You are on page 1of 42

[12:54 a.m.

, 2019-12-07] +91 97919 61706: ஒருவரின் கல்வியை பற்றி தெரிந்து கொள்ள


நான்காம் பாவம் மற்றும் புதன் இவற்றை பார்க்க வேண்டும் மற்றும்
நான்காம் பாவம் முதல் டிகிரி படிப்பையும் ஐந்தாம் பாவம் இரண்டாவது
டிகிரியை குறிக்கும்

நான்காம் அதிபதி பலம் இழந்தால் முதல் டிகிரி படிக்க முடியாது

அதே போல் ஐந்தாம் அதிபதி பலம் இழந்தால் இரண்டாவது டிகிரி படிக்க


முடியாது

நான்காம் அதிபதி சனி சாரத்தில் இருந்தாலும்

ஐந்தாம் அதிபதி செவ்வாய் சாரத்தில் இருந்தாலும்

இரண்டாவது டிகிரி படிக்க தடை இருக்கும்

நான்காம் அதிபதி

ஐந்தாம் அதிபதி பலம் இழந்தால்

டிகிரி படிக்க முடியாது

ஆரம்ப கல்விக்கு புதனை

உயர் கல்விக்கு குருவையும் பார்க்க வேண்டும்

இவர்களின் பலம் மிக முக்கியம்

ராகு வேற்று மொழி படிக்க முக்கியமான கிரகம்


சூரியன் சந்திரன் குரு புதன் செவ்வாய் சுக்கிரன் இவர்கள்

புதன் நட்சத்திரத்தில் இல்லை என்றாலும் படிப்பு தடை இருக்கும்

மாந்தி சனி கேது இவர்கள் புதன் நட்சத்திரத்தில் இருந்தாலும் படிப்பு தடை


இருக்கும்

நான்காம் அதிபதி பலம் பெற்று இருந்தால் நல்ல முறையில் படித்து வெற்றி


பெறுவார்கள்

[12:54 a.m., 2019-12-07] +91 97919 61706: ஜாதகர் பேச முடியாதவர்

ஆனால் புத்திசாலி

காரணம் ?*

1. இரண்டாம் வடு
ீ வாக்கு ஸ்தானம். வாக்கு ஸ்தானாதிபதி சூரியன் 12 ல்
ஆட்சி பெற்ற புதனுடன்.

விதி : இரண்டாம் வட்டு


ீ அதிபதியும் புதனும் கூடி

8 அல்லது 12 ல் இருந்தால் ஜாதகர் ஊமை.

சூரியன் 12 ம் இடத்தில் இருந்தால், உடல் உறுப்புக்களில் ஒன்று ஊனமாக


அல்லது சேதமாக இருக்கும். அது தெரியும்படியும் இருக்கும் அல்லது
தெரியாதவிதமாக உடல் உள்ளேயும் இருக்கலாம்.

2. லக்னாதிபதி சந்திரன் பாதகாதிபதி சுக்ரனுடன் சேர்க்கை.


3. லக்கனம் பாபகர்தாரி யோகத்தில். ஜாதகருக்கு ஏதேனும் குறை இருந்தாக
வேண்டும்.

4. லக்னாதிபதி சந்திரனுக்கு எட்டாம் அதிபதி சனியின் பார்வை.

5. லக்னாதிபதிக்கும் பாதகாதிபதிக்கும் வடு


ீ கொடுத்த 10 ம் அதிபதி செவ்வாய்
2 ல் அமர்ந்து 8 ம் அதிபதி சனியின் பார்வையை பெறுகிறார்.

பத்திசாலியாக இருப்பதற்கு

புத்திகாரகன் புதன் ஆட்சி பெற்று சூரியனுடன்

சேர்ந்து புதாஆதித்யா யோகம் உள்ளது.

4 ம் இடத்திற்கு லக்னாதிபதி சந்திரன் மற்றும் 4 ம் இடத்து அதிபதி

சுக்ரனின் பார்வை.

கேது லக்கனத்திற்கு 11 ல் இருப்பது நல்ல ஞானத்தைக் கொடுக்கும்

5 ம் வட்டை
ீ 5 ம் வட்டதிபதி
ீ பார்ப்பது நுண்ணறிவை

கொடுக்கும்.

9 ம் இடத்திற்கு அந்த வட்டதிபதி


ீ குருவின் பார்வை.
முயற்சி ஸ்தானத்தில் குரு

சியாமளா நவராத்திரி 25 ம் தேதி ஜனவரி 2020 தொடங்கி 9 தினங்கள்.இது


குஹ்ய நவராத்திரி.

நவராத்திரி வகைகள்.

★வராஹி நவராத்ரி - ஆஷாட சுக்ல ப்ரதமை

★ஷரன்நவராத்ரி - ஆஷ்வின சுக்ல ப்ரதமை

★ஷ்யாமளா நவராத்ரி - மாக சுக்ல ப்ரதமை

★தேவநவராத்ரி
ீ - சைத்ர சுக்ல ப்ரதமை.

ஸ்ரீலலிதா மகா திரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின்


அதிதேவதையே சியாமளா தேவி.

இவள் அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம்


என்னும் வில்லைக் கொண்டு அறிவு என்னும் தத்துவம்
கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால்தான்
மனதையும் அறிவையும் எளிதில் அம்பிகை யிடம் லயிக்கச் செய்ய முடியும்.

ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் மந்திரியாகவும் விளங்குவதால், சியாமளா


தேவிக்கு மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. எனவே சியாமளா தேவியின்
ஆலோசனை பெற்றே பரமேஸ்வரி எதையும் செய்வாள். அம்பிகையின்
வலப்புறம் வற்றிருக்கும்
ீ பெருமை கொண்டவள் சியாமளா தேவி. மன
இருளையகற்றி ஞான ஒளியைத் தருபவள் இவள்.
உலகில் நம் விவகாரங்களுக்கு முக்கியமானது பேச்சு. இதையே சப்தம், வாக்கு
என்பார்கள்.

இவ்வாக்கிற்கு ஆதாரமான சக்திகளில் மாதங்கிதேவி முக்கியமானவள்

மந்திரியின் தயவினால் ராஜாவின் மகிழ்ச்சிக்குப்பாத்திரமாவது போல்


மாதங்கியைநாடியவர்கள் ராஜ ராஜேஸ்வரியின் அருளை அடைவது
திண்ணம்.

ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி

சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி

சர்வலோக ஜனன ீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி

மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி.

சித்தர்கள் ஜீவ சமாதியான இடம், அவர்கள் வாழ்ந்த நாட்கள்.

1. அகஸ்தியர் – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.

2. பதஞ்சலி – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.

3. கமலமுனி – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.

4. திருமூலர் – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.

5. குதம்பை சித்தர் – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில்


சமாதியானார்.

6. கோரக்கர் – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில்


சமாதியானார்.
7. தன்வந்திரி – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில்
சமாதியானார்.

8. சுந்தராணந்தர் – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.

9. கொங்ணர் – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.

10. சட்டமுனி – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.

11. வான்மீ கர் – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.

12. ராமதேவர் – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில்


சமாதியானார்.

13. நந்தீஸ்வரர் – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.

14. இடைக்காடர் – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில்


சமாதியானார்.

15. மச்சமுனி – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில்


சமாதியானார்.

16. கருவூரார் – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.

