You are on page 1of 9

பிரச்சனம் என்றால் என்ன?

கேள்வி கேட்டு பதில் சொல்வது பிரச்சனம். உங்களுக்கு ஏற்படும்


பிரச்சனைகளைத் தீர்க்க பிரசன்னம் மூலம் தீர்வு காணலாம்.

ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் பிரச்சனைகளை வரும் நேரத்தின்


அடிப்படையில் லக்கினம் கணித்து கிரக நிலைகளைக் குறித்து பலன்
கூறுவார்கள்.

பிரஸ்னம் என்பது ஒருவர்; நம்மிடம் வந்து ஒரு கேள்வி கேட்கும்


நேரத்தின் கிரஹநிலைகளை கொண்டும்,

தொடர்புடைய பலவித பிரஸ்ன முறையுடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்து


பலன் கூறுவதாகும்.

பிரஸ்ன முறைகள் (Metheds of Prasana Margam)

உலகெங்கிலும் ஜோதிட நிபுணர்களால் அநேகவகையிலான ப்ரச்சின


மார்கங்களை - உத்தியை கையாளப் பட்டு வந்திருப்பதை தெரியமுடிகிறது.
பிராசீன மார்கங்களை (முதல்) காலங்களில் China, Tibet, Egypt, Mughal,& Western
countries என்று உலகின் பல இடங்களிலும் அந்தந்த தேசத்திற்கேற்ப
பிரச்னமார்க்கங்கள் இருந்தன. தற்பொழுதும் ஜோதிஷம், கபால ஜோதிஷம்,
அதில் நம்பிக்கையுடன் கேட்பவர்களுக்கு நல்ல விடைகள் கிடைத்துக்
கொண்டுதான் இருக்கின்றன.

பிரஸ்னத்தில் பலவித முறைகள் உண்டு அவை.,


1 சோழிப் பிரஸ்னம்: சோழிகளை வைத்து பலன் கூறுவது.

2 தாம்பூலப் பிரஸ்னம் வெற்றிலைகளை வைத்து பலன் கூறுவது.

நிச்சயிக்கப்பட்ட நாளில், கோயில், குரு - கணபதி வந்தனங்கள் செய்து


விஷயம் தெரிய வேண்டியவரால் எடுத்துக்கொடுக்கப்படும் வெற்றிலையை
வைத்துக்கொண்டு, அதில் கிடைக்கும் கணிதத்தை வைத்து பாவ பலங்கள்
சொல்லப்பட்டுவரும் முறை இது. தாம்புல சக்யை, தாம்பூல வடிவு,
நிமித்தம், நேரம், கணக்கிடும் வழி ஆகிய அனைத்தும் மிகத் துல்லியமாக
இருக்கவேண்டும்.

3 நாளிகேரப் பிரஸ்னம் தேங்காயை வைத்து பலன் கூறும் முறை.

4 வர்ஷ பிரஸ்னம் மழை தொடர்பானது

5 கூபப் பிரஸ்னம் கிணறு தோண்டுவது தொடர்பானது.

6 ஸ்வப்னப் பிரஸ்னம் கனவுகள் தொடர்பானது.

7 போஜனப் பிரஸ்னம் உண்ட உணவு பற்றியது

8 யுத்தப் பிரஸ்னம் போரில் வெற்றி தொடர்பானது.

9 சாந்திப் பிரஸ்னம் சமாதனம் தொடர்பானது.


10 நஷ்ட ஜாதகப் பிரஸ்னம் தொலைந்து போன ஜாதகம் அல்லது ஜாதகம்
இல்லாதவர்க்கு பலன் பார்க்க தொடர்பானது.

11 நஷ்டப் பிரஸ்னம் தொலைந்து போனவை தொடர்பானது.

12 விவாஹ பிரஸ்னம் திருமனம் தொடர்பானது

13 சந்தானப் பிரஸ்னம் மகப்பேறு தொடர்பானது.

14 யாத்ராப் பிரஸ்னம் பயணங்கள் தொடர்பானது.

16 ஆயுள் பிரஸ்னம் ஆயுள் தொடர்பானது.

17 மரணப் பிரஸ்னம்- இறப்பு தொடர்பானது.

