You are on page 1of 4

தன்வினை என்றால் என்ன?

ஒரு வினையின் பயனை நிகழ்த்துபவனே அடைவானாயின் அதாவது வினையினுடைய பயன்


கருத்தாவை அல்லது எழுவாயைச் சாருமாயின் அது தன்வினை எனப்படும்.
உதாரணம் 

    தம்பி பாடத்தைப் படித்தான்.
    கமலா மாம்பழத்தை உண்டாள்.
    மாமா நிலத்தில் உருண்டார்.
மேலுள்ள முதலாவது வாக்கியத்தில் படித்தான் என்ற வினையை நிகழ்த்துபவன் தம்பி. படித்தல் என்னும்
செயற்பாட்டுக்கு  உட்பட்டவனும் தம்பியே. ஆகவே படித்தான் என்ற வினையின் பயன் எழுவாயாகிய
அல்லது கருத்தாவாகிய தம்பியையே சார்கின்றது. ஆதலால் படித்தான் என்ற வினை தன்வினை ஆகும்.
இரண்டாவது வாக்கியத்தில் உண்டாள் என்ற வினைக்குரிய ஏழுவாயும், கருத்தாவும் கமலா ஆகும்.
மாம்பழத்தை உண்டு பயனடைந்தவளும் கமலா. ஆகவே உண்டாள் என்பது தன்வினையாகும்.
மூன்றாவது வாக்கியத்தில் நிலத்தில் உருண்டவர் மாமா. அதாவது வினையின் செயற்பாட்டுக்கு
உட்பட்டவர் மாமா. உருண்டார் என்ற வினையின் எழுவாயும் கருத்தாவும் அவரே. ஆகவே உருண்டார்
என்பதுவும் தன்வினையாகும்.
இவ்வாறு ஒரு வினையை நிகழ்த்துபவரும் வினையின் பயனை அடைபவரும் ஒருவரே என்பதை
உணர்த்தும் வினைகள் தன்வினைகள் எனப்படுகின்றன.
தன்வினை வாக்கியங்கள் சில...
1. ரோஜா அழகாக ஆடினாள். 4. தந்தை கடைக்கு சென்றார்.
2. நான் புத்தகத்தை படித்தேன். 5. அவன் தடுக்கி விழுந்தான். 
3. அவர் அழுதுகொண்டே வந்தார்.

பிறவினை என்றால் என்ன?

ஒரு வினை கருத்தாவைச் சாராமல் பிறிதொருவரைச் சாருமாயின் அது பிறவினை எனப்படும்.


உதாரணம் 

 ஆசிரியர் பாடத்தை படிப்பித்தார்.


 அம்மா மாம்பழத்தை ஊட்டினார்.
 மாமா நிலத்தில் உருட்டினார்.

மேலுள்ள முதலாவது வாக்கியத்தில் படிப்பித்தார் என்ற வினையை நிகழ்த்துபவர் ஆசிரியர். எனினும்


படித்தல் என்னும் வினையின் பயனை அடைபவன் மாணவன். 
இரண்டாவது வாக்கியத்தில் ஊட்டினார் என்ற வினையின் எழுவாய் அல்லது கருத்தா அம்மாவாகும்.
ஆனால் மாம்பழத்தை உண்டது குழந்தை.  வினையின் பயனை அடைந்தது குழந்தை. அதாவது
மாம்பழத்தை உண்டது குழந்தை.
மூன்றாவது வாக்கியத்தில் உருட்டினார் என்ற வினையின் கருத்தாவாக மாமா இருந்தாலும் அங்கு
உருண்டது பந்து ஆகும். அதாவது வினையின் பயனை அடைந்தது பந்து ஆகும்.
ஆகவே இவ்வாறு வினையை நிகழ்த்தும் கருத்தா அதன் பயனை அடையாமல் பிறிதொருவர் அல்லது
பிறிதொன்று வினையின் பயனை அடைதல் பிறவினை எனப்படுகின்றன. 

பிறவினை வாக்கியங்கள் சில...


1. ரோஜா மரத்தை ஆட்டினாள். 4. கண்ணன் வாகனத்தை செலுத்தினான்.
2. நான் புத்தகத்தை படிப்பித்தேன். 5. ஆசிரியர் மாணவர்களை திருத்தினார்
3. மன்னர் எதிரியை வீழ்த்தினார்.
6. .
குறிப்பு:  தன்வினைகள் செயப்படுபொருள் குன்றிய வினையாகவோ செயப்படுபொருள் குன்றாத
வினையாகவோ இருக்கும். ஆனால் பிறவினை செயப்படுபொருள் குன்றாத வினையாகவே அமையும்.
குறிப்பு: பெரும்பாலான பிறவினைகள் தன்வினைகளில் இருந்தே பிறக்கின்றன.
பிறவினைகள் எவ்வாறு பிறக்கின்றன?

 வினையின் மெல்லொற்று ( ந்,ங் ) வல்லொற்றாகி ( த்,க் ) பிறவினை பிறத்தல்.


