Professional Documents
Culture Documents
March 2018
March 2018
எனவே மரணம் நிகழும் போது, நம் பூதவுடல் அழிந்து, ஆன்மாவனது, அறிவு, மனம்
மற்றும் நான் என்னும் உணர்வு ஆகியவை கலந்த சூட்சும உடலில்
தங்கியிருக்கிறது. இந்த சூட்சும உடல், ஆன்மாவை மற்றொரு உடலிற்குக் கொண்டு
செல்கிறது. சூட்சும உடலானது, மனம், அறிவு மற்றும் நான் என்னும் பொய்யுணர்வு
கலந்ததாக இருக்கிறது என்று பகவத் கீதையில் [7.4] தெளிவாகக்
கூறப்பட்டிருப்பினும், சூட்சும உடல் என்னவென்று அறிவற்றவர்கள்
புரிந்துகொள்ளுவதில்லை. மனத்தையும் அறிவையும் நம்மால் பார்க்க முடிவதில்லை
என்னும் காரணத்தால், ஒரு மனிதன் இறந்தவுடன் அனைத்தும் முடிந்துவிட்டது
என்று முட்டாள் முரடர்கள் நினைக்கின்றனர்.
அறிவும் மனமும் இருக்கிறதென்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்கின்றனர்.
உங்களுக்கு மனம் இருக்கிறது; எனக்கு மனம் இருக்கிறது; உங்களுக்கு அறிவு
இருக்கிறது; எனக்கும் அறிவு இருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
ஆனால் உங்கள் மனத்தை அல்லது அறிவை என்னால் பார்க்க முடிவதில்லை.
அவை மிகவும் நுட்பமாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, இப்போது என் கண்ணிற்கு
முன் காற்று இருக்கிறது, ஆனால் என்னால் அதனைப் பார்க்க முடிவதில்லை.
இவ்வாறு, நுட்பமான உலக விசயங்களைக் கூட நம் புலன்களால் பார்க்க இயலாத
போது, ஆன்மீகப் பொருளான ஆன்மாவைப் பற்றிக் கூறுவதற்கு ஒன்றுமில்லை.
நேற்று, கடவுள் என்ற சொல்லில் அர்த்தம் குறித்து அகராதியை நாம் நாடிய போது,
அவற்றில் ஒன்றில், “பரம்பொருள்” என்ற விளக்கம் ஒன்று இருந்தது. எனவே, நாம்
அனைவரும் உயிர்கள், ஆனால் பரம்பொருள் அல்ல. நாம் அதற்குக் கீழே
இருக்கிறோம். கடவுளும் ஓர் உயிர் தான். ஆனால், அவர் பரம்பொருள். அதுதான்
வேறுபாடு. இது மிகவும் எளிதானது. “நான் தான் பரம்பொருள்” என்று உங்களால்
கூற இயலாது. இருப்பினும் மூடர்கள், “நான் கடவுள்” என்று சொல்லுகின்றனர்.
நீங்கள் எவ்வாறு கடவுளாக முடியும்? நீங்கள் பரம்பொருளா? “நீங்கள்
பரம்பொருளா?” என்னும் கேள்வியைக் கேட்டவுடன் “இல்லை” என்றே பதிலளிக்க
இயலும். பின்னர் எவ்வாறு நீங்கள் கடவுள் ஆனீர்கள்?