Professional Documents
Culture Documents
Siva Stotrams
Siva Stotrams
(இ - ள்)
சிவபெருமானோடு ஒப்பாகும் தெய்வம் எங்குத் தேடினும் இல்லை.
அச் சிவனுக்கு நிகரானவர் யாவரும் இலர்.
எல்லா உலகங்கட்கும் அப்பாற்பட்டுள்ளவன்.
அச்சிவம் பொன்போல ஒளிவிடும் - வண்ணம் போன்ற சடைமுடி உடையவன்.
அவன் அன்பர்களின் மனத்தாமரையில் அமர்ந்திருப்பவன்.
============================================
============================================
சிவன் மூல மந்திரம்:
===============
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
https://www.youtube.com/watch?v=lR4v6Xo-lRU
சிவபுராணம் - சிவபுராணம் | வாதவூரடிகள் | சிவலோகம் | பக்தி டிவி
திருசிற்றம்பலம்
============
====
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி==
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே, எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்,
திருவாசகம் என்னும் தேன்.
சிவபுராணம்
=========
====
(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)
திருச்சிற்றம்பலம்
=============
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க,
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க,
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க,
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க,
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க, 5
திருச்சிற்றம்பலம்
=======================================
கோளறு பதிகம்
============
நவகிரஹங்களின் அனைத்து தோஷங்களுக்கு இந்த ஒரு பதிகமே குறைகளை போக்க திரு ஞான
சம்பந்தரால் இயற்ற பெற்றது .
இந்த தேவாரத்தை இனிய குரலில் பாம்பே சாரதா பாடியுள்ளார் .இதை தினம்தோறும் கேட்டு
பயன் பெறுங்கள்
https://www.youtube.com/watch?v=PctKeRA0ZPo
தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
=====================================================
திருச்சிற்றம்பலம்
====================================
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
தலம் : நெடுங்களம்
மறையுடையாய் தோலுடையாய்
வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே
யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய்
கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய்
நெடுங்களம் மேயவனே. 1
===================================================================================
===================================
ஒவ்வொரு பாடலும் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே என முடிவது பாடலின்
அழகை மேம்படுத்துகின்றது. இதனை பாராயணம் செய்பவர்களுக்கு சர்வ நிச்சயம் ஸ்ரீ
நடராஜரின் அருள் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
பாடல் : 1
பாடல் : 3
பாடல் 4
பாடல் 5:
பாடல் 6:
பாடல் : 7
பாடல் : 8
பாடல் : 9
பாடல் 10 :
பாடல் : 11
சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் இவரை,
சற்றெனக்குள்ளாக்கி ராசி பனிரெண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே
பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி
என்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங்
கசக்கி,கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி சிறுமணவை
முனுசாமி பாடியவை இசைக்கும் எமை அருள்வது இனியுன் கடன் காண்ஈசனே சிவகாமி நேசனே
யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
=======
https://www.youtube.com/watch?v=Ec2cgnGCGxo
நவகிரஹ துதி
==========
ஞாயிறு
=======
ஞாலத்தை சுற்றி வரும் ஞாயிறே
நின் சேவடியை கோலமுடன் கைகூப்பி கும்பிடுவேன்
சீலமுடன் பாரினிலே காத்தென்னை பல் சுகமும் நீ தந்து
வீரியனே என் வினையை வீழ்த்து.
திங்கள்
=======
மனக்கவலை நீக்கிடும் மாமதியே போற்றி
பனிக்கதிரே உன்னை பணிந்தேன்
அனுதினமும் சங்கடங்கள் இல்லாமல் சார்ந்தென்னை ஆதரித்து
திங்களே எங்கள் குறையை தீர்.
செவ்வாய்
=========
மங்களனே மாசில்லா மாமணியே செவ்வாயே
துங்கமுடன் தூக்கி துதிக்கின்றேன்
பங்கமின்றி தொட்டதெல்லாம் வெற்றி பெற தோல்வியே வாராது
கட்டமில்லா நன்னெறியை காட்டு.
புதன்
====
புத பகவான் பாதமதில் பூ மணக்க செய்து
நிதமும் வணங்கினேன் நேராய் மதிமகனே
அல்லவை தேய அறம் பல மேலோங்க
நல்லறிவை நீ எனக்கு நல்கு.
வியாழன் துதி
============
குருவின் அருளாலே குற்றமெல்லாம் போகும்
இருள் நீங்கி மாட்சியே பொங்கும்
சுரகுருவே உன்னை யான் நேசித்தேன்
ஓர் பாவமும் சூழாது என்னை நீ காப்பாய் இனி.
வெள்ளி
=======
நன் மலரை சூட்டியே நா மணக்க செப்பினேன்
போன் பொருளை ஈட்டும் புகர் புயனே
எந்தனுக்கே இன்ப ஒளி நீ ஏற்றி, எழில் வழியை நீ காட்டி
அன்பான ஆசி அருள்.
சனீஸ்வரன்
===========
காகத்தின் வாகனனே காக்கும் சனி தேவா
சோகத்தின் நல்குரவால் சோர்வுற்றேன்
மோகத்தால் எத்தனையோ தீங்கு சூழ்ந்து என் அறிவை மாற்றுதய்யா
உத்தமனே என் இடரை ஒட்டு.
ராகு
====
ஏகாந்த வாழ்வில்லை எந்நிலையும் மாறவில்லை
பாகாக நெஞ்சிளகி பாழானேன் ராகுவே
தூமலரை சாற்றி தொழுதிட்டேன்
என் குறையை தாமதமே இன்றி தகர்.
கேது
====
செம்பாம்பே உன்னை சிரம் பணிந்து வேண்டுகின்றேன்
வம்புகளும் வாத வழக்குகளும் தங்காமல்
எந்நோயும் வாராமல் ஏழ்மை நிலை மாற்றி
நிந்தனையும் வஞ்சனையும் நீக்கு.
=========================
திருச்சிற்றம்பலம்
சனீஸ்வரன் தோத்திரம்:
=================
முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலி னார்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்
சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே !
===================================================================================
================================
===================================================================================
================================