You are on page 1of 34

கோயம்புத்தூர்

https://ta.wikipedia.org/s/28s
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search
இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி
அறிய  கோயம்புத்தூர் மாவட்டம்  கட்டுரையைப் பார்க்க.

கோயம்புத்தூர்
கோவை

பெருநகர மாநகராட்சி [1]


மேலே இருந்து கடிகார திசையில்: பேரூர் பட்டீசுவரர்
கோயில், சிறுவாணி நீர்வழ்ச்சி, 
ீ சிங்காநல்லூர்
குளம், அவிநாசி சாலை மற்றும் பி. எஸ். ஜி
தொழில்நுட்பம்
கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.

ஆள்கூறுகள்:  11°1′6″N 76°58′21″E ஆள்கூறுகள்:  11°1′6

″N 76°58′21″E

மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்

பகுதி கொங்கு நாடு

அரசு
 • வகை மாநகராட்சி

 • Body கோயம்புத்தூர்
மாநகராட்சி
 • மக்களவை பி. ஆர். நடராஜன்
உறுப்பினர்
 • சட்டமன்ற பி. ஆர். ஜி.
அருண்குமார் (கோயம்புத்
உறுப்பினர்
தூர் வடக்கு)
அம்மன் கே.
அர்ஜுணன் (கோயம்புத்தூ
ர் தெற்கு)

 • மாநகர முதல்வர் காலியிடம்

 • மாவட்ட ஆட்சியர் திரு கே.ராஜாமணி, இ.


ஆ. ப.

பரப்பளவு

 • பெருநகர 246.75
மாநகராட்சி [1]

 • Metro 642.12
பரப்பளவு தரவரிசை 2

ஏற்றம் 411

மக்கள்தொகை (2011)

 • பெருநகர 10,50,721
மாநகராட்சி [1]

 • பெருநகர் 21,36,916[2]
 • பெருநகர தரம் 16

இனங்கள் தமிழர்

மொழிகள்
 • அலுவல்மொழி தமிழ் மொழி

நேர வலயம் இசீநே (ஒசநே+5:30)

அஞ்சல் குறியீடு 641XXX

தொலைபேசி குறியீடு +91-422


வாகனப் பதிவு TN 37 (தெற்கு), TN 38
(வடக்கு), TN 66 (மத்திய),
TN 99 (மேற்கு)

சென்னையிலிருந்து  532 கி.மீ (330 மைல்)

தொலைவு

திருச்சியிலிருந்து தொ 217 கி.மீ (135 மைல்)


லைவு

மதுரையிலிருந்து தொ 237 கி.மீ (148 மைல்)

லைவு

இணையதளம் www.ccmc.gov.in

கோயம்புத்தூர் (Coimbatore) தென்னிந்திய மாநிலமான, தமிழ்நாட்டில் சென்
னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாகும். இதே பெயரைக்
கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது தொழில் வளர்ச்சியிலும்
கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள
நகரமாகும். இதை சுருக்கமாக கோவை (Kovai) என்று அழைக்கப்படுகிறது.
தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல்
தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அவிநாசிலிங்கம் நிகர்நிலைப்
பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களும் கோவை மாநகரை
மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தொன்மையான கொங்கு
நாடு பகுதியைச் சேர்ந்த இந்நகரம், இங்குள்ள ஆலைகளின்
எண்ணிக்கையால் தென்னிந்திய மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நகரத்திலும், புறநகர்ப்பகுதிகளும் 2.1 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

பொருளடக்கம்

 1 பெயர்க்காரணம்
 2 வரலாறு
 3 பொது விபரங்கள்
o 3.1 எல்லைகள்
o 3.2 நாடாளுமன்ற தொகுதிகள்
 4 புவியியல்
o 4.1 ஏரிகளும் குளங்களும்
o 4.2 பூங்காக்கள்
 5 வானிலை
 6 மக்கள்தொகை பரம்பல்
 7 நிர்வாகம்
o 7.1 சட்டம் ஒழுங்கு
 8 அரசியல்
 9 போக்குவரத்து
o 9.1 வான்வழி
o 9.2 தொடர் வண்டி
o 9.3 சாலை
 10 பொருளாதாரம்
 11 கலாச்சாரம்
o 11.1 துவக்க காலத் தொழில் வளர்ச்சி
o 11.2 தொழில்துறை இன்று
o 11.3 துணித்துறை
o 11.4 தகவல் தொழில்நுட்பம்
o 11.5 கனரக தயாரிப்பு
o 11.6 தானி பாகங்கள்
o 11.7 ஈரமாவு அரவைப்பொறிகள்
o 11.8 நீரேற்றிகள் தயாரிப்பு
 12 கல்வி
o 12.1 பள்ளிகள்
o 12.2 கல்லூரிகள்
 13 விளையாட்டும் மனமகிழ்வும்
 14 முக்கிய இடங்கள்
o 14.1 கோவில்கள்
 15 அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
 16 மேற்கோள்கள்
 17 இவற்றையும் பார்க்கவும்
 18 வெளி இணைப்புகள்

பெயர்க்காரணம்
இப்பகுதி சங்க காலத்தில் கோசர் குலத்தவர்கள் தங்கி உருவாக்கியதால்,
கோசர்புத்தூர் -> கோசம்புத்தூர் -> கோயமுத்தூர் என பெயர் வந்ததிருக்கலாம்
என்று கருதப்படுகிறது.[3][4] கோவை, வடவள்ளிக்கு மேற்கே இருந்த 'கோனன்'
என்ற வேட்டுவர் தலைவனுக்கு இரண்டு மகள்கள் இருந்ததாகவும், ஒருவர்
பெயர் கோணி, இன்னொருவர் பெயர் முத்தா என்று இருந்ததாகவும்,
அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதியை 'கோணி முத்து ஊர் ->
கோணமுத்தூர் -> கோயமுத்தூர்' என மருவி இருக்கலாம். அவர்கள்
நிறுவியதே கோனியம்மன் கோவில்.[5] "கோவன்" எனும் இருளர் தலைவன்
இருந்ததாகவும், அவன் பெயரிலே உண்டான ஊரே கோவன்புத்தூர் [6] ->
கோனியம்மன் புத்தூர் -> கோணம்புத்தூர் -> கோயமுத்தூர் என மாறிருக்கலாம்
என செவி வழி செய்திகள் கூறுகின்றன.[7]

வரலாறு
"கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் மலையரில் கேசன் கோன் ஆன
தமிழ வேள்" என்று வருகிறது. பல வெள்ளாளர்கள் புது ஊர்களைத்
தோற்றிவித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் கோவன் என்ற பெயர்
கொண்டவராக இருந்தனர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட புத்தூர் தான்
கோவன் புத்தூர் என்பது, இப்பொழுது கோயன்புத்தூரென அழைக்கப்படும்
மாநகரம் ஆகும். சான்று தேவை
[ ]

9 ஆம் நூற்றாண்டின் இடையில் எழுந்த பிற்கால சோழர் ஆட்சி


கோயம்புத்தூரைத் தன்னாட்சியின் கீ ழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன்
கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர்.
இப்பகுதியைப் பழங்குடி மக்கள், குறிப்பாக கோசர்கள் ஆண்டு வந்தனர்.
கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூரென மருவியது.[8][9] கோவன்
என்பவன் இங்கு வசித்ததால் இதன் பெயரான கோவன் புதூர் என்பது மருவிக்
கோயம்புத்தூர் என்றானது.[10] கொங்கு மண்டலத்தின் முதன்மை நகரமாக
விளங்கியது கோயம்புத்தூர்.

கரும்பு வளர்ப்பு நிலையம்,கோயம்புத்தூர், 1927

உரோமர்களின் வணிகத்திற்கும் கோயம்புத்தூர் மையமாக இருந்ததாகத்


தெரிகிறது. 14 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தில்லி சுல்தான்களின் கீ ழான
மதுரையைச் சேர்ந்த இசுலாமியர் ஆட்சிப் புரிந்தனர்.[9] இவர்களது
ஆட்சி விசயநகரப் பேரரசினால் முடிவுக்கு வந்தது. அவர்களது
ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் ஆந்திர, கர்நாடக மக்கள் குடிபெயர்ந்தனர்.
1550 களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு
பேசும் நாயக்கர்கள், கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின்
ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர்.
1700 களில் மதுரை நாயக்கர்களுக்கும், மைசூர் மன்னர்களுக்குமிடையே
கோயம்புத்தூரில் சண்டைகள் நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த
கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீ ழ் வந்தது.

1760 களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார்.


