Advaidam Detail

You might also like

You are on page 1of 16

சங்கரமதம் அத்வைதம் மாயாவாதம் ஆகிய மூன்றும் அனேகமாக ஒன்றே.

ஆனால் நுட்பமாக சில வேறுபாடுகள் உள்ளன. அவ்வேறுபாடுகளை புரிந்துகொள்ளாவிட்டால் சில


இடங்களில் பொருட்குழப்பம் ஏற்படக்கூடும்.

சங்கர மதம்

ஆதிசங்கரரின் அத்வைதக் கோட்பாடு மற்றும் மெய்ச்சொல் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையிலும்


அவரது நெறிகாட்டல்களின் அடிப்படையிலும் சங்கர மடங்களால் முன்வைக்கப்படும் தத்துவ + வழிபாட்டு
முறையே சங்கர மதம் என்று சொல்லப்படுகிறது.

கேரளத்தில் காலடி என்ற சிற்றூரில் எட்டாம் நூற்றாண்டில் பிறந்த சங்கரர் வேதாந்த மரபைசேர்ந்த
கௌடபாதர் என்பவரின் மாணவரான கோவிந்தரின் மாணவர். பௌத்த தரிசனங்களையும்
நியாயவியலையும் கற்றுத்தேர்ந்த சங்கரர் பிரம்ம சூத்திரம், உபநிடதங்கள் ஆகியவற்றுக்கு எழுதிய
உரைகள் மூலமும் விவேக சூடாமணி என்ற தன் மூலநூல் வழியாகவும் அத்வைத கருத்துக்களை
முன்வைத்தார். அவற்றை பரப்ப இந்தியாமுழுக்க பயணம் செய்து தெற்கே சிருங்கேரி [கர்நாடகம்]
வடக்கே பத்ரிநாத் [ உத்தரப்பிரதேசம்] கிழக்கே பூரி[ ஒரிஸா] மேற்கே துவாரகை[ குஜராத்] ஆகிய
இடங்களில் மடங்களை உருவாக்கினார்.

சங்கரரின் கோட்பாடுகளில் மெய்ச்சொல் கொள்கையையே காலப்போக்கில் சங்கரமடங்கள் முக்கியமாக


கொண்டன.

வேத உபநிடதங்களை வலியுறுத்தும் போக்கு மெல்ல வேள்விகள், ஆலயவழிபாடு, சடங்குகள்


ஆகியவற்றுக்கு மைய இடம் தருவதாக மாறியது.

சாதிய நோக்கு முன்னால் வந்தது. வேதாந்தம் உயர்தள விவாதத்தில் மட்டுமே இடம்பெற்றது.

அத்வைதத்த்தின் தத்துவநோக்கையும் அன்றாடவாழ்வின் சடங்குவாதத்தையும் இணைக்க விரிவான


உரைகள் உருவாக்கப்பட்டன.

சங்கரர் உருவாக்கிய மடங்கள் நான்கு. சிருங்கேரி, பத்ரிநாத், பூரி, துவாரகை. இதைத்தவிர பிற்காலத்தில்
உருவான காஞ்சி மடம். இவை ஒட்டுமொத்தமாக முன்வைக்கும் தரப்பை சொல்லவரும்போது சங்கரமதம்
என்று சொல்லப்படுகிறது. அது சங்கரர் முன்வைத்த அத்வைதம் மட்டுமல்ல, கூடவே சடங்குகளும்
உண்டு.

சங்கரர் முன்வைத்தது அத்வைதத்தையே. அவர் எந்த மதத்தையும் உருவாக்கவில்லை. அத்வைதத்தை


பரப்ப அவர் உருவாக்கிய சீட பரம்பரையே சங்கர மடங்கள். அச்சங்கர மடங்கள் சங்கரர் பேரால்
உருவாக்கிய தரப்பே சங்கர மதம்.

மெய்ச்சொல் கொள்கை [சப்தபிரமணச் சித்தாந்தம், சப்த சித்தாந்தம்]


உண்மையை அறிவதற்கான அறிதளங்கள் [பிரமாணங்கள்] மூன்று. நேர்க்காட்சி , ஊகம் , முன்ன்னறிவு. [
பிரத்யட்சம் , அனுமானம், சுருதி] முதல் இரண்டுக்கும் முன்னறிவே அடிப்படையானதென்றும்
முன்னறிவென்பது ரிஷிகளால் சொல்லபட்ட ஆப்தவாக்கியங்களே என்றும் சொல்லும் வேதாந்தக்
கொள்கையே மெய்ச்சொல்கொள்கை.

முற்காலத்தில் மீமாம்சகர்கள் முன்னறிவு என்றால் சுருதி என்று பொருள் கொண்டு வேதங்களையே அது
குறிக்கிறது என்று வாதிட்டார்கள். இது சுருதிவாதம் எனப்பட்டது. அக்கொள்கையின் நீட்சிநிலைதான்
இது.

ஆனால் வேதாந்தம் முன்னோடி தத்துவஞானியரால் கற்பிக்கப்பட்ட மெய்ஞானமே முன்னறிவு என்கிறது.


அம்மெய்ஞானம் வேதசூத்திரங்களிலும் உபநிடதங்களிலும் மட்டுமே உள்ளது என்பது இதன் விரிவு.

சங்கரர் இதை தன் மெய்காண்முறையின் அடிப்படையாகக கருதுகிறார். சங்கர மதத்தின் அடிப்படையே


இதுதான் .

இதன் விதிகள்

1] வேதங்களும் உபநிடதங்களுமே மூலஞானம்

2 ] மூலஞானமே பிற அனைத்து ஞானங்களுக்கும் அடிப்படை அமைக்கிறது. மூலஞானம், நேர்காட்சி


இரண்டையும் இணைக்கும் ஊகம் என்பதே அறிதலின் அடிப்படை.

3] ஆகவே பிறகு வந்த ஞானங்கள வேத உபநிடதங்களை மறுக்க முடியாது

4] மூலஞானமும் பிற அறிதல்களும் முரண்படும்போது மூலஞானமே உண்மையாக இருக்கும்.

இந்த நிலைபாட்டுக்கும் உண்மையான அத்வைதத்துக்கும் தொடர்பு கிடையாது.

