பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள்
[பார் ஆண்ட தமிழர்கள் பராரிகளைப் போலப் பிறரின் பாதுகை தாங்கி
வாழும் பரிதாப நிலைகளைப் போக்கிடும் ஆற்றல் இந்தப் பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகளுக்கு உண்டு.]
ஒன்று முதல் ஐந்து வரை உள்ள ஆணைகள்; இந்தப் பதிவில்:
கோயில்கள் வழி மட்டுமே நிகழ வேண்டிய அருளாட்சி, பொருளாட்சி:
1. தமிழர்கள் தங்களுடைய இனத்தைச் சார்ந்தவர்களை அதிகமாக
விரும்பவும், நம்பவும், மதிக்கவும், துணையாக ஏற்றுக் கொள்ளவும், வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளவும் .... நிகழ வேண்டும். அப்பொழுதுதான், தமிழினம், தன்னம்பிக்கையும், இன ஒற்றுமையும், விடுதலை வாழ்வும் பெற்றிட முடியும்.
இதற்காகத் தமிழ் இனநல அலுவலகங்களாகச் செயல்படும் கோயில்
சொத்துக்களும் [அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்கள், கருவறைகள், வெட்டவெளிக் கருவறைகள் முதலியவற்றையும் கோயில் என்ற சொல் இங்கு குறிக்கின்றது.] கோயில் நடைமுறைகளும், உரிமைகளும், பெருமைகளும் அந்தந்த கோயிலின் வட்டாரத்தில் உள்ள (i) கோயில் பிள்ளை, (ii) முதலி, (iii) பண்டாரம், (iv) அம்பலம், (v) அரசு, (vi) நாட்டாண்மை, (vii) குருமார், (viii) குருக்கள் எனும் எண்பேராயத்திடம் ஒப்படைக்கப் படல் வேண்டும். இதில் அரசோ, பெருவணிகரோ, பெருநிலக் கிழாரோ தனிப்பட்ட முறையில் தலையிடக் கூடாது! கூடாது! கூடாது! கூடவே கூடாது! 2. கோயில்தான் கலைப் பயிற்சிப் பள்ளியாக அரங்கேற்ற மண்டபமாக, சிற்ப ஓவியக் கூடமாக, மருத்துவமனையாக, போர்க்கலைப் பாடிவடாக, ீ இலக்கிய இலக்கணக் கல்விச் சாலையாக, அரசியல் வித்தகம் கற்பிக்கும் கலாசாலையாக இயங்க வேண்டும். மக்கள் மேற்படி நிலைகளைக் கோயிலில்தான் கற்றும் உற்றும் தேர்ச்சி பெற வேண்டும். ஏனெனில், தெய்வகம் ீ கலக்காத கலை உய்வைத் தராது. அருள் சேராத முயற்சி இருளைத்தான் சேர்க்கும்.
3. ‘கோயில்களில் ஆவி, ஆன்மா, ஆருயிர், சிந்தை, நெஞ்சம், மெய் எனும்
ஆறுக்கும் தேவையான விருந்தும் மருந்தும் வழங்கப் படும் செயல்திட்டம்’ அன்னியர்களாலும், அன்னிய மொழிகளாலும் முடக்கப் பட்டு, அடக்கப் பட்டு ஒடுக்கப்பட்டு விட்டன. இவற்றைச் சரிசெய்ய வேண்டுமென்றால் அந்தந்தக் கோயில்களின் மரபுப்படி குருமார், குருக்கள், பூசாறி, ஓதுவார், பண்டாரம், முதலி, பிள்ளை, இசை வேளாளர், ..... _எனப்படும் 48 வகையான கோயில் ஊழியர்களும் தமிழர்களாகவே தேர்ந்தெடுக்கப் பட்டு நியமிக்கப்பட வேண்டும். இவர்களாலேயே கோயில் பூசைகளும், சமயச் சடங்குகளும், சாத்திரியார் பணியும் பிறவும் நடந்திடல் வேண்டும்.
4. யவனர், சோனகர், சீனர் முதலியோர்களின் கோயில்களிலே அவர்களுடைய
மொழியே ஆட்சி மொழியாக இருப்பது போல், தமிழர்களின் கோயில்களில் தமிழ் மொழியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.
பிறாமணர்கள் மற்ற அன்னியர்கள் போல் தங்களுக்கெனத் தனிக் கோயில்கள்
வைத்து அதில் சமசுக்கிருத மொழியை ஆட்சி மொழியாக வைத்துக் கொள்ளலாம். யவனர், சோனகர், சீனர் போலப் பிறாமணர்களும் தமிழர்களின் கோயிலுக்குள் வரத் தேவையில்லை. ஏனெனில், இவர்களாலும் இவர்களுடைய சமசுக்கிருத மொழியாலும்தான் மெய்யான இந்துமதம் சிதைக்கப் பட்டு பொய்யான ஹிந்துமதம் உருவாக்கப் பட்டது.
5. கோயிலில் செயல்படும் அறங்காவலர்கள், அறங்கூறவையத்தார், அரசு
நாயகங்கள், அம்பலத்தார் முதலியோர்கள் அந்தந்தக் கூற்றத்திற்கும், வட்டாரத்திற்கும் பொறுப்பேற்று அருளாட்சி புரிய வேண்டும். இதுவல்லாமல் அரசியலாரோ, பெருவணிகரோ, பெருநிலக் கிழாரோ இந்தக் கோயில் வழிச் செயல்படு அவையங்களில் தலையிடக் கூடாது.
நமது அன்பு குருதேவரின் எழுத்துகளிருந்து.. (18 ஆணைகள் தொடரும்) ஓம்