18.தேவபிரஸ்ன மனிதர்களுக்கு ஏற்படும் அவஸ்தை,

கஷ்டங்கள் ஆகியன போன்றே மனிதர்களால், அல்லது தேவகணங்களால்


கட்டப்பட்டு தலைமுறைகளால் வழிபட்டுவரும் தேவாலயங்களுக்கு
ஏற்படும் கஷ்ட - நஷ்ட - ரோகாவஸ்தையை ஜோதிட ரீதியாக
இறையருளால் சொல்லப்படும், கணிக்கப்படும் செயல் முறை தேவ
பிரஸ்னம். இதில் 12 பாவங்களையும், கோவிலில் ஒவ்வொரு
விஷயத்தையும், நபர்களையும், செயல்முறைகளையும் கண்டறிய
உதவுகின்றன. (கோயில்களுக்கும் ஜாதகம் அமைத்து தசாசந்தி தோஷம்
கணக்கிடும் முறை உள்ளது).ம் இது கோயில்களுக்கு பார்ப்பது.,

19.ஆருட பிரஸ்னம்.,
குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்களை, அதன் நிவாரணங்களைத் தெரிந்து
கொள்ள குடும்ப பிரஸ்னமாக வைத்துக் கொள்வதே ஆரூட பிரஸ்னம்.
ஆரூடம் என்றால் வடுஎன்றும்
ீ ஒருபொருள் உண்டு.
வாஸ்துதோஷநிவர்த்தியும் இதில் வரும்.

19.பூ பிரஸ்னம் /மலர் ஆருடம் மனதில் நினைத்த காரியம் நிறைவேறுமா?

என்பதை அறிந்து கொள்ள.,

என்னும் பூ வகைகள் கொண்டு

பலன் கூறும் முறை.,

கேள்வி நேரத்தில் ஜோதிடர்கள் சில அடிப்படை விஷயங்களை கவனிக்க


வேண்டும். இவைகள் சூட்சுமமான பலனை கேள்வியாளருக்கு தர உதவும்
அந்த காரணிகள்.

1 கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரஹநிலை

2 ஜோதிடருடய வலது, இடது சுவாச நிலை

3 ஜோதிடருடய மன நிலை.,

4 கேள்வியாளர் நிற்கும் இடம்


5 கேள்வியாளர் தன் உடலில் தொடும் உறுப்பு

6 ஆருட ராசி என்று சொல்லக்கூடிய பிரஸ்ன லக்னம்

7 ஆருட ராசி குறிப்பிடும் திசை

8 கேள்வியாளர் சொல்லும் முதல் வார்த்தையின் எழுத்து

9 கேள்வியாளரின் அசைவுகள்

10 கேள்வியாளரின் மனநிலை

11 கேள்வியாளார் பார்க்கும் திசை மற்றும் பொருள்

12 கேள்வியாளரின் ஆடை நிறம்

13 கேள்விகேட்கும் நேரத்தில் உண்டாகும் சப்தங்கள் முதலியன

இவைகளை மேற்கண்ட பிரஸ்ன முறைகளுக்கு கவனித்து பலன்


கூறுவோமாயின் அவை மிக சரியாக இருக்குமென்பது ஆன்றோர்களின்
கருத்தாகும்.

இன்று நாம் பார்க்க இருப்பது

பூ பிரஸ்னம்/மலர் ஆருடம்
மனதில் நினைத்த காரியம் நிறைவேறுமா? என்ற கேள்வியுடன்
இவ்வாரூடம் பார்க்கப்படுகிறது.

இதில் பூவரசு இலைக்குள் வெள்ளை நிறப் பூக்கள் மட்டும் வைத்து தனி


பொட்டலங்களாகவும்,

சிவப்பு நிறப் பூக்களை மட்டும் வைத்து தனி பொட்டலங்களாகவும் கட்டி,

இப்பொட்டலங்களை ஒரு தாம்பூலத்தில் வைத்து, பூஜை

[12:33 PM, 1/1/2021] +91 98442 22266: யறையில் விளக்கேற்றி குல


தெய்வத்தையும், இஷ்ட தெயவத்தையும் மனதார வேண்டி,
அப்பொட்டலங்களில் ஒன்றை கையில் எடுத்து பிரித்துப் பார்க்க,

வெள்ளைப்பூ வந்தால் கார்ய சித்தி ஏற்படும்.

சிவப்பு நிற பூ வந்தால் கார்யம் தடைப்படும். இது இன்றளவும்


கிராமப்புறங்களில் நடைமுறையில் உள்ள ஆரூட முறையாகும்.

அதாவது நமக்கு வரும் வியாதி ஆதி அனைத்தும் முன் ஜன்ம பாபத்தின்


தொடர்ச்சியே. அதற்கு, ஜெபம், ஹோமம், தானம், அர்ச்சனை மற்றும்
மருத்துவ ரீதியான மருந்து, வாழ்க்கை முறை என்பதே பொருள்.

