Professional Documents
Culture Documents
Dersu Uzala 22
Dersu Uzala 22
வரர்கள்
ீ குழம்பிப் போய் இருந்தனர். அப்போது எங்களுக்கு நேர் எதிரே
ஆற்றின் மறுபக்கம் அசைந்தாடும் எரிதழல் ஒன்று தெரிந்தது. அது டெர்சுவும்
சான் பாவோவும்தான். நாங்கள் அவர்களை அடைய ஓர் ஆழமான ஆற்று
வளைவைத் தாண்ட வேண்டும். ஆகவே கழுதைகளை நீரோட்டத்திற்கும்
தமக்கும் இடையே இருக்க வைத்து அழைத்துச் செல்லுமாறு
அறிவுறுத்தினேன். தழலின் வெளிச்சத்திற்கும் எங்களுக்கும் இடையே 150
தப்படி இடைவெளி மட்டுமே இருந்தாலும் அந்தத் தொலைவைக் கடக்கவே
வெகுநேரம் ஆனது. நீரைக் கடந்து போக, ஒரு புதரில் இருந்த
மரக்கட்டையுடன் கயிறு கட்டிப் பிணைத்திருந்தோம். அது நெகிழ்ந்து
விட்டதால் மீ ண்டும் தண்ண ீரில் விழுந்தோம். அது பள்ளத்தாக்கிற்குப் போய்ச்
சேருவது. விடிவதற்குள் அந்தப் பகுதி முழுவதும் வெள்ளக் காடாகி விடும்
என்ற முடிவுக்கு வந்தேன். எச்சரிக்கையாக நடந்து ஒருவழியாக மலைப்
பகுதியை அடைந்து விட்டோம். டெர்சு, சென் பாவோவின் முன்னறிவை
அப்போது எண்ணி வியந்தேன். அவர்கள் விறகைச் சேகரித்து அங்கேயே
விட்டு வைத்தது எதற்காக என்பது புரிந்தது. கழிகளைத் தரையில் நட்டு,
மரப்பட்டைகளைக் கொண்டு வந்து காற்று நெருப்பை அணைத்து விடாமல்
திரையிட்டாற்போல் மறைத்து வைத்தனர். அதனால் கூடாரம் அமைப்பது
எளிதாகிப் போனது. மலையடிவாரத்தில் அமைந்த எங்கள் முகாமைக்
காற்றிலிருந்து காத்துத் தந்தது அதன் உச்சிப் பகுதி. தூக்கம் பற்றிய
கேள்வியே எழவில்லை எங்களுக்கு. நெருப்பின் அருகே அமர்ந்து குளிர்
காய்ந்தோம். வானம், பூமி, நெருப்பு, நீர் -என்ற நான்கும் எம் மீ து சீற்றத்தை
வளர்த்துக் கொண்டனவோ என்றுகூடத் தோன்றியது.ஆற்றின் ஓசையானது
முழக்கமாகப் பெருகிக் கொண்டிருந்தது.