You are on page 1of 5

பல்லி விழும் பலன்

தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்


தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்

நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீ ர்த்தி


நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்

வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி


வயிறின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்

முதுகு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை


முதுகு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்

கண் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்


கண்; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்

தோல் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி


தோல் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி

பிருஷ்டம் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்


பிருஷ்டம் ; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்

கபாலம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு


கபாலம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு

கணுக்கால் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்


கணுக்கால் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு

மூக்கு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை


மூக்கு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி

மணிக்கட்டு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீ ர்த்தி


மணிக்கட்டு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை

தொடை ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்

நகம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்


நகம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு

காது ; இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்


காது ; வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்

மார்பு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்


மார்பு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்

கழுத்து ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி


கழுத்து ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை

செல்வம் பெருக சில குறிப்புகள்


 
1.  
2. வீட்டில் ஏற்றும் காமா ட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம்
ஏற்படும்.
3. வீட்டில் வெள்ளை புறாக் களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்
4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பலவித
ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும்.
இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பணவரவு ஏற்படும்.
6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக் கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை
காலை பொழுதில் செய்யக் கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.
7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டைவிட்டு
வெளியேறக் கூடாது.பணம் ஓடிவிடும்.
8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்யபலம் கூடும். பண வரவு
அதிகரிக்கும்.
9. வெள்ளளிக்கிழமை  சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது
குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்.
10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம்
பெற பணம் நிலைத்திருக்கும்.
11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால்
சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசை தான்.
12. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45
நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம்வரும்.
13. முழு பாசி பருப்பை வெல்லம்கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு,
பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்துவர பணத்தடைநீங்கும்.
14. வெள்ளிக் கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேக த்திற்கு பசும் பால் வழங்கிட பணம்
வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.
16. பசும் பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக் கிழமை செய்திட நிச்சியமாக
பணம் வரும்.
17. பாசி பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறு நாள் அதனை
ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.
18. தினசரி குளிக்கும் முன் பசுந் தயிரை  உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம்
விலகும்.
19. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.
20. தமிழ் மாதத்தில் முதல் திங்கட் கிழமை என தொடர்ந்து 12 மாதமும் திங்கட்கிழமை திருப்பதி
ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர்  ஆகலாம். பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட
லட்சாதிபதி ஆகலாம்.
21. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப் பெட்டியில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு
ஆகாது.
22. குடியிருக்கும் வீட்டில் வட கிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில்
லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
23. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும்
வாசம் செய்வாள்.
24. மகாலட்சுமிக்கு இளஞ் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசிய முண்டாகி செல்வ வரத்து
உண்டாகும்.
25. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக் கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு
அகலில் 11 தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பண வரவு நிரந்தரமாகும்.
26. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம்
சேர்ந்து கொண்டே இருக்கும்.
27. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ண மியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை
பெறலாம்.
28. ஐப்பசி மாத வளர் பிறையில் மகா லட்சுமியை  வழிபடசெல்வம் பெருகும்.
29. தொடர்ந்து  11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்கு சொர்ணா கர்ஷன பைரவருக்கு தாமரை மாலை
அணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழி படசொர்ண ஆகர்ஷ ணமாகும்.
30. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதள வில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை
அணிவித்திட பணம் குவியும்.
31. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம்
குவியும்.
32. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
33. வௌளிக் கிழமை  மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.
34. மகா லட்சுமியை கனக தாரா ஸ்தோத்திரம் கூறி திரிதள வில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம்
ஆகும்.
35. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இரு வேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திட
செல்வம் சேரும்.
36. சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.
37. சொர்ணா கர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம்
சேரும்.
38. பசுவுடன் கூடிய கன்றுக்கு உண வளித்தால் சகல செல்வங்களும் வசமாகும்.
39. வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன் வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட  லஷ்மி
அருள் பரிபூர ணமாக கிட்டும்.
40. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாப னத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம்
பெருகும்.
41. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம் ஆகர்ஷ ணமாகும்.
42. தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி  படத்தில் காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம்
கிடைக்கும்.
43. தனாக ர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம் நிலையாக தங்கும்.
44. சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில்
முன்னேற்றம்ஏற்படும்.
45. குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.
46. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம்

