You are on page 1of 15

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை

எனைக் காக்க உனையின்றி யாருமில்லை


உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா

கற்பனையில் வருகின்ற சொற்பதமே


அன்பு கருணையில் உருவான அற்புதமே
கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு கருணையில் உருவான அற்புதமே
சிற்பச்சிலையாக நிற்பவனே
சிற்பச்சிலையாக நிற்பவனே
வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே
முருகா முருகா

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை


எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

அமுதம் இருக்கின்ற பொற்குடமே


இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே
முருகா முருகா

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை


எனைக் காக்க உனையின்றி யாருமில்லை

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை


எனைக் காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா முருகா முருகா

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்


ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன்
அருளால் பூவாவேன்.. நான்...

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்


ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்


பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன்
பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன்
தமிழ்ப் பேச்சானாலும்
திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
தமிழ்ப் பேச்சானாலும்
திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
மனம் பித்தானாலும் முருகன்
அருளால் முத்தாவேன்...நான்...

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்


ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன

சொல்லானாலும் ஓம்என்றொலிக்கும் சொல்லாவேன்


பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்
சொல்லானாலும் ஓம்என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்
அருள் உண்டானாலும் வடும்

பெயரும் உண்டாவேன்
அருள் உண்டானாலும் வடும்

பெயரும் உண்டாவேன்
தனி உயிரானாலும் முருகன்
அருளால் பயிராவேன்..நான்...

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்


ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன்


அருளால் பூவாவேன்..நான்...
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

முருகா.....முருகா.....முருகா..

********************************************************************************

தத்தத்தன தத்தத் தனதன


     தத்தத்தன தத்தத் தனதன
          தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

......... பாடல் .........

முத்தைத்தரு பத்தித் திருநகை


     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்


     முற்பட்டது கற்பித் திருவரும்
          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு


     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய


     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர


     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்


     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை


     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை


     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான


பல்வரிசையும் இளநகையும் அமைந்த

அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே,

சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,

முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வட்டுக்கு


ீ ஒப்பற்ற ஒரு
விதையாக விளங்கும் ஞான குருவே,

எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர்


பரமசிவனார்க்கு

சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான


ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,

இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய


இருவரும்,

முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி


தேவர்களும் அடி பணிய நின்றவனே,

பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத்


தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,

ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்


கொண்டு பாற்கடலைக் கடைந்து,

ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்


பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,

பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,


தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான


நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு


என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ?

(இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை


விரிவாக வருணிக்கிறது).

தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து,


சிலம்புகள் அணிந்த

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து


காளிதேவி

திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம்


செய்யவும்,

கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,

திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத்


தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**

சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக


எனவோத ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக'
என்ற தாள ஓசையைக் கூறவும்,

கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை


வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,

களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்

குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென


கொட்புற்றெழ ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு
'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச்
சுழன்று மேலே எழவும்,

நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத


மனப்பான்மையே கொண்ட அசுரர்களை

வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி


கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,

ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த,


போர் செய்யவல்ல பெருமாளே.

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?


கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை
அஆஆ.. ஆஆஆ.. மருத மலை மருத மலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா


மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்


மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே

மருதமலை மாமணியே முருகய்யா


தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்


பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..

மருதமலை மாமணியே முருகய்யா


தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்


ஆ...ஆ ஆ ஆ....ஆ...ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக


எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்


பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்

பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே


பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே


அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது


சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா
ஆஆ...ஆஆ...ஆஆ.
தேவர் வணங்கும் மருதமலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா


தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா

கற்பனை என்றாலும் ...


கற்சிலை
என்றாலும்
கற்பனை என்றாலும் ...
கற்சிலை
என்றாலும்
கந்தனே உனை மறவேன்
நீ ...
கற்பனை என்றாலும் ...
கற்சிலை
என்றாலும்
கந்தனே உனை மறவேன்...
அற்புதமாகிய
அருட்பெரும் சுடரே
அற்புதமாகிய
அருட்பெரும் சுடரே
அற்புதமாகிய
அருட்பெரும் சுடரே
அறுமறை தேடிடும்
கருணையங் கடலே
அறுமறை தேடிடும்
கருணையங் கடலே
கற்பனை என்றாலும் ...
கற்சிலை
என்றாலும்
கந்தனே உனை மறவேன்
நிற்பதும் நடப்பதும்
நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும்
நின் செயலாலே
நினைப்பதும்
நிகழ்வதும் நின்
செயலாலே
நினைப்பதும்
நிகழ்வதும் நின்
செயலாலே
கற்பதெல்லாம் உந்தன்
கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன்
கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன்
கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன்
கண்விழியாலே
கற்பனை என்றாலும் ...
கற்சிலை
என்றாலும்
கந்தனே உனை மறவேன்...
கந்தனே உனை மறவேன்
கந்தனே உனை மறவேன்
கந்தனே உனை மறவேன்

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா


சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ


கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கழல் ஆறுபடை வடும்
ீ நிலையான ஜோதி உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்


இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட
இணையில்லா நின்திருப் புகழினை நான் பாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அரகர சிவசுத மால்மருகா என
அனுதினம் ஒருதரமாகிலும் - உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

சுடர்மிகு வடிவேலா !

