Professional Documents
Culture Documents
Tam Gandhiil
Tam Gandhiil
எனினும் 21-ஆம்
நூற்றாண்டில் சர்வதேச நாடுகள் சந்திக்க போகும் சவால்களையும், பிரச்னைகளையும் அவர்
முன்கூட்டியே கணித்திருந்தார். சூழலியல், உலக அமைதி உள்ளிட்டவை தொடர்பான
பிரச்னைகளுக்குத் தீர்வுகாண அவர் அப்போதே அறிவுரை வழங்கியுள்ளார். மகாத்மா
காந்தியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுதான், ஐ.நா.வின் நிலையான
வளர்ச்சிக்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களில்
சக்திவாய்ந்தவராத் திகழ்ந்தவர் மகாத்மா காந்தி. இந்திய நாட்டின் தந்தையாக பார்க்கப்படும்
அவரின் 150-ஆவது பிறந்த தினத்தை உலக நாடுகள் கொண்டாடுவது, அவருக்கு அளிக்கும்
மிகச்சிறந்த மரியாதையாகும்.
காந்திஜியின் பொது வாழ்க்கை 54 ஆண்டு காலம் (1893 முதல் 1948 வரை) தொடர்ந்தது.
மோட்டார் வாகனம் கண்டுபிடிப்பதற்கு முன்பிருந்து, அணுகுண்டு வீச்சு வரையிலான
காலகட்டம் அது. முதல் உலக மகா யுத்தம் 1919-ல் முடிவுற்றது. ஆயினும் போர் சமாதான
உடன்படிக்கையை அடுத்து, ஃபாஸிஸம், ஜெர்மானிய நாஸிஸம், ருஷ்ய கம்யூனிஸம் போன்ற
வன்முறையும் ரத்த வெள்ளமும் தோய்ந்த தத்துவங்கள் தலையெடுக்கலாயின. 1939
செப்டம்பரில் தொடங்கிய இரண்டாம் உலகப் போரின்போது ரத்த ஆறு திரும்பவும் வெள்ளமாகப்
பெருகி ஆகஸ்ட் 1945-ல் ஹிரோஷிமா, நாகசாகி ஜப்பானிய நகரங்களை அணுகுண்டு
தாக்கியதில் பயங்கர தீப் பிழம்புகளாக உச்சகட்டம் எய்தியது.
முதல் இந்திய சுதந்திரப் போர் என்று 1857 இல் நடைபெறுகிறது. அதைச் சிப்பாய்க்
கலகம் என்று ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். வேலூர் கலகம் 1806 இல்
நடக்கிறது. முதல் இந்திய சுதந்திரப் போர் என்று குறிப்பிடப்படும் சம்பவத்துக்கு முன்பாக 51
ஆண்டுகள் முன்னதாக நடக்கிறது. அதாவது அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னதாக
நடக்கிறது. தமிழகத்தில் நடக்கிறது. அதாவது தென்னிந்தியாவில் நடக்கிறது. சுந்திரப்
போராட்டத்தில் இந்தியாவுக்கு வழிகாட்டி தென்னிந்தியா. அதாவது தமிழகம்.
கிராமம் - நகரம் என்ற வேறுபாடு வரும் போது அவர் அதிகம் கிராமத்தையே முன்
நிறுத்துகிறார். கிராமத் தன்னிறைவு அவரது கனவாக இருக்கிறது. கிராமங்கள் நகரங்களாக
ஆக வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. நகரங்கள் கிராமங்களாக வேண்டும் என்று
எதிர்பார்க்கிறார். ஒரு வேடிக்கைக்குச் சொல்வதென்றால் இன்று நாம் உலகை உலக நகரம்
என்று சொல்லாமல், உலகக் கிராமம் - குளோபல் வில்லேஜ் என்றுதானே சொல்கிறோம்
என்பதைக் குறிப்பிடலாம் என்று கருதுகிறேன்.
