You are on page 1of 19

உள்ளடக்கம்

எண் தலைப்பு பக்கம்

1.0 பாரதிதாசன் கவிதைகள் மொழிப்புரட்சி, 1 - 6

இனமான உணர்வு.

2.0 வைரமுத்து இயற்கைக் கவிதைகள் 7-


10
சமுதாய விழிப்புணர்வு.

3.0 உரைநடை தன்மைகள், 10-


12
வேற்றுமைகள்.

4.0 தனித்தமிழ் நடை பிற நடைகளோடு 12-


14
எவ்வாறு வேறுபட்டு இருக்கின்றது.

5.0 மேற்கோள் நூல்கள்

1.0 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமது கவிதைகள்வழி மொழிப் புரட்சியையும் இனமான


உணர்ச்சியையும் எவ்வாறெல்லாம் ஊட்டினார் என்பதனைத் தகுந்த சான்றுகளுடன்
நியாயப்படுத்திடுக.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்தக்குடி எங்கள் தமிழ்
குடி. இஃது அனைவரும் அறிந்த ஒன்றே என்றால் அது மிகையாகாது. தமிழ் மொழி
இன்றுதான் தோன்றியது என்று இன்றளவில் யாராலும் கணித்துக் கூற முடியவே இல்லை.
ஏனெனில், தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்த மொழியாகும். இவ்வளவு பழமை
வாய்ந்த மொழியின் பெருமைகளையும் சிறப்புகளையும் செவ்வனே எடுத்துக்கூற பலக்
கவிஞர்கள் உலா வருவதை நாம் அறிவோம். அவர்களுல் பாரதிதாசனும் ஒருவர்.
“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற
தேன் சுவை சொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’
அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’
என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம்
மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு
அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி,
திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின்
இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது
படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின்
வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது
தலைச்சிறந்த படைப்புகள் பல. பாவேந்தர் பாரதிதாசனுக்கு தமிழின்பால் இருந்த பற்றினை
யாவும் கவிதைகளின் வழி வெளிக்கொணர்ந்தார். அவர் தமிழின்பால் கொண்ட
புரட்சியையும் இனமான உணர்ச்சிகளையும் கவிதையின் வழி உலகிற்கு வித்திட்டவர்.

நமது பாவேந்தர் பாரதிதாசன் தமிழின் இனிமையைப் பற்றி பறைச்சாற்றும்


கவிதையின் மூலம் அவர் தமிழின் பால் கொண்ட பற்றினை அறிய இயலும்.

‘கனியிடை ஏறிய சுளையும் முற்றல்


கழையிடை ஏறிய சாறும் ......
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்’

என்னும் கவிதை வரியின் மூலம் கவிஞர் தமிழ் மொழியைத் தன்னுடைய உயிராகக்


கருதுவதைக் காண முடிகின்றது. பாவேந்தர் தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம்
கொடுத்துள்ளதை நாம் காண முடியும். “இவ்வுலகிடை வழங்குகின்ற எல்லா
மொழிகளையும் நான் நேசிக்கின்றேன் என் தமிழ்மொழியை நான் வணங்குகின்றேன்
என்னும் கூற்றின்படி பாவேந்தர் தமிழ் மொழியின் பால் கொண்ட பற்றானது
எல்லையற்றது. தன் தாய் மொழியான தமிழ் மொழி சிறப்பு பெற வேண்டும் என்பது
அவரின் கனவாகும். கவிஞர் தமிழினத்தின் வாழ்வும் வளமும் தமிழோடு இரண்டறக்
கலக்க வேண்டும் என்பதனை ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று
சங்கே முழங்கு’ என்று கூறியுள்ளார்.இதன்வழி அவர் உணர்ச்சிகள் கவிதை வடிவில்
உலகிற்கு எடுத்துரைத்துள்ளார்.

இன்றைய நிலையில் பார்த்தோமேயானால், தமிழ் மொழியின்பால் பற்றுக்


கொண்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதை நாம் காண முடிகின்றது.
ஏனெனில், இன்றைய இளைஞர்களுக்கு மற்ற மொழியின் மேல் நாட்டம் அதிகரித்து
விட்டதை நாம் அறிவோம். இன்றைய இளைஞர்களிடையே ஆங்கிலம் மிக வேகமாக
ஊடுருவி வருவதை நாம் கண்கூடாகக் காண முடிகின்றது என்றால் அது மிகையாகாது.
இளைஞர்களைப் பொருத்தமட்டில் ஆங்கிலம் பேசினால்தான் தன்னையும் தன்
தகுதியையும் பிறர் மதிப்பர் என்று கருதுகிறார்கள். ஆகையால்தான், தமிழ் மொழிக்கு
முக்கியத்துவம் அளிப்பவர்களின் எண்ணிக்கை மலைப் போல சரிந்து வருகின்றது.
இதணால்தான், நமது பாவேந்தர் பாரதிதாசன் அன்றேக் கூறிவிட்டார் போலும்.. ஏனெனில்,
பாவேந்தர் தமிழின் பால் கொண்ட பற்றும் மதிப்பும் இன்றைய இளைஞர்களிடம் குன்றி
வருவதை நாம் அறிவோம். இவ்வாறான பிற மொழியின் பயன்பாடு அதிகரிக்கும்
பட்சத்தில் தமிழ் மொழியின் பயன்பாடு குறைந்து வருகின்றது. ஆகையால், கவிஞரின்
தமிழ் மொழியின் பால் கொண்ட பற்று தன் உணர்ச்சிகளால் எழுத்து வடிவம் பெற்று
சமுதாயத்திற்கு தன் பேனா முனையால் வெளிப்படுத்தியுள்ளார்.

