என்னும் இந்தச் சி

வித்வான்களுக்கிடையே எல்லோரையும் கவரக்கூடிய கவியாக

ஆகிவிட்டானல்லவா!

ஜபமுறையும் பலனும்

3 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து


மேற்கண்ட ஸ்லோகத்தை 12,000 தடவை

ஜபித்து வந்தால், கவிதைகள்

இயற்றும் அபாரசக்தி உண்டாகும்

என்பது நம்பிக்கை.

76. சர்வ வல்லமை பெற

ஹரக்ரோத-ஜ்வாலாவலிபி-ரவலீடேந

வபுஷா

கபீரே தே நாபீ-ஸரஸி க்ருதஸங்கோ

மநஸிஜ:

ஸமுத்தஸ்தௌ தஸ்மா-தசலதநயே தூமலதிகா

ஜநஸ்தாம் ஜாநீதே தவ ஜநநி

ரோமாவலிரிதி:

நாபியின் அழகு-பரம

வைராக்கியம்

மூலமே நின் மகிழ் நர் கோபமுது கனல் பொறாது வேள்

கோல நாபி மடுவினில குளிப்ப

வந்த வெம்மையால்
மேல வாவு தூம ரேகை வேரெழுங் கொழுந்தையோ

நீல ரோம ரேகை என்று நீணிலங்கு

குறிப்பதே.

பொருள்: மலையரசனின் புதல்வியே!

பரமசிவனின் கோபத்தால் தோன்றிய அக்

சூழப்பெற்ற மன்மதன், அந்தத் தாபம் தாங்க

இயலாதவனாய், உன்னுடைய தொப்புளாகிய

குதித்து மூழ்கி விட்டான். அவன் நெருப்புடன்

நீரில் புகுந்ததால் மெல்லிய

புகை மேலே கிளம்புகிறது. கொடி

போன்று மெல்லியதான அந்தப்

புகைக் கோடு தான் உன் நாபியைச்

சுற்றிலுமுள்ள ரோமங்களென

மக்கள் நினைக்கிறார்கள்.

ஜபமுறையும் பலனும்

10 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது


வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், எடுத்த

காரியம் எதுவாக இருந்தாலும்

வெற்றி ஏற்படும் என்பது

நம்பிக்கை.

77. வெற்றி பெற

யதேதத் காலிந்தீ-தநுதர-

தரங்காக்ருதி ஸிவே

க்ருஸே மத்யே கிஞ்சிஜ்ஜநநி தவ

யத்பாதி ஸுதியாம்

விமர்தா-தந்யோந்யம் குசகலஸயோ-

ரந்தரகதம்

தநூபூதம் வ்யோம ப்ரவிஸதிவ நாபிம் குஹரிணீம்

ரோம ரேகை-மக்கள் வசியம் (தமிழ்)

முளிரி மாது உன் முலையினோடு

முலைநெருக்க இடையில் வான்


வெளியின் நீல மோடியுந்தி

வியன் முழைக்குள் நுழையவே

தெளியும் நீரில் யமுனை நீவு

சிறு தரங்கம் அனையபேர்

ஒளியின் ஞாலம் மருளும் ஈது ரோம

ரேகை என்னவே.

பொருள்: அம்பிகையே! மிகவும்

குறுகியதான உன்

இடுப்பின்மேல், கருப்பு

வர்ணமுள்ள, யமனா நதியின் சிறிய

அலை போன்ற ஒரு ரோம வரிசை

சாமுத்ரிக லட்சணமறிந்த

வித்வான்களுக்கு மட்டுமே

காணப்படுகிறது. இது

ஸ்தனங்களுக்கிடையே உள்ள

குறுகிய ஆகாசந்தானோ? அந்தக்

குறுகிய ஆகாசம், ஸ்தனங்களின்


உரைசலால், தான் அழிந்து விடுவோமென்

நாபி கூபத்தில் ஒளிந்து கொள்ளச் செல்கிறதோ என்று எண்ணத்

தோன்றுகிறது.

ஜபமுறையும் பலனும்

15 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 2000 தடவை

ஜபித்து வந்தால், ஸகல காரிய

ஜெயம் உண்டாகும் என்பது

நம்பிக்கை. (செந்தாமரைப் பூவைச் சுட்டுச் சாம்பலாக்கிப்

பசு நெய்யில் குழைத்து, அதில்

கீழ்நோக்கிய ஒரு முக்கோணத்தை

எழுதி அதன் நடுவே க்லீம் என்று

எழுதி ஜபம் செய்தபின் அதை

நெற்றியில் தரிக்கவும்.)
78. ராஜாங்க பதவியில் ஜயம்

உண்டாக

ஸ்திரோ-கங்காவர்த்த: ஸ்தந-

முகுல-ரோமாவலி-லதா

கலாவாலம் குண்டம் குஸுமஸர-

தேஜோ-ஹுதபுஜ:

ரதேர்-லீலாகாரம் கிமபி தவ

நாபிர்-கிரிஸுதே

பிலத்வாரம் ஸித்தேர்-கிரிஸ-

நயநாநாம் விஜயதே

உந்தி வர்ணனை-உலக வசியம்

தூய கங்கை நிலை படைத்த சுழி தனத்து முகையினால்

ஆய துங்க ரோம வல்லி ஆல வாலம்

விரக வேள்

தீயரும்பும் ஓமகுண்டம் இறைவர்

செங்கண் இடைவிடா
மேய கஞ்ச மடுவினுந்தி

வேறுரைத் தென் விமலையே.

பொருள்: பர்வதராஜனின்

புதல்வியாகிய தாயே! உன்னுடைய

நாபி, அசைவில்லாத கங்கையின்

சுழல் போலவும், ஸ்தனங்களாகிய

தாமரை மொட்டுக்களைத் தாங்கும்

ரோமாவளியாகிய தாமரைத்

தண்டுகளுக்குத் தண்ணீர்

பாயும் பாத்தியாகவும்,

மன்மதனின் ஒளியாகிய அக்னிக்கு

ஹோம குண்டமாகவும், அவன்

பத்தினியான ரதிதேவியின்

விளையாட்டு அறையாகவும்,

பரமசிவனின் கண்களின்

தவப்பயனுக்குக் குகையின்

துவாரமாகவும் விளங்குகிறது.
ஜபமுறையும் பலனும்

15 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 108 தடவை

ஜபித்து வந்தால்,

தடைப்பட்டுள்ள அரசாங்க

அலுவல்களில் ஜயமுண்டாகும்

என்பது நம்பிக்கை. (வாசனைச்

சந்தனத்தில் முக்கோணம் எழுதி

நடுவில் ஹ்ரீம் என்று எழுதி,

ஜபம் ஆனபின் நெற்றியில்

தரிக்கவும்).

