Professional Documents
Culture Documents
அதாவது கை, கால், கண், மூக்கு, செவி, வாய் போன்றவை புற உறுப்புகளாகும். ஆனால்
‘அன்பு’ என்ற கண்ணுக்குத் தெரியாத அகத்துறுப்பு இல்லாவிட்டால், புற உறுப்புகள்
இருந்தும் பயன் இல்லை. அன்புணர்ச்சி என்பது தனித் தன்மையுடையது. அன்பின்
அடிப்படையிலேதான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. உயர்ந்த
நிலையிலிருக்கும்போதுதான் அன்பு செய்கிறார்கள். அதே நபர் வாழ்க்கை சக்கரத்தில்
கீ ழான நிலைக்கு வரும்போதும், அன்பு செலுத்த வேண்டும். அதுவே உண்மையான
அன்பாகும். அன்பு என்ற உறுப்பு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மிருகங்கள், பறவைகள்,
ஊர்வன போன்றவற்றிலும் காணப்படுகிறது என்பதை நிரூபிக்கிறது இச்சம்பவம்.
எப்போதும், பிறர் நோவாமையைப் பார்த்து பெரிதாகக் கருதிய அந்த கிளி, “ஏ! தேவர்
கோமானே! இம்மரமானது நன்றாகச் செழித்து தழைத்து ஓங்க வேண்டும்” என்றது. இந்திரன்
உடனே அம்மரத்தின் மீ து அமிர்தத்தை பொழிந்தான். அதனால் அந்த மரத்தில் கனிகளும்,
இலைகளும், கிளைகளும் உண்டாக்கித் தழைத்தது.
குழந்தை பிறந்து விட்டது என்ற செய்தியைக் கேட்கும்போது, அந்த தாய் அதிக சந்தோஷம்
அடைகிறாள் என்பது இக்குறளின் கருத்தாகும்.
சென்ற இதழில் சாகாத நிலையை அடைய தடையாக இருப்பவை கால நேரம் பார்ப்பது,
ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை வைப்பது மற்றும் இறைவனின் கட்டுப்பாட்டிற்குள் வர
மறுப்பது என்பதைக் குறித்து பார்த்தோம்.