Professional Documents
Culture Documents
Chapters All
Chapters All
முதன்மைத்தாள்
பண்டைய இலக்கியம்
பாட நோக்கம்
1. சங்ககால இலக்கிய அகப்புற மரபுகளை மாணவர்களுக்கு உணர்த்துதல்
2. பழந்தமிழர் அகம் மற்றும் புற வாழ்வியல் அறங்களை இனங் காட்டுதல்
3. பழந்தமிழரின் இயற்கை இயைந்த வாழ்க்கை பின்னணியைச் சுட்டுதல்
அலகு 1
2
1. முல்லைப்பாட்டு
2. பட்டினப்பாலை
பண்டைய இலக்கியம்
தாள் பாகுபாடு
பாட முன்னுரை
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் நாகரிகம், பண்பாடு மற்றும்
பழக்க வழக்கங்களைப் பற்றிய செய்திகளை எடுத்துரைக்கும் நூலாகச் சங்க இலக்கியம்
விளங்குகிறது. சங்க இலக்கியம் பாட்டும், தொகையும் என்று வகைப்படுத்தப்படுகிறது. பாட்டு
என்பது பத்துப்பாட்டினையும் தொகை என்பது எட்டுத்தொகையினையும் குறிக்கிறது.
இவ்விலக்கியங்கள் மனித வாழ்க்கையைப் பிரதிபலிப்பதோடு வாழ்வியல் அறக்கோட்பாடுகளை
வெளிப்படுத்துவனவாக அமைகின்றன. உலகம் முழுமைக்கும் ஏற்றதொரு சிந்தனையாகத்
தமிழரின் பண்பாடு விளங்குகிறது. இத்தமிழர் பண்பாட்டை அவரது வாழ்வு முறையினை
இப்பண்டைய இலக்கியம் என்னும் தாள் மாணவர்கள் அறிந்துகொள்ள வழிகோலுகிறது.
5
பாடம் ஒன்று
முல்லைப்பாட்டு அறிமுகம்
1.1.0. முன்னுரை
முல்லைப்பாட்டு அறிமுகம் என்னும் இப்பகுதியில் நூல் நூலாசிரியர் வரலாறு,
முல்லைத்திணை மற்றும் முல்லைப்பாட்டினைப் பதிப்பித்த மற்றும் உரையாசிரியர்கள் குறித்தச்
செய்திகள் ஆகியன விளக்கப்படுகின்றன.
1.1.1. நூல் அறிமுகம்
பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்ட அகவற்பாவில் (ஆசிரியப்பா)
அமைந்த சிறிய நூலாகும். இந்நூல். பத்துப்பாட்டு நூல்களுள் அளவால்(அடி எண்ணிக்கை)
சிறியது. இம்முல்லைப்பாட்டினை, நெஞ்சாற்றுப்படை என்றும் கூறுவர்.
1.1.2. ஆசிரியர் பெயர்க்காரணம்
முல்லைப்பாட்டை இயற்றிய புலவரின் பெயர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார்
மகனார் நப்பூதனார். இவருடைய இயற்பெயர் பூதன். இவருடைய பெயருக்கு முன் சிறப்புப்
பொருளைத் தரும் இடைச்சொல்லாகிய ”ந” என்னும் எழுத்தையும், பெயருக்குப்பின், உயர்வைக்
குறிக்கும் “ஆர்” விகுதியையும் சேர்த்து இவர் நப்பூதனார் என்று அழைக்கப்பட்டார்.
பண்டைக்காலத்தில் சான்றோர் பெயர்களான நக்கீரனார், நக்கண்ணையார்,
நத்தத்தனார், காக்கை பாடினியார் நச்செள்ளையார் முதலிய பெயர்களில் ”ந” என்னும் சிறப்பு
எழுத்து இடம்பெற்றிருப்பது போன்று இவர் பெயரிலும் இடம்பெற்றுள்ளது. இவர் இயற்றியதாக
முல்லைப்பாட்டு ஒன்று மட்டுமேசங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
1.1.3. ஆசிரியர் காலம்
இவர் தந்தையார் பொன்வாணிகனார் என்பதும் அவர் சோழநாட்டில் வாழ்ந்தவர் என்பதும்
இவர் பெயரிலிருந்து தெரிகிறது. முல்லைப்பாட்டு கி.பி. மூன்றாம் நூற்றாண்டில்
இயற்றப்பட்டிருக்கலாம் என்பது டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்களின் கருத்தாகும்.
1.1.4 முல்லைத் திணை
மாந்தரின் உள்ள நிகழ்வுகளை மையக்கருத்தாகக் கொண்ட பாடல்கள் அகத்திணைப்
பாடல்கள் என்றும், புறம் சார்ந்த ஒழுகலாறுகளை மையமாகக்கொண்ட பாடல்கள் புறத்திணைப்
பாடல்கள் என்றும் தொல்காப்பியம் கூறுகிறது. அகத்திணைப் பாடல்களை, கைக்கிளை,
குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல் மருதம் மற்றும் பெருந்திணை என்று ஏழுதிணைகளாகத்
(பிரிவுகளாகத்) தொல்காப்பியம் பாகுபடுத்துகிறது.
மன்னன் ஒருவன் போருக்காகத் தன் மனைவியைப் பிரிந்து சென்றபொழுது அவனுடைய
பிரிவினால் வரும் துயரத்தை அவன் மனைவி பொறுத்துக்கொண்டு, அவன் வருகையை
எதிர்பார்த்துக் காத்திருத்தலே முல்லைத்திணை உரிப்பொருள் ஒழுக்கமாகும். இக்கருத்தை
மையமாகக் கொண்டு, புலவர் நப்பூதனார் முல்லைப்பாட்டை இயற்றியுள்ளார். மனைவி, கணவனின்
பிரிவைப் பொறுத்துக்கொண்டு, தலைவன் பாசறையில் இருத்தலும் குறித்துப் பாடுவதால்,
இம்முல்லைப் பாட்டு முல்லைத்திணை ஒழுக்கம் சார்ந்த பாடலாக அமைகிறது.
1.1.4. முல்லைப்பாட்டு பதிப்புகள் மற்றும் உரைகள்
கி.பி. மூன்றாம் நூற்றண்டில் முல்லைப்பாட்டு இயற்றப்பட்டிருந்தாலும், அது, பத்துபாட்டின்
ஒருபகுதியாக, முதன்முதலாக நூலாக 1889 ஆம் ஆண்டு டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர்
அவர்களால், “பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும்” என்ற தலைப்பில்
6
வெளியிடப்பட்டது. பின்னர், சென்னைப் பல்கலைக் கழகத்தில், இளங்கலை வகுப்புக்குரிய
பாடங்களில் முல்லைப்பாட்டும் சேர்க்கப்பட்டிருந்ததால், உ.வே. சாமிநாத ஐயர் அவர்களும்
மறைமலை அடிகளாரும் மாணவர்களுக்காக எளிய உரையை 1903 ஆம் ஆண்டு பதிப்பித்தனர்.
அதற்குப் பிறகு, 1955 ஆம் ஆண்டு, பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் அவர்கள்
முல்லைப்பாட்டுக்கு ஒரு சிறந்த உரையைப் பதிப்பித்தார்.
7
பாடம் இரண்டு
முல்லைப்பாட்டு - பொருட் பாகுபாடும் சுருக்கமும்
1.2.1 முன்னுரை
இப்பாடத்தில் முல்லைப்பாட்டின் கட்டமைப்பு, புலவர் இப்பாட்டினைப் பகுத்துப் பாடும்
முறை, மற்றும் முல்லைப்பாட்டு பொருட்சுருக்கம் குறித்தச் செய்திகள் இடம்பெறுகின்றன.
1.2.2 முல்லைப்பாட்டு பொருளமைப்பு
1 - 6 அடிகள் : கார்கால வருணனை
7 - 18 அடிகள் : : முதுபெண்டீர் விரிச்சி கேட்டல், கோவலர்
வாழ்ககை
் முறை.
19 -23 அடிகள் : தலைவியின் இருத்தலும் இல்லச்சூழலும்
24-42 அடிகள் : பாசறையின் அமைப்பு, யானையின் செயல்,
அரண்வீடு உருவாக்கல்.
43- 49 அடிகள் : போர்க்களத்தில் பெண்டிர் விளேக்கேற்றுதல்
50-80 அடிகள் : மெய்க்காப்பாளர்கள் காவல், கணியன் செயல்,
மிலேச்சர் காவல், அரசன் சிந்தனை.
81-103 அடிகள் : தலைவியின் நிலை, தலைவன் மீண்டும் திரும்பி
வருதல்.
இவ்வாறு, முல்லைப்பாட்டின் வருணனை விவரிக்கப்படுகிறது.
1.2.3 முல்லைப்பாட்டு : புலவர் பாடும் முறை
முல்லைத்திணைப் பாடலுக்குத் தொல்காப்பியம் வகுக்கும் இலக்கணத்தை
முழுமையாகக் கொண்டு முல்லைப்பாட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. நான்கு பகுதிகளைக்
கொண்ட ஒரு ஓரங்க நாடகமாக முல்லைப்பாட்டு அமைந்திருக்கிறது. முதற்பகுதியில்,
கணவனைப் பிரிந்திருக்கும் மனைவியின் மனநிலை காட்டப்படுகிறது. இரண்டாவது பகுதியில்
பாசறை அமைப்பும் அங்குள்ள மன்னனின் மனநிலை விவரிக்கப்படுகிறது. மூன்றாவது
பகுதியில் மீண்டும் மனைவி தன் கணவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முயற்சி
செய்யும்பொழுது அவளுக்கு ஏற்படும் துயரநிலைச் சித்திரிப்பு பெறுகிறது. கடைசிப் பகுதியில்
கணவன் போரில் வெற்றிபெற்று முல்லை நிலக்காட்டு வழியில் தன் தேரில் விரைந்து வருவதை
வருணிக்கிறது. புலவர் நப்பூதனார் மிக அழகாக, கவிநயத்தோடும் முல்லைநிலத்தின்
இயற்கைக் காட்சிகளோடும் கலந்து இப்பாடலை இயற்றியிருப்பது அவருடைய புலமைக்குச்
சான்றாக அமைகிறது.
1.2.4 முல்லைப்பாட்டு பொருட் சுருக்கம்
ஓரு தலைவன், கார்காலம் (மழைக்காலம்) தொடங்குவதற்கு முன்னரே
திரும்பிவருவதாகக் கூறிப் போருக்குச் செல்கின்றான். தலைவி தன் கணவனைப்
பிரிந்திருப்பதால் துயரத்துடன் தலைவன் சொல் கேட்டுக் காத்திருக்கின்றாள். கார்காலம்
வந்ததன் அறிகுறியாகப் மழை பெய்யத் துவங்கியது. தலைவியின் துயரத்தைக் கண்ட
அவளுடைய பணிப்பெண்களில் வயது முதிர்ந்த பெருமுது பெண்டிர் ஊர் எல்லையில் நின்று
விரிச்சி கேட்டு கைதொழுது நின்றனர். அச்சமயம், இடையர்குலப் பெண் ஒருத்தி,
மாலைப்பொழுதில் வீடு திரும்பாத தாய்ப்பசுவைக் காணாமல் வருந்தும் இளங்கன்றை நோக்கி,
“உன் தாய் விரைவில் வரும்” என்று கூறுகிறாள். அதைக்கேட்ட பணிப்பெண்கள்
அரண்மனைக்குச் சென்று, தாம் கேட்ட நற்செய்தியைத் தலைவியிடம் கூறி, தலைவன்
8
விரைவில் வருவான் என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறார்கள். ஆனால், தலைவியின் துயரம்
தீரவில்லை. அவள் கண்களிலிருந்து முத்துமுத்தாக கண்ணீர்த்துளிகள் வருகின்றன.
தலைவி வருந்தும் இவ்வேளையில், தலைவன் பாசறையில் இருக்கின்றான்.
படைவீரர்கள், போர்க்களத்தருகே பாசறை ஒன்றை அமைத்துள்ளனர். அப்பாசறையில்
மன்னனுக்காக இரண்டு அறைகளுடன் கூடிய தனி இருப்பிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. பாசறையைச்
சுற்றிலும் முள்ளாலான வேலியும், பல்வேறு அரண்களும் உள்ளன. பாசறையில், அன்றைய போரில்,
புண்பட்ட யானைகள் மற்றும் குதிரைகளையும், வீரத்தோடு போர்புரிந்து இறந்த வீரர்களயும்,
நினைத்து, நடுநாள் வரை உறக்கமில்லாது மன்னன் படுக்கையில் படுத்திருக்கிறான். மறுநாள்,
போரில் மன்னன் வெற்றி பெற்றான். அன்றிரவு மகிழ்ச்சியுடன் உறங்குகிறான்.
பாடம் மூன்று
முல்லைப்பாட்டு மூலம்
நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
9
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி,
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை (1-6)
அருங்கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது, 10
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச்,
சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்தத் ர, 15
இன்னே வருகுவர் தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம், அதனால்,
நல்ல நல்லோர் வாய்ப்புள், தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது, நீ நின் 20
பருவரல் எவ்வம் களை மாயோய், எனக்
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து
பூப்போல் உண்கண் புலம்பு முத்து உறைப்பக், (12 – 23)
கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்,
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி, 25
வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக் காட்ட
இடுமுள் புரிசை ஏமுற வளைஇப்,
படு நீரப் ் புணரியின் பரந்த பாடி.
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்,
கவலை முற்றம் காவல் நின்ற 30
தேம்படு கவுள சிறு கண் யானை,
ஓங்கு நிலைக் கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த
வயல் விளை இன்குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டெனக்,
கவை முள் கருவியின் வடமொழி பயிற்றிக் 35
கல்லா இளைஞர் கவளம் கைப்பக்,
கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசை நிலை கடுப்ப, நல்போர்
ஓடா வல்வில் தூணி நாற்றிக்,
கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கைப் 40
பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து,
வாங்கு வில் அரணம் அரணமாக,
வேறு பல் பெரும்படை நாப்பண், வேறு ஓர்
நெடுங்காழ்க் கண்டம் கோலி அகம் நேர்பு
குறுந்தொடி முன் கை கூந்தல் அம் சிறுபுறத்து, 45
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
10
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர்,
நெய் உமிழ் சுரையர், நெடுந்திரிக் கொளீஇக்,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட,
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள், 50
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்தாங்குத்,
துகில் முடித்துப் போர்தத
் தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ,
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள், 55
தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி,
“எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்
குறு நீர்க் கன்னல் இனைத்து” என்று இசைப்ப
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க, வெருவரும் தோற்றத்து, 60
வலி புணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட, புனை மாண் நல் இல்,
திரு மணி விளக்கம் காட்டி திண் ஞாண்
எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்,
உடம்பின் உரைக்கும் உரையா நாவின் 65
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக,
மண்டு அமர் நசையொடு, கண்படை பெறாஅது,
எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து
பிடிக் கணம் மறந்த வேழம், வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமியத், 70
தேம்பாய் கண்ணி நல் வலம் திருத்திச்
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும், தோல் துமிபு
வைந்நுனைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்,
ஒரு கை பள்ளி ஒற்றி, ஒருகை 75
முடியொடு கடகம் சேர்தத ் ி, நெடிது நினைந்து,
பகைவர் சுட்டிய படைகொள் நோன் விரல்,
நகை தாழ்க் கண்ணி நல் வலம் திருத்தி,
அரசு இருந்த பனிக்கும் முரசு முழங்கு பாசறை
இன் துயில் வதியுநன் காணாள், துயர் உழந்து,
நெஞ்சை ஆற்றுப்படுத்த, நிறைதபு புலம்பொடு,
நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும்,
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து,
பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல, 85
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து,
முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி
இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்
11
அஞ்செவி நிறைய ஆலின வென்று பிறர்
வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெருந் தானையொடு 90
விசயம் வெல் கொடி உயரி
வயிரும் வளையும் ஆர்ப்ப அயிர)
செறி இலைக் காயா அஞ்சனம் மலர,
முறி இணர்க் கொன்றை நன் பொன் காலக்,
கோடல் குவி முகை அங்கை அவிழ, 95
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்
திரி மருப்பு இரலையொடு மடமான் உகள,
எதிர் செல் வெண்மழை பொழியும் திங்களில்,
முதிர் காய் வள்ளியங்காடு பிறக்கொழியத்,
துனை பரி துரக்கும் செலவினர்,
வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே.
முல்லைப்பாட்டு பாடல் பொருள் விளக்கம்
1.3.1 முன்னுரை
இப்பாடப் பகுதியில் மாணவர்களுக்கு எளிமை கருதி பாடலின் கருத்துரை மட்டும்
தரப்பெற்றுள்ளது. முல்லைப்பாட்டின் மூலபாடத்துடன் இணைத்துப் படிக்கௌமாறு அடிகள்
பிரித்து பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளத்.
1.3.2 முல்லைப்பாட்டு (செய்யுள் விளக்கம்)
”நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு” எனத் தொடங்கி ”பெரும் பெயல் பொழிந்த
சிறு புன் மாலை” எனும் வரை கார்காலத்தின் தொடக்கத்தே அமைந்த மாலைப்பொழுது
வருணிக்கப்படுகிறது. முல்லைத்திணைக்கு உரிய முதற்பொருளாகிய கார்காலப் பெரும்பொழுதும்,
மாலைக்காலச் சிறுபொழுதும் முல்லைப்பாட்டின் தொடக்கமாக அமைகின்றன.
மாலைப்பொழுது வருணனை (1-6 அடிகள்)
சுழலும் சக்கரத்தையும், சங்கையும் கைகளில் ஏந்திய திருமால், மன்னன்(மாபலிச்
சக்கரவர்த்தி) வார்த்த நீரை வாங்கிக்கொண்டு நிமிர்கின்றான். அத்திருமாலின் தோற்றம் போல,
கடல்நீரைப் பருகி எழுந்த மழைமேகம் பெருமழை பொழிந்தது (கார்காலம்). அம்மழை பொழிந்த
மாலை நேரம்.
விரிச்சி கேட்கும் பெருமுது பெண்டிர் (7 – 11 அடிகள்)
கட்டுக்காவல் மிக்க பழமையான ஊர். அந்த ஊருக்கு வெளிப்புறம் பெருமுது பெண்டிர்
செல்கின்றனர். தாம் கொண்டு சென்ற நாழியில்(அக்கால அளவை) உள்ள நெல்லையும்,
வண்டுகள் மொய்க்க மலரும் புத்தம்புது முல்லைப் பூவையும் தூவி வணங்கி,
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,
பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்ப
விரிச்சிக்காகக் காத்திருந்தனர். (விரிச்சி- நற்சொல் கேட்டல்)
முதுபெண்டிர் ஆற்றுவிக்கும் திறம்(தேற்றுதல்) (12-23 அடிகள்)
முது பெண்டிர் விரிச்சி கேட்கும் நேரத்தில், அங்கிருந்த ஆய்மகள் பச்சைக்
கன்றுக்குட்டியைச் சிறிய தாம்புக் கயிற்றிலே தொடுத்து வைத்திருந்தாள். அது தாய்ப்பசுவை
12
எண்ணித் தவித்துக்கொண்டிருந்தது. அந்தக் கன்றினைத் தேற்றும் சொற்களாகிய, “கையில்
வளைகோல் வைத்திருக்கும் கோவலர் பின்னிருந்து ஓட்டிக்கொண்டு வர
இன்னே வருகுவர், தாயர் என்போள்
நன்னர் நல் மொழி கேட்டனம்; அதனால்
“இது நல்லவர் வாயிலிருந்து வந்த ‘புள்’ சகுனம். (வாய்ப்புள் - வாயிற்பிறந்த
நிமித்தச்சொல்.) பகைவரைப் போர்முனையில் வென்ற தலைவர் தாம் மேற்கொண்ட வினை
முடிந்து அவர்கள் தந்த திறைப்பொருளுடன் வருவது உறுதி என்று பெருமுது பெண்டிர்
தாங்கேட்டுவந்த நற்சொற் கூறியும் தலைமகன் சென்றபோது நிகழ்ந்த நல்ல் நிமித்தத்தினையும்
உடன் எடுத்துக்காட்டி கூறுகின்றனர்.
மாயோய்! (மாந்தளிர் நிறம் கொண்டவள்) உன் கவலையைப் போக்கிக்கொள்” என்று
விருச்சியைக் கேட்கும்படி பெண்கள் தலைவனைப் பிரிந்திருந்த தலைவிக்குக் கூறினர். அச்
சொற்களைக் கேட்ட பின்னரும் மாயோளின் பூப்போன்ற கண்களிலிருந்து அவள் புலம்பும்
முத்துக்ககள் உதிர்ந்தன. இதனை,
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து,
பூப் போல் உண் கண் புலம்பு முத்து உறைப்ப
என்ற அடிகள் விளக்குகின்றன.
(இனி, அடிகள் 24 முதல் 78 அடிகள் வரையிலான 45 அடிகள் வரையிலான பாட்டின்
பொருள் தலைமகன் பாசறையிலிருக்கும் நிலையினைக் கூறுகிறது. பகைமன்னர்
நாட்டிற்குச் சென்று போரிடும் மன்னர், படைவீரர்கள் மற்றும் மன்னர் தங்க
பகைப்புலத்தில் பாடிவீடு (தற்காலிகவீடு) அமைத்துத் தங்குவர். அப்பாடி வீட்டினுட்
பல்வகைப் படைகளும் இருப்பதற்காக அமைக்கப்பட்ட அரண்களையும் அவ்வரண்களுக்கு
இடையில் தலைமகனுக்கு ஒரு தனிவீடு அமைக்கப்பட்டது குறித்தும் ஆசிரியர்
விரிவாகக் கூறுகின்றார்.)
பாசறையின் இயல்பு( 24 – 28 அடிகள்)
பகைப்புலம் சென்ற தலைவன் பாடிவீட்டில் இருந்தான். அது காட்டாறு பாயும்
முல்லைநிலத்தில் இருந்தது. மணம் கமழும் பிடவம் பூச்செடிகள் அழிக்கப்பட்டு அந்தப் பாடிவீடு
அமைக்கப்பட்டிருந்தது. வேட்டையாடும் விலங்குகள் அதில் நுழையாவண்ணம் முள்வேலிச்
சுற்றுமதில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்தது. காட்டாறு கடல்போல் அகன்றதாய் அதனைச்
சுற்றிலும் ஓடும்படிச் செய்யப்பட்டிருந்தது.
யானைப் பாகரது செயல் (29-36 அடிகள்)
பாடிவீட்டுத் தெருக்களில் உவலைக்கொடி படர்ந்த கூரைக் கூடாரங்கள் இருந்தன.
தெருக்கள் பிரியும் முற்றத்தில் காவலுக்காக யானைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த யானைகளுக்குக்
கரும்பையும் நெற்கதிர்களோடு கூடிய தழைகளையும் உணவாகத் தந்தனர்.
கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி,
கல்லா இளைஞர், கவளம் கைப்ப
அவற்றை அந்த யானைகள் தன் கைகளால் வாங்கி உண்ணாமல் நெற்றிகளில் துடைக்கின்றன.