உண்மையில் அத்வைதம் முன்னர் இருந்த வேதஞானத்தின் பெரும் பகுதியை மறுத்து எழுந்ததாகும் .

வேதங்களில் உள்ள ஞானகாண்டம் என்று சொல்லப்படும் தூய அறிவை மட்டுமே முன்வைத்து அதன்
பெரும்பகுதியான சடங்குகளையும் யாகங்களையும் நிராகரித்தது.

அக்காலகட்டத்தில் மாபெரும் சக்தியாக இருந்த வைதிக மீமாம்சகர்களை எதிர்கொள்ள சங்கரர்


மெய்ச்சொல்கொள்கையை ஓர் உத்தியாக கைக்கொண்டார்.

அதாவது தன் கொள்கைக்கு வேதங்களே மூலம் என்றும் தான் சொல்வதெல்லாம் வேதங்களில்


சொல்லப்பட்டதே என்றார்.
சொல்லப்போனால் சங்கரர் வேள்விகளால் பயனில்லை என்பதே வேதத்தை ஆதாரமாகக் கொண்ட
கருத்து என வாதிட்டார்.

அவரது விரிவான கல்வியையும் தர்க்கத்தையும் வைதிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சங்கரர் உரைகளில் இவ்வாறு வேதத்தின் வாலுக்கு எதிராக தலையை கொண்டுசென்று நிறுத்தும்


முயற்சி காரணமாக அற்புதமான அறிவார்ந்த கழைக்கூத்தாட்டங்களும் நடனங்களும் உள்ளன.

இந்த உத்தி சங்கரருக்கு பெரும் செல்வாக்கை உருவாக்கியது.

சங்கரர் மறைந்ததுமே அது அத்வைதத்தை திருப்பி தாக்கியது. வைதிகர்களுக்கும் சங்கரருக்கும் உள்ள


தீர்க்கமுடியாத முரண்பாட்டை சங்கரருக்கும் மூலநூல் வேதங்களே என்ற ஒற்றைவரியை பயன்படுத்தி
இல்லாமல் செய்தார்கள் . சங்கர மதம் உருவாகியது.

அத்வைதம்

முழுமுதன்மையான பிரம்மமே உண்மை பிறவெல்லாம் மாயை என்று வாதிடும் வேதாந்த தரப்புக்கு


அத்வைதம் என்று பெயர். அ+த்வைதம் என்றால் இரண்டின்மை என்று பொருள்.

அத்வைதத்துக்கு அடிப்படைகள் ரிக் வேதம் முதலே உள்ளன.

உபநிடதங்களில் அவை கூர்மைப்பட்டன .

பாதராயணரின் பிற்கால வேதாந்தம் அவற்றை மேலும் வளர்த்து

திட்டவட்டமான கோட்பாடாக மாற்றியது.

சங்கரர் பாதராயணரில் இருந்து தொடங்கி அவரை நிராகரித்து மேலே செல்கிறார்.

பாதராயணரின் பிரம்ம சூத்திரம் பிரம்மம் தன்னிலிருந்து பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்ற கொள்கை


கொண்டது.

இது வளர்ச்சிநிலை வாதம் என்று சொல்லபடுகிறது.

சங்கரர் அப்படி பிரம்மம் தன்னை இன்னொன்றாக்கினால் பிரம்மத்தின் முழுமுதல்தன்மை


குறைவுபடுகிறது என்றார்.

ஆகவே அவர் பிரம்மம் எவ்விதத்திலும் மாற்றம் அடையாத முழுமுதன்மை என்று சொல்லி பிரபஞ்சம்
அதன் மாயத்தோற்றமே என்று வாதிட்டார்.

இது உருமயக்கவாதம் எனப்படுகிறது.

சங்கரரின் விமரிசகரான ராமானுஜாச்சாரியார் சங்கரரை மாறுவேட பௌத்தன் என்றார்.

காரணம் சங்கர வேதாந்தத்தில் அந்த அளவுக்கு பௌத்த செல்வாக்கு உண்டு என்பதே

. நாகார்ச்சுனர் முதலியோரால் முன்வைக்கப்பட்ட பௌத்த சூனியவாதம் இயற்கை என்ற முடிவற்ற


பிரவாகத்தின் கணங்களையே உண்மை என்று அறிகிறோம் என்றது .

நாம் அறிந்ததுமே உண்மை மாறிவிடுகிறது.


நாம் அறிந்தது நம்மில்தான் நிலையாக உள்ளது.

ஆகவே நம்மால் இயற்கையை அறியமுடியாது. இவ்வாறுமுற்றிலும் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட


பிரம்மாண்டவெளியே சூனியம் .

அதன் அடுத்தபடியாகிய அறிவக வாதம் [விக்ஞான வாதம்] பிரபஞ்சம் நிலைநிற்பது நாம் அறிந்து நம்
அறிவாக அகத்தில் நிறுத்தியுள்ளவற்றிலேயே என்றது.

நாம் அறிவதெல்லாம் நம் அறிவை மட்டுமே என்றது.

புறப்பிரபஞ்சம் உண்டா என்ற வினாவுக்கு அறியமுடியாது என்பதே சூனியவாதிகளின் பதில்.

புறப்பிரபஞ்சமென்பது நமது அறிதல் மட்டுமே என்பது அறிவகவாதிகளின் பதில்.

சங்கரர் இக்கோட்பாடுகளில் இருந்தே தொடங்குகிறார்.

சங்கரர் சொல்லும் பிரம்மம் முழுமுற்றான ஒருமை என்ற அளவில் பௌத்தர்கள் சொல்லும்


மகாதர்மத்துக்கு இணையானதே.

பருண்மையான புறவுலகம் என்பது இல்லை,

பருண்மை என்பதே நம் புலன்கள் உருவாக்கும் ஒருவகை அறிதல்தான் என்பது அறிவகவாதிகளின்


கோட்பாடு.

மாறாக அத்வைதம் புறவுலகம் உண்மையில் உள்ள ஒன்றுதான், ஆனால் அதன் குணங்கள், சாரங்கள்,
வடிவங்கள் எல்லாமே மாயை என்கிறது.

