You are on page 1of 16

நற்றிணை

திணை - குறிஞ்சி
பாடியவர் – கபிலர்
பாவகை - ஆசிரியப்பா
கூற்று - பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.

கூற்று விளக்கம் – பொருள் ஈட்டுதற் கரணமாகத் தலைவன் தலைவியை


விட்டுப் பிரிய எண்ணியதைத் தோழி அறிந்து, தலைவியிடம் கூற, தலைவி
“தலைவன் அங்ஙனம் என்னை விட்டுப் பிரிய மாட்டார்” எனத் தலைவனைப்
புகழ்ந்து கூறுகின்றாள்.

பாடல்

“நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;


என்றும் என் தோள் பிரிபு அறியலரே'
தாமரைத் தண் தாது ஊதி, மீ மிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!”

பாடலின் விளக்கம்
“தோழி என் காதலர் சொன்ன சொல்லைத் தவறாமல் காப்பாற்றக் கூடிய
வாய்மையுடையவர். நீண்ட காலம் பழகுவதற்கு மிக இனிமையானவர்.
எப்போதும் என் தோள்களைப் பிரியும் எண்ணம் இல்லாதவர்.
அத்தகையவருடைய நட்பு, தேன ீக்கள் தாமரையின் குளிர்ந்த மகரந்தங்களை
ஊதி, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் தாதினையும் ஊதி, சந்தன மரத்தின்
உச்சியில் கொண்டு சென்று சேர்த்து வைத்த தேனைப் போல உறுதியாக
உயர்ந்தது. தண்ண ீர் இல்லாமல் இவ்வுலகம் இயங்காதது போல, அவர்
இல்லாமல் நான் வாழ மாட்டேன் என்பதை நன்கு உணர்ந்தவர். என் மீ து மிகுந்த
விருப்பம் கொண்டவர். என்னைப் பிரிந்து சென்றால் என் நெற்றியில் பசலை
நோய் படரும் என்று அஞ்சி தடுமாற்றம் அடைந்து என்னை விட்டு நீங்கிச் செல்ல
மாட்டார்” என்று தலைவி கூறுகின்றாள்.

குறிப்பு

இப்பாடலில், தாமரைத் தாது தலைவன் உள்ளத்தையும், சந்தனத்தாது


தலைவியின் உள்ளத்தையும் குறிப்பிடுகின்றது. சந்தன மரத்தில் இனிய
தேனடை வைத்தது போலத் தலைவன் தலைவியிடம் அன்பு வைத்துள்ளான்
என்பது கருத்து.
*************************************************************************************************************
குறுந்தொகை

திணை – குறிஞ்சி

பாடியவர் – தேவகுலத்தார்
பாவகை - ஆசிரியப்பா

துறை - தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி


இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது.

துறை விளக்கம் – தலைவன் தலைவி வட்டின் ீ அருகே வந்து நின்றான்.


தலைவியை அவன் மணந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவன்
இயல்புகளை இகழ்ந்து கூறுகின்றாள் தோழி. அதைக் கேட்ட தலைவி,
தலைவனின் இயல்புகளைப் புகழ்ந்து கூறுகின்றாள்.

பாடல்

“நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;


நீரினும் ஆர் அளவின்றே- சாரல்
கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.”

பாடல் விளக்கம்

“எம் தோழியே! கரிய கொம்புகளில் பூத்துக் குலுங்குகின்ற குறிஞ்சிப்


பூக்களில் உள்ள தேனை எடுத்து, மலையில் உள்ள உயர்ந்த மரங்களில்
தேனடைகளைச் சேகரித்து வைக்கின்ற மலைநாட்டில் வாழ்கின்றவன் எம்
தலைவன். அவனோடு நான் கொண்ட நட்பு, நிலத்தை விடப் பெரியது,
வானத்தை விட உயர்ந்தது. கடலைவிட ஆழமானது” என்று தலைவி தோழிக்குக்
கூறுகின்றாள்.

குறிப்பு

தலைவன் மீ து தலைவி கொண்ட அன்பு மனம், மொழி, மெய் என்ற


மூன்றாலும் அளந்து காண்பதற்கு அரிது என்பதைத் தலைவி நிலம், வானம்,
கடல் ஆகியவற்றோடு ஒப்ப வைத்து எண்ணுகின்றாள். நிலம் நீரின்றிப்
பயன்படாது. வானம் மேல் நின்ற அளவில் பயன்படாது. கடல் சூழ்ந்து நின்றாலும்
பயன்தருவதில்லை. மாறாக, மேகங்கள் கடல் நீரை முகந்து, வானத்தில் உயர்ந்து
எழுந்து, மழையாகப் பொழிந்தால் மட்டுமே நிலத்திற்குப் பயன் உண்டாகும்.
இம்மூன்றன் சேர்த்கை போல எங்கள் இருவருடைய நட்பும் இயைந்த நட்பு என்ற
தலைவி கூறுகின்றாள்.
*************************************************************************************************************
ஐங்குறுநூறு

திணை - மருதம்

பாடியவர் - ஓரம்போகியார்
பாவகை - ஆசிரியப்பா

கூற்று - புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, “இது தகாது” எனத் தெளிந்த


மனத்தனாய் மீ ண்டு தலைவியோடு கூடி ஒழுகா நின்ற தலைமகள் தோழியோடு
சொல்லாடி “யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்கு
அவள் சொல்லியது.

