Professional Documents
Culture Documents
கருவிகள்
இவை உலகின் மிகப் பழமையான இசைக்கருவிகளாகும்
யாழ்
வீணை ஒரு நரம்பு இசைக் கருவி. மிக அழகி இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல
நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம். பண்டைக்காலம் தொட்டு வீணை
வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட
ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது. குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம்,
மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும்.
வீணையின் அமைப்பு
வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3
தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது
தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில்
சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள்
உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.
யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4
வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள
வளையங்களில்முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும்சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.
நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப்
பயன்படும். வளையங்களி நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும். யாளியின் பக்கம் தள்ளினால் சுருதி
குறைவடையும். மேலும், பிரடைகளை யாளி முகப்பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும்.
தஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும்
குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை' என்று பெயர். வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல
ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்படிருக்கும்.
படம்
நாதசுவரம்
இது வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்றது ஆகும். எனினும் இது ஷெனாயை விட அளவில்
பெரியது. இது வன்மரத்தினால் செய்யப்பட்ட உடலையும், மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படும் விரிந்த
அடிப் பகுதியையும் கொண்டது. நாதசுவரம் ஆச்சாமரம் என்னும் மரத்தால் செய்யப்படுகின்றது. இதன் பாகங்கள்
வருமாறு:
வகைகள்
நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு: திமிரி, பாரி. திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும்,
ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்.
படம்
சித்தார்
எக்காளம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது ஒரு
காற்றிசைக் கருவி ஆகும்.
தமிழகத்தில் வாழும் தொட்டிய நாயக்கர் இந்த எக்காளத்தை ஊதியபடியே ஆடும் எக்காளக் கூத்து என்றும் நாட்டுப்புறக்
கலை முற்காலத்தில் இருந்தது. தற்போது இக்கலை வழக்கொழிந்துவிட்டது.
படம்
கிடுகிட்டி
பிற பெயர்கள்
கிடுகிட்டி, கிடிகிட்டி,கிரிகிட்டி என வெவ்வேறுவிதமாக இந்த இசைக்கருவி அழைக்கப்பட்டுள்ளது[2].
அமைப்பு
இது இரு கருவிகள் இணைந்த இசைக்கருவி. அடியில் குறுகி, முகம் படர்ந்த இக்கருவிகள் இரண்டின் நடுப்புறமும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கும்.
[3]
பொய்க்கால் ஆட்டம், பூம்பூம் மாட்டுக்காரர்கள் உறுமியிசை, மாட்டுகலியாணக் கூத்து போன்றவற்றில் இக் கருவி இசைக்கப்படுகிறது.
சுப்பிரமணியப் பிள்ளை (1787 - 1846), சண்முகம் பிள்ளை (1835 - 1897), ராமையா பிள்ளை (1876 - 1955) எனும் தலைமுறைக் குடும்பக்
கலைஞர்கள் குறிப்பிடத்தக்கோர். இவர்களுக்குப் பிறகு வந்த முத்துவீர் பிள்ளை, கோவிந்தராஜ பிள்ளை என்போருக்கு கிடிகிட்டி வாசிக்கத் தெரியும்.
எனினும், தவிலிசைக் கலைஞர்களாக இசைத் துறையில் இருக்கிறார்கள்.
கீவளூர் சுப்பராய பிள்ளை, பந்தணைநல்லூர் கோவிந்தபிள்ளை , தில்லையாடி ஸ்ரீநிவாச பிள்ளை ஆகியோர் வல்லுனர்களாக விளங்கியுள்ளனர்
படம்
தாரை
200 கி.மு. சிற்பங்கள் பஜே குகைகள், மகாராஷ்டிரா, இந்தியா தபலா மற்றும் நிகழ்ச்சி மற்றொரு நடன விளையாடி ஒரு பெண்
காட்டும்.