ஆண் - பெண் என்ற பாகுபாடு வரும் போது அவர் அதிகம் பெண்களின் பக்கமே
முன்நிற்கிறார். ஆண் - பெண் என்ற பாகுபாட்டையே அவர் ஒருமைப்பட்ட பார்வையாகத்தான்
பார்க்கிறார். காந்தியடிகள் சொல்கிறார் - பெண்ணின் அழகை மட்டும் பகுதியாகப் பார்க்காதே
என்று. பெண்ணை பிரபஞ்சத்துடன் இணைந்த சக்தியாகப் பார் என்று. அவர் தன் துணை
கஸ்தூரி பாயை அப்படித்தான் பார்க்கிறார். அவரது தாயார் புத்திபாலி பாய்க்கு மிகச் சிறந்த
சேவகனாக இருக்கிறார். பெண்களைப் போற்றுகிறார். போராட்டத்தில் பெண்களும்
அவருக்குத் துணையாக நிற்கிறார்கள். தமிழகத்தில் கடலூர் அஞ்சலையம்மாள் அவரை பர்தா
வேடமணிந்து குதிரை வண்டியில் அழைத்துச் செல்கிறார். ஆங்கிலேய அரசு அஞ்சலையம்மாள்
காந்தியடிகளைச் சந்திக்கக் கூடாது என்று தடை விதித்திருந்த நிலையில் அவர் செய்த
காரியம் அது. பெண்களுக்கான வீரத்தை அவர் தந்திருக்கிறார். கடலூர் அஞ்சலையம்மாள்,
தில்லையாடி வள்ளியம்மை என்று தமிழகப் பெண்களும் போராட்டத்திற்குத் தேவையான
வீரத்தைக் காந்தியடிகளுக்குத் தந்திருக்கிறார்கள் என்று நாம் பெருமையோடு சொல்லலாம்.
2.
‘காந்தியத்திலும்
கடினமானது
எளிமைகள் சிக்கலடைவதும்
இயல்புகள் அச்சமூட்டுவதும்
மனித அறிவுருவாக்கத்தின்
கவனிக்க ஒன்றிரண்டு:
என்று 1931 ல் லண்டனில் சத்தத் ம் ஹவுஸ் என்ற இடத்தில் காந்தி பேசினார். அதன்பிறகு சர்
வில்லியம் ஹர்தோக் என்பவர் – டாக்கா கல்லூரியில் முதல்வராக இருந்தவர் – காந்தியின்
கருத்துடன் முரண்பட்டு வாதாடினார். காந்தி அளித்த ஆதாரங்களைத் தொடர்ந்து
நிராகரித்தார். அவர்களது விவாதம் 8 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது. இருவரும்
தத்தம் நிலைகளிலிருந்து விலகவேயில்லை. காந்தியின் கல்வி சார்ந்த கருத்துகளுக்கு இருந்த
வரலாற்றுப் பார்வையை இந்த விவாதம் வலுப்படுத்தியது. இந்த விவாதத்தை மையமாக
வைத்துத்தான், தரம்பால்(Dharampal) ‘அழகிய மரம்’ (The Beautiful Tree) என்ற
நூலை எழுதினார்.