அதாவது பௌத்தம் அறிதலே பிரபஞ்சம் என்று சொல்லும்போது அவ்வறிதலுக்கு ஒரு சாரம் இருப்பதை
மறுக்கிறது. அத்வைதம்

அனைத்துக்கும் பிரம்மம் என்ற சாரத்தை முன்வைக்கிறது.

சங்கரர் சொல்வதென்ன என்ற வினாவுக்கு அவரது சில அடிப்படைசொற்றொடர்களை முன்வைப்பதே


சிறந்த வழியாகும்.

ஏனெனில் சங்கரவேதாந்தம் மிகசிக்கலாக பற்பல கோணங்களில் விளக்கப்பட்டுள்ளது.

அவையனைத்தும் இணைந்த ஒன்றே இன்றைய அத்வைதம். ‘

பிரம்மமே உண்மை,

பிரபஞ்சம் பொய்.

உயிர் பிரம்மம் .வேறு ஒன்றுமில்லை

‘ [ ப்ரம்ம சத்ய : ஜகன் மித்ய: ஜீவோ ப்ரம்மைவ நாபர:] இதுவே அத்வைதத்தின் சாரமாக உள்ள
சூத்திரவாக்கியம்

விவேக சூடாமணியில் சங்கரர் சொல்லும் விளக்கம் மேலும் திட்டவட்டமானது

“‘நிரந்தரமானவையும் அழியக்கூடியவையுமான பொருட்களை வேறுபடுத்தி அறிந்து கொள்வதன்


வழியாக பிரம்மம் மட்டுமே உண்மை என்றும் உலகம் மாயையே என்றும் அறிக”
மாயை

அறிபவன் அறிபொருள் ஆகிய இரு தளங்களுக்கும் இடையே உள்ள தவிர்க்க முடியாத விதி ஒன்றினால்
பொய்யறிதல் உண்மையாக தென்படும் தன்மையே மாயை .

மாயை ஆரம்பகாலம் முதலே இந்திய மெய்யியலில் இருந்துவரும் கருத்து .

சங்கரரின் அத்வைத தரிசனத்துக்கு பிறகே அது மிக விரிவான தத்துவக் கலைச்சொல்லாக ஆயிற்று.

மாயை என்ற சொல் பல தளங்களில் பயன்படுத்தப்படுகிறது.

உண்மையை மறைக்கும் திரை என்ற பொருளிலேயே அது பொதுவாக பயன்பட்டாலும் பிற்கால மதங்களில்
பிரபஞ்ச சாரமான சக்தியின் அலகிலா அழகுத்தோற்றமாக கருதப்படுவதும் உண்டு.

உதாரணம் சாக்தேய மதத்தில் மகாமாயை என்பது இறைவியின் தோற்றமேயாகும்.

அத்வைதம் கீழ்க்கண்டவகையில் பயன்படுத்துகிறது.அவை:

1] நிலையற்ற இவ்வுலகம் நிலையான ஒருமுழுமுதல்பொருளில் இருந்து உருவாகிறது.

அழியாத ஒன்றிலிருந்தே அழியும் உலகப்பொருள்கள் உருவாகின்றன.

அந்த மூலப்பொருள்இவ்வாறு மாறுவதன்மூலம் தன்னை மாற்றிக் கொள்வதோ குறைவுபடுவதோ


இல்லை.

ஏன் அது இத்தோற்றம் கொள்கிறது எப்படி தோற்றம் கொள்கிறது என்பது நம் அறிவுக்கு அப்பாற்பட்டது.

நாம் பார்ப்பது அதன் தோற்றநிலைகளை மட்டுமே.அதாவது முழுமுதல் பொருளை பிரபஞ்சமாக மயங்கி


பார்க்கும் நிலை

2] இப்பிரபஞ்சத்தின் சாரமாக உள்ள முதல்முழுமை அறிவின் எந்த எல்லைக்குள்ளும் வராத ஒன்று. அதை
அறிவின் எல்லைக்கு உள்ளே கொண்டுவரும் செயலே மாயை ஆகும்.

அதாவது முழுமுதல் பொருளை அதன் முழுமுதல்தன்மையை குறைத்து அணுகும் நிலை

3] முழுமுதல் சக்தியானது தன்னை பலவாறாக பிரிந்தும் வளர்ந்தும்தான் நிகழ்த்திக் கொள்ள முடியும்.

ஆகவே பிரபஞ்சம் அது தன்னை நிகழ்த்திக் கொள்ளும் முறை. அதாவது மாயை என்பது
முழுமுதன்மையின் வல்லமை அல்லது விளையாட்டு .

இந்த தளத்தில் இது இரண்டு முறையில் செயல்படுகிறது

ஒன்று திரைமாயை [ஆவரணம்]

இன்னொன்று உருமாயை [ விக்ஷேபம்]

முதல்வகை மாயை உள்ளதை மறைக்கிறது.

இரண்டாம் வகை மாயை இல்லாததை உண்டுபண்ணிக் காட்டுகிறது


4]இயற்கை என்ற வடிவில் நம் முன் முக்குணம் கொண்டு நிற்பதை அத்வைதிகள் மாயை என்கிறார்கள்

5] உயிர்க்குலங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் உணர்ச்சிகள் மற்றும் செயல்களினாலான வலை மாயை


எனப்படுகிறது.

மாயாவாதம்

அறிவ

தெல்லாம் மாயையே என்று சொல்லும் தத்துவக் கோட்பாடுதான் மாயாவாதம். மாயாவாதம் மூன்று தளம்
கொண்டது

1 ] மனிதன் அறிவது முழுமையான உண்மையை அல்ல. அவனது அறிவுக்கு அப்பால்; அவனறியாத


அல்லது அறியமுடியாத ஒன்று உள்ளது அதன் சில தளங்களையே அவன் அறிகிறான்[ பண்டை
வேதாந்தம்]

2 மனிதனின் அறிவு தன்னளவில் உண்மையை குறைப்படுத்தி மட்டுமே அறியும் இயல்புகொண்டது.


ஆகவே அவன் தன் அறிவால் உணரக்கூடியதெல்லாமே அவனால் திரிக்கப்பட்ட உண்மையையே [ பிற்கால
பௌத்தம்]

3] மனிதன் அறிவதெல்லாம் அவனது மனமயக்கமே. அவன் அறிவதற்கு அப்பால் உள்ள முழுமுதல்


உண்மையின் மாயத்தோற்றமே அவனது அறிதல்கள் [ அத்வைத வேதாந்தம்]

மாயவாதம் எல்லா சிந்தனைமரபுகளிலும் ஏதோ ஒருவடிவில் ஆதிகாலம் முதலே உள்ளது.