அவற்றை உண்ணும்படி, வடமொழிச் சொற்களைச் சொல்லி, கையில் கவைமுள் (அங்குசம்)
வைத்திருந்த இளைஞர்கள் பயிற்றுவித்துக் கொண்டிருந்தனர்.
வீரர்கள் தங்கும் படைவீடுகள் (37-42 அடிகள்)
தலைவனுக்குப் பாதுகாப்பு அரணம் அமைக்கப்பட்டிருந்தது. கல்லில் துவைத்துக் கட்டும்
ஆடையை நோன்பிருக்கும் பார்ப்பணன் முக்கோல் நடுவில் வைத்திருப்பது போல வில்லும் அம்புக்
13
கூடும் வைக்கப்பட்டிருந்தன. வேல்களை நட்டு அவற்றைக் கயிற்றால் பிணித்திருந்தனர். அப்பாடி
வீடுகளில்,
அரசனுக்கு அமைத்த பாசறை (43-44 அடிகள்)
வேறு பல் பெரும் படை நாப்பண், வேறு ஓர்,
நெடுங் காழ்க் கண்டம் கோலி, அகம் நேர்பு
தலைவனுக்கன்று தனிப் பாடிவீடு இருந்தது. அது உயர்ந்த தூண் நிறுத்திய அகம். பல்வேறு
படைவீரர்கள் அதனைக் காவல் புரிந்தனர்.
மங்கையர் விளக்குகளை ஏந்துதல் (45-49) அடிகள்)
கச்சுடை அணிந்து, முதுகுப்புறம் கூந்தல் புரள, கையில் வளையலுடன் வாளேந்திய
மங்கையர் சுரைக்குடுக்கையில் கொண்டுவந்த எண்ணெய்யை, விளக்குகளில் ஊற்றிச் சுடர்
மங்கும்போதெல்லாம் அதன் திரியைத் தூண்டிவிட்டு இரவினைப் பகலாக்கிக்
கொண்டிருந்தனர்.
மெய்காப்பாளர் செயல் (50-54 அடிகள்)
நள்ளிரவு நேரத்தை மணி ஒலித்துக் காட்டியது. பூத்திருக்கும் அதிரல் கொடி காற்றில்
ஆடுவது போல, முடி போட்டுப் போர்தத ் ியிருக்கும் துணி அக்காற்றில் ஆடும்படி பெருமூதாளர்
(மெய்க்காப்பாளர்) தலைவனுக்குப் பாதுகாவலாக நடந்து கொண்டிருந்தனர்.
நாழிகைக் கணக்கர் செயல் (55-58 அடிகள்)
பிழையின்றிக் காலத்தைக் கணித்தறியும் நாழிகைக் கணக்கர்(பொய்யா மக்கள்)
கைகளால் தலைவனை வாழ்த்தித் தொழுதுகொண்டு “ உலகம் வெல்ல வந்துள்ளவரே! குறுநீர்க்
கன்னல் இத்தனை நாழிகை காட்டுகிறது” என்று தெரிவித்தனர்.
மிலேச்சர் காவல் (59-66 அடிகள்)
வலிமையான யாக்கை(உடம்பு)யினையுமுடைய யவனர், புலிச் சங்கிலி விட்டுக் கைசெய்த
இல்லில்(தற்காலிகமாக அரசர் தங்கும் வீடு) அழகிய மணிவிளக்கினை ஒளிரச் செய்து வைத்து
வலிய கயிற்றிற் சுருக்கிய திரையை வளைத்து முன் ஒன்றும் உள்ளன்றுமாக இரண்டறை வகுத்த
பள்ளியறையுட் புறவறையின்கண்ணே சட்டையிட்ட ஊமை மிலேச்சர்(பிறமொழி மட்டும் அறிந்தவர்)
அருகே காவலிருக்கின்றனர். அச்சமயம் அரசன் படுக்கையில் துயில் கொள்ளாது சிந்தனை
செய்தவாறு இருக்கின்றான்.
அரசனது சிந்தனை (68-76 அடிகள்)
பள்ளிகொண்டிருக்கும் அரசனின் நினைவோட்டமும் காட்சியும் போரைப் பற்றிய நினைவு.
அரசனுக்குத் தூக்கம் வரவில்லை. வேல் பாய்ந்த புண் வலியால் தன் பெண்யானை பற்றிய
நினைவு இல்லாமல் கிடக்கும் ஆண்யானை, வெட்டுப்பட்ட சில யானைக் கைகள் பாம்பு
பதைப்பது போல் துடித்த காட்சி, அரசனின் வெற்றியை வாழ்த்திக்கொண்டே
செஞ்சோற்றுக்கடன் கழித்து மாண்டவர்கள், தோலிலே அம்பு பாய்ந்த வலியால் உணவு
கொள்ளாமல் தள்ளாடிச் செவிகளைச் சாய்த்துக்கொண்டு கிடக்கும் குதிரை ஆகியவற்றைச்
சிந்தித்துக்கொண்டு,
ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை
முடியொடு கடகம் சேர்தத் ி, நெடிது நினைந்து
அரசன் பள்ளியில் கிடக்கின்றான்.
பாசறையில் வெற்றி முழக்கம் (77-79)
14
இவ்வாறு முன்னாளிரவு உறக்கமின்றிக் கவலையோடிருந்த தலைமகன் பின்னாளிற்
பகைவரையெல்லாம் வெற்றி கண்டு, தன் வலிய விரலாலே நல்ல வாகை மாலையினைச்
சூடிக்கொண்டு, 'நாளை மாலையில் தலைவியைக் காண்போம்' என்னும் மகிழ்ச்சியினால் ஒரு
கவலையுமின்றிப் பகையரசர் கேட்டு நடுங்குதற்குக் கருவியான வெற்றி முரசு முழங்குந் தன்
பாசறை வீடடி் ல் இனிது துயில் கொள்கின்றான்.
(இனி, பாட்டின் ஒன்பதுஅடிகள் துயரமும் ஆறுதலும் கலந்த நிலையில் படுத்துக் கிடக்கும்
தலைமகளின் நிலையை எடுத்துரைக்கின்றது. (80-88 அடிகள்))
தலைவனது பிரிவினால் தலைவி பெற்ற துயரம்(80-88 அடிகள்)
இங்ஙனம், பாசறையில் இனிய உறக்கத்திலே கிடக்கின்ற தலைமகனைத் தன் பக்கத்தில்
காணாத தலைமகள் மிகவும் வருந்துகிறாள். முதுபெண்டிர் நற்சொற் கேட்டும் மனம் தேறாது
வருந்துகின்றவள், ’இங்ஙனம் ஆற்றாமே வருந்தினால் அது நம் தலைவன் நான் வரும் வரை
ஆற்றியிரு’ என்ற சொல்லைத் தவறியதாய் முடியுமே என நினைத்துப் பார்த்துத் தன்னைத்
தேற்றிக் கொள்கின்றாள். சுழன்று விழுகின்ற வளையைக் கீழே விழாமல் திருத்தியும், அறிவு
மயங்கியும், அவ்வறிவு மயக்கத்தாற் ஒய்யென பெருமூச்சு விடுகின்றாள் . மாளிகையிற் பாவை
விளக்கு எரிய மாடத்தில் மழை விழும் ஓசை காதில் விழ இம்மாலைக் காலத்தில் படுக்கையிற்
கிடக்கின்றாள். இதனை, ”இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து” எனத் தொடங்கி
முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் (80-88 அடிகள்)
வரை தலைவியின் வருத்தமும் தன்னைத்தானே தேற்றிக் கொள்வதும்
கூறப்படுகின்றன.
(இனி, அடி 89 முதல் இறுதி அடிகள் வரையில் இவ்வாறு, இருக்கும் தலைவியின்
அழகிய செவிகள் நிறையும்படியாக தலைவன் வெற்றியுடன் திரும்பி வருதலும் கார்கால
மழியினால் முல்லை நிலம் கவின் பெறுதலும் விளக்கப்படுகின்றன.)
அரசன் வெற்றியுடன் மீண்டு வருதல் (90-93 அடிகள்)
அருவி ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்த தலைவியின் காதுகள் நிறையும்படி அரசனின்
வெற்றி முழக்க ஒலி கேட்கிறது. பகைவரின் நாட்டைக் கைப்பற்றிக்கொண்டு, அவர்களின்
படையையும் தன் படையுடன் செர்த்துக்கொண்டு, வெற்றிக்கொடியை உயர்த்தியவண்ணம்
மீள்வோர் சங்கும், கொம்பும் முழங்கும் ஒலி கேட்கிறது.
மழையினால் செழித்த முல்லை நிலம் காணுதல் (94-100 அடிகள்)
காயா அஞ்ச நிறத்தில் (கருநீலம்) பூத்தது. கொன்றை பொன் நிறத்தில் பூத்தது. கோடல்
பூ கைவிரல்கள் போல் விரிந்து பூத்தது. தோன்றிப் பூ குருதி நிறத்தில் சிவப்பாகப் பூத்தது.
இப்படிப் பூத்திலுக்கும் முல்லை நிலத்தின் வரகுக் கொல்லையில் மான்கள் துள்ளி விளையாடின.
அரசனது தேரின் வருகை (101-103 அடிகள்)
வள்ளிக் கிழங்கு முதிர்ந்திருக்கும் முல்லைக் காட்டில் அரசனின் தேரோட்டி, “வினை
விளங்கு நெடுந்தேர் பூண்ட” குதிரைகளை விரைவாகச் செலுத்திக் கொண்டிருந்தான்.
1.2.3 முடிவுரை
இம் முல்லைப்பாட்டின் பொருளை அறிந்து கொண்ட நீங்கள், வினாவிற்கு விடை
தரும்போது மூல பாடத்தின் வரிகளை இணைத்துக் கருத்துகளை எழுதினால் கூடுதல்
மதிப்பெண்கள் பெறலாம். இப்பாட விளக்கத்தில் ஆங்காங்கே பாடல் வரிகள் பொருட்பகுதியில்
கொடுக்கப்பட்டுள்ளன அவ்வரிகளையும் பயன்படுத்தி விளக்கலாம்.
15
தன்முயற்சி வினாக்களும் விடைக்குறிப்புகளும்
1. முல்லைப்பாட்டின் பொருட்பாகுபாட்டினை விளக்கியுரைக்க.
தலைவியின் ஆற்றாமை – முதுபெண்டிர் தேற்றும் திறன் – தலைவன் பாசறை இருப்பு –
தலைவன் வெற்றியுடன் திரும்புதல் – தலைவியின் மனநிலை ஆகியன் விவரிக்கப்படுதல்
வேண்டும்.
2. முல்லைப்பாட்டில் தலைமகளின் பிரிவாற்றாமை குறித்து வரும் செய்திகளைத்
தொகுத்தெழுதுக.
வேனிற்காலத் தொடக்கத்திலே பகைவயிற் பிரிகின்றான் தலைவன் - கார்காலம் வந்தும்
அவன் வரவில்லை - தலைமகள் பெரிதும் ஆற்றாளாகின்றாள். முதுபெண்டிர் விரிச்சி
கேட்டல் விளக்கம் – ஆய்மகள் செயல் – ஆற்றுவித்தும் புலம்பித் தலைவி தவிக்கும்
நிலையை எழுத வேண்டும்.
3. முல்லைப்பாட்டில் முதற்பொருள், உரிப்பொருள் அமைந்திருக்கும் விதத்தினை
விளக்கியுரைக்க.
முல்லைத்திணைக்குரிய முதற்பொருள் விளக்கம் – பெரும்பொழுது – கார்காலம்,
சிறுபொழுது மாலைக்காலம் – பாடலடிகள் 1 முதல் 6 வரைக்கான விளக்கம் – தலைவன்
மழையினால் செழித்த முல்லை நிலம் காணுதல் (அடிகள் 94-100) விளக்கம்.
4. முல்லைப்பாட்டு உணர்த்தும் பழந்தமிழர் பழக்க வழக்கங்கள் குறித்து எழுதுக.
நிகழும் நிகழ்ச்சிகளை நிமித்தங் கேட்டு (முதுபெண்டிர் விரிச்சி கேட்டல்) அறியலாம்
என்று நம்பினர். - பகைவர் மேற்சென்ற அரசர் காட்டிற் பாடிவீடு அமைப்பது வழக்கம் -
யானைப்பாகர் யானைகளை வடநாட்டுச் சொற்களாற் பழக்கி வந்தனர் - அரசன்
போர்மேற் செல்லும் போது பெண்களும் கூடச்சென்று பாடிவீட்டில் அவனைப் பாதுகாத்தல்
- கடாரத்து நீரிலே இட்ட நாழிகைவட்டிலாற் பொழுது அறிந்து வந்தனர் அவர்களை
நாழிகை கணக்கர் என்பர் - மிலேச்ச (அயல் தேசம்)தேயத்திலுள்ள ஊமைகளை
வருவித்துத், தமிழ அரசர் தம் பள்ளியறை அவர்களைக் காவலாக இருத்திய
செய்திகளுக்கான விளக்கம் எழுத வேண்டும்.
5. போர்ப்பாசறையில் நடைபெற்ற செயல்களாக முல்லைப்பாட்டு கூறுவனவற்றைத்
தொகுத்தெழுதுக.
போர் வீரர்களுக்கு அமைக்கப்பட்ட இருக்கை – மன்னனுக்கு இரு அறைகளுடன் கூடிய
இருப்பிடம் - யானைப்பாகர் செயல் – மிலேச்சர் செயல் – நாழிகை கணக்கர் பொழுது
அறிவித்தல் – வாளேந்திய பெண்டிர் விளக்கேற்றுதல் – ஊமை மிலேச்சர் மெய்க்காவல்
பணி – இரவில் தலைவன் போர் குறித்து நெடிய நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருத்தல் -
6. முல்லைப்பாட்டில் காணலாகும் உவமைகளைத் தொகுத்தளிக்க.
முல்லைப்பாட்டு உவ்மைகள் காணப்படும் வரிகளும் அடிகளும் கொடுக்கப்பெற்றுள்ளது.
அதன் விளக்கத்துடன் மாணவர் எழுதப் பழக வேண்டும். நீர்செல நிமிர்ந்த மாஅல்
போல’(3)- யாழிசை இனவண்டு ஆர்ப்ப’(8) -பூப்போல் உண்கண் புலம்பு முத்துறைப்ப’(23)
-கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான், முக்கோல் அசைநிலை கடுப்ப”(37-38) -அதிரல்
பூத்த ஆடுகொடிப் படாஅர் சிதர்வால் அசைவளிக்கு அசைவந் தாங்கு துகில்முடித்துப்
போர்த்த தூங்கல் ஓங்குநடைப் பெருமூ தாளர் ஏமம் சூழ (51-54) -வேழத்துப் பாம்பு
பதைப்பன்ன பரூஉக்கை துமிய’ (69-70) -‘ஏவுறு மஞ்ஞையின் நடுங்கி’ (84)
-‘செறியிலைக் காயா அஞ்சனம் மலர’ -முறியிணர் கொன்றை நன்பொன் கால’ -கோடல்
குவிகை அங்கை அவிழ’ -தோடுஆர் தோன்றி குருதி பூப்ப’ (96).
16
7. முல்லை அகவொழுக்கத்துடன் வஞ்சி புறவொழுக்கம் பொருந்துமாற்றினை விவரிக்க.
முல்லை என்னும் அக வொழுக்கத்தோடு இயைபுடைய புறவொழுக்கம் வஞ்சி என்பதாம்.
'வஞ்சி தானே முல்லையது புறனே' என்பர் தொல்காப்பியர். வஞ்சி என்பது ஓர் அரசன்
நாடைக் கைப்பற்றுதற் பொருட்டுப் படையெடுத்துச் செல்வதாகும். வஞ்சித்திணை
முல்லைத் திணைக்குப் புறனானவாறு எவ்வாறு எனில், மனைவி தன் காதலனைப்
பிரிந்து மனையின்கண் இருப்பது போல, அவள் கணவனும் அவளைப் பிரிந்து
பாடிவீட்டின்கண் இருப்பன். இரண்டாவதாக தலைமகள் வீடு காட்டின்கண் இருப்பது
போலப் பாடிவீடும் பகைவர் நகர்க்கு அரணான காட்டின்கண் அமைக்கப்படும் ஆகலானும்
முல்லையும் வஞ்சியுந் தம்முள் பொருந்துமாறு ஆயின என்க.
அலகு 1, பகுதி-2.
பட்டினப்பாலை
மாணவர் பெறும் திறன்
1. பாலைத்திணையின் பிரிதல் நிமித்தமாகிய(தொடர்பான) பொருண்மையில்
பாடப்பெற்றுள்ளதை அறிந்து கொள்ளுதல்.
2. ஒரு புறப்பாடலை அப்பாட்டில் ஏழு அடிகளில் அகச் செய்திகளை அமைத்து இந்நுலினை
அகப்பாடலாக ஆசிரியர் மாற்றிய நுட்பத்தினை அறிந்து இன்புறுதல்.
3. பழந்தமிழர் வாழ்வு முறைகள், பண்டமாற்று வணிக முறை, வரிவிதிப்பு , பழக்க
வழக்கங்களை படித்து உணர்ந்து கொள்ளுதல்.
17
பாடம் நான்கு
பட்டினப்பாலை நூல், நூலாசிரியர் அறிமுகம்
1.4.0. முன்னுரை
பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய
ஒரு நூல். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின்
சிறப்பு, அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை
ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. பட்டினப்பாலை
கடியலூர் உருத்திரங்கண்ணனார் அகத்துறையில் சோழநாட்டினையும் சிறப்பையும் அந்நாட்டின்
தலைவனான் கரிகாலனின் சிறப்பையும் இணைத்துப் பெரும்பான்மை வஞ்சியடிகளும் ஆசிரியமும்
கலந்து வரைந்த பனுவல் ஆகும். இந்நூல், 301 அடிகளைக் கொண்டது. கரிகாலன்
இப்புலவருக்கு பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தன். மேலும், கடியலூரில் ஆயிரம்கால்
மண்டபம் ஒன்றையும் கட்டுவித்தான்.
1.4.1. பட்டினப் பாலை: நூற் பெயர்க்காரணம்
"இது பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணையாகலின், இதற்குப்
பட்டினப்பாலை என்று பெயர் கூறினார். மேலும், பாலையாவது பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
கூறுவது. இப்பாட்டு, வேற்றுநாட்டகல்வயின் விழுமத்துத் தலைவன் செலவழுங்கிக் கூறியது”
என்று உரிப்பொருள் ஒழுக்கத்தால் பட்டினப்பாலை என்னும் பெயர் பெற்றது என்பர் உரையாசிரியர்
நச்சினார்க்கினியர்.
கரிகால் பெருவளத்தானைப் பாடியிருப்பதாலும் இப்பாடலில் பிரிதல் என்னும் பாலை
உரிப்பொருளே பாடப்பட்டுள்ளதாலும் காவிரிபூம்பட்டினம் என்னும் சுருக்கமான பட்டினம் என்பது
பாலை உரிப்பொருளோடு இணைந்து பட்டினப் பாலை ஆயிற்று. ஆசிரியப்பாவில் அமைந்த
இப்பாடல் அடிகளில் இடையிடையே வஞ்சி அடிகளும் விரவி வருதலால் வஞ்சி நெடும்பாட்டு
என்றும் இதனை அழைப்பர்.
18
1.4.2. பட்டினப்பாலை உரைகள்
ரா.ரகவையங்கார், பட்டினப்பாலை ஆராய்ச்சியும் உரையும், அண்ணாமலைப்
பலகலைக்கழகம் வெளியீடு, 1951.
1.4.3. பட்டினப்பாலை சிறப்புகள்
பழங்காலத் தமிழகத்தின் நகர வாழ்க்கைச் சிறப்பிற்குச் சான்றாக அமைகின்றது
இந்நூல். அக்காலத்தி ஓங்கியிருந்த வாணிகம், துறைமுகச் சிறப்பு, வெளிநாட்டார் வருகை,
துறைமுக ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட்கள், சோழ்னின் சுங்க வரி விதிப்பு முரை, பல்வகைத்
தொழில்கள் போன்றவை பாடலுக்கு அணி சேர்க்கின்றன. பண்டைத் தமிழ் உழவர்களின் இயல்பு,
வணிகர்களின் நேர்மை மற்றும் ஒவ்வொரு செயலுக்குமான கொடிகள் அணி செய்யும் விதம்
ஆகியன சிறப்பாக விளக்கம் பெறுகின்றன.
1.4.4. தொகுப்புரை
கரிகால் பெருவளத்தான் என்னும் சங்க கால அரசனின் இளமைக்கால அரசியல்
வாழ்க்கையும் அவனது போர் வெற்றிகளும் மற்றும் குளம் தொட்டு நாடாக வளம் பெருக்கிய
திறனும் இந்நூலில் விதந்து பேசப்படுகின்றன. கரிகாலன் ஆண்ட காவிரிபூம்பட்டினம் அன்றைய
துறைமுக நகரமாக விளங்கியதும் அத்துறைமுக நகரின் பல்வேறு பரிமாணங்களையும்
ஆசிரியர் விரித்துக் கூறுகிறார்.
19
பாடம் ஐந்து
1.5.0. முன்னுரை
செலவழுங்குதல் என்னும் துறையில் அமைந்த இப்பாடல், பாலையின் உரிப்பொருளாகிய
பிரிதல் நிமித்தம் குறித்து பேசுகிறது. தலைவன், தன் நெஞ்சிடம், நெஞ்சே, அளவற்ற
செல்வவளம் மிகுந்த காவிரிப்பூம்பட்டினத்தையே பரிசாகத் தருவதாக இருந்தாலும் தலைவியின்
கூந்தலை விட்டுப் பிரிய மாட்டேன் ஏனெனில், திருமாவளவன் பகைவர்க்கு எதிராக ஓங்கிய
வேலை விடக் கொடியது நாம் செல்லக் கருதிய காட்டு வழி என்று கூறுவதாக அகப்பொருள்
நுதலியதாக இப்பட்டினப்பாலை பிரிதல் நிமித்தம் குறித்துப் பேசுகிறது. இப்பாடற் தொடரில்
அமைந்த அளவற்ற செல்வம் உடைய காவிரிப்பூம்பட்டினம் என்பதை விளக்கவந்த ஆசிரியர்
முதல் 217 அடிகளில் காவிரிப்பும்பட்டினச் சிறப்பினை எடுத்துக் கூறுகிறார். அடுத்த இரண்டரை
அடிகளில் தலைவன் தன் நெஞ்சுக்கு உரைத்த செய்தியைக் கூறுகிறார். இதனை அடுத்து, 220
முதல் 299 வரையிலான அடிகளில் திருமாவளவன் பகைவர்க்கு ஓங்கிய வேலின் திறத்தினை
விளக்குமுகனாக திருமாவளவன் தாயம் பெற்ற வர்லாறு, பகைமுடிக்கும் திறன், போர்
வெற்றிகள், காட்டை நாடாக்கிய திறன் ஆகியன் விரிவாய் விளக்குகிறார் ஆசிரியர் . இறுதி 3
அடிகளில் தலைவன் தலைவியை விட்டுப் பிரிய மாட்டேன் என்பதற்கான காரணத்தினை
எடுத்துரைப்பார்.
