You are on page 1of 3

பாவக்கிரகங்களின் சுபயோக பலம்:

சாராவளி என்ற மூலநூல் சுபகிரகங்கள் எல்லாம் கேந்திர கோணங்களில் பலமடைந்து பாவகிரகங்கள் பலவீனமாக இருந்தால்
அரசனாவான் என்கிறது.

லக்ன அசுபர்களாக குரு, சுக்கிரன், புதன் இருந்தாலும் வலுவடைவதே யோகம். இயற்கைசுபர்கள் லக்ன பாவிகளாக
வரும்போது தனது தசாகாலங்களில் யௌகபலன்களை தருவதில்லை. ஆனால் இவர்கள் வலுவடைவதே ஜாதகருக்கு
தசாக்காலங்களை தாண்டி வாழ்நாள் முழுவதும் தலைமையுடைய சிறந்த வாழ்க்கையையளிக்கிறது.

ரிசபம், துலாம் லக்னங்களுக்கு சனி ராஜயோகத்தை தசாக்காலங்களில் தருபவராவார். ஆனாலும் ரிசப துலாம்
லக்னத்தார்க்கு சனி சுபர் தொடர்பின்றி வலுவடைந்து லக்ன பாவியான குரு ஒரு இயற்கை சுபர் என்பதால் பலவீனமடைவது
உயர்ந்த வாழ்க்கைநிலையை தராது. லக்னாதிபதி சுக்கிரன் ஒரு இயற்கை சுபராக இருப்பதால் ரிசப துலாம் லக்னத்திற்கு
கண்டிப்பாக வலுவிழக்க கூடாது.

இயற்கை பாவக்கிரகங்களான சனி லக்ன யோகாதிபதியாக ஆனாலும் கேந்திரங்களில் வலுத்து லக்னத்தையும் ராசியையும்
பார்ப்பது நல்லது அல்ல. இந்த லக்னத்திற்கு சுபரோடு சேர்ந்த, பார்க்கப்பட்ட சனியே தசாவிலும் யோகத்தை தரும்.

இதேப்போன்று பாவக்கிரகங்கள் சட்வர்க்கங்களில் சுபரின் ராசிகளில் உள்ள பாவிகளே அதிக யோகத்தை தருகிறது.
இதைதான் மகாகவி காளிதாசர் உத்தர காலாமிர்த நூலில். " சௌம்ய வர்க்க யோகம்" என்கிறார்.
நான் பலருக்கு ஜாதகங்களில் துல்லியமாக பலம் கூறுவதற்கு ராசி, நவாம்சத்தைவிட சட்வர்க்கங்களான துவாதாம்சம்,
தசாம்சம், நவாம்சம், சதுர்தாம்சம், சப்தாம்சம் போன்ற சோடச வர்க்கங்களில் கிரகங்கள் அடையும் யோகவலிமையையே
உறுதிப்படுத்துவதற்கு எடுத்துக்கொள்கிறேன்.

மேலும் இதில் ஒரு சூட்சுமமாக பல வர்க்கங்களிலும் பலமடைந்த ஒரு கிரகம் யோகமளிக்க வேண்டும். அதாவது மேசம்
ஒன்றாவது பாகையிலோ அல்லது சிம்மம் ஒன்றாவது பாகையிலோ அல்லது தனுசு ஒன்றாவது பாகையிலோ ஒரு கிரகம்
இருந்தால் அக்கிரகம் பல வர்க்கங்களில் வர்க்கோத்தம பலமடைந்து தேவலோகாம்சம் அல்லது ஐராவதாம்சம் அல்லது
வைசேசிகாம்சம் போன்ற உயர்ந்த நிலையை அடையும். ஆனாலும் அக்கிரகங்கள் தனது தசாவில் யோகத்தை தராது. இங்கே
எட்டு அல்லது ஒன்பது வர்க்கங்களில் அக்கிரகம் வர்க்கோத்தம பலமடைவதால் யோகமளிக்கும் என்று உறுதியளித்தாலும்
அது நடைமுறையில் பலமளிக்காது.
காரணம் உறுதியான விதிவிலக்கு. அது அசுப புஷ்கராம்ச பாகை.

மேலும் சாராவளியில் சுபவர்க்கங்களில் பலமடைந்த கிரகங்களே ராஜத்துவத்தையும், ஆயுளையும், சுபத்துவத்தையும்


வழங்குவதாக கூறப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும்.