மனக்கோட்டம் தீர்ப்பது நூல் என்று கூறுவார் நன்னூலார். செல்வம், இளமை,


யாக்கை, என்னும் நிலையாமையில் திளைக்காமல் , நல்லதோர் வீணையாக விளங்கும்
கல்வியினை நலம்பெற செய்வது மானிடக்கடன் என்கிறார் திருக்குறளார். ‘நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு’ என்று கல்வியின்
தனித்தன்மையைப் புலப்படுத்துகின்றது நாலடியார். ஆக, கல்வி ஒருவரின் வாழ்க்கையில்
எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. கல்வி கண் போன்றது.
எதையும் சாதிக்கும் வல்லமை பெற்ற அரிய கருவி; இருட்டைப் போக்கி ஒளியைப்
பரப்பும் விளக்கு. ஈயக் குறையாத அமுத சுரபி என்று மொழிவர். எவ்வாறாயினும் கல்வி
என்பது அக அழகைத் தோற்றுவித்து ; நீதி மிகச் செய்து; நடுவுநிலைமையைப் பெருக்கி;
ஒருவரை உலகுக்கு அடையாளம் காட்டும் கலங்கரை விளக்கம். அவ்வாறான கல்வி
அறிவினை பெண்கள் பெறக் கூடாது என்பதே அன்றைய மக்களின் குறிக்கோலாக
இருந்தது. அன்றைய பெண்கள் கல்வி கற்றால் பெண்ணாக வாழ முடியாது என்பது
அவர்களின் கண்ணோட்டம். ஆனால், பெண்ணுக்குக் கல்வி அவசியம். தன்னையும் தன்
தேசத்தையும் தன் இனத்தையும் காப்பாற்ற பெண்களுக்குக் கல்வி அத்தியாவசியம் என
போராடிய மகான் நமது பாவேந்தர் பாரதிதாசன். எந்த நாடு, எந்த மக்கள் பெண்களை
மதிக்கவில்லையோ அவை எந்தக் காலத்திலும் சிறந்த நிலையை அடைந்ததில்லை. இந்து
மதம் தாழ்த்தப்பட்டுவிட்டதன் காரணம் உயிருடன் வாழும் சக்தியான பெண்களுக்கு
மரியாதை அளிக்காததால் தான் என்று இந்திய நாட்டு மக்களை இடித்துரைத்தார் நமது
பாவேந்தர். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்றும் பெண்கள் அதிகம்
படித்துவிட்டால் கணவனுக்கு அடங்காமல் ஆடம்பரமாக வாழ்வார்கள் என்றும் கூறி
பெண் கல்விக்குச் சாவு மணி அடிப்பவர்களின் பேதையை அகற்றி தெளிவை
ஏற்படுத்தவே “படித்த பெண்கள்’’ என்னும் நாடகத்தை இயற்றியுள்ளார் பாரதிதாசன்.
மேலும்,

“பெண்கட்கு கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே! பெண்கட்குக் கல்வி


வேண்டும் மக்களைப் பேணுதற்கே.........’’

என்னும் கவிதையின் மூலம் கவிஞர் புதுமைப் பெண்களைக் காண


விரும்புவதாகவும் பெண்களுக்குக் கல்வி மிகமிக அவசியமானது என்பதனையும் மிகவும்
தெளிவாக வழியுறுத்தியுள்ளார் என்றால் அது மிகையாகாது. எனவேதான், முன்புள்ள
பெற்றோர்களைக் காட்டிலும் இன்றைய பெற்றோர்கள் தன் பெண் பிள்ளைக்குக் கல்வி மிக
அவசியம் என்பதை அறிந்து கொண்டனர். இதற்கு சான்றாக இன்றையப்
பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொள்வோம்.
பள்ளிக்கூடங்களில் ஆண் பிள்ளைகளைக் காட்டிலும் பெண் பிள்ளைகளின்
எண்ணிக்கைதான் அதிகமாக இருப்பதைக் கண்கூடாகக் காண முடிகின்றது. இன்றைய
நிலையில் பெண்களும் தங்களுக்குக் கல்வியறிவு எவ்வளவு அவசியம் என்பதை அறிந்து
செயல்படுகின்றனர். ஆகையால்தான், பட்டதாரிகளின் மத்தியில் பெண்களின் எண்ணிக்கை
உயர்ந்து காணப்படுகின்றது எனலாம். மேலும், இன்றைய நிலையில் சாதித்தவர்களின்
பட்டியலிலும் பெண்கள் தான் அதிகம் இருக்கின்றனர். ஆகவே, இன்றைய
காலக்கட்டத்தில் ஒரு பெண்ணின் எதிர்கால வாழ்வை நிர்ணயம் செய்வது கல்வி. கல்வி
என்னும் தோணியைக் கொண்டு வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க வேண்டும். நமது
கவிஞரின் வெளிபாடே இன்றைய மாணவர்களுக்குக் கல்வியை வித்திட்டுள்ளது என்றால்
மிகையாகாது.

தொடர்ந்து, கவிஞர் பாரதிதாசன் தமிழ் பேறு என்னும் கவிதையில் தமிழ் கல்வி


கற்பதன் நன்மைகளை எடுத்துக்கூறி அவர் தமிழின் பால் கொண்ட பற்றினை
வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் கல்வி கற்றால் இழிவு , பயனில்லை என்று
நினைப்பவர்களுக்கு மத்தியில் தமிழ் கல்வி கற்றால்தான் சிறந்து நிற்க முடியும் என்று
கூறியுள்ளார் நமது பாவேந்தர் பாரதிதாசன். தமிழ் கல்வி கற்றால் துன்பங்கள் நீங்கும்
என்றும் வாழ்க்கையில் சுகம் பெற வாழ முடியும் என்றும் தூய்மையான மனதுடன்
செயல்பட முடியும் என்று கூறியுள்ளார் நமது கவிஞர் பாரதிதாசன். அதுமட்டுமின்றி,
தமிழ்க்கல்வி கற்பதன் மூலம் ஒருவருக்கு வீரம் உண்டாகும் என்பதனையும் வழியுறுத்திக்
கூறியுள்ளார் என்றால் அது மிகையாகாது.இதனையே,

இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்


என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால்-
துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில்
தூய்மை உண்டாகிடும் ; வீரம் வரும்.
என்று செம்மாந்து எழுதியுள்ளார். இதன் மூலம் கவிஞர் பாரதிதாசன் தமிழ்க் கல்வி
கற்று அனைவரும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டிருப்பதைக்
காண முடிகின்றது. தமிழ்க்கல்வி இருந்தால் எல்ல நலன்களும் தன்னை வந்து சேரும்
என்பது அவர் நம்பிக்கை. ஆகவேதான், தமிழ்க்கல்வியின் அவசியத்தைப் பறைச்சாற்றும்
வண்ணத்தில் இக்கவிதையை இயற்றியுள்ளார் நமது கவிஞர்.