ரிக் வேதத்தில் மாயவாதத்தின் அடிப்படையை அமைக்கக் கூடிய சிந்தனைகள் நிறையவே உள்ளன.

நாம் பிரபஞ்சமாக காணும் இந்த பன்மைத்தோற்றமானது இதற்கு அப்பாற்பட்ட ஓர் ஒருமையின்


வெளிவிளக்கம் அல்லது தோற்றநிலையே என ரிக்வேதம் மீண்டும் மீண்டும் சொல்கிறது.

‘பல இடங்களிலும் எரியும் அக்கினி ஒன்றே.

எங்கும் ஒளிரும் சூரியனும் ஒன்றே.

அனைத்தையும் வெளிப்படுத்தும் புலரியும் ஒன்றே.

அந்த ஒன்றே இவையெல்லாம் ‘ [ ரிக் வேதம்] .

உபநிடதங்களில் இத்தரிசனம் வளர்ச்சி அடைந்தது.’அது நீயேதான்'[ சாந்தோக்ய உபநிடதம்] போன்ற


புகழ் பெற்ற ஆப்தவாக்கியங்கள் வெளிப்படுவது இப்பார்வையே.

‘அப்பால் உள்ள ஒன்று’ என்ற பார்வை வலுப்படும்தோறும் இப்பிரபஞ்சம் அதன் தோற்றம் மட்டுமே என்ற
கோணமும் வளர்ந்தது.
உபநிடதக் கருத்துக்களை தொகுத்து வேதாந்தம் என்ற அமைப்பை உருவாக்கிய பாதராயணர் தனது
பிரம்ம சூத்திரங்களில் இப்பார்வையை மேலும் வளர்ததெ
் டுத்தார்.

இயற்கை என்பது பிரம்மமே [பிரம்ம சூத்திரம்] என்பது அவரது கூற்று.

பிரம்மத்திலிருந்து பிறந்து பிரம்மத்தில் மறையும் ஒன்றுதான் பிரபஞ்சம்.

பிரம்மமே இயற்கையாக நம்மால் உணரப்படுகிறது.

அதன் மீது தன் விளக்கத்தை கூறியபடித்தான் சங்கரர் தனது அத்வைத தரிசனத்தை முன்வைக்கிறார்.

சங்கரர் தன் மாயாவாதத்ததை பௌத்த தரிசனங்களுடன் வேதாந்தத்தை இணைப்பதன் மூலமே


உருவாக்கினார்.

பண்டைவேதாந்தம் பிரம்மத்தின் துலங்குநிலை , விரிவு நிலை என்றே பிரபஞ்சத்தைக் கருதியது.

பிரம்மம் வேறு பிரபஞ்சம் வேறுதான்.

பிரபஞ்சத்தின் மூலகாரணம்தான் பிரம்மம்.

அத்வைதமோ பிரம்மம் மட்டுமே உள்ளது என்றும் அதை பிரபஞ்சமாக எண்ணி மயங்குவது ஜீவாத்மாவின்
அவித்தை அல்லது அறியாமையினால்தான் என்றும் சொல்கிறார்.

இக்கருத்து பிற்கால பௌத்த தரிசனங்களான சூனியவாதம், அறிவகவாதம் ஆகியவற்றின் நீட்சியாக


பெறப்பட்டது.

சூனியவாதத்தின்படி நாம் இயற்கை என்ற முடிவற்ற பிரவாகத்தின் கணங்களையே உண்மை என்று


அறிகிறோம்.

நாம் அறிந்ததுமே உண்மை மாறிவிடுகிறது.

நாம் அறிந்தது நம்மில்தான் நிலையாக உள்ளது. ஆகவே நம்மால் இயற்கையை அறியமுடியாது.


இவ்வாறுமுற்றிலும் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட பிரம்மாண்டவெளியே சூனியம் .

அறிவக வாதம் பிரபஞ்சம் நிலைநிற்பது நாம் அறிந்து நம் அறிவாக அகத்தில் நிறுத்தியுள்ளவற்றிலேயே
என்றது.

நாம் அறிவதெல்லாம் நம் அறிவை மட்டுமே என்றது.

புறப்பிரபஞ்சம் உண்டா என்ற வினாவுக்கு அறியமுடியாது என்பதே சூனியவாதிகளின் பதில்.

புறப்பிரபஞமென்பது நமது அறிதல் மட்டுமே என்பது அறிவகவாதிகளின் பதில். நாகார்ச்சுனர்


சூனியவாதத்தையும் திக்நாகர் அறிவகவாதததையும் முன்வைத்தனர்.

இவர்களை மறுத்து சங்கரர் புறவுலகம் என்பது நம் அறிவால் உருவாவதோ நம் அறிதலோ அல்ல அது
உண்மையில் உள்ளது என்று வாதிட்டார்.

அது பிரம்மமேதான்.

ஆனால் அதில் நாம் அறியும் வடிவம், குணம்,சாரம் அனைத்துமே நமது மனப்பிரமைகளே .

நம் அறியாமையின் பொலிவுகள் அவை.

அவை விலகுகையில் அறிபவன், அறிபொருள், அறிவு மூன்றும் ஒன்றான நிலை எஞ்சுகிறது.


இதுவே சங்கர மாயாவாதம்.

சங்கரர் பார்வையில் பிரம்மம் மட்டுமே உள்ளது.

அது சத்து.

உலகம் பிரம்மமும் நம் மாயையும் ஒன்றான வடிவம்

அது சத்தும் அசத்தும் கலந்தது.

அவ்வுலகம் பற்றி நாம் கொள்ளும் பலவகையான கற்பனைகள் மாயை அல்லது அசத்து.

மாயாவாதத்தின் மூன்று நிலைகளில் சங்கரரின் அத்வைதமே சரியான மாயாவாதம் என்று


சொல்லப்படுகிறது.