கூற்று விளக்கம் - பரத்தையர் உறவில் நெடுநாள் வாழ்ந்த தலைமகன் தன்


பிழையுணர்ந்து தன் மனைவியை மீ ண்டும் கூடினாள். அப்பொழுது தோழியை
நோக்கி, “நான் உங்களைப் பிரிந்து வாழும் நாட்களில் நீங்கள் என்ன
எண்ணியிருந்தீர்கள்?” என வினவினான். அதற்கு விடையாகத் தோழி
சொல்லியது.

கூற்று - தோழி தலைவனிடம் கூறியது.

பாடல்
“வாழி ஆதன் வாழி அவினி
நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க!
என வேட்டோளே, யாயே! யாமே,
நனைய காஞ்சிச் சினைய சிறு மீ ன்
யாணர் ஊரன் வாழ்க!
பாணனும் வாழ்க என வேட்டேமே.

பாடல் விளக்கம்

“தலைவனே! எம் மன்னனாகிய ஆதன் அவினி நெடிது வாழ்க! எம் நாட்டு


வயல்களில் நெல்வளம் சிறக்கட்டும்! நாட்டில் பொன் வளம் பெருகட்டும் என்று
விரும்புகின்றாள் எம் தாய் (தலைவி). அரும்புகள் நிரம்பிய புன்னை மரங்களும்,
முட்டைகளை மிகுதியாகக் கொண்ட சிறுமீ ன்களும் நிறைந்த ஊரின் தலைவன்
வாழட்டும்! அவனுடன் அவன் பாணனும் வாழட்டும் என விரும்புகிறேன் எனத்
தலைவி கூறினாள்” என்று தோழி தலைவனிடம் கூறுகின்றாள்.

குறிப்பு

சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்கள் ஆதன் என்று அவினி என்றும் பெயர்


பெற்றிருந்தனர். முதல் வரி மன்னனை வாழ்த்துகின்றது. தோழி, தலைவியைத்
தாய் என்று குறிப்பிடுகின்றாள்.
உள்ளுறை

நறுமணம் கமழும் காஞ்சி மலர்களும், புலால் நாற்றம் வசும் ீ மீ ன்களும் ஒரு


சேர விளையும் நாட்டைச் சேர்ந்தவன் தலைவன் என்று கூறியது, கற்பில் சிறந்த
குல மகளிரையும், பரத்தையரையும் ஒரு நிகராகக் கொண்டு தலைவன்
வாழ்கின்றான் என்பதைக் குறிப்பிடுகின்றது.
*************************************************************************************************************

கலித்தொகை

பாடியவர் - கபிலர்

திணை - குறிஞ்சி

துறை - “புகாஅக்காலைப் புக்கு எதிர்ப்பட்டுழி பகாவிருந்தின் பகுதிக்கண்”


தலைவி தோழிக்குக் கூறியது.

துறை விளக்கம்

தலைவன் தலைவியைக் காண வேண்டும் என ஆசையுற்றான். அதனால் தான்


புகுதற்குத் தகுதியில்லாத பகற்பொழுதில் தலைவன், உணவு நேரத்தில்
தலைவியின் வட்டுக்குள்
ீ புகுதல். அவ்வாறு புகுந்தவனைத் தலைவி
காட்டிக்கொடுக்காமல் தாயின்முன் சமாளித்து ஏற்றுக்கொள்ளல்.

புகாஅக்காலை : உணவு உண்ணும் நேரம். பகல் சாப்பிடும் நேரம் பார்த்து ஒரு


வட்டிற்குள்
ீ புகுதல்.

பகாஅ விருந்து - ஆனால் தலைவன் விலக்கப்படாத விருந்தாக தலைவி (காதலி)


ஏற்றுக் கொள்கிறாள்.

பாடல்

சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்


மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,
நோதக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே! 5
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,
'அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்: என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு, 10
'அன்னாய்! இவனொருவன் செய்தது காண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி,
நகைக் கூட்டம் செய்தான், அக் கள்வன் மகன். 15

பாடல் விளக்கம்
ஒளிமிக்க வளையல் அணிந்த தோழியே! நான் சொல்வதைக் கேள்.
தெருவில் நாம் மணலால் செய்த சிறுவட்டைத் ீ தன்காலால் கலைத்தும், நாம்
கூந்தலில் சூடிய மலர்மாலையை அறுத்தும், வரியை உடைய நாம் விளையாடிக்
கொண்டிருந்த பந்தைப் பறித்துக் கொண்டு ஓடியும் நாம் வருந்தத் தக்க
செயல்களைச் செய்யும் சிறியவனாகக் கட்டுக்கடங்காமல் திரிந்தான். முன்பு
ஒருநாள் தாயும் (அம்மாவும்) நானும் வட்டில்
ீ இருந்தபோது வந்தான். வட்டின்