79. மந்திரங்கள் சித்தி பெற

நிஸர்க-க்ஷ்ணஸ்ய ஸ்தந-தட-பரேண

க்லமஜு÷ஷா

நமந்மூர்த்தேர்-நாரீதிலக ஸநகைஸ்
த்ருட்யத இவ

சிரம் தே மத்யஸ்ய த்ருடித-

தடிநீ-தீர-தருணா

ஸமாவஸ்தா-ஸ்தேம்நோ பவது

குஸலம் ஸைலதநயே

இடையழகு-இந்திர ஜால வித்தை

தரை மடந்தை பரவு மங்கை தனதடம்

பொறாது நின்

திருமருங்குலற வளைந்து சிறுகி மூவி ரேகையாய்

வரை பிளந் தொரிடி கரைக்குள்

வாழ் மரத்தோ டொத்ததால்

உரை கடந்து விடுமுன்

மற்றொருறுதி தேட வெண்ணுமே.

பொருள்: பெண் குலத்தின்

திலகமாகிய மலையரசனின்

புதல்வியே! உன் இடை இயல்பிலேயே

மெல்லிய தோற்றமுடையது.
ஸ்தனங்களின் பாரத்தைத் தாங்க

முடியாமல் வருந்தி வளைந்த

வடிவத்தைப் பெற்றுள்ளது. எனவே

ஒடிந்து போவதைப் போல

இருக்கும் இடையானது, வெள்ளப்

பெருக்கால் உடைந்துபோன

நதியின் கரையில் இருக்கும்

மரத்துக்கு இணையான

தோற்றத்தைக் கொண்டுள்ளது. உன்

அத்தகைய இடைக்குப் பல்லாண்டு

காலத்துக்கு ÷க்ஷமம்

உண்டாகட்டும்!

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை


ஜபித்து வந்தால், இந்திர ஜால

வித்தையில் வல்லமையும், ஸகல ஜன

மோஹனமும் உண்டாகும் என்பது

நம்பிக்கை.

80. ஜால வித்தையில் வல்லமை பெற

குசௌ ஸத்ய: ஸ்வித்யத்-தடகடித-

கூர்ப்பாஸ-பிதுரௌ

கஷந்தௌ தோர்-மூலே கநக-கலஸாபௌ கலயதா

தவ த்ராதும் பங்காதலமிதி

வலக்நம் தநுபுவா

த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி

லவலீ-வல்லிபிரிவ

இடையின் வர்ணனை-அழகு பெற

வம்பைத் தொலைத்துதறி இறுகிக்

கனத்திளகி வருபுடை நெருக்கி

வளர்மாக்

கும்பக் கடாக் களிற்றினையனைய


உனது முலை கொடிது கொடிதென்று

வெருவா

அம் பொற்றினக் கமல இறை பொறாதிடையென அழுத்து பூணென

முனிவரோடு

உம்பர்க்கும்உள மருள ஒளிகெழும்இரேகைமூன்று உலகமோ தெளிவது

உமையே.

பொருள்: தேவியாகிய தாயே! சகல

உலகங்களுக்கும் இறைவனாகிய

ஈசனை நினைத்து, அந்தப் பூரிப்பின் காரணமாக,

தங்கக் குடங்களைப் போன்ற உன்

தனங்கள், ரவிக்கையைக்

கிழித்துக் கொண்டு

அக்குள்களில் உராய்கின்ற

அளவில் வியர்த்து

விளங்குகின்றதைக் கண்ட

மன்மதன், தன்னால் மேலும் தூண்டப்பட்டு தனபாரங்களால்

இடைஒடிந்து விடாதிருக்கும் பொருட்


கொண்ட வள்ளிக் கொடிகளால் இடுப்பை மூன்று சுற்றாகக்

கட்டியிருக்கிறானோ என எண்ணத்

தோன்றுகிறது.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், மஹேந்த்ர

ஜாலம் என்னும் ஜால வித்தையில்

வல்லவனாவான் என்பது

நம்பிக்கை.

81. நெருப்பு சுடாமலிருக்கும்

சக்தி

குருத்வம் விஸ்தாரம்

க்ஷிதிதரபதி:  பார்வதி நிஜாத்

நிதம்பா-தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே!


அதஸ்தே விஸ்தீர்ணோ குருரய-

மஸேஷாம் வஸுமதீம்

நிதம்ப-ப்ராக்பார: ஸ்தகயதி

லகுத்வம் நயதி ச

நிதம்ப வர்ணனை (தமிழ்)

கொத்து விரியலர் சோலை இமய

வெற்பரசன் மெய்க்குல மலைப்

பக்கமென வாழ்

அத்தனை விரிந்த வகலத்தொடு

பெரும் பாரம் அடைய உன் நிதம்ப

விடையே

எத்தனை பெரும்புவனம்

இற்றாலும் அழிவிலை இதற்கெனச்

சேம நிதிபோல்

வைத்தது பரந்திடங்

கொண்டுலகையிட மற வருத்தவோ

மதுர அமுதே.
பொருள்: அன்னை பார்வதி தேவியே!

மலையரசனான உன் தந்தை

கனமானதும் விசாலமானதுமான மலை

அடிவாரத்தின் தன்மையை எடுத்து

உனக்கு சீதனமாகக் கொடுத்து

விட்டார் போலும். அதன் காரணமாகத்தா

பருத்தும் விசாலமாகவும் காணப்படும்

இப்பூவுலகனைத்தையும் மறைக்கும் வகையில் தோன்றுகிறது.

அதை லகுவாகவும் ஆக்கி

விடுகிறது.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில் தென்கிழக்கு முகமாக

அமர்ந்து இந்த ஸ்லோகத்தை 1000

தடவை ஜபித்து வந்தால், அக்னி

ஸ்தம்பன சக்தி (நெருப்பு


சுடாமலிருக்கும் சக்தி)

உண்டாகும் என்பது நம்பிக்கை.