பிற மாயாவாதங்களைப் போலன்றி நாம் அறிபவை முற்றாகவே பொய்தத


் ோற்றங்களே என்று வாதிடுவது
அதுதான். சங்கர மாயாவாதம்

இந்தியமெய்ஞான மரபில் மிக ஆழமாக வேரூன்றியது. சங்கரர் தன் கருத்துக்களுக்கு உபநிடதங்களை


மேற்கொள் காட்டினாலும் ஆப்தவாக்கியங்களை வெகுவாக திரித்து பொருள்கொண்டே அதை
நிகழ்த்துகிறார் என்பது இந்தியவியலாலர்களின் கருத்தாகும்.

மோனியர் வில்லியம்ஸ் [Monier Williams ]தன் இந்திய ஞானம் [Indian Wisdom] என்ற நூலில் ‘இந்திய
சிந்தனையில் வேரோடியுள்ள மாயாவாதத்துக்கு உண்மையில் உபநிடதங்களில் ஆதாரம் இல்லை.

அது பௌத்த இறக்குமதியே’ என்று சொல்கிறார்.

மாயாவாதம் பிற்கால தத்துவ ஞானியரால் மிகத்தீவிரமாக மறுக்கப்பட்டது.

அதை முற்றாக மறுத்தவர்கள் பாஸ்கர ஆச்சாரியார் ராமானுஜர், மத்வர், விக்ஞான பிக்ஷ¤ ஆகியோர்.

சைவசித்தாந்தமும் பிற சைவஞான மரபுகளும் அதை ஏற்கவில்லை.

ஆனால் சற்று உருமாறிய நிலைகளில் மாயாவாதம் எல்லா சிந்தனைகளிலும் காணப்படுகிறது.


மாயாவாதம் பிற்கால மதங்களில் காணப்படும் விதங்கள் இவை:

1] நாம் காணும் பிரபஞ்சம் உண்மையல்ல, அல்லது நாம் அறியுமளவுக்கு உண்மையல்ல, அல்லது


அறிவதற்கு அப்பால்தான் அதன் சாரம் உள்ளது

2] நாம் காணும் இப்பிரபஞ்சம் ஒரு முழுமுதல் சக்தியின் விளையாட்டு [லீலை] அல்லது அதன்
வெளிப்பாட்டு நிலை [ பிரகாசம்] . அந்த முழுமுதன்மை இந்த பிரபஞ்சத்தோற்றம் மூலம் தன்னை நமக்குக்
காட்டுகிறது. நமக்கு தன்னை காட்டும் நோக்குடனேயே இது இவ்வாறு உள்ளது

3] முக்தி அல்லது விடுதல் பெறும்போது இப்பிரபஞ்சம் திரைவிலகி வேறு ஒன்று தெரியும்.

மாயாவாதம் மதம்சார்ந்ததாக கருதப்படுவதனால் கோட்பாட்டு ரீதியாக அது நவீன காலகட்டத்தில்


விவாதிக்கப்படுவது இல்லை.

சுப்ரமணிய பாரதி மாயாவாதத்தை கண்டித்திருக்கிறார்.


ஆனால் ஓர் அடிப்படை மனநிலையாக மாயாவாதம் எப்போதுமே இலக்கியத்தில் உள்ளது .

கனவு நனவு ஆகியவற்றுக்கிடையேயான இடைவெளியில் இயங்கும் புனைகதைகளில் மாயாவாதம்


பலசமயம் முகம் காட்டுகிறது .

மௌனி, லா.ச.ராமாமிர்தம் , கோணங்கி ஆகியோரின் கதைகள் உதாரணம்.

‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ என்ற மௌனியின் வரி மாயாவாதத்தின் இலக்கிய


வெளிப்பாட்டுக்கு சிறந்த உதாரணமாகும்

அத்வைதம் ஒரு மாயாவாதம்.

ஆனால் மாயாவாதம் என்பது அத்வைதம் உள்ளிட்ட பல சிந்தனைகளை தன்னுள் கொண்ட ஒரு பொது
தத்துவநோக்கு.

ப்ரஹ்மம் அவித்யையோடு சேர்ந்திருக்கிறபோது ஈச்வரனாகத் தெரிகிறதென்றும், அந்தஃகரணத்தோடு


