Professional Documents
Culture Documents
அணிகலன்
அணிகலன்
பொட்டுத் தங்கம் கூட போடாத நிலையில் பூவையரின் அங்கங்கள் மூலியாக அழுது வடிவது போல்
தெரிவது என்னவோ உண்மைதான். ஆனால் உரிய அணிகலன்கள் ஏறியதும் அந்த அவயவங்கள்
புதுப்பொலிவில் "நகை"ப்பது போலத் தோன்றுவதாலோ என்னவோ, நம் ஆன்றோர்கள் அந்த
அணிகளுக்கு "நகை" என்னும் பொருத்தமான பெயரை சூட்டியுள்ளார்கள். அணி என்னும் சொல்லும்
"அணிதல்" மற்றும் அலங்கரித்தல் என்னும் இரு பொருள் தந்து நகைகளுக்கு மறு பெயராக
விளங்குகிறது. இந்தியாவில், தமிழ்நாட்டில் பல பெண்களை முதிர்கன்னியாக்கி, வனிதையரை
வதைக்கும் இந்த வரதட்சணை கொடுமையில் முக்கிய இடமும், பங்கேற்பதும் இந்த நகை என்றால் அது
மிகையான நகையல்ல. சரி... இந்த நகைகள் தோன்றின வரலாறும் தொன்மையும் பார்த்தால் சுவையும்
வாய்நத ் து.
காட்டு விலங்குகளை வேட்டையாடி வாழ்நத ் கற்காலம் அது. நம் மூதாதையர் புலிப்பல், யானைத் தந்தம்
போன்றவற்றை மிருகங்களின் நரம்புகளாகிய நான்களில் கோர்த்து கழுத்து, இடுப்பு, கைகளில்
அணித்திருந்தார்கள். காலச்சுழற்சியில் பருத்தி, பஞ்சு, நூல் என்று நாகரிகம் கிளைகளைப் பரப்பியபோது
நரம்புகளுக்குப் பதில் மனம் லயித்த அவர்கள், அவற்றில் துளையிட்டு கோர்த்து அணியும் நிலைக்கு
முன்னேறினர். நூல் என்பதைக் குறிக்க "இழை" என்னும் இன்னொரு தமிழ்சசெ ் ால்லும் இருந்ததால்,
அந்நூலில் கோர்த்து அணிந்த அணிகளுக்கு "இழை" என்று பெயரிட்டனர். காலப்போக்கில் தங்கம்,
வெள்ளி போன்ற உலோங்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் அவற்றை உருக்கி இழுத்த கம்பிகளில் மணி,
பவளம், போன்றவற்றை கோர்தது ் செய்யப்பட்ட போதிலும் அந்த ஆபரணங்களுக்கும் "இழை" என்னும்
பழைய பெயரே நிலைத்து விட்டது.
-என்பன போன்ற இலக்கிய வழக்கு சொற்கள் இதனை உறுதி செய்கின்றன. இதே முறையில் முறுக்கிய
கயிறு என்னும் பொருள் தரும் "வடம்" என்னும் தமிழ்ச் சொல், பழங்காலத்தில் கயிற்றில் உருவான
ஆபரணங்களைக் குறித்து நின்றது. இன்று பொற்கம்பிகள் முறுக்கி செய்த ஒருவகை அணிகலனுக்கு
"வடம்" என்னும் அந்த பழம் பெயர் வழங்குவதை அறிவோம்.
அடையாளத்திற்காக தோன்றிய அணிகள் அக்கால மக்கள் செயற்கரிய ஒரு செயலை செய்து முடிக்க
உறுதி பூணுங்கால், அதன் நினைப்பு எப்போது தமக்கிருக்க வேண்டும் என்ற குறிக்கோளில் தம்
முன்னங்கைகளில் "கங்கணம்" என்னும் ஒரு வகை வளையத்தை அணிந்தனர். இன்றும் கூட "ஒரு
காரியத்தை செய்து முடிப்பேன்" என்று அக்கருமத்திலேயே கண்ணாக இருப்பார்கள். அவர் கையில்
எதுவும் கட்டாவிடினும் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார் என்று குறிப்பிடுகிறோம் இல்லையா?
அந்த கங்கணத்தின் மறு வார்ப்பு தான் பின்னால் உருவான காபு, கடகம், வளையல், வங்கி போன்ற
கையணிகள்.
என்கிறது கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள பேரரசர் இராஜ ராஜனின் ஆணை. இதில் சிறப்பு என்னவெனில்,
இதில் ஒவ்வொரு அணிகலனின் முழு விபரமும் குறிக்கப்பட்டுள்ளது. நகையின் எடை, அது செய்யப்பட்ட
தன்மை, அதில் பொருத்தியிருக்கும் முத்து, பவளம், வைரம் போன்றவற்றின் விபரம், அதன் மாதிரி
ஆகிய எல்லாம் மிகத் துல்லியமாக எழுதப்பட்டிருக்கின்றன.
பேரரசரின் பட்டத்து அரசி லோக மகாதேவி 13 வகை நகைகள் அளித்திருந்தார். அவற்றில் 471
முத்துக்களும் 20 பவளங்களும் இருந்தன.
இயற்கையோடு இணைந்த நமது தமிழர் வாழ்க்கையில் இந்த அணிகலன் எப்படி மருத்துவ ரீதியாக
பயன்படுகிறது என்பதனை காண்போம்.
அந்த விரலிருந்து ஒரு நரம்பு கர்ப்பப்பைக்கு செல்கிறது. பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால்
விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச்
சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. பெண்கள் கர்பப் ம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி,
சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்தத
் ால் மேற்கண்ட
நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக
வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும் இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து
நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும்
பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.
அரைநாண் கொடி (அரணாக்கொடி) உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக
ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது [+ / -- ] சம நிலைக்கு கொண்டு வர இந்த அரைநாண் கொடி
உதவுகிறது.
மகாபாரத்தில் திருதிராஸ்தரன் தன் மகன் துரியோதனன் போருக்கு போகும் முன் தலையிருந்து தொட்டு
ஆசீரவ
் ாதம் செய்து, வழங்கி வரும்போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்
கொடியால் இடுப்புக்கு கீழ் ஆசீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து
இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரைநாண் கொடி உடல் பாதுகாப்புக்கும் பயன்படுகிறது.
மூக்கு குத்துவது, காது குத்துவது (துளையிடுவது) உடலில் உள்ள வாயுவை (காற்றை)
வெளியேற்றுவதற்கு (release) என்கிறார்கள்.
தலையணி
தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம்,
பூரப்பாளை, கோதை, வலம்புரி.
காதணி
தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு,
சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல்.
கழுத்தணிகள்
புய அணிகலன்கள்
கொந்திக்காய்.
கை அணிகலன்
கைவிரல் அணிகலன்கள்
கால் அணிகலன்கள்
கால்விரல் அணிகள்
கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி.
ஆண்களின் அணிகலன்கள்
வீரக்கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண், பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை,
கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்து வடம்,
கடுக்கண், குண்டலம்