Professional Documents
Culture Documents
1 சீவகசிந்தாமணி - காந்தருவதத்தையார் இலம்பகம்
1 சீவகசிந்தாமணி - காந்தருவதத்தையார் இலம்பகம்
நகரத் தோற்றம்
காந்தருவதத்தையின் வணை
ீ மீ ட்டும் திறனைக் கூறுதல்
18.இவள் வணை
ீ வாசிக்கும் திறமையாலும் அழகாலும்
உலகமெங்கும் புகழ் பெற்றாள். அளந்தறிய முடியாத
நற்பண்புகளையுடைய இப்பெண்ணுக்கு முன்னர், அரிய
மணிகள் அரும்பினபோல் விளங்கிய இளமை பொருந்திய
ஒளிவிடும் கொங்கைகள், இப்போது மார்பெல்லாம் இடமாகக்
கொண்டு பருத்துப் பரவின. முன்னர், மின்னல் கொடிபோல்
அசைந்தாடிக் கொண்டிருந்த இடையும், இப்போது கண்ணில்
தோன்றாது இருக்கிறதோ இல்லையோ என ஐயம்
கொள்ளுமாறு உள்ளது.
திருமண முரசறைதல்
கந்துக்கடன் சம்மதித்தல்
37.“சீவகனுக்குத் துணையாக அமைந்த தோழர்கள்
அறுபத்து நான்கு கலைகள்; அவர்கள் பொன்னுலகின் அமிழ்தம்
போன்றவர்; திருத்தமாக அமைந்த கொல்லிப் பாவை
போன்றவர்; பொருந்திய இளமையிற் சிறந்தவர்; என்றும்
ஒன்றாய் இணைந்தவர். ஆதலால் யாழ்ப்போட்டியில் கலந்து
கொள்வதில் தவறில்லை' என்று கூறிய கந்துக்கடன், “கையில்
வில்லேந்திய சீவகனுக்கு இதில் சிறிது குறையும் (தாழ்வும்)
உண்டு என்று மேலும் கூறலுற்றான்.
காந்தருவதத்தை பாடுதல்
காந்தருவதத்தை தோற்றல்
45.யாழ் இசையும், இசைக்கு ஏற்பப் பாடிய பாட்டும்
முதலில் ஒத்திருந்தன. பிறகு, பலவித வளையல்கள் அணிந்த
கைகளையுடைய தத்தை யாழ் மீ ட்டும்போது, மெல்லிய
விரல்கள் ஒள்ளிய நரம்பின்மேல் பொருந்தாவாயின. யாழ்
ஒழிந்த வாய்ப்பாட்டும் உச்சத்தில் இருந்து ஒலித்து
நடுங்கியதால் தத்தை நினைவிழந்து சீவகன் இசைக்கும்
தோற்று அமர்ந்துவிட்டாள். (சீவகன் பாடும்போது தத்தை யாழ்
நரம்பை ஒழுங்காக மீ ட்டவில்லை; அவன் யாழை மீ ட்டும்
போதும் அவள் ஒழுங்காகப் பாடவில்லை.)