Professional Documents
Culture Documents
அதன்பிறகு, மாரி தண்டல் எனும் கதாப்பாத்திரத்தின் வழி, ‘அடாது செய்பவன் படாது படுவான்’
என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. கோள் சொல்வது வத்தி வைப்பது, புறம் பேசுவது எப்படி
என ஓர் ஆய்வு நூலே எழுதும் அழவிற்குத் திறமையானவர் மாரி தண்டல். சங்கத்தின் பொதுக்
கூட்டத்தின்போது, காரியதரிசி கோபாலை அடுத்த காரியதரிசியாகப் பொறுப்பேற்றிவிடக் கூடாது
என்பதற்காகப் பலவாராகத் திட்டமிட்டார் மாரி தண்டல். தோட்டத்தில் இருந்து சிலருக்கு மட்டும்
இரவு விருந்திற்கு அழைப்பிதழ் கொடுத்து, வெளிநாட்டு மதுவைக்கொண்டு அவர்களைத் தன்
வசமாக்கியத்தோடு, கோபாலை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டுமென்று அவர்களின் மனதில்
நஞ்சைக் கலக்கியிருந்தார். தன்னைவிட அல்லது தன்னை எதிரப்பவனை அழித்துவிட வேண்டும்
என்ற தவறான எண்ணம் அவருக்குள் ஊடுறுவிக்கிடந்தது. அதுமட்டுமின்றி, தன்னைவிட
அழகம்மாள் முன்னேறிவிடக் கூடாது என்று பல வழியில் அவளுக்குத் தடையாக இருந்தார் மாரி
தண்டல். தான் மட்டும்தான் தோட்டத்தில் செழிப்புடன் இருக்க வேண்டும்; அழகம்மாள் போன்ற
தகுதியற்றவர்கள் வாழ்க்கையில் முன்னேறிவிடக் கூடாது என்ற தீய எண்ணமும் பொறாமையும்
அவரை சூழ்ந்திருந்தது. இவ்வளவு தீயக்குணங்களைக் கொண்டிருந்தனால்தான், இன்று மாரி
தண்டல் படுத்த படுக்கையாகி விட்டார். இறைவன் தீங்கு செய்பவனுக்குத் தக்க நேரத்தில்
தண்டனை வழங்குவார் என்பதற்கு மாரி தண்டல் சிறந்த உதாரணம்.