இவையெல்லாம் கடந்து கவிஞர் தமிழர்களிடையே ஒற்றுமை தழைத்தோங்க


வேண்டும் என்ற அவரின் எண்ணத்தையும் கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார். கவிஞர்
இயற்றிய சங்கநாதம் என்னும் கவிதையில் இக்கருத்தினைக் காண முடியும் எனலாம்.

‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’

இக்கவிதை வரிகள் தமிழர்கள் ஒன்றானதைக் கண்டு பகைவர்கள் ஓடி ஒழிந்தனர்


என்பதனைக் குறிப்பிடுகின்றது என்றால் அது மிகையாகாது. ஆன, கவிஞர்
பாரதிதாசனைப் பொருத்தமட்டில் தமிழர்கள் ஒற்றுமையாகச் செயல்பட்டால் நம்மை
ஒருபோது பகைவர்களும் விரோதிகளும் நெருங்க மாட்டார்கள் என்பதை
வழியுருத்தியுள்ளார். “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்னும் பழமொழிக்கு ஒப்ப
தமிழர்கள் ஒன்றுப்பட்டால்தான் வேதனைகளைச் சாதனையாக்க முடியும் என்பது நமது
பாவேந்தரின் கனவாக உள்ளது. தமிழர்களிடையே ஒற்றுமை தழைத்தோங்க வேண்டும்
என்பதே அவரின் அளவற்ற அவா எனலாம். இன்றைய காலக்கட்டத்தில் சில நாடுகளில்
தமிழர்களிடையே ஒற்றுமை இன்னும் மேலோங்கித் தான் உள்ளது என்றால் அது
மிகையாகாது. ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழர்களிடையே
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் தமிழர்களை ஒருவருக்கு ஒருவர் அரவணைக்கும்
பண்பையும் நாம் கண்கூடாகக் காண முடிகின்றது. தமிழர்களின் ஒற்றுமைக் கண்டு
பகைவர்கள் ஒழிய வேண்டும் என்ற நமது பாவேந்தரின் கனவு கூடி வாழ்ந்தால் கோடி
நன்மை என்பார்கள்.

தொடர்ந்து, அன்பு என்பது தெய்வமானது ; அன்பு என்பது இன்பமானது என்னும்


பாடல் வரிகள் என்றும் நம் நினைவை விட்டு அகலாது. பற்று , பாசம் , நேசம், கருணை,
ஆர்வம் என்னும் அத்தனை சொற்களுக்கும் ஒரே சொல்லாக உருவேற்று வந்ததுதான்
அன்பு. “ வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்னும் வள்ளலார்
பெருமானின் வாக்கு உயிர்களிடத்தில் அவர் வைத்துள்ள வற்றாத அன்பின்
வெளிப்பாடாகும். அன்பை விட மேலான ஓர் உணர்வு இப்புவியில் யாரும்
அறிந்தாரில்லை. அதேப் போல்தான் நமது பாவேந்தரும் அன்பு என்பது ஆக்கம் கூட்டும்
ஏக்கத்தைக் குறைக்கும் என்று மொழிந்துள்ளார். இதனை காட்சி இன்பம் என்னும்
கவிதையில் காண முடியும்.

அன்பு வேண்டும் அஃது யார்க்கும்

ஆக்கம் கூட்டும் ஏக்கம் நீக்கும்.

இதுவே அக்கவிதை வரிகள். இதன் மூலம் கவிஞர் மனிதர்களை அன்புள்ள மனிதர்களாக


மாறுங்கள் என வேண்டுகின்றார். ஏனெனில், அன்புள்ள மனிதர்களாக மாறினால் உலகம்
நம் வசமாகும். அதனால்தான் ‘ வண்ணத்துப்பூச்சியைத் தேடி அலையாதே வண்ண
மணமிக்க மலராய் மாறு அது உன்னைத் தேடி வரும்’ என்று பாரதிதாசன் அன்பின்
திறத்தைச் செப்பியுள்ளார். ஆக, பாரதியின் கனவுகளுல் தமிழர்கள் ஒருவருக்கு ஒருத்தர்
அன்பைக் காட்டி வாழ வேண்டும் என்பதனையும் வெளிப்படுத்தியுள்ளார் எனலாம்.
அதற்கேற்றாற் போல இன்றைய நிலையில் பார்த்தோமேயானால், நமது தமிழர்களிடையே
ஆங்காங்கே அன்பு என்னும் அருமருந்து உலவிக் கொண்டுதான் வருகின்றது. இன்றைய
தமிழர்களிடையே குடும்பத்தின்பால் அன்பு காட்டும் பண்பு அதிகம் காணப்படுகின்றது.
தன் மனைவி முதல் குழந்தைகள் வரையிலான அனைவருக்கும் என்னென்ன வேண்டும்
என்பதனைப் புரிந்து அதனை அவர்களுக்குக் கொடுப்பதில் உள்ள சந்தோஷமே அன்பின்
எல்லையாகக் கருதப்படுகின்றது. இதன் மூலம் நமது பாவேந்தரின் கனா பலித்துள்ளது
என்பதோடு உலகளாவிய அளவில் தமிழர்களிடையே ஒரு விழிப்புணர்வை
ஏற்படுத்தியுள்ளது என்றால் அதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை எனலாம். ஆக,
தமிழர்களிடையே அன்பும் அரவணைப்பும் மேலோங்க நமது பாவேந்தரின் பங்களிப்பும்
உள்ளது.
சாதியினால் ஏற்பட்ட கேடுகள் பல. இதனால் காலப்போக்கில் இறுக்கம் பெற்று
ஒரே சமுதாயத்தில் பல சமுதாயங்கள், ஒரே இனத்தில் பல இனங்கள் என்ற நிலை
உருவாகியது. இதன் விளைவாகத் தமிழரினம் துண்டு பட்டது. ‘பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும்’ என்று தமிழர் வழி வந்த திருவள்ளுவரும், ‘ஒன்றே குலமும் ஒருவனே
தேவனும்’ என்று திருமூலரும், ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற புறநானூற்று புலவர்
பூங்குன்றனாரும் கூறியிருப்பவை சாதிப்பிரிவில் உடன்பாடு காணாத நிலையைக்
காட்டுகின்றனர். சாதியை வளர்த்து அவலம் கொண்டு சரிவுற்ற தமிழினத்தைக் கண்டு
பாவேந்தர் பாரதிதாசன் சாற்றுகின்றார்,

