Professional Documents
Culture Documents
நாள் பாடத்திட்டம்
பாடம் தமிழ்மொழி
ஆண்டு 3 அகத்தியர்
மாணவர் வருகை / 27
கருப்பொருள் இயற்கை
தலைப்பு சுற்றுச்சூழல்
6C ஆற்றல்
தற்கால பயிற்றியல் நடைமுறை தொடர்பாடல் – ஆசிரியர் மாணவர்களுக்கு இடையே இருவழி தொடர்பாடல் நடைபெறுதல்.
தொடர்பாடல் திறன்
பயிற்றுத்துணைப்பொருள் கூகொள் கூடல், நழுவப்படைப்பு, ‘குய்சீஸ்’ செயலி (Quizizz app), நடவடிக்கை நூல்.
காட்டு:
கூறுங்களேன்
நோக்குதல், தகவல்
தொழில்நுட்ப அறிவு
6. ஆசிரியர் மாணவர்களிடம் சில கேள்விகளை வினவுதல்
மானுடவியல் திறன்
காட்டு:
வாழ்நாள் முழுவதும்
அ) மாணவர் (A) வாசித்த வாக்கியத்தில் எத்தனை செயல்கள் கற்றல்
இருக்கிறது? தொடர்பாடல் திறன்
ஜவீனா டேவிட்
தொழில்நுட்ப அறிவு
மானுடவியல் திறன்
வாழ்நாள் முழுவதும்
கற்றல்
தொடர்பாடல் திறன்
வாழ்நாள் முழுவதும்
கற்றல்
சிந்தனை மீட்சி:
இன்றைய பாட நோக்கங்களை முழுமையாக அடைந்த மாணவர்களின் எண்ணிக்கையானது பதினெட்டு ஆகும். இப்பதினேழு
மாணவர்களும் கூகொள் கூடலில் நிகழ்த்திய வகுப்பிற்கு வருகையளித்தனர். கற்றல் கற்பித்தல் மீதான இம்மாணவர்களின்
ஈடுபாடானது சிறப்பாகவே அமைந்தது. பீடிகையின்போது, மாணவர்களிடம் படம் ஒன்றனைக் காண்பித்தேன். அப்படம் தொடர்பாக
ஜவீனா டேவிட்
மாணவர்களின் கருத்துகளைப் பெற, அவர்களிடம் சில கேள்விகளை வினவினேன். மாணவர்களும் நான் கேட்கும் கேள்விகளுக்குச்
சரியான பதில்களையே கூறினார்கள். மாணவர்களின் பதில்களைக் கொண்டு என்னால் இன்றைய பாடத் தலைப்போடு இணைத்து
அடுத்த நடவடிக்கைக்குச் செல்ல முடிந்தது. ஆனாலும், பீடிகையிலுள்ள நடவடிக்கையை நான் மேலும் மெருகூட்டிருக்கலாமென
எண்ணம் கொண்டேன். காரணம், மாணவர்களிடமிருந்து எதிர்பார்த்த அளவிற்கு உற்சாகம் இல்லை. அடுத்து படிநிலை ஒன்றில்,
நழுவப்படைப்பினைக் கூகொள் கூடலில் படைத்து, மாணவர்களுக்குத் தனி வாக்கியம் தொடர்பான தகவல்களை விளக்கமளித்தேன்.
தனி வாக்கியத்தில் இருக்க வேண்டிய கூறுகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கினேன். மாணவர்களிடம் கேள்விகளை
எழுப்பிக்கொண்டே நான் விளக்கமளித்ததால் மாணவர்கள் எனது கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்துக்கொண்டே இருந்தனர்.
அந்நேரத்தில் அவர்களின் புரிதலையும் என்னால் சோதிக்க முடிந்தது. ஆனாலும், சில மாணவர்கள் இரண்டு பயனிலைகளைக் கொண்ட
வாக்கியத்தையும் தனி வாக்கியம் என்றனர். அவர்களுக்கென்று நான் மீண்டும் தனி வாக்கியம் கூறுகள் தொடர்பாக விளக்கி, கூடுதல்
காட்டுகளையும் எடுத்துக் கூறினேன். அதன் பிறகு, சில வாக்கியங்களைக் கூறி தனி வாக்கியத்தை அடையாளம் காண பணித்தபோது
மாணவர்கள் சரியான முறையில் தனி வாக்கியத்தினை அடையாளம் கண்டு அதனுள் இருக்கும் எழுவாய் பயனிலையையும்
குறிப்பிட்டனர். தொடர்ந்து படிநிலை இரண்டில், ‘குய்சீஸ்’ செயலியின்வழி மாணவர்களுக்குப் புதிர் கேள்விகளை வழங்கியபோது
ஆர்வமுடன் மாணவர்கள் ஈடுபட்டனர். தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் காண்பிக்கப்படும் கேள்விகளுக்குப் பதில்களைக் கூற,
அதனை அழுத்தி சரிபார்த்தேன். மொத்தம் பன்னிரண்டு கேள்விகளுக்கும் இம்மாணவர்கள் சரியான பதில்களையே கூறினார்கள். அதன்
பிறகு, மதீப்பீடு நடவடிக்கையாக மாணவர்கள் முடக்கலையில் நடவடிக்கை நூல் பக்கம் 50, 51 இல் பயிற்சிகளைச் செவ்வனே செய்து
அதனைப் படமெடுத்து கூகொள் வகுப்பறையில் பதிவிட்டனர். மாணவர்களுக்குக் கூடுதல் புரிதலுக்காக தனி வாக்கியம் தொடர்பான
காணொலி ஒன்றனைத் தயார்செய்து அதனையும் கூகொள் வகுப்பறையில் பதிவிட்டேன். இன்றைய பாட நோக்கங்களை முழுமையாக
அடைந்த மாணவர்களுக்கு வளப்படுத்தும் நடவடிக்கை வழங்கப்படும்.
இன்றைய பாட நோக்கங்களை முழுமையாக அடையாத மாணவர்களின் மொத்த எண்ணிக்கை பத்து ஆகும். இப்பத்து மாணவர்களில்
ஒருவர் மட்டுமே கூகொள் கூடலில் நடந்தேறிய கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் கலந்துகொண்டார், ஆனால் இணையக் கோளாரின்
காரணமாக அவரால் முழுவதுமாகக் கவனம் செலுத்த இயலவில்லை. கொடுக்கப்பட்ட நடவடிக்கையையும் இம்மாணவர் முழுமையாகச்
ஜவீனா டேவிட்
செய்துமுடிக்கவில்லை. இம்மாணவன் பாட நோக்கங்களை அடையாததன் முக்கியக் காரனம் இணையக் கோளாறு என்று நான்
கருதுகிறேன். மீதமுள்ள ஒன்பது மாணவர்கள் கூகொள் கூடலில் கலந்துகொள்ளவில்லை. இவர்களின் நலன்கருதி தனி வாக்கியம்
தொடர்பான காணொலி ஒன்றனைத் தயார்செய்து அதனைக் கூகொள் வகுப்பறையில் பதிவிட்டேன். பிறகு, அக்காணொலியின்
துணைகொண்டு பயிற்சிகளைச் செய்யப் பணித்தேன். ஆனாலும், இவர்களிடமிருந்து எந்தவொரு பயிற்சியும் எனக்கு வரவில்லை.
இம்மாணவர்களுக்குக் குறைநீக்கல் நடவடிக்கை வழங்கப்படும்.