சேர்ந்திருக்கும்போது ஜீவனாகத் தெரிகிறதென்றும் சொல்லியிருக்கிறது. அவித்யை என்பதுதான்
மாயை. அந்தஃகரணம் என்பது நாம் பொதுவில் ‘மனஸ்’ என்பது. அதன் அங்கங்கள் மாதிரியான சித்தம்,
புத்தி, அஹங்காரம் ஆகியவற்றோடுகூட இருப்பது. (இந்த விஷயம் முன்னேயே பார்தத ் ோம்.) அதாவது
சின்னச் சின்ன மனஸ்களில் கட்டுப்பட்டுக் குறுகிக்கிடப்பவன் ஜீவன். இப்படி ஆத்மாவை
குறுக்கினமாதிரி காட்டும் மாயாசக்தியே ஈச்வரன். இருக்கிற ஒரே ஸத்ய வஸ்துவான ஆத்மாவை
மறைத்து, அதாவது இல்லாத மாதிரி ஆக்கி, முடிவிலே ஸத்யத்வமே இல்லாத பல ஜீவர்களை இருக்கிற
மாதிரிக் காட்டும் சக்தியாதலால் அதற்கு மாயை என்று பேர். அதையேதான் அஞ்ஞானம் என்பது.
அஞ்ஞானத்துக்கே இன்னொரு பேர்தான் அவித்யா. (இவற்றுக்குள்ளேயும் ஒன்றுக்கொன்று கொஞ்சம்
வித்யாஸம் இருப்பதாக ஒரு அபிப்ராயமிருந்தாலும் இங்கே நான் பொதுக் கருத்தைச் சொல்கிறேன்.)
ஸத்யத்தை அறிவதே ஞானம் அல்லது வித்யா. ‘வித்’ என்றாலும் ஞானம் என்பது போலவே அறிவதுதான்.
மெய்யறிவே வித்யா. ஸத்ய ஞானமாயில்லாமல், இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாவும்
தப்பாக அறியப் பண்ணுவதால் மாயைக்கு அவித்யா என்று பேர். ஆனாலும் இப்படி மாயா சக்தியுடன்
சேர்ந்திருக்கிற நிலையிலுள்ள ஈச்வரன் அவனைப் பொறுத்தமட்டில் அஞ்ஞானியாக இல்லை.
‘ஈசாந:ஸர்வ வித்யாநாம்’ என்பதாக அவனை வித்யைகளுக்கெல்லாமும் ஈச்வரனாக
சொல்லியிருக்கிறது. நம்மை மாயையால் அஞ்ஞானியாக்கினாலும் அவன் அப்படியில்லை. மாயையை
அவன் வைத்துக் கொண்டிருக்கிறானாயினும், தானே அதில் கட்டுப்படாமல் வைத்துக்
கொண்டிருக்கிறான். நம்மை மட்டும் அந்த மாயா சக்தியினால் கண்டம் கண்டமாகக் குறுக்குகிற அந்தக்
கரணத்தோடு சேர்த்துக் கட்டிப்போட்டிருக்கிறான். இதனால் நாம் ஒன்று, இப்படிக் கட்டப்பட்டு ஜீவர்களாக
மாத்திரம் இருக்கிறோம்; அல்லது, அவன் கட்டவிழ்த்து விட்டுத் தனக்கு உள்ளே அனுப்பும்போது
அஞ்ஞானம் போய் ஆத்மாவை மாத்திரம் இருக்கிறோம். அவனோ த்வைத மாயையிலே கட்டுப்பட்ட மாதிரி
ஈச்வரனாக ஜகத் வ்யாபாரம் செய்யும்போதே ஆத்மஞானியாகவுமிருக்கிறான். அவனை ‘லிமிட்’
பண்ணுகிற மாதிரி இருப்பது மாயை என்கிற அவித்யைதான். ஜீவனை லிமிட் பண்ணுவதோ அந்த
மாயையிலிருந்து விளைந்த அந்தஃகரணம். இது ஒவ்வொருத்தருக்கும் ஒரு தினுஸாக, ‘தனி மனஸ்’
என்பதாக, ஆகி அவர்களை ரெம்பவும் சின்னதாக குறுக்கிவிடுகிறது. மாயை என்பது ஜெனரல்.
இத்தனை அந்தஃகரணத்துக்கும் பொதுவானது அது. ஸத்ய ஸ்வரூபத்தை அத்தனை ஜீவர்களுக்கும்
மறைக்கும் பொதுவான சக்தியாயிருப்பது மாயை. இப்படி மெய்யறிவை மறைப்பதால் இதை ‘அவித்யை’
என்றாலும், இதைக்கொண்டு ஜகத் வ்யாபாரத்தை நடத்தும் ஈச்வரனோ அவனைப் பொறுத்தமட்டில்
இதனால் தன்னுடைய மெய்யறிவை இழக்காமலே இருக்கிறான்.

இதைத்தான் த்ருஷ்டாந்தம் காட்டிப் புரியவைக்கும் போது, ‘பாம்பின் வாய்க்குள்ளேயே விஷப்பல்


இருந்தாலும் விஷத்தால் அது பாதிக்கப்படுவதில்லை. அதனிடம் கடிபடுபவர்களை மட்டுமே விஷம்
தாக்குகிறது. அதே மாதிரி, ‘மாயி’யான, மாயாவியான ஈச்வரனை அவனுடைய மாயை பாதிக்காமல்,
அவன் அதை யாரைக் குறித்து ப்ரயோகிக்கிறானோ அந்த ஜீவ லோகத்தை மட்டும் பாதிக்கிறது’ என்று
சொல்கிறார்கள். மாஜிக் பண்ணுகிறவன், தான் மாயா ஸ்ருஷ்டியாகப் பண்ணும் காட்சிகளை மற்றவர்கள்
நிஜமென்று நம்பும்படியாக ஏமாற்றச் செய்கிறானே தவிர, தானே அவற்றை நிஜமாக நினைத்து ஏமாற
மாட்டானால்லவா? இப்படித்தான் மாயா ஜகத் ஸ்ருஷ்டிக்காரனான ஈச்வரனும் என்கிறார்கள்.

‘உபாதி’கள் என்பதான லிமிட் பண்ணும் கண்டிஷன்கள் எதனாலும் பாதிக்கப்படாத ஐச்வர்யத்தை


உடையவனுக்குத்தான் ‘ஈச்வரன்’ என்று பேர் என்றே ஆசார்யாள் (விஷ்ணு) ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில்
‘ஈச்வர’ நாமாவுக்கு பாஷ்யம் பண்ணும்போது விளக்கியிருக்கிறார். ‘ஐச்வர்யம்’ என்றால் ஈச்வரனுடைய
உடைமை, அவனுடைய தன்மை என்று அர்த்தம். ஆட்சி செய்கிற சக்தி உள்ளவன்தான் ஈச்வரன். ‘ஈச்’
என்ற தாதுவுக்கு ரூல் பண்ணுவது, கவர்ன் பண்ணுவது, கமான்ட் பண்ணுவது என்று அர்த்தம். இப்படி
மற்றவற்றை அடக்கி ஆள்பவன் மாயை தன்னையே அடக்கி ஆளவிட்டுவிடுபவனாக இருப்பானா?
மாயையோடு கூடியிருந்தாலும் அந்த மாயையையும் ஈச்வரன் அடக்கி ஆள்கிறான். ஆகையால் அது
தன்னிடம் அதன் ஸாமர்த்யத்தைக் காட்டி ஒரு தப்பு ‘நானை’த் தோன்றும்படிச் செய்ய விட்டுவிட
மாட்டான்.

‘ஜீவன் ஆத்மாவைத் தெரிந்துகொள்ளாமல் ஜீவபாவம் வேறாகவும் ஆத்ம ஸ்திதி வேறாகவும் இருக்கிறது;


அதே ஸமயம் அவை ஸம்பந்தமே இல்லாதவையும் அல்ல. ஆகையால்தான் ‘ஜீவாத்மா’ என்ற வார்த்தை
ஏற்பட்டது’ என்று பார்த்தோம். ஆனால் ஈச்வரன் எப்போதும் ஆத்மாவை அறிந்தவனாக ஞான
ஸ்திதியிலேயே இருப்பதால் ஈச்வர பாவம், ஆத்மா என்பதை ஸம்பந்தம் மட்டுமுடைய வேறு வேறான
இரண்டு அல்ல என்று தெரிகிறது. ஈச்வரனேதான் ஆத்மாவும், இரண்டையும் பிரித்து
ஸம்பந்தப்படுத்தப்படாது. அதனாலேயே ‘ஈச்வராத்மா’ என்று சொல்வதில்லை. ‘பரமாத்மா’ என்றே
சொல்கிறோம் என்றும் பார்த்தோம்.