1.5.1. பட்டினப்பாலை கட்டமைப்பு
1. சோழ நாடு, நகர வருணனை (1-217 அடிகள்)
1.1. காவிரியின் பெருமை
1.2. மருத நிலத்தின் வளமை
1.3. காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் செழிப்பு
1.4. விளையாட்டுக் களத்தில் மறவர்களின் விளையாட்டு
1.5. ஏற்றுமதி இறக்குமதி நிகழும் பண்டசாலை முற்றம்
1.6. செல்வ வளம் நிறைந்த வீதிகள்
1.7. உழவர்களின் நல் இயல்புகள்
1.8. வணிகர் குடிச்சிறப்பு
2. கரிகால் சோழனின் பெருமையும் போர்ச்சிறப்பும் (220-301 அடிகள்)
2.1. திருமாவளவன் அரச உரிமை பெற்ற வகை
2.2 போர் வெற்றிகள்
2.3. போரினால் மருத நில வளம் அழிதல்
2.4. ஊர் அம்பலம், பொது மன்றம், இல்லங்கள்
2.5. வளம் பெருக்கிய வளவன்
2.6. தலைவன் தலைவியைப் பிரியாமைக்கான காரணங்கள்
1.5.2. பட்டினப்பாலை பொருட் சுருக்கம்
தலைவன், பொருள் தேடும் முயற்சியில் அயல்நாடு செல்ல விழைகின்றான். தலைவி தம்
பிரிவாள் துயருவாள் என்று அச்சமயம் அவனுக்குக் கவலை ஏற்படுகிறது. தலைவிக்குத்
தன்னால் துயரம் உண்டாகக் கூடாது என்று எண்ணுகிறான். அந்நிலையில் தன் நெஞ்சிற்குக்
கூறியனவாக அமைகின்றது இப்பாடல், நெஞ்சமே, செல்வம் மிகுந்த காவிரி பூம்பட்டினத்தையே
யான் பெறுவதாக இருந்தாலும் வெளியூர்ப் பயணம் வரமாட்டேன். பொருள் தேடுவதற்காக நாம்
கடந்து செல்லும் காட்டுப்பாதை கொடுமையானது. சோழன் கரிகாலனின் பகைவர்க்கு
அச்சத்தைத் தரும் வேலைவிடக் கொடுமையானது. நாம், நீங்க நினைக்கும் தலைவியின்
20
தோள்களோ வேலைக் காட்டிலும் தண்மையானவை. ஆகவே, இவளைப் பிரிந்து வெளியூர்
வரமாட்டேன் என்று கூறுவதாகப் பாடல் அமைகிறது.
1.5.4. தொகுப்புரை
இப்பாடத்தில் பட்டினப்பாலை ஆசிரியர் பொருள் கூறும் திறத்தினை உணரலாம் . மேலும்
பட்டினப்பாலையின் பாடல் கட்டமைப்பு அமைந்த விதம், பாடலின் மையக் கருத்தின் சுருக்கம்
ஆகியன விளக்கப்பட்டுள்ளன. புறப்பாடலுக்கே உரியதொரு பொருண்மையைத் தலைவன்
செலவழுங்குதல் என்னும் அகத்துறையாக படிப்பவர் உணரும்படி செய்த இந்நூலாசிரியர்
கடியலூர் உருத்திரங்கண்ணனின் புலமைத் திறனைப் படித்து இன்புறுவோமாக.
பாடம் ஆறு
1.6.0. முன்னுரை
இப்பாடம் பட்டினப்பாலையின் 301 அடிகளின் பொருட்கருத்தும் கோர்வையாக
விவரிக்கின்றது. பாடத்தின் மையக்கருத்து விலகாமல் பாடலுக்கான விளக்கம் கருத்துரையாக
வழங்கப்பட்டுள்ளது. மையக் கருத்தினை ஒட்டிச் சிறப்பான தொடர்கள் இடையிடையே
கூறப்படுவது மாணவர்கள் தேர்வுக்கு விடை எழுத உதவியாக இருக்கும்.
பட்டினப்பாலை மூலம்
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்,
தற்பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
வான் பொய்ப்பினும், தான் பொய்யா, 5
மலைத் தலைய கடல் காவிரி;
புனல் பரந்து பொன் கொழிக்கும்;
விளைவு அறா வியன் கழனி,
கார்க் கரும்பின் கமழ் ஆலைத்,
தீத் தெறுவின் கவின் 10
வாடி நீர்ச் செறுவின் நீள் நெய்தல்
பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக் குழவி
கூட்டு நிழல் துயில் வதியும், 15
கோள் தெங்கின் குலை வாழைக்,
காய்க் கமுகின், கமழ் மஞ்சள்,
இன மாவின் இணர்ப், பெண்ணை,
முதல் சேம்பின் முளை இஞ்சி;
அகல் நகர் வியன் முற்றத்துச் 20
சுடர் நுதல் மட நோக்கின்,
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்,
21
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை,
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக்கால் சிறு தேர் முன்வழி விலக்கும், 25
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியாக்,
கொழும் பல் குடிச் செழும் பாக்கத்துக்,
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு,
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி,
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி, 30
பணை நிலைப் புரவியின் அணை முதல் பிணிக்கும்,
கழி சூழ் படப்பை கலியாணர்ப்
பொழில் புறவின் பூந்தண்டலை;
மழை நீங்கிய மா விசும்பின்,
மதி சேர்ந்த மக வெண்மீன் 35
உருகெழு திறல் உயர் கோட்டத்து,
முருகு அமர் பூ முரண் கிடக்கை,
வரி அணி சுடர் வான் பொய்கை
இரு காமத்து இணை ஏரிப்;
புலிப் பொறி போர் கதவின் 40
திருத்துஞ்சும் திண் காப்பின்;
புகழ் நிலைஇய; மொழி வளர;
அறம் நிலைஇய; அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி; 45
ஏறு பொரச் சேறு ஆகித்;
தேர் ஓடத் துகள் கெழுமி;
நீறு ஆடிய களிறு போல;
வேறுபட்ட வினை ஓவத்து
வெண்கோயில் மாசு ஊட்டு;
தண் கேணி தகை முற்றத்துப்
பகட்டு எருத்தின் பல சாலை;
தவப் பள்ளித் தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்,
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம் 55
மா இரும் பெடையோடு இரியல் போகிப்,
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்த்
தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும்;
முது மரத்த முரண் களரி,
வரி மணல் அகன் திட்டை, 60
இருங்கிளை இனன் ஒக்கல்
கருந்தொழில் கலி மாக்கள்,
22
கடல் இறவின் சூடு தின்றும்,
வயல் ஆமை புழுக்கு உண்டும்,
வறள் அடும்பின் மலர் மலைந்தும், 65
புனல் ஆம்பல் பூச் சூடியும்,
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரு,
நாள்மீன் விராய கோள்மீன் போல,
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக்,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப், 70
பெருஞ்சினத்தான் புறங்கொடாது,
இருஞ்செருவின் இகல் மொய்ம்பினோர்,
கல் எறியும் கவண் வெரீஇப்
புள் இரியும் புகர்ப் போந்தை;
பறழ்ப் பன்றி பல் கோழி, 75
உறைக் கிணற்றுப் புறச்சேரி
ஏழகத் தகரொடு சிவல் விளையாடக்;
கிடுகு நிரைத்து, எஃகு ஊன்றி,
நடுகல்லின் அரண் போல,
நெடும் தூண்டிலில் காழ், 80
சேர்த்திய குறுங்கூரைக் குடி நாப்பண்
நிலவு அடைந்த இருள் போல,
வலை உணங்கும் மணல் முன்றில்;
வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த
வெண்கூதாளத்துத் தண் பூங்கோதையர், 85
சினைச் சுறவின் கோடு நட்டு
மனை சேர்த்திய வல் அணங்கினான்,
மடல் தாழை மலர் மலைந்தும்,
பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும்,
புன்தலை இரும் பரதவர் 90
பைந்தழை மா மகளிரொடு,
பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது,
உவவு மடிந்து உண்டு ஆடியும்;
புலவு மணல் பூங்கானல்,
மா மலை அணைந்த கொண்மூ போலவும், 95
தாய் முலை தழுவிய குழவி போலவும்,
தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும்
மலி ஓதத்து ஒலி கூடல்
தீது நீங்க கடலால் ஆடியும்,
மாசு போக புனல் படிந்தும், 100
அலவன் ஆட்டியும் உரவுத் திரை உழக்கியும்,
பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும்,
23
அகலாக் காதலொடு பகல் விளையாடிப்
பெறற்கு அரும் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்,
பொய்யா மரபின் பூ மலி பெருந்துறை;
துணைப் புணர்ந்த மட மங்கையர்,
பட்டு நீக்கித் துகில் உடுத்தும்,
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்,
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,
மகளிர் கோதை மைந்தர் மலையவும், 110
நெடுங்கால் மாடத்து ஒள் எரி நோக்கிக்
கொடுந்திமில் பரதவர் குருஉச்சுடர் எண்ணவும்,
பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும்,
வெண்ணிலவின் பயன் துய்த்தும்,
கண் அடைஇய கடைக் கங்குலான்;
மாஅ காவிரி மணம் கூட்டும்,
தூஉ எக்கர்த் துயில் மடிந்து,
வால் இணர் மடல் தாழை
வேலாழி வியன் தெருவில்,
நல் இறைவன் பொருள் காக்கும், 120
தொல் இசைத் தொழில் மாக்கள்,
காய் சினத்த கதிர்ச் செல்வன்
தேர் பூண்ட மாஅ போல,
வைகல்தொறும் அசைவு இன்றி,
உல்கு செயக் குறைபடாது;
வான் முகந்த நீர் மலைப் பொழியவும்,
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்,
மாரி பெய்யும் பருவம் போல,
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்,
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும், 130
அளந்து அறியாப் பல பண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி,
அருங்கடிப் பெருங்காப்பின்
வலிவுடை வல் அணங்கினோன்,
புலி பொறித்து புறம் போக்கி, 135
மதி நிறைந்த மலி பண்டம்
பொதி மூடைப் போர் ஏறி,
மழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன்,
வரை ஆடு வருடைத் தோற்றம் போலக்,
கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை 140
ஏழகத் தகரோடு உகளும் முன்றில்;
குறுந்தொடை, நெடும் படிக்கால்,
கொடும் திண்ணைப் பஃறகைப்பிற்,
24
புழை வாயில் போகு இடை கழி
மழை தோயும் உயர் மாடத்துச்,
சேவடிச் செறி குறங்கின்,
பாசிழைப் பகட்டு அல்குல்,
தூசு உடைத் துகிர் மேனி,
மயில் இயல் மான் நோக்கின்,
கிளி மழலை மென் சாயலோர், 150
வளி நுழையும் வாய் பொருந்தி,
ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும்
காந்தள் அம் துடுப்பின் கவி குலை அன்ன,
செறி தொடி முன் கை கூப்பிச் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் , 155
குழல் அகவ யாழ் முரல,
முழவு அதிர முரசு இயம்ப,
விழவு அறா வியல் ஆவணத்து;
மையறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும்;
வருபுனல் தந்த வெண்மணல் கான் யாற்று
உருகெழு கரும்பின் ஒண்பூப் போலக்,
கூழுடை கொழு மஞ்சிகைத்
தாழுடைத் தண் பணியத்து,
வால் அரிசிப் பலி சிதறிப், 165
பாகு உகுத்த பசு மெழுக்கின்,
காழ் ஊன்றிய கவி கிடுகின்,
மேல் ஊன்றிய துகில் கொடியும்,
பல் கேள்வி துறை போகிய
தொல் ஆணை நல்லாசிரியர், 170
உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும்;
வெளில் இளக்கும் களிறு போலத்,
தீம் புகார்த் திரை முன்துறைத்
தூங்கு நாவாய் துவன்று இருக்கை,
மிசைக் கூம்பின் நசைக் கொடியும்;
மீன் தடிந்து விடக்கு அறுத்து,
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்,
மணல் குவைஇ மலர் சிதறிப்
பலர் புகு மனைப் பலிப் புதவின்,
நறவு தொடைக் கொடியோடு,
பிற பிறவும் நனி விரைஇப்,
பல் வேறு உருவின் பதாகை நீழல்,
செல் கதிர் நுழையாச் செழு நகர் வரைப்பின்,
செல்லா நல்லிசை அமரர் காப்பின்
25
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும், 185
அலகு இரண்டு
அ. நற்றிணை ( 1 – 20 பாடல்கள்)
ஆ. குறுந்தொகை (20-40 பாடல்கள்)
இ. ஐங்குறுநூறு – வேட்கைப்பத்து முழுதும்
அலகு இரண்டு
அலகு முன்னுரை
இவ்வலகு முதலான நான்கு இயல்களும் எட்டுத்தொகை பாடங்கள் பற்றிப் பேசுகின்றன.
எட்டுத்தொகை நூல்கள் (1) அகம் சார்ந்தவை (2) புறம் சார்ந்தவை (3) இரண்டும்
சார்ந்தவை என்று மூன்று வகையாக அமையும். அவற்றுள்,அகம் சார்ந்தன
1.நற்றிணை, 2.குறுந்தொகை, 3.அகநானூறு, 4.ஐங்குறுநூறு, 5.கலித்தொகை என்ற
ஐந்துமாகும். புறம் சார்ந்தன புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து என்ற இரண்டுமாகும். அகமும்
புறமும் கலந்தமைந்த நூலாகப் பரிபாடல் அமைகிறது. ஒவ்வொரு நூலின் அமைப்பும் சிறப்பும் பற்றி
அந்தந்தப் பாடங்களின் முன்னுரையாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஐயனே! நின் காதற் பரத்தை நேற்று, மகிழ்நனாகிய உன்னிடத்துத் தங்கி உன் மார்பிற்
கிடந்து உறங்கி; வண்டுகள் பாயும் பூங்கொத்துக் கமழும் கூந்தல் சிறுபுறத்து வீழ்ந்தும் இடையிற்
கட்டிய உடை சரிந்து நிற்பவும் நெருங்கிய வளைகள் ஒலிக்கும்படி கைகளை வீசிக்கொண்டு
கண்கள் சுழலும்படி நோக்கி எமது தெருவின்வழிச் (மறுகின்கண்) சென்றனள். இன்று, உன்
பிரிவின் துயரத்தால் மார்பில் சுணங்கு அணியப் பெற்றவளாக முன்பு நின் மார்பில் பெற்ற
முயக்கத்தில் நெரிந்த குழையையும் அழகு இழந்த இரண்டு தோள்களையும் துவண்ட
கொடிபோன்று நின் முயக்கமில்லாது எமது தெருவில் சென்ற இளம்பருவ பரத்தையை யாம்
கண்டேம்; அவள் நின்னோடு நீடூழி வாழ்வாளாக.
கருத்து: உனக்கு உரிய காதல் பரத்தையோடு நீயும் செல்வாயாக என்று தலைவனிடம்
தோழி கூறுகின்றாள்.
2.3.11. தொகுப்புரை
இப்பாடல்களில் மூலமாகக் காதல் உணர்வின் பல்வேறு தோற்றங்களைக் கண்டீர்கள்;
தலைவி, தோழி, தலைவன், பாகன் போன்ற பாத்திரங்களின் பேச்சுகளில் சொல்லைத் தாண்டி
விரியும் மனக்குறிப்புகளை உணர்ந்தீர்கள். அன்புப் பெருக்கின் முன்னிலையில் காட்டுக்கோழி
தோழனாகவும் புன்னைமரம் தங்கையாகவும் மாறிவிடும் இயற்கையோடு தமிழன் கண்ட
உறவினை அறிந்தீர்கள்.
64
தன் முயற்சி வினாக்களும் விடைக் குறிப்புகளும் – II
பாடம் பன்னிரண்டு
பாட முன்னுரை
இப்படப்பகுதியில் குறுந்தொகையின் 31 முதல் 40 வரைலான பத்து பாடல்கள் விளக்கம்
பெறுகின்றன. திணை, பாடியவர், கூற்று, துறை அடுத்து பாடலும் அதற்கான விளக்கமும்
இடம்பெறுகின்றன. இதனைத் தொடர்ந்து, மையக் கருத்து, உவமை மற்றும் நயம் என்னும்
அடிப்படையில் விளக்கப்பட்டு உள்ளது.
2.5.13. திணை: மருதம், பாடியவர்: ஆதிமந்தி, கூற்று:தலைவி கூற்று,
துறை:நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது.
(அயலார் தலைவியை மணம் செய்ய பெண்கேட்டு வீட்டுக்கு வருகின்றனர் . அதுவரை
தலைவனைப் பற்றிய செய்தியை வெளியிடாத தலைவி, “நான் ஆடுகளத்தில் துணங்கையாடும்
இயல்புடையவள். என்னோடு நட்பு செய்து பிரிந்தமையால் என் கைவளைகளை நெகிழச் செய்த
தலைவன் அத்துணங்கைக்குத் தலைக்கை தந்தான். அவன் இப்பொழுது எங்கே உள்ளானோ?
பல இடங்களில் தேடியும் கண்டேனில்லை” என்று உண்மையைத் தோழிக்கு வெளிப்படுத்தியது).
மள்ளர் குழீஇய விழவினானும்,
74
மகளிர் தழீஇய துணங்கையானும்,
யாண்டும் காணேன், மாண் தக்கோனை;
யானும் ஓர் ஆடுகள மகளே; என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்தத ்
பீடு கெழு குரிசிலும், ஓர் ஆடுகள மகனே.
பாடம் பதின்மூன்று
80
ஐங்குறுநூறு அறிமுகம்
2.6.0. பாட முன்னுரை
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான ஐங்குறுநூற்றின் ஆசிரியர்கள் , நூல் அமைப்பு,
படைப்பு ஆகியன பற்றி இப்பாடம் எடுத்துரைக்கிறது. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான
இந்நூல் அகப்பொருள் உணர்த்தும் நூலாகும். ஐந்து குறிய நூறு பாடல்கள் கொண்டிருப்பதால்
இது, ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற ஐந்து
திணைக்கும், திணைக்கு நூறு பாடல்கள் என்ற அடிப்படையில் அமைந்திருப்பதால் அதை
உணர்த்தும் வகையில் ஐந்து குறு நூறு ஐங்குறுநூறு எனப்பட்டது. இச்சிறப்பு சங்க அக
இலக்கியத்தில் வேறு எந்த நூலுக்கும் இல்லை.
2.6.1. நூல் கட்டமைப்பு
ஐங்குறுநூற்றின் பாடல்கள் மூன்றடிச் சிற்றெல்லையையும் ஆறு அடிப் பேரெல்லையையும்
கொண்டவை. ஒவ்வொரு திணைக்கும் உரிய நூறு பாடல்களும் பத்துப் பத்துப் பாடல்களாகப்
பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பத்துப் பாடல்களின் பகுப்பிற்கும் ஒரு பெயர்
கொடுக்கப்பட்டுள்ளது. பத்துப் பாடல்களில் பயின்றுள்ள அத்திணைக்கு உரிய உரிப்பொருள்,
கருப்பொருள், கூற்று உரைப்போர், கேட்போர் ஏனும் அடிப்படையில் ஒவ்வொரு பத்தும் தலைப்பு
பெறும். இதற்கு பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்தது ் இயற்றியுள்ளார். இதனைத்
தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார். தொகுப்பித்தவர் யானைக்கண்சேய்
மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவர். இதன் 129, 130 ஆம் செய்யுட்கள் கிடைக்கவில்லை.
2.6.2. நூலாசிரியர் வரலாறு
திணை பற்றிப் பாடுவதில் வல்லமை பெற்ற ஐம்பெரும்புலவர்கள் இந்நூலின் பாக்களை
இயற்றியுள்ளனர். ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் என்பாரே
அப்பெரும் புலவர்கள். இவர்கள் பெயரையும், இவர்கள் பாடிய திணை எது என்பதையும்
மருதம் ஓரம்போகி நெய்தல் அம்மூவன்
கருதும் குறிஞ்சி கபிலன் - கருதிய
பாலைஓ தலாந்தை பனிமுல்லை பேயனே
நூலைஓது ஐங்குறு நூறு.
என்ற பழம்பாடல் விளக்குகிறது. ஓரம்போகியாரின் மருத்ததிணையில் அமைந்த
வேட்கைப்பத்து என்னும் த்லைப்பில் அமைந்த பத்துப் பாடல்கள் நம்பாடப்பகுதியாக அமைகிறது.
2.6.2.1. ஓரம்போகியார்
இவரை உள்ளம்போகி என்று பாராட்டுவர் தமிழ்க்காதல் ஆசிரியர் வ.சு.மாணிக்கம்.
ஐங்குறுநூற்றின் முதல் நூறு பாடல்கள் மருதத்திணைப் பாடல்களாகும். அவற்றைப் பாடியவர்
ஓரம்போகியார் ஆவார். இதுவே இவரது இயற்பெயராகும். இவரது பெயர் ஓரேர் போகியார்,
ஒன்னார் உழவர், காம்போதியார் எனச் சில படிகளில் காணப்படுகிறது.
இப்புலவரை ஆதரித்தவன் ஆதன் அவினி என்னும் சேர மன்னன். இவர் தம்மை
ஆதரித்த ஆதன் அவினியோடு கடுமான் கிள்ளி, ஆமூரைத் தலைநகராகக் கொண்ட சோழன்
போன்றோரையும் தம் பாடல்களில் பாடியுள்ளார்.
ஐங்குறுநூறு அல்லாமல் இவர் பாடிய பாடல்கள் மொத்தம் 10. இவற்றுள் அகத்திணை 9,
புறத்திணை ஒன்று. அகத்திணையின் ஒன்பது பாடல்களில் ஏழு மருதத்திணைப் பாடல்களாகும்.
இதனால் இவர் மருதத்திணையைப் பாடுவதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தவர் என்பது
விளங்குகிறது.
81
2.6.3. மருதத்திணை
தலைவனின் பரத்தையர் பிரிவை மையமாகக் கொண்டு தலைவி கொள்ளும் ஊடலையும்
ஊடல் சார்ந்த நிகழ்வுகளையும் ஒழுக்கமாகக் கொண்டது மருதத்திணை. இத்திணைக்கு
வயலும் வயல் சார்ந்த இடங்களும் முதற்பொருள் ஆகும். இப்பகுதி வாழ் மக்களும்
விலங்குகளும் பறவைகளும் பிறவும் கருப்பொருளாய் அமைந்து இத்திணைப் பாடல்களை
நடத்திச் செல்லும். இங்கு மருதத் திணைப் பாடல்களைப் பகுப்புவழிக் காணலாம்.
ஒவ்வொரு திணையும் நூறு பாடல்களைக் கொண்டது. நூறு பாடல்களும் பத்துப் பத்தாக
ஒவ்வொரு தலைப்பின் கீழ் அமைந்துள்ளன என்பது முன்பே கூறப்பட்டுள்ளது.
வேட்கைப் பத்து, வேழப் பத்து, களவன் பத்து, தோழிக்கு உரைத்த பத்து, புலவிப் பத்து,
தோழி கூற்றுப் பத்து, கிழத்தி கூற்றுப் பத்து, புனலாட்டுப் பத்து, புலவி விராய பத்து, எருமைப்
பத்து ஆகிய பத்துப் பகுதிகள் இம்மருதத் திணைப் பாடல் தலைப்புகளாக அமைந்துள்ளன.