17. போகர் – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.

18. பாம்பாட்டி சித்தர் – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில்


சமாதியானார்.

(மரணமில்லா பெருவாழ்வு – சாகா கல்வி) உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல


முடியாத மரணத்தை வென்றவன் தமிழன்.

வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!

குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும்


பகிருங்கள்.
“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க
வளமுடன்.

நவக்கிரக தோஷம் ஒரே நாளில் நீங்கனுமா மயிலாப்பூருக்கு வாங்க!

சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது


அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தான். ஆனால் கபாலீஸ்வரர் கோயில்
அருகே, 6 பழமையான, அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே
அமைந்திருக்கின்றன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால்
முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு சிவாலயங்களுக்கு
நவக்கிரகத்தோடு தொடர்பு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்
இவை சென்னையின் சப்த விடங்க ஸ்தலங்களைப் போலும் அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் என்பது
இதன் விசேஷமாகும். இவை அனைத்தும் மயிலாப்பூர் அருகிலேயே
இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும். இவற்றோடு அப்பர் ஸ்வாமி
ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்துவிட்டால் அஷ்ட வரட்டான

ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் கிட்டும் என்பது நம்பிக்கை.

இந்த ஏழு கோயில்களுமே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று


ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இந்தக்
கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான்
இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது இப்பகுதி ஆன்மிக
அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

1. ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர்கோயில் (சூரியன் ஸ்தலம்)

மயிலை கடைவதியில்
ீ (பஜார் சாலை) இருக்கும் காரண ீஸ்வரர் கோயிலுக்கு
அருகில்தான் ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரர் கோயிலும் உள்ளது. சப்த சிவ
வழிபாட்டில் முதலில் வழிபட வேண்டிய கோயிலாகும். விசாலாட்சி அம்பாள்
உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு
விசாலாட்சி அம்மன் சன்னிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு
வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது. பைரவர் சன்னிதியும் சூரியனார்
சன்னிதியும் அம்பாளின் சன்னிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி
நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்தபோது இறைவன் அவரது
திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில்
வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த
கோயிலாக இந்தக் கோயில் திகழ்கின்றது. நமது மனம், உடல், இதயம் ஆகிய
மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது.
இத்தலத்து இறைவன் ஆத்ம காரகன் சூரியனின் அம்ஸமாக திகழ்கிறார்.

2. ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில் (சந்திரன் ஸ்தலம்)

மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன்


சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட
விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களிலிருந்து எழுந்தருளும்
சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம்
நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம்
ஏற்பட்டது.

அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஸ்ரீ


தீர்த்தபாலீஸ்வரர் கோயில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில்
இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். பண்டைக் காலத்தில் இங்கு
64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்தத் தீர்த்தங்கள் தெய்வக
ீ சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன.
மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி
காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில்தான்
தீர்த்தவாரி நடைபெறும். இத்தலம் நீருக்கு அதிபதியான சந்திர ஸ்தலமாக
விளங்குகிறது. இந்த கோயில் இறைவனை திங்கள் கிழமைகளில் வணங்கி
வரத் தண்ணர்ீ பஞ்சமே ஏற்படாது.

3. ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் (செவ்வாய் ஸ்தலம்)

'மயிலாப்பூரின் காவல் தெய்வம்' என்று கூறப்படும் கோலவிழி அம்மன்


ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில். மரங்கள்
அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஸ்ரீ பெரிய நாயகி
சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வாலீஸ்வரர். இந்தக்
கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம
முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். இராமாயண
காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை
வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால் தான்
இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்திலிருந்து
வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான
சிறப்பாகும். ஸ்ரீ ராமரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுச் சென்றதாக
கருத்து நிலவுகிறது.

4. ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் (புதன் ஸ்தலம்)

மயிலாப்பூர் கடைவதி
ீ (பஜார் சாலையில்) காரண ீஸ்வரர் கோயிலுக்குப்
பின்புறம் அமைந்திருக்கிறது ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில். மல்லிகை மலர்ச்
செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோயில் கொண்ட
இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது.
அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ மரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம்
இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி
ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது
பக்தர்களின் நம்பிக்கை. இத்திருக்கோயில் இறைவனான மரகதவல்லி சமேத
மல்லீஸ்வரர் வித்யா காரகன் எனப்படும் புதனின் அம்சமாகத் திகழ்கிறார்.
இவரை புதன் கிழமைகளில் வழிபட புத கிரக தோஷங்கள் விலகும்.

5. ஸ்ரீ காரண ீஸ்வரர் கோயில் (குரு ஸ்தலம்)

இத்திருக்கோயில் சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச்


சாலையிலிருந்து வரும் காரண ீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும்
சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப்
பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக்
கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாகத்
தெரிய வருகிறது. வசிஷ்ட முனிவர் வழிப்பட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு
உரியது இந்தக் கோயில். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே
காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஸ்ரீ காரண ீஸ்வரர் என்ற
திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார் அம்பிகை ஸ்ரீ சொர்ணாம்பிகை. இந்த
அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும்
செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்து ஈசன்
நவக்கிரகங்களில் தன காரகன் மற்றும் புத்திர காரகனான குரு பகவானின்
அம்சமாகத் திகழ்கிறார், இவரை வியாழக் கிழமைகளில் வணங்கிவரத்
திருமண தோஷங்கள் மற்றும் புத்திர தோஷங்கள் நீங்கும். மேலும் செல்வச்
செழிப்பு ஏற்படும்.

6. ஸ்ரீ வெள்ள ீஸ்வரர் கோயில் (சுக்கிர ஸ்தலம்)

மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த


வெள்ள ீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரியத் திருத்தலமாக
அமைந்துள்ளது. ஆங்கீ ரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகாபலி
யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம்
கேட்டபோது, வந்திருப்பது மகாவிஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம்
என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க
முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை
வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர்
வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார்.

வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில்


வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது.
சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ வெள்ள ீஸ்வரரை வழிபட்டு
கண்பார்வை பெற்றதாகத் தலவரலாறு. எனவே, ஸ்ரீ வெள்ள ீஸ்வரரை
வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாகப் பக்தர்கள்
நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். வெள்ள ீஸ்வரரை 'கண் டாக்டர்' என்றே
கொண்டாடுகிறார்கள். மேலும் சுக்கிர ஸ்தலத்து ஈசனை
வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர களத்திர தோஷம் மற்றும் திருமணத்
தடை நீங்கும்.

7. ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் (சனி ஸ்தலம்)

மயிலையின் சப்த சிவதலங்களில் மயிலையின் நாயகனாக, அருள்மிகு


கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர்
திருக்கோயிலே நாம் முதலில் தரிசிக்கவேண்டிய ஆலயமாகும்.
கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாகத் தலவரலாறு சொல்கிறது.
திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. சிவபெருமான்
மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோயிலும்
ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும்,
பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோயில்
கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர். புன்னை மரத்தின் அடியில் எழுந்தருளி
இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த
காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது.
நவக்கிரகங்களில் ஆயுள் காரகனான சனிஸ்வரனின் அம்சமாக கபாலீஸ்வரர்
அமைந்திருக்கிறார்.