வாசலில் நின்று, “வட்டில்
ீ இருப்பவர்களே! உண்ணும் நீரை உண்ண
விரும்பினேன்” என்று குரல் கொடுத்தான். அவ்வாறு வந்து கேட்டவனுக்கு என்
தாய், என்னிடம், “ஒளி வசும்
ீ அணிகலன்களை அணிந்தவளே. தங்கத்தாலான
குவளையில் கொண்டு போய் நீர் கொடுத்து வா” என்றாள். அவ்வாறு தாய்
சொன்னதால் வந்தவன் சிறு பட்டியாய் இருக்கும் தன்மை அறியாமல் தண்ண ீர்
கொண்டு போனேன். நான் சென்றதும் வளையல் அணிந்த முன் கையைப் பிடித்து
இழுத்தான். (சிறுபட்டி எனில் பட்டியில் அகப்படாத மாடு போன்றவன் எனப்
பொருள்) அதனால் நான் வருந்தி அம்மா என அலறி இவன் செய்த செய்த
செயலைப் பார்த்தாயா? என்றேன். அம்மா அலறிக்கொண்டு ஓடி வந்தாள். நான்
அவன் செய்த குறும்புச் செயலை மறைத்து, இவன் நீர் குடிக்கும் போது விக்கல்
எடுத்து வருந்தினான், அதனால் கத்தினேன்” என்றேன். நான் மறைத்துக்
கூறியதை ஏற்று அம்மாவும் அவன் முதுகைப் பலமுறை தடவிக் கொடுத்தாள்.
அப்போது அக்கள்வன் மகன் (அந்தத் திருடன்) தன் கடைக்கண்ணால் என்னைக்
கொல்வது போல் திருட்டுப்பார்வை பார்த்தான். தன் புன்முறுவலால் என்னை
மயக்கி என்னுள்ளத்தில் புகுந்தான்” என்று தன் தோழியிடம் தலைவி
கூறுகின்றாள்.

************************************************************************************************************
புறநானூறு

பாடியவர்: ஔவையார்

திணை: பொதுவியல்.

திணை விளக்கம்:
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத
கருத்துக்களையும், அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள கருத்துகளையும்
எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.

துறை: பொருண்மொழிக்காஞ்சி.

துறை விளக்கம்:
துறவியர்கள் கற்று உணர்ந்த நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது
இத்துறையாகும்.

பாடல்

நாடா கொன்றோ; காடா கொன்றோ;


அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

பாடல் விளக்கம்

● வாழ்வும் தாழ்வும் நிலத்தைப் பொறுத்தது அன்று.


● அந்த நிலத்தில் வாழ்கின்ற ஆடவரைப் பொறுத்தது.
● நற்பண்பும் நற்செயலும் உடைய ஆடவரே நாட்டின் நிலத்திற்கும்,
புகழுக்கும் வளத்திற்கும் காரணமாவர்.
● தீய நிலமாக இருந்தாலும், நற்பண்பு உடையவர்கள் அங்கே வாழ்ந்தால்
அத்தீய நிலம் நல்ல நிலம் என்றே கூறப்படும்.
● ஆனால் நல்ல நிலமாகவே இருந்தாலும் அங்கே தீயவர்கள் வாழ்ந்தால்
அந்த நல்ல நிலம் தீய நிலம் என்றே கொள்ளப்படும்.
● இதுவே உலகத்தின் இயற்கை என்று ஔவையார் கூறுகின்றார்.

புறநானூறு

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீ ரனார்

திணை விளக்கம்
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத
கருத்துக்களையும், அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள கருத்துகளையும்
எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.

துறை: பொருண்மொழிக்காஞ்சி.

துறை விளக்கம்
துறவியர்கள் கற்று உணர்ந்த நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது
இத்துறையாகும்.

பாடல்

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி


வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே; 5
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

பாடல் விளக்கம்

● இந்த உலகம் முழுவதையும் தனக்கே உரிமை கொண்டு ஆட்சி செய்கின்ற


மன்னனாக இருந்தாலும், இரவிலும் பகலிலும் உறக்கம் கொள்ளாமல்
விலங்குகளை வேட்டையாடித் திரிகின்ற கல்வியறிவற்ற ஒருவனாக
இருந்தாலும் இவ்விருவருக்கும் உண்பது, உடுப்பது ஆகிய இரண்டு
செயல்களும் பொதுவானதே.
● இதைப் போன்றே பிற தேவைகளும் பொதுவானதாகவே இருக்கும்.
இதுவே இயற்கையின் நியதி.
● ஆதலால், தான் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவுவதே
வாழ்வின் பயனாகும். அதை விடுத்து, தான் ஈட்டிய செல்வத்தைத் தானே
அனுபவிப்பேன் என்று இறுமாப்பு கொண்டு வாழ்ந்தால் அறம், பொருள்,
இன்பம் என்ற வாழ்வின் உறுதிப் பொருளை இழக்க நேரிடும் என்று
கூறுகின்றார் நக்கீ ரர்.