‘மிக்குயர்ந்தசாதி கீழ்ச்சாதி என்னும்


வேற்றுமைகள் தமிழ்க்கில்லை தமிழ்க்கில்லை’

என்று சாதியற்ற புதியதோர் உலகத்தைப் படைத்திடக் கூவி அழைக்கின்றார் பாவேந்தர்.


இவ்வாறு தமிழர்களிடையே சாதி வேறுபாடு இருத்தல் கூடாது என்பது அவரின்
வாக்காகும். ஆயினும், மலேசிய திருநாட்டைப் பொருத்தமட்டில் சாதி என்ற எண்ணம்
மக்களிடையே குறைவாகவே உள்ளது என்றால் மறுப்பதற்கில்லை. இங்குள்ள
தமிழர்களிடையே சாதிக் கலவரங்கள் நடப்பதை நாம் காண இயலாது. ஆகையால்,
அவ்வகையில் பார்த்தோமேயானால், பாவேந்தர் பாரதிதாசனின் உணர்வுகளுக்கு
அங்கீகாரம் சூட்டப்பட்டிருக்கிறது.

பாரதிதாசன் கொண்ட தமிழுணர்வில் தமிழ் இனத்தின் முன்னேற்றமும்


அடங்கியுள்ளது. இதனை,

‘தமிழில்லாமல் நம் முன்னேற்றம் அமையாது சிறிதுமிதில்

ஐயமில்லை ஐயமில்லை அறிந்து கொண்டோம்’

எனவரும் வரிகளால் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இது தமிழ் முன்னேற்றமே தமிழர்


முன்னேற்றத்தைக் கொண்டு வரும் என்ற அவர் கொண்ட உறுதியினை வெளிப்படுத்தி
நிற்கின்றது. தமிழ் இனம் எவ்வித முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற கனவினைக்
காண்கின்றார். ஏனெனில், தமிழ் மக்கள் வாழ்வில் இன்பம் காணாது துன்பத்தில்
துயன்றிருந்த அன்றைய நிலை பாவேந்தரின் உள்ளத்தைப் பாதித்தது. ஆக, இன்றைய
நிலையில் கவிஞரின் இக்கனவு எந்த அளவு நிறைவேறியுள்ளது என்று
பார்த்தோமேயானால், அஃது நமக்கு மிக ஆழ்ந்த மகிழ்ச்சியினைத் தருகின்றது. ஏனெனில்,
இன்றைய நிலையில் தமிழர்கள் பலரும் வெவ்வேறு துறையில் சிறந்து விளங்குவதை நாம்
அறிவோம்.
“புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்”
என்று நமது பாவேந்தர் இயற்றியுள்ளார். ஆக, பாவேந்தரின் கவிதைகளில் ஒரு
புதுமையாக்கக்குரல் ஒலிப்பதைக் கேட்க முடிகின்றது என்பதோடு மக்களிடையே சமத்துவம்
நிலவ வேண்டும் என்ற அவரின் கருத்து தன் மொழிப் புலமையால் சமுதாயத்திற்கு
உரைத்துள்ளார். ஆக, நன்கு கூர்ந்து கவனித்தோமானால் தன் மொழிப் புரட்ச்சியயும் தன்
இனமான உணர்ச்சிகளையும் கவிஞர் தன் பேனா முனையால் கவிதைகளின் வழி
அவருக்குரியச் சிறப்பானப் பானியில் மக்கள் நடுவில் நிலை நிறுத்௹தியுள்ளார்.

2.0 கவிப்பேரரசு வைரமுத்து தமது இயற்கை தொடர்பான கவிதைகள்ஊடே சமுதாய


விழிப்புணர்வைக் கொண்டு வந்த பாங்கினை தக்க காட்டுகளுடன் விவரித்துக்
கட்டுரை வடிவில் படைத்திடுக.

சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது


சொல் புதிது சோதிமிக்க நவ கவிதை
எந்நாளும் அழியாத மகா கவிதை (பாரதியார் கவிதைகள், பக்.318-
319)
என்று கூறுகின்றார் பாரதி. பாரதியைத் தொடர்ந்து பல கவிஞர்கள் புதுக்கவிதை
இலக்கியத்திற்கு வலுசேர்த்தனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ௐகவிஞர் வைரமுத்து.
காதலித்துப் பார் உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும் என்று கூறி நம் சுயத்தையே
காதலிக்க வைத்தவரை மறக்க இயலுமா. அவரின் மொழி ஆற்றலும் கவிதைத் திறனையும்
சொல்லில் மட்டுமே அடக்க முடியாதவை. அவரின் கவிதை சுவைத்தால் மட்டுமே அந்த
ருசியை உணர முடியும். அந்த அளவிற்கு புதுக்கவிதை இலக்கியத்தில் மறுமலர்ச்சியை
ஏற்படுத்தியவர் கவிஞர். கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கியப் படைப்புகள் மொழி,
கலை, சமூகம், பண்பாடு, மனித விழுமியங்கள், அறிவியல் என அனைத்தும் இடம்பெற்றும்
கருத்துப் பெட்டகமாய்த் திகழ்வதை இன்றளவும் காணமுடிகின்றது.
சமுதாய முன்னேற்றத்தில் இலக்கிய படைப்பாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் கவிஞர் வைரமுத்து, இலக்கியம் அன்றி மக்களின் வாழ்க்கையையும்
இவ்வுலக இயற்கையையும் தம் கவிதைகளால் உலகிற்குப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.
இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால் மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும்
என்று ‘தமிழாற்றுப்படை’ நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்௶டப்பின்
புலப்படுத்தியுள்ளார். அதன் வழி அவர் இயற்ௐகையின் பால் கொண்ட பற்று
மெய்பட்டிருக்கிறது. நம் முன்னோர் நமக்கு கற்றுக் கொடுத்த வாழ்க்கை ‘இயற்கையோடு
இயைந்த வாழ்க்கை’ ஆகும். இயற்கை இடைவிடாது இயங்கிக் கொண்டிருத்தலின்
மூலமாகத்தான் மனிதர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தேடல்களும், தேவைகளும்
நிறைந்த இந்த வாழ்க்கையை மனிதருக்கு அர்த்தப்படுத்திக் காட்டுவதும், அழகுபடுத்திக்
காட்டுவதும் இயற்கைதான். அவ்வாறான இயற்கையை கவிப்பேரரசு தன் உணர்வுகளைக்
கவிதையின் வழி தன் பேனா முனையால் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை
ஏற்படுத்தியுள்ளார் என்றால் மிகையாகாது.
முதன்மையாக, மரங்கள் இயற்கையின் முக்கிய சகாப்தம். ஒவ்வொரு மரமும்
இறைவன் தந்த அருட்கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை
மரம்.நீண்டகால நிலத்தில் வாழக் கூடியவை மரங்கள் மட்டுமே. உயிரினங்கள் வெளியிடும்
நச்சுக் காற்றாகிய கரியமில வாயுவை உறிஞ்சி, பிராணவாயுவை நமக்கு அளித்து மனித
இனத்தையும் மற்ற உயிர்களையும் காப்பவை மரங்கள். மழைப் பெய்யவும், தட்பவெப்ப
நிலையைச் சீராகக் காக்கவும் உதவுபவை மரங்களே ஆகும். மரங்கள் இந்த பூமியின்
வரம். இந்த மரங்களின் முக்கியத்துவத்தை கவிஞர்,

உயிர் ஒழுகும்
மலர்கள்
மனிதன் தரா ஞானம்
மரம் தரும் எனக்கு
மனிதன் தோன்றுமுன்
மரம் தோன்றிற்று
மரம்
இருக்கும்வரை பூப்பூக்கும்
இறக்கும் வரை காய்காய்க்கும் (வைரமுத்து கவிதைகள், ப.455)

மரம் மனிதனின் முதல் நண்பன் என்றும் மரமின்றி மனித வாழ்க்கை இல்லை


என்றும் தன் திறனால் கூர்மையாக எடுத்துக் கூறுகின்றார். மரம் அஃறினையானாலும் தன்
வாழ்நா௳ழினை மனிதனுக்காகவே வாழ்ந்து மடிகிறது என்பதை கவிஞர் நாசுக்காக்
உலகிற்கு எடுத்துரைக்கிறார். மரம் ஆவதும் மனிதனால்தான் அழிவதும் மனிதனால்தான்
என்பதை தன் மொழி நயத்தால் அழகாக விவரித்துள்ளார். சமுதாயத்திற்கு மரங்களின் வழி
கிடைக்கப்பெறும் நன்மைகளை ‘இருக்கும்வரை பூப்பூக்கும், இறக்கும் வரை
காய்காக்கும்’ வரியின் வழி நன்கு உரைத்துள்ளார். அதாவது, மரங்கள் உணவைத்
தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும்
கிடைக்கும் இயற்கைக் கொடை மரமாக திகழ்கிறது. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான
உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி,
இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக
எரிபொருளாகப் பயன்படுகிறது. இந்த சமுதாயம் மரங்களை சரியாகப் பராமரிக்காமல்
இருப்பது அவரின் கவிதையின் ஊடே புலப்படுகிறது. “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்”
என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று
ஏற்பட்டுள்ளது. இக்கவிதையின் வழி தொலைநோக்குப் பார்வை என்றும் பொது நல
சிந்தனை மரங்களின் பால் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் கவிஞர்.
அதனைத் தொடர்ந்து, மழை. உலக உயிர்கள் யாவும் வாழ அடிப்படையான
நீரைத் தருவது மழையே. அதனால்தான் புலவர்கள் கொடைக்கு மழையை உவமையாகக்
கையாண்டனர். ,மழை மண்ணில் வாழும் உயிர்களின் குருதியைப்போல விளங்குகின்றது.
மழை பெய்யாமலிருந்தால் மண்ணில் உயிர்களுமில்லை, பயிர்களுமில்லை அவ்வகையில்
நம் கவிஞர் வைரமுத்து ‘மழைப் பிரசங்கம்’ என்னும் கவிதையில்,

விண்ணுக்கும் மண்ணுக்கும்
தண்ணீர்ப்பாலம் பாருங்கள்
……………………….
மழை மழை மழை
மண்ணின் அதிசயம் மழை
பூமியை வானம்
புணரும் கலை மழை
சமுத்திரம் எழுதும்
சமத்துவம் மழை (வைரமுத்து கவிதைகள், ப.421)

என்ற வரிகளில் மழையானது விண்ணுக்கும், மண்ணுக்குமான தண்ணீர்ப் பாலமாக


விளங்குவதைக் குறிப்பிடுகின்றார். தாவரங்களுக்கன்றி மனித வாழ்க்கையிலும் மழை
என்பது மூலதனமாகும்.மழை பயிர்க்குலம் தழைக்கவும், அதனால் மனித குலம் தழைக்கவும்
உதவும் உன்னத அமிழ்தம் ஆகும். அமுதம் என்பது உயிர் வளர்க்க கூடிய ஒன்று.
மழையும் உயிர்களை காக்கும் ஒன்று. அதனால் தான் மழையை அமிழ்தம் என
திருவள்ளுவர் குறிப்பிட்டார் இதை குறிப்பிட்டுதான் கவிஞர் மேலும்,

கீழ்நோக்கிப் பொழியும்
மழைமட்டும் பொய்த்துவிடின்
மேல்நோக்கி வளர்வன
பூமியில் ஏது? (வைரமுத்து கவிதைகள், ப.680)
என்ற வரிகளில் மேல்நோக்கி வளரும் விதைக்கும், மனிதனுக்கும் கீழ்நோக்கிப் பெய்யும்
மழைதான் முக்கியமான மூலப்பொருளாகும் என்பதை விவரிக்கின்றார். இதனால் மழையின்
சிறப்பையும் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்.