மருதத்திணைப் பகுப்பு, வேட்கை, புலவி, புனலாட்டு, புலவி விராயது என நான்கு
உரிப்பொருளை மையமாகக் கொண்டும், வேழம், கள்வன், எருமை என மூன்று
கருப்பொருள்களை மையமாகக் கொண்டும், கிழவி கூற்று, தோழி கூற்று, தோழிக்கு உரைத்தது
என மூன்று கூற்றுகளை மையமாகக் கொண்டும் பெயர் பெற்றுள்ளது.
2.6.4. வேட்கைப்பத்து
வேட்கை என்றால் விருப்பம், பத்து என்பது பத்துப் பாடல்கள். களவிலோ, கற்பிலோ
தலைவியைப் பிரிந்திருந்த தலைமகன் தான் பிரிந்திருந்த காலத்துத் தலைமகள் எவ்வாறு
ஆற்றியிருந்தாள் என்பதை அறிய விரும்புவான். அப்போது தோழி, தலைவி விரும்பிய
திறத்தையும் (வகையையும்) தான் விரும்பிய திறத்தையும் எடுத்துக் கூறுவாள். இவ்வகையில்
அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி வேட்கைப் பத்து என அமைக்கப்பட்டுள்ளது.
அலகு மூன்று
அலகு 3
பாடம் பதினைந்து
அகநானூறு அறிமுகம்
மாணவர் பெறும் திறன்
அகநானூற்றின் கட்டமைப்பினை அறியலாம்.
சங்க இலக்கியத் தொகுப்பு முறை குறித்து அறியலாம்.
இலக்கியக் கூறுகளை அறியலாம்.
கருத்து, கற்பனை, உணர்சச ் ி, வடிவம் ஆகியவை அகநானூற்றில் வெளிப்பட்டுள்ள
விதத்தை அறியலாம்.
பாட முன்னுரை
சங்க இலக்கிய அகநூல்களில் சிறப்பான கட்டமைப்பை உடைய நூல் அகநானூறு.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான இந்நூல் நெடுந்தொகை என்றும் அழைக்கப் பெறும்.
அகநானூற்றின் பொதுவான அறிமுகம் இப்பாடத்தில் விளக்கம் பெறுகிறது. அடுத்த இரு
பாடங்களில் பாடப்பகுதியில் அமைந்த பாடல்கலுக்கான பொருள் விளக்கம் அமைகின்றன.
இப்பாடப்பகுதியில் அகநானூறு கட்டமைப்பு, திணை உணரும் முறை, பதிப்பும்வரலாறும் மற்றும்
இதன் சிறப்புகள் ஆகியன விளக்கப் பெறுகின்றன.
அகநானூறு கட்டமைப்பு
ஆசிரியப்பாவால் அமைந்த அகப்பொருள் பற்றிய பாடல்கள் நானூறு தொகுக்கப்பட்டு
அகநானூறு என்ற பெயரால் குறிக்கப்பட்டன. இந்நுலினைத் தொகுத்தவர் உப்புரிக்குடிக் கிழார்
மகனார் உருத்திரசன்மன் ஆவார். மன்னன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி இந்நூலைத்
88
தொகுப்பித்துள்ளான். பாரதம் பாடிய பெருந்தேவனார் இதற்கு வாழ்த்துப் பாடியுள்ளார். அது சிவ
வணக்கப் பாடலாகும். 145 புலவர் பெருமக்கள் இந்நானூறு பாடல்களையும் பாடியுள்ளனர்.
களிற்றியானை நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என்ற மூன்று பெரும் பிரிவுகளைக்
கொண்டது இந்நூல். அகநானூற்றின் பாயிரப் பகுதி (முன்னுரைப் பகுதி) இப்பகுப்பைச்
சுட்டியுள்ளது. மூன்று பகுப்பிலும் இடம் பெற்றுள்ள பாடல்கள் எவை என்பதைப் பாயிரத்தைத்
தொடர்ந்து வரும் உரைநடைப்பகுதி விளக்கியுள்ளது. அதாவது, முதல் 120 பாடல்கள்
களிற்றியானை நிரை என்றும், 121 முதல் 300 வரை அமைந்த 180 பாடல்கள் மணிமிடை பவளம்
என்றும், இறுதி 100 பாடல்கள் நித்திலக் கோவை என்றும் பகுக்கப்பட்டுள்ளன.
திணை உணரும் முறை
அகநானூறு பாடல் எண், மற்றும் திணை முறைவைப்பில் ஓர் ஒழுங்கினைப்
பின்பற்றியிருப்பது தனிச் சிறப்பிற்குரியதாகும்.
ஒற்றைப்படை எண்கள் அனைத்தும் பாலைத்திணை பாடல்கள் மொத்தம் = 200
2. 8, என முடியும் அனைத்தும் குறிஞ்சித்திணைப் பாடல்கள் மொத்தம் = 80
4, 14, என நான்கில் முடிவன முல்லைத்திணைப் பாடல்கள் மொத்தம் = 40
6, 16, ஆறில் முடிவன மருதத்திணைப் பாடல்கள் மொத்தம் = 40
10, 20,என சுழியத்தில் முடிவன நெய்தல்திணை பாடல்கள் மொத்தம் = 40
ஆக மொத்தம் நானூறு பாடல்களைக் கோண்டது. செம்பாகப் பாடல்கள்
பாலைத்திணைப் பாடல்கள்.
உரையும் பதிப்பும்
அகநானூற்றினை முதன்முதலில் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரம் பிள்ளை. அவரின்
முயற்சியைத் தொடர்ந்து ரா.ராகவையங்கார், பின்னத்துர்ர் நாராயண சாமி அய்யர், உ.வே.சா
ஆகியோர் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர். அகநானூற்றுக்கு உரைகள் பல உள. அவற்றுள்,
குறிப்புரை, பழைய உரை நீஙக ் லாக முழுவதுமான உரை கரந்தை ந.மு,வேங்கடசாமி நாட்டார்
உரையே ஆகும்.
சிறப்புகள்
அகநானூற்றில் இடம்பெற்றுள்ள உள்ளுறை, முதற்பொருள், கருப்பொருள் வருணனை
போன்றவை அகநானூற்றின் சிறப்புக் கூறுகளாக அமைந்துள்ளன. வரலாற்றுச் செய்திகளை
அதிகம் தரும் அகநூல் இது ஒன்றேயாகும். பழந்தமிழரின் திருமணமுறையினை இரு
பாடல்களில் எடுத்துக் கூறித் தமிழரின் பண்பாட்டினை வெளிப்படுத்துகிறது. இதிகாசச்
செய்திகளைத் தருவதோடு 87 அரசர்களைப்பற்றிய குறிப்புகளால் வரலாற்றுச் செய்திகளை
அதிகம் தந்த அகநூல் என்ற பெருமையினைப் பெறுகின்றது.
பாடம் பதினாறு
அகநானூறு பாடல் விளக்கம் (பாடல் எண். 44-48)
இப்பாடப்பகுதில் அகநானூற்றின் நும் பாடப்பகுதியில் அமைந்த முதல் ஐந்து
பாடல்களுக்கான விளக்கம் அமைகிறது. பாடல் எண், திணை, பாடியவர், கூற்று, துறை ஆகியன
பற்றிய குறிப்பும் அதனைத் தொடர்ந்து பாடலும் பாடல் விளக்கமும் அமைகின்றன.
பா. எண்: 44. திணை: முல்லை, பாடியவர்: குடவாயிற் கீரத்தனார், கூற்று: தலைவன்
கூற்று, துறை: வினை முற்றி மீளும் தலைமகன் தேர்பப் ாகற்குச் சொல்லியது.
வந்துவினை முடித்தனன் வேந்தனும் பகைவரும்
தம்திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
ஒன்றுஎன அறைந்தன பணையே நின்தேர்
முன்இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது, 5
89
ஊர்க, பாக! ஒருவினை, கழிய
நன்னன், ஏற்றை, நறும்பூண் அத்தி,
துன்அருங் கடுந்திற l கங்கன், கட்டி,
பொன்அணி வல்வில் புன்றுறை, என்றுஆங்கு
அன்றுஅவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், 10
பருந்துபடப் பண்ணி, பழையன் பட்டென,
கண்டது நோனாn னாகி, திண்தேர்க்
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
பிணைஅலம் கண்ணிப் பெரும்பூண் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர், 15
பழம் பல் நெல்லின் பல்குடிப் பரவை,
பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளை,
தண் குடவாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே!
1-4. வேந்தன் போர் முடித்தனன். பகைவரும் திறை கொடுத்து நம் அரசனுக்குச் சுற்ற
மாயினர் முன்பு மாறுபாடு மிக்கிருந்த இரு சேனைகளை ஒரே சேனையாக முரசறையப்பட்டன.
7-11. நன்னனும் ஏற்றையும் நல்ல பூணினை அணிந்த அத்தியும் பகைவர்நெருங்கற்கரிய
மிக்கவலி பொருந்திய கங்கனும் கட்டியும் வலிய வில்வினையுடைய பொன்னணி யணிந்த
புன்றுறையும் என்று கூறப்பட்ட அவர்கள் முன்பு கூடிப் பொருதற்கு நின்ற அளத்தற்கரிய சிறப்பு
வாய்ந்த பாசறைக்கண்ணே பருந்து சுற்றும்படிப் பழையன் என்பான் போர் செய்து பின்பு
இறக்கின்றான்.
12-14. இப்போரில் பழையன் இறப்புக்கு ஆற்றாது பொறானாகி வலிமை வாய்ந்த
தேரினையுடைய பெரும்பூட் சென்னி கணையன் உட்பட கழுமலம் என்னும் ஊரைக்
கைப்பற்றுகிறான். இச்சென்னி ஆண்ட
15-19. அழும்பில் போன்ற நீங்காத புதுவருவாயும் யானைபடியும் குளத்தினையும்
நெருங்கிய காவற்காடுகளையும் உடையது குடவாயில். அக்குடவாயில் என்னும் ஊரை ஒத்த
சிறப்பினளாகிய நம் தலைவியின் ஆகத்தில் (உடல்) இனிய துயிலைப் பெறுதற்கு
4-6. பாகனே, முற்படச் செல்லும் நின் தேராகிய ஊர்தியினை இனிப் மெதுவாக
இல்லாமல் இக்காட்டை விட்டு நீங்கிட தேரினை விரைந்து செலுத்துவாயாக.
கருத்து: வினை முடித்த தலைவன், தலைவி இருப்பிடம் நோக்கித் தேரை விரைந்து
செலுத்துவாயாக எனக் கூறுகின்றான்.
பாடம் பதினேழு
அகநானூறு பாடல் விளக்கம் (எண். 49-53)
இப்பாடப்பகுதில் அகநானூற்றின் நும் பாடப்பகுதியில் அமைந்த பின் ஐந்து
பாடல்களுக்கான விளக்கம் அமைகிறது. பாடல் எண், திணை, பாடியவர், கூற்று, துறை ஆகியன
பற்றிய குறிப்பும் அதனைத் தொடர்ந்து பாடலும் பாடல் விளக்கமும் அமைகின்றன.
உரையும் பதிப்பும்
கலித்தொகை முழுமைக்கும் நச்சைனார்க்கினியர் உரை எழுதி உள்ளார். இதனை
அச்சில் முதன்முதலில் வெளியிட்டவர் சி.வை. தாமோதரம் பிள்ளை ஆவார். இவருக்குப் பின்னர்
இ.வை அனந்தராமையரின் பாட வேறுபாடுடன் கூடிய விளக்கவுரையினையும் இளவழகனார்
எழுதிய ஆராய்ச்சி உரையும் குறிபிடத்தக்கன. புத்துரைகள் மாணவர் நலன் கருதி வெளியிடப்ம்
பெற்றன. அவற்றுள் குறிக்கத்தக்கது புலியூர் கேசிகன் உரையாகும்.
தொகுப்புரை
மிகச் சிறந்த தனிமொழி உரையாடலும் நாடகத்தன்மையும் வாய்ந்த நூல். கற்றறிந்தோர்
ஏத்தும் கலி என்றும் கல்வி வலாளர் கண்ட கலி என்றும் அறிஞர்களால் பாரட்டப்படுகிறது.
முல்லைக்கலியில் ஏறு தழுவுதல் என்னும் பழந்தமிழர் வீர விளையாட்டு தமிழரின் தற்கால
ஜல்லிக்கட்டு விளையாட்டின் முன்னோடியாக அமைகிறது. பண்பெனப் படுவது பாடறிந்து
ஒழுகல் என்று பண்பாடு என்னும் சொல்லடியை முதன்முதலில் பதிவுசெய்த இலக்கியம்
கலித்தொகை.
99
பாடம் பத்தொன்பது
கலித்தொகை குறிஞ்சிக் கலி பாடல் விளக்கம் ( எண். 2 -6)
பாட முன்னுரை
இப்பாடப்பகுதியில் குறிஞ்சிக்கலி இரண்டாம் பாடல் முதல் ஆறாம் பாடல் வரை விளக்கம்
பெறுகின்றன. இப்பகுதியில் அமைந்த ஐந்து பாடல்களும் தோழி கூற்றாக அமைந்தவை.
தலைவனுக்குச் சிறைப்புறமாக கூறிய துறையில் ஒன்றும், ஆற்றாமை கூறி வரைவு கடாயது
துரையில் இரு பாடல்களும் தோழி தலைவியை ஆற்றுவித்தல் துறையில் ஒன்றும் தோழி
தன்னுள்ளே கூறியது ஒன்றுமாக ஐந்து பாடல்களும் அமைகின்றன.
3.5.1 குறிஞ்சிக் கலி எண்: 2
இரவுக்குறி வந்து நீங்கும் தலைவனை எதிர்ப்பட்டு, தோழி தலைவியது நிலைமை கூறி
அவனை வரைவு கடாவ, அவன் வரைய வருகின்றமை தோழி தலைவிக்கு வரைவு மலிந்து
கூறியது, கூற்று: தோழி கூற்று
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல்செல்லாது உழப்பவன் போல 5
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்:
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்,
பொருளில்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை, 15
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்; அவ் அணி
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்,
பொருளில்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை, 15
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்; அவ் அணி
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்
மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால்,
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை,
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப் 20
புறங்கூற்றுத் தீர்பப் து ஓர் பொருள் உண்டேல், உரைத்தைக்காண்
என ஆங்கு,
100
நின் உறு விழுமம் கூறக் கேட்டு,
வருமே, தோழி! நல் மலை நாடன்
வேங்கை விரிவு இடம் நோக்கி, 25
வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே
(அடிகள்:1-9): இமைய வில் ……………… நாட! கேள்:
இமயமலையை வில்லாக வளைத்தும் கங்கயினை முடிமேல் சுமந்தவனுமான சிவன்,
உமையோடு கயிலை மலையில் வீறற ் ிருக்கின்றான். அக்கயிலைமலையினை பத்து தலையினை
உடைய இராவணன் பெயர்தது ் எடுக்க முனைந்து அதைப்பெயர்க்கவோ மலையில் சிக்கிய கையினை
எடுக்கவோ முடியாமல் வருந்தினான். அது போல, புலி என்று எண்ணி வேங்கமரத்தினைச் சினங்
கொண்டு குத்திய யானை அம்மரத்தில் இருந்து தனது கொம்புகளை எடுக்க முடியாது
மலையில் எதிரொலிக்குமாறு பிளிறும் மலை நாட்டின் தலைவானே! நான் கூறுவதைக்
கேட்பாயாக!
(10-13),ஆர் இடை ………….. , உரைத்தைக்காண்
அவளைக் காணச் செல்வதற்கு அரிய வழி என்று பாராதும் அரவங்களுக்கும் அஞ்சாமல் நீ
வரும் சமயம் நீர் அற்ற நிலம் போல வாடிக் கிடந்த தலைவி உன்னைக் கண்டதும் மழை பெய்த
நிலம் போல அழகு பெறுவாள். அவ்வழகு அழியாமல் காக்கும் வழி உண்டெனில் அதை
எங்களுக்குக் கூறுவாயாக.
(14-17) இருள் இடை …………….. உரைத்தைக்காண்
இரவு என்றும் பாராது அவ்விரவில் அஞ்சானாய் நீ வந்தக்கால் , உன்னைக் காணாது பொருள்
இல்லாதவன் இளமை போல வன்ப்பிழந்த தலைவி, உன் வருகை கண்ட பின்னர் அருள் உள்ளம்
உடையவன் செல்வம், நாள்தோறும் வளர்ந்து வளம் பெற்றது போல வளம் பெறுவாள். அவ்வழகு
மயங்காமல் காக்கும் வழி உண்டெனில் எமக்கு உரைப்பாயாக.
(18-21) மறம் திருந்தார் ………………… உரைத்தைக்காண் என ஆங்கு,
அறநெறியைக் கைவிட்டு வாழ்ந்து முதியவன் மறுமை செல்வத்தையும் இழந்து சீரழிவது போல
உன்னைக் காணாது தவித்தாள் தலைவி. உன்னைக் கண்டதும் விடியலில் துயில் எழும் கடமை
உடையவன் சிறப்பு பெறுவது போல சிறந்த திருவினைப் பெற்றாள். அத்திருவால் புறங்கூறும்
பெண்கள் வாயை அடக்க வழி உண்டென்றால் எங்களுக்கு சொல்வாயாக! (எனக் தோழி கூற,
தலைவன்)
(24-26) நின் உறு விழுமம் …………..வரைந்தனன் கொளற்கே
வேங்கை மலர்ந்து காட்டும் மணநாளை எதிர் நோக்கி இருந்து உன் தோளை மணந்து கொள்ள
வருகின்றான். ஆகவே, இனி வருத்தம் ஒழிவாயாக.
கருத்து: தோழி, தலைவியின் மணவருத்தம் கூறத் தலைவன் தலைவியை மணம் செய்ய
சம்மதம் தெரிவிக்கின்றான்.
3.5.2. குறிஞ்சிக் கலி எண்: 3, தோழி கூற்று
முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகைப், புரை தீர் கிளவி தாயிடைப்
புகுப்பினும்’ என்னும் விதி பற்றித் தமர் வரைவு மறுத்துழி, தோழி தாயர்க்கு அறத்தொடு நிற்ப,
அவள் நற்றாய்க்கு அறத்தொடு நிற்ப, அவள் தன்னையர் முதலியோர்க்கு அறத்தொடு நிற்ப,
அவரும் ஒருவாற்றான் உடன்பட்டமை தோழி, தலைவிக்குக் கூறி, ,தானும் அவளும், வரைவு
கடிதின் முடிதற் பொருட்டு, வரை உறை தெய்வத்திற்குக் குரவை ஆட, அவன் வரைய
வருகின்றமை தோழி தலைவிக்கு உரைத்தது(3)
101
தோழி தான் அறத்தொடு நின்றமை தலைவிக்குக் கூறி, தாங்கள் ஆடும் குரவையுள்
கொண்டுநிலை பாட, அவளை வேண்டுதல்
‘காமர்கடும் புனல்கலந்து எம்மோடு ஆடுவாள்,
தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான்,
நீள்நாக நறுந் தண்தார் தயங்கப்பாய்ந்து, அருளினால்,
பூண்ஆகம் உறத் தழீஇப் போத்தந்தான் அகன்அகலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால், என் தோழி 5
அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே
அவனும்தான், ஏனல்இதணத்து அகிற்புகை உண்டுஇயங்கும்
வான்ஊர் மதியம் வரைசேரின், அவ்வரை,
"தேனின் இறால்" என, ஏணி இழைத்திருக்கும்
கான் அகல் நாடன் மகன் 10
சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
வள்ளிகீழ் வீழா; வரைமிசைத் தேன்தொடா;
கொல்லை குரல்வாங்கி ஈனாமலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான்
காந்தள் கடிகமழும், கண்வாங்கு, இருஞ்சிலம்பின் 15
வாங்குஅமை மென்தோட் குறவர் மடமகளிர்
தாம் பிழையார், கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்'
என ஆங்கு,
அறத்தொடு நின்றேனைக் கண்டு, திறப்பட 20
என்னையர்க்கு உய்த்து உரைத்தாள், யாய்
அவரும் தெரிகணை நோக்கி, சிலைநோக்கி, கண்சேந்து,
ஒருபகல் எல்லாம் உருத்து எழுந்துஆறி,
இருவர்கண் குற்றமும் இல்லையால்’ என்று,
தெருமந்து சாய்த்தார் தலை 25
தெரியிழாய்! நீயும் நின் கேளும் புணர,
வரை உறை தெய்வம் உவப்ப, உவந்து
குரவை தழீஇ யாம் ஆட, குரவையுள்
கொண்டுநிலை பாடிக்காண்
நல்லாய்! 30
நல்நாள் தலைவரும் எல்லை, நமர் மலைத்
தம்நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர்கொல்?
புனவேங்கைத் தாதுஉறைக்கும் பொன்அறை முன்றில்,
நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?
நனவில் புணர்ச்சி நடக்கலும், ஆங்கே 35
கனவில் புணர்சச ் ி கடிதுமாம் அன்றோ?
விண் தோய் கல்நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொலோ?
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழங் கேண்மை
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன் கொலோ? 40
மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்
102
கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ?
என்னை மன் நின் கண்ணால் காண்பென்மன், யான்
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக, என் கண் மன!
என ஆங்கு, 45
நெறிஅறி செறிகுறி புரிதிரிபுஅறியா அறிவனை முந்துறீஇ,
தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக,
வேய்புரை மென்தோள் பசலையும், அம்பலும்,
மாயப் புணர்ச்சியும், எல்லாம் உடன்நீங்க,
சேய்உயர் வெற்பனும் வந்தனன்; 50
பூஎழில் உண்கணும் பொலிகமா, இனியே!
(1- 6), காமர்கடும் புனல் …………… பெருமையளே
ஆற்றில் எங்களோடு விளையாடிய தலைவி, கால் வழுக்கிவிட வெள்ளத்தால் அடித்துச்
செல்லப்பட்டாள். அச்சமயம் ஆங்கு வந்த இளைஞன் தயங்காமல் திடுமெனப் பாய்ந்து
தலைவியைக் காப்பாற்றித் தன் மார்போடு அணைத்துக் கொண்டு கரை மீண்டான். அவன் மார்பு
தன் மார்பில் அணைந்தமை அன்றே அவளும் மழையை வேண்டும்போது வருவிற்கும் தெய்வக்
கற்பினள் ஆகினள்.
(7-10) அவனும்தான்,…………………… நாடன் மகன்
அவள் விரும்பிய தலைவனோபுனம் காக்கும் மகளிர் தம் கூந்தல் காய எழுப்பும் அகிற்புகையால்
மறையும் மதி மலையில் சேரும்போது அதனைத் தேனடை என்று கருதிய மலைக் குறவர்கள்
அத்தேனடையைக் கைப்பற்ற முங்கில் ஏணி ஆக்கி வைத்திருக்கும் அகன்ற காட்டின்
உரிமையுடைய நாட்டு மன்னனின் மகன்.