***********************************************************************************************

முல்லைப்பாட்டு – நப்பூதனார்

பத்துப்பாட்டில் நான்கு ஆற்றுப்படைகளுக்குப் பின் வைத்து


எண்ணப்படுவது முல்லைப்பாட்டு. இது அகம் சார்ந்த நூல். 103 அடிகளைக்
கொண்டது. பத்துப்பாட்டு நூல்களுள் அளவில் மிகச் சிறியது. இதன் ஆசிரியர்
காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். இந்நூல்
ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்
தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது எனினும் தலைவன் பெயர் பாட்டில்
கூறப்படவில்லை. இந்நூல் நெஞ்சாற்றுப்படை எனவும் அழைக்கப்படுகின்றது.

பாட்டின் உள்ளுறை

போர் காரணமாகத் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன்,


தலைவியிடம் கார்காலம் தொடங்குவதற்கு முன் திரும்பி வந்துவிடுவேன் என்று
உறுதியளித்துப் பிரிகின்றான். அவன் வரும்வரை தலைவி அவன் பிரிவை
ஆற்றியிருக்கின்றாள். கார்காலம் தொடங்குகின்றது. தலைவன் வரவில்லை.
தலைவி துயரம் கொள்கின்றாள். தோழியர் தேற்றுகின்றனர். ஆறுதல் பெறாத
தலைவி கண்ண ீர் விடுகின்றாள். தலைவன் போர் முடிந்து திரும்ப வருகின்றான்.
தலைவி தன் துயரம் நீங்கி மகிழ்ச்சி அடைகின்றாள். இச்செய்தியைக் கருவாகக்
கொண்டு முல்லைப்பாட்டு இயற்றப்பட்டுள்ளது. முல்லைத்திணையின்
உரிப்பொருளான இருத்தலும் இருத்தல் நிமித்தமும் இதன்பாற் விளக்கம்
பெறுகிறது.
கார்காலத்தின் சிறப்பு

முல்லைத்திணையின் பெரும்பொழுது கார்காலம். சிறுபொழுது


மாலைக்காலம். கார்கால மாலைக்காலம் தலைவியின் துன்பத்தை
மிகுதிப்படுத்தும் தன்மை கொண்டது. எனவேதான், தலைவன் கார்காலம்
தொடங்கும்முன், தான் வந்து விடுவதாக உறுதியளிக்கின்றான். நிலம், காலம்,
பொழுது ஆகிய இயற்கைகளின் அடிப்படையில் எழும் மன உணர்வுகளை
இம்முல்லைப்பாட்டு நன்கு சித்திரிக்கின்றது.

முல்லையும் வஞ்சியும்
இந்நூல் “வஞ்சிதானே முல்லையது புறனே” என்ற தொல்காப்பியரின்
கூற்றுப்படி முல்லைத்திணைக்குப் புறனாக அமையும் வஞ்சித்திணையைத்
தொடுத்துச் செல்கின்றது. முல்லைத்திணைக்கு நிலம் காடு, வஞ்சித்திணையின்
நிலமும் காடு. தலைவனைப் பிரிந்த தலைவி முல்லைத்திணைக் காட்டில்
தங்கியிருத்தல் போல, தலைவனும் தன் போர்ப்படையுடன் பகைவர் நாட்டின்
காட்டில் பாசறை அமைத்துத் தங்கியிருக்கின்றான். இதனால் அகத்திணையாகிய
முல்லைக்குப் புறத்திணையாகிய வஞ்சி புறனாக அமைகின்றது. முதல், கரு, உரி
ஆகியவற்றால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய முல்லை, வஞ்சி என்னும்
இவ்விரண்டு திணைகளையும் நப்பூதனார் தம் முல்லைப்பாட்டில் அடுத்து
அடுத்துத் தொடுத்துச் சென்றாலும் முல்லைத்திணை ஒழுக்கமே முதன்மை
பெறுகிறது.

சிறப்பு

இப்பாட்டில் முதல் 23 அடிகள் கார்காலத்தின் மாலைப் பொழுதையும்,


தலைமகளின் பிரிவாற்றாமையையும் பாடுகின்றன. அடுத்த 57 அடிகள் பாசறை
அமைப்பு, தலைவனின் நிலையை எடுத்துரைக்கின்றன. அடுத்த 9 அடிகள்
தலைவியின் துயரத்தைக் கூறுகின்றன. இறுதி 14 அடிகள் மழைக்காலச்
சிறப்பை, தலைவனின் வருகையை உணர்த்துகின்றன. இவ்வாறு காட்சிகளை
மாற்றி மாற்றிக் காட்டி இறுதியில் அவற்றை கலைநயத்துடன் இணைக்கும்
திறன் முல்லைப்பாட்டின் மிகப் பெரும் சிறப்பாகும்.

நூலின் ஆசிரியர்

முல்லைப்பாட்டின் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்து பொன்வணிகனார்


மகன் நப்பூதனார் என்று வழங்கப்படுகின்றது. இதனால் நப்பூதனார்
காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதும், இவர் வணிக்குடியில் பிறந்தவர்
என்பதும், இவருடைய தந்தை பொன்வாணிகம் செய்தவர் என்பதும்
அறியப்படுகின்றது. பூதன் என்பது இவருடைய இயற்பெயர். அப்பெயர் முன்பு
சிறப்புப்பொருளைத் தரும் இடைச்சொல்லாகிய “ந” என்பதைச் சேர்த்தும், “ஆர்”
என்ற உயர்வு குறித்த விகுதியும் சேர்ந்து நப்பூதனார் என்று வழங்கப்படுகின்றார்.
நக்கீ ரனார், நத்தத்தனார், நக்கண்ணையார், நப்பசலையார், நச்செள்ளையார்
முதலிய சங்ககாலப் புலவர்களின் பெயர்களைப்போல இப்பெயரும்
அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முல்லைப்பாட்டைத் தவிர இவர் பாடியதாக
வேறு எந்தப் பாடலும் பண்டைய இலக்கியங்களில் காணப்படவில்லை.