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை


இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும். நீரை சேமிக்க
நாம் புதிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை நம்முன்னோர்கள் நமக்கு வெட்டி வைத்த
ஏரி, குளம், கண்மாய்களை பாதுகாத்தாலே போதும் என்பதை உணர்த்தியுள்ளது
அண்மையில் பெய்த கனமழை. நீரின் அவசியத்தை வறட்சி உணர்த்தினாலும், அதை
சேமிக்கும் திறன் அற்றவர்களாக இன்றைய சமூகம் இருக்கிறது என்பதே நிதர்சனம்.

விண்ணும் மண்ணும் தங்கள் சமநிலையை இழந்து விடும்; பருவங்கள்


மாறிப்போகும்; துருவங்கள் உருகிப்போகும். காடு அழிந்தால் மலைவளம் குன்றும்;
மலைவளம் அழிந்தால் மழைவளம் குன்றும்; மழைவளம் அழிந்தால் நிலவளம் குன்றும்;
நிலவளம் அழிந்தால் விளைநிலம் குன்றும். பிறகு வேளாண்மை என்ற நாகரிகத்தை
விளைநிலங்களில் புதைக்க வேண்டியிருக்கும். இயற்கை பாதுகாக்காவிடில் பூமி பிளவுப்
படும் என்பதை நாசுக்காக கவிஞர் தன் பேனா மையால் மற்றும் திறனின் கூர்மையால்
சமூக சிந்தனையும் கருத்தையும் தன் கவிதையின் வழி சமுதாயத்திற்கு பறைச்சாட்டுகிறார்
கவிஞர்.

3.0 உரைநடை என்றால் என்ன? உரைநடையின் தன்மைகளையும் அவற்றிற்கிடையே


உள்ள வேற்றுமைகளையும் விளக்கிக் கட்டுரை ஒன்றனை வடித்திடுக.

உரை என்பதற்குச் சொல்லுதல் என்று பொருள். ஒன்றைப் பற்றிச் சொல்லும் போது


எவ்வாறெல்லாம் விளக்கிச் சொல்ல வேண்டுமென்பதே உரையில் சொல்லும் முறையாகும்.
இவ்வாறு தோன்றிய உரை பல்வேறு படிநிலைகளைக் கொண்டதாக அமைந்தது.
மொழிக்கும் வாழ்க்கைக்கும் இலக்கணம் கூறும் இலக்கண நூல்கள், உரைக்கும்
இலக்கணத்தைக் கூறுகின்றன. இது தொல்கா[ப்பியர் கூறும் கருத்து. பழைய உரைநடை
எனப்படுவது பேச்சு வழக்கில் காணப்படும் சொற்களை விடுத்து பண்டை இலக்கியங்களில்
வழங்கிவந்த சொற்களை மிகுதியாகக் கையாண்டும் செறிவாக அமைத்துக்கொண்டும்
எதுகை மோனைகளைப் பயன்படுத்தி எழுதுவதாகும். பழங்காலத்தில் தனி உரைநடை
நூல்கள் இல்லை என்றாலும் செய்யுளும் உரைநடையும் கலந்த நூல்கள் இருந்தன.
இருந்தாலும் செய்யுளும், உரைநடையும் கலந்து இயற்றிய நூல்களுக்கு ‘உரையிடப்பட்ட
பாட்டுடைச் செய்யுள்’ என்று குறித்தனர். தமிழ் உரைநடையின் ஆரம்ப
வடிவத்தைச் சிலப்பதிகாரத்தில் தான் தெளிவாக அறிகிறோம். இசை, நாடகத் தமிழில்தான்
உரைநடை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதையும் அறிகிறோம்.
தமிழின் முதல் காப்பியம் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம். இதன் பதிகத்திலேயே,

வாழ்த்து வரந்தரு காதையொடு
இவ்வா றைந்தும்
உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்

என்ற குறிப்பு வருகிறது. ‘உரை பெறு கட்டுரை’, ‘உரைப்பாட்டுமடை’ என்னும்


பெயர்களோடு இக்காப்பியத்தில் இடைஇடையே உரைநடை இடம் பெற்றுள்ளது. தமிழ்
உரைநடையின் ஆரம்ப வடிவத்தை நாம் சிலப்பதிகாரத்திலே காணலாம். புதிய உரைநடை
என்பது எளிய சொற்களைக்கொண்டு தடையின்றி, தெளிவாக, நேரே பொருள்
தரக்கூடியதாக அமைத்து எளிய நடையில் எழுதுவதாகும்.தமிழில் தோன்றிய முதல்
உரைநடை நூல் ‘இறையனார் களவியல் உரை’ ஆகும். இது கடினமான நடையில்
அமைந்திருந்தது. எனவே நக்கீரர் எளியதொரு உரையை எழுதினார். ஆக இவ்வாறாக
இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், சேனாவரையார். அடியார்க்கு நல்லார்,
பரிமேலழகர் முதலானோர் உரைநடைத் தோற்றத்திற்கு வித்திட்டவர்கள்.