கைம்முரசு இணை 2 பாகங்களால் ஆனது. இடது கையால் வாசிக்கப்படுவது பயான் என்றும் வலது கையால் வாசிக்கப்படுவது தயான்
என்றும் அழைக்கப்படும். பயான் மண்ணாலோ செம்பாலோ ஆக்கப்படும். தயான் மரத்தினால் ஆக்கப்பட்டு இருக்கும்.
இரண்டினதும் மேற்பாகம் தோலினால் மூடப்பட்டிருக்கும்.
வாசிக்கும் முறை
கைம்முரசு இணை வாசிப்பதில் வெவ்வேறு பாணிகள் உண்டு. இப்பாணிகள் Pur Va Baj, Dilli Baj, Ajrara Baj போன்றன. தற்போது
தென்னிந்தியாவில் பக்திப்பாடல், மெல்லிசைப்பாடல், பஜனைப்பாடல்களுக்கும் கைம்முரசு இணை பக்கவாத்தியமாக
வாசிக்கப்படுகிறது
படம்
கொம்பு
கொம்பு எனப்படுவது ஒரு தூம்பு வகை தமிழர் இசைக்கருவி ஆகும். இது ஒரு ஊது கருவி. நாட்டுப்புற இசையிலும் கோயில்
இசையிலும் கொம்பு இசைக்கருவி பயன்படுகிறது.
கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும்
செய்யப்படுகிறது.[1] தற்போது வெண்கலம், பித்தளை போன்ற உலோகங்களில் கொம்பு செய்யப்படுகிறது. பித்தளையால் செயபட்ட
கொம்பைவிட வெண்கல வார்பினால் செய்யப்பட்ட கொம்பில் ஒலி அதிர்வு கூடுதலாக இருக்கும். இரண்டு பாகங்களை பொருத்தி
வாசிக்கப்படும் கொம்பு ஆங்கில எழுத்தான S வடிவத்தில் வைத்து வாசிக்க முடியும். அதே போல அதை மேல் நோக்கி திருப்பி
அரைவட்ட வடிவிலும் வாசிக்க முடியும்.[2]
கொம்பு இசைக் கருவி சுமார் நான்கு முதல் ஆறு அடிவரை இருக்கும். இதை இசைக்கும் கலைஞர்கள் தங்கள் முழு பலத்தையும்
பயன்படுத்தி அடிவயிற்றில் இருந்து ஊதுவதன் மூலம் யானை பிளிறுவது போன்ற ஓசை கொம்பில் உருவாகிறது. அக்காலத்தில்
மன்னர் வெளியே வந்தாலும், போரில் வெற்றி பெற்றாலும் கொம்பு ஊதப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான
கொம்பு தற்போது சில கோயில் விழாக்களில் மட்டுமே வாசிக்கப்படுகிறது. இந்தக் கருவியை வாசிக்கும் கலைஞர்களின்
எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது
படம்
ஷெனாய்
ஷெனாய் அல்லது செனாய் என்பது நாகசுரம் போன்ற குழல்வகை காற்றிசைக் கருவி. வட இந்தியாவில் திருமணம் போன்ற
நன்னாட்களிலும் ஊர்வலங்களிலும் வாசிக்கப்படும் இசைக்கருவி. குழல் போன்ற இக்கருவி, வாய் வைத்து ஊதும் மேற்புறத்தில்
இருந்து கீழாக செல்லும் பொழுது குழாய் விரிவாகிக்கொண்டே போவது. இதில் ஆறு முதல் ஒன்பது துளைகள் இருக்கும். இதில்
வாய் வைத்து ஊதும் பகுதியில் இரண்டு இரட்டைச் சீவாளிகள் (நான்கு) இருக்கும்.
உசுத்தாது பிசுமில்லா கான் புகழ்பெற்ற செனாய்க் கலைஞர். ஓரளவுக்குப் பரவலாக அறியப்பட்ட பிற கலைஞர்கள்: அகமதியா,
ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஜாஸ் இசைக் கலைஞர் யூசஃவ் லத்தீஃவ். ரோலிங்கு ஸ்டோன் (Rolling Stone) என்னும்
இசைக்குழுவில் டேவ் மேசன் என்பவர் 1968 இல் ஸ்ட்ரீட் ஃவைட்டிங் மேன் (Street Fighting Man) என்னும் பாட்டில் செனாய்
வாசித்தார்.08:26 PM
படம்
சிலம்பு
சிலம்பு என்பது சங்ககால தென்னிந்திய மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும். கண்ணகியின் கால்களில்
அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார். இந்நூல் தமிழ்த்
தாயின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் குறிப்பதாகவும் கூறக்காணலாம்.
