Professional Documents
Culture Documents
வினை வகைகள்
வினை வகைகள்
தம்பி பாடத்தைப் படித்தான்.
கமலா மாம்பழத்தை உண்டாள்.
மாமா நிலத்தில் உருண்டார்.
மேலுள்ள முதலாவது வாக்கியத்தில் படித்தான் என்ற வினையை நிகழ்த்துபவன் தம்பி. படித்தல் என்னும்
செயற்பாட்டுக்கு உட்பட்டவனும் தம்பியே. ஆகவே படித்தான் என்ற வினையின் பயன் எழுவாயாகிய
அல்லது கருத்தாவாகிய தம்பியையே சார்கின்றது. ஆதலால் படித்தான் என்ற வினை தன்வினை ஆகும்.
இரண்டாவது வாக்கியத்தில் உண்டாள் என்ற வினைக்குரிய ஏழுவாயும், கருத்தாவும் கமலா ஆகும்.
மாம்பழத்தை உண்டு பயனடைந்தவளும் கமலா. ஆகவே உண்டாள் என்பது தன்வினையாகும்.
மூன்றாவது வாக்கியத்தில் நிலத்தில் உருண்டவர் மாமா. அதாவது வினையின் செயற்பாட்டுக்கு
உட்பட்டவர் மாமா. உருண்டார் என்ற வினையின் எழுவாயும் கருத்தாவும் அவரே. ஆகவே உருண்டார்
என்பதுவும் தன்வினையாகும்.
இவ்வாறு ஒரு வினையை நிகழ்த்துபவரும் வினையின் பயனை அடைபவரும் ஒருவரே என்பதை
உணர்த்தும் வினைகள் தன்வினைகள் எனப்படுகின்றன.
தன்வினை வாக்கியங்கள் சில...
1. ரோஜா அழகாக ஆடினாள். 4. தந்தை கடைக்கு சென்றார்.
2. நான் புத்தகத்தை படித்தேன். 5. அவன் தடுக்கி விழுந்தான்.
3. அவர் அழுதுகொண்டே வந்தார்.
வினை வகைகள்
வினைச்சொற்கள் முற்று, எச்சம் என்பதாக மட்டுமன்றி, அவை பயன்படுவதன் அடிப்படையில் பலவாகப்
பகுத்துரைக்கப்படுகின்றன. அவ்வகையில்,
1. தன்வினை
2. பிறவினை
3. செய்வினை
4. செயப்பாட்டுவினை
5. உடன்பாட்டுவினை
6. எதிர்மறைவினை
கரையைச் சேர்வான்
என்னும் தொடரில், சேர்தலாகிய தொழிலை ஒருவன் செய்வான் என்பது பொருள்.
2. பிறவினை வாக்கியம்
பிறவினை என்பது பிறரைச் செய்யும்படி ஆக்குவது.
ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.
'பித்து' 'வித்து' எனும் சொற்கள் சேர்ந்து வரும்.
(எ.கா)
கரையில் சேர்ப்பான்
என்பது சொல்லாயின், வேறு யாரையோ அல்லது எதையோ சேரும்படி இவன் செய்வான் என்பது
பொருளாகும், முன்னதில் சேரும் வினை இவனுடையது. பின்னதில் அவ்வினை வேறு ஒரு பொருளுக்கு
உரியது.
நட - நடப்பி - நடப்பித்தான்
செய் - செய்வி - செய்வித்தான்
என்பனபோல வரும். சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா,
பிறவினையா என அறிதல் வேண்டும்.
தன்வினை - பிறவினை