82. ஜலத்தில் நடக்கும் சக்தி பெற

கரீந்த்ராணாம் ஸுண்டாந்

கநககதலீ-காண்டபடலீம்

உபாப்யா-மூருப்யா-முபயமபி

நிர்ஜித்ய பவதீ

ஸுவ்ருத்தாப்யாம் பத்யு:

ப்ரணதி-கடிநாப்யாம் கிரிஸுதே

விதிஜ்ஞே ஜாநுப்யாம் விபுத-

கரிகும்ப-த்வய-மஸி

தொடையின் முழந்தாளின் வர்ணனை-

பெரும் பதவி (தமிழ்)

பொற்கதலி புறங்காட்டும்

குறங்கால் வேழப்புழைக்கை

தடிந்துஞ் சிவனைப் பணிந்து

தேய்ந்த
வற்கடின முழந்தாளிற் கும்பஞ்

சாய்த்து மணி மருப்பைக் கன

தனத்தால் வளைத்து மம்மே

நிற்கடின கோபம் அமராமை கண்டோ

நித்தரதன் தொக்குரித்த

துடுத்த நேயம்

பிற்சுருதி யிவளுறுப்போ டுவமை

வீறு பெற்றதிது என்னு மிந்தப்

பெருமை கண்டோ.

பொருள்: பார்வதித் தாயே! பகவதி

என்ற திருநாமம் கொண்டவளே!

வலிமைமிக்க சிறந்த யானைகளின்

துதிக்கைகளையும், பொன் வாழை

மரங்களையும் உன் இரு

தொடைகளால் வெற்றி கொண்டவளாய்,

பரமசிவனை அடிக்கடி பணிந்து

வணங்கும் வழக்கத்தால்,
கடினமாகவும் நன்கு உருண்டு

திரண்டும் உள்ள முழங்கால்

முட்டிகளால் இந்திரனின்

யானையான ஐராவதத்தின்

தலையிலுள்ள இரு

கும்பங்களையும்

வென்றிருக்கிறாய்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில் கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், ஜலஸ்தம்பனம்

(நீர் மேல் சுலபமாக நடத்தல்)

செய்வதற்கான சக்தியுண்டாகும்

என்பது நம்பிக்கை.

83. சேனையை அசையாமல் நிறுத்த


பராஜேதும் ருத்ரம்

த்விகுணஸரகர்ப்பௌ கிரிஸுதே

நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஸிகோ

பாட-மக்ருத

யதக்ரே த்ருஸ்யந்தே தஸஸர-பலா:

பாதயுகலீ-

நகாக்ரச்சத்மாந: ஸுர-மகுட-

ஸாணைக-நிஸிதா:

கணைக்கால் வர்ணணை (தமிழ்)

உம்பர் தொழுந்தொறும் மகுடச்

சாணை தீட்டி ஒளிரும் நகநுனைக்

கணையோர் ஐந்தும் ஐந்தும்

செம் பொன்மணிக் கனைக்காலாம் இணைப் பொற்றூணி

சேர்த்தன்றோசிவன் பகைவேள்

தீருகின்றான்

அம்பொருபத்து அளித்தனை

யின்றன்று போல ஐங்கணை


தொட்டழியினதுபழுதென்றன்றோ

வம்பமருங் கனதனப் பொற்றிருவே

உன்றன் மனவிரகின் செயலொருவர்

மதிப்பதன்றே.

பொருள்: அம்பிகையே! பரமேசுவரனை

வெல்வதற்கு பஞ்சபாணன்

எனப்படும் மன்மதன் அவை

போதாதலால், உன் முழங்காலுக்குக் கீ

பாகங்களாகிய இரு அம்பறாத் தூணிகளில் பத்து பாணங்களை

நிரப்பி வைத்திருக்கிறான்.

அந்தப் பாணங்கள் எவையெனில்

உன் திருவடிகளிலுள்ள பத்து

விரல்களேயாகும். அந்த

விரல்களின் நகங்கள் பாணத்தின்

இரும்பு முனைகளைப் போல உள்ளன.

மேலும் அவை உன்னை வணங்கும்

தேவர்களின் கிரீடங்களாகிய
சாணைக்கற்களால் நன்கு

தீட்டப்பெற்றவையாயும்

காணப்படுகின்றன.

ஜபமுறையும் பலனும்

12 நாட்கள் தினந்தோறும்

காலையில் கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், யானைப்படை,

குதிரைப்படை முதலியவைகளுடன் கூடிய பெரியசேனையை

அசையாமல் நிறுத்தும் ஸ்தம்பன

வித்யை சித்திக்கும் என்பது

நம்பிக்கை.

84. கூடுவிட்டு கூடுபாயும் சக்திபெற

ஸ்ருதீநாம் மூர்த்தாநோ தததி தவ யௌ ஸேகரதயா

மமாப்யேதௌ மாத: ஸிரஸி தயயா தேஹி

சரணௌ
யயோ: பாத்யம் பாத: பஸுபதி-ஜடாஜூட-

தடிநீ

யயோர்-லாக்ஷ-லக்ஷ்மீ-ரருண-

ஹரிசூடாமணி-ருசி:

பாதார விந்தம்-ஜீவன் முக்தி

(தமிழ்)

உளமகிழ் மகிழ்நர் சென்னி

உறுநதி விளக்க மாயோன்

கிளர் முடிப்பதும ராகக்

கேழொளி செம்பஞ்சு ஏய்க்கும்

முளரி நின் பதங்கள் வேத

முடியுறப் பதித்த தவ்வாறு

எளிய என் தலைமேல் வைக்க இரங்கு

வதென்று தாயே.

பொருள்: தாயே! உன் திருவடிகளை

வேதங்களின் தலைபோன்ற

உபநிஷத்துக்கள் தம் தலைகளில்


அணிகளாக அணிந்து கொள்கின்றன.

அந்தத் திருவடிகளை எளியேனாகிய

எனது தலையிலும்

வைத்தருள்வாயாக! ஏனெனில்

அந்தத் திருவடிகள்

சிவபிரானின்

ஜடாமகுடத்திலுள்ள கங்கை

நீரால்

கழுவப்படுகின்றனவன்றோ? அந்தத்

திருவடிகளில் பூசப்பட்டுள்ள மருதோன்றியின் சிவந்த ஒளி,

விஷ்ணுவின் தலையை

அலங்கரிக்கும் மாணிக்கமோ என

எண்ணும்படி இருக்கிறது.

ஜபமுறையும் பலனும்

ஒரு வருடம் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து


மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், கூடுவிட்டுக்

கூடுபாய்தலென்னும் பரகாயப் பிரவேச வித்தை சித்தியாகும் என்பது

நம்பிக்கை.

85. பூத, ப்ரேத, பிசாசங்களை அகற்ற

நமோவாகம்-ப்ரூமோ நயந-ரமணீயாய பதயோ:

தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட-

ருசி-ரஸாலக்தகவதே

அஸூயத்யத்யந்தம் யதபிஹநநாய ஸ்ப்ருஹயதே

பஸூநா-மீஸாந: ப்ரமதவந-கங்கேலி-

தரவே

பாதமலர்கள்-பிசாசு பய நீக்கம்

அரியமென் காவில் நீபுக்கு

அசோகினிற் பாத மேற்ற

உரிய நம் பதத்தை ஈதோ உறுமெனப்

பொறாது பெம்மான்

எரியுற மரத்தை நோக்கும்


இயல்பினைக் கேட்டும் யானுன்

வரிமலர்ப் பாதம் போற்றும்

வளமினிது இனிது மாதே.