முல்லைப்பாட்டின் பொருள்

மழைப் பொழிவு (1-6)

அலை ஓசை முழங்குகின்ற குளிர்ந்த கடல் நீரைக் குடித்து எழுந்தது மேகம்.


அகன்ற உலகை வளைத்தது. வலப்பக்கமாக உயர்ந்தெழுந்தது. மலையில்
தங்கியது. மாலைக்காலத்தில் பெருமழையாகப் பொழிந்தது. இக்காட்சி திருமால்
வாமன அவதாரம் கொண்டபோது, மாவலிசக்கரவர்த்தியிடம் மூன்றடி மண்
கேட்க, மாவலி மூன்றடி மண் கொடுக்கும் பொருட்டு வாமனரின் கரங்களில் நீர்
வார்த்தார். அந்நீர் வாமனரின் கைகளில் பட்டவுடன் திருமால், விண்ணையும்
மண்ணையும் அளக்கும்படி உயர்ந்து எழுந்ததுபோலக் காட்சியளித்தது.

தெய்வத்தை வணங்குதல் (7-11)


மாலைப்பொழுதில் பெண்கள் காவல் கொண்ட பழமையான ஊருக்கு
வெளியே உள்ள தெய்வத்தை நோக்கிச் சென்றனர். யாழிசை போன்று
முரலுகின்ற வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும்படியாக முல்லைப்பூக்கள்
மலர்ந்தன. அம்மலர்களையும், நெல்லையும் கொண்டு வந்து தூவி தெய்வத்தை
வணங்கி நற்சொல் எதிர்பார்த்து நின்றனர்.

நற்சொல் (விரிச்சி) கேட்டல்(12 -16)


ஆயர் மகள் இளங்கன்றுக்குட்டியைச் சிறிய தாம்புக் கயிற்றில் கட்டி
வைத்திருந்தாள். அது தாய்ப்பசுவை எண்ணித் தவித்துக் கொண்டிருந்தது. அந்தக்
கன்றின் கழுத்தைத் தன் கைகளில் அணைத்துக்கொண்டு “கோவலர் பின்னிருந்து
ஓட்டிக் கொண்டு வர உன் தாய்ப்பசு இப்பொழுதே வந்துவிடும்” என்று ஆறுதல்
கூறிக் கொண்டிருந்தாள்.

இந்நற்சொற்கள் தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த பெண்களின்


காதில் விழுந்தது. இதுவே தாங்கள் எதிர்பார்த்த நற்செய்தி என்று மகிழ்வுடன்
அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர்.

தலைவியைத் தேற்றுதல்(17 – 23)


நற்சொல் கேட்ட பிறகு அப்பெண்கள் யாவரும், போரின் காரணமாகப்
பிரிந்து சென்ற தலைவனை எண்ணிக் கலங்கிக் கொண்டிருக்கும் தலைவியை
நோக்கிச் சென்றனர். தாங்கள் கேட்ட நற்சொற்களைக் கூறி “தலைவன் தான்
மேற்கொண்ட வினை முடிந்து பகைவரிடம் திறைப் பொருள் பெற்று விரைந்து
வந்து உன்னைச் சந்திப்பார். ஆதலால், நீ உன் மனத்தடுமாற்றத்தால் அடையும்
துன்பத்தைப் போக்கிக் கொள்” எனப் பன்முறை கூறித் தேற்றினர். அவர்களின்
சொற்களைக் கேட்டு மனம் ஆற்றாதவளான தலைவியின் கண்களிலிருந்து
முத்துப்போன்ற கண்ண ீர்த் துளிகள் விழுந்தன.
பாசறையின் அமைப்பு (24 - 28)
காட்டாறு பாய்கின்ற முல்லைக் காட்டில், மணம் வசும்
ீ பிடவம்பூச் செடிகள்
களையப்பட்டு, வேடருடைய அரண்கள் அழிக்கப்பட்டு, வேட்டையாடும்
விலங்குகள் உள்ளே வராத வண்ணம் முள் வேலியை மதிலாக வளைத்துக்
கடலைப்போல் அகலமாக பாசறை வடு ீ உருவாக்கப்பட்டது. அது பாடி வடு ீ என்று
அழைக்கப்படும். அவ்வட்டில்
ீ தலைவன் தங்கியிருந்தான்.

