Professional Documents
Culture Documents
படக்கதை
படக்கதை
கேவின் பள்ளி
முடிந்து தாமதமாக வீடு திரும்பி
கொண்டிருந்தான். வழியில்,
பவிலனையும் பிரவினையும் கண்டான்.
இருவரும் ஆனந்தமாக ஆற்றில்
குளித்துக் கொண்டிருந்தனர்.
இருவரும் கோவினை நிறுத்தி,
அவனையும் ஆற்றில் நீச்சலடித்து
விளையாட அழைத்தனர். “ இன்று என்
பெற்றோர் வீட்டிற்குத் தாமதமாக
வருவார்களே!” என்றவாறு பெற்றோர்களின்
அனுமதியின்றி எப்படி விளையாட
சம்மதிப்பது என்று புலம்பினான்.
அவனின் காரணத்தைக் கேட்டறிந்ததும்,
பிரவின் “ அப்படியா! இன்று நாம் ஆசை தீர
ஆற்றில் குளிப்போம் வா” என்று
உற்சாகமாக கேவினை அழைத்தான்.
ஆனால், கேவின் தனக்கு நீச்சல்
தெரியாது என்று ஒப்புக் கொண்டான்.
கேவினுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும்
வகையில் “பயப்படாதே! நாங்கள்
கற்றுத்தருகிறோம்” என்று கூகூ றி
அவனின்
கைகளைப் பிடித்து இழுத்தான்.
கேவினும் அவர்களின் ஆசை
வார்த்தையைக் கேட்டு ஆற்றில்
இறங்கினான்.
அவர்கள் இருவரும் கேவினுக்குச் சிறிது
நேரம் நீச்சல் சொல்லித் தந்தனர். பிறகு,
அவர்கள் அவனைத் தனியாக விட்டு
சென்று நீச்சலடித்தனர் .
தூதூ ரமாகச்
தனியாக இருந்த கேவின் மெல்ல நீரில்
ஆரம்பித்தான் .
மூமூ ழ்க
இருவரின் அலட்சியப் போக்கினால்
கேவினைக் காப்பாற்ற
இயலவில்லை.கேவினின் இழப்பை எண்ணி
இருவரும் மிகவும் வருந்தினர்.அன்று
முதல் இருவரும் பெற்றோர்களின்
துணையின்றி எந்தவொரு இடத்திற்கும்
தனியாகச் செல்வதில்லை.