Professional Documents
Culture Documents
இங்கே இப்போது
இங்கே இப்போது
வாலறிவனை அறிவோம்
நிகழ்ச்சி என்பது
இங்கே, இப்போது நிகழ்கின்ற
இந்தக்கணத்தில் மட்டுமே
நிகழும் செயல்.
வாழ்க்கை
இந்தக் கணத்தில் மட்டுமே நிகழ்கிறது
இந்தக்கணம் என்பதற்கு முடிவே கிடையாது.
ஆகவே
வாழ்க்கைக்கு முடிவே கிடையாது.
உடல் இருக்கும்வரை வாழ்க்கை என்னும் நிகழ்ச்சி தொடரும்.
எல்லையற்றது வாழ்க்கை
நீண்டு கொண்டே போவது வாழ்க்கை..
ஆனால்
வாழ்க்கை முடியுமா?
வாழ்க்கைக்கு முடிவு உண்டா?
.எப்போது கேட்டாலும்
“இப்போது”
என்பது மட்டுமே உண்மை
காலம் என்னும் எல்லையற்றது
“இப்போது”
“இப்போது இருக்கிறாயா” என்று கேட்டால்
”இருக்கிறேன்” என்பதே பதில்
வாழ்ந்து கொண்டு இருக்கும் மனிதன்
”நான் இப்போது இல்லை”
என்று பதிலளிக்க மாட்டான்
வாழ்க்கை சொல்கிறது,
“நான்” யார்?
“நான்” என்று சொல்ல அறிவு வேண்டும்
வாழ்வது அறிவு,
இருப்பது அறிவு
செய்வது அறிவு
“நான் வாழ்கிறேன்”,
“நான் இருக்கிறேன்”
“நான் செய்கிறேன்”
இருப்புக்கு எல்லையில்லை
வாழ்க்கைக்கு எல்லையில்லை
வாழும் அறிவுக்கு எல்லையில்லை
இந்த வாழ்க்கையை,
“நான்” அறிவு
வார்த்தைக்கு வார்த்தை
“நான் சொல்கிறேன்”,
“நான் செய்கிறேன்”
என்று சொல்கிறோம்
அந்த “நான்”
எல்லையற்று நீ ண்ட
“இங்கே”, “இப்போது”
என்னும்
புத்தம்புதிய கணத்தின்
எல்லையற்ற
பரவெளியில் வாழ்ந்து
எல்லாவற்றையும் அறியும்
“நான்” வாலறிவு
“நான்” அறிவுணர்வு
“நான்” வாலறிவு
I am the Awareness
“நான்” அறிவுணர்வு
“நான்” வாலறிவு
என்று அறிந்து,
ஒழுகுவது
ஒழுக்கம்
“நான்” அறிவுணர்வு
“நான்” வாலறிவு
என்று அறிந்து, உணர்ந்து
ஒழுகும்போது
“எனது”
“என்னுடையது”
என்ற பாவனைகளுக்கு
பொருளில்லை, உயிரில்லை
ஒழுக்கமும் ஒழுகலும்
ஒழுக்கம்
“நான்” அறிவுணர்வு
“நான்” வாலறிவு
என்ற உண்மையை உணர்த்துகிறது
விழுப்பம் தருகிறது
உயர்வைத் தருகிறது
“நான்” அறிவுணர்வு
“நான்” வாலறிவு
என்ற அறிவைத் தரும்,
உயர்வைத் தரும்
ஒழுக்கத்தை
பயிற்றுவிக்கும் கல்வியே மனிதனுக்கு தேவை
கற்பது என்றாலே
வாலறிவாகிய
பரவெளி நுண்ணறிவை
உணர்ந்து அறிந்து
அந்த அறிவாகவே வாழக்
கற்பதுதான்.
அதை கற்பிப்பதுதான்
கல்வி
இதை வலியுறுத்தும்
வள்ளுவரைப்
போற்றுவோம்
வடு
ீ என்னும் பேற்றுக்கு இதைவிட
நல்லாழ்வாரின் இந்த திருவாய்மொழியைவிட
சிறந்த விளக்கத்தை நாம் காண்பது அரிது