ஐரோப்பியர் அறிமுகப்படுத்திய அச்சுப் பொறியால் தமிழில் உரைநடை நூல்கள்


தோன்றி அச்சிடப்பட்டன. இந்திய மொழிகளுள் முதன் முதலில் உரைநடை வடிவம் தமிழ்
மொழியில் தான் தோன்றியது. தமிழில் அச்சான முதல் உரைநடை நூல் கி.பி. 1577 இல்
வெளியான ‘கிறிஸ்துவ உபதேசம்’ என்கிறார் கால்டுவெல். ஆனால் 1579 இல் வெளியான
‘தம்பிரான் வணக்கம்’ என்ற நூல் தான் என்று தனிநாயகம் அடிகளார் கூறுகின்றார். தமிழ்
உரைநடையின் தந்தை வீரமாமுனிவர் ஆவார். இவர் தமிழில் சொல்லிற்குச் சொல்
இடைவெளி விட்டு எழுதும் முறையைப் புகுத்தி எளிமையும், புதுமையும் கொண்டதாக
மாற்றினார். 19 ஆம் நூற்றாண்டில் தமிழ்ப் புலவர்களுள் பலர் உரைநடை நூல்களை
எழுதினார். இவர்களுள் இராமலிங்க சுவாமிகள், ஆறுமுக நாவலர், ஆகியோர்
குறிப்பிடத்தக்கவர்.
உரைநடை ஆறு பிரிவுளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு உரைநடயும் தனக்கே
உரித்தான பானியை கொண்டிருக்கிறது. முதலில், விளக்க உரைநடை. ஏதேனும் ஒரு
பொருளையோ, கருத்தையோ விளக்கிக் கூறி எழுதப்படுவது விளக்க உரைநடையாகும்.
பள்ளி மற்றும் கல்லூரிப் பாடப் புத்தகங்கள், அறிவியல் நூல்கள்,
கலைக்களஞ்சியங்கள்,பல்வேறு தொழில்களைப் பற்றிய விவரணைகள், கலைகள் குறித்து
எழுதப்படும் விளக்கங்கள் முதலியன இவ்வகையில் அடங்கும். ஒரு கருத்தை தெளிவாக
கூறும் வகையில் இந்நடை அமையும். அதனைத் தொடர்ந்து, அளவை உரைநடை
என்பார்கள். அளவை உரைநடை என்பது விவாத அடிப்படையில் அமைவதாகும். ஓர்
உட்கருத்தையொட்டி எழும் விவரணைகளை வாசிப்போர் இணங்கி ஏற்றுக் கொள்ளும்
வகையில் இது அமையப் பெற்ம். மேலும்,இவ்வுரைநடையானது பிரச்சினைகளை
நுணுக்கமாய்ப் புரிந்து கொள்ளும் வகையில் சிந்திக்கத் தூண்டுகிறது. இன்றிறையக்
காலக்கட்டத்தில் பட்டிமன்றத்தில் பெரும்பான்மையாக பயன்படுத்தப் படுகிறது.
மூன்றாவதாக இன்றைய சூழலில் பரவலாகக் காணப்படும் எடுத்துரை உரைநடை.
இத்தகையான உரைநடை கதை, நாவல் போன்றவைகளில் அமையப் பெற்றிருக்கும்.
கதையை விவரிக்கும் அனைத்து இலக்கிய நூல்களும் எடுத்துரை உரைநடையைச்
சார்ந்தவை.இவ்வகை உரைநடை எளிதில் ஈர்க்க வல்லது. வாசிப்போர் மனதை காந்தம்
கவர் கொள்வது போல இந்த வகை உரைநடை கவரும். சிறுகதை,புதினம் ஆகிய
இலக்கிய வகைகள் இதனுள் அடங்கும்.

தொடர்ந்து, வருணனை உரைநடை. இந்த வருணனை உரைநடை என்பது


புலனுணர்வு அனுபவங்களை வருணனையாக விவரிப்பதாகும். மாந்தர்கள், ஏனைய
உயிரினங்கள், பொருள்கள், சம்பவங்கள் ஆகியவை இங்கு வருணிக்கப்படும். அவை
அந்த உரைநடைக்கு அழகு சேர்ப்பவையாக அமையும். வருணனையை அனைவராலும்
செரிவர நுழைக்க புகலாது. மொழிச் சிறப்பும் அதை கையாளும் ஆற்றலும் இருப்பின்
அது இவ்வருணனைக்கு அழகு சேர்க்கும். அடுத்தாக, நாடக உரைநடை நாடகத்தில்
இடம்பெறும் கதைமாந்தர்களின் உரையாடல்கள்,இடையிடையே நாடக ஆசிரியர் தரும்
மேடை விளக்கக் குறிப்புகள் ஆகியவை நாடக உரையாடல் ஆகும்.நாடக உரைநடை
பேச்சு வழக்கை மிகுதியாகக் கொண்டிருக்கும். இறுதியாக, சிந்தனை உரைநடை.
எழுத்தாளர் தம் சொந்த ஆளுமை வெளிப்படும் படியாக எழுதப்படுவது சிந்தனை
உரைநடையாகும் தன் கருத்துகளைக் கோவையாகவும் சிந்தனை தூண்டும் வகையிலும் கூற
வேண்டுமாயின் இந்த உரைநடை பங்கு வகிக்கும். தன்னுணர்ச்சிப் பாங்குக்
கட்டுரைகள்,ஆன்மிக அனுபவக் கட்டுரைகள் போன்றவை இவ்வகையில் அமையும்.
4.0 தனித்தமிழ் நடை பிற உரைநடை வடிவங்களோடு எவ்வாறு வேறுபட்டு நிற்கிறது?
நிறுவிடுக

பிறமொழிச் சொற்களின் கலப்பின்றி மரபு சார் இலக்கண நெறிகளுக்குட்பட


எழுதப்படும் அல்லது பேசப்படும் தமிழ் மொழியே தனித்தமிழ் ஆகும். பிற மொழிக்கு
முக்கியத்துவம் கொடுக்காமல் டஹமிழ் மட்டுமே பயன்படுத்தி ஓர் உர, கட்டுரை, நாவல்,
விளக்க உரை போன்றவைகள் இருக்குமாயின், அதுவே தனித்தமிழ் உரைநடையின் சிறப்பு.
தமிழில் பயன்படுத்தப்படும் பிற மொழிச் சொற்களை, குறிப்பாக வட மொழிச்
சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் தவிர்த்து பேசினால் அல்லது எழுதினால்
அதுவே தனித்தமிழ் உரைநடையின் வடிவம். எத்துணையோ அறிஞர்கள் அவ்வாறு
வாழ்ந்து சாதித்தவர்கள். அவர்களின் மறைமலையார் இன்றியமையாதவர். தம் எழுத்திலும்
பேச்சிலும் அயற்சொல் விரவாத தனித்தமிழையே வாழ்நாள் முழுவதும் வழங்குவதென்று
உறுதிகொண்ட மறைமலையார் தாம் அவ்வண்ணமே வாழ்ந்ததன்றித் தமிழர்களையும்
அவ்வண்ணமே பயிற்றுவித்தார். தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை என்ற
ஆழ்ந்த அடையாளத்திற்காகவே; எம்மொழித் துணையுமின்றித் தனித்தியங்கவல்ல
செம்மொழியென்ற நம்பிக்கையைத் தமிழுக்குத் தந்ததற்காகவே. முத்தெடுக்கப் போனவன்
பவளப் பாறையைக் கண்டுபிடித்த கதைபோல், மொழித் தூய்மை காக்கப்போய்
இனப்பெருமை காத்ததுதான் மறைமலை அடிகளின் திருவரலாறு.