கலியுகமாகிய இக் காலத்தில் நிறைய பாப பாரத்தை இறக்கிக் கொள்ள


இவை அனைத்தும் செய்து கொண்டே இருக்க வேண்டுமென்றே
தோன்றுகிறது.
எல்லாருக்கும் நல்ல மனசுத்தியைத் தருவதற்காகஇறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.

மலர் ஆருடம் பார்க்கும் முறை

ஆரூடம் கேட்பவரை ஏதாவது இரு மலர்களின் பெயர்களைக் கூறுமாறு


கேட்டு அவற்றை குறித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு குறித்துக்
கொண்ட மலர்களுக்குரிய கிரகங்களை குறித்துக் கொள்ள வேண்டும்.

முதலாவதாக கூறப்படும் மலருக்குரிய கிரகம் சிந்தனையில் உள்ள


கேள்விக்குரிய விசயத்தையும்,

இரண்டாவதாக கூறப்படும் மலருக்குரிய கிரகம் கேள்விக்குரிய


விசயத்தின் சாதக பாதக நிலைகளையும் சுட்டிக் காட்டும்.

கிரகங்களும் அவற்றிற்குரிய மலர்களும் கீ ழே தரப்பட்டுள்ளன.

சூரியன் : செந்தாமரை, சூரியகாந்தி, வெள்ளெருக்கு

சந்திரன் : வெள்ளைஅல்லி, தும்பைப்பூ, சந்திரகாந்தி

செவ்வாய் : செவ்வரளி, சிவப்பு ரோஜா, பவளமல்லி

புதன் : மரிக்கொழுந்து, வெண்காந்தன், வெண்சங்கு

குரு : செண்பக மலர், முல்லை, மஞ்சள் சாமந்தி, சந்தன


மல்லிகை, மஞ்சள் அரளி, பாதிரிமலர், மகிழ மலர், பூசணிப்பூ, இருவாட்சி,
சம்பங்கி.

சுக்கிரன் : வெண்தாமரை, வெள்ளை ரோஜா, மல்லிகை, மனோரஞ்சிதம்,


நந்தியாவட்டை, புண்ணை மலர், வெள்ளை சாமந்தி.

சனி : கருங்குவளை (நீலத்தாமரை), கத்தரிப்பூ, சங்குப்பூ, வாடாமல்லி,


கருச்செம்பை.

ராகு : மந்தாரை, சாரக்கொன்றை, துலுக்கா; சாமந்தி.

கேது செவ்வந்தி, தாழம்பூ, கனகாம்பரம், கொன்றை பூ, செம்பருத்தி

உதாரணமாக ஒருவர் முதலில் வெண் தாமரை மலரயும், இரண்டாவதாக


செவ்வரளி மலரையும் கூறுகிறார் என வைத்துக் கொள்வோம். இதற்கான
பலா பலன்களைப் பார்ப்போம்.

மலர் கிரஹம்

வெண்தாமரை சுக்கிரன்

செவ்வரளி கேது
சுக்கிரன் மனைவியைக் குறிக்கும் கிரகம். கேது பிரிவினையைக் குறிக்கம்.
எனவே அவருடைய மனைவியுடன் அவருக்கு பிரிவினை ஏற்படலாம். இது
ஒரு வகையான பலன்.

சுக்கிரன் பணம், வடு,


ீ வாகனம் இவைகளைக் குறிக்கும் கிரகம், கேது
தகராரைக் குறிக்கும். எனவே கேள்வி கேட்பவருக்கு பணம், வடு,
ீ வாகனம்
சம்பந்தமாக வழக்கு இருக்கலாம். இது மற்றொரு பலன். மொத்தத்தில்
சுக்கிரன், கேது சேர்க்கைக்குரிய பலாபலன்களை கூறவேண்டும்.

மேற்கண்டவாறு ஆரூடம் கேட்பவரை இரண்டு பூக்களின் பெயர்களைக்


கூறுமாறு கேட்டு, அப்பூக்களைக் குறிக்கும் கிரகங்களைக் கண்டறிந்து,
அவ்விரண்டு கிரகங்களையும் கிரக சேர்க்கையாக எடுத்துக் கொண்டு,
அக்கிரக சேர்க்கைக்குரிய பலாபலன்களை ஆரூடஜோதிட முறையில்
கூறினால் பலன்கள் சரியாக இருக்கும்.நன்றி

You might also like