அவர் பிரித்தானியருக்கு எதிராகச் செயல்பட்டார். ஆற்காடு
நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதைத்
தடுத்தார். இதனை அவர்தம் வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799 ஆம்
ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல
போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர்
முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில்
கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக்
கொண்டனர். 1801 ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன்
சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன்
பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804 ஆம் ஆண்டு
கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின்
தலைநகராக்கப்பட்டது. 1848 ஆம் ஆண்டு நகராட்சித் தகுதி வழங்கப்பட்டது.
பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல்
நகரவைத் தலைவரானார். அவரால் 1862 ஆம் ஆண்டு
நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான
கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.

1981 ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை


இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.

பொது விபரங்கள்
எல்லைகள்
கோவை மாவட்டத்தின் வடக்கில் கர்நாடக மாநிலமும்,
தெற்கில் கேரள மாநிலமும் எல்லைகளாக உள்ளன.
கிழக்கில் ஈரோடு மாவட்டமும், மேற்கில் நீலகிரி மாவட்டமும் உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையும், நீலமலையும் ஒரு மதில்போல்
இம்மாவட்டத்தை வளைத்துள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள காடுகளின் பரப்பு - 1,69,720 ஹெக்டேர்.


சாலைகளின் நீளம் - 7434.8 கி.மீ . பதிவு பெற்ற வாகனங்கள் 2,57,042, வங்கிகள்
328, காவல்நிலையங்கள் - 60, காவலர்கள் 5910, தந்தி அலுவலகங்கள் 260,
தந்தி அஞ்சலகங்கள் 172, பொதுத் தொலைபேசிகள் - 1134. கோவை
மாவட்டத்தின் தலைநகரம் கோயம்புத்தூர் ஆகும். இதன் பரப்பு 6623.97 ச.கி.மீ ,
மக்கள் தொகை 35,08.374 பேர். இதில் ஆண்கள் 17,97,189, பெண்கள் 17,11,185
பேர். எழுத்தறிவு உள்ளோர் 20,75,023 பேர், மக்கள் நெருக்கம் ச.கி.மீ . 473 பேர்.

நாடாளுமன்ற தொகுதிகள்

 கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி


 பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி

புவியியல்
நகர பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள சாலை

கோயம்புத்தூர் தமிழகத்தின் மேற்கு ஓரத்தில் கேரள மாநிலத்தை ஒட்டி


அமைந்துள்ளது. இதனைச் சுற்றி மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும்,
வடக்கில் நீலகிரி பல்லுயிர் வலயமும் பாதுகாக்கப்பட்டக் காடுகளும் உள்ளன.
கிழக்குப் பகுதி வறண்ட நிலமாக உள்ளது. மேற்கில் உள்ள பாலக்காட்டு
கணவாய் கேரளத்தின் வாயிலாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையினை
அடுத்து உள்ளதால் இம்மாவட்டத்தில் பல விலங்கு வகைகள்
காணக்கிடைக்கின்றன.

ஏரிகளும் குளங்களும்

நீருடன் வெள்ளலூர் அணைக்கட்டு

பல ஏரிகளும் குளங்களும் அந்நாட்களில் வெட்டப்பட்டிருக்கின்றன. கோவை


நகரில் ஒன்பது ஏரிகள் உள்ளன. சில: சிங்காநல்லூர் (குளம்) ஏரி, குறிச்சி
(குளம்) ஏரி, வாலாங்குளம் (குளம்) ஏரி, கிருஷ்ணாம்பதி (குளம்) ஏரி,
முத்தண்ணன் (குளம்) ஏரி, செல்வசிந்தாமணி (குளம்) ஏரி, பெரியகுளம் (இது
உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது). இந்த
நீர்நிலைகள் நொய்யல் ஆற்றிலிருந்து நீர் பெறுகின்றன.

பறவைகள், விலங்குகள், ஊர்வன, நிலநீர் வாழிகள், மீ ன்கள் எனப் பல்லுயிர்


ஓம்பலுக்கு நகரமைப்பின் ஆதாரமாக இந்த நீரிடங்கள் அமைகின்றன.
கோவையின் இந்த நீர்நிலைகள் 125 வகையான பறவைகளின் இருப்பிடமாக
உள்ளன. நாடோடிப் பறவைகள் மிகவும் கூடுதலாக ஆகத்து - அக்டோபர்
மாதங்களில் வருகின்றன. கூழைக்கடா, நீர்க்காகம், பாம்புத்தாரா, நீலவண்ண
தாழைக்கோழி, நாமக்கோழி முதலிய பறவைகளை இந்த ஏரிகளில்
காணலாம்.

தவிர, காட்டு யானைகள்,
காட்டுப் பன்றிகள், சிறுத்தைகள், புலிகள், எருமைகள்,
பலவகை மான்கள் போன்ற விலங்குகளைக் காணலாம். சுற்றியுள்ள
வனப்பகுதிகளில் தேக்கு, சந்தனமரம், ரோசுவுட் மரம், மூங்கில்கள் முதலியன
வளர்கின்றன.

பூங்காக்கள்
நகரில் பல பூங்காக்கள் உள்ளன. வ. உ. சி. பூங்கா இவற்றில் முதன்மையான
ஒன்றாகும். குறிப்பிடத்தக்க பிற பூங்காக்கள்: தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழகத் தாவரவியல் பூங்கா, பந்தய சாலை பூங்கா, பாரதி பூங்கா,
காந்தி பூங்கா, இராமாயணப் பூங்கா, விவேகானந்தர் பூங்கா ஆகியவைகள்
ஆகும்.

வானிலை

தட்பவெப்பநிலை
வரைபடம்
கோயம்புத்தூர்


ப ம ம ஜ ச ட
ச ஏ ூஆ அந
ொ ேூ ெ ி

 
                       

      5                
3 15 12
14 12 19 76 38 57 42 56 50
3 3
                       
3
30 32 35 34 31 30 31 32 29
5 31 29
18 19 21 23 22 22 22 22 19
2 22 21
3

வெப்பநிலை (°C)

மொத்த மழை/பனி பொழிவு (மிமீ )

விரிவாக்கு
Imperial conversion
கோயம்புத்தூரின் வானிலை மிகவும் புகழ் பெற்றது. உடலுக்கு இதமான,
குளிர்ச்சியான, பிற தென்னிந்திய நகரங்களைப் போன்று கூடுதல்
வெப்பமில்லாத வானிலையாகும். மேற்குத் தொடர்ச்சி
மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம் கடல்மட்டத்திற்கு 398
மீ ட்டர் உயரத்தில் உள்ளது. வேனிற்காலத்திலும்,
குளிர்காலத்திலும் வெப்பநிலை 35 °C முதல் 18°வரை உள்ளது.[11] மிகக்
கூடுதலாகப் பதியப்பட்ட வெப்பநிலை 41 °C மற்றும் மிகக்குறைந்த அளவு
வெப்பம் 12 °C.[12]

பாலக்காட்டுக் கணவாயின் பயனாக மாவட்டத்தின்


பெரும்பகுதி சூன் முதல் ஆகத்து வரை தென்மேற்குப் பருவ
மழையைப் பெறுகிறது. சற்றே
வெப்பமான செப்டம்பரை அடுத்து அக்டோபரில் வடகிழக்குப்
பருவமழை துவங்குகிறது. இதனால் அக்டோபர், நவம்பர் மாதங்களில்
இம்மாவட்டம் மழை பெறுகிறது. ஆண்டுக்கு ஏறத்தாழ 700 மி.மீ மழை
பெறுகிறது.[11] நகரின் ஆண்டுமுழுவதற்குமான நீர்த்தேவைகளை எதிர்கொள்ள
இந்த மழையளவு போதுமானதாக இல்லாதிருப்பினும், சிறுவாணி,
அத்திக்கடவு போன்ற குடிநீர்த் திட்டங்கள் நகரின் குடிநீத் தேவைகளைப்
பூர்த்தி செய்கின்றன.

பெரும்பாலும் இம்மாவட்டத்தின் பெரும்பகுதி கரிசல்


மண்ணாக இருப்பதால் பருத்தி விளைச்சலுக்கு மிகவும் ஏற்றதாக
விளங்குகிறது. கோவை 1900 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 6.0
கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் நிலநடுக்க வகைப்படுத்தலில் III/IV
வகுப்பில் உள்ளது.[13] கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டியில் சலீம் அலி
பறவையியல் மற்றும் இயற்கையியல் மையம் அமைந்துள்ளது.