எலும்பின் காரகர் சனிஸ்வர பகவான். இத்தலத்து ஈசன் கபாலம் மற்றும்


எலும்பிற்கு அதிபதியாக இருக்கிறார். மேலும் அஸ்தியிலிருந்து
பூம்பாவமையை பெண்ணாக உருவாக்கிய ஸ்தலம். ஒவ்வொரு ஆண்டும்
பங்குனி பெருவிழாவில் எட்டாம் நாளில் திருஞான சம்பந்தர் பதிகம் பாடி
எலும்பில் இருந்து பூம்பாவை எனும் பெண்ணை உயிர்த்தெழச் செய்யும்
நிகழ்வு நடைபெற்றுவருகிறது. உலகில் கலிதோஷம் பெருகிவிட்டதனாலோ
என்னவோ தற்போது திருமயிலையின் சிவதலங்களில் முதன்மையாகத்
திகழ்வது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இங்கு சனி
கிழமைகளில் வணங்கி வர ஆயுள் தோஷங்களும் சனி கிரக தோஷங்களும்
விலகும் என்பது ஐதீகம். மேலும் இந்த ஸ்தலம் திருக்கடையூர் மற்றும்
திருபைஞ்ஞீ லி ஸ்தலங்களைப் போல் ஆயுள் வளர்க்கும் ஸ்தலம் என்பது
குறிப்பிடத்தக்கது.

நவக்கிரக ஸ்தலங்கள் என கூறிவிட்டு ராகுவையும் கேதுவையும்


விட்டுவிட்டீர்களே எனக் கேட்பது காதில் விழுகிறது! ராகுவும் கேதுவும் சாயா
கிரகங்கள் தானே. அவர்களுக்கு தனி வடு
ீ கிடையாதல்லவா?

8. அருள்மிகு முண்டக கண்ணியம்தான் (ராகு ஸ்தலம்)

திருமயிலையின் மருத்துவச்சி எனப் போற்றப்படும் முண்டகண்ணியம்மனே


ராகுவின் அம்சமாக திகழ்கிறாள். கபாலீஸ்வரர் கோயில் கோபுர வாசல்
வழியாக வடக்கு மாட வதியை
ீ அடைந்து அங்கிருந்து செங்கழுநீர் விநாயகர்
தெரு வழியாக கச்சேரி சாலையைக் கடந்துசென்றால் அருள்மிகு முண்டக
கண்ணியம்மன் ஆலயத்தின் அலங்கார வளைவைக் காணலாம். அங்கிருந்து
சுமார் ஒரு கிலோமீ ட்டர் சென்றால் மாதவ பெருமாள் திருக்கோயிலின்
பின்புறம் அமைந்திருக்கிறது. இங்குள்ள புற்று மற்றும் நாகர் சிலைகளும் ராகு
பரிகாரங்களும் பிரசித்தமானது மருத்துவத்திற்கு ராகுவின் அருள் இருக்க
வேண்டும். இந்த மருத்துவச்சியை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்
என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

9. அருள்மிகு கோலவிழியம்மன் (கேது ஸ்தலம்)

துர்கை மற்றும் மாரியம்மனை ராகுவின் அம்சமாகவும் காளியை கேதுவின்


அம்சமாகவும் கூறப்படுகிறது. எல்லை காளியான கோலவிழி அம்மன்
கேதுவின் அம்சமாக திகழ்கிறாள். காரண ீஸ்வரர், விருபாக்‌
ஷீஸ்வரர் மற்றும்
வாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது அருள்மிகு
கோலவிழியம்மன் ஆலயம். இந்த அம்மனை வணங்கி வர அனைத்து
தடைகளும் நீங்கும். மேலும் புத்திர தோஷம், திருமண தோஷம் ஆகியவை
நீங்கும். தீராத வியாதிகளும் திருஷ்டி தோஷங்களும் நீங்கும்.

10. சென்னையின் சிறப்பு மிக்க திருமயிலையில் ராயப்பேட்டை


நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ளது தன்னிகர் இல்லா திருத்தலம்
அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயில். அடியார்கள் எல்லோரும் மக்கள்
நன்மை பெற்றிட வேண்டும் என்று எண்ணற்ற தத்துவங்களை இறைவனிடம்
பெற்று மக்களுக்கு வழங்கி உள்ளனர். அவற்றுள் ஞான தெளிவு பெற்றிடல்
என்பது மிகவும் தனிப்பெருமை வாய்ந்தது அவ்வாறு ஞானவைராக்கிய
அடைந்திட சித்தர்களை வழிபட வேண்டியது அவசியம் ஆகின்றது.

சைவ அடியார்களுள் ஒருவரான ஸ்ரீ அப்பர் சுவாமிகள், 1851 ஆம் ஆண்டு


ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில் பிரம்ம சமாதி அடைந்தார். அவர்களின்
ஆத்ம சீடரான திருசிதம்பர சுவாமிகள், அருள்மிகு அப்பர் சுவாமிகளின்
ஜீவசமாதிக்கு மேல் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து 1855-ம் அண்டு
அவரது நினைவாக 16-கால் மண்டபம் ஒன்றை சிறப்பாகக் கட்டினார். பிறகு
அவற்றைத் திருக்கோயிலாக மாற்றி அமைத்தார். பொதுவாக ஜீவ சமாதிகள்
பிரம்ம சமாதிகள் பிருந்தாவனங்கள் போன்ற இடங்களில் பிரதிஷ்டை
செய்யப்படும் மூலவர் மூர்த்திகளுக்கு விஸ்வநாதர், என்னும் அம்பாள்
சன்னதிகளில் இருக்கும் அம்பாளுக்கு விசாலாட்சி என்றும் பெயர் பெற்று
அருள் விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள்பாலித்து வருகின்றார்.
காசியைப் போன்றே இத்தலத்திலும் பைரவர் வழிபாடு மிகவும் பிரசித்தி
பெற்றதாகும்.

இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், "மயிலையே


கயிலை கயிலையே மயிலை" என்ற சிறப்பைப் பெற்றது போலும். வரும்
திங்கள் கிழமை சிவராத்திரி நாளில் ஏழு சிவன் கோயில்கள் மற்றும் இரண்டு
அம்மன் கோயில்கள் இவற்றோடு அப்பர் ஸ்வாமி கோயிலுக்கும் சென்று
தரிசித்து நவக்கிரகங்களை மட்டுமல்லாது சப்த விடங்க ஸ்தலங்கள், அட்ட
வரட்டான
ீ ஸ்தலங்களை தரிசித்த பலனைப் பெறுவோம்.

ஆகாத கிழமையும் − திதிகளும்:

ஞாயிறு − துவாதசி

திங்கள் − ஏகாதசி

செவ்வாய் − பஞ்சமி

புதன் − துவிதியை

வியாழன் − சஷ்டி

வெள்ளி − அஷ்டமி

சனி − நவமி
இது தீமையான நாட்களாகும், சுபநிகழ்வுகளைத் தவிர்த்தல் நலம்!

தமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம்.

ஹரிஓம் அமைதியை தேடுங்கள் அன்பே சிவம்

ஓர் சுருக்கமான பதிவு

தமிழில் மொத்தம் எழுத்துக்கள் 247

உயிர் எழுத்துக்கள் 12

மெய் எழுத்துக்கள் 18

உயிர் மெய் எழுத்துக்கள் 216

ஆய்த எழுத்து 1

உயிர் எழுத்துக்கள் என்பது உயிரின் உற்பத்தி சக்தியை அதிகபடுத்தும்.