வரலாற்றுப் பின்னணி
காந்தி ‘அடிப்படைக் கல்வி’ என்ற பதத்தை 1938 லும், நயி தாலீம் என்பதை 1944 லும்தான்
பயன்படுத்தினார். ஆனால், 1890 களிலிருந்தே கல்வியில் அவர் பல்வேறு சோதனைகளைச்
செய்து வந்திருக்கிறார். அவரது முதற்சோதனைகள் அவரது மகன்களின் வாயிலாகத்தான்
நடந்தன. தென்னாப்பிரிக்காவிலிருந்த ஆங்கிலப் பள்ளிகளுக்கு அவரது பிள்ளைகளை அனுப்ப
அவருக்கு மனமில்லை. பயன்களைவிட பாதிப்புகளே அதிகம் என்று கருதினார். அவரது
பிள்ளைகள் நால்வருக்கும் அவரே கல்வி கற்றுத்தர முயன்றார். கடும் வேலைப் பளுவுக்கும்,
போராட்டங்களுக்கும் இடையில் அவர்களுக்கும் அவருக்கும் திருப்தியான கல்வியை அவரால்
தரமுடியவில்லை. பின்னர் அவர் அமைத்த டால்ஸ்டாய் பண்ணையில் இருந்த குழந்தைகள்
எல்லாருக்கும் காந்தியும் அவரது சகாக்களுமே கல்வி அளித்தனர். 20-30 குழந்தைகள்
அங்கிருந்தனர்; தமிழ், குஜராத்தி, தெலுங்கு, ஹிந்தி என்று வெவ்வேறு மொழி பேசினர்;
ஹிந்து, முஸ்லிம், பார்சி, கிருத்துவம் என்று பல மதங்களைச் சார்ந்திருந்தனர். சமையல்,
தோட்டவேலை, பட்டறை வேலை, செருப்பு தைத்தல், கழிவகற்றல் என்று பல வேலைகளிலும்
ஈடுபட்டனர். கூடவே 2-3 மணிநேரம் முறையான வகுப்புகளும் நடந்தன. எழுத்து, கணிதம்,
பொது அறிவு, வரலாறு, புவியியல், அறிவியல் என்று பல பாடங்களும் நடத்தப்பட்டன. காந்தி
தான் சிறையில் கற்றுக்கொண்டதை வைத்து, தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் எழுதப்
பழக்கினார். மதம் சார்ந்த நூல்களும் கற்பிக்கப்பட்டன. ‘எனது நம்பிக்கையும் துணிச்சலும்
உச்சத்திலிருந்த நாட்கள் அவை,’ என்றார் காந்தி. அரசியல் காரணங்களால், அந்தச்
சோதனை முடிவுக்கு வந்தது. ஒரு வருடமே நீடித்த இந்தச் சோதனை காந்தியின்
சிந்தனையைச் செழுமைப்படுத்தியது.
“மனம் மற்றும் உடலின் வளர்ச்சி, ஒத்த ஆன்ம விழிப்போடு கூடி நிகழ்ந்தால் அன்றி, ஒரு
குறைபட்ட, ஒருபுறம் சார்புடைய செயல்பாடாகவே அமைந்துவிடும்.” (ஹரிஜன், 8-5-37)
ஆதாரக் கல்வி
1937 அக்டோபரில் வர்தாவில் நடைபெற்ற தேசியக் கல்வி மாநாட்டில் அறிமுக உரை ஆற்றிய
காந்தி, அவரது எண்ணப்போக்கையும், புதிய கல்விமுறைக்கான தேவையையும்
முன்வைத்தார். அதே ஆண்டில் அதற்கு முன்பும் பின்பும் அவர் எழுதிய கட்டுரைகள்,
கடிதங்கள் மற்றும் அவரது உரையாடல்கள் வாயிலாக ஒரு புதியக் கல்விக் கொள்கை
தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. ஜம்னாலால் பஜாஜ், அரியநாயகம், ஆஷாதேவி
அரியநாயகம், வினோபா பாவே, ஆச்சார்ய கிருப்பளானி, காகா காலேல்கர் என்று பலரும்
காந்தியின் புதிய பார்வையை ஆதரித்தனர்; மேலும் மெருகேற்றினர். ஜாக்கீர் ஹூசைன்
தலைமையிலான ஒரு குழு, மாநாட்டின் முடிவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. மேலும்
விரிவான அறிக்கைகள், பாடத்திட்டங்கள் அடுத்த சில மாதங்களில் வரையப்பட்டன.
காங்கிரஸ் கட்சி இதையே தேசியக் கல்விக் கொள்கையாக ஏற்றுக்கொண்டது.
“நம் குழந்தைகளை நம் பண்பாடு மற்றும் நம் நாட்டின் அசலான மேதைமை ஆகியவற்றின்
உண்மையான பிரதிநிதிகளாய் ஆக்கவேண்டும்.” (வர்தா உரை, 22-10-37)
காந்“தீய”ச் சிந்தனைகள்.