‘அப்போது ‘பரமாத்மா’ என்று ஏன் சொல்லவேண்டும்? வெறுமனே ஆத்மா என்றால் போதாதா?’ என்றால்,
போதாதுதான். ஆத்மா என்று மாத்திரம் சொன்னால் ஜீவர்களான நம்முடைய நினைப்பில் அப்போது
ஜகத்தும் ஜகத் வ்யாபாரமான ஈச்வரனின் கார்யமும் வராமல் போய்விடும். ஈச்வரனும் அற்றுப்போன
நிர்குண தத்வத்தையே ஆத்மா என்று நினைப்போம். அதனால் ‘பரம’ என்று அடைமொழி போட்டது.

‘பரம’ அல்லது ‘பர’ என்று ஏன் ஆத்மாவுக்கு முன்னே போட்டதென்றால், ஜீவனைவிடப் பரம ச்ரேஷ்டமான
ஸ்தானத்தில் ஈச்வரன் இருப்பதால் அப்படிப் போட்டிருக்கிறது. ஆத்மாவாக மாத்திரம் அவன் இல்லை
என்பதால் அவனை ஆத்மா என்று மட்டும் சொல்லமுடியாது. அவனுடைய நிலையிலிருந்து கொண்டு
ஈச்வரனாகப் பார்க்கும் போது அவனுக்கு ஆத்மா வேறாக இல்லாததால் ஈச்வராத்மா என்றும்
சொல்லமுடியாது. ஆனால் நம்முடைய நிலையிலிருந்து பார்க்கும்போது, ஏக ஆத்மாவே நம்மாதிரி
அஞ்ஞானியாகவும், அல்ப சக்தனாகவும் இல்லாமல் நம்மை விட மிக உயர்வான, உத்தமமான
ஸர்வஜ்ஞனாகவும், ஸர்வசக்தனாகவும் ஈச்வர வேஷம் போட்டுக்கொண்டிருக்கும் போது
அப்படியிருப்பவனை அவனுடைய அந்த உயர்வு தோன்றும்படியாகப் பரமாத்மா என்று
சொல்லவேண்டியதாகிறது.

இது அத்வைதிகளின் நோக்கிலே சொன்னது. ஒரே ப்ரஹ்மம், ஒரே ஆத்மா என்பவர்கள் ஏன் பரமாத்மா,
ஜீவாத்மா என்று இரண்டு சொல்லவேண்டும் என்பதற்கு இவ்வளவு சொல்லவேண்டியதாயிற்று. உச்சி
அத்வைதத்தில் இல்லாமற் போகும் அநேக இரட்டைகளை வ்யவஹார நோக்கில் (empirical existence
என்கிறார்களே, அந்த நடைமுறை லோகத்தின் கோணத்திலிருந்து) அத்வைதம் ஒப்புக்கொள்கிறபோது
சொல்கிற ஒரு இரட்டைதான் இப்படிப் பரமாத்மா, ஜீவாத்மா என்பதும்.

இந்த அஞ்ஞானத்தின் ஸ்வரூப லக்ஷணம் எப்படிப்பட்டது?

அது சத்துமல்ல; அசத்துமல்ல. அவயவம் உள்ளதல்ல; அவயவம் இல்லாததுமல்ல. இவ்விரண்டும்


சேர்ந்ததுமல்ல. சேராததுமல்ல.

அது அநிர்வாச்சியம். அதாவது வாக்கினால் சொல்லத் தகுந்ததல்லாதது. (சொல்ல முடியாத ஒன்று

stage 6

முதலாம்-தலையாய

கொள்கை

ப்ரஹ்மம் மட்டுமே உண்மை பொருள்.

அது இரண்டல்ல.

ஆனால் இரண்டு

1.நிர்குண ப்ரஹ்மம்

-பூர்ண நிலை ப்ரஹ்மம்-நிர்குண,நிராகார,நிரவயவ

2.ஸகுணப்ரஹ்மம்-

குறைபாடானது(மாயை கூடியது)

ஸத்-சித்-ஆனந்தம்-நிர்குண ப்ரஹ்மம்

இதுவே ஜுவனாக உலகமாக தோற்றம் அளிக்கிறது.(காரணம் நிர்குண ப்ரம்மத்தை பிடித்த மாயை)


ஆனால் மாயை ப்ரஹ்மத்தை பாதிக்காது.

ஆனால் மாயை மறைப்பதால் யாருக்கும் ப்ரஹ்மம் தெரிவதில்லை.

ப்ரஹ்மம் முக்காலத்திலும் இருக்கும்

1 உண்மை இருப்பு

2 ஒளி

3 ஆனந்தம்

3 ம் ப்ரஹ்மத்தை விட்டு பிரிவதில்லை

வேதம் ப்ரமாணம் அது ப்ரஹ்மத்திலிருந்தே வருகிறது.

ஆகம ப்ரமாணத்தால் ப்ரஹ்மம் உண்மை பொருள்.

ப்ரஹ்மநிலை

1.நிலை

பரமார்தத
் ிக ஸத்

ப்ரஹ்மம் எந்த ஞானத்தாலும் இல்லாமல் போகாது.எந்த ஞானத்தாலும் அழிக்கமுடியாது.

முக்காலமும் இருப்பது

2 நிலை

வ்யாவஹாரிக ஸத்

ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் தோன்றுவது

மாய சக்தியை உடையது ப்ரஹ்மம்.


மாயையால் உலகத்தை தோன்ற செய்பவன் ப்ரஹ்மம்.

ஆவரண சக்தியால் மறைக்கபடுவது ப்ரஹ்மம்.

ப்ரஹ்மத்தின் உண்மையான ஞானத்தால் நேரடி அனுபவமாக

அபரோக்ஷ அநுபூதியாக உணரப்படும்.