மெய் எழுத்துக்கள் என்பது மனதை அறிய கூடிய மற்றும் வலுப்படுத்தும்


சக்தியாக உள்ளது.

உயிர் மெய் எழுத்துக்கள் என்பது உடலையும் மனதையும் சேர்த்து


இறைவனை அறிய கூடிய செயலை காட்டும்.
ஓம் என்பதில் உள்ள அ உ ம் என்பது என்ன என்ன எழுத்துகள் உள்ளன
கவனிக்க

நாம் பேசும் தமிழ் தானாக வரவில்லை மூன்று நபர்களின் கண்டுபிடிப்பால்


வந்தது அதாவது

சிவன்,முருகன்,அகத்தியர் கொண்டு உருவாக்கபட்டது

சிவனால் முருகனுக்கு கொடுக்கப்பட்ட பணி தமிழ் மொழியை


உருவாக்குவது

முருக பெருமான் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து உருவாக்கியுள்ளார்.

ஆனால் அதில் வரைமுறை இல்லாமல் இருந்தது அதை சரி செய்ய அப்பணி


மீ ண்டும் அகத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அகத்தியர் அதை இலக்கணம் செய்து வெளியிட்டார்.

இப்போது தமிழ் எழுத்துக்கு வருவோம்

மானிடர் நாள் முழுதும் சுவாசிக்கும் காற்றில் மூன்றில் ஒரு பகுதி உடலின்


மூலாதாரத்தை அடையாமல் வணடிக்கப்படுகிறது.
ீ அந்த வணடிக்கப்படும்

மூன்றில் ஒரு பகுதி சுவாசத்தையும், வணாக்காமல்
ீ சுவாசிப்பதே சுவாச
பந்தனம் எனப்படும் யோகக் கலையாகும்.
மானிடருக்கு ஒரு நாளில் 21,600 சுவாசம் உண்டாவதாகவும் அதில் 14,400
சுவாசம் மட்டுமே உள் சென்று மூலாதாரத்தில் ஒடுங்குகிறது என்றும் மற்ற
7,200 சுவாசம் வெளியே போய் பாழாவதாகவும், இந்த 7200 சுவாசம்
வணாகாமல்
ீ சுவாச பந்தனம் செய்வதன் மூலம் சுவசிப்பவருக்கு எக்காலமும்
பிணி, மூப்பு , சாவு வராமல் என்றும் பாலனாய் வாழலாம் என சுவாசம்
குறித்து கூறுகிறார் யூகிமுனி.

இப்போது உயிர்மெய்களுக்கு வருவோம் உயிர் மெய் எழுத்துகள் 216

சுவாசம் 21600, ஒர் உயிர்மெய் எழுத்தினுடைய சுவாசம் 100 மூச்சு பலனை


தரகூடியது

ஆக 216×100=21600

நீங்கள் உயிர்மெய் எழுத்துகளை சொல்லும்போது 100 மூச்சு வணாவது



தடுக்கபடும்

தமிழானது பேசுவதற்கு மட்டும் உருவாக்கவில்லை நீண்ட நாள் வாழ்வதற்கு


உருவாக்கபட்டவை

தமிழுக்கும் அமுது என்று பேர் இப்பாடல் முழுவதையும் ஆராய்க

அதாவது நமது தலையில் அமிர்தத்தை தருவதற்கு ஒரு எழுத்து உள்ளது


அது ""ழ்"" இதை தொடர்ந்து சொன்னால் அமிர்தம் சுரக்கும்
(இது குஜராத்தி மொழியில் மட்டுமே உள்ளது ஆனால் அதுவும் இப்போது
வழக்கொழிந்து விட்டது)

அதேபோல் தமிழ் எழுத்தை வைத்து பஞ்சபூதங்களை இயக்க முடியும்.

மெய் என்ற இறை மற்றும் உடம்பை அடைய, மெய் எழுத்தை ஆராய்ந்தால்


இறைவனை அடைய அதில் ஒரு எழுத்து இருப்பதை அறியலாம். அதை
முருக பெருமான் ஏன் கொடுத்தார் என ஆராய்க

தமிழ் எழுத்தில் கவனம் அதிகம் கொடுக்காத எழுத்து ஒன்று உள்ளது அதை


தமிழரின் படைகருவிகளில் உபயோகபடுத்தியுள்ளனர்

அது ஆதியில் இ என்ற எழுத்துக்கு கொடுக்கபட்டது அது என்ன என


கருத்தில் கொண்டு ஆராய்க.

குறிபிட்ட தமிழ் எழுத்துகள் கொண்டு சத்தம் எழுப்பி மனிதரின் மூளையை


செயல் இழக்க செய்தனர் அது என்ன, என்ன எழுத்து என ஆராயவும்.

தமிழில் ஒரே ஒரு குறிப்பிட்ட எழுத்தை மட்டும் தொடர்ந்து சொன்னால்


உயிர் பிரிந்து விடும் அதை ஆராய்க.

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம்


பெறவில்லை அது என்ன, என்ன எனவும், ஏன் எனவும் ஆராய்க.

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள


திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து - னி

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்- ள ீ,ங

இதையும் கருத்தில் கொள்க

இறைவனால் கற்று கொண்டு வந்த இரண்டு உயிர் எழுத்து உ + அ = (குவா)

இன்னும் எம் தமிழில் நிறைய ரகசியம் உள்ளன.

தமிழை அதிகமாக பேசி சக்தி பெற முடியும்.

பிரசன்னத்திற்கு சிறப்பாக பயன்படும் மாந்தி.

ஜாதகத்தில் மாந்தி நின்ற பலன்கள்

ஜாதகத்தில் மாந்தி என்பது தமிழ்நாட்டில் பெரிதாக


எடுத்துக்கொள்வதில்லை..ஆனால் கேரளாவில் அதை முக்கியமாக
எடுத்துக்கொள்வார்கள். .சனி புத்திரன் மாந்தி. எனவே சனியை போலவே
மாந்தியும் பலன் தரும் என்பார்கள். அதாவது ஜூனியர் சனிபகவான் .

ராமாயணத்தில் ஒரு கிளைக் கதையில், மாந்தியைப் பற்றிய செய்தி உள்ளது.


அறியத்தரலாம். தன் தவவலிமையால் சிவனிடம் வரம் பெற்ற ராவணன்,
கிரகங்களையே தன்னிடத்திற்கு அழைக்கும் பேறுபெற்று விளங்கினானாம்.
தன் மகன் இந்திரஜித் பிறக்க இருந்த சமயத்தில், சனியை வரவழைத்த
ராவணன். என்னுடைய மகனின் ஜாதகத்தில்

நீ பதினொன்றாம் இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று பணித்தானாம்.

ஜாதகத்தில், சனிக்கு 11 ஆம் வடு


ீ சிறந்த இடம். 12 ஆம் வடுதான்
ீ மோசமான
இடம். வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்ட சனி,
அலட்சியத்தாலும், தவறுதலாலும், கவனக்குறைவாலும், அப்படி 11 ல் நிற்கும்
போது, சனியின் ஒரு கால் 12 ஆம் வட்டின்
ீ மேல் இருந்ததாம்.