௹தனித்தமிழ் உரைநடை பிற உரைநடையோடு வேறுபட்டிருப்பதன் காரணம்


மொழியும் அதனைக் கையாளும் விதமே. தமிழ் மொழியில்  இந்தி, தெலுங்கு, கன்னடம்,
சமஸ்கிருதம், பாரசீகம், அரபு, உருது, மராட்டியம், ஆங்கிலம் என பல்வேறு மொழிச்
சொற்கள் கலந்து போய் விட்டன. பிற உரைநடைகளில் இந்தக் கலவையைக் கண்
கூடாகக் காணலாம். இந்த பிற மொழியைத் தகர்த்து எரியவே தனித்தமிழ் உருவெடுத்தது.
இதர்குச் சான்றாக தனித்தமிழ் ஊற்று எப்போது வெடித்து வீறிட்டது என்பதற்குச்
சுவையான நிகழ்வொன்று சுட்டப்பெறுகிறது அவரது வாழ்வில். அந்திக்கதிரவன் மண்ணைப்
பொன் செய்யும் ஒரு மாலைப் பொழுதில், வீட்டு முற்றத்தின் வெளிச் சோலையில்,
கலைபயில் தெளிவும் கட்டுரை வண்மையுங்கொண்ட தம் நிறைதிருமகள் நீலாம்பிகையோடு
உலாவிய காலையில், ‘ஒரு திருப்பாட்டுப் பாடு திருமகளே’ என்று கலைக்
கட்டளையிடுகிறார் தமிழ்த்தந்தை. வள்ளலார் பாட்டுக்கு இசைகூட்டுகிறார் நீலாம்பிகை.

“பெற்றதாய்தனை மகமறந் தாலும்


பிள்ளையைப் பெறுதாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே”

இந்தப் பாடலைக் கண்மூடி உயிர்திறந்து உள்வாங்கிக்கொண்டிருந்த அடிகளாரின்


நெஞ்சில் ஆழப்பாய்ந்ததொரு மின்னல்.

“நீலா! இப்பாடலில், தேகம் என்றொரு வடசொல் வந்துளது. அவ்வொன்றையும் நீக்கி


அவ்விடத்தில் ‘யாக்கை’ என்னும் தமிழ்ச்சொல் பெய்யப் பெற்றிருக்குமானால்
இச்செய்யுளின் ஓசையின்பம் எவ்வளவோ மேம்பட்டதாக இருந்திருக்கும். பிறமொழிச்
சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குறைகின்றது. அன்றியும், நாளடைவில் தமிழில்
கலந்த பிறமொழிச் சொற்கள் நிலைபெற்று அச்சொற்களுக்கு நேரே வழங்கி வந்த நம்
அருமைத் தமிழ்ச் சொற்கள் மறைந்துவிடுகின்றன” என்றார். அன்று புத்தெணர்ந்த அடியார்
அதன் பின் தமிழின் இன்பத்தை ஓங்கச் செய்தார். அந்த நொடியில் உடைந்து சிதறியது
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்த் தமிழை அழுத்திக்கிடந்த அயற்பாறை. அன்று முதல்
மறைமலையடிகளின் வாழ்வும் வாசிப்பும் மீள்பார்வைக்குள்ளாயின.

தனித்தமிழ் எண்ணம் தலையெடுத்த பிறகு தாம் எழுதிய பழைய நூல்களிலும்


அயன்மொழிச் சொற்களைக் களைய வேண்டுமென்று கட்டளையிட்டுக்கொண்டார்
மறைமலையார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரையின் முதற் பதிப்புக்கும் நான்காம்
பதிப்புக்கும் 28 ஆண்டுகால இடைவெளியிருந்தது. நான்காம் பதிப்பின் முகவுரையில்
“முற்பதிப்புகளில் இடையிடையே விரவியிருந்த சிற்சில வடசொற்களையுங்
களைந்தெடுத்து இவ்வுரை நடையைச் சாலவுந் தூய தனித்தமிழாக்கியிருக்கின்றோம்”
என்று எழுதியவரின் ஊட்டம் உணர்தற்குரியது .இதன் வழி தனித்தமிழ் உரைநடை
உருப்பெற்று இன்றளவும் உலா வருகிறது.

3.0 மேற்கோள் நூல்கள்

அகத்தியலிங்கம், ச (1984) . சொல்லியல்(பெயரியல்). அண்ணாமலை நகர்;

அனைத்திந்திய தமிழ் மொழியியற் கழகம்

ஆறுமுக நாவலர். (1968). நன்னூல் காண்டிகையுரை. சென்னை; ஆறுமுக

நாவலர் அச்சகம்

அமிழ்து எது? (1951) பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி;


பாரதிதாசன் பதிப்பகம், புதுவை

கணபதி, வி. 9(20040) தமிழ் இலக்கண இலக்க்கிய அறிமுகம். சென்னை;

மெய்யப்பன் தமிழாய்வகம்

சீனிவாசன்.9(!9830)ஹொல்காப்பியமும் நன்னூலும்.சென்னை; அணியகம்.

ராஜகோபாலாச்சாரியார், கே (1991). இலக்கண விளக்கம் சொல்லியல்.

சென்னை; ஸ்டார் பதிப்பகம்.

நன்னூல்_காண்டிகையுரை (1994). எழுத்ததிகாரம்_-_பகுதி_1.

முல்லை நிலையம்

வைரமுத்து கவிதைகள் (!996) ஆனந்த விகடன்

You might also like