(11-14) சிறுகுடியீரே! …………………….ஒழுகலான்
சிறுகுடியில் உள்ளவர்களே, அவளை, அம்மன்னன் மகனுக்கு மணம் செய்து தர மறுத்து
அறமில்லா செயலைச் செய்தால், வள்ளிக் கொடி கிழங்கு விடாது; மலகளில் தேனடைகள்
கட்டபடாது; தினைப்புனங்களும் பெரிய கதிர்களை தராது
(15-18) காந்தள் கடிகமழும்………… தொடுத்த கோல்'
காந்தள் மணம் கமழும் காண்போரை ஈர்க்கவல்ல மெல்லிய தோள்களைப் பெற்ற குறமகளிர்
கணவனுக்குத் துரோகம் செய்யாது வழ்நத ் மையால் கணவரும் வேட்டையில் வெற்றியே பெற்றனர்.
(19-22) என ஆங்கு,…………… கண்சேந்து,
என நான் உரைத்த உண்மையினைக் கேட்ட தாய், எமது தந்தை தமிஅய்ர்க்கும்
எடுத்துரைத்தாள்.
(23-25) ஒருபகல் ……….. தலை
அது கேட்ட அவர்கள் ஒருநாள் வரைஅம்புகளையும் வில்லையும் மாறி மாறிப் பார்த்து ஒருவாறு
சினம் ஆறினர். மேலும், காதல் கொண்ட இருவர்மீதும் குற்றம் இல்லை என்று மணத்திற்கு
ஒப்புக் கொண்டனர்.
(26-29) தெரியிழாய்!.................. பாடிக்காண்
தலைவியே, நீயும் உன் கேள்வனும் இணைந்து வாழ மலையில் உறை தெய்வம் மகிழும்படியாக
குரவை ஆடுவோம், வா, வந்து கொண்டு நிலைச் செய்யுளைப் பாடுக.
தலைவியின் மறுமொழி
(30-32) நல்லாய்! ………… என் நோற்றனர்கொல்?
தோழியே! நம் தலைவர் நம்மை மணக்க வரும் அந்நன்னாளில் நமது சுற்றத்தார் தமது
வெட்கத்தை எவ்வாறு தாங்குவர். முற்பிறவில் இதற்கு என்ன தவம் செய்தார்களோ?
103
(33-36) புனவேங்கைத்……….. கடிதுமாம் அன்றோ?
வேங்கை மரத்தின் பொன்போன்ற தாது உதிர்ந்து கிடக்கும் நம் இல்லத்தின் முன்னர் பலர்
அறியத் தலைவருடன் கூடி மகிழ்தல் கிடைக்கும். கனவில் மட்டுமே கூடிக் களித்த செயலை
இனி நான் கைவிடுவேன்.
தோழி கூற்று
( 37-41 )விண் தோய்……… கண்களோ?
திருமணநாள் அன்று நீயும் தலைவனும் முன்பு ஒருவொருக்கொருவர் அறியாதவர் போல
இருப்பீர்களா? முன்பே பழக்கம் இலாதாவர் போல நீங்கள் இருவரும் நடநது கொண்டால் நானும்
உங்கள் காதல் அறியாதவள் போல நடிப்பேனா? மேகம் தவழும் மலைநாட்டுத் ததலைவனுடன் நீ
பெறும் மண வாழ்வு காணாது நாண மிகுதியால் கைளால் மறைக்கப்பெறும் கண்களும் கண்கள்
ஆகுமா?
பாடம் இருபது
3.6.0. பாட முன்னுரை
இப்பாடப்பகுதியில் குறிஞ்சிக்கலி ஏழாம் பாடல் முதல் பதினோராம் பாடல் வரையிலான
ஐந்து பாடல்கள் விளக்கப்படுகின்றன. இப்பகுதியில் அமைந்த ஐந்து பாடல்களும் தோழி கூற்றாக
அமைந்தவை. தலைவனுக்குச் சிறைப்புறமாக கூறிய துறையில் ஒன்றும், ஆற்றாமை கூறி
வரைவு கடாயது துரையில் இரு பாடல்களும் தோழி தலைவியை ஆற்றுவித்தல் துறையில்
ஒன்றும் தோழி தன்னுள்ளே கூறியது ஒன்றுமாக ஐந்து பாடல்களும் அமைகின்றன.
3.6.1. குறிஞ்சிக் கலி எண்: 7, தோழி கூற்று
வரைவு நீட ஆற்றாளாயின இடத்து, தோழி தானும் தலைவியும் வள்ளைப் பாடலுள்
முருகனைப் பாடுவார் போல இருவர்க்கும் ஏற்பத் தலைவனைப் பாட, தலைவி ஆற்றினமை தோழி
தன்னுள்ளே கூறுவாளாய், தலைவன் சிறைப்புறமாகக் கூறியது.
தோழி வள்ளைப் பாட்டுப் பாடத் தலைவியை அழைத்தல்
வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து
ஏந்து மருப்பின், இன வண்டு இமிர்பு ஊதும்
சாந்த மரத்தின், இயன்ற உலக்கையால்,
ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம்,
ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்ற 5
மை படு சென்னிப் பய மலை நாடனை,
தையலாய்! பாடுவாம், நாம்
தோழி தகையவர் கைச் செறித்த தாள்போல, காந்தள்
முகையின்மேல் தும்பி இருக்கும் பகை எனின்,
கூற்றம் வரினும் தொலையான், தன் நட்டார்க்குத் 10
தோற்றலை நாணாதோன் குன்று
தலைவியைப் பாடுமாறு தோழி வேண்டுதல்
வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம்,
இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும்
வருடைமான் குழவிய வள மலை நாடனைத்
தெருள தெரியிழாய்! நீ ஒன்று பாடித்தை 15
தலைவி நுண் பொறி மான் செவி போல, வெதிர் முளைக்
கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே
மாறு கொண்டு ஆற்றார்எனினும், பிறர் குற்றம்
கூறுதல் தேற்றாதோன் குன்று
தோழி புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட 20
புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின்
வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை
மணம் நாறு கதுப்பினாய்! மறுத்து ஒன்று பாடித்தை
தலைவி கடுங் கண் உழுவை அடி போல வாழைக்
கொடுங் காய் குலைதொறூஉம் தூங்கும் இடும்பையால் 25
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால்,
தன் மெய் துறப்பான் மலை
தோழி என ஆங்கு
கூடி அவர் திறம் பாட, என் தோழிக்கு
111
வாடிய மென் தோளும் வீங்கின 30
ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே
தோழி: வேன்கைப்புலியைக் குத்திக் கொன்ற வேழத்தின் கொம்பாலும் சந்தன
மரத்தாலான உலக்கையால்மூங்கில் நெல்லைப் பாறை உரலில் இட்டுக் குற்றும் நாம், முருகனைப்
பாடுவது போல தலைவனைப் பாடுவாம் வருக.
தலைவி: பகைத்து வருவவன் யமனே ஆயினும் பின்வாங்காது கோல்லும்
குணமுடையவன்; நட்புடையவர் ஆயின் நன்பன் தாம் தோற்க விரும்பினால் தோல்விக்கு
நாணாதவன். அத் தலைவனின் மலையில் மகளிர் இட்ட மோதிரம் போல காந்தள் அரும்பு விரியக்
காத்திருக்கும் தும்பி.
தோழி: மான்குட்டி, பாறையில் அமர்ந்திருக்கும் கஎஉங்குரங்கை கண்டு மருண்டு நோக்கி
பெரிய மலையில் ஏறி இறங்கி ஆடி மகிழும். இம்மலைவளம் மிக்க தலைவனைப் புகழ்ந்து ஒரு
பாட்டு பாடுவாயாக.
தலைவி: கல்வி, செல்வம் முதலியவற்றில் தன்னோடு பகை கொண்டு தன் பெருவாழ்வு
கண்டு மனம் பொறாத கொடுமை உடையவரும் அவர் குற்றத்தைப் பிறர்க்குப் கூறும் கொடுமை
அறியாத தலைவனுக்குரிய மலை. சிறு சிறு புள்ளிகளை உடைய மாஇன் காதுகளைப் போல
மூங்கில் மூடியிருக்கும் பானைகள் கழன்று விழும் கவின் உடையது.
தோழி: பிடி யானையோடு கூடி, வளருந் தழை தின்ற அழகிய யானைகள் உடைய
மலைநாடனை, மணம் வீசும் கூந்தலை உடையவளே! மீண்டும் தலைவனைப் பாடுவோமாக.
தலைவி: வறுமைத் துன்பத்தால் வந்து, தம் வறுமையைக் கூறி இரந்து நிற்போருக்கு
வேண்டுவன அளித்து அவர் வறுமையைப் போக்கமாட்டாத நிலை வரும்போது உடலைத் துரந்து
உயிர் இழந்து போகும் போது உயர்ந்த பண்பாடுமிக்க நம் தலைவனுக்குரிய மலையில் , புலியின்
கால் போன்று வாழையின் வளைந்த காய்கள் குலைதோறும் தொங்கும் என்று நானும் அவளும்
ஒன்று கலந்து அவனைப் பாட, உயிர்த் தோழியாகிய அப்பெண்ணுக்குக் காதலனைக்
காணாமையால் வாடிய தோள்கள் அவள் காதலன் அன்பு காட்டிய போது மகிழ்ந்து அழகு
பெற்றன.
3.6.2. குறிஞ்சிக் கலி எண்: 8, தோழி கூற்று
வரையாது வந்து ஒழுகும் தலைவனைத் தோழி, தலைவியது கற்பு மிகுதியும், இவ்
ஒழுக்கம் அலராகின்றமையும், அவளது ஆற்றாமையும், கூறி வரைவு கடாயது
கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனஞ் சாரல்
எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து,
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ,
முதிர்இணர் ஊழ் கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை,
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர, 5
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி
திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப!
தன் எவ்வம் கூரினும், நீ செய்த அருள் இன்மை
என்னையும் மறைத்தாள், என் தோழி அது கேட்டு,
நின்னை யான் பிறர் முன்னர்ப் பழி கூறல் தான் நாணி, 10
கூரும் நோய் சிறப்பவும் நீ, செய்த அருள் இன்மை
சேரியும் மறைத்தாள், என் தோழி அது கேட்டாங்கு,
‘ஓரும் நீ நிலையலை’ எனக் கூறல் தான் நாணி
நோய் அட வருந்தியும், நீ செய்த அருள் இன்மை
ஆயமும் மறைத்தாள், என் தோழி அது கேட்டு, 15
112
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி,
என ஆங்கு
இனையன தீமை நினைவனள் காத்தாங்கு,
அனை அரும் பண்பினான், நின் தீமை காத்தவள்
அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும் 20
மருந்து ஆகிச் செல்கம், பெரும! நாம் விரைந்தே
ஞாயிற்றின் கதிர்களால் அழகுபெறும் மலைச்சரலில், எதிரெதிராய்நிற்கு இரு மலை
உச்சியில் இருந்து வீழும் அருவி அழகிய கிளைகளில் வீழ முற்றிய பூங்கொத்துகளை வரிசை வரிசயாக
நிற்கும் வேங்கை மரம், வரியுடைய நெற்றி உடைய அழகிய இரு யானைகள் இரு பக்கத்திலும்
நின்று, பூவோடு கலந்து நீரைச் சொரிய மலர்ந்த தாமரை மலரில் திருமகள் தெய்வச் சிறப்போடு
வீற்றிருப்பது போல விளங்கித் தோன்றும் மலை நாட்டுக்குரிய தலைவனே!
அவளை மறந்துவிட்ட உன் அருளற்றச் செயலை நான் அறிந்தால் உன்னைப் பிறர்முன்
பழிப்பேன் என்றஞ்சி, காதல் நோய் பெருகிய காலத்திலும் அக்கொடுமையை எனக்கு அறிவிக்காது
மறைத்து விட்டாள்.
அவளை மறந்துவிட்ட உன் அருளற்றச் செய்லை உடன் ஆடும் தோழியர் அறிந்தால்,
அவர்கள் உன் பண்பற்றசெய்லை பிரர் முன்னால் பழிப்பர் என நாணி, காமநோய் வருத்த
வருந்திபோது, அக்கொடுமையை அவரும் அறியாதபடி மறைத்துக் கொண்டாள்.
பெரும, இவ்வாறு உனக்கு நேர இருந்த பழி முதலான தீமைகளைக் காத்தல் தன் கடன் என
அறிந்து காத்து, அச்செயலால் உனக்கு உண்டாகும் தீமைகளைக் காத்தவளுடைய தீதத ் ற்குரிய அரிய
துன்பத்தைச் செய்யும் கொடிய காமநோயைத் தீரக ் கு
் ம்மருந்தாகுமாறு வரைவிற்குரிய விரைந்து
செல்வோம் வருக.
3.6.3. குறிஞ்சிக் கலி எண்: 9, தோழி கூற்று
வரைவிடை ஆற்றாத தலைவிக்கு, தோழி தான் தலைவனை நெருங்கி வரைவு கடாவ,
அது கேட்ட தலைவன் வரைவு முயற்சியான் வருதல் இடையிட்டதூஉம், தமர் வரைவு
எதிர்ந்ததூஉம், கூறி, அவளை ஆற்றுவித்தது
விடியல் வெங் கதிர் காயும் வேய் அமல் அகல் அறை,
கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை,
அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து,
பெரும் மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனை பெயல்
உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி, 5
நறு வீய நனஞ் சாரல் சிலம்பலின், கதுமென,
சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப!
கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின்
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ
புல் ஆராப் புணர்சச் ியால் புலம்பிய என் தோழி 10
பல் இதழ் மலர் உண்கண் பசப்ப, நீ சிதைத்ததை?
புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின்
அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ
கடை எனக் கலுழும் நோய் கைம்மிக, என் தோழி
தடையின திரண்ட தோள் தகை வாட, சிதைத்ததை? 15
சுடர் உற உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த
விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ?
யாமத்தும் துயிலலள் அலமரும் என் தோழி
113
காமரு நல் எழில் கவின் வாட, சிதைத்ததை?
என ஆங்கு, 20
தன் தீமை பல கூறிக் கழறலின், என் தோழி
மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான்,
பிறை புரை நுதல்! அவர்ப் பேணி நம்
உறை வரைந்தனர், அவர் உவக்கும் நாளே
ஞாயிற்றின் கதிர்களை மறைக்கும் மூங்கில்கள் வளர்ந்த மலையில் சுனையில் பூத்த
காந்தள் மலர்க் கொத்தை, பாம்பு நீர் உண்பதாகக் கருதி அதை அழிக்க காற்றோடு பெய்த
பெருமழை காலத்தில் எழுந்த இட்யோசை கேட்டு சிரு குடிசைகளில் வாழும் கானவர் துயில்
நீங்கி எழும் சிறப்பு வாய்ந்த மலை நாடனே!
புணரின் வெறுப்பில்லாத புணர்வினை விரும்பி அது கிட்டாததால் வருந்திய என்
தலைவியின் கண்கள் ஒளி இழந்து போகுமாறு செய்ததற்குக் காரணம், உன் மலைச்சுனை
மலர்களைவிட அழகானது என்பதாலா?
உயிர்போகும் இறுதி நிலை வந்து விட்டது எனக் கலங்குவதற்கான காமநோய் அளவு
கடந்து பெருகியதால் தலைவியின் தோள்கள் அழகு கெடும்படி நீ கேடு விளைவித்தாய். புலி
யானையோடு போர் செய்யும் உன் அகன்ற மலை மூங்கிலுக்கு நிகரானது என்ற
காரணத்தினாலோ?
உன் நினைவால் நள்ளிரவிலும் உறக்கமின்றித் தடுமாறும் என் தலைவியின் மேனி அழகு
கெடும்படி நீ கேடு விளைவித்தது, அம்மேனிம் உன் மலைவேங்கை மரத்தின் நெருப்புற்ற
மலர்களோடு ஒத்துள்ளது என்ற பொறாமையினால்தானோ?
இவ்வாறெல்லாம், அவன் கொடுமைகளைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்க,
களவுகாலத்தில் வந்து கூடி மகிழ்ந்ததாலுண்டான நட்பு அறுந்துவிடுவதற்கு அஞ்சி அவன்
வேண்ட அவன் வேண்டுகோளை ஏற்று அவன் வேண்டிய அந்நாளில் திருமணம் நிகழ நம்
சுற்றத்தாடும் ஒப்புக் கொண்டனர்.
3.6.4. குறிஞ்சிக் கலி எண் 10, தோழி கூற்று
அல்ல குறிப் பட்டுத் தலைவன் மீள, அதனை ‘என் பிழையாகக் கருதுவன்’ எனக்கவன்று
ஆற்றாளாகி, ‘தன் குறி தள்ளிய தெருளாக் காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கி,
தன் பிழைப்பாகத் தழீஇத் தேறிய’ தலைவியது நிலைமை தோழி தலைவற்குக் கூறி, "இவ்
இடையீடு நின் தோழியின் ஆயிற்று" என, எனது பிழைப்பு ஆக்கி, அவளை ஆற்றுவிப்பாய்; நீ
உரைத்ததே உரையாம் அவட்கு' என அவளது ஆற்றாமை கூறி, வரைவு கடாயது.
வீயகம் புலம்ப, வேட்டம் போகிய
மாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி,
வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்,
‘வேங்கை அம் சினை’ என விறற் புலி முற்றியும்,
பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும், 5
வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல், மறிதரும்
அயம்இழி அருவிய அணிமலை நல்நாட!
ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன்,
மாறினென் எனக் கூறி மனம் கொள்ளும், தான் என்ப 10
கூடுதல் வேட்கையான், குறி பார்த்து, குரல் நொச்சிப்
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக
அருஞ் செலவு ஆர் இடை அருளி, வந்து அளி பெறாஅன்,
114
வருந்தினென் எனப் பல வாய்விடூஉம், தான் என்ப
நிலை உயர் கடவுட்குக் கடம் பூண்டு, தன்மாட்டுப் 15
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக
கனை பெயல் நடு நாள் யான் கண் மாற, குறி பெறாஅன்,
புனையிழாய்! என் பழி நினக்கு உரைக்கும், தான் என்ப
துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், தன்
அளி நசைஇ ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக 20
என ஆங்கு,
கலந்த நோய் கைம்மிக, கண் படா என்வயின்
புலந்தாயும் நீ ஆயின், பொய்யானே வெல்குவை
இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலைச்
சிலம்பு போல், கூறுவ கூறும், 25
இலங்கு ஏர் எல் வளை, இவளுடை நோயே
115
தும்பியின் செயல்
(1-8) வீயகம் புலம்ப………… நல்நாட!
தானிருந்து தேனுண்ட பூ, தனித்துக் கிடக்க வேறுவேறு பூக்கலைத் தேடி செல்லும்
தும்பி, மத்நீர் ஒழுகும் யானையுடன் புலி போர் செய்யும்போது வேன்கைமரக்க்கிளை எனக் கருதி
புலிபக்கம் சென்றும் யானையின் மதநீர் மணத்தால் அதனை அணுகியும் மாறி மாறி பறக்கிறது.
இக்காட்சியானது இருவேறு அரசர்கள் போர்க்களத்தில் மாறுபட்டு நிற்க அவர்களைச்
சமாதானம் செய்ய சான்றோர் இரு மன்னர்களிடமும் மாறிமாறிச் செல்வதைப் போல இருகின்ற
மலைக்கு உரிய நாடனே!
(10-13) ஏறு இரங்கு ………… யானாக
தோழி, காதலனைக் கூடி மகிழ வேண்டுமென்ற வேட்கையால் வந்து தன் செய்யும் குறிப்பை
எதிர்நோக்கி நொச்சிப்பூ விழும் அரவத்தை ஊன்றிக் கேட்கும் காதுகளோடு நான் காத்திருந்து
வருந்தவும் இடி இடிக்கும் இரவின் நள்ளிரவில் வந்து என்னைப் பார்க்காதே திரும்பும் தலைவன்
நான் ஏமாற்றிவிட்டேன் என்று மனம் வருந்துகிறான். அதற்கு நான் என் செய்வேன்?
(14-17) அருஞ்செலவு ……… யானாக
தோழி திருமணம் நிகழ்ந்து என் நிலை உயரத் துணைபுரியும் தெய்வங்களுக்கு என்ற
எண்ணத்தில் அவனை எவ்வாறு காண்பது என்ற ஏக்கம் எழ , நான் வருந்தி இருந்தேன். காட்டு
வழிகளை இவள் மீது கொண்டுள்ள அன்பினாள் நான் கடந்து வந்தாலும் இவளின் அன்பைப்
பெற முடியவில்லை என்று வருந்திப் பலப்பல கூறினால் நான் என்ன செய்வேன்?
(18-22)கனைபெயல்…………………யானாக எனவாங்கு
தோழி, மழைத்துளியை விரும்பும் வானம்பாடி எப்பொழுதும் வானம் பார்த்துப் பறப்பது போல நான்
அவன் அன்பினால் ஆசை கொண்டு, மாறாக் காதல் உடையேனாய் மழி பெய்யும் இடை
யாமத்தில் வந்து, குறியிடத்தில் உன்னைக் காணா முடியாது போனால் அதை என் பிழையாகக்
கூறுவதர்கு யான் என்ன செய்ய முடியும்?
(23-27) கலந்த நோய் ………………..இவளுடைய நோயே
என்றெள்ளம் கூறி புலம்பியவாறு இவள் காமநோய் பெருகிவிடவே அக்கவலையால் தூக்கம்
இல்லாமல் துயர் கொள்ளும் என்மீது அக்குற்றத்தை ஏற்றிவிட்டால் உன்மலையில் கூறுவார்
கூறுவனவற்றை எதிரொலிப்பது போல நீ உரைக்க்ம் பொய்யே உனக்கு வெற்றியை உண்டாக்கும்.
அதை இன்றே செய்வாயக.
உள்ளுறை: பூ-திருமணம், விடுத்துச் சென்ற தும்பி- மணம் செய்து கொள்ள விரும்பாத
தலைவன், தும்பி, புலியிடத்தும் யானியிடத்தும் திரிதல் – தலைவன் பகற்குறி இரவுக்குறிகளில்
இன்பம் பெற்று மகிழ்தல்.
3.6.5. குறிஞ்சிக் கலி எண். 11, தோழி கூற்று
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி, அவன் தன்மையும், அவன் தனக்குக்
கூறுவனவும்,அக் கூற்றுத் தன்னால் பொறுக்கவொண்ணாதவாறும், அவன் கருத்தும்,
தலைவிக்குக் கூறி, அவன் குறை நயப்ப, தன்னுள்ளே சொல்லியது
ஒன்று, இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும்; உலகம்
புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்;
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்,
நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்;
இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க 5
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்;
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு, என்னைச்
சொல்லும் சொல், கேட்டீ சுடரிழாய்! பல் மாணும்:
116
‘நின் இன்றி அமையலேன் யான்’ என்னும் அவன் ஆயின்,
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிதுஆயின், 10
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உளகொல்லோ? நறுநுதால்!
‘அறியாய் நீ; வருந்துவல் யான்’ என்னும் அவன் ஆயின்,
தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிதுஆயின்,
அளியரோ, எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்?