உள்ளம் உருகுதய்யா...
உள்ளம் உருகுதய்யா - முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே - எனக்குள்
ஆசை பெருகுதப்பா
பாடிப் பரவசமாய் - உன்னையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி - முருகா
ஓடி வருவாயப்பா
பாசம் அகன்றதய்யா - பந்த
பாசம் அகன்றதய்யா - உந்தன்மேல்
நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே - எந்தன்
ஈனம் மறைந்ததப்பா
ஆறுத் திருமுகமும் - உன் அருளை
வாரி வழங்குதய்யா
வரமிகுந்தோளும்
ீ கடம்பும்
வெற்றி முழக்குதப்பா
கண்கண்ட தெய்வமய்யா - நீ இந்தக்
கலியுக வரதனய்யா
பாவி என்றிகழாமல் - எனக்குன்
பதமலர் தருவாயப்பா
உள்ளம் உருகுதய்யா - முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே - எனக்குள்
ஆசை பெருகுதப்பா

********************************************************************************************************************************************

முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு


முற்றிய வினை தீருமே
முருகனை கூப்பிட்டு
முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே
உடல் பற்றிய பிணி ஆறுமே
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே
அப்பன் முருகனை கூப்பிட்டு
குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு
குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு
குறைகள் யாவும் போகுமே
அவர் குடும்பம் தழைத்தோங்குமே
குமரனை கும்பிட்டு கொண்டாடுவோருக்கு
குறைகள் யாவும் போகுமே
அவர் குடும்பம் தழைத்தோங்குமே
சூர சமர வேலாயுதம் பக்கத்துணை கொண்டால்
சகல பயம் நீங்கும்
ஐயன் முருகனைக் கூப்பிட்டு
அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்
முருகா
முருகா
அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்
அருகில் ஓடி வருவார்
அன்பு பெருகி அருள் புரிவார்
அந்தக் கருணை உருவான குருபரன் என்றுமே கைவிடாமல் ஆளுவார்
அப்பன் முருகனைக் கூப்பிட்டு
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு
காரியம் கைகூடுமே பகை மாறி உறவாடுமே
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு
காரியம் கைகூடுமே பகை மாறி உறவாடுமே
சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவு உண்டாகி மேன்மை உயர்வாகுமே
ஐயன் முருகனைக் கூப்பிட்டு
முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே
முருகனை கூப்பிட்டு
முருகா

எனக்கும் இடம் உண்டு

(எனக்கும் இடம் உண்டு


அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு)

அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்


எனக்கும் இடம் உண்டு

கார்த்திகை விளக்கு பெண்களுடன்


திருக் காவடி சுமக்கும் தொண்டருடன் (2)

தினம் பூத்திடும் ஞான மலர்களுடன்


ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
புல்லாய் முளைத்து தடுமாறும்

(எனக்கும் … )

நேற்றைய வாழ்வு அலங்கோலம்


அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம் (2)

வரும் காற்றில் அணையா சுடர்போலும்


இனி கந்தன் தருவான் எதிர்காலம்
கந்தன் தருவான் எதிர்காலம்

(எனக்கும் … )
ஆடும் மயிலே என்மேனி
அதில் அழகிய தோகை என் உள்ளம் (2)

நான் உள்ளம் என்னும் தோகையினால்


கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
உறவு கண்டேன் ஆகையினால்

(எனக்கும் … ).

முருகா முருகா முருகா


நீயல்லால் தெய்வமில்லை, எனது
நெஞ்சே நீ வாழும் எல்லை, முருகா

நீயல்லால் தெய்வமில்லை, எனது


நெஞ்சே நீ வாழும் எல்லை, முருகா
நீயல்லால் தெய்வமில்லை எனது
நெஞ்சே நீ வாழும் எல்லை

தாயாகி அன்புப் பாலூற்றி வளர்த்தாய்


தாயாகி அன்புப் பாலூற்றி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்

குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்


குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்,ஞான
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்

திருவே நீ என்றும் என் உள்ளம் நிறைந்தாய்


திருவே நீ என்றும் என் உள்ளம் நிறைந்தாய்
நாயேனை நாளும் நல்லவனாக்க
நாயேனை நாளும் நல்லவனாக்க
ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்
ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்

நீயல்லால் தெய்வமில்லை எனது


நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா
நெஞ்சே நீ வாழும் எல்லை

வாயாரப் பாடி, மனமார நினைந்து


வணங்கிடலே என்தன் வாழ்நாளில் இன்பம்
வாயாரப் பாடி, மனமார நினைந்து
வணங்கிடலே என்தன் வாழ்நாளில் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா....
தூயா முருகா மாயோன் மருகா, உன்னைத்
தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம், உன்னைத்
தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்

நீயல்லால் தெய்வமில்லை, எனது


நெஞ்சே நீ வாழும் எல்லை, முருகா
நீயல்லால் தெய்வமில்லை
முருகா.... முருகா...... முருகா.....

முருகா நீ வர வேண்டும்
முருகா நான் நினைத்தபோது நீ வர வேண்டும்
முருகா நீ வர வேண்டும்

நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்

உனையே நினைந்து உருகுகின்றேனே


உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உலம் உரைவோனே
உணர்ந்திடும் அடியார் உலம் உரைவோனே

நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்

கலியுக தெய்வம் கந்தா நீயே


கருணையின் விளக்கமும் கடம்பா நீயே
கலியுக தெய்வம் கந்தா நீயே
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மாயோன் மருகா முருகா
மாயோன் மருகா முருகா என்றே

நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீ வர வேண்டும் நீ வர வேண்டும்
********************************************************
அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)

சுடராக வந்த வேல் முருகா - கொடுஞ்


சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா - முக்
கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)

ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை


அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற)

குன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர்


குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா - மனித
சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற)

பிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம்


பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ஹரஹரா ஷண்முகா முருகா - என்று
பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)

அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்


அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்
கலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)

திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்


தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்


ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?


குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று


வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று
ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று

திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்


தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்

பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா


கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
வருவாய் அருள் தருவாய் முருகா

You might also like