மக்கள்தொகை பரம்பல்
மக்கள்தொகை வளர்ச்சி

ஆண்டு ம.தொ. %±

1871 35,310 —    

1881 38,967 +10.4%

1891 46,383 +19.0%

1901 53,080 +14.4%

1911 47,000 −11.5%

1921 68,000 +44.7%


1931 95,000 +39.7%

1941 1,30,348 +37.2%

1951 1,98,000 +51.9%

1961 2,86,000 +44.4%

1971 3,56,000 +24.5%

1981 7,04,000 +97.8%

1991 8,16,321 +16.0%

2001 9,30,882 +14.0%

2011 10,50,721 +12.9%

ஆதாரங்கள்:

 1871–1901:[14]
 1911–2001:[15]
 1981: சிங்கநல்லூர் நகராட்சி
இணைக்கப்படுவதால், மக்கள் தொகை
உயர்வாகிறது.
 2001:[16]

மதவாரியான கணக்கீ டு[17]


மதம் சதவதம்(%)

இந்துக்கள்   83.31%

முஸ்லிம்கள்   8.63%

கிறிஸ்தவர்கள்   7.53%

சைனர்கள்   0.28%

சீக்கியர்கள்   0.05%

பௌத்தர்கள்   0.02%
மற்றவை 0.01%
சமயமில்லாத
  0.17%
வர்கள்

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,


72 மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களையும், 282,839 குடும்பங்களையும்
கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 1,050,721 ஆகும். அதில் 526,163
ஆண்களும், 524,558 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.3%
மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 997 பெண்கள் வதம்
ீ உள்ளனர். 6
வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 102069 ஆகவுள்ளது.
குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண்
குழந்தைகள் வதம்
ீ உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல்
பழங்குடியினரும் 107,949 முறையே மற்றும் 683 ஆகவுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி,


கோவையில் இந்துக்கள் 83.31%, முஸ்லிம்கள் 8.63%, கிறிஸ்தவர்கள் 7.53%, சீ
க்கியர்கள் 0.05%, பௌத்தர்கள் 0.02%, சைனர்கள் 0.28%, 0.01% பிற மதங்களைப்
பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.17% பேர்களும் உள்ளனர்.[18]

2011 இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின், மதிப்பீடுகளின்படி


மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 105,0721 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின்
மக்கள்தொகை 2,136,916 ஆகவும் உள்ளது.

நிர்வாகம்

திவான்பகதூர் சாலை (டிபி ரோட்), ஆர் எஸ் புரம், கோவை

கோவை ஓர் மாநகராட்சியும், மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.


மாநகராட்சிக்கு மேயர் எனப்படும் மாநகரத்தந்தை தலைமை ஏற்கிறார்.
இவருக்குத் துணையாக மாநகர்மன்ற உறுப்பினர்களும், துணை
மாநகரத்தந்தையும் உள்ளனர். இவர்கள் மக்களால்
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தவிர அரசுப்பணி சேவையைச் சேர்ந்த
மாநகராட்சி ஆணையர் வழக்கமான ஆட்சிப்பணியை மாநகராட்சிமன்ற
அவையின் வழிகாட்டுதலின்படி நடத்துகிறார். மாவட்ட நிர்வாகத்தை மாவட்ட
ஆட்சியர் ஏற்கிறார். மாவட்ட நீதிமன்றம் கோயம்புத்தூரின் நீதி நிருவாகத்தை
மேற்பார்வையிடுகிறது. மாநிலத்திலேயே மிகக் கூடுதலான வருவாயை
ஈட்டிக் கொடுத்தாலும் நகரத்தின் கட்டுமானத் தேவைகளுக்கான நிதி மாநில
அரசிடமிருந்து போதுமான அளவு கிடைப்பதில்லை என்ற குறை உள்ளது.

சட்டம் ஒழுங்கு
அமைதியான தொழில் வணிக நகரான கோவையில் 1984 ஆம்
ஆண்டு இந்திரா காந்தி படுகொலையை அடுத்து பெருமளவு
கடையுடைப்புகளும் கொள்ளைகளும் நிகழ்ந்தன. ஒற்றுமையாக
வாழ்ந்த இந்துக்களுக்கும், இசுலாமியருக்கும் இடையே 1980 களில் புகையத்
தொடங்கிய பகை 1990 களில் கோயம்புத்தூரின் மேற்குப்பகுதியில் பெரும்
கலவரமாக வெடித்தது. 1998 ஆம் ஆண்டு
நடந்த குண்டுவெடிப்புகள் இப்பகையை மேலும் வளர்த்தன.[19] ஆயினும்
தமிழக காவல்துறையின் தீவிர கண்காணிப்பை அடுத்து, தற்போது குற்றங்கள்
வெகுவாகக் குறைந்துள்ளன.

அரசியல்
நகரத்தில் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன: கோயம்புத்தூர் கிழக்கு,
கோயம்புத்தூர் மேற்கு, சிங்காநல்லூர், பேரூர் (தொகுதி சீரமைப்பின்படி பேரூர்
தொகுதி தற்போது நீக்கப்பட்டு தற்போது தொண்டாமுத்தூர் தொகுதியாக
மாறிவிட்டது), கவுண்டன்பாளையம்.

நகரத்தின் வடக்கே 20% பகுதி நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது.


கோவை மேற்கு, கோவை கிழக்கு சட்டமன்றத் தொகுதிகள்
உள்ளடக்கியது கோவை நாடாளுமன்றத் தொகுதி ஆகும். 10%
நகரப்பகுதி பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியிலும் உள்ளது.[20]

போக்குவரத்து
வான்வழி

கோவை பன்னாட்டு வானூர்தி நிலையம்

கோயம்புத்தூர் நகரத்திற்கு இரு வானூர்தி நிலையங்கள் உள்ளன:


நகரிலிருந்து 11 கி.மீ . தொலைவில் பீளமேட்டில் உள்ள கோவை பன்னாட்டு
வானூர்தி நிலையம் மற்றும் 15 கி.மீ . தொலைவில் உள்ள இந்திய
வான்படையின் சூலூர் வான்தளம். கோவை பன்னாட்டு வானூர்தி
நிலையத்திலிருந்து இந்தியாவின் முதன்மையான நகரங்களுக்கு உள்நாட்டு
சேவைகளும் சார்ஜா, சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு வெளிநாட்டுச்
சேவைகளும் இயக்கப்படுகின்றன.
கல்லூரிகள் நிறைந்த அவினாசி சாலை

கோவை வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்பணிகள்


நிறைவடையும் நிலையில் உள்ளது. இதன் நீளம் 9,760 அடிகள் (2,970 m) 747 SP,
A 330, 747-300B, 747-300 ER, 747-400 மற்றும் 747-200 போன்ற ""வயிறு அகல"
பெரிய ஜெட் இரக விமானங்களை இயக்க வசதி அளிக்கும்.[21]

அவினாசி சாலை - பூசாகோ தொழில்நுட்ப கல்லூரி அருகே

தொடர் வண்டி

கோயம்புத்தூர் தொடர்வண்டி நிலையத்தின் முன்புறத் தோற்றம்

கோயம்புத்தூருக்குத் தொடர்வண்டி சேவை 1872 ஆம் ஆண்டில் தொடங்கியது.


அப்போது போத்தனூர் – சென்னை இருப்புப் பாதை போடப்பட்டது.
அகலப்பாதை தொடர்வண்டிகள் கோவையைத் தமிழ்நாட்டின் பல நகரங்கள்
மற்றும் இந்தியாவின் முதன்மை நகரங்களுடன் இணைக்கிறது.
போத்தனூருக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையே இருந்த மீ ட்டர்பாதை
இருப்புப் பாதை மே 2009 முதல் மூடப்பட்டு பாட்டை
மாற்றப்படுகிறது. தென்னக இரயில்வேயின் மிகக் கூடுதலான வருவாய்
ஈட்டும் தொடர்வண்டி நிலையமாகக் கோயம்புத்தூர் சந்திப்பு உள்ளது. சேலம்
கோட்டத்தின் வருவாயில் 42.17% இந்த நிலையம் பங்களிக்கிறது. கோவை
வடக்கு சந்திப்பு மற்றும் இருகூர் பிற முக்கிய தொடர்வண்டிச்
சந்திப்புகளாகும்.

சாலை

கோவையின் முதன்மை சாலையொன்று

நகரில் ஆறு பிரதான சாலைகளும், மூன்று தேசிய நெடுஞ்சாலைகளும்


உள்ளன:

 NH-47 (சேலம் – கன்னியாகுமரி),
 NH-67 (குண்டுலுபேட்டை – நாகப்பட்டிணம்)
மற்றும்
 NH 209 (பெங்களூரு – திண்டுக்கல்) லார்சன் &
டூப்ரோ நிறுவனத்தால் 1998 ஆம் ஆண்டு
கட்டப்பட்ட புதிய புறவழிச்சாலை நகரில்
போக்குவரத்தை சீர்செய்யப் பெரிதும்
உதவியுள்ளது.