போர் யானையும் யானைப் பாகனும் (29 - 35)


பாசறை அமைக்கப்பட்ட தெருக்களில் உவலைக் கொடி படர்ந்த கூரைக்
கூடாரங்கள் இருந்தன. தெருக்கள் பிரியும் முற்றத்தில் காவலுக்காக யானைகள்
நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த யானைகளுக்குக் கம்பும், கதிரோடு கூடிய
நெற்கதிர்க் கட்டுகளும், அதிமதுரத் தழையும் உணவாகக் கொடுக்கப்பட்டன.
அந்த யானைகள் அவற்றைத் தன் கைகளால் வாங்கி, உண்ணாமல் அவற்றால்
தன் நெற்றியைத் துடைத்துக் கொண்டன. கையில் அங்குசம் வைத்திருந்த
இளைஞர்களான பாகர்கள் யானைகளுக்குப் புரிகின்ற வடமொழிச் சொற்களைக்
கூறி அவற்றை உண்ணும்படிப் பயிற்றுவித்தனர்.

அரண் (36 - 42)


தவம் பூண்ட அந்தணர் மூன்று கோல்கள் இணைந்த முக்கோலைக்
கையில் வைத்திருப்பர். அந்தக் கோலில் தங்கள் காவி ஆடையைத் தொங்க
விடுவர். அதுபோல போர் வரர்கள்
ீ தங்கள் வில்லினை நிலத்தில் ஊன்றி
அவற்றின்மேல் தங்கள் அம்புகள் வைத்திருக்கும் தூணியைத் தொங்க விட்டனர்.
தங்கள் வேல்களை வரிசையாக நட்டுக் கயிற்றால் இறுகக் கட்டிக் கூடாரம்
அமைத்தனர். பின்னர் எறிகோல்களை அதன்மீ து நட்டு தோலால் ஆன
கருவிகளை வரிசையாகப் பரப்பிப் பிணைத்து இருக்கை அமைத்தனர். இவ்வாறு
வில்லால் செய்யப்பட்ட அரணில் தலைவனை அமர வைத்தனர்.

அரசனுக்கு அமைத்த பாசறை (43- 44)


பல்வேறு படை வரர்களின்
ீ இருக்கைக்கு நடுவே, வேறு ஒரு தனி இடத்தில்
தலைவனுக்கென்று தனிப் பாசறையை அமைத்தனர். பலநிறமுடைய மதில்
திரையை வளைத்து அதன் உள்ளே அரசனுக்கு இருக்கை அமைத்தனர். பல்வேறு
படைவரர்கள்
ீ அதனைக் காவல் புரிந்தனர்.

மங்கையர் விளக்கு ஏற்றுதல் (45- 49)


முதுகில் கூந்தல் புரள, கையில் வளையலுடன், தன் கச்சோடு வாளினைச்
சேர்த்துக் கட்டிய மங்கையர் அரசனுக்கென்று அமைத்த பாசறையில் உள்ள
பாவை விளக்கில் நீண்ட திரியை இட்டனர். நெய் வார்த்து விளக்கேற்றினர்.
விளக்கின் சுடர் மங்கும்போதெல்லாம் அதன் திரியைத் தூண்டிவிட்டுக்
கொண்டிருந்தனர்.

மெய்க்காப்பாளர் காவல் புரிதல் (50 -54)


நீண்ட நாக்கினை உடைய மணி இது நள்ளிரவு என ஒலித்துக் காட்டியது.
புனலிப்பூக்கள் பூத்த சிறு செடிகள், மழைத் தூறலுடன் வசுகின்றீ காற்றில்
அசைந்தாடுவதைப் போன்று, தம் தலையைத் துகிலால் மயிர்க்கட்டுக்
கட்டியிருக்கும் வயது முதிர்ந்த மெய்க்காப்பாளர்கள் தூக்க மயக்கத்துடன் ஆடி
அசைந்து கொண்டே மன்னனைச் சூழ்ந்து காவலாக நின்றனர். அவர்கள்
மெய்ப்பை எனப்படும் சட்டை அணிந்திருந்தனர்.

நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல் (55-58)


பிழையின்றி காலத்தைக் கணிக்கும் நாழிகைக் கணக்கர் மன்னனைத் தம்
கையால் தொழுது வணங்கினார். மன்னனை வாழ்த்திவிட்டு “கடல் சூழ்ந்த
உலகத்தை வெல்ல வந்தவரே உன்னுடைய நாழிகை வட்டிலில் சென்ற நாழிகை
இதுவே. காண்பாயாக” என்று மன்னனுக்கு அறிவிக்கின்றார். (நாழிகை வட்டில் –
வட்டிலில் நீரிட்டு ஒரு சிறு துளை வழியாக அந்நீரைச் சிறிது சிறிதாகக் கசிய
விட்டு அந்நீரை அளந்து காணும் கருவி)

யவனர் செயல் (56- 66)


வலிமையான கயிற்றால் திரைகள் இழுத்துக் கட்டப்பட்ட அரசனின்
பாசறையில் உள் அறை, புற அறை என இரண்டு அறைகள் இருந்தன. அவை
புலிச் சங்கிலியால் ஒப்பனை செய்யப்பட்டிருந்தன. உள் அறையாகிய பள்ளி
அறையில் அரசன் படுத்திருந்தான். அவனருகில் வாய் பேச முடியாத ஊமை
வரர்கள்
ீ பாதுகாவலுக்காக நின்றனர். அவர்களின் தோற்றம் அச்சம்
கொள்ளத்தக்கதாக இருந்தது. மடங்கிப் புடைத்துத் தோன்றும்படி நெருங்கிக்
கட்டின ஆடை அணிந்திருந்தனர். அவ் ஆடைமேல் குதிரைச் சவுக்கு வளைந்து
கிடக்கிறது. வலிமை மிக்க உடம்பில் தங்கள் உடம்பில் சட்டை அணிந்திருந்தனர்.
பாசறையின் மணி விளக்கை எரிய வைத்துக் கொண்டிருந்தனர்.