3 நிலை

ப்ரதிபாதிக ஸத்

ப்ரஹ்மம் தவிர வேறு பொருளில் உண்டாவது

நேரடியாக ப்ரஹ்மத்தில் இது உண்டாவதில்லை

அறிவில் மயக்கம் எனப்படும்

ப்ரஹ்ம தத்துவ அறிவன்றி வேறு ஞானத்தால் போகாது.

ஆவரண சக்தி விக்ஷேப சக்தி

இரண்டும் ப்ரஹ்மத்திற்கு லீலை

[9:18 AM, 6/16/2021] avsairtel: stage-5

மூன்றாம் கொள்கை

ப்ரஹ்மத்தின் பகுதிகளே ஆன்மாக்கள் அன்றி


உண்மை இல்லை
அகங்காரத்தோடும், சிற்றறிவோடும் இருப்பது ஜீவன்.

ஸ்தூல உடம்பில் அபிமானம் உடையவனும், ஜீவன் என்று அழைக்கப்படுபவனுமாக உள்ளவன் பிரம்மத்தின்


பிரதிபிம்பம் ஆவான்.

அந்த ஜீவன் (அவித்தையினால்) அறியாமையினால் ஈஸ்வரனை, தனக்கு வேறானதாக அறிகிறான்.

அறியாமை உபாதியோடு கூடிய ஆத்மா ஜீவன் எனப்படுகிறான்.

அதாவது ஒரு ஆன்மா மட்டுமே உண்மை.அதுவே ப்ரஹ்மம்.

இங்கு ப்ரஹ்மம் தவிர தோற்றம் தரும் ஆன்மாக்கள் பின்வரும் இரு வாதங்களால் விளக்கபடுகின்றன.

பிரதிபிம்ப வாதம்

சந்திரன்-நீர் நிலை தோற்றங்கள்

அவச்சேத வாதம்

ஒரே ஒளி (சந்திர ஒளி).........அடைப்பு, தடை இவைகளால்


வெவ்வேறாக காணப்படும்

வெள்ளை மலரை சிவப்பு கண்ணாடியில் பார்ப்பது.....ஆன்மாக்கள் தோற்றம்.

மலர் உள்ள பொருள்.

ஆனால் இங்கு குணாதிசயமே


மாறுபடுகிறது.

இவ…
[9:20 AM, 6/16/2021] avsairtel: good morning medan
👆 submitted for additions or corrections if any.

reg

avs
[11:59 AM, 6/16/2021] avsairtel: stage-5b

stage 5 continuity

ஜீவ ஈஸ்வர ஐக்யம்

உலகப் படைப்புப் பற்றி கூறிய பிறகு ஜீவன், ஈஸ்வரன் ஆகியவற்றின் படைப்பு பற்றி பேசப்படுகிறது.
ஸ்தூல உடம்பில் அபிமானம் உடையவனும், ஜீவன் என்று அழைக்கப்படுபவனுமாக உள்ளவன் பிரம்மத்தின்
பிரதிபிம்பம் ஆவான். \
அந்த ஜீவன் (அவித்தையினால்) அறியாமையினால் ஈஸ்வரனை, தனக்கு வேறானதாக அறிகிறான்.
அறியாமை உபாதியோடு கூடிய ஆத்மா ஜீவன் எனப்படுகிறான்.
மாயை உபாதியோடு கூடிய ஆத்மா ஈஸ்வரன் எனப்படுகிறான்.
ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு ஈஸ்வரன் மாயை ஆள்கிறான், ஜீவன் மாயைக்கு
ஆட்படுகிறான்.

உபாதி வேறுபாட்டால் தோன்றிய ஜீவன், ஈஸ்வரன் என்னும் வேறுபாடுகள் உள்ளவரை பிறப்பு, இறப்பு
முதலான வடிவிலான சம்சாரம் அழிவதில்லை.
எனவே ஜீவன் ஈஸ்வரன் என்கிற பேத புத்தியை விட்டுவிடவேண்டும் என்கிறார் ஆதிசங்கரர்.

அகங்காரத்தோடும், சிற்றறிவோடும் இருப்பது ஜீவன்,

அகங்காரம் அற்றவனாகவும் பேரறிவு பெற்றவனாகவும் இருப்பது ஈஸ்வரன்.

முரண் இவ்வாறு இருக்க

மகாவாக்கியமான
“நீ அதுவாக இருக்கிறார்” (தத்துவமசி) என்பதை எவ்வாறு வேறுபாடற்ற ஒன்றாகப் புரிந்து கொள்ள
முடிவும் என்ற கேள்வி இயல்பாய் தோன்றும்.

அதற்கு ஆதிசங்கரர் விளக்கம் அளிக்கிறார், “நீ அதுவாக இருக்கிறார்” என்பதில் “நீ” என்பது என்பது
ஜீவனையும் “

அது” என்பது ஈஸ்வரனையும் குறிக்கும் என்றால்

இரண்டல்ல என்கிற அத்வைத விளக்கம் வராது.

அதனால் ஆதிசங்கரர்
வாச்யார்த்தம்,
லட்சியார்த்தம் என்ற அணுகுமுறையின் மூலம் விளக்கி ஐக்கியத்தை ஏற்படுத்துகிறார்.

வாச்யார்த்தம் என்பது நேரடிப் பொருளைக் குறிக்கும்.

நேரடிப் பொருளில் முரண்பாடு காணப்பட்டால் அதனை நீக்கி பொருள்கொள்வது லட்சியார்த்தம்


எனப்படும்.

அதாவது முரண்படாத வகையில் அர்த்தப்படுத்துவது லட்சியார்தத


் ம்.

“நீ அதுவாக இருக்கிறார்” என்பதில்

“நீ” என்ற சொல்லின் லட்சியார்த்தம் உபாதிகள் அற்ற சுத்த சைதன்யமாகிய ஆத்மா என்றும்,

“அது” என்ற சொல்லின் லட்சியார்தத


் ம் உபாதிகள் அற்ற சுத்த சைதன்யமாகிய பிரம்மம் என்றும் பொருள்
கொள்ளப்படுகிறது.

இந்த லட்சியார்த்தத்தில் இரண்டிற்கும் வேறுபாடு காணப்படாததால் ஐக்கியம் சாத்தியமாகிறது.

You might also like