கோபமுற்ற ராவணன், தன் நீண்ட வாளால், சனியின் அந்தக் காலை


வெட்டிவழ்த்த,
ீ அது ஒன்றாம் வட்டில்
ீ போய் விழுந்ததாம். விழுந்த அந்தக்
காலும், அதனுடன் இருந்த சதைப் பகுதியும் சேர்ந்துதான் மாந்தியாக
உருவெடுத்ததாம். அதோடு லக்கினத்தில் உயிர் பெற்று எழுந்ததால்,
ராவணனின் மகன் இந்திரஜித்தின் வாழ்க்கையை, அற்ப ஆயுளிலேயே
முடித்துக் கணக்கைத் தீர்த்ததாம்.

இன்னொரு கதையும் உண்டு, ராவணன் தன் அரசவையில், அரியணை


இருக்கும் இடத்தில் ஏறுவதற்கான படிக்கட்டில் சனியையும் கல்லில்
படிக்கட்டாகி, குப்புறப் போட்டு வைத்திருந்தானாம். அதுதான் முதல்
படிக்கட்டாம். தினமும் அதை மிதித்துக் கொண்டு, ஏறிச் சென்றுதான் தன்
அரியணையில் அமர்வானாம்.
அவனுடைய கொட்டத்தை அடக்க நினைத்த நாரதர், அவனுடைய சபைக்குச்
சென்று பேசிக்கொண்டிருந்த போது சொன்னாராம், “ ராவணா, உன்னுடைய
தவவலிமை என்ன? உன்னுடைய பெருமை என்ன? நீ எதற்காக சனியை
குப்புறப் போட்டு மிதித்துக் கொண்டு செல்கிறாய்? நிமிர்த்திப்போட்டு, சனியின்
நெஞ்சில் அல்லவா நீ மிதித்துக் கொண்டு செல்ல வேண்டும்?”

நெகிழ்ந்துபோன ராவணன் உடனே அதைச் செய்தான்.

என்ன ஆயிற்று?

நிமிர்ந்து கிடந்த சனியின் மார்பில், அவன் கால்கள் படும்போதெல்லாம்,


சனியின் பார்வை அவன் மேல் விழ ஆரம்பித்தது.

சனியின் பார்வை படப்பட அவனுடைய வலிமை எல்லாம் நீங்கி, கெட்டவை


குடிகொள்ள ஆரம்பித்தன. கடைசியில் மாற்றான் மனைவி சீ தையின் மேல்
கையை வைத்தான். வைத்த பிறகு நடந்ததைத்தான் அனைவரும்
அறிவோமே!

கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜோதிடர்கள் ஜாதகப்


பலன்களைச் சொல்லும்போது, மாந்தியின் நிலையை வைத்துத்தான்
முக்கியமான பலன்களைச் சொல்வார்கள். அது சரியாகவும் இருக்கும்.
தமிழ்நாட்டு ஜோதிடர்கள், மாந்தியையும் பார்ப்பதில்லை. 

மாந்தி தான் இருக்குமிடம் அதற்கு நேர் ஏழாமிடம், தான் இருக்குமிடத்திற்கு


முன்னே உள்ள இடத்தையும் (2 ம் வடு
ீ ), தான் இருக்குமிடத்திற்கு பின்னே
உள்ள இடத்தையும் (12 ம் வடு)
ீ பார்க்கும் வலிமையை பெற்றவராகும்.

தான் இருக்குமிடம் , பார்க்கும் இடம் இவைகளுக்கு தனது நிலையைப்


பொறுத்து , பாவகத்தின் தன்மையை முழுமையாக மாற்றி அமைக்கும் பலம்
படைத்தவர் .

உதாரணமாக : அழகு தரும் லக்கினமாக இருந்து இவர் முழு பலத்துடன்


இருந்துவிட்டால் அவலட்சணமான உருவத்தை தந்துவிடுவார்.

பன்னிரெண்டு பாவங்களில் இவர் இருந்தால் எம்மாதிரியான பலன்களைத்


தருவார் என பொதுவான பலன்கள் இங்கே தரப்படுகின்றது. இது
பொதுப்பலனே தவிர முழுபலன் அல்ல. காரணம் ஜாதகத்தில்
உள்ளபலம்பொருந்திய சுபருடன் சேர,சுபக் கிரஹ பார்வை , மாந்தியின்
தாக்கத்தினை குறைக்கலாம் .சுபர் பார்க்க நல்ல பலனும் உண்டாகும். மாந்தி
நின்ற ராசிநாதனும் மாந்தியுடன் கூடிய கிரகங்களும் சனி போல கெடுப்பர்.

லக்னத்தில் நிற்க நோய் உண்டாகும்.ஊனம் உண்டாகும்...அதிக மன


சோர்வு,உடல் சோர்வு கெட்ட குணநலன்,கெட்ட நண்பர்கள் சேர்க்கை
உண்டாகும் . ஜாதகன் பந்தா’ பேர்வழி. மற்றவர்களை மதிக்கும் குணம்
இருக்காது. சிலர் கொடூர சிந்தனை உடையவர்கள்.
எரிச்சலைத்தரக்கூடியவர்கள். நன்றாகச் சாப்பிடக் கூடியவர்கள். முரட்டுக்
குணமுடையவர்களாக இருப்பார்கள். குண்டான உடல‌
மைப்பு, உடல்
உபாதைகளும், மறைமுக நோய்களும், அடக்கம் மற்றும் வெட்கம்
இல்லாதவராகவும், மனக்கவலை அதிகம் கொண்டவராகவும், குறும்புத்தனம்
கொண்டவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருப்பார்கள். சுபகிரக சேர்க்கை
மற்றும் பார்வை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

லக்னத்துக்கு 2 ல் நிற்க,மோசமான பேச்சு ,வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா


இருக்கும்.நஷ்டம் அதிகம் சந்திப்பார்...சிலர் மிக கருமியாகவும்
இருப்பர்..குடும்ப வாழ்வில் சோதனைகள் அதிகம் உண்டாகும். ஜாதகன்
விதண்டாவாதம் செய்யக்கூடியவன். சிலர், வாயைத் திறந்தால்,

சண்டையில் போய் முடியும். ஜாதகங்களில் வேறு நல்ல அமைப்பு

இல்லையென்றால் ஜாதகன் வறுமையில் வாட நேரிடும். சொத்துக்கள்

இருக்காது. இருந்தாலும் அவன் கண்ணேதிரேயே கரைந்துவிடும்.

சிலர் தங்களுடைய வாக்கைக் காப்பாற்றமாட்டார்கள்.

இந்த அமைப்புள்ள சிலருக்குச் செல்வம் (wealth)என்பது அகராதியில்


(Dictionary)மட்டும்தான். குடும்ப வாழ்க்கை நிம்மதி இல்லாதவராகவும், பேச்சில்
தடுமாற்றமும், கீ ழ்த்தரமான புத்தி கொண்டவராகவும், வண்
ீ பொருள் விரயம்
செய்பவராகவும், கண்களில் நோய், தீய பழக்கம் கொண்டவராகவும் இருப்பர்.