மன்னன் நிலை (67 - 76)

மன்னன் ஒரு கையைப் படுக்கை மேல் வைத்து, கடகம் அணிந்த மற்றொரு


கையால் தலையைத் தாங்கியவனாய் உறக்கம் கொள்ளாமல் இரவு முழுவதும்
முன்நாளில் நடந்த போர் நிகழ்ச்சிகளை நினைத்தவனாய்ப் படுத்திருந்தான்.

● போரில் பகைவர் எறிந்த வேல் உடலைக் கிழித்தமையால் புண் மிகுந்து தம்


பிடி யானைகளை மறந்து நின்ற களிறுகளை நினைக்கின்றான்.
● அடிபட்ட பாம்பு துடிப்பதைப்போல களிறுகள் தம் வெட்டுப்பட்டுக் கைகளை
இழந்து வருந்தும் காட்சியை நினைக்கின்றான்.
● தாம் அணிந்த வஞ்சி மாலைக்கு வெற்றியைத் தேடித் தந்து, செஞ்சோற்றுக்
கடன் தீர்த்து போரில் இறந்த வரரை
ீ நினைக்கின்றான்.
● கூர்மையான அம்பின் நுனிகள் தோலில் பாய்ந்ததால் வலி பொறுக்காது
தம் செவியைச் சாய்த்துப் புல் உண்ண இயலாமல் வருந்தும் குதிரைகளை
நினைக்கின்றான்.
● இவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டே உறக்கம் கொள்ளாமல்
தவிக்கின்றான்.

பாசறையில் வெற்றி முழக்கம் (77 - 79)

மறுநாள் போரில், படைக்கருவியால் பகைவரை வென்று வெற்றி தேடித் தந்த


போர் வரர்கள்
ீ பகை மன்னர்கள் நடுங்கும்படி வெற்றி முரசை முழங்கினர்.
பாசறையில் அவ்வெற்றி முழக்கத்தைக் கேட்டுக் கொண்டே வினை முடித்த
மனநிறைவோடு இனிதாகத் துயில் கொள்கின்றான் மன்னன்.

தலைவியின் துயரம் (80 - 88)

பாவை விளக்குகள் ஒளி வசும் ீ உயர்ந்த ஏழடுக்கு மாளிகையில்


அமர்ந்திருக்கும் தலைவி தலைவனின் பிரிவை ஆற்றாதவளாய் மனம்
வருந்துகின்றாள். “நான் வரும் வரை பிரிவை ஆற்றியிரு” எனக் கூறிச் சென்ற
தலைவனின் சொல்லை மீ றுவது கற்பிற்கு இழுக்காகும் என்று தம் மனத்தைத்
தேற்றுகின்றாள். எனினும், பிரிவாற்றாமையால் வருத்தம் கொண்டு மீ ண்டும்
தலைவனை எண்ணி மயங்குகின்றாள். பிரிவின் துயரால் உடல் மெலிந்து
போனதால் அவள் அணிகலன்கள் கழண்டு விழுகின்றன. அம்பு தைத்த
மயில்போல நடுங்கி நிற்கிறாள். மழைநீர் கூரை மேல் அருவி போன்று
விழுகின்ற ஓசையைக் கேட்டவாறு நெஞ்சம் ஆற்றுகின்றாள். அப்போது அவள்
காதுகளில் தலைவன் வரும் ஆரவார ஓசை கேட்டது.

அரசன் மீ ண்டு வருதல் (89 - 92)


பகைவரை வென்று அவர்தம் நிலங்களைக் கவர்ந்து திரண்ட படையோடு
வெற்றிக் கொடி உயர்த்தி ஊது கொம்பும் சங்கும் முழங்க வருகின்றான்
தலைவன்.

மழையால் செழித்த முல்லைநிலம் (93-100)


அரசன் வரும் வழியில் காயா மலர்கள் மலர்ந்திருக்கின்றன. கொன்றை
மலர்கள் பூத்திருக்கின்றன. வெண் காந்தள் மொட்டுக்கள் விரிந்திருக்கின்றன.
தோன்றி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. முல்லை நில வழியில் பருவ மழை
பெய்த காரணத்தால் நன்கு விளைந்த கதிர்கள் காணப்படுகின்றன. அதனருகில்
கொம்புகள் கொண்ட இரலை மான்களுடன் (ஆண்) மடப்பம் பொருந்திய மான்கள்
(பெண்) துள்ளி குதித்து விளையாடுகின்றன. மழை மெதுவாகப் பொழிந்து
கொண்டிருந்தது.

