Professional Documents
Culture Documents
- Dinamani
மிகப் பழைமையான காலத்தில் அயோத்தியில் சகரன் என்று ஒரு மன்னன் அரசாண்டு வந்தான்.
மகாதரும சிந்தனையுடையவன். கேசினி, சுமதி என்று இரண்டு மனைவிகள் இருந்தும் புத்திர
பாக்கியம் இல்லாதவன். மனைவிமாரோடு மகப்பேறு வேண்டி இமயமலைச்சாரலில் பிருகு
முனிவர்முன்பாக நெடுங்காலம் தவம் செய்து முனிவரின் அருள் பெற்றான். அவர் வாக்குப்படி ஒரு
மனைவிக்கு குடும்பத்தை வளர்க்கும் ஒரு பிள்ளையும் மற்றொருத்திக்கு அறுபதாயிரம்
புதல்வர்களும் பிறப்பார்கள்! இவர்களில் கேசினி தனக்குக் குலத்தை விளங்க வைக்கும் ஒரு
பிள்ளை போதும் என்றாள். அவளுக்கு அஸமஞ்சன் என்ற குழந்தை பிறந்தது. இன்னொரு
மனைவி சுமதி ஒரு பெரிய கர்ப்பப் பிண்டத்தை ஈன்றாள்! அதிலிருந்த பல கருக்களை நெய்
நிறைந்த பாத்திரங்களில் இட்டுச் செவிலித் தாய்மார் பலகாலம் காப்பாற்றினர். அவற்றினின்று
அறுபதாயிரம் புதல்வர்கள் தோன்றினார்கள்!
புத்திரர்கள் மிகுந்த ஆத்திரத்துடன் முனிவர் மீது பாய்ந்தனர். கண் திறந்து பார்த்த கபில முனிவர்
"ஹூம்' என்று ஊங்காரம் செய்தார். அவ்வளவுதான். அவர் மூச்சில் தோன்றிய பெரு நெருப்பு
அறுபதாயிரம் சகர குமாரர்களையும் நொடியில் எரித்துச் சாம்பலாக்கி விட்டது!
பிறகு சகரன் தன் பேரன் அம்சுமானை அனுப்பி யாகக்குதிரையை கொண்டு வரச் செய்து
யாகத்தை முடித்தான். அதற்கு வெகுகாலம் கழித்து அம்சுமானுடைய பேரன் பகீரதன் பெரும் தவம்
செய்து கங்கையை கொணர்ந்து சகர புத்திரர்களின் எலும்புகள் மீது பட வைக்க அவர்கள் நற்கதி
அடைந்தார்கள் என்பது இந்தக் கதையின் நீட்சி.
TRENDING TODAY
தேங்காய்ப்பால்
குடியரசுத் தலைவர்
நடிகை யூலியா பெரசில்ட்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
காமன்வெல்த் ஃபவுண்டேஷன்
LATEST NEWS
uttar pradesh
உத்தரகண்ட்
திருப்பூர்
நைஜீரியா
வேப்பனப்பள்ளி
உங்கள் கருத்துகள்
Write a comment...
Name Email Post