பொருள்: தாயே! கண்களுக்கு மகிழ்ச்சி

தரக்கூடியவையாயும், பிரகாசம்

பொருந்தியவையாயும், ஈரமரு தோன்றியா

பூசப்பட்ட செம்பஞ்சுக் குழம்பின் சிவந்த ஒளி மின்னுவதாயும் உள்ள

உன் திருவடிகளுக்கு நமஸ்காரம்

செய்கிறோம். இத்தகைய சிறப்பு

மிகுந்த உன் திருவடிகளினால்

உதைக்கப்பட வேண்டுமென

நந்தவனத்தில் உள்ள அசோக

மரங்கள் காத்துக்

கிடப்பதையறிந்து பசுபதியான

பரமசிவன் பொறாமைப்படுகிறார்.

உயர் ஜாதிப் பெண்கள் தம்

கால்களால் அசோக மரத்தை


உதைத்தால் அது புஷ்பிக்கும்

என்பது மரபு.

ஜபமுறையும் பலனும்

12 நாட்கள் தினந்தோறும்

காலையில் கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், பூதம், ப்ரேதம்,

பிசாசு முதலியவைகளை ஓட்டவும்

மாரணம் செய்யவும்

சக்தியுண்டாகும் என்பது

நம்பிக்கை.

86. பிசாசுகளை ஓட்ட

ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலந-

மத வைலக்ஷ்யநமிதம்

லலாடே பர்த்தாரம் சரணகமலே

தாடயதி தே
சிராதந்த: ஸல்யம் தஹநக்ருத-

முந்மூலிதவதா

துலாகோடிக்வாணை; கிலிகிலித-

மீஸாந-ரிபுணா

மன்மதன் வெற்றி-பகைவர் தோல்வி

மறு மடந்தையை மொழிய நின்பத

மலர் வெகுண்டு அரன் நுதலிலோர்

முறையறைந்திட விழியிலும் பட

முது பழம் பகை கருதிவேள்

இறையை வென்றனன் விழியை

வென்றனன் என முழங்கிய

குரலெனாது

அறை சிலம் பெழும்

அரவமென்பதென் அருண மங்கல

கமலையே.

பொருள்: பார்வதித் தாயே! உன்

திருவடிகளால் உதைபட
வேண்டுமென்ற ஆசையால்

பரமசிவன், தான் வேறொரு

பெண்ணைக் காதலிப்பது போல்

நடித்து, அவள் பெயரால் உன்னை

அழைத்து, பிறகு உன்னிடம்

பயந்தவர்போல் உன்னை

வணங்குகிறார். நீ கோபத்தால்

அவர் நெற்றிக்கண்ணில்

உதைத்தாய். இதைக் கண்ணுற்ற

மன்மதன், நெற்றிக் கண்ணால்

தன்னை எரித்த வெகுநாளைய

கோபத்தை விட்டு, உன் கால்

தண்டையின் கிலி கிலி ஒலியால்,

ஜெயித்தேன், ஜெயித்தேன் என்று

வெற்றியொலி எழுப்புகிறான்

போலும்!
ஜபமுறையும் பலனும்

21 நாட்கள் தினந்தோறும்

காலையில் கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், எந்தவிதமான

பிசாசாக இருந்தாலும் ஓட்டி

விடலாம் என்பது நம்பிக்கை.

கும்ப ஜலத்தில் ஜபித்து

முழுக்காட்டவும்.

87. பாம்பு பயம் நீங்க

ஹிமாநீ ஹந்தவ்யம் ஹிமகிரி-

நிவாஸைக-சதுரௌ

நிஸாயாம் நித்ராணம் நிஸி

சரமபாகே ச விஸதௌ

வரம் லக்ஷ்மீபாத்ரம் ஸ்ரிய-

மதிஸ்ருஜந்தௌ ஸமயிநாம்
ஸரோஜம் த்வத்பாதௌ ஜநநி ஜயதஸ்-

சித்ரமிஹ கிம்

பாதத்தாமரை-பாம்பு வசியம்

(தமிழ்)

இம நெடுங்கிரி உலவியுங் கவின்

எழும் நிரந்தர மலரு மேல்

அமர் பெருந் திரு அருளும்

நின்பத அருண முண்டக மனையதோர்

கமல மென்பது பனியில்

வெந்திதழ் கரிய கங்குலின்

முகுளமாய்

விமலையன் திரு மனை யெனும்

பெயர் விளைவது ஒன்றல

முதல்வியே.

பொருள்: அம்பிகையே! தாமரை மலர்கள் பனி

கருகிவிடக் கூடியவை. ஆனால் உன்

திருவடிகளாகிய தாமரை மலர்களோ


பனிமலையான இமாசலத்திலேயே

காலையிலும் மாலையிலும்

சற்றும் சுருங்காமல்

மலர்ச்சியுடன் காணப்படுபவை.

தாமரை இரவு நேரங்களில் உறங்குபவை போல இதழ்களை மூடக்

கொள்பவை. உன் திருவடிகள்

இரவிலும், இரவு முடிந்த பின்னரும் கூட எப்போதும்

மலர்ந்து காணப்படுகின்றன.

தாமரை திருமகளான லக்ஷ்மி

வாசம் செய்யும் இருப்பிடம்.

ஆனால் உன் திருவடிகளாகிய

தாமரைகளோ வழிபடும்

அடியவர்கட்கெல்லாம் அளவற்ற

செல்வத்தை (லக்ஷ்மியையே)

அள்ளித் தருபவை. எனவே உன் பாத

கமலங்கள் தாமரை மலர்களை


வென்று விட்டன என்பதில் என்ன

அதிசயம்?

ஜபமுறையும் பலனும்

16 நாட்கள் தினந்தோறும்

காலையில் கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், பாம்புகளால்

ஏற்படும் பயம் நீங்கும்

என்பது நம்பிக்கை.

