Professional Documents
Culture Documents
பாரதியார் பாடல்கள்
பாரதியார் பாடல்கள்
விடுதலை-சிட்டுக்குருவி
௧)
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)
௨)
பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூகூ டு
கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)
௩)
முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூதூ ங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)
உறுதி வேண்டும்
அன்பு செய்தல்
புதுமைப் பெண்