தேர் வருகை (101 – 103)


வள்ளிக்கிழங்கு முதிர்ந்திருக்கும் முல்லைக் காட்டில் அரசனது
தேர்க்குதிரைகளைத் தேரோட்டி விரைவாகச் செலுத்திக் கொண்டிருந்தான். அந்த
ஓசைகளால் தலைவியின் காதுகள் குளிர்ந்து மகிழ்ந்தன.

************************************************************************************************************

அற இலக்கியம்

திருக்குறள்

அறன் வலியுறுத்தல்
குறள் 1

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு


ஆக்கம் எவனோ உயிர்க்கு.

விளக்கம்
அறமானது சிறப்பைத் தரும்; செல்வத்தையும் தரும்; அத்தகைய
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக்
கூடிய வழி வேறு எதுவும் இல்லை.

குறள் 2

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை


மறத்தலின் ஊங்கில்லை கேடு.

விளக்கம்
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய
வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை
விடத் தீமையானதும் வேறில்லை.

குறள் 3

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே


செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

விளக்கம்
நம்மால் முடிந்த வகைகளில் எல்லாம், முடியக்கூடிய வழிகளில் எல்லாம்,
அறச் செயல்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.

குறள் 4

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்


ஆகுல நீர பிற.

விளக்கம்
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருப்பதே அறமாகும்.
மனத்தூய்மை இல்லாத மற்றவை யாவும் வெறும் ஆரவாரமே தவிர
வேறொன்றும் இல்லை.
குறள் 5

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்


இழுக்கா இயன்றது அறம்.
விளக்கம்
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் சிறிதும்
இடம் தராமல் வாழ்வதே அறம் ஆகும் . அவை யாவும் அறவழிக்குப்
பொருந்தாதவைகள்.

குறள் 6

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது


பொன்றுங்கால் பொன்றாத் துணை.

விளக்கம்
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை
மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத்
துணை நிற்கும்

குறள் 7

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை


பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

விளக்கம்
அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல
வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி
மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை
ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல
இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும்
மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

குறள் 8

வழ்நாள்
ீ படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

விளக்கம்
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து
நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத்
தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

குறள் 9

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்


புறத்த புகழும் இல.
விளக்கம்
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு
பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

குறள் 10

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு


உயற்பால தோரும் பழி.

விளக்கம்
பழிச் செயல்கள் செய்யாமல் தன்னைப் பாதுகாத்து, தன் வாழ்நாள்
முழுவதும் அறம் செய்ய வேண்டியது மனிதனின் கடமையாகும்.

*************************************************************************************************************
நாலடியார்

கல்வி
பாடல்

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்


மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.

விளக்கம்
நம் தலையில் உள்ள முடிகளைச் சீர்ப்படுத்துவதால் வருகின்ற அழகும்,
கரையிட்ட (border) ஆடையை அணிவதால் உண்டாகும் அழகும், மஞ்சள்
பூசுவதால் உண்டாகின்ற அழகும் உண்மையான அழகல்ல. அவை யாவும்
புறத்தே உள்ள அழகை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. மாறாக, அறநெறியில்
நடந்து, நடுவுநிலைமையோடு வாழ்கின்றோம் என்ற பெருமிதத்தைத் தருகின்ற
கல்வியே உண்மையான அழகாகும். அது ஒன்றே அகத்தில் அழகைத் தரக்
கூடியதாகும்.

************************************************************************************************************

நான்மணிக்கடிகை

பாடல்
நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கு அணியாம்
தான்செல் உலகத்து அறம்

விளக்கம்
● பசுமையாகக் காணப்படும் நெல்லும், கரும்பும் வயலுக்கு அழகைத்
தருகின்றன.
● நீர் நிறைந்த குளத்திற்குத் தாமரைக் கொடியின் இலையும் மலரும்
அழகைத் தருகின்றன.
● பெண்மைக்கு அழகு நாணமுடைமை.
● அதுபோல பிறருக்குச் செய்கின்ற அறச் செயல்கள் ஒரு மனிதனுக்கு
அழகைத் தருகின்றன.

*************************************************************************************************************
பழமொழி நானூறு

பாடல்

தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,


செந்நடை சேராச் சிறியார்போல் ஆகாது,
நின் நடையானே நட அத்தா! நின் நடை
நின் இன்று அறிகிற்பார் இல்.

விளக்கம்

● சிறுமைக் குணமுடையவர் தம் நடத்தையைப் பற்றி எண்ணாமல், தம்


சுற்றத்தாரைப் பற்றி அறியாமல், நன்னடத்தையைக் கடைப்பிடிக்காமல்
நடந்து கொள்வர்.
● இத்தகைய சிறுமையுடையவர் போல நடந்துகொள்ளாமல் நம்
பெருமைக்கு ஏற்ற நடத்தையைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில்
நம்முடைய நடத்தையை நம்மைத் தவிர வேறு யார் அறிந்துகொள்ள
முடியும்?
● ஆதலால் உயர்ந்த எண்ணம் கொண்டு ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள
வேண்டும் என இப்பாடல் வலியுறுத்துகின்றது.
*************************************************************************************************************

You might also like