கோவையில் உள்ள முதன்மை பேருந்து நிறுத்தங்கள்:

 காந்திபுரம் பேருந்து நிலையம் :(மேட்டூர்


அணை, ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூ
ர், நாமக்கல், காமநாயக்கன்
பாளையம்,காங்கேயம்,தாராபுரம், மேட்டுப்பாளைய
ம், ஊட்டி, சேலம், பெங்களூரு, சென்னை, திருவண்
ணாமலை, ஆரணி மற்றும் பிற தொலைதூர
இடங்கள் செல்லும் பேருந்துகள்)
 சிங்காநல்லூர் பேருந்து நிலையம் :
( மதுரை, இராஜபாளையம், கரூர், திருச்சிராப்பள்ளி, 
தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பிற அண்மைய
ஊர்கள் செல்லும் பேருந்துகள்)
 காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் :(உள்ளூர்ப்
பேருந்துகள்)
 திருவள்ளுவர் பேருந்து நிலையம்: காந்திபுரம்
(மாநிலப் போக்குவரத்துக் கழகப்
பேருந்துகள், கர்நாடக மாநில போக்குவரத்துக்
கழகப் பேருந்துகள் , கேரள மாநில போக்குவரத்துக்
கழகப் பேருந்துகள் மற்றும் பாண்டிச்சேரி மாநிலப்
பேருந்துகள்)
 உக்கடம் பேருந்து நிலையம்:
( பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழ
னி, திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் பிற
அண்மை இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள்)
 ஓம்னி பேருந்து நிலையம்: சத்தியமங்கலம் சாலை,
காந்திபுரம்
(பெங்களூரு, சென்னை, சேலம் தமிழகம் மற்றும் 
கேரளாவின் ஓரிரவில் பயணிக்கத்தக்க
ஊர்களுக்குச் செல்லும் குளிர்வசதி/ஆடம்பர
பேருந்துகள்)
 மேட்டுப்பாளையம் சாலை
பேருந்துநிலையம்: மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்
னூர் ஆகிய ஊர்களுக்குச் செல்லும்
பேருந்துகளுக்கான நிலையம் இதுவாகும். இதுவே
கடைசியாகக் கட்டப்பட்ட பேருந்து நிலையமாகும்.

நகரில் மக்கள்தொகைக்கும் வாகனத்தொகைக்கும் உள்ள வதம்


ீ மிகக்
கூடுதலானது. 1921 ஆம் ஆண்டு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நகரின்
பெரும்பான்மையான இடங்களுக்கும் புறநகரில் உள்ள கிராமங்களுக்கும்
இச்சேவைகள் மிகுந்த பயனளிக்கின்றன. மாநிலப் போக்குவரத்தின் கோவை
கோட்டத்தின் உள்ளூர்ப் பேருந்துகள் 500 பேருந்துகளைக் கொண்டு 119
வழித்தடங்களில் சேவை வழங்குகின்றன.[22] 800 நகரப்பேருந்துகள் 228
வழித்தடங்களில் சேவை புரிகின்றன.[23]
கோவையில் மூன்றுசக்கர தானிக்கள்.

கோவை நகரில் மூன்று சக்கர தானிக்கள் சேவை புரிகின்றன. புதிதாக


இயக்கப்படும் விளி வாடகையுந்துகள் இதனால் பரவலாக
விரும்பப்படுகின்றன.

சத்தியமங்கலம், திருச்சிராப்பள்ளி, மேட்டுப்பாளையம் சாலைகளை


இணைக்கும் அரைவட்ட சாலை அமைக்கப்படும் என்றும், வண்டிகளுக்காகப்
பல்லடுக்கு நிறுத்தும் வசதியைக் காந்திபுரம், டவுன் ஹால் அடங்களான
மூன்று இடங்களில் 80 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்
என்றும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வெள்ளளூரில் 125 கோடி
ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுமென
முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் கோவை மாநகராட்சியில்
மொத்தம் 12 பேருந்து நிலையங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.[24]

பொருளாதாரம்
நகரின் முதன்மையான தொழில்துறைகள் பொறியியலும், நெசவும் ஆகும்.
தமிழ்நாட்டிலேயே மிகக் கூடுதலாக வருவாய் ஈட்டும் மாவட்டமாகக்
கோவை உள்ளது. சுற்றுப்புற பருத்தி வேளாண்மையை ஒட்டி இங்கு
அமைந்துள்ள நெசவாலைகளின் கூடுதலான எண்ணிக்கை
இதற்குத் தென்னிந்தியாவின்  மான்செஸ்டர் என்ற சுட்டுப்பெயரினைப்
பெற்றுத் தந்திருக்கிறது. இம்மாவட்டத்தில் பல பின்னலாடைத் தறிகளும்,
கோழிப்பண்ணைகளும் கூடுதலாக உள்ளன. பெரும்பாலான
தொழிற்சாலைகளைக் குடும்ப நிதி அல்லது சமூக ஒருங்கிணைப்பு
உதவியுடன் சிறு தொழில்முனைவோர் நடத்துகின்றனர். 1920 களில்
துவங்கிய தொழில் துறை, இந்திய விடுதலைக்குப் பின்னர் வளர்ச்சி கண்டு
அரசு அரவணைப்போ பெரும் வணிகக் குழாம்களின் வரவோ இன்றி
தன்னிறைவுடன் ஏற்றம் கண்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னணித்
தொழிலதிபர்களின் பட்டியலில் பெரும்பான்மையான முதலிடங்களை
கோவைத் தொழில்முனைவோர் பிடித்துள்ளனர். சான்று தேவை  தற்போது தகவல்
[ ]

தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிறநாட்டு உள்ளலுவலகப்


பணிகளை மேலாண்மையிடும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
கலாச்சாரம்
"தென்னிந்தியாவின் மான்செசுட்டர்" என்று பிரபலமாக அழைக்கப்படும்
கோயம்புத்தூர் நகரத்தின் கலாச்சாரம் இந்தியாவில் உள்ள மற்ற
நகரங்களிடமிருந்து வேறுபடுகின்றது. ஒரு காசுமோபாலிட்டன் நகரமாக
இருப்பதால், நகரத்தின் கலாச்சாரம் அதன் மாறுபட்ட மக்களை
பிரதிபலிக்கிறது. பொதுவாக ஒரு பாரம்பரிய நகரமாக கருதப்பட்டாலுங்கூட
தமிழ்நாட்டிலுள்ள மற்ற நகரங்களைவிட வேறுபட்டிருக்கிறது. பாரம்பரிய
இசை, நடனம் மற்றும் தமிழ்நாட்டின் எல்லா கலை வடிவங்களும் நகரத்தில்
மிகவும் பிரபலமாக உள்ளன. பண்டைய கோவில் கட்டிடக்கலையிலிருந்து
நவன
ீ உயர் கட்டிடக்கலை மற்றும் பாரம்பரிய இசை, நடனம், பாரம்பரிய
உணவிலிருந்து துரித உணவுகள், இரவில் தூங்கா நகரமாக உள்ளது பாேன்ற
ஒரு தனித்துவமான கலவையை இந்நகரத்தில் காணலாம். கோயம்புத்தூரும்
அதன் மக்களும் தொழில்முயற்சிக்காக புகழ் பெற்றுள்ளனர்.[25][26]

துவக்க காலத் தொழில் வளர்ச்சி

சர் ராபர்ட் ஸ்டேன்ஸ்

பிரித்தானியர் கோயம்புத்தூரை ஆண்டபோது இதனை மலபார்


கரையிலிருந்தத் துறைமுகங்களுடன் இணைத்தனர். பின்னர் பிரித்தானியர்
1862 ஆம் ஆண்டு தொடர்வண்டி இணைப்புகள்
ஏற்படுத்தியபோது போத்தனூர் வழியாகக் கொச்சிக்கு இருப்புப் பாதைப்
போடப்பட்டது. இது இங்கிலாந்திற்கு கச்சாப்பொருள்களைக் கொண்டுசெல்ல
அவர்களுக்கு உதவியது.

1888 ஆம் ஆண்டு, சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் இன்று ஸ்டேன்ஸ் மில் என்று


பரவலாக அறியப்படும் கோயம்புத்தூர் நூற்றல் மற்றும் நெய்தல்
ஆலையை நகரின் வடக்குப் பகுதியில் துவக்கினார். கூடவே ஓர் குளம்பி
சீராக்கப் பட்டறையையும் (coffee curing factory) திருச்சி சாலையில் நிறுவினார்.
இதுவே கோவையில் பெருமளவு நெசவாலைகள் வருவதற்கு
அடிக்கோளிட்டது. மேலும் பலர் தங்கள் நிறுவனங்களை நிறுவிட சர் ராபர்ட்
மிகவும் உதவி புரிந்தார்.[27] கோவைக்கு இவராற்றிய இந்தச் சேவைகளுக்காக
கைசர்-இ-இந்த் தங்கப்பதக்கத்தையும், பின்னர் 1920 ஆம் ஆண்டு 'சர்'
பட்டத்தையும் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டார். 1910 ஆம் ஆண்டு காள ீசுவரா
மில்லும், சோமசுந்தரா மில்லும் நிறுவப்பட்டன. பாப்பநாயக்கன்பாளையத்தில்
1911 ஆம் ஆண்டு இலட்சுமி மில் இயங்கத் தொடங்கியது.
1930 களில் பைக்காரா மின்னாக்கத் திட்டத்திலிருந்து குறைந்த கட்டணத்தில்
மின்சக்தி கிடைத்ததையொட்டி, மேலும் பல துணியாலைகள் நிறுவப்பட்டன.