‘வாழலேன், யான்’ என்னும் ‘நீ நீப்பின்’ அவன் ஆயின், 15
‘ஏழையர்’ எனப் பலர் கூறும் சொல் பழி ஆயின்,
சூழுங் கால், நினைப்பது ஒன்று அறிகலேன், வருந்துவல்;
சூழுங்கால், நறுநுதால்! நம்முளே சூழ்குவம்
‘அவனை,
நாண் அட, பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது; 20
"பேணினர்" எனப்படுதல் பெண்மையும் அன்று; அவன்
வௌவினன் முயங்கும் மாத்திரம் வா’ எனக்
கூறுவென் போலக் காட்டி,
மற்று அவன் மேஎவழி மேவாய், நெஞ்சே!
(1- 8)ஒன்று, இரப்பான்……… கேட்டீ
ஒளிவீசும் உயர்நத் அணிகலன்களை அணிந்தவளே, வழியில் ஓர் இளைஞனைக்
கண்டேன். அவன் யாதோ ஒரு பொருளை என்னிடம் இரப்பான் போல பணிந்து சில கூறத்
தொடங்கினான். ஆணால் அவன் நிலையை நோக்கினாலோ உலகம் காக்குக் பெருஞ்
செல்வந்தன் போல உள்ளான். கல்வி கேளிவிகளி சிறந்த சான்றோரிடத்து பயின்ற தன்னடக்கமும்
பெற்றிருந்தான். வறியோர்களின் பசித் துன்பத்தினை போக்கவல்ல பெரும்பொருள் திரட்ட
வல்லவன். அத்தகையான் தன் தகுதிபாட்டை இழந்து என்னிடம் சொல்லிய சொற்களைக்
கூறுகின்றேன் கேள்.
(9-11) நின் இன்றி …………….உளகொல்லோ
நறுமணம் நாறும் நெற்றியை உடையவளே, நீ இல்லாமல் நான் உயிர் வாழேன் என்கிறான். ஆனால்,
இறக்கத் துணியும் அவன் சொல்லை நம்பக்கூடாது. இந்நிலையில் எனக்கு வந்த துன்பம்
பிறர்க்கும் உண்டாகுமோ?
(1214)-அறியாய் …………..வலைப்பட்டார்
நான் உனைப் பெற இயலாத கவலையால் வருந்துகிறேன் . ஆனால், இதை நீ அறியவில்லை என்று
கூற்கிறான். அவன் சொல்லும் சொல்லின் உண்மை இயல்பை ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வருவது
என்னைப் போன்ற பெண்டிர்க்கு இயலாது.
(15-18)வாழலேன் யான் ………….சூழ்குவோம்
நீ என்னை கைவிட்டால் வாழ மாட்டேன் என்று கூறுகிறான். அயலான் ஒருவனுக்காக நான்
இவ்வாறு வருந்துவது குறித்து ஊரார் இவள் போன்ற மகளிர் பேதையரே என்ரு கூறுதல் நமக்குப்
பழியாகும். ஆதலின், இந்நிலை குறித்து நாம் இருவரும் ஒன்று கூடி ஆராய்ந்து பார்ப்போமா?
(19-24) அவனை ………….மேவாய் நெஞ்சே
நமது நாணம் அழியும்படிஅவன் முன்னே சென்று நில்லாதே போ என்ரு துரத்திவிட முடியாது.
அயலான் ஒருவனை ஏற்றுக்கொண்டேன் என்று ஊரார் சொல்லும் பழியும் நம் பெண்மைக்குப்
பொருந்தாது. அவனோ நம்மைக் கைப்பற்றத் துணிந்துவிட்டான். ஆனால், நெஞ்சே அதற்கு
இவள் சம்மதம் தரவில்லை. ஆகவே, நீ அவனை வருக என நான் கூறுவதுபோல் குறிப்புக் காட்டி,
அவன் விரும்பும் இடத்திற்கு விரும்பிச் செல்வாயாக.
3.6.6. தொகுப்புரை
117
கலியோசை நிறந்த இசைப்பாடல்களைக் கொண்ட இந்நூல் கற்றறிந்தோர் ஏத்தும் கலி
எனப் புகழப்படுவதின் உண்மைக் காரணத்தை மாணவர்களே! உணர்ந்து சுவைத்து இருப்பீர்கள்.
நாடகப் போக்கில் அமைந்த இருவர் உரையாடல்களாக அமைந்த இக்குறிஞ்சிக்கலி பாடல்கள்,
பழந்தமிழரின் வள்ளைப்பாட்டு, மகளிர் வாழ்வில் உணர்ச்சியை வெளிப்ப்படுத்த ஒரு உத்தியாகப்
பயன்பட்டு இருப்பதைக் காண்கிறோம்.
118
அலகு மூன்று
இ. பரிபாடல் செவ்வேள் (14 ஆம் பாடல்)
பாடம் இருபத்தொன்று
பரிபாடல் அறிமுகம்
பாட முன்னுரை
பரி போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல்
'பரிபாடல்' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்
பரிபாடல் வரலாறு
பரிபாடல் என்னும் நூல் சங்க இலக்கியம் தொகுப்பில் எட்டுத்தொகை நூல்களில்
ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இது ஒரு பண்ணிசை இலக்கியம். ‘பரிபாட்டு’ என்னும் பெயராலும்
இது வழங்கப்பட்டிருக்கிறது.இந்த நூலில் 70 பாடல்கள் இருந்ததை இறையனார் களவியல் உரை
குறிப்பிடுகிறது. அவற்றில் இன்றைய நிலையில் கிடைத்தவை 22 பாடல்கள் மட்டுமே. இதன்
ஒவ்வொரு பாடலின் இறுதிலும் பாடுபொருள், பாடியவர், இசை அமைத்தவர், இன்ன பண்ணில்
பாடப்பட்டது என்னும் குறிப்புகள் உள்ளன.
பாடல்களின் தலைப்பு மொத்த பாடல்கள் கிடைத்தவை
திருமால் 08 6
செவ்வேள் 31 8
கொற்றவை 01 0
வையை 26 8
மதுரை 04 0
70 22
பாடிய புலவர்கள்
கீரந்தையார், கடுவன் இளவெயினார், நலந்துவனார், மேயோடக் கோவனார், குன்றம்
பூதனார், நல்வழுதியார், நல்லெழுநியார், கேசவனார், இளம்பெருவழுதியார், நப்பண்னையார்,
நல்லழ்சியார், நல்லச்சுதனார் ஆகிய பதின்மூவர்.
பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல், செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல், காடுகாள்
(காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல், படிப்பதற்கு இனிமையுள்ள
வையைக்கு 26 பாடல், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல் என மொத்தம் 70 பாடல்கள்
உள்ளன.
உரையும் பதிப்பும்
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல் பிற்காலத்தில்
அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன்
பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பரிமேலழகர் உரையுடன் 1918 ஆம்
ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் பேராசிரியர்
வையாபுரிப்பிள்ளை மற்றும் மீ.பொன் இராமநாதன் செட்டியார் என வேறு
பலரும்வெளியிட்டுள்ளனர்.
தொகுப்புரை
பரிபாடல், தொல்காப்பியர் காலத்தில் அகபாடல்கள் செய்வதற்குரிய யாப்பு வடிவமாக
விளங்கியது. சங்க நூல்களில் பண்ணமைப்பு குறிக்கப்பெற்ற இசை நூல் இது.
119
120
பாடம் இருபத்திரண்டு
(துறை: பருவன் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, முருகவேளைப் பரவுவாளாய், 'இம்
பருவத்தே தலைமகன் வரும்' என்பதுபடத் தோழி வற்புறுத்தியது.)
பாடியவர் : கேசவனார், இசையமைத்தவர் : கேசவனார், பண் : நோதிறம்
முருகனது குன்றில் கார்காலத் தன்மை மிகுதல்
கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே;
தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே;
அடியுறைமகளிர் ஆடும் தோளே, 5
நெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே;
வாகை ஒண் பூப் புரையும் முச்சிய
தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை,
'நீடன்மின் வாரும்' என்பவர் சொல் போன்றனவே;
(இதன் பொருள்:) மேகம் பெருமழையைப் விரைவாகப் பெய்தன. அம்மழை நீரை
ஏற்றதால் நீர் மிகுந்த சுனைகளில் மலர்கள் மலர்ந்து நின்றன. குளிர்ந்த நறிய கடம்பினது மலரின்
தாதினை ஊதிய வண்டுகள் முரல்வது பண் இசையைப் போன்று ஒலித்தது. முருகனின்
திருப்பரங்குன்றத்துச் சாரலிலே தழைத்த மூங்கில்கள் நினது திருமுன்னர்க் கூத்தாடும்
அடியவராகிய அடியுறை மகளிருடைய தோள்களை ஒத்தன. வாகையினது ஒள்ளிய மலரை
ஒக்கும் மயில்களின் அகவற் குரல் ஓசையானது, தலைவியரைப் புணர்ந்து பின்னர்ப்
பிரிந்துசென்ற தலைவரைக் காலம் நீட்டியாதே விரைந்து வாருங்கள்(வம்மின்) என
அழைப்பவருடைய சொல்லை ஒத்தனவாய்த் திகழ்ந்தன.
நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன; 10
வெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின,
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப;
நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள்
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்,
விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப் 15
பவழத்து அன்ன வெம் பூத் தாஅய்,
கார் மலிந்தன்று, நின் குன்று போர் மலிந்து,
(இ-ள்.) புதுமலர்களைக் கொண்ட கொன்றையின் பூச் சரங்கள் பொன் மாலைகள் போன்று
தொங்கின. அழுகினற் சிறுமிகளின்அவ்வழுகைநிறுத்தும் பொருட்டுத் தாயர் அதோ புலிபுலி என்று சுட்டிச்
சொல்லும்படியாக பூங்கொத்துக்களையுடைய வேங்கையின் மலர், அகன்ற பாறைக்கல்லின் மேல்
உதிர்ந்து பரவி உள்ளன. இவற்றோடு, நீர்நிலையின் பக்கத்தே அரும்புகளையுடைய காந்தளின்
பூங்கொத்துக்கள் மலர்ந்த ஒழுங்குபட்ட இதழ்களோடு அதனருகே கொடிவிட்டுப் பரந்த
தோன்றியின் செந்நிறப் பூக்கள் வீழ்ந்து கிடந்தன. இவ்வாறாக, நினது திருப்பரங்குன்றத்தில்
வேனிற்காலத்தும் கார்காலத்தின் தன்மையே நிறைந்து இருந்தது.
முருகனைப் புகழ்ந்து போற்றுதல்
சூர் மருங்கு அறுத்த சுடர்ப் படையோயே!
கறை இல் கார் மழை பொங்கி அன்ன
நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே! 20
அறு முகத்து ஆறு-இரு தோளால் வென்றி
121
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே!
கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை
எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே!
(இ-ள்.) போரிலே சூரனை அவன் சுற்றத்தோடும் அறுத்தருளிய ஒளியுடைய வேற்படையை
ஏந்திய பெருமானே! இஃது ஃஇன் பரங்குன்றச் சிறப்பாகும்.
களங்கம் இல்லாத கார்காலத்து வெண்மேகம் கிளர்ந்தெழுந்தாற் போன்ற நறிய அகில்
நறுமணப் புகையை மிக விரும்பியவனே ஆறு முகமும் பன்னிரண்டு கைகளுடன் தோன்றித்
தமது அழகாலே பிறமகளிரை வென்ற வள்ளியை விரும்பியவனே! தலைவியர் தம்மைப்
பிரிந்துசென்ற தங் கணவர் விரைந்துவந்து புணர்ந்து பின்னர் நீங்காமைப் பொருட்டு யாழிசை
எழுப்பி நின்னைக் குறித்துப் பாடும் பாட்டினை விரும்புவோனே!
பிறந்த ஞான்றே, நின்னை உட்கிச் 25
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே!
இரு பிறப்பு, இரு பெயர், ஈர நெஞ்சத்து,
ஒரு பெயர், அந்தணர் அறன் அமர்ந்தோயே!-
(இ.-ள்)நீ பிரந்த நால் முதல் உன்னைக் கண்டு நடுக்குற்றத் தேவர்களுக்கெல்லாம்
அருளியவனே! உபநயனத்துக்கு முன்பு ஒரு பிறப்பும் பின்பு ஒருபிறப்புமாகிய இரண்டு
பிறப்பினையும் அருள் விளங்கும் நெஞ்சத்தோராக விளங்கும் அந்தணர் என்ர ஒப்பற்ற புகழை
உடையோரின் அற வாழ்விடத்து பொருந்தியவனே!
விண்ணப்பம்
அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னை,
துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக--
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே! 32
(இ-ள்.) நீ அத் தன்மையுடைய சிறப்பினை ஆதலால் அடியேன் நின்னைப் பெரிதும்
விரும்பி உன் திருவடிகளை அடுத்தடுத்து வழிபட்டு நின்றோம். பழமையாக முதிர்ந்த மரபினை
உடைய நின் புகழினும் பலவாக உன்னை வழிபடுவோர் பெறும் பயன் இன்னும் இன்னும் பலவாகப்
பல்கிப் பெருகுவதாகட்டும். பெருமானே!
தொகுப்புரை
பரிபாடலில் முருகனைக் குறித்த பாடல்கள் செவ்வேள் என்னும் தலைப்பில்
அமைந்துள்ளன. இப்பாடலில், முருகன் உறைவிடத் தலங்களில் ஒன்றான திருப்பரங்குன்றச் சிறப்பும்
முருகனின் சிறப்புகள் மற்றும் புலவரின் போற்றி பரவுதல் ஆகியன கண்டோம்.
122
தன் முயற்சி வினாக்களும் விடைகுறிப்புகளும்
1. பரிபாடல் – சிறு குறிப்பு வரைக.
பரிபாடல் எட்டுத்தொகை நூல்களில் அகம் புறம் தழுவியதோர் நூல். இந்நூலின்
மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 70 ஆகும், ஆனால், தற்போது இரபத்திரண்டு பாடல்களே
காணக்கிடைக்கின்றன. பரிமேலழகர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார்.
2. பரிபாடல் செவ்வேள் பாடலில் முருகனின் புகழ் பேசப்படும் விதத்தினை விவரிக்க.
முருகனின் குன்றப் பெருமை – சூர பதுமனை அழித்தவன் – பன்னிரு கைகள்
ஆருமுகம் தாங்கியவன் – வள்ளி மணாளன் – வைதீக அறம் பொருந்தியவன்.
123
அலகு நான்கு
புறநானூறு 100 – 120 ( 21 பாடல்கள்)
பாட நோக்கம்
பழந்தமிழரின் புற வாழ்க்கையினை அறிமுகம் செய்தல். தமிழரின் பொற்கால
நாகரிகத்தை நாம் அறிந்து கொள்ளத் துணை செய்தல். புறத்திணைகள் குறித்த தெளிவினை
ஏற்படுத்துதல்
மாணவர் பெறும் திறன்
1. பழந்தமிழரின் கொடைத்திறனை அறிந்து கொள்ளுதல். குறிப்பாக, சமகாலத்தில்
வாழ்ந்த கடையேழு வள்லல்களான அதியமான் அஞ்சி குறித்த செய்திகள் மற்றும்
பறம்புமலை ஆண்ட வேள்பாரியின் பாடல்கள் தரும் செய்திகளை அறிந்து கொள்ளுதல்.
2. பாடாண்திணை, நொச்சித் திணை மற்றும் பொதுவியல் திணை குறித்து
மாணவர்களுக்கு தெளிவு உண்டாடல்.
3. இயன்மொழி வாழ்த்து, அரச வாகை, விறலியாற்றுப்படை, மகண்மறுத்தல் மற்றும்
கையறுநிலை துறைகளுக்கான விளக்கங்களும் அத்துறையில் எழுந்த பாடல்களுக்கான
விளக்கங்களும் மாணவர்கள் அறிந்து கொள்ளுதல்.
பாடம் இருபத்திமூன்று
புறநானூறு அறிமுகம்
1.1 பாடமுன்னுரை
புறப்பொருள் பற்றிய 400 ஆசிரியப்பாக்களைக்(அகவற்பா) கொண்டது புறநானூறு. புறம்,
புறப்பாட்டு எனவும் அழைப்பர். இதனைத் தொகுத்தாரும், தொகுப்பித்தாரும் யாவர் எனத்
தெரியவில்லை. 267, 268 ஆகிய இரு செய்யுள்களும் கிடைத்தில. இந்நூலின் கடவுள்
வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவ்வாழ்த்தில் சைவசமயக் கடவுளான
சிவனைப் போற்றிப் பாடுகிறார். இந்நூலுக்கு 266 செய்யுட்கள் வரையில் பழைய உரை உண்டு.
இதனை இயற்றியோர் 158 புலவராவர். புறநானூற்றினைமுதன்முதலில் நூலாக அச்சிட்டவர் தமிழ்த் தாத்தா
டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் ஆவார். இந்நூலுள் உழிஞைத் திணை குறித்துப் பாடப்பெறவில்லை.
124
1.2 வரலாற்றுச் செய்திகள்
தமிழரின் பொற்கால நாகரிகத்தை நாம் அறிந்து போற்றத் துணை நிற்கும் அரும்பெரும்
பெட்டகமாக விளங்குவதால் இந்நூலினைத் தமிழர் வரலாற்றுக் கருவூலம் என்பர். புறநானூறு.
வடநாட்டு பேரரசர்களாகத் திகழ்நத ் நந்தர்கள் மற்றும் மௌரியர்களைப் பற்றிய அரிய
குறிப்புகளைத் தருகிறது.
1.3 மன்னர்கள் வாழ்வு
சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடைய மூவேந்தர்கள், பாரி, காரி, ஓரி, பேகன், ஆய்,
அதியமான், நள்ளி என்னும் கடையெழு வள்ளல்கள் முதலிய பலருடைய போர் வெற்றிகள் ,
கொடைவண்மை ஆகியவற்றை இந்நூல் விளக்கமாகத் தருகின்றது. மன்னர் சிலர்க்கும், புலவர்
பெருமக்கட்கும் இடையே நிலவிய வியத்தகு நட்புறவும், புலவர்களின் தன்மான வாழ்வும் உலகம்
வியக்கும் தன்மை உடையனவாகும்.
1.3 பண்பாட்டு நிலை
கணவனை இழந்த பெண்டிர் தம் கூந்தலையும், வளையலையும், பிற அணிகளையும்
களைதல், உடன்கட்டை ஏறி உயிர்விடல், இறந்தாரைத் தாழியில் இட்டுப் புதைத்தல், தீ மூட்டி
எரித்தல், வீரர்கட்கு நடுகல் நட்டு வழிபடல், நோய் கொண்டு இறந்த அரச குடும்பத்தார் உடலை
வாளால் கீறிப் புதைத்தல், கணவனைஇழந்த பெண்டிர் கைம்மை நோன்பு மேற்கொள்ளுதல் முதலான தமிழர்
பண்பாட்டு நிலைகளை இந்நூல் காட்டி நிற்கின்றது.
1.4. தமிழரின் பிற துறை அறிவு
தமிழர் கையாண்ட இசைக்கருவிகளைப்பற்றியும், இருபத்தொரு இசைத் துறைகளை
பற்றியும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழர் வானியல் அறிவில் மேம்பட்டிருந்தனர் என்பது
பற்றியும் இந்நூலிலிருந்து அறிய வருகிறது. பழந்தமிழகத்தின் அரசியல், சமூகநிலை, பழக்க
வழக்கங்கள், நம்பிக்கைகள், கலைச்சிறப்பு, வானியல் முதலிய அறிவுத் துறைகளில் பெற்றிருந்த
வளர்ச்சி ஆகியவற்றை இந்நூல் நிழற்படம் போல் தெரிவிக்க வல்லதாகும்.
1.5. தொகுப்புரை
தமிழறிந்தார் அனைவரும் புறநானூறு கற்க வேண்டும். புறநானூற்றுத் தமிழரைப் போல
அஞ்சா நெஞ்சமும் குறையாத தமிழ்ப்பற்றும் மானவுணர்வும் பெற்றவர்களாகத் திகழ வேண்டும்.
அருளும் ஆண்மையும் பண்பும் பாசமும்மன்னரும் புலவரும் வாழ்ந்த வாழ்க்கையைப்
புறநானூற்றினைப் படித்து இன்புறலாம். இவ்வொப்பற்ற அறிவுச் சுரங்கத்தைக் கற்று மகிழ
வேண்டும்.
125
பாடம் இருபத்தி நான்கு
4.2 பாடப்பகுதியின் முதல் ஆறு பாடல்கள்
(எண்கள்: 100 முதல் 105 வரை)
101. திணை: பாடாண் திணை துறை: பரிசில் கடாநிலை, பாடியவர்: ஔவையார்,
பாடப்பட்டவன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
(பாடாண் திணையாவது, பாடப்படுகின்ற ஆண்மகன் ஒருவனுடைய புகழ், வலிமை,
கொடை, அருள் தன்மை முதலியவற்றை ஆய்ந்து சொல்வதாகும். பாடு + ஆண்- பாடாண்
எனவரும். பாடப்படும் ஆண்மகனது சிறப்பியல்புகளைக் கூறும் திணை - பாடாண் திணை
எனப்படும். புகழ் எனின் உயிரும் கொடுக்கும் விருப்புடைய மன்னரை, பொருள் தேவை
உள்ளவர்கள் பரிசில் வேண்டிப் பாடும் பகுதி பாடாண் திணை ஆகிறது. பரிசில் கடாநிலை என்பது
பரிசில் தரும்படி வேண்டிக் கொண்டு புலவர் வாயிலில் நிற்பதைக் குறிக்கும். பரிசில்
வேண்டுவோர் வாயிலில் நின்று கொண்டு தன் நிலைமையை அரசனுக்குச் சொல்லுமாறு
வாயிற்காவலனிடம் சொல்வது கடைநிலை என்று தொல்காப்பியம் கூறுகிறது. புறப்பொருள்
வெண்பாமாலை இதனைப் பரிசில் நிலை என்று குறிப்பிடுகிறது.)
ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;
பன்னாள் பயின்று, பலரொடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ;
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான்; பரிசில் பெறூஉங் காலம் 5
நீட்டினும், நீடட
் ா தாயினும், யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது அது; பொய்யா காதே;
அருந்தே மாந்த நெஞ்சம்!
வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே! 10
126
பாடல் கருத்து
ஒருநாள், இருநாள் அன்று. பலநாள்கள் பலரோடு திரும்பத் திரும்பச் சென்று பரிசில்
வேண்டினாலும் முதல்நாள் விருப்பத்துடன் வழங்கியது போலவே எல்லா நாளும் எல்லாருக்கும்
விருப்பத்தோடு அணிகலன் பூண்ட யானைமேல் வரும் ‘அஞ்சி அதியமான்’ வழங்குவான்.
அவனிடம் பரிசில் பெறுவதற்குக் காலம் தாழ்நத ் ாலும், தாழாவிட்டாலும் களிறு தன்
தந்தங்களுக்கு இடையில் வைத்துக்கொண்ட சோற்றுக் கவளம் தவறாது அதற்குப்
பயன்படுவது போல அவன் பரிசில் நமக்கு உதவும். நெஞ்சமே! வருந்த வேண்டாம். வாழ்க அவன்
தாள்கள்!
கருத்து: காலம் தாழ்த்தினாலும் அதியன் கொடை தவறாது அளிப்பான்.
109. திணை: நொச்சி, துறை: மகண் மறுத்தல், பாடியவர்: கபிலர், பாடப்பட்டோன்: வேள் பாரி
(நொச்சித்திணை என்பது மதில் காத்தல் ஆகும். எனினும், தொல்காப்பியர்
நொச்சியைத் தனித் திணையாகக் கூறவில்லை. மகள் மறுத்தல் என்பது மகட்கொடை நேரும்
அரசர்களுக்குத் தன் குடி பெருமை கூறி மறுத்தல். மகள் மறுத்தல் என்னும் துறையில் வரும்
பாடல்களில் மகளின் தந்தை இன்னார் எனக் காட்டப்பட்டிருக்கும்.
அளிதோ தானே, பாரியது பறம்பே!
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே; 5
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீது அழிந்து,
திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.
வான் கண் அற்று, அதன் மலையே; வானத்து
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு, 10
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;
யான்அறி குவென், அது கொள்ளும் ஆறே;
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, 15
விரையொலி கூந்தல் நும் விறலியர் பின் வர,
ஆடினிர் பாடினிர் செலினே,
நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.
பாரியின் பறம்புநாடு இரக்கம் கொள்ளத் தக்கதாக உள்ளது. மூன்று வேந்தர்களும் இதனை
முற்றுகை இட்டிருக்கிறீர்கள். உங்கள் முற்றுகை அதனை ஒன்றும் செய்ய இயலாது. காரணம்
உழவர் விளைவித்துத் தராத நான்கு வகையான வளங்கள் பறம்பு மலையில் உள்ளன. ஒன்று,
மூங்கில் நெல் விளைகிறது. இரண்டு, பலாப்பழம் உண்டு. மூன்று, வள்ளிக்கிழங்கு உண்டு.
நான்கு, ஒரிக்குரங்கு பாயும்போது உடைந்து ஒழுகும் தேன்கூடுகள் உண்டு. வான் போன்று பரந்த
இடத்தைக் கொண்டது அவன் மலை. வானத்து மீன்கள் போல் அதில் சுனைகளும் உண்டு.
இத்தகைய வளம் நிறைந்த அவனது மலையில் ஒவ்வொரு மரத்திலும் உங்கள் போர்
யானைகளைக் கட்டிவைத்தாலும், இடமெல்லாம் தேரை நிறுத்திவைத்தாலும், உங்கள் போர்
முயற்சியால் அவனை வெல்ல முடியாது. வாள் வீசிப் போரிட்டாலும் அவன் தரமாட்டான். அவனது
பறம்பு நாட்டை நீங்கள் பெறுவதற்கு உரிய வழி ஒன்று உண்டு. அதனை நான் அறிவேன். யாழ்
மீட்டிக்கொண்டு பாணனாகச் செல்லுங்கள். உம்மோடு விறலியரையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள்.
ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் செல்லுங்கள். அதற்குப் பரிசாக நாட்டையும் குன்றையும் அவன்
பரிசாக வழங்குவான். பெற்றுக்கொள்ளலாம். அதுவே சிறந்த வழியாகும்.
பாடம் இருபத்தியேழு
பாடல் எண்கள் 106 முதல் 110 வரையிலான ஐந்து பாடல்களுக்கான
விளக்கம்
111. திணை: நொச்சி, துறை: மகள் மறுத்தல். பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி
சிறப்பு: பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல்.
அளிதோ தானே, பேரிருங் குன்றே!
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;
நீலத்து, இணை மலர் புரையும் உண்கண்
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே.
பறம்பு மலை இப்போது பெரிதும் இரக்கம் கொள்ளளத் தக்க நிலையில் உள்ளது. அதனை
மூவேந்தரும் சேர்ந்து முற்றுகை இட்டிருக்கின்றனர். அவர்களின் வேல் படையால் பறம்புமலை
வேந்தனை வெல்ல முடியாது. என்றாலும் பறம்பு மலையைக் கிணை முழக்கத்துடன்
பாடிக்கொண்டு செல்லும் விறலி அதனைத் தானமாகப் பெற்றுக் கொள்வது எளிது.
கருத்து: மகள் தர மறுத்த பாரியைப் போரில் வேல்லுதல் அரிது. ஒருவேளை கிணைமகள்
போல் பாடி வந்தால் குன்றம் பெறுவீர். எனினும் மகளிரைப் பெற மாட்டீர். பாரியின் மற வலிமையும்
கொடை மடமும் பேசப்படுகிறது.
பாடல் கருத்து
அடிகள் 1-8. இரும்பனம் ……….அடுபோர்க் குட்டுவ.
கருமையான பனம்பூ மாலையையும் பொன்னாலான வீரக்கழலையும் சூடிய அஞ்சாத
வீரர்கள் மார்பில் விழுப்புண்(தழும்பு) கொண்டிருப்பர். குளத்தில் மீனைப் பிடிக்கப் பாய்ந்து மேலே
எழும் சிரல் என்னும் மீன்கொத்திப் பறவையின் அலகைப் போன்ற நீணட ் வெண்மையான ஊசியால்
தைக்கப்பட்ட விழுப்புண்களால் உண்டானவை அத்தழும்புகள். அத்தகைய வீரர்கள் தம்மைப் போல
மார்பில் புண்பட்ட வீரனோடு மட்டுமே தும்பைப் பூச்சூடிப் போர் புரிவர் . இத்தகைய வீரர்களுக்குத்
தலைவனே! நல்ல நெற்றியை உடைய இருங்கோ வேண்மாளுக்குக்(அரசிக்கு) கணவனே! பெரிய
யானைகளையும் வெல்லுகின்ற போரையும் கொண்ட செங்குட்டுவனே!
அடிகள் 9-15. மைந்துடை நல்லமர் ………. எண்ணின்
வலிமை மிக்க போர்களில் வெற்றி பெற்றபின், இஞ்சியையும் மணமிக்க மலர்களையும் கலந்து
தொடுத்த மாலை சூட்டிய சந்தனம் பூசிய கள்ளின் குடங்களிலிருந்து வீரர்களுக்கும்
வெற்றியைப் பாடும் கூத்தர்களுக்கும் அளவின்றிக் கள்ளை அளிப்பாய். அக்கள் இனிய
சுவையும் நீலமணி போன்ற நிறத்தை உடையது. அக்கள் இருக்கும் குடங்கள் ஆடும். அதனால்
இருக்கையும் ஆடும். கூத்தர்களின் சுற்றத்தார் மகிழுமாறு நீ அவர்களுக்குத் தலையாட்டம்
அணிந்த குதிரைகள் பலவற்றைப் பரிசிலாகக் கொடுத்தாய்.
அடிகள்16-23. மன்பதை ………… புணரியிற் பலவே.
143
உலகம் அஞ்சும்படியாகப் பல அரசர்களை வென்ற பின், இனி வெல்லுதற்கு யார் உள்ளார்
என உன் வீரர்கள் உலகமெலாம் செல்லவும், உன் தேர் வீரர்களும், யானைமேல் ஊர்ந்து வரும்
அரசரும் உன்னைப் பாராட்டவும், உன்னால் துரத்தி அடிக்கப்பட்ட கடலின் பெரிய நீர்ப்பரப்பில்,
நுரையாகிய வெள்ளைத் தலைகளைக் கொண்ட நீர்த்துளிகள் உடைந்து சிதறும்படி, மேலும்
மேலும் வந்து மோதும் கடல் அலைகளை விட எண்ணிக்கையில் அதிகமான குதிரைகளை
அல்லவா நீ இரவலர்க்கு வழங்கியுள்ளாய்!''
திரள் கருத்து: மன்னனின். படை வீரத்தையும், கொடைத் திறத்தையும் பரணர் புகழ்கிறார்.
மன்னனின் படைவீரர் சிறப்பு, வீரர்களுக்கும் வெற்றியைப் பாடும் கூத்தர்களுக்கும் கள்
விருந்தளித்தல், குதிரைகளைப் பரிசளித்தல் ஆகியன விவரிக்கப்படுகின்றன.
பாடம் முப்பத்தொன்று
5.29.2. மூன்று மற்றும் நான்காம் பாடல்கள்
பாட முன்னுரை
ஏறாஏணி என்ற பாடலும், நோய்தபு நோன்தொடை என்ற பாடலும் முறையே மூன்றாம்
நான்காம் பாடல்களாக உள்ளன. அபாடல்களுக்கான விளக்கங்கள் இப்பாடத்தில்
கூறப்படுகின்றன. மூன்றாம் பாடலில் மன்னனின் செல்வ மகிழ்வும் நான்காம் பாடலில் நீணட
் காலம்
வாழ வாழ்தது் ம் புலவரின் திறனும் பேசப்படுகின்றன.
144
3. ஏறா ஏணி (மூன்றாம் பாட்டு)
துறை: இயன்மொழி வாழ்த்து, வண்ணம்: ஒழுகு வண்ணம், தூக்கு: செந்தூக்கு,
பாட்டின் பெயர் ஏறா ஏணி. (இயன்மொழி வாழ்த்து என்பது கொடை முதலான இயல்புகளைக்
கூறி வாழ்த்துதலாகும்.
கோக்காலி என்பது பொதுவாக ஏறுவதற்குப் பயன்படும் பெரிய உயர்ந்த நாற்காலி போன்ற
ஏணி ஆகும். ஆனால் இந்தக் கோக்காலி ஏறுவதற்குப் பயன்படாமல் கள்குடம் வைக்க
இருக்கையாய்ப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இது ஏறாஏணி என்று நயமாகக்
குறிப்பிடப்படுகிறது. அதுவே பாடலின் பெயராக அமைந்தது.
பாட்டின் கருத்து
அடிகள் 1-11. கவரி முச்சி ………. பொலந்தார்க் குட்டுவ
இமயமலைச் சாரலில் வசிக்கும் மகளிர், கவரிமானின் முடியைத் தம் மேகம் போன்ற
கூந்தலில் கலந்து முடித்த கொண்டையும் ஊஞ்சலாடும் விருப்பமும் உடையவர்களாக
வாழ்கின்றனர். அவர்கள் காட்டில் உரல் போன்ற பெரிய கால்களையும் ஒளிமிக்க தந்தங்களையும்
உடைய ஆண் யானைகளுடன் வந்த பெண் யானைகள் எத்தனை என எண்ணிக் கணக்கிட
முயல்வர். பின்பு எண்ண முடியாத அளவு கூட்டமாக வருவதால் எண்ணுவதைக் கைவிடுவர்.
அத்தகைய காடுகளில் கடவுளர் தங்கும் இடங்கள் இருக்கும். அத்தகு இடங்களைக் கொண்ட
இமயமலையை வடக்கு எல்லையாகவும், குமரி முனையைத் தெற்கு எல்லையாகவும் கொண்ட
அகன்ற நிலப்பகுதியில் ஆட்சி செய்த பகையரசர்களின் புகழ் மிக்க பல நாடுகளையும் வென்று,
அவற்றின் நலத்தைக் கெடுத்தவனே! போரில் எப்போதும் வெல்கின்ற படையைக் கொண்ட,
பொன்னாலாகிய மாலை அணிந்த குட்டுவனே!
அடிகள் 12-20. இரும்பணை ……….. நன்கலம் சிதறி
பெரிய மழையின்றிப் போவதால் காட்டில் உள்ள மூங்கில்கள் வாடி உலரும்; குன்றுகள்
பசும்புல் இல்லாமல் கெடும்; வெயில் மிகுதியாய்த் தோன்றும்; அருவிகள் நீரற்றுக் கிடக்கும்.
இத்தகைய வறண்ட காலத்திலும் வற்றாத உன் பேரியாற்றங் கரைகள் உடைந்து நீர்
ஓடும்படியாகவும், புதிய ஏரைப் பூட்டி உழுகின்ற உழவர்கள் கொன்றைப் பூவைச் சூடி
மகிழும்படியாகவும், மேகம் இடித்து மழையை மிகுதியும் பெய்தது போல, நீ உன்னை அடைந்த
வறியவர்களான பாணர், கூத்தர் முதலானோர் மகிழ்ச்சி பெறப் பொன்னை வாரி வழங்குகிறாய்.
அவர்களை உண்ணச் செய்து நீயும் உடன் அமர்ந்து உண்கிறாய்.
அடிகள் 21-30. ஆடுசிறை ……….. முழவின்
அசைகின்ற சிறகைக் கொண்ட கின்னரப் பறவையின் இனிய இசையை வென்ற யாழின்
இசையோடு ஒத்த குரலை உடைய விறலியர்க்குப் பல பெண் யானைகளைப் பரிசாகத் தருகிறாய்.
வாகைப் பூவை மேலே வைத்து, நுண்ணிய கொடியில் பூத்த உழிஞைப் பூவைச் சூடுகின்ற
வீரர்கள் பெற்று மகிழ, கொல்லும் தொழிலையுடைய ஆண் யானைகளைப் பரிசிலாக
அளிக்கிறாய். கணுக்களைக் கொண்ட நுண்ணிய கோலை ஏந்திச் சென்று தெருக்களில் உன்
குலத்தைப் புகழ்ந்து வெற்றியை வாழ்த்திப் பாடும் பாணன் பெறுமாறு குதிரைகளைத்
தருகிறாய். இவ்வாறு நீ கொடைத் தொழிலையும் போர்த் தொழிலையும் சமமாக விரும்புகிறாய்.
மேலும், பகைவராலும் புகழப்படும் நல்ல கல்வி அறிவு ஒழுக்கங்களை நீ பெற்றுள்ளாய்.
அடிகள்ன் 31-36.தொலையாக் கற்ப ………. மகிழானே
வள்ளல் தன்மை மிகுந்த கைகளை உடையோனே! தூங்கலோசை உடைய பாட்டிற்குப்
பொருந்த முழவு இசை முழங்குகிறது. உண்ணுதற்குரிய இறைச்சியைச் சுடும் புகை நாற்றமும்,
வெப்பமும் நீங்காமல் உள்ளன. நிரம்புதலும் குறைதலும் அறியாத கள் குடங்கள் கோக்காலியில்
வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் கள் நிரம்பி நெடுநேரம் இருப்பதில்லை. வீரர்கள் முகந்து
145
பருகிக் கொண்டே இருக்கின்றனர். அவை மீண்டும் நிரப்பப்படுவதால் குறைந்தும் நெடுநேரம்
இருப்பதில்லை. ஏறாத ஏணியில் கள்ளின் மட்டம் மட்டும் எப்படித்தான் ஏறுகின்றதோ? இவ்வாறு
விளங்கும் உன் செல்வப் பெருமையெல்லாம் கண்டேன். மகிழ்ச்சிப் பெருக்கைக் கண்டேன்.
திரள் கருத்து: குட்டுவனின் செல்வ மகிழ்ச்சி கூறியது. குட்டுவனின் ஆட்சி பரப்பின்
எல்லைகள் கூறப்படுதல். வடக்கே இமயமலை தெற்கே குமரிமுனை வரை பரவியிருந்த செய்தி
கூறப்படுகிறது, இமயமலைச் சாரலில் வாழும் மகளிர் பழக்கம் மற்றும் வீரர்களுக்கும் பாடினி கூத்தர்
மற்றும் வீரர்களுக்கு யானைகளைப் பரிசளிக்கும் வண்மையினைப் பரணர் பாடியுள்ளார்.
4. நோய்தபு நோன்தொடை (நான்காம் பாட்டு)
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குரிய ஒழுகு
வண்ணமும் செந்தூக்கும். பாட்டின் பெயர் நோய் தபு நோன்தொடை.
(தபு என்றால் கொல்லுதல் என்று பொருள். நோய்தபு என்றால், நோயையே கொன்று
வெற்றி கொள்ளுதல். அதனால், நோய்தபு நோன்தொடை. என்பதற்கு நோயில்லாத ஆற்றல் மிக்க
உடம்பு என்பதாம்.)
பாட்டின் கருத்து
அடிகள் 1-7. நிலம் புடைப்பன்ன …… ஆடுநடை அண்ணல்
நிலத்தை இடிப்பது போன்ற முழக்கத்தோடு, வானத்தைத் தடவுவது போல் உயர்ந்த கொடி
தேரில் அசையப் பல போர்களைச் செய்தாய். அப்போர்களில் வென்று பெற்ற பொருள்களைத்
தனக்கென்று எடுத்துக் கொள்ளாமல் பிறர்க்குக் குறையாமல் வாரி வழங்குபவனே! கனவிலும்
பிறரிடம் சென்று என் துன்பம் நீக்குக என்று கேளாதவனே! குற்றமற்ற நெஞ்சத்தையும்
பெருமிதமான நடையையும் உடைய தலைவனே!
அடிகள் 10-17. நுண்கொடி உழிஞை …….. ஒழுகை உய்த்தோய்.
நுண்ணிய கொடியாகிய உழிஞையின் பூவைச் சூடும் முற்றுகைப் போரில் வல்லவன்
அறுகை என்பவன். ஆனால், அவன் மோகூரில் உள்ள பழையன் என்பவனுக்கு அஞ்சி ஓடி
ஒளிந்தான். நீ, நெடுந்தொலைவில் இருந்தாலும் அறுகை உன்னைத் தன் நண்பன் என்று பலரும்
அறியச் சொன்னவன் என்பதனால், அவனுக்கு உதவிட மோகூர்ப் பழையன் என்பவனின்
அரண்களைத் தெய்வத்தால் அழிக்கப்பட்ட இடம் போன்று அழித்தாய். அவன் காவல் முரசைக்
கைப்பற்றி அவன் கூறிய வஞ்சினத்தை மாறுபடச் சிதைத்தாய். அவனுடைய காவல் மரமாகிய
வேம்பை வெட்டி வீழ்த்தி முரசு செய்வதற்குரிய துண்டுகளாக ஆக்கி வண்டியில் ஏற்றி
யானைகளைக் கொண்டு இழுக்கச் செய்தாய்.
அடிகள் 8-9. நின்புகழ் யாக்கை முழுவலி துஞ்சு நோய்தபு நோன்தொடை
வீரர்கள் வியந்து புகழ்ந்து போற்றும் நோயற்ற உன் வலிமை மிக்க உடம்பை, உன்னைப்
பாடும் பாடினி கண்டு வாழ்தத ் ிப் பாடுவாளாக.
அடிகள் 18-23. கொழுவில் ……… விளன்கிய காடே
பசுமையானதும் கொழுப்பற்றதுமான இறைச்சித் துண்டை வைத்த இடத்தை மறந்து
விட்ட உச்சிக் கொண்டையை உடைய கோட்டான், கவலையோடு பிற கோட்டான்களையும்
வருத்தக் கூவும் இடுகாடு; அங்கு அரசர் பலரை வென்று இவ்வுலகை ஆண்ட மன்னர் பலர்
தாழியிலே இடப்பட்டு வன்னி மரத்தின் நிழலை உடைய இடுகாட்டு மன்றத்திலே
புதைக்கப்பட்டனர். நோயற்ற உன் உடம்பினை அந்தத் தாழியாகிய மட்குடம் காணாது
நீங்குவதாக.
திரள் கருத்து: போரில் ஆற்றலும் உடம்பில் வலிமையுமுடைய நீ என்றும் இறவாது நீடு
வாழ்வாயாக என்று பரணர் பாடியுள்ளார். அறுகை என்ற குறுநில மன்னனுக்காகச்
செங்குட்டுவன் பழையன் மீது படையெடுத்து அவன் அரண்களை அழித்தான் என்ற வரலாற்றுக்
குறிப்பு இப்பாட்டில் கூறப்படுகிறது.
146
பாடம் முப்பத்தி இரண்டு
5.30.3. ஐந்தாம் பாட்டும் ஆறாம் பாட்டும்
ஐந்தாம், ஆறாம் பாடல்களாக இடம் பெற்றிருப்பவை ஊன்துவை அடிசில், கரைவாய்ப்
பருதி என்பவையாகும். ஐந்தாம் பாடல் சேரனின் வெற்றிச் சிறப்பும் ஆறாம் பாடலில் கொடைச்
சிறப்பும் சிறப்பிக்கப்பட்டுள்ளன.
5. ஊன்துவை அடிசில் (ஐந்தாம் பாட்டு)
துறை, வண்ணம், தூக்கு ஆகியன முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டனவே ஆகும்.
பாட்டின் பெயர் ஊன் துவை அடிசில் (ஊன் என்பது கறி, இது மாமிசம், இறைச்சி எனப்படும்.
ஊனோடு குழைத்துச் சமைத்த சோறு என்பது இத்தொடரின் பொருள் இப்பாட்டு சேரன்
செங்குட்டுவனின் வீரச் சிறப்பைப் பேசுகிறது.}
பாட்டின் கருத்து
அடிகள் 1-6. பொலம்பூ ………. எய்திய சேரல்
பொன்னால் செய்யப்பட்ட அழகிய தும்பைப் பூவையும், புற்றில் அடங்கிய பாம்பு போல
அம்பறாத் தூணியில் ஒடுங்கியிருக்கும் அம்புகளையும், வளையும் வில்லையும், வளையாத
நெஞ்சையும் யானைகளைத் தாக்கிக் கொல்வதால் நுனி முறிந்த வேலையும் கொண்டவர்கள்
உன் வீரர்கள். இவர்கள் செய்யும் போரின்கண், பகையரசர் எழுவரின் முடிப் பொன்னாற் செய்த
ஆரத்தை மார்பில் அணிந்து தோன்றும் செங்குட்டுவனே! கேட்பாயாக!
அடிகள் 7-14 குண்டுகண் அகழி ………. இறுத்து
ஆழ்நத ் அகழிகளை உடைய மதில் பல கடந்து உட்புகுந்து அழித்த உன் வீரர்கள்,
அரண்களைக் காக்கும் கணைய மரம் போன்ற தம் தோளை உயர்தத ் ி ஆடுவர் . அவர்கள் ஆடும்
அக்களத்தில் பிணங்கள் குவிந்து கிடக்கும். இவ்வாறு முன்பும் பல முறை உன் வீரர்கள் வெற்றி
பெற்ற களத்தில் துணங்கை என்னும் வெற்றிக் கூத்து நிகழ்த்தியிருக்கின்றனர். சோறு வேறு
ஊன் வேறு என்று பிரித்து அறிய முடியாதவாறு ஊன் குழைந்த சோற்றைப் பகைவரை அழித்த
வீரர்களுக்குப் பெருவிருந்தாகக் கொடுத்தல் அரசர்களுள் உனக்கு ஒப்பானவர் ஒருவரும்
இல்லை.
அடிகள்15-17. முள்ளிடுபு …………………மன்னர்
பகைவரின் குதிரைகள் முதலியன வருவதைத் தடுக்க முள் வேலி இட்டு வைத்தலை
அறியாத எல்லைப் புறத்தையும், பகைவரின் அம்பு வேகத்தை அடக்கும் கேடயத்தையும் கொண்ட
அரசர்களில் நீ ஒப்பற்றவன்.
அடிகள் 18-22. இனியார் உளரோ ………. மறுத்திசினரே
கடல், மேகங்கள் வந்து முகந்து கொள்ளுதலால் குறைந்து போவதில்லை. ஆறுகள் வந்து
சேர்வதால் நிரம்பி வழிவதும் இல்லை. காற்றால் அசைக்கப்பட்டு அலைகள் ஓயாமல் உள்ளது
அக்கடல். அதன் மீது வேலைச் செலுத்தி, அக்கடலிடத்தே எதிர்தத ் பகைவரை வெற்றி கொண்ட
உன்னை ஒத்தவர் இனிப் பிறக்கப் போவதில்லை. உன் முன்னோரிலும் ஒருவரும் இல்லை.