இது ஒரு இந்திய பாரம்பரிய தாள இசைக் கருவி ஆகும். இது, தமிழ்நாட்டில், தோன்றியதாக
கருதப்படுகிறது. இது, முறையே தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு
பகுதிகளில் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. டமாரம் மற்றும் இடக்கை போன்ற தாள இசைக் கருவிகள்
உடுக்கையை ஒத்ததாக உள்ளது. ஆனால் அளவில் வேறுபடுகிறது.
பம்பை (இசைக்கருவி)
சங்கு என்பது ஒரு காற்று இசைக் கருவி. தமிழர் மற்றும் இந்திய இசையில், பண்பாட்டிலும், கோயில் வழிபாட்டின் போதும்
பயன்படுகிறது. இந்து சமயம் , வைணவ கடவுளான விஷ்ணுவின் சின்னமாக சித்தரிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டுச் சிவன் கோயில்களில் சுவாமி வழிபாட்டில் சேகண்டியுடன், சங்கொலியும்
இசைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் சென்ற இடங்களிலெல்லாம் சங்கநாதம் முழங்கியதாக பெரியபுராணத்தில் குறிப்புகள்
உள்ளன. சிவனடியார்கள் இந்த இசைக்கருவியை பஞ்ச வாத்தியம் என்றும் கைலாய வாத்தியம் என்றும் அழைக்கின்றனர்
படம்
கைம்முரசு இணை
கைம்முரசு இணை 2 பாகங்களால் ஆனது. இடது கையால் வாசிக்கப்படுவது பயான் என்றும் வலது கையால் வாசிக்கப்படுவது
தயான் என்றும் அழைக்கப்படும். பயான் மண்ணாலோ செம்பாலோ ஆக்கப்படும். தயான் மரத்தினால் ஆக்கப்பட்டு இருக்கும்.
இரண்டினதும் மேற்பாகம் தோலினால் மூடப்பட்டிருக்கும்.
உருளை வடிவான மரத்துண்டுகள் கைம்முரசு இணையில் பொருத்தப்பட்டிருக்கும். இத்துண்டுகளை மேலேயும் கீழேயும்
நகர்த்துவதன் மூலம் சுருதியைக் கூட்டிக் குறைக்கலாம். தபேலா 1 அடி முதல் 15 அங்குலம் வரை நீளம் உள்ளது. பயான் 1
அங்குலம் அல்லது 2 அங்குலம் தயனை விடக் குறைவானது ஆகும். மிருதங்கத்தைப் போன்று மாவும், தண்ணீரும் கலந்த
பாயாவில் பூசப்படும். இப்பச்சை நிரந்தரமாகப் பொருத்தப்பட்டிருக்கும். [[|thumb| ஹார்மோனியம், தப்லா வாசித்தல்]]
கைம்முரசு இணை வாசிப்பதில் வெவ்வேறு பாணிகள் உண்டு. இப்பாணிகள் Pur Va Baj, Dilli Baj, Ajrara Baj போன்றன. தற்போது
தென்னிந்தியாவில் பக்திப்பாடல், மெல்லிசைப்பாடல், பஜனைப்பாடல்களுக்கும் கைம்முரசு இணை பக்கவாத்தியமாக
வாசிக்கப்படுகிறது.
படம்
தாளம் (இசைக்கருவி)
படம்
முரசு
தியாக முரசு
இது பொருள்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புபவர்கள், வறியவர்களை வரவேற்க
அமைக்கப்பட்ட முரசு இது.
நியாய முரசு
நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்ட
முரசு இது. (மனுநீதிச் சோழன் அரண்மனை முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி
இது போன்றது)
உறுமி மேளம்