1900 ஆம் ஆண்டு சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற இரயில்வே பொறியாளர்


தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வெரைட்டி ஹால் (தற்போது
டிலைட் திரையரங்கம்) என்னும் திரையரங்கத்தைக் கட்டினார்[28] அவரது மகன்
பால் வின்சென்ட் பேசும் திரைப்படங்களைத் தென்னிந்தியாவில் அறிமுகம்
செய்தார். 1922 ஆம் ஆண்டு நாராயணசாமி நாயுடு கரும்பு நசுக்கும் மற்றும்
பருத்தி சுத்தப்படுத்தும் பொறிகளை நிறுவினார். இரண்டு ஆண்டுகளுக்குப்
பின்னர் தண்டாயுதபாணி தொழிற்சாலையை நிறுவினார்.[29] அதே
காலகட்டத்தில் ஜி.டி.நாயுடு அவரது தன்னிகரில்லா பேருந்து சேவையைத்
துவக்கினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்னோடிக்கான
பெருமையும் அவருக்குடையது. 1931 ஆம் ஆண்டு பொள்ளாச்சி நாச்சிமுத்துக்
கவுண்டர் துவக்கிய பேருந்து சேவையும் பலதுறைகளில் விரிந்து இன்று
பலகோடி ரூபாய் மதிப்புள்ள குழுமமாக வளர்ந்துள்ளது. 1940 களில்
ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த டி. பாலசுந்தரம் நாயுடு செஃப்பீல்ட்
பல்கலைக்கழகத்தில் படித்து வந்து நெசவுத் தொழில்நுட்பக் கருவிகளைத்
தாமே வடிவமைத்துத் தயாரிக்கும் விதமாக டெக்ஸ்டூல் நிறுவனத்தைத்
துவக்கினார்.

கோவை 1930 களிலும் 1940 களிலும் திரைப்படத் தயாரிப்பிலும் முதன்மை


பெற்றிருந்தது; இங்கிருந்த சென்ட்ரல் ஸ்டூடியோஸ் மற்றும் பட்சிராஜா
ஸ்டூடியோஸ் அரங்குகளில் பல முன்னணி திரைக்கலைஞர்கள் தங்கள்
கலைவாழ்வைத் துவங்கியுள்ளனர்.

தொழில்துறை இன்று

கோவை அருகே உள்ள ஓர் காற்றாலை.

கோவையின் தொழில்வளர்ச்சிக்கு கோவை மாவட்ட சிறுதொழிலதிபர்கள்


சங்கம் (Coimbatore District Small Industries Association - CODISSIA) முக்கியப்
பங்காற்றி வருகிறது. இச்சங்கத்தின் தொழிற்கண்காட்சிக்கூடம் கொடிசியா
வளாகம் பல பன்னாட்டு வணிகக் கண்காட்சிகளை நடத்த வழிவகுத்துக்
கோவையின் சிறு தொழிலதிபர்களுக்குப் பன்னாட்டு வணிகம் நடத்த உதவி
புரிந்து வருகிறது. இதனை நாட்டின் தூண்கள் இல்லாத மிகப்பெரும்
காட்சிக்கூடமாக லிம்கா சாதனைகள் புத்தகம் குறிப்பிடுகிறது.[30]

துணித்துறை

கோவையில் சிறுதும் பெரிதுமாகப் பல துணி தயாரிப்பு ஆலைகள் உள்ளன.


இவற்றின் மேம்பாட்டினை வழிநடத்த மத்திய பருத்தி ஆய்வு மையம் மற்றும்
தென்னிந்திய துணித்துறை தொழில்முனைவோர் சங்க ஆய்வகம் (SITRA)
போன்றவை உள்ளன. அண்மை நகரான திருப்பூர் ஆண்டுக்கு ரூ.50,000
மில்லியன் மதிப்பளவு ஏற்றுமதியுடன் ஆசியாவிலேயே மிகப்பரந்த
பின்னலாடை ஏற்றுமதி மையமாகப் விளங்குகிறது.

தகவல் தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் மென்பொருள் ஏற்றுமதியில் சென்னைக்கு அடுத்தபடியாகக்


கோவை உள்ளது. கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா
ஒன்று கோவை மருத்துவக் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ளது.
கோவை வணிகச் செயலாக்க அயலாக்கமையமாகவும் வளர்ந்து வருகிறது.
உலகளவில் அயலாக்க நகரங்களில் 17 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. [31]

கனரக தயாரிப்பு

பூ.சா.கோ. தொழிலகங்கள், சக்தி குழுமம் ஆகியன கோவையின் தயாரிப்புத்


தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. தற்போது மூடப்பட்டுள்ள சௌத்
இந்தியா விசுகோசு வேலை வாய்ப்புகளைக் கூடுதலாக்குவதில் பங்கு
வகித்தது. லார்சன் டூப்ரோ நிறுவனத்திற்கு 300 ஏக்கர் பரப்பளவுள்ள வளாகம்
கோவையின் அடுத்துள்ள மலுமிச்சம்பட்டியில் உள்ளது. இங்கு அந்நிறுவனம்
2009 ஆம் ஆண்டு வார்ப்படம் தயாரிக்கும் அமைப்பை இயக்கத்திற்கு கொண்டு
வந்துள்ளது. இலட்சுமி மெசின் வொர்க்ஸ், பிரீமியர் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்
(PRICOL),எல்ஜி எக்யுப்மென்ட்ஸ், சாந்தி கியர்ஸ், ரூட்ஸ் ஆகியன இங்கு
இயங்கும் மேலும் சில தொழிலகங்கள்.

தானி பாகங்கள்

டெக்ஸ்டூல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசின் இராணுவத்திற்கு


துப்பாக்கிகளின் முன்வடிவை அளித்திருந்தது. அவர்கள் 1960 களில் முதல்
உள்நாட்டிலேயே வடிவமைத்த தானுந்தியை தயாரித்தாலும் அப்போது
நிலவிய அரசுக் கட்டுப்பாடுகளால் வெளிக்கொணர முடியாது போயிற்று. 1990
வரை பல முன்வரைவுகளை மேம்படுத்தினர். 1972 ஆம் ஆண்டு
இந்தியாவிலேயே முதன்முறையாக உள்நாட்டுத் தயாரிப்பாகத் தானுந்து
தீசல் இயந்திரத்தினை வடிவமைத்தனர். 1982 ஆம் ஆண்டு தங்களுக்கான
எண்ணிம கட்டுப்பாட்டு இயந்திரங்களையும், லேத்துகளையும் தாங்களே
தயாரித்துக் கொண்டனர். அவர்களிடமிருந்து பிரிந்த ஜெயம்
ஆட்டோமோடிவ்ஸ் இன்று மகிந்திரா, டாட்டா மோட்டார்ஸ், இந்துஸ்தான்
மோட்டார்ஸ் ஆகிய தானுந்து தொழிலகங்களுக்கு ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டுச் சேவைகளைக் கொடுத்து வருகிறது.

மாருதி சுசூக்கி மற்றும் டாட்டா மோட்டார்ஸ் கோவையிலிருந்தே அவர்களின்


தேவைகளில் 30% தானுந்து பாகங்களைப் பெறுகின்றன. நகரத்தில் பல நகை
ஏற்றுமதியில் ஈடுபடும் நகை தயாரிப்பாளர்களும் உள்ளனர். காற்றாலை மின்
உற்பத்தியில் பெயர்பெற்ற சுசுலான் நிறுவனம் இங்கு தனது வார்ப்பாலை
மற்றும் பட்டறையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. கூடவே,
காற்றாலைகளுக்கான பற்சக்கர மாற்றியைத் தயாரிக்கும் பெல்ஜிய நிறுவனம்
ஹான்சென் டிரான்ஸ்மிசன் ரூ.940 கோடி திட்டச் செலவில் தனது தயாரிப்பு
வசதியைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது.[32]

ஈரமாவு அரவைப்பொறிகள்

கோவை நகரில் 700 ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பாளர்கள்


மாதமொன்றிற்கு (மார்ச்,2005 படி) 75,000 பொறிகளைத் தயாரித்து
வருகின்றனர்.[33] 2006 ஆம் ஆண்டு கோவையிலும்
அடுத்துள்ள ஈரோட்டிலும் தயாராகும் அரவைப்பொறிகளுக்கு கோயம்புத்தூர்
ஈரரவைப்பொறி என்ற புவியியல் அடையாளம் வழங்கப்பட்டது.[34] இங்கு
அரவைப்பொறி தயாரிப்பாளர்களுக்கான பொது கட்டமைப்பும் உள்ளது.[35]

நீ ரேற்றிகள் தயாரிப்பு

இந்தியாவில் தயாரிக்கப்படும் 60 சதவத


ீ நீரேற்றிகள், கோவை பகுதியிலேயே
தயாரிக்கப்படுகின்றன.[36] நகரத்தில் ஏராளமான சிறுதொழில் முனைவோர்
முனைப்பில் நீரேற்றிகள் தயாரிக்கப்படுகின்றன. ஈரமாவு
அரவைப்பொறி தயாரிப்பில் கிட்டத்தட்ட முழுநிறை உரிமை கொண்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளைப் போலவே வேளாண்மை மாவட்டத்தில் முக்கிய
பங்கு வகிக்கிறது. பொது வணிகம் மாநிலத்தின் அனைத்துப்
பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் பலரை
கவர்கிறது. கோவை நகரின் முதன்மை நீரேற்றி தயாரிப்பாளர்கள் சிலர்: ஷார்ப்
தொழிலகங்கள், சி. ஆர். ஐ பம்ப்ஸ், டெக்ஸ்மோ தொழிலகங்கள், டெக்கன்
பம்ப்ஸ், கே. எஸ். பி பம்ப்ஸ்.

கல்வி
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் கோவையின் பங்கு முக்கியமானது. 1867
ஆம் ஆண்டு நடந்த முதல் தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி இறுதித்
தேர்வில்( SSLC) கோவை மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இங்குள்ள அரசு
கலைக்கல்லூரி மிகப் பழமையான (1875–76) கல்லூரிகளில் ஒன்றாகும்.
இன்று கோயம்புத்தூரில் 24 க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள், இரு
மருத்துவக் கல்லூரிகள், வான்படை நிர்வாகக் கல்லூரி, 75 க்கும் மேலான
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஆறு பல்கலைக்கழகங்கள் 41,000 க்கும்
கூடுதலான மாணவர்களைக் கொண்டியங்குகின்றன.

மிகப் பழமையான பள்ளிகளாகத் தென்னிந்தியத் திருச்சபை (C.S.I.) ஆண்கள்


உயர்நிலைப்பள்ளி (1831), ஸ்டேன்ஸ் உயர்நிலைப்பள்ளி (1862), புனித
பிரான்சிஸ் ஆங்கிலோ இந்தியப் பெண்கள் உயர்நிலைப்பள்ளி (1880), பீளமேடு
சர்வஜன உயர்நிலைப்பள்ளி (1910), சபர்பன் உயர்நிலைப்பள்ளி (1917)
ஆகியவை உள்ளன.

வேளாண் துறையில் நாட்டில் அமைந்த முதல் ஒருசில கல்விக்கூடங்களில்


கோவை வேளாண் கல்லூரி ஒன்று. அதன் வளர்ச்சி இன்று தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகமாகப் பரிணமித்துள்ளது. உடன் கரும்பு
(Sugarcane Breeding Institute) மற்றும் பருத்தி (Central Institute of Cotton Research)
ஆராய்ச்சி நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

பொறியியல் கல்வியிலும் 1945 ஆம் ஆண்டு ஜி. டி. நாயுடு முதல் பொறியியல்


கல்வி வழங்கும் ஹோப் கல்லூரியைத் துவக்கினார். இதுவே
பின்னாளில் அரசினர் தொழிற்நுட்ப கல்லூரியாக உருவெடுத்தது. 1950 களில்
நிறுவப்பட்ட பூசாகோ தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கோவை
தொழிற்நுட்பக் கழகம் (C.I.T) முன்னோடிகளாக அமைந்து இப்பகுதியின்
தொழில் வளர்ச்சிக்கும் தமிழக/இந்திய தொழில் முன்னேற்றத்திற்கும்
உறுதுணையாக உள்ளன. 1986 ஆம் ஆண்டு காருண்யா
பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது.

தி.சு.அவிநாசிலிங்கம் மற்றும் இராசம்மாள் தேவதாஸ் கூட்டணியில் மகளிர்


மேற்கல்விக்கு கல்லூரி நிறுவப்பட்டு இன்று நிகர்நிலைப் பல்கலைக்
கழகமாக வளர்ந்துள்ளது. மனையியல் பாடம் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகால
வெகுசில கல்லூரிகளில் இதுவும் ஒன்று.

1978 ஆம் ஆண்டு அரசினர் சட்டக் கல்லூரி நிறுவப்பட்டு, சுற்றுவட்டாரத்தின்


சட்டக்கல்வித் தேவைகளை நிறைவு செய்தது. மருத்துவக்கல்வி வழங்கக்
கோவை மருத்துவக்கல்லூரி 1966 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1987 ஆம்
ஆண்டு தனியார் துறையில் பூ.சா.கோ மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக்
கழகம் நிறுவப்பட்டது.

கோவையில் பல புகழ் பெற்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. அவற்றில் சில


பட்டியலிடப்பட்டுள்ளன:

பள்ளிகள்
 ஜி. ஆர். ஜி. பள்ளி
 எஸ். பி. ஒ. ஏ பள்ளி
 கார்மல் கார்டன் பள்ளி
 தியாகி என். ஜி. ராமசாமி நினைவு
மேல்நிலைப்பள்ளி
 அவிலா பள்ளி
 லிஸ்யூ மேனிலைப்பள்ளி
 பாரதி மேனிலைப்பள்ளி
 பாரதீய வித்தியா பவன் பள்ளி
 ஆஸ்ரம் மேனிலைப்பள்ளி
 சிறீ நாராயண மிஷன் மேனிலைப்பள்ளி
 சிந்தி வித்யாலயா பதின்ம மேல்நிலைப்பள்ளி
 வித்யா நிகேதன் பதின்ம மேனிலைப்பள்ளி.
 வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளி.
 பி. எஸ். ஜி. பப்ளிக் பள்ளி.
 விமானப்படை பள்ளி
 ஸ்டேன்ஸ் பள்ளி
 கேம்போர்டு பன்னாட்டுப் பள்ளி
 டிரினிட்டி பதின்ம மேனிலைப்பள்ளி
 தேசிய மாதிரிப் பள்ளி
 கதிரி ஆலை மேல்நிலைப்பள்ளி
 இராசலக்குமி உயர்நிலைப்பள்ளி
 தூய காணிக்கையன்னை மகளிர்
மேல்நிலைப்பள்ளி
 ஆர். கே. ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி
 சி. எஸ். ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
 புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி
 கௌமாரம் சுசீலா பன்னாட்டு உறைவிடப் பள்ளி

கல்லூரிகள்

 அண்ணா பல்கலைக்கழகம்
 கோவை தொழில்நுட்பக் கல்லூரி
 கோயம்புத்தூர் மெரைன் கல்லூரி
 கிருஷ்ணா கல்லூரி
 தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல்
தமிழ்க்கல்லூரி
 குமரகுரு பொறியியல் கல்லூரி
 சி. பி. எம். கல்லூரி
 கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை
மற்றும் அறிவியல் கல்லூரி
 ஸ்ரீ நாராயண குரு கல்லூரி
 அரசு கலை கல்லூரி
 கலைஞர் கருணாநிதி இன்ஸ்ட்டிடியூட் ஆஃப்
டெக்னாலஜி
 கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல்
கல்லூரி
 கே. எஸ். ஜீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அறிவியல் மற்றும்
வணிகவியல் கல்லூரி
 கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி /
கற்பகம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி /
கற்பகம் மருத்துவக்கல்லூரி
 பூ. சா. கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

விளையாட்டும் மனமகிழ்வும்

கரி தானுந்து விரைவுச்சாலையில் ஓர் தானுந்து ஓட்டப்போட்டி

தானுந்து விளையாட்டுக்கள் நகரத்தின் முதன்மை இடம்பெற்ற


விளையாட்டாக விளங்குகிறது. கோவையை இந்தியாவின் தானுந்து
விளையாட்டுப்போட்டித் தலைநகரம் என்றும் இந்திய
தானுந்துவிளையாட்டு புறக்கடை என்றும் விளிப்பர்.[37] கோவையின்
தொழிலதிபர்கள் சிலர், கரிவரதன் போன்றோர், தங்கள் தானுந்து
வடிவமைப்பை மாற்றுவதில் ஈடுபாடு கொண்டு பின்னர் தானுந்துப்
பந்தயங்களில் பங்கெடுத்தனர். அவர்களது ஆர்வத்தினால் கோவையை
நாட்டின் தானுந்துப் பந்தய மையமாக ஆக்கினர். நகரத்தில் ஃபார்முலா 3
பகுப்பைச் சேர்ந்த பந்தயச்சாலையும் மூன்று கோகார்ட் பந்தயச் சாலைகளும்
உள்ளன. பார்முலா பந்தயம், விசையுந்துப் பந்தயம், கார்ட்டு
பந்தயம் ஆகியவற்றிற்கு தேசிய சாதனைப் பந்தயங்கள், இங்குள்ள கரி
தானுந்து விரைவுச்சாலையில் நடைபெறுகின்றன.[38] நெடுஞ்சாலைப்
பந்தயங்களிலும், கோவை அணிகள் முதன்மை வகிக்கின்றன. ஃபார்முலா
ஒன்று பந்தயத்தில் 2005 ஆம் ஆண்டு பங்கெடுத்த கோவையின் நாராயண்
கார்த்திகேயன் இவ்விளையாட்டில் பங்கெடுத்த முதல் இந்தியர்.
தொன்மையான தானுந்துகளைச் சேகரிப்பதும் கோவை தொழிலதிபர்களின்
பொழுதுபோக்காகும்.[[cn}}

நேரு விளையாட்டரங்கம் கால்பந்து போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட போதும்


இங்கு தடகள விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன. தற்போது செயற்கை
தடங்களுடன் நடுவில் கொரிய புல்தளம் அமைக்கப்பட்டுள்ளது.[39] தவிர பல
விளையாட்டு மன்றங்களும் உள்ளன.
புகழ்பெற்ற டென்னிஸ் வராங்கனை நிருபமா
ீ வைத்தியநாதன் கோவையைச்
சேர்ந்தவர்.[40] கோயம்புத்தூர் குழிப்பந்தாட்ட மன்றம் [41] 18 குழிகள் கொண்ட
மைதானத்தைக் கொண்டுள்ளது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த
கோயம்புத்தூர் காஸ்மாபாலிட்டன் மன்றம்,[42] இந்தியர்களுக்கு மட்டுமே
உறுப்பினராக உரிமை வழங்கியது.

முக்கிய இடங்கள்

 கோவைக் குற்றாலம்: கோவையிலிருந்து 37 கி.மீ .


தொலைவில் மரங்கள் அடர்ந்த
வனப்பகுதியில், சிறுவாணி
ஆற்றில் அமைந்துள்ளது. வனப்பகுதி என்பதால்
மாலை 5 மணிக்கு மேல்
அனுமதிக்கப்படுவதில்லை.
 வ. உ. சி. பூங்கா: வ. உ. சிதம்பரனார் நினைவாக
அமைக்கப்பட்ட பூங்கா. சிறு மிருகக்காட்சி சாலை,
சிறுவர் ரயில், சிறுவர் விளையாட்டுக் கருவிகள்
ஆகியவை உள்ளன. அருகில் உள்ள
விளையாட்டரங்கில் நடக்கும் கால்பந்து
போட்டிகளும் அரசியல் மற்றும்
கலைநிகழ்ச்சிகளும் கோவையின் உயிரோட்டமாக
விளங்குகின்றன.

கோவில்கள்
 பேரூர் பட்டீசுவரர் கோயில்
 மருதமலை முருகன் கோயில்
 ஈச்சனாரி விநாயகர் கோவில்
 கோனியம்மன் கோயில்
 லோக நாயக சன ீசுவரன் கோயில்
 ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன்
கோவில்
 அனுபாவி முருகன் கோவில்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

 ஊட்டி – (90 கி.மீ . வடமேற்கு): மிகப் புகழ்பெற்ற


மலை வாழிடம் ஆகும்.
 குன்னூர்: ஊட்டி செல்லும் வழியில் உள்ள மலை
வாழிடம். இங்குள்ள சிம்ஸ் பூங்கா புகழ்பெற்றது.
 முதுமலை வனவிலங்கு காப்பகம்: ஊட்டி
வழியாகத் தமிழக எல்லையில் உள்ள பெரிய
சரணாலயம் இதுவாகும்.
 மலம்புழா அணை: பாலக்காடு அருகில் உள்ளது.
 ஆனைமலை: பொள்ளாச்சி சாலையில் 63 கி.மீ
தொலைவில் உள்ளது.
 பழனி – (100 கி.மீ ., தெற்கு): குன்றின்
மீ தமைந்த முருகன் கோவில். ஆறு படை வடுகளில்

ஒன்று.
 அமராவதி அணை: முதலைப் பண்ணை
 திருமூர்த்தி அணை:பஞ்சலிங்கம் அருவி
 ஆழியாறு அணை: குரங்கு அருவி
 டாப் ஸ்லிப் (இந்திரா காந்தி வன விலங்கு
சரணாலயம்)
 வால்பாறை நல்ல மலை வாழிடம்
 கோவைக் குற்றாலம் - கோவையிலிருந்து,
சிறுவாணி செல்லும் வழியில் உள்ள ஓர் அருவி
ஆகும்.

மேற்கோள்கள்
1. ↑ Chapter 3, Little Village of India (PDF) (Report).
Central Pollution Control Board, Govt of India. Archived
from the original (PDF) on 23 September 2015.
Retrieved 9 December2017.
2. ↑ "INDIA: Tamil Nādu". citypopulation.de. மூல
முகவரியிலிருந்து 3 March 2016 அன்று பரணிடப்பட்டது.
பார்த்த நாள் 4 March 2016.

3. ↑ சி. ஆர். இளங்கோவன், வரலாற்று அறிஞர் மயிலை


சீனி.வேங்கடசாமி, கோயமுத்தூர் ஒரு வரலாறு, முதல்
பதிப்பு, ஸ்ரீகாந்த் பப்பிளிகேஷன்ஸ், (2008). பக்கம்: 7

4. ↑ சி. ஆர். இளங்கோவன், கோயமுத்தூர் ஒரு வரலாறு, முதல்


பதிப்பு, ஸ்ரீகாந்த் பப்பிளிகேஷன்ஸ், (2008). பக்கம் 7

5. ↑ சி. ஆர். இளங்கோவன், எஸ்.பி.நரசிம்மலு


நாயுடு, கோயமுத்தூர் ஒரு வரலாறு, முதல் பதிப்பு, ஸ்ரீகாந்த்
பப்பிளிகேஷன்ஸ், 2008, : பக்கம்: 7

6. ↑ சி. ஆர். இளங்கோவன், கோட்டை சங்கமேஸ்வரன் கோவில்


கல்வெட்டு,கோயமுத்தூர் ஒரு வரலாறு, முதல் பதிப்பு,
ஸ்ரீகாந்த் பப்பிளிகேஷன்ஸ், (2008). பக்கம்: 8

7. ↑ சி. ஆர். இளங்கோவன், கோயமுத்தூர் ஒரு வரலாறு, முதல்


பதிப்பு, ஸ்ரீகாந்த் பப்பிளிகேஷன்ஸ், (2008). பக்கம்: 7

8. ↑ 8870719586, K.Shakthivel, +91. "கோயம்புத்தூர் -


Coimbatore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts -
தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information -
கோயம்புத்தூர், கோவை, தகவல்கள், பேர், மக்கள், கோவை,
தமிழக, மாவட்டங்கள், tamilnadu, வால்பாறை, கொங்கு,
பொள்ளாச்சி, சங்க, தமிழ்நாட்டுத், பரப்பு, districts, - ,
வருவாய், வடக்கு, தெற்கு, coimbatore, மேட்டுப்பாளையம்,
information, சூலூர், மாவட்டமும், தொகை, நெருக்கம்,
பெண்கள், ஆண்கள், தலைநகரம், ஊர்கள், எழுத்தறிவு,
மாவட்டத்தின், என்பது, தந்தி". www.tamilkalanjiyam.com.
இங்கு மேலே தாவவும்:9.0
9. ↑   9.1 "கோயமுத்தூர் மாவட்டம்".
10. ↑ "404". Dinamani.
:11.0 11.1
11. ↑     "Coimbatore Corporation – SHB002".
இங்கு மேலே தாவவும்

Coimbatore Corporation. பார்த்த நாள் 2009-09-23.


12. ↑ "Historical Weather for Coimbatore, India".
Weatherbase. பார்த்த நாள் 2009-09-23.
13. ↑ Dams and earthquakes, Frontline, Volume 16 – Issue
27, December 25, 1999 – 7 January 2000
14. ↑ Hunter, William Wilson (2015). Imperial Gazetteer of
India, Volume 10. BiblioBazaar. பன்னாட்டுத் தரப்புத்தக
எண்:978-1-343-35262-9.