திரள் கருத்து: சேரன் செங்குட்டுவனைப் போன்ற சிறந்த மன்னன் முன்னோரிலும் இல்லை;
இனி இதுபோன்ற ஒருவர் பிறக்கப் போவதுமில்லை என்று அவனது வெற்றிச் சிறப்பு
கூறப்படுகிறது.
6. கரைவாய்ப் பருதி (ஆறாம் பாட்டு)
இப்பாட்டின் துறை, வண்ணம், தூக்கு ஆகியன முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டனவே ஆகும்.
பாட்டின் பெயர்: கரைவாய்ப் பருதி. (ஓரத்தில் குருதியின் சுவடு படிந்த தேர்ச் சக்கரம் என்பது
பொருள். (பருதி = சக்கரம்; கரை = ஓரம், விளிம்பு)
147
பாட்டின் கருத்து
அடிகள் 1-7. இழையர் …… சுரத்தலின்
நல்ல அணிகலன்களையும் காதில் குழைகளையும் கழுத்தில் மாலையையும் உடைய
பெண்கள், ஒளிமிக்க வளையலை அணிந்த முன்கையைக் கொண்டவர்கள்; மணிமாலை
விளங்கும் மார்பினை உடையவர்கள்; வண்டு மொய்க்கும் கூந்தலை உடையவர்கள்;
அக்கூந்தலைக் கொண்டையாக முடித்தவர்கள் அந்தப் பாடல் மகளிர், அவர்கள் நரம்பால்
தொடுக்கப் பெற்ற யாழில் பாலைப் பண்ணை அமைத்துப் பகைவர்க்குப் பணியாத குட்டுவனின்
உழிஞைத் திணைச் செயலைப் புகழ்வர். அவர்களுக்குக் குட்டுவன் இனிய கொடை பல
அளிப்பான்.
அடிகள் 8-14. சுரம்பல கடவுங் கரைவாய்ப் பருதி …… பெயர்ந்தே
போர்க்களத்தில் காடுகள் போன்ற தடைவழிகள் பலவற்றின் வழியாகச் செலுத்தப்படும்
தேரின் சக்கரத்தின் ஓரத்தில் குருதிக் கறை படியப் பல வீரர்களின் தலைகள் அச்சக்கரத்தில்
அகப்பட்டு நலியும். அத்தகைய போர்கள் பலவற்றை வென்ற, கொல்லும் இயல்புடைய
யானைகளையுடைய வேந்தன் குட்டுவன். தன் வேற்படையால் கடலை இடமாகக் கொண்டு போர்
செய்தோரையும் தோற்றோடச் செய்தான். பெருமை மிக்க அச்செங்குட்டுவனின் புகழைப் பாடிப்
பரிசு பெற்றோர் தம் ஊர்க்கு மீணடு ் செல்லக் கருத மாட்டார்.
திரள் கருத்து: சேரன் பரிசில் பெற வரும் கலைஞர்களுக்கு அன்புடன் முகம் மலர்ந்து
கொடை வழங்கும் பண்பைப் பரணர் பாராட்டுகிறார். அதே நேரத்தில் தன் பகைவர்களுக்கு எந்த
அளவு கடுமை பொருந்தியவன் என்பதை, அவனது தேர்சச ் க்கரத்தை வைத்தே குறிப்பாக
உணர்த்துகிறார். இனிய முகம் கொண்ட இவனது தேரின் சக்கரம் இரத்தக் கறை படிந்த
வாயாகக் காட்டப்படுகிறது. இந்தச் சிறப்பினால் கரைவாய்ப் பருதி என்னும் தொடர் பாடலின்
பெயராக ஆயிற்று.
பாடம் முப்பத்தி நான்கு
5.31.4. ஏழாம் பாட்டும் எட்டாம் பாட்டும்
நன்னுதல் விறலியர் என்ற ஏழாம் பாட்டில் இடம் பெற்றுள்ள செய்திகளையும், பேரெழில்
வாழ்க்கை என்ற எட்டாம் பாட்டிலுள்ள செய்திகளையும் பார்ப்போம். ஏழாம் பாடல் மன்னனை
நீண்ட காலம் வாழ வழ்த்துதலும் எட்டாம் பாடல் கொடைச்சிறப்பும் கொடைக்காகப் போரிடுதலும்
குறித்தச் செய்திகள் கூறப்படுகின்றன.
7. நன்னுதல் விறலியர் (ஏழாம் பாட்டு)
இப்பாட்டின் துறை, வண்ணம், தூக்கு முதலியன முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டவையே.
பாட்டின் பெயர் நன்னுதல் விறலியர்.
(நன்னுதல் விறலியர் என்பது இப்பாட்டின் பெயர். நல்ல நெற்றியை உடைய ஆடுமகளிர்
என்பது இதன் பொருள். நன்னுதல் என்னும் சொல் குறிப்பாகக் கற்பில் சிறந்தவள் என்பதை
உணர்த்தும் மரபுச் சொல்.)
பாட்டின் கருத்து
அடிகள் 1- 8. அட்டானே குட்டுவன் ……….உரை ஆனா
சேரன் பகைவரை அழித்து வேர் அறுக்கும் செயலில் ஓய்வதில்லை. ஒவ்வொரு முறை
அவன் போரிடும் போதும், யானைகளைப் பரிசிலாகப் பெறுவதில் கலைஞர்கள் ஓய்வதில்லை.
மலை மேலிருந்து வீழும் அருவி போல மாடங்களின் உச்சியில் இருந்து காற்றால் அலைக்கப்படும்
கொடிகள் தெருவில் அசையும். அத்தெருக்களில் எரியும் விளக்குகளில் நெய்யை ஊற்றுவர்.
அந்நெய் விளக்கின் உட்பகுதியிலிருந்து நிரம்பி வழிவதால் விளக்கின் பருத்த திரியானது
பெரிதாக எரியும். அவ்வொளியில் நல்ல நெற்றியையுடைய விறலியர் ஆடுவர். அத்தகைய
ஊர்களில் எல்லாம் குட்டுவனைப் பற்றிய புகழுரைகள் ஓய்தல் இல்லை.
148
திரள் கருத்து: ஆடும் தொழிலையுடைய மகளிரும் குலமகளிர்போல் கற்பிற் சிறந்து
விளங்கினர் என்று அவன் நல்ல ஆட்சித் திறன் பாராட்டப்படுகிறது. இதனால் நன்னுதல் விறலியர்
என்னும் தொடரால் இப்பாடல் பெயர் பெற்றது.
8. பேரெழில் வாழ்க்கை (எட்டாம் பாட்டு)
துறை: இயன்மொழி வாழ்த்து. இது செங்குட்டுவனின் கொடை இயல்பைக் கூறியமையின்
இப்பாட்டு இயன்மொழி வாழ்த்துத் துறை பெற்றது. வண்ணமும் தூக்கும் முந்திய
பாட்டுக்குரியன. பாட்டின் பெயர் பேரெழில் வாழ்க்கை.(பேரெழில் வாழ்க்கை பெருமையும் அழகும்
உடைய வாழ்க்கை என்பது இதன் பொருள்.
149
பாட்டின் கருத்து
அடிகள் 1- 4. பைபொன் …………பரதவ
பாணர்களுக்குப் பொன்னால்ஆன தாமரையை அணியத் தருபவனே! விறலியர் சூடப்
பொன்னரி மாலை அளிப்பவனே! பல புகழும் நிலைபெறக் கடற் பரப்பிற் சென்று பகைவரோடு
போர் செய்த குளிர்ந்த கடல்துறையை உடைய பரதவனே!
அடிகள் 5-8. ஆண்டு நீர்ப் ………….…நிரப்ப
கடலில் மிக்க துன்பங்களுக்கு இடையே பகைவருடன் கடும்போர் செய்து, வென்று
பெருஞ் செல்வங்களைக் கொண்டு வந்தாய். அவ்வாறு அரிய முயற்சியால் பெற்ற பொன்னையும்
பொருளையும் இரக்கக் குணத்தினால் மிக எளிதாக வாரி வழங்கி விடுகிறாய். அதுவும், உன்
புகழைச் சிறப்பாகப் பாடும் திறமையில்லாதவர்கள் பாடும் தகுதியற்ற பாடல்களுக்கு! இதனால்
உன்னை, ‘பாட்டின் தரம் உணர இவன் உண்மையில் கல்லாதவன்’ என்று எண்ணிக் கொண்டு
அந்தப் புலவர்களும் பாணர்களும் தங்கள் சுற்றத்தாராகிய மற்ற கலைஞர்களின் கைகளை ஏந்தச்
செய்து பொருள்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.
அடிகள் 9-12 வணங்கிய சாயல் ………மார்ப
அன்புடையவர்களுக்கும், மகளிர்ககு
் ம் வணங்கிய மென்மையினையும், பகைவர்க்கு
வணங்காத ஆண்மையினையும் உடையவன் நீ. பகைவரின் ஊரைச் சுடுதலால் வாடிய மலர்
மாலையையும் காய்ந்த சந்தனம் பூசிய மார்பையும் உடையவன் நீ!
அடிகள் 13-18 நின்பெயர் ………. பலவே
உன் நாட்டில் உள்ள மலையிலே தோன்றி, உன் நாட்டில் உள்ள கடலிலே கலக்கும் நீர் நிறைந்த
ஆற்றில் கொண்டாடப்படும் புனலாட்டு விழாவும், சோலையில் கொண்டாடப்படும் வேனில்
விழாவும் உடையது, பெருமையும் அழகுமுடையது, உன் வாழ்ககை ் . உன்னுடைய சுற்றத்தாரோடு
சேர்நது
் உண்டு செல்வ மக்கள் கூடி விளையாடும் காஞ்சி என்னும் ஆற்றின் துறையில் பரந்த
நுண்ணிய மணலை விட எண்ணிக்கையில் மிகுந்த, பல்லாண்டுகள் நீ வாழ்வாயாக!
திரள் கருத்து; புகழ் பாடும் அனைவருக்கும் இரக்க குணத்தால் வாரிவழங்கும்
குட்டுவன் காஞ்சி ஆற்றின் நுண்ணிய மணலின் எண்ணிக்கை காட்டிலும் பல ஆண்டுகள்
வாழட்டும். பரணர் குட்டுவனைக் கொடைமடம் கொண்டவனாகக் காட்டுகிறார். தகுதி இல்லாதவர்க்குக்
கொடை தருவது கொடை மடம் ஆகும். ஆற்று மணலின் எண்ணிக்கையை விட அதிக
ஆண்டுகள் வாழ்க என வாழ்த்துவது சங்ககாலக் கவிதை மரபு. வேனிற்காலத்தில்
அரண்மனையில் வாழாமல், இனிய சோலையில் பகைவர் பற்றிய அச்சம் இன்றித் திரியும்
குடிமக்களுடன் வாழும் அழகிய வாழ்க்கை பேரெழில் வாழ்க்கை எனப்பட்டது. இதுவே பாடலின்
பெயர் ஆகியது.
150
பாடம் முப்பத்தி ஐந்து
5.32.5. ஒன்பது மற்றும் பத்தாம் பாடல்கள்
செங்கை மறவர் என்ற பாடலைப் பற்றியும், வெருவரு புனல்தார் என்ற பாடலைப் பற்றியும்
இப்பாடத்தில் காண்போம். ஒன்பதாம் பாடல், மன்னவனது வரையா ஈகைத் திறன் குறித்தும்
பத்தாம் பாடல், மன்னவனது காம வேட்கையினும் போர் வேட்கையை மிகுதி பற்றியும்
கூறுகின்றன.
9. செங்கை மறவர் (ஒன்பதாம் பாட்டு)
துறை: விறலியாற்றுப்படை. (விறலி என்பவள் நடனம் ஆடுபவள். வேந்தனிடம் பரிசில்
பெற்ற ஒருவன் விறலியை நோக்கி, அவனிடம் சென்றால் இவ்வாறு நீயும் பரிசில்
பெறலாமென்றும், எம்முடன் வந்தால் இன்னது பெறலாமென்றும் கூறுவது விறலியாற்றுப்படை
ஆகும்). வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டனவே. பாட்டின் தலைப்பு: செங்கை மறவர்.
செங்கை மறவர் என்பது சிவந்த கையினையுடைய மறவர் என்ற பொருளைத் தரும்.
பாட்டின் கருத்து
அடிகள் 4-9. களிறு ….. மண்டி
யானைகள் பரந்து செல்ல, விரைந்து செல்லும் குதிரைகள் வீரர்களோடு அணியாகச்
செல்ல, கொடியுடைய தேர்கள் சுழன்று செல்ல, வேற்படை வீரரைக் கொண்ட காலாட் படையினரும்
வேந்தரும் குறுநில மன்னரும் ஒருங்கே சேர்நது ் செல்ல, மிக்க வலிமையோடு மனம் செருக்கி
வந்தான் மோகூர்ப் பழையன். அவனுடைய படைத்திறன் சிதையுமாறு தாக்கினர் சேர வீரர்கள்.
பகைவரின் குருதியில் நனைந்ததனால் போர் வீரர்களின் கைகள் சிவந்தன. வீரர்களின்
மார்பிலிருந்து ஒழுகிய குருதி மண்ணில் பாய்ந்து மழைநீர்க் கலங்கலைப் போல் பள்ளம் நோக்கிப்
பாய்ந்தது. பகைவரின் பிணங்கள் குவியுமாறு ஊர்கள் பலவற்றையும் பாழ் செய்தான் குட்டுவன்.
வெற்றி முரசு முழங்கப் பழையனின் செல்வம் முழுவதும் கெட்டொழிய அங்கு வாழ்ந்தோர்
பலரையும் கொன்றான். கரிய கிளைகளைக் கொண்ட காவல் மரமான வேம்பு குட்டுவனால்
வீழ்த்தப் பெற்றது.
அடிகள் 1-3. யாமும் …… உணீஇயர்
சினமிக்க போர் செய்த குட்டுவனைக் கண்டு வருவதற்காக நாங்கள் போகிறோம்.
அசையும் கூந்தலையும் ஆடும் இயல்பையும் கொண்ட விறலியர்களே! நீங்களும் வாருங்கள்.
இசைப்பாட்டில் திறமை மிக்க உங்கள் சுற்றத்தார் உடையும் உணவும் பெறுவர்.
திரள் கருத்து: செங்குட்டுவன் நாடுகளை வெல்வதே விறலியர் பாணர்
போன்றவர்களுக்குப் பரிசு வழங்குவதற்காக என்பது இப்பாடலின் கருத்து. இவ்வாறு சேரன்
கொடைச் சிறப்பைப் படைச் சிறப்போடு சேர்த்துப் புகழ்கிறார் பரணர்.
அள்ளி அள்ளிக் கொடுக்கும் வள்ளலின் கை சிவந்து போகும் போதுதான் அதைச் செங்கை
என்று பாராட்டுவது வழக்கம். இங்குச் சேர வீரரைச் செங்கை மறவர் என்கிறார் பரணர். ஆனால்
அவர்களது கை பகைவரின் இரத்தத்தால் செங்கை ஆனது. நம் போன்ற கலைஞர்களுக்குப்
பொன், பொருளை வாரிக் கொடுப்பதற்காகப் போர் செய்ததால் அந்தக் கை அன்றே சிவந்து -
வள்ளலின் கை செங்கை ஆகிவிட்டது என்று நயமாகக் குறிப்பு மொழியால் சொல்கிறார்.
இதனால் இப் பாடல் செங்கை மறவர் என்று பெயர் பெற்றது
10. வெருவரு புனல்தார் (பத்தாம் பாட்டு)
துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு, வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர்
வண்ணமும், பாடல் தலைப்பு: வெருவரு புனல்தார். தூக்கு: செந்தூக்கு.
(தனது மண்ணின் மீது விருப்பம் கொண்டு போருக்கு வந்த மன்னர் அஞ்சுமாறு சென்று
போர் தொடுத்ததைப் புகழ்ந்து கூறுவதால், இப்பாட்டு வஞ்சித்துறைப் பாடாண் பாட்டாயிற்று.
151
வண்ணம் ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும். ஒழுகு வண்ணம் என்பது
ஆற்றொழுக்காகச் செல்லும் சந்தம் ஆகும். அளவடி என்பது நான்கு சீர்கள் கொண்ட அடி.
சொற்சீர் வண்ணமென்பது, அளவடியிற் குறைந்து வந்தாலும் அகவலோசையோடு வருதல்.
பாட்டின் பெயர் வெருவரு புனல்தார்.அஞ்சத் தக்க காலாட் படையாகிய வெள்ளம் என்பது இதன்
பொருள்).
பாட்டின் கருத்து
அடிகள் 1-7. மாமலை ………. அனையை
பெரிய மலையிடத்தே மேகம் முழக்கம் செய்வதால் மான் கூட்டம் அஞ்சும். காற்று
அசைப்பதால் ஆலங்கட்டி சிதறக் கடுமழை பொழியும். கரும்பு வயல்களை உடைய நாடுகள் வளம்
பெருகவும், வளம் பொருந்திய உலகைப் பாதுகாக்கவும் காவிரியாற்றின் வெள்ளம் நேர் கிழக்காக
ஓடிவரும். அரசே! நீ அக்காவிரி போன்றவன் மட்டுமல்லன். பூக்கள் விரிந்த நீரைக் கொண்ட
மூன்று ஆறுகள் சேரும் இடமான முக்கூடலையும் ஒத்தவன்.
அடிகள் 8-16. கொல்களிறு ………….. நிரப்பினை
கொல்லுகின்ற யானைகளாகிய பெரிய அலைகள் திரண்டு வர, வலிமை மிக்க விற்படை
அம்புகளை நீர்த்துளிகளாகச் சிதறி வர, கேடயத்தின் மேலே மின்னும் வேல்கள் மீன்களாக
விளங்க, போர்ப்பறையோடு முரசொலி கலந்து வெள்ளத்தின் ஓசையாய் முழங்க, அதனைக் கேட்டு
அஞ்சிப் பணிகின்ற அரசர்களுக்குக் காவலாகவும், எதிர்தத ் வரை அழிக்கும் பெரும் வெள்ளமாகவும்
உன் காலாட்படை பாய்ந்து செல்லும். படையாகிய அந்த வெள்ளம் கடலிலும் மலையிலும் பிற
இடத்திலும் உள்ள பகைவர் அரண்களை அழித்து, அவர் நாட்டின் நிலப்பரப்பு முழுவதிலும்
பாய்ந்து பரவி நிரம்பிவிடும். பகைவரின் புகழ் கெடும். அவர்களின் சினம் என்னும் தீயை
அவித்துவிடும். இக்காலாட் படைக்குத் தலைவனாகிய செங்குட்டுவனே!
அடிகள் 16-22. ஆதலின் ……….. கழியுமோ
சாந்து பூசித் திலகமிட்டு, மைதீட்டிய பெண்களின் பல வண்ணங்களும் கலையும்படி
அவர்களைக் கூடி அவர்களின் மென்மையான கூந்தலாகிய படுக்கையில் கிடந்து, அவர்களைத்
தழுவிச் சிறுதுயில் பெறுவதை இழந்தாய். இவ்வாறு போர்கக ் ளத்திலேயே நாள் பலவும் கழிந்தன.
இன்னும் எத்தனை நாட்கள் இவ்வாறு கழியுமோ?
திரள் கருத்து:
வாழும் நாட்களின் பெரும் பகுதியைப் போர்க்களத்திலேயே கழித்து விடுகிறாய் .
எங்களைக் காக்கும் கடமைக்கே நாட்களை ஒதுக்கிவிட்டதால், உனக்கு இன்பம் தரும் காதல்
வாழ்வுக்கு நேரம் இல்லாமல் போய்விட்டதே என்று கவலையோடு கேட்கிறார் பரணர்.
5.7 தொகுப்புரை
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், தன்னைக் காணவந்த வறுமையுற்றவர்களான விறலி,
கூத்தர் ஆகீயோர்க்கும் வெற்றியத் தனக்கு என்றும் தரும் படை வீரர்களுக்கும் அளவிலாப்
பெருஞ்செல்வம் அளிப்பவன்.
பகைவர்களின் திறைப்பொருள்களான குதிரைகள், யானைகள் ஆகியவற்றைத் தாம்
கொள்ளாது கொடை மடம் தரும் இரக்கமுள்ளவன். கடற்போரிலே தன்னை எதிர்தத ் பகைவரை
வென்றவன்.
இமயம் முதல் குமரிமுனை வரை அரசர் பலரை வென்று நாட்டு எல்லையை
விரிவுபடுத்தியவன்.
அறுகை என்ற தன் நண்பனுக்காக மோகூர்ப் பழையன் மீது படையெடுத்துச் சென்று
வென்று, அவன் காவல் மரமாகிய வேம்பினை வெட்டி வீழத ் த
் ியது மட்டுமல்லாமல் அவனது அரணினை
முற்றிலும் சிதைத்தவன்.
152
இல்வாழ்வில் இன்பம் காணாது போர்கக ் ளத்திலேயே தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழிப்பவன்
என்ற சிறப்புக்குரியவன் எனப் பரணர் ஐந்தாம் பத்தில் சேரன் செங்குட்டுவனைச் சித்திரிக்கின்றார்.
153
தன் மதிப்பட
ீ ்டு வினாக்களும் விடைக் குறிப்புகளும்
1. பதிற்றுப்பத்து வாயிலாக அறியலாகும் சேரன் செங்குட்டுவனின் போர் வெற்றிகளைத்
தொகுத்தெழுதுக.
சுடர்வீ வேங்கை - தசும்பு துளவிருக்கை – ஊந்துவை அடிசில் இம்மூன்று பாடல்களிலும்
கூறப்பட்டுள்ள போர்ச் செய்திகளை எழுதிப் பழக வேண்டும்.
2. சேரன் செங்குட்டுவனின் கொடைத்திறனைப் பரணர் எவ்வாறு பாடுகின்றார்?
கரைவாய்ப் பகுதி – நன்னுதல் விறலியர் - செங்கை மறவர் என்னும் தலைப்பில் அமைந்த
பாடல்களின் கருத்தைத் தொகுத்துக் கூற வேண்டும்.
3. “பேரெழில் வாழ்க்கை” என்னும் பாட்டு செங்குட்டுவனைக் குறித்துக் கூறுவன யாவை?
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை என்னும் தொடருக்கான விளக்கம் – போரிலே
கழியும் குட்டுவன் வாழ்வு – பாடல் எட்டுக்கான விளக்கம்.
4. “வெருவரு புனல்தார்” என்ற பாட்டு செங்குட்டுவனின் வீரத்தை யாங்ஙனம்
கூறுகின்றது?
வீரன் குட்டுவனின் தன்னலம் அற்ற கொடை உள்ளம், தன் குடிமக்களுக்காகக் காதல்
இன்பத்தைக் கூட இழக்கத் தயங்காதது என்று உணர்த்துகிறார். சேரனின் படையைப்
பகைவர் நிலப்பரப்பை விழுங்கும் பெரு வெள்ளமாக உருவகம் செய்து பாடுகிறார் .
இப்பாடலில் காணப்படும் சேரனின் வீரத்தை வெளிப்படுத்தி எழுத வேண்டும்.