Professional Documents
Culture Documents
திருக்குறள்
திருக்குறள்
அன்புடைமை
இல்வாழ்வார்க்கு அமைய வேண்டிய இன்றியமையாத குணம் அன்பு. இது அகத்தே உணரப்படும்
மென்மையான உணர்வு; இதற்குப் புறவடிவம் இல்லை. இவ்வதிகாரம் தொடக்கத்துத் தொடர்புடையார்
அன்பைப் பேசுகிறது. அதாவது இல்லத்திலுள்ளோரிடம் அன்பு செலுத்துவது பற்றியும் அன்பு
காட்டாவிட்டால் உண்டாகும் குற்றங்கள் பற்றியும் கூறுகிறது.முதற்குறடபா அன்பின் வெளிப்பாடு
பற்றிக் கூறுகின்றது. இரண்டு முதல் ஆறு வரையுள்ள குறட்பாக்கள் அன்பின் இயல்பையும்
சிறப்பையும் கூறுவன. அன்பின்மையின் கொடுமையையும் இழிவையும் கடைசி நான்கு பாக்கள்
குறிக்கின்றன. அருள் பிறத்தற்கும் அன்பே காரணமாகும் என்பதையும் சுட்டிச் செல்கிறது.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்