Professional Documents
Culture Documents
சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448
சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448
EKNATH BABU
சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448
1. தலை (307)
2. வாய் (18)
3. மூக்கு (27)
4. காது (56)
5. கண் (96)
6. பிடரி (10)
7. கன்னம் (32)
8. கண்டம் (6)
9. உந்தி (108)
10. கைகடம் (1300)
11. குதம் (101)
12. தொடை (91)
13. முழங்கால் கெண்டை (47)
14. இடை (105)
15. இதயம் (106)
16. முதுகு (52)
17. உள்ளங்கால் (31)
18. புறங்கால் (25)
19. உடல்உறுப்பு எங்கும் (3100)
எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி,
வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.
குடற் கிருமிகளினால்
1. கிராணி
2. பவுத்திரம்
3. மூலம்
4. மலக்கட்டு
5. தேகக் காங்கை
6. சுரம்
7. மயிர் உதிர்தல்
8. குட்டம்
9. சொறி சிரங்கு
10. படை
11. கரப்பான்
கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும்
வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.
அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை
