Professional Documents
Culture Documents
Lent 2nd Sunday Tamil Liturgy
Lent 2nd Sunday Tamil Liturgy
25 பிப்ரவரி 2024
வருகைப் பல்லவி
என் இதயம் உம்மிடம் கூறியது: உமது முகத்தைத் தேடினேன்; உமது பார்க்க
விரும்பினேன்; ஆண்டவரே, உமது முகத்தை முகத்தைப் பார்க்க விரும்பினேன்;
அண்ட என்னிடமிருந்து திருப்பிக் கொள்ளாதேயும்.
திருப்பலி முன்னுரை
அன்பார்ந்த இறைமக்களே! சென்ற ஞாயிறு சிந்தனையில் பாலை நிலத்தில்
இயேசுவைச் சந்தித்த நாம், இன்று மலையுச்சியில் அவரைச் சந்திக்க
வந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, இருவேறு மலைகளில் நிகழும் இரு
வேறுபட்ட, முற்றிலும் மாறுபட்ட நிகழ்வுகள் இந்த ஞாயிறு, நமது சிந்தனைக்குத்
தரப்பட்டுள்ளன. இவ்விரு நிகழ்வுகளில் ஆபிரகாம் வாழ்வில் நிகழ்ந்த ஒரு
கொடுமையான சோதனையை நமது சிந்தனைகளின் மையமாக்குவோம்.
திருப்பலி முன்னுரை 3
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நீதியையும் நேர்மையையும் விரும்புகின்ற நம்
இறைத்தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக்
கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம்
தவக்காலம் இரண்டாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, உம் அன்புத் திருமகனுக்கு நாங்கள் செவிசாய்க்க எங்களுக்குக்
கட்டளையிட்டு உமது வார்த்தையினால் எங்கள் உள்ளத்துக்கு ஊட்டம் அளிக்கத்
திருவுளம் கொண்டீரே; அகவொளியால் நாங்கள் தூய்மையாக்கப்பட்டு உமது
மாட்சியைக் கண்டு மகிழ்வோமாக. உம்மோடு….
முதல் வாசகம்
நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி.
இரண்டாம் வாசகம்
கடவுள் தம் சொந்த மகனென்றும் பாராமல், அவரை நமக்காக ஒப்புவித்தார்.
நற்செய்தி வாசகம்
என் அன்பார்ந்த மைந்தர் இவரே.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
குரு: அன்பார்ந்த இறைமக்களே! நம் மீது அளவற்ற அன்பும் இரக்கமும் கொண்ட
இறைவன் நமது மன்றாட்டுகளுக்கு செவிமடுக்கக் காத்திருக்கிறார். அவரிடம்
நமது தேவைகளை எடுத்துரைப்போம்.
செபிப்போமாக:
எம் வேண்டுதல்களுக்கு செவிசாய்ப்பவரே! உம் மக்களாகிய நாங்கள் உம் முன்
கொண்டு வந்த எங்கள் விண்ணப்பங்களையெல்லாம் நிறை வேற்றி, எமது
விசுவாசத்தை உம்மில் அதிகரிக்க செய்யவேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய
கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, இப்பலிப்பொருள் எங்கள் பாவங்களைக் கழுவிப்போக்க உம்மை
வேண்டுகின்றோம்: பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்கு, உம்மீது நம்பிக்கை
கொண்டோரின் உடல்களையும் மனங்களையும் அது புனிதப்படுத்துவதாக.
எங்கள்….
திருவிருந்துப் பல்லவி
என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்.
இவருக்குச் செவிசாயுங்கள்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, இவ்வுலகில் வாழும் நாங்கள் ஏற்கெனவே விண்ணுலக வாழ்வில்
பங்குபெற அருள்கூர்ந்தீர்; மாட்சிக்கு உரிய மறைநிகழ்வுகளைப் பெற்றுக்கொண்ட
நாங்கள் உமக்குச் செலுத்தும் நிறை நன்றியை ஏற்றுக்கொள்வீராக. எங்கள்….