காந்தி தன் திட்டங்களை நிறைவேற்ற தேர்நதெ ் டுத்த ஆள் தன் மொழி பேசும்
குசராத்தியான பட்டேலை. ஆனால் அந்த ஆள் முரடன், எந்தப் பாசாங்கும் இன்றி களத்தில்
இறங்கினால் விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து எழுச்சி நிலையில் இருக்கும் பல்வேறு
மக்களும் கலகம் செய்து இந்தியா என்ற ஒரு பெரும் கொள்ளைக் களம் எனும் கனவு
கலைந்துபோகும் என்பதனால் ஒரு முகமூடியாக நேருவை தலைமையமைச்சராகவும்
செயற்பாட்டுக்கு பட்டேலையும் காந்தி அமர்த்தினார். பட்டேலின் கொடுமைகளுக்கு பட்டேலியம்
என்ற பெயரை காந்தியத்துக்கு எதிரான ஒன்றாகக் கொடுத்தனர் “காந்தியத்”தை நம்பி
ஏமாந்த தமிழகத்து திரு.வி.க. போன்ற ஏமாளிகள். “காந்தியம் செத்துவிட்டது,
பட்டேலியம்தான் வாழ்கிறது” என்பது அவரது புகழ்பெற்ற கூற்று. காந்தியம்தான் பட்டேலியம்
என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன்.
1953 இல் உருசிய தாலின் இறந்த பின் உருசியாவுக்கும் சீனத்துக்கும் உருவான பகைமையில்
இந்திய பொதுமைக் கட்சி இரண்டாக உடைந்து சீனத்துச் சார்பாக உருவானதுதான் இந்தக்
கட்சி. தமிழகத்தைப் பொறுத்தவரை பார்ப்பனர்களுக்கும் சிவனிய வெள்ளாளர்களுக்குமான
தலைமைப் போட்டியில் பாரப்பனர்களின் தலைமையில் இடங்கை, அதாவது மார்க்சியப்
பொதுமைக் கட்சி உருவானது என்பது உண்மையான சாதிய அரசியல். இரு பிரிவுகளுக்கும்
இடையில் கொலைப் பகை இருந்தாலும் பனியா – பார்சிகள்தாம் இந்தியாவின் தேசிய
முதலாளிகள் என்பதில் எப்போதும் இப்போதும் உறுதியாக ஒற்றுமையாக இருக்காறார்கள்.
இதில் பார்ப்பனர்கள் மீதும் கூட இவர்களுக்கு பரிவு கிடையாது. 1980 களின் தொடக்கத்தில்
நான் மதுரையில் இருந்த போது டி.வி.சு. நிறுவனத்தைத் தகர்க்க இடங்கையினர்
ஆயத்தமாகின்றனர் என்ற செய்தியை நண்பர் ஒருவர் கூறினார். இப்படி ஊருக்கே
தெரிந்திருக்க அந்த நிறுவனத்தாருக்குத் தெரியாமல் இருக்குமா? அவர்கள் தங்கள் ஓசூர்
தொழிற்சாலைகளுக்குப் பாதுகாப்பாக நெல்லை மாவட்டத்தில் நாடார்களின் தொழில் –
வாணிக நிறுவனங்களைக் காப்பதில் அடியாளாகச் செயற்பட்ட கராத்தே செல்வின் என்பவரை
அமர்த்தினர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்குக் கணிசமாகப் பணம் கொடுத்து
வழியனுப்பி வைத்தனர். இவ்வாறு இவர்களின் சூழ்சச ் ியிருந்து தப்பினர். இவ்வளவு
ஆட்கட்டும் வலுவும் தொடர்புகளும் இல்லாத எத்தனை தமிழகத் தொழில் – வாணிக
நிறுவனங்களை இக் கயவாளிகள் அழித்தார்களோ நமக்குத் தெரியாது.