ஹோராசாஸ்தரத்தில் ஆட்சி உச்சம் பெற்றிறாத கிரகங்களும் வர்க்கபலத்தால் அரசயோக சுகங்களை வழங்கும் என்றும், காரக
கிரகங்கள் கேந்திரங்களில் இருந்தால் லக்ன அசுபர்களின் தசாக்காலங்களும் ராஜயோகத்தெ தரும் என்பதும் ஜோதிடத்தில்
மாறாத அனுபவ உண்மைகளாகும்.

எனவே மூலநூல்களில் முதல் அத்தியாயத்தில் சனி நீசமடைந்தால் அற்பாயுள் என்றும் இறுதி அத்தியாயத்தில் சனி
நீசச
் னான இருந்தாலும் லக்னத்தில் வலுவோடு உள்ள லக்னாதிபதியை குரு பார்தத
் ால் எமனாலும் உயிரை
பறிக்கமுடியாதவாறு நூறு ஆண்டுகள் வாழ்ந்திருப்பார் என்றும் இருக்கும்.
மற்ற பாவகங்களைவிட லக்னாதிபதி வலுவடைந்த ஜாதகர் செய்த செயல்கள் அனைத்தும் அவருக்கு சாதகமாகவே
அமையும். அது நல்ல செயல்களா கெட்ட செயல்களா என்பது லக்னம் மற்றும் லக்னாதிபதி பெறும் சுப மற்றும்
அசுபத்தன்மையை பொருத்து அமையும்.
ராகு ராசிநாதனின் வலிமையையும் யோகநிலையையும் தனது தசாவில் பிரதிபலிப்பவன். எனவே ராகு இருந்த ராசிநாதன்
புஷ்கர நவாம்சத்தில் இருந்தால் பெரும் யோகத்தை தனது தசாவில் தருவான்.
லக்னசுபர்கள் கேந்திரகோணத்திலோ, இந்து லக்னத்திலோ, யோகிதொடர்பிலோ இருந்து சுபர்களின் பார்வை சேர்க்கை
பெற்றாலோ ,புஷ்கர நவாம்சத்தில் இருந்தாலோ மாபெரும் யோகத்தை உறுதியாக தரும்.
1,5,9 ஆம் அதிபதிகள் கேந்திரங்களில் இருந்து 
தசாவானது பதவி, புகழ், செல்வம், சுகபோக வசதிகள், வாகனங்கள் போன்ற சுபயோகங்களை உறுதியாக தரும்.
லக்னமும் லக்னாதிபதியும் பலமிழந்தாலும் பாவக்கிரக தொடர்பு பெற்றாலும் மேற்கூறிய எந்த பலன்களும் நடக்காது.
ஒரு தசாநாதனுக்கு 6,8,12 ல் தசாநாதனின் ராசிநாதனும் நட்சத்திரநாதனும் அமர்ந்தாலோ , லக்னத்திற்கு 6,8,12 ல்
அமர்ந்தாலோ அத்த தசாவானது பெரிய யோகங்களை செய்வதில்லை.
தசாநாதனுக்கு 6,8,12 ல் அமர்ந்த புத்திநாதர்கள் யோகாதிபதியாக இருந்தாலும் யோகத்தை செய்வதில்லை. 
தசாநாதனின் ராசிநாதனும் நட்சத்திரநாதனும் வலிமையிழந்து தசாநாதன் நவாம்சத்திலும் பகை, நீசம் பெற்று அவரோக
கதியில் இருந்தால் , அத்தசாநாதன் உச்சம் பெற்றிருந்தாலும் நல்ல பலன்களை அதிகமாக தருவதில்லை.
ஆட்சிபெற்ற கிரகத்திற்கு பத்தாமிடத்தில் மற்றொரு கிரகம் ஆட்சியாகவோ உச்சமாகவோ இருந்தால் அதுவே அந்நியோன்ய
காரகத்துவம். இருவரும் பரஸ்பர நண்பர்களானால் அதுவே பரஸ்பர அந்நியோன்ய காரகத்துவம். இவ்வாறான அந்நியோன்ய
காரகத்துவ கிரகங்கள் இருப்பவனே VVIP ஆவான்.
பிறந்த நாமயோகத்தின்படி யோகியாக வருபவன் ராகு கேது சாரம் பெறாவிட்டால் உறுதியாக யோகம் தருபவன்.

You might also like