3 ல் நின்றால் தனக்கு பின் பிறந்த இளைய சகோதரன் ,சகோதரிகளுடன்


பகை உண்டாகும் அல்லது அவர்கள் முன்னேற இயலாமல் வாழ்க்கையில்
போராடி கொண்டிருப்பர். ஜாதகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். முன்
கோபக்காரன். யாருடனும் இசைந்து போகாதவன் (unsocial). பிறரைக் கவர
வேண்டும் என்பதற்காக அசட்டையான வேலைகளைச் செய்யக் கூடியவன்.
உடன்பிறப்புக்கள் இருக்காது. இருந்தாலும் அவர்களுடன் அவனுக்கு நல்ல
உறவு இருக்காது.

சிலர் உள்ளூர் நாட்டாமையாக இருப்பார்கள். சிலர் அரசாளுபவர்களின்

தொடர்புடனும், மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். நல்ல


உடலமைப்பு, தைரியம், துணிவு, பலரை வழிநடத்தும் திறன், புதிய
முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகளை குவிக்கும் சூழ்நிலை ஆகியவை
உண்டாகும்.

4 ல் நின்றால் இவர் பிறந்த காலத்தில் தாயார் மிகவும் துன்பப்பட்டிருப்பார்.


பிற்காலத்தில்தான் அவருக்கு சுகம் உண்டு.இவருக்கு நிறைய அலைச்சல்
உண்டாகும். முறையான சுகம் கிடைப்பதில் தடங்கல் ,சொத்துக்களில் சிக்கல்
காணப்படும். ஒரே வரியில் சொன்னால் - துரதிர்ஷ்டவசமானவன் மற்றும்
ஏழ்மையான நிலையில் வாழக்கூடியவன் (unfortunate and poor). நிம்மதியற்ற
நிலை, உடல் நிலை பாதிப்பு, வட்டு
ீ மனை சேர்க்கை உண்டாகத் தடை,
தாயாருடன் சுமூக நிலை இல்லாமை ஆகியவை ஏற்படும்.

5 ல் மாந்தி புத்திர தோசம். குழந்தைகளால் கவலை,ஏமாற்றம் எந்த காரியம்


தொட்டாலும் தடங்கல் தாமதம் உண்டாகும்.. நிலையில்லாதவன். அதாவது
நிலையான மனப்பான்மை இல்லாதவன். அடிக்கடி

மனதை மாற்றிக்கொள்ளக்கூடியவன். இன்று ஒன்றை வேண்டும் என்பான்.

நாளையே அதை வேண்டாம் என்பான். சிக்கலான மனநிலை உடையவன்.

அவனை நம்பி ஒன்றும் செய்ய முடியாது. செல்வம், புகழ் எல்லாம் ஒரு நாள்
தொலைந்து போகும். நாத்திக எண்ணம் உடையவன். இறையுணர்வு இருக்காது.
சிலர் பெண்ணின்மேல் அதிக ஆசை உடையவர்களாக இருப்பார்கள்.
பெண்களிடம் அடிமைப்பட்டுக் கிடப்பார்கள். மனநிலை பாதிப்பு, புத்திர தோஷம்
பாதிப்பு, குறைந்த வயதில் கண்டம், செல்வம் செல்வாக்கை இழக்கும் நிலை,
கடவுள் நம்பிக்கை இல்லாதவராகவும், சுய இன்பப்பழக்கம் அல்லது
முறையற்ற உறவு கொண்டவராகவும் இருப்பார்கள்.

6 ல் நிற்க ,சுற்றம் நட்பு பகையாகும் எதுக்கெடுத்தாலும் கையை ஓங்கி


விடுவார் ..வம்பு,வழக்குகளை சந்திக்க நேரும். துணிச்சலானவன்.
தெனாவெட்டான ஆசாமி. அவனுடைய எதிரிகள் அவனைக் கண்டால் அலறி
ஓடுவார்கள் (terror to his foes). மந்திர தந்திரங்களில் ஈடுபாடு உடையவன். சிலர்
சமூகத்தில் புகழ் பெற்று விளங்குவார்கள். எந்தப் பெண்ணுமே அவனை
விரும்புவாள். அவனிடம் ஈடுபாடுகொள்வாள் (loved by women). நீண்ட ஆயுள்,
பிற‌
ருக்கு உதவி செய்யும் மனோபாவம், ஆரோக்கியமான வாழ்வு, எதிர்கள்
இல்லாத நிலை அல்லது எதிரிகளிடம் எப்போதும் வெற்றி, வாழ்வில்
படிப்படியான உயர்வு பெறுவார்கள்.

7 ல் நிற்க,களத்திர தோசம்..கணவன் /மனைவி குணநலன்


கெடுகிறது...வாக்குவாதம் அதிகரிக்கும். வாய்ச்சண்டை போடக்கூடியவன். வண்

விவாதங்கள் செய்பவன். நமக்கு எதற்கு வண்
ீ வம்பு என்று ஒதுங்காதவன்.
தவறான நியதிகள், தவறான நியாயங்களை

உடையவன். தனக்கென்று சில சட்டங்களை வைத்திருப்பவன். நன்றி,


விசுவாசம் இல்லாதவன்.

சிலர் பெண்களின் கால்களில் விழுந்து கிடக்க நேரிடும். அவர்களின்


தயவிலேயே வாழ்க்கையை ஓட்ட நேரிடும்! மெலிந்த உடல், இல்லற
வாழ்வில் நிம்மதியற்ற நிலை, குறைவான நட்பு, மனைவியின் சொத்தை
அழிக்கும் நிலை, நம்பியவர்களால் ஏமாற்றப்படுதல் ஆகியன ஏற்படும்.

8 ல் மாந்தி அவமானம் அடிக்கடி சந்தித்தல் ,உடல் ஆரோக்கியம் கெடுதல்


,அதிர்ஷ்டமின்மை. கண்பார்வைக் குறைபாடுகளை உடையவன். சிலருக்கு
வயதான காலத்தில் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். எவ்வளவு
சாப்பிட்டாலும், பசித்துக் கொண்டே இருக்கும் உடல் அமைப்பைக்
கொண்டவன். துக்கமும், துயரமும் அவ்வப்போது தோன்றி வாட்டி எடுக்கும்.
கல் மனதுக்காரன். ஜாதகனிடம் நல்ல பண்புகள் இருக்காது. அதிக பசி
கொண்டவராகவும், மறைமுக நோய் கொண்டவராகவும், அதிக கவலை
கொண்டவராகவும், எதிலும் தோல்வியே ஏற்படும் நிலையும், வண்
ீ விரயம்
செய்பவராகவும் இருப்பர்.

9 ல் மாந்தி பூர்வகம்
ீ கெடுகிறது. தந்தையுடன் மனக்கசப்பு...எதையும்
குதர்க்கமாக பேசி தன்னை கெடுத்துக்கொள்ளுதல். தன்னுடைய
குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்க நேரிடும். குழந்தைகள்

அவனை ‘அம்போ’ அல்லது ’சிவ சம்போ’ என்று கடாசிவிட்டுப் போய்

விடுவார்கள். தனிமையில் கிடந்து அல்லாட வேண்டியதிருக்கும்.

(deserted by children). மறைமுகமாக தீய செயல்களைச் செய்யக்கூடியவர்கள்.