88.  மிருகங்களை ஆகர்ஷிக்க

பதம் தே கீர்த்தீநாம் ப்ரபத

மபதம் தேவி விபதாம்

கதம் நீதம் ஸத்பி: கடிந-கமடீ-

கர்ப்பர-துலாம்

கதம் வா பாஹுப்யா-முபயமநகாலே

புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி

தயமாநேந மநஸா

பாதங்களின் மென்மை-கொடிய

மிருகங்களின் வசியம் (தமிழ்)

பஞ்சழுத்தினும் வாடும் நின்பத

பங்கயத்தினை ஒப்பெனா

விஞ்சை கற்றவர் வன்

புறக்கமடத்தை வீணில்

வியப்பராம்

அஞ்சனப் புயல் தங்கை நின்வரர்

அம்மி மீதிலும் வைப்பராம்

வஞ்சகக் கொடு நெஞ்சரத்தனை

வல்லரல்லர் நினைக்கினே.

பொருள்: தேவியே! உன்

திருவடிகளின் நுனி

அடியவர்களைக் காப்பதெனும்

புகழுக்கு உறைவிடமாயுள்ளது.
அடியவர்களுக்கு ஏற்படும்

இன்னல்களுக்குச் சிறிதும்

இடமளிக்காமல் காப்பவை.

கருணையின் பிறப்பிடமான

மென்மையான இத்தகை உன்

திருவடிகளை கவிகள் சிலர்

எப்படித்தான் ஆமையின் கடினமான

முதுகோட்டிற்குச் சமமானவை என

வர்ணித்தார்களோ? அவை

சிவபிரான் உன்னைத் திருமணம்

புரிந்த நேரத்தில் தன் இனிய

கரங்களால் மெதுவாக எடுத்து

அம்மிக்கல்லின் மீது வைத்த

மெத்தென்ற மெல்லிய பாதங்கள்

ஆயிற்றே.

ஜபமுறையும் பலனும்

6 மாதங்கள் தினந்தோறும்
காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், சிம்மம், புலி

போன்ற கொடிய மிருகங்களையும்

வசமாக்கி அடக்கியாளலாம்

என்பது நம்பிக்கை.

89. தீராத வியாதிகள் நீங்க

நகைர்-நாகஸ்த்ரீணாம் கரகமல

ஸங்கோச ஸஸிபி:

தரூணாம் திவ்யாநாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ

பலாநி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய-

கராக்ரேண தததாம்

தரித்ரேப்யோ பத்ராம்

ஸ்ரியமநிஸ-மஹ்நாய தததௌ

கால் நகங்கள்-வியாதிகள் நீங்க


அற்றவர்க்கருள் செய்யும்

அம்மை! நின் அற்புதப்பதம்

அம்பொன் நாடு

உற்றவர்க்கருள் பொன் தருத்தர

ஊடறிந்திலம் என்னவே

முற்று பொற்பர மாதர் கைத்தலம்

உண்ட கங்குவி வெண்ணிலா

நற்றிறத் தொடு நாடி நாடி

நகைக்க வாளுகி ரென்பரே.

பொருள்: சண்டிகா தேவி என்னும்

பெயர் கொண்ட தாயே!

தேவலோகத்திலுள்ள கற்பக

மரங்கள், தம்

தளிர்க்கரங்களால்,

சொர்க்கவாசிகளான

தேவர்களுக்கு அவர்கள்

விரும்பும் பலன்களை அளிப்பவை.


ஆனால் உன் திருவடிகளோ, ஏழை

எளியவர்களுக்கும் கூட, அவர்கள் கோரிய

கணத்தில் நிறைந்த செல்வத்தை

வாரி வழங்குபவை. உன் கால்களின் நகங்

கன்னிகைகளின் கைகளாகிய தாமரை மலர்களையே மூடிக்கொள்ள

செய்யும் சந்திரர்களைப்

போன்றவை. எனவே கற்பகத்

தருக்கள் தம் கைகளால்

கொடுப்பனவற்றை நீ உன்

திருவடிகளின் நகங்களாலேயே

அளிக்கிறாயே!

ஜபமுறையும் பலனும்

30 நாட்கள் தினந்தோறும்

காலையில் கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், தீராத


வியாதிகளெல்லாம் நீங்கிச்

சுகமுண்டாகும் என்பது

நம்பிக்கை.

90. பில்லி, சூன்யம், ஏவல் நீங்க

ததாநே தீநேப்ய: ஸ்ரியமநிஸ-

மாஸாநுஸத்ருஸீம்

அமந்தம் ஸெளந்தர்ய-ப்ரகர-

மகரந்தம் விகிரதி

தவாஸ்மிந் மந்தார-ஸ்தப-ஸுபகே

யாது சரணே

நிமஜ்ஜந்-மஜ்ஜீவ: கரணசரண:

ஷட்சரணதாம்

பாதங்கள்-துர்மந்திர சேதனம்

அன்பினர் இரப்பதின்

இரட்டியருள் செய்யும்

நின்பத தருத்துணர்

நிறைந்தொளிர் வனப்பாம்
இன்பமுறு தேன் முழுகும் என்

இதய வண்டின்

தன்புளக மெய்க்களி தழைக்க

அருள் தாயே.

பொருள்: தேவி! உன்

பாதக்கமலங்கள் எப்போதும் ஏழை,

எளியவர்க்கெல்லாம் அவரவர்

விருப்பத்திற்கேற்ப அளவற்ற

செல்வத்தைத் தந்தருள்பவை.

அதிகமான அழகிய மகரந்தத்

தேனைப் பெருகியோடச் செய்பவை.

கற்பகத் தருவின் பூங்கொத்துப் போலுள்ளவை. இத்தகைய

உன் பாதக்கமலங்களில்,

ஐம்புலன்கள், மனம் ஆகிய ஆறு

கால்களுடன் புகுந்து உறையும்

வண்டின் தன்மையை என் ஜீவன்

அடைவதாக!
ஜபமுறையும் பலனும்

30 நாட்கள் தினந்தோறும்

காலையில் கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், பில்லி, சூன்யம்,

ஏவல் முதலியவைகள் எல்லாம்

நீங்கி விடும் என்பது

நம்பிக்கை.

91. தனலாபம், பூமிலாபம் பெற

பதந்யாஸ-க்ரீடா-பரிசய-

மிவாரப்து-மநஸ:

ஸ்கலந்தஸ்-தே கேலம்

பவநகலஹம்ஸா ந ஜஹதி

அதஸ்தேஷாம் ஸிக்ஷம் ஸுபகமணி-

மஞ்ஜீர-ரணித-
ச்சலா-தாசக்ஷணம் சரணகமலம்

சாருசரிதே

நடையழகு-தனலாபம் (தமிழ்)

நாடி உனது அற்புத நடைத் தொழில்

படிக்கும்

பேடை மட அன்னமொடு பேத நடைகூறும்

ஆடக மணிப்பரி புரத்து அரவம்

அம்மே

ஏடவிழ் மலர்ப்பதம் இரைக்கும்

அறைபோலும்.