15. ↑ Elangovan, K (2006). GIS: Fundamentals, Applications


and Implementations. New India Publishing.
பக். 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89422-16-5.
16. ↑ "Census of India 2001: Data from the 2001 Census,
including cities, villages and towns (Provisional)". Census
Commission of India. மூல முகவரியிலிருந்து 16 June
2004 அன்று பரணிடப்பட்டது.
17. ↑ "Population By Religious Community – Tamil Nadu"
(XLS). Office of The Registrar General and Census
Commissioner, Ministry of Home Affairs, Government of
India (2011). மூல முகவரியிலிருந்து 13 September 2015
அன்று பரணிடப்பட்டது.

18. ↑ கோயம்புத்தூர் மாநகர மக்கள்தொகை பரம்பல்


19. ↑ [1] 1998 serial bomb blasts
20. ↑ "List of Parliamentary and Assembly Constituencies"
(PDF). Tamil Nadu. Election Commission of India. பார்த்த
நாள் 2008-10-11.

21. ↑ "Front Page : Extended runway ready at Coimbatore


Airport". The Hindu. 2008-04-20. பார்த்த நாள்: 2009-09-
23.
22. ↑ Moffusil bus routes, TNSTC, CBE.
23. ↑ Town bus routes, TNSTC, CBE.
24. ↑ "Tamil Nadu Government Gives Big Infrastructure Push
to Coimbatore".
25. ↑ "Is Coimbatore the next BPO city?". CNBC-TV18. 5 July
2008. பார்த்த நாள்: 23 June 2010.
26. ↑ "German state keen to share expertise with
Coimbatore". Business Line. 22 June 2007. பார்த்த நாள்:
23 June 2010.
27. ↑ Remembering Coimbatore's pioneer, The Hindu
28. ↑ "Page not found News".
29. ↑ Coimbatore's wealth creators, The Hindu
30. ↑ http://www.hindu.com/2007/08/20/stories/20070820531
10600.htm First pillar free trade complex
31. ↑ "Indian cities among global outsourcing cities –
retrieved on 16 April 2009".
Economictimes.indiatimes.com. பார்த்த நாள்: 2009-09-23.
32. ↑ Rs 940 cr investment in Coimbatore, The Hindu
33. ↑ "http://www.thehindubusinessline.com/2005/03/24/storie
s/2005032401051700.htm". பிசினஸ் லைன். 2005-03-24.
பார்த்த நாள்: 2009-09-20.

34. ↑ "Coimbatore wet grinder gets GI certification". தி இந்து.


2006-03-28. பார்த்த நாள்: 2009-09-20.
35. ↑ "http://www.hindu.com/2007/08/05/stories/20070805594
30300.htm". தி இந்து. 2007-08-05. பார்த்த நாள்: 2009-09-
20.
36. ↑ "Review of the irrigation equipment manufacture and
supply sector in India, C.R.S. Sundaram". www.fao.org.
37. ↑ "City of speed". The Hindu (2006-04-24). பார்த்த நாள்
2007-01-03.
38. ↑ "The Hindu : To Kari, WITH LOVE". Hinduonnet.com.
2003-12-01. பார்த்த நாள்: 2009-09-23.
39. ↑ [2] Synthetic track works over
40. ↑ "Nirupama Vaidyanathan". Hinduonnet.com. 2001-01-
13. பார்த்த நாள்: 2009-09-23.
41. ↑ Location of golf club, Coimbatore Golf Club,
42. ↑ "100 year old club of Coimbatore". Hinduonnet.com.
2006-09-25. பார்த்த நாள்: 2009-09-23.

இவற்றையும் பார்க்கவும்

 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீ டியா பொதுவகத்தில்,

கோயம்புத்தூர்

என்பதின் ஊடகங்கள் உள்ளன.

 அதிகாரப்பூர்வ இணயத்தளம்
 கோயம்புத்தூரைத் தலைமையகமாகக் கொண்டு
இயங்கும் தொலைக்காட்சி

சுருக்கு

கோயம்புத்தூர் மாவட்டம்

யம்புத்தூர்

ழ்நாடு

ங்குநாடு

யம்புத்தூர் வடக்கு வட்டம் · அன்னூர் வட்டம் · கோயம்புத்தூர் தெற்கு வட்டம் · மேட்டுப்பாளையம்


டம் · பொள்ளாச்சி வட்டம் · கிணத்துக்கடவு வட்டம் · வால்பாறை வட்டம் · சூலூர் வட்டம் · பேரூர் வட்டம் · ம
டம் · ஆனைமலை வட்டம்

னூர் · ஆனைமலை · காரமடை · கிணத்துக்கடவு · மதுக்கரை · பெரியநாயக்கன்பாளையம் · பொள்ளாச்சி
க்கு) · பொள்ளாச்சி (தெற்கு) · சர்க்கார்சாமகுளம் · சுல்தான்பேட்டை · சூலூர் · தொண்டாமுத்தூர்

யம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்

யம்புத்தூர்

ட்டுப்பாளையம் · பொள்ளாச்சி · வால்பாறை

னூர் · ஆலந்துறை · ஆனைமலை · செட்டிபாளையம் · சின்னவேடம்பட்டி · தளியூர் · எட்டிமடை · இடிகரை · இ
ம்பாளையம் · காரமடை · கருமத்தம்பட்டி · கிணத்துக்கடவு · கோட்டூர் · மதுக்கரை · மூப்பேரிபாளையம் · நரச
ளையம் · உடையகுளம் · ஒத்தக்கல்மண்டபம் · பெரியநாயக்கன்பாளையம் · பெரிய நெகமம் · பூளுவப்பட்டி · ச
குளம் · சமத்தூர் · சிறுமுகை · சூள ீஸ்வரன்பட்டி · சூலூர் · திருமலையம்பாளையம் · தென்கரை · தொண்டாமு
பட்டி · வெள்ளக்கிணர் · வேட்டைக்காரன்புதூர் · ஜமீ ன் ஊத்துக்குளி ·

ட்டுப்பாளையம்  • கோயம்புத்தூர் வடக்கு  • தொண்டாமுத்தூர்  • கோயம்புத்தூர்
ற்கு  • சிங்காநல்லூர்  • கிணத்துக்கடவு  • பொள்ளாச்சி  • வால்பாறை

பகுப்புகள்: 
 தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்
 கோயம்புத்தூர்

வழிசெலுத்தல் பட்டி
 புகுபதிகை செய்யப்படவில்லை

 இந்த ஐபி க்கான பேச்சு


 பங்களிப்புக்கள்
 புதிய கணக்கை உருவாக்கவும்
 உள்நுழை
 கட்டுரை
 உரையாடல்
 படிக்கவும்
 மூலத்தைப் பார்
 வரலாற்றைக் காட்டவும்
தேடுக

? ? ? ?? ?? ? ?

 முதற் பக்கம்
 அண்மைய மாற்றங்கள்
 உதவி கோருக
 புதிய கட்டுரை எழுதுக
 தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
 ஏதாவது ஒரு கட்டுரை
 தமிழில் எழுத
 ஆலமரத்தடி
 Embassy
 சென்ற மாதப் புள்ளிவிவரம்
 Traffic stats
உதவி
 உதவி ஆவணங்கள்
 Font help
 புதுப்பயனர் உதவி

தமிழ் விக்கிமீ டியா திட்டங்கள்


 விக்சனரி
 விக்கிசெய்திகள்
 விக்கிமூலம்
 விக்கிநூல்கள்
 விக்கிமேற்கோள்
 பொதுவகம்
 விக்கித்தரவு

பிற
 விக்கிப்பீடியர் வலைவாசல்
 நன்கொடைகள்
 நடப்பு நிகழ்வுகள்

பிற திட்டங்களில்
 விக்கிமீ டியா பொதுவகம்

அச்சு/ஏற்றுமதி
 ஒரு புத்தகம் உருவாக்கு
 PDF என தகவலிறக்கு
 அச்சுக்குகந்த பதிப்பு

கருவிப் பெட்டி

 பகிர்க: 
 இப்பக்கத்தை இணைத்தவை
 தொடர்பான மாற்றங்கள்
 கோப்பைப் பதிவேற்று
 சிறப்புப் பக்கங்கள்
 நிலையான இணைப்பு
 பக்கத் தகவல்
 விக்கித்தரவுஉருப்படி
 இக்கட்டுரையை மேற்கோள் காட்டு
 குறுந்தொடுப்பு

மற்ற மொழிகளில்
 বাংলা
 English
 ગુજરાતી
 हिन्दी
 ಕನ್ನಡ
 മലയാളം
 मराठी
 తెలుగు

 ‫اردو‬
63 more
இணைப்புக்களைத் தொகு
 இப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2020, 01:20 மணிக்குத் திருத்தினோம்.

 அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப்

பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன;
கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.

 தகவல் பாதுகாப்பு

 விக்கிப்பீடியா பற்றி

 பொறுப்புத் துறப்புகள்
 உருவாக்குனர்கள்

 புள்ளிவிவரங்கள்

 நினைவி அறிக்கை

 கைபேசிப் பார்வை

You might also like