வாழ்க்கை, பிரச்சினைகளும், கவலைகளும் நிறைந்ததாக இருக்கும். மெலிந்த


உடலமைப்பு கொண்டவராகவும், தந்தைக்கு தோஷம் உடையவராகவும்,
தவறான பாதைக்கு செல்பவராகவும், அதனால் தவறான
பழக்கவழக்கங்களும்,முறையற்ற பாலுணர்வு உடையவராகவும், எப்பொழுதும்
சோதனை உடையவராகவும், பணக்கஷ்டம் உடையவராகவும் இருப்பர்.

10 ல் மாந்தி தொழில் மேன்மை, பதவி, புகழ் கிடைக்கும். ஜாதகன் பலவிதமான


கண்ணோட்டங்களை உடையவன். விசித்திரமானவன்.

சிலருக்கு இறை நம்பிக்கை இருக்கும். வெளிப்படுத்த மாட்டார்கள். சிலருக்கு


இறை நம்பிக்கை இருக்காது. சிலர் கஞ்சனாக இருப்பார்கள். வட்டில்

விளையும் மாம்பழத்தை அவனும் சாப்பிடமாட்டான். மற்றவர்களையும்
சாப்பிட விடமாட்டான். எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிக் கணக்கில்
போட்டு வைப்பான். சிலர் எல்லாவற்றையும் தனியாக அனுபவிக்கும்
மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள்.

மொத்தத்தில் மனைவி, மக்கள் என்று சுகமாக இருப்பார்கள். சுயநலம்


மிக்கவராகவும், மற்றவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்களாகவும், நன்றாக
உழைக்கக்கூடியவராகவும், வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.

11 ல் நிற்க ,எப்போதும் தன லாபம். ஜாதகன் அரசனைப் போல வாழ்வான்.


நிறையப் பெண்களின் சகவாசம் கிடைக்கும். அவர்களுடன் கூடி மகிழ்வான்.
சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சிஎன்று எதற்கும் குறை இருக்காது
.உறவினர்களால் விரும்பப்படுவான். நாட்டமையாக இருப்பான். தலைமைப்
பதவிகள் தேடிவரும். அரசு அங்கீ காரங்கள் தேடி வரும். ராஜயோகம். செல்வம்,
செல்வாக்குடன், நல்ல மனைவி, மிகுந்த புகழ், நெருங்கியவர்களுக்கு உதவி
புரியும் தன்மை, தெய்வ நம்பிக்கை கொண்டவராகவும், குறுகிய கால்களை
கொண்டவராகவும் இருப்பர்.

12 ல் நிற்க,தூக்கமின்மை,அடிக்கடி பயணம் ,தீய கனவுகள். ஏழ்மை நிலையில்


வாட நேரிடும். பண விரையம் தொடர்ந்து இருக்கும்.

கட்டுப்படுத்த முடியாத செலவுகளும் தொடர்ந்து வந்து படுத்தி எடுக்கும்.

சிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள். கீ ழ்த்தரமான


பெண்களுடைய சிநேகிதம் கிடைக்கும். அதில் மூழ்கிவிடுவார்கள்.

சிலருக்கு மூட்டு வலி, மூட்டுக் குறைபாடுகள் உண்டாகும். மொத்தத்தில்

இந்த அமைப்பு ஜாதகத்தில் ஒரு மோசமான அமைப்பு. வண்


ீ விரயம்
செய்பவராகவும், இழிவான செயல்களை செய்பவராகவும், உடலில்
குறையுடன், குறைவான சந்தோசம் கொண்டவராகவும், குடும்பவாழ்வில்
சோகம், சோதனை கொண்டவராகவும், சோம்பல் கொண்டவராகவும் இருப்பர்.

ஜாதகத்தில் மாந்தி நின்ற ராசிநாதன் கேந்திரம், திரிகோணம் ஆகியவற்றில்


அமையப் பெற்றால், ஜாதகர் பெரும் செல்வத்திற்கு அதிபதி யாகவும்;
செல்வம், செல்வாக்கு, பூமி, மனை, வாகனம் உள்பட எல்லா
ஐஸ்வர்யங்களுடனும் வாழ்வார்.

லக்னத்திற்கு 6, 8, 12-ல் சந்திரன் அமர்ந்து ஆவியுலகத் தலைவன் மாந்தி


சேர்க்கை பெற்றால், ஜாதகர் துர்ஆவிகளினால் பீடிக்கப்பட்டு மரண வேதனை
அடைவார். ஸ்ரீஆஞ்சனேயரை வழிபட்டால் துர்ஆவிகள் விலகும்.
மாந்தியினால் ஏற்பட்ட தோஷம் விலகும்.

மாந்திக்கு 7-ல் புதன் அமர்ந்து சுபர்களால் பார்க்கப்பட்டால், ஜாதகர் தந்தை


செய்த தொழில் மூலம் நிரம்ப வருமானம் பெற்று எல்லா ஐஸ்வர்யங்களுட
னும் வாழ்வார்.
ஆண் ஜாதகருக்கு, மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்தால், ஜாதகரின் சகோதரர் தீய
பழக்கங்கள் மிகுந்தவராவார். குலப்பெருமை கெடும். அரச தண்டனைக்கு
உள்ளாவார்.

பெண் ஜாதகத்தில், மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்து ஜென்ம நட்சத்திரம் ரோகிணி


என்றால், ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியிராது.
வாழ்க்கையில் பெரும் பகுதி போராட்டமாக இருக்கும். பிறந்த வட்டிற்கும்

புகுந்த வட்டிற்கும்
ீ துரதிர்ஷ்டமாகும். தோஷம் மிகுதி.

மாந்திக்கு 5-ல் ராகு அல்லது சனி இருந்தால், ஜாதகர்


ஆண்மையில்லாதவராவார். பெண் ஜாதகம் என்றால் பிரசவத்தில் துன்பம்
ஏற்படும். பெண் ஜாதகத்தில் செவ்வாய், சூரியனோடு மாந்தி சேர்க்கை
பெற்றால் நெறியற்ற வாழ்க்கை வாழ்வாள்.

லக்னத்திற்கு 5, 9-ஆம் இடங்கள் கன்னி, மிதுனம், மகரம், கும்பம் போன்ற


ராசிகளில் ஒன்றாக அமைந்து, சனி- மாந்தி சேர்க்கையோ, பார்வையோ 5, 9-
ஆம் இடங்களுக்கு ஏற்பட்டால் ஜாதகி மலடியாவாள்.

லக்னத்திற்கு 3-ல் சனி உச்சம் பெற்று மாந்தியின் சேர்க்கை பெற்று சுக்கிரன்


பார்த்தால், ஜாதகர் பெண் பித்தனாவான். பெண் நோயால் அவதியுறுவான்.
லக்னத்திற்கு 4-ல் கேதுவும் மாந்தியும் சேர்க்கை பெற்றால் மிகுந்த
துரதிர்ஷ்டமாகும். வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் அதிருப்தி
காணப்படும். ஒரு இடத்திலும் நிலையாக வாழ முடியாது. நாடோடி போல்
வாழ்க்கை அமையும். தாய்க்கும் தோஷமாகும்.

பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 4-ல் மாந்தி நின்றால் புத்திரதோஷம்


மிகுதி. கணவன் நோயாளி ஆவான். 4-ல் உள்ள மாந்தியுடன் சனி சேர்க்கை
பெற்றாலோ பார்த்தாலோ ஜாதகி மிகுந்த துரதிர்ஷ்டசாலி

லக்னத்திற்கு 2, 8-ல் சர்ப்ப கிரகங்கள் அமையப் பெற்று மாந்தி சேர்க்கை


பெற்றால், நாக தோஷத்தால் மாங்கல்ய தோஷமாகும்.