ஏற்படும்.
47. திருமலை வெங்கடா ஜலபதிக்கு  வெண் பட்டு அணிவித்து வழிபட செல்வம் சேரும்.
48. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்து வர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
49. சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண
லாபம் கிட்டும்.
50. செவ்வாய் கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர் முருகனை வழிபட்டால் காரியத் தடை நீங்கி
வளம் பெருகும்.
51. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபட பூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.
52. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப்
பெட்டியில் வைக்க பணம் சேரும்.
53. சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனை அன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து
மடங்கு நம்மிடம் வந்து சேரும்.
54. ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்
அணிந்து வர பணம் வரும்.
55. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ்
கொண்டுஅர்சிக்க  தனலாபம் கிட்டும்.
56. ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம்
ஆகும்.
57. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராய ணத்தை வேதபண்டி தர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாடசம்
நிரந்தரமாகும்.
58. ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம்
நீங்கிதனலாபம் பெறலாம்.
59. கனக தாரா ஸ்தோத் திரத்தினை கூறியும் கேட்டு வர பணம் கிடைக்கும்.
60. வீட்டில் சுமங் கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாக பிடித்து அவர்களை  நினைத்து
வழிபட, சகல தோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
61. மகாலட்சுமிக்கு  பச்சை பட்டினை அணிவித்து வணங்க பணம் வரும்.
62. கற்பக விநாயகரை 1008 அருகம் புல் கொண்டு மகாசங்கட ஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்க
தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
63. பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டி தினமும் தூபம் காட்டி வர அஷ்ட
ஐஸ்வர்யங்களும் வசமாகும்.
64. செல்வத்திற்கு உரியவள் மகா லட்சுமி வெள்ளிக் கிழமை தினம் வழிபடவும் 24 வெள்ளிக் கிழமை
வழிபாட்டால் பணம் கிடைக்கும்.
65. தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றி கிடைக்கும்.
66. இந்து ராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வு வாழ பணம் கிடைக்கும்.
67. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணா மூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் சேரும்.
68. வெள்ளிக் கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன், மகாலஷ்மி இரு வரையும் மல்லிகை மலர் கொண்டு
33 வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.
69. செந்தா மரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் கிடைக்கும்.
70. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ர ஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
71. அவரவர் குல தெய்வத்தை தினம் அதி காலை நேரத்தில் நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.
72. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில் முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம்
செய்த அளவின் மடங்குகள் பணம் வரும்.
73. திருப்பதி வெங்கடா ஜலபதி, பத்மாவதி படம் வைத்து வழிபட பணம் வரும்.
74. தனதா யட்சணீ பூஜை வில்வ மரத் தடியில் தந்திர சாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
75. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில் பணம் கிடைக்கும்.
76. சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தன வீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி
இவைகளை வழிபட  தங்க நகை கிடைக்கும்.
77. ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.
78. ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக் கடி பார்க்க பணம் வரும்.
79. தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
80. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
81. ஒத்தை பனை மர முனீஸ் வரனை ஏரளஞ்சில் தைல தீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.
82. வியாழக் கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபட பணம் வரும்.
83. ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது.
கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இரந்து கொடுக்க/வாங்க வேண்டும்.
84. செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல்வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய்
ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்ப வருக்கு பணம் திரும்ப கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை
திரும்ப கொடுக்க இயலும். திரும்பகொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
85.

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள
அசுத்தங்கள் சுத்தம் செய்யப்பட பின்னர் தான் பிராணாயாமமும், தியானமும் எளிதல் கைகூடும். நாடிகள் (நரம்புகள்) அசுத்தம் நிறைந்து
இருக்குமானால், வாயுவானது நாடிகளில் நுழைவது கடினம்.

எனவே, பிராணாயாமம் பயில்வதற்கு முன்னர் நாடிகள் சுத்தப்படுத்தப் பட வேண்டும். நாடி சக்தி பிராணாயாமம் பயில்வதற்கு அடிப்படை
ஆகும்.
நாடிகளை இரண்டு வழிகளில் சுத்தப்படுத்த முடியும். அவையாவன; சாமனு, நிர்மனு, சாமனு என்பது, பீஜ மந்திரத்தினால் மூளையைச்
சுத்தப்படுத்துதல். நிர்மனு என்பது உடலை சுத்தப்படுத்துதல்.

ஒரு தியான நிலையிலோ, சுலபமான முறையிலோ அமர்ந்து முதுகெலும்பை நேராக நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இடது கை
முழங்காலிலும், வலது கை மூக்கின் மேலும் இருக்க வேண்டும். கட்டை விரல் மூக்கின் வலது புறமும், நான்காவது ஐந்தாவது விரல்கள்
இடது புறமும் இருக்க வேண்டும். சுட்டு விரலையும், நாடி விரலையும் மடக்கிக் கொள்ள வேண்டும். மூக்கை அழுத்தித் திருப்பாமல், எலும்புப்
பகுதியை மட்டும் அழுத்திக் கொண்டு சுவாசத்தில் ஈடுபட வேண்டும்.

முதலில் இடது நாசி வழியாக மூச்சை வெளியிட்டு பின்னர் அதே நாசி வழியாக நீண்ட உள்மூச்சை இழுக்க வேண்டும். அப்போது வலது
நாசி துவாரம் மூடப்பட்டிருக்க வேண்டும்.

பின்னர் இடது நாசியை மூடிக் கொண்டு வலது நாசித் துவாரம் வழியே மூச்சை வெளியிட வேண்டும். பின்னர் வலது நாசி வழியே மூச்சை
உள்ளிழுக்க வேண்டும். பின்னர் நாசி வழியே மூச்சை வெளியிட வேண்டும். இது ஒரு தடவை என கணக்கிட வேண்டும்.

இந்த சுவாச முறையில் உள்மூச்சு வெளிமூச்சு இரண்டும் மிகவும் மெதுவாக நடக்க வேண்டும். சப்தம் எதுவும் உண்டாக்காமல் பயிற்சி
செய்ய வேண்டும். உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. அதிகாலை அல்லது பின் மாலை நேரம் இதற்கு ஏற்ற காலமாகும்.

ஏனெனில், சூரியனிடமிருந்து வரும் அல்ட்ராவயலட் கதிர்கள் உடலில் உள்ள ஆஷ்துமா, ஜலதோஷம், இருமல் இவற்றை விரட்டுகிறது.
வைட்டமின் 'டி' சூரியகதிர்களில் உள்ள அல்ட்ராவயலட் கதிரில் உள்ளது.

நுரையீரல், இதயம், வயிறு ஆகியவை சுத்தமடையும். நுரையீரலின் சுவாசிக்கும் தன்மை அதிகப்படும். சுவாசம் சீரடையும். தியானத்திற்கு
முன் நாடிசுத்தி செய்வதால், தியானம் எளிதில் கைகூடும்.

You might also like