பொருள்: புண்ணியம் மிகுந்த

சரித்திரத்தை உடைய தாயே! உன்

புனிதமிக்க அரண்மனைத்

தடாகத்திலுள்ள அன்னப் பறவைகள்

தத்தித் தத்தி நடந்து உனது

நடையழகைப் பயிலும்

நோக்கத்துடன் தொடர்ந்து
துள்ளிக் குதித்து உன் அழகு

நடையைத் தொடர்ந்து

பயில்கின்றன. அதற்கேற்ப உன் திருவடி

அணிந்துள்ள ரத்தினக் கற்களால் இழை

ஒலியின் மூலமாக அப்பறவைகளுக்கு நடைப் பழக்கத்தைக் கற்றுக்

கொடுப்பதைப் போலவே உன்

திருவடிக் கமலங்கள்

திகழ்கின்றன.

ஜபமுறையும் பலனும்

25 நாட்கள் தினந்தோறும்

காலையில் கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 2000 தடவை

ஜபித்து வந்தால், எதிர்பாராத

வகையில் தனலாபமும், பூமி பாலமும் ஏற்படும்

என்பது நம்பிக்கை.

92. உயர்ந்த பதவிகள் பெற


கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண-

ஹரி-ருத்ரேஸ்வர-ப்ருத:

ஸிவ: ஸ்வச்ச-ச்சாயா-கடித-கபட-

ப்ரச்சதபட:

த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலந-

ராகாருணதயா

ஸரீரீ ஸ்ருங்காரோ ரஸ இவ

த்ருஸாம் தோக்தி குதுகம்

தேவியின் இருக்கை-ஆளுத்திறமை

(தமிழ்)

மூவர் மகேசன் முடிகொளு மஞ்சத்து எழிலாயும்

மேவிய படிகத் தனது ஒளி வெளிசூழ் திரையாயும்

ஒவறு செங்கேழ் விம்பம

தின்பத்துரு வாயும்

பாவை நின் அகலா இறையொடு

நின்னைப் பணிவாமே.
பொருள்: தாயே! பிரம்மா, விஷ்ணு,

ருத்ரன், ஈஸ்வரன் ஆகிய

நால்வரும் வேதத்தின்

வடிவமாகிய உன் கட்டிலில்

நான்கு கால்களாக நின்று

உன்னைச் சேவிக்கிறார்கள். உன்

கணவரான சதாசிவனோ, தூய வெண்மையான

அங்கவஸ்திரத்தைத் தரித்த

கோலத்துடன் உன் மேனியின்

சிவந்த ஒளிவெள்ளம்

பிரதிபலிப்பதால் தாமும்

சிவப்பாகத் தோற்றமளிப்பதைக்

கண்டுவிட்டு சிருங்கார ரஸமே

உருவெடுத்தவரைப் போல்

கண்களுக்கு மகிழ்ச்சி

தந்தருள்கிறார்.
ஜபமுறையும் பலனும்

30 நாட்கள் தினந்தோறும்

காலையில் கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 4000 தடவை

ஜபித்து வந்தால்,

அலுவலகங்களில் உயர்ந்த பதவி,

மந்திரி பதவி போன்ற உயர்ந்த

பதவி, மந்திரி பதவி போன்ற

உயர்ந்த பதவிகளெல்லாம்

கிடைக்கும் என்பது நம்பிககை.

93. எண்ணிய எண்ணங்கள் நிறைவேற

அராலா கேஸேஷு ப்ரக்ருதிஸரலா

மந்தஹஸிதே

ஸிரீஷாபா சித்தே

த்ருஷதுபலஸோபா குசதடே

ப்ருஸம் தந்வீ மத்யே ப்ருது-


ருரஸிஜாரோஹ-விஷயே

ஜகத் த்ராதும் ஸம்போர்-ஜயதி

கருணா காசிதருணா

உறுப்புகளின் மேல் உண்டாகிய

உள்ளன்பு (தமிழ்)

ஓதி இருள் மூரல்ஒளி உற்ற குழைவாக

மோதும் முலை அற்ப இடை முற்றி

முனி தம்பம்

ஆதி பரனின்னருள் திரண்டருண

மாகும்

மாது நின் மலர்ப்பதம்

மனத்தெழுதி வைத்தேன்.

பொருள்: தாயே! மனதுக்கும்

வாக்கிற்கும் எட்டாததும்,

சிவப்பு வர்ணமுள்ளதுமான

பரமசிவனின் கருணாசக்தியே நீ.

அந்த சக்தியே சுருட்டை


மயிரும், இயற்கையான

புன்முறுவலும், காட்டு வாகைப் பூப்போல்

மெத்தென்ற மனமும்,

கல்லுக்குள்ளே இருக்கும்

மணிக்கல்லின் காந்தியுள்ள

ஸ்தனப்ரதேசமும், மிகவும்

இளைத்த இடுப்பும், பருமனான

ஸ்தனங்களும், பின்தட்டுகளும்

தாங்கிய உருவத்துடன் உலகத்தை

ரட்சிக்கின்றாய்.

ஜபமுறையும் பலனும்

25 நாட்கள் தினந்தோறும்

காலையில் கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 2000 தடவை

ஜபித்து வந்தால், எண்ணிய


எண்ணங்களெல்லாம் நிறைவேறும்

என்பது நம்பிக்கை.

94. பிறரால் போற்றப்பட

கலங்க: கஸ்தூரீ-ரஜநிகர-பிம்பம்

ஜலமயம்

கலாபி: கர்ப்பூரைர்-மரகதகரண்டம்

நிபிடிதம்

அதஸ்-த்வத்போகேந ப்ரதிதிந-

மிதம் ரிக்தகுஹரம்

விதிர்-பூயோ பூயோ நிபிடயதி நூதம் தவ க்ருதே

தேவியும் தூய மதியும் (தமிழ்)

தூயமதி மரகதச் செப்பு ஒளிர் கலையும் களங்கமும் நேர் சொல்லும்

காலைக்

காயுமதி தவள கருப்பூர சகலத்தோடு கத்தூரி போலும்

நீ அருந்த அருந்த அவை குறைதொறு

அவ்விரண்டும் அயன் நிறைத்தல்

போலும்
தேயுமது வளருமது திங்கள்

எளிதோ உனது செல்வமம்மே!

பொருள்: தாயே! மரகத

ரத்தினத்தால் செய்யப்பட்ட

பாத்திரம் போலுள்ள சந்திர

மண்டலத்தில் நீ நீராடுகிறாய்.