ஆண், பெண் ஜாதகங்களில் லக்னத்திற்கு 2, 5, 8, 11 போன்ற இடங்களில் மாந்தி


இருப்பின், ஜாதகர் இந்தப் பிறவியில் செய்யும் கர்மப்பலனை அடுத்த
பிறவியில் அனுபவிக்க நேரிடும்.

லக்னத்திற்கு 1, 4, 7, 10 போன்ற இடங்க ü ல் மாந்தி இருப்பின், ஜாதகர் இந்தப்


பிறவியில் தமக்குத் தெரிந்தே சந்தர்ப்ப சூழ்நிலையால் பல தவறுகள்-
குற்றங்களைப் புரிய உள்ளார் என்பதை அறிவிப்பதாகும். அதேசமயம் ஜாதகர்
செய்யக்கூடிய தவறுகள்- குற்றங்களுக்கேற்ப சரியான தண்டனைகளை
உடனுக்குடன் அனுபவிக்க நேரிடும்.
திதி நித்யா தேவதைகள்

 திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள்.

அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில்
ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம்
சொல்லி வணங்கி, திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து
வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

அனைத்து சக்கரங்களின் தாய் சக்கரம் எனப்படும் ஸ்ரீசக்கரத்தில் 43


முக்கோணங்களில் மைய முக்கோணத்தில் வற்றிருக்கும்

15 தேவியர் தான் இந்த திதி நித்யா.

நீங்கள் பிறந்த திதியும் திதி நித்யாவும்

 1:வளர்பிறை ப்ரதமை திதிக்கும் தேய்பிறை அமாவாசை திதிக்கும்

அதிதேவதை ஸ்ரீ காமேச்வரி நித்யா


2:வளர்பிறை த்விதியை திதிக்கும் தேய்பிறை சதுர்த்தசி திதிக்கும்

அதிதேவதை ஸ்ரீ பகமாலினி நித்யா

3:வளர்பிறை த்ருதியை திதிக்கும் தேய்பிறை த்ரயோதசி திதிக்கும்

அதிதேவதை ஸ்ரீ நித்யக்லின்னா நித்யா

4:வளர்பிறை சதுர்த்தி திதிக்கும் தேய்பிறை த்வாதசி திதிக்கும்

அதிதேவதை ஸ்ரீ பேருண்டா நித்யா

5:வளர்பிறை பஞ்சமி திதிக்கும் தேய்பிறை ஏகாதசி திதிக்கும்

அதிதேவதை ஸ்ரீ வஹ்நி வாஸினி நித்யா

6:வளர்பிறை சஷ்டி திதிக்கும் தேய்பிறை தசமி திதிக்கும்


அதிதேவதை மகா ஸ்ரீ வஜ்ரேச்வரி நித்யா

7:வளர்பிறை சப்தமி திதிக்கும் தேய்பிறை நவமி திதிக்கும்

அதிதேவதை ஸ்ரீ சிவதூதி நித்யா

8:வளர்பிறை அஷ்டமி திதிக்கும் தேய்பிறை அஷ்டமி திதிக்கும்

அதிதேவதை ஸ்ரீ த்வரிதா நித்யா

9:வளர்பிறை நவமி திதிக்கும் தேய்பிறை சப்தமி திதிக்கும்

அதிதேவதை ஸ்ரீ லஸுந்தரி நித்யா

10:வளர்பிறை தசமி திதிக்கும் தேய்பிறை சஷ்டி திதிக்கும்

அதிதேவதை ஸ்ரீ நித்யா நித்யா


11:வளர்பிறை ஏகாதசி திதிக்கும் தேய்பிறை பஞ்சமி திதிக்கும்

அதிதேவதை ஸ்ரீ நீலபதாகா நித்யா

12:வளர்பிறை த்வாதசி திதிக்கும் தேய்பிறை சதுர்த்தி திதிக்கும்

அதிதேவதை ஸ்ரீ விஜயா நித்யா

13:வளர்பிறை த்ரயோதசி திதிக்கும் தேய்பிறை த்ருதியை திதிக்கும்

அதிதேவதை ஸ்ரீ ஸர்வமங்களா நித்யா

14:வளர்பிறை சதுர்த்தசி திதிக்கும் தேய்பிறை த்விதியை திதிக்கும்

அதிதேவதை ஸ்ரீ ஜ்வாலாமாலினி நித்யா

15:வளர்பிறை பவுர்ணமி திதிக்கும் தேய்பிறை ப்ரதமை திதிக்கும்


அதிதேவதை ஸ்ரீ சித்ரா நித்யா

15 திதி நித்யா தேவதைகளின் காயத்ரி மந்திரங்கள் :

1) காமேச்வரி நித்யா

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே

நித்யக்லிந்நாய தீமஹி

தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

2) பகமாலினி நித்யா

ஓம் பகமாளிணி வித்மஹே

சர்வ வசங்கர்யை தீமஹி


தன்னோ நித்ய ப்ரசோதயாத்

4) பேருண்ட நித்யா

ஓம் பேருண்டாயை வித்மஹே

விஷஹராயை தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்

5) வஹ்னி வாஸினி நித்யா

ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே

ஸித்திப்ரதாயை தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்


6) மஹா வஜ்ரேஸ்வரி நித்யா

ஓம் மஹா வஜ்ரேஸ்வராய வித்மஹே

வஜ்ரநித்யாய தீமஹி

தன்னோ நித்ய ப்ரசோதயாத்

7) சிவதூதி நித்யா

ஓம் சிவதூத்யை ச வித்மஹே

சிவங்கர்யைச தீமஹி

தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

8) துவரிதா நித்யா
ஓம் த்வரிதாயை வித்மஹே

மஹாநித்யாய தீமஹி

தன்னோ தேவ ீ ப்ரசோதயாத்

9) குலசுந்தரி நித்யா

ஓம் குலசுந்தர்யை வித்மஹே

காமேஸ்வர்யை தீமஹி

தன்னோ நித்ய ப்ரசோதயாத்

10) நித்ய நித்யா

ஓம் நித்யபைரவ்யை வித்மஹே

நித்யநித்யாயை தீமஹி
தன்னோ யோகின ீ ப்ரசோதயாத்

11) நீலபதாகை நித்யா

ஓம் நீலபதாகை வித்மஹே

மஹாநித்யாயை தீமஹி

தன்னோ நித்ய ப்ரசோதயாத்

12) விஜயா நித்யா

ஓம் விஜயதேவ்யை வித்மஹே

மஹாநித்யாய தீமஹி

தன்னோ நித்ய ப்ரசோதயாத்


13) சர்வமங்களா நித்யா

ஓம் சர்வமங்களை வித்மஹே

மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி

தன்னோ நித்ய ப்ரசோதயாத்

14) ஜ்வாலாமாலினி நித்யா

ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே

மஹா ஜ்வாலாயை தீமஹி

தன்னோ நித்ய ப்ரசோதயாத்

15) சித்ரா நித்யா


ஓம் ஸ்ரீசிசித்ராயை ச வித்மஹே

மஹாநித்யை ச தீமஹி

தன்னோ நித்ய ப்ர சோதயாத்

You might also like