                 தன்வினை             பிறவினை 
              அடங்கினான்      அடக்கினான் 
              வருந்தினான்       வருத்தினான்

 வினையின் வல்லொற்று ( ட், ற் ) இரட்டித்து ( ட்ட், ற்ற் )பிறவினை பிறத்தல்.


                தன்வினை             பிறவினை 
                ஆடினான்             ஆட்டினான் 
                மாறுவான்           மாற்றுவான் 

 வி,பி ஆகிய விகுதிகள் இணைந்து பிறவினை பிறத்தல் 


                தன்வினை             பிறவினை 
                செய்தான்           செய்வித்தான்  
                 படித்தார்              படிப்பித்தார்

வினை வகைகள்
வினைச்சொற்கள் முற்று, எச்சம் என்பதாக மட்டுமன்றி, அவை பயன்படுவதன் அடிப்படையில் பலவாகப்
பகுத்துரைக்கப்படுகின்றன. அவ்வகையில்,

1. தன்வினை
2. பிறவினை
3. செய்வினை
4. செயப்பாட்டுவினை
5. உடன்பாட்டுவினை
6. எதிர்மறைவினை

என்பன போன்ற பல வகைப்பாடுகள் உள்ளன.

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை அறிதல்


ஒரு வாக்கியத்தைக் கொடுத்து இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக என வினாக்கள் அமையும்.

1. தன் வினை வாக்கியம்:


தன்வினை என்பது ஒருவர் தானே செய்வது.
ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.
(எ.கா)

கரையைச் சேர்வான்
என்னும் தொடரில், சேர்தலாகிய தொழிலை ஒருவன் செய்வான் என்பது பொருள்.

செல்வி பாடம் கற்றாள்.


முருகன் திருந்தினான்.

2. பிறவினை வாக்கியம்
பிறவினை என்பது பிறரைச் செய்யும்படி ஆக்குவது.
ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.
'பித்து' 'வித்து' எனும் சொற்கள் சேர்ந்து வரும்.
(எ.கா)
கரையில் சேர்ப்பான்
என்பது சொல்லாயின், வேறு யாரையோ அல்லது எதையோ சேரும்படி இவன் செய்வான் என்பது
பொருளாகும், முன்னதில் சேரும் வினை இவனுடையது. பின்னதில் அவ்வினை வேறு ஒரு பொருளுக்கு
உரியது.

ஆசிரியை பாடம் கற்பித்தார்


அவன் திருத்தினான்

பிறவினையாகும்போது வி, பி ஆகிய விகுதிகளில் ஒன்று, சேர்ந்து வருவதும் உண்டு.

 நட - நடப்பி - நடப்பித்தான்
 செய் - செய்வி - செய்வித்தான்

என்பனபோல வரும். சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா,
பிறவினையா என அறிதல் வேண்டும்.

தன்வினை - பிறவினை

திருந்தினான் -திருத்தினான் வாடு -வாட்டு கற்றார் -கற்பித்தார்

உருண்டான் -உருட்டினான் நடந்தான் -நடத்தினான் தேடினான் -தேடுவித்தான்

பயின்றான் -பயிற்றுவித்தான் சேர்கிறேன் -சேர்க்கிறேன் உண்டாள் -உண்பித்தாள்

பெருகு -பெருக்கு ஆடினாள் -ஆட்டுவித்தாள் அடங்குவது -அடக்குவது

செய் -செய்வி பாடினான் -பாடுவித்தான்


3.செய்வினை வாக்கியம்
ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும் வாக்கியத்தில்,
செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்துவரும். சில சமயம் ‘ஐ’ மறைந்தும்
வரும்.

 (எ.கா) புத்தகம் படிக்கிறேன்


 கொசு கடித்தது
 நாயை அடிக்கிறான்
 பாரதியார் குயில்பாட்டைப் பாடினார்.
 தச்சன் நாற்காலியைச் செய்தான்
 அவள் மாலையைத் தொடுத்தாள்
 ராதா பொம்மையைச் செய்தாள்

இத்தொடர்களில் உள்ள வினைச் சொற்கள் செய்வினைச் சொற்களாகும்.

4. செயப்பாட்டு வினை வாக்கியம்


செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமையும். எழுவாயோடு ‘ஆல்’ என்ற
3-ம் வேற்றுமை உருபும், பயனிலையோடு‘பட்டது’ ‘பெற்றது’ என்ற சொற்கள் சேர்ந்து வரும்.
(எ.கா) கல்லணை(செயப்படுபொருள்) கரிகாலனால்(எழுவாய்) கட்டப்பட்டது(பயனிலை)
தஞ்சை சோழர்களால் புகழ்பெற்றது..
புத்தகம் (என்னால்) படிக்கப்படுகிறது.
நான் (கொசுவால்) கடிக்கப்பட்டேன்.
நாய் (அவனால்) அடிக்கப்படுகிறது.

இத் தொடர்களில் செயப்பாட்டு வினைகள் உள்ளன. செய்வினையில் படிக்கிறேன் என்றிருந்த சொல்,


செயப்பாட்டு வினையில் படிக்கப்படுகிறது என மாறுகிறது. படு என்னும் துணைவினைச் சொல் இவை
அனைத்திலும் சேர்ந்து வருகிறது.

You might also like