அந்த பாத்திரத்தில் சந்திரனின் மத

கஸ்தூரியாகவும், சந்திரனே நிர்மலமான

ஜலமாகவும், அவன் கிரணங்களே பச்சைக் கற்பூரப்

பொடிகளாகவும் உள்ளன.

தினந்தோறும் நீ ஸ்நானம் செய்த

பின் காலியாக உள்ள அந்த

பாத்திரத்தை மெல்ல மெல்ல

பிரம்மதேவன் நிரப்புகிறான்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில் கிழக்கு அல்லது


வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால்,

மற்றவர்களால் நன்கு புகழப்

பெறுவார்கள் என்பது

நம்பிக்கை.

95. தீராத ரணங்கள், புண்கள் ஆற

புராராதே-ரந்த:புரமஸி ததஸ-

த்வச்சரணயோ:

ஸபர்யா-மர்யாதா தரலகரணாநா-

மஸுலபா

ததா ஹ்யேதே நீதா: ஸதமகமுகா:

ஸித்திமதுலாம்

தவ த்வாரோபாந்த-ஸ்திதிபி-

ரணிமாத்யாபி-ரமரா:

தேவி இல்லம் (தமிழ்)


தேவி உன் இல்லம் சிவனுறை

அந்தப்புர மானால்

யாவர் உனைக்கண்டு எய்துவர்

இமையோர் முதலானோர்

ஆவல் கொடு எய்த்துன் வாயிலில்

அணி மாதிகளாலே

மேவிய சித்திப் பேறொடு

மீள்வாரானாரே.

பொருள்: திரிபுரங்களை எரித்த

பரமசிவனின் பட்டத்தரசியாய்

விளங்கும் பகவதித் தாயே!

உன்னுடைய திருவடிக் கமலங்களை நெருங்கி அவற்றுக்கு பூஜை

செய்யும் தகுதி, புலன்களை வெல்ல

இயலாதவர்களால் அடையக்கூடியதன்று. இதன் காரணமாகத்தா

இந்திரன் முதலான தேவர்கள் கூட அந்தப் பாக்கியம் தமக்குக்

கிட்டாததால் உன் வாயிற்

படியில் அணிமா முதலிய


துவாரபாலகிகளை மட்டுமே வணங்கி

அணிமா முதலிய எண்வகைச்

சித்திகளை மட்டுமே பெற்றுத்

திரும்பி விட்டார்கள்.

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்

காலையில் கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 108 தடவை

ஜபித்து வந்தால், தீராத

ரணங்கள், புண்கள் ஆறிவிடும்.

இதற்கான யந்த்ரத்தைத்

தகட்டில் எழுதி, எண்ணெயில்

வைத்து ஜபித்து, அந்த எண்ணெயைப் பூசினால்

விரைவில் குணமாகும் என்பது

நம்பிக்கை.

96. நல்ல அறிவு பெற


கலத்ரம் வைதாத்ரம் கதி கதி

பஜந்தே ந கவய:

ஸ்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி:

கைரபி தநை:

மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீநா-

மசரமே

குசாப்யா-மாஸங்க: குரவக-தரோ-

ரப்யஸுலப:

கற்புடைமை (தமிழ்)

கலைமகளும் பொதுமடந்தை

கமலையுமற்றவளே

மலைமகள் நீ கற்புடைய வனிதையென

பகருங்

குல மறைகள் எதிர்கொடு

நின்குரவினையும் அணையா

முலை குழையப் புணர்வது நின்

முதல்வரலது இலையால்.
பொருள்: பதிவிரதா

சிரோன்மணியாகிய பார்வதித்

தாயே! பிரம்மாவின் துணைவியான

சரஸ்வதி தேவியைத் தொழுது

அவளுடைய அருளை எத்தனையோ

கவிஞர்கள் பெறவில்லையா?

அதைப்போல ஏதோ ஒரு வகையான

செல்வத்தைப் பெற்றுவிட்டு

ஒருவன் லட்சுமிபதி என்ற

பெயருக்குரியவனாக

விளங்கவில்லையா? உன்னுடைய

தனங்களின் சேர்க்கையானது,

மகாதேவனை மட்டுமேயன்றி உன் அருகிலி

மரத்திற்குக் கூடக் கிடைப்பதில்லையே! நீயல்லவோ

சிறந்த பதிவிரதை!

ஜபமுறையும் பலனும்

45 நாட்கள் தினந்தோறும்
காலையில் கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், நல்ல அறிவைப்

பெறலாம். மற்றும்

சித்திரங்கள் தீட்டும்

கலைஞர்கள் ஜபித்தால்,

அக்கலையில் வல்லமையும்

புகழும் பெறுவார்கள் என்பது

நம்பிக்கை.

97. வாக்கு சித்தி, உடல் நலம் பெற

கிராமாஹுர்-தேவீம்

த்ருஹிணக்ருஹிணீ-மாகமவிதோ

ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ-

மத்ரிதநயாம்

துரீயா காபி த்வம் துரதிகம-

நிஸ்ஸீம-மஹிமா
மஹாமாயா விஸ்வம் ப்ரமயஸி

பரப்ரஹ்ம-மஹிஷி

வடிவெல்லாம் சக்தி வடிவே

(தமிழ்)

வேதியர்கள் அயன் நாவில்

விஞ்சை மகளென்றும்

சீதரன்தன் மணிமார்பில்

செழுங்கமலை யென்றும்

நாதரிடத்தரிவை யென்றும்

நாட்டுவ ரெண்ணடங்கா

ஆதிபரன் மூலபரை யாமளை உன் மயக்கால்.

பொருள்: பரப்பிரம்மத்துடன்

இணைந்த பராசக்தியே!

வேதங்களின் உட்பொருளை

உணர்ந்தவர்கள், உன்னை நீயே

பிரம்மனின் பத்தினியாகிய

சரஸ்வதி என்றும், நீயே


விஷ்ணுவின் பத்தினியாகிய

லக்ஷ்மி என்றும், நீயே சிவனின் பத்தி

பார்வதி என்றும் பலவாறாகக் கூறுகிறார்கள். நீயோ

மனத்திற்கும் வாக்கிற்கும்

அப்பாற்பட்ட மகிமையுள்ள

நான்காவது தத்துவம்.

அளவில்லாமல் சிரமப்பட்டும்

அடைய முடியாத மஹாத்மியமுள்ள

மஹாமாயையாக நீ இருந்து கொண்டு

இவ்வுலகை ஆட்டி வைத்து,

பிரமிக்க வைத்துக்

கொண்டிருக்கிறாய்.

ஜபமுறையும் பலனும்

8 நாட்கள் தினந்தோறும்

காலையில் கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை


ஜபித்து வந்தால், சொன்ன

வார்த்தை பலித்தலாகிய வாக்கு

சித்தியுண்டாகும். உடல் நலம்

பெருகும் என்பது நம்பிக்கை.

98. கர்ப்பம் நிலைத்து குழந்தை

செல்வம் பெற

கதா காலே மாத: கதய

கலிதாலக்தகரஸம்

பிபேயம் வித்யார்த்தீ தவ சரண-

நிர்ணேஜந-ஜலம்

ப்ரக்ருத்யா மூகாநாமபி ச கவிதா-காரணதயா

கதா தத்தே வாணீ-முககமல-தாம்பூல-

ரஸதாம்

செம்பஞ்சுக் குழம்பு-வாக்கு

சித்தி

செய்ய பஞ்சு குழம் பெழும்

புனல் செல்வி நின்பதம் நல்கவே


துய்ய பங்கய வாணி தம்பல ஊறல்

உய்த்த சொல் வாணர்போல்

மையல் நெஞ்சுறும் ஊமருங்கவி

வாணராகி மலிந்ததால்

மெய்யடங்கலு மூழ்க முன்கவி வீறு நாவிலடங்குமோ.

பொருள்: தாயே! மருதோன்றிக் குழம்பின் பூச்சுடன்

கலந்து வருவதும் உன்

திருவடிகளை அலம்பி வருவதுமான

தீர்த்தத்தை, வித்தைகள்

பலவற்றிலும் சிறந்து விளங்க

விரும்பும் நான், எப்பொழுது

பருகப் போகிறேன்? கூறியருள்வாயாக.

இயல்பாகவே ஊமைகளுக்கும் கூட, கவிதை

இயற்றும் ஆற்றலைத் தரவல்லது

அந்தத் தீர்த்தம் என்பதால்,

சரஸ்வதி தேவியின் திருவாயால் மெல்லப்பட்ட தாம்பூலச்

சாற்றினையொத்த அந்தத்
தீர்த்தத்தை நான் என் வாயில்

எப்பொழுது அடையப்போகிறேன்?

ஜபமுறையும் பலனும்

30 நாட்கள் தினந்தோறும்

காலையில், கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், கர்ப்பம்

தரிக்காத பெண்கள் கர்ப்பம்

தரிப்பார்கள். ஸ்த்ரீ சுகம்

பெறமுடியாத ஆண்களுக்கு

அச்சுகம் கிடைக்கும் என்பது

நம்பிக்கை.

99. ஆரோக்யமும், சகல சுகமும் பெற

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி-ஹரி-

ஸபத்நோ விஹரதே

ரதே: பாதிவ்ரத்யம் ஸிதிலயதி


ரம்யேண வபுஷா

சிரம் ஜீவந்நேவ க்ஷபித-பஸுபாஸ-

வ்யதிகர:

பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம்

த்வத்-பஜநவாந்

இம்மை மறுமைப் பயன் பெற்றிட

(தமிழ்)

சுந்தரி நின் தொண்டர் தமைத்

தோய்வதற்கு நாமகளும்

இந்திரையும் மலரயன் மால்

இடருழப்ப இரதியின் கண்

அந்தமில் பேரழகொடு கற்பழித்து

நெடு நாள் கழியச்

சிந்தையுறு பாசம் போய்ச்

சிவமயத்தைச் சேர்குவரால்.

பொருள்: தாயே! உன்னை பூஜிப்பவன் பிரம்மாவும்,

விஷ்ணுவும் கூடப் பொறாமைப்படக்கூடிய அளவில் நிறைந்த


ஞானத்துடனும், செல்வத்துடனும்

எல்லையில்லா இன்பத்தை

அடைகிறான். மன்மதனைப் போன்ற

மேனி எழிலைப் பெற்று

ரதிதேவியின் பதிவிரதைத்

தன்மையைமும் கலங்கச்

செய்கிறான். சம்சார பந்தம்

எனும் இகவாழ்வின்

கட்டுகளெல்லாம் நீங்கியவனாக

பிரசித்தமான பேரானந்தம் எனும்

இன்ப ரசத்தைப் பெற்று

சிரஞ்சீவியாக வாழ்கிறாள்.

ஜபமுறையும் பலனும்

15 நாட்கள் தினந்தோறும்

காலையில் கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை


ஜபித்து வந்தால், உடல் வலியும்,

சகல சுகமும் உண்டாகும் என்பது

நம்பிக்கை.

100. சகல காரிய சித்தி பெற

ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-

நீராஜந விதி:

ஸுதாஸூதேஸ்-சந்த்ரோபல-ஜலலவை-

ரர்க்யரசநா

ஸ்வகீயை-ரம்போபி: ஸலிலநிதி-

ஸெளஹித்ய கரணம்

த்வதீயாபிர்-வாக்பிஸ் தவ ஜநநி

வாசாம் ஸ்துதிரியம்

தேவி அளித்த சக்தியால்

தேவியைப் பாடியது (தமிழ்)

ஆதவனுக்கு அவன் கிரணத்

தங்கியைக் கொண்டு ஆலாத்தி

சுழற்ற லென்கோ
சீதமதிக்கு அவன் நிலவின்

ஒழுகு சிலைப்புனல் கொடு

உபசரிப்பதென்கோ

மோதியமைக் கடல் வேந்தை அவன்

புனலால் முழுக்காட்டும்

முறைமை யென்கோ

நீ தரு சொற் கவிகொடுனைப் பாடி

உனது அருள் பெறும் என் !

பொருள்: வாக்கிற்கதிபதியான

தேவியே! தீவட்டியின் ஜ்வாலையைக் கொண்டே சூரியனுக்கு

ஆரத்தி செய்வதைப் போலவும்,

சந்திரகாந்தக் கல்லிலிருந்து 

பெருகும் அமுத கிரணங்களாகிய

நீரைக் கொண்டே சந்திரனுக்கு

அர்க்யம் தருவது போலவும்,

சமுத்திர ஜலத்தைக் கொண்டே

சமுத்திரத்தை திருப்தி
செய்வது போலவும், உன்னுடைய

அருளால் உருவான வாக்குகளைக்

கொண்டே இந்த ஸ்தோத்திரம்

அமைந்துள்ளது. இதை உனக்கு

மகிழ்வுடன் அர்ப்பணம்

செய்கிறேன்.

ஜபமுறையும் பலனும்

16 நாட்கள் தினந்தோறும்

காலையில் கிழக்கு அல்லது

வடக்கு முகமாக அமர்ந்து

மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை

ஜபித்து வந்தால், சகல

காரியங்களிலும் சித்தி

உண்டாகும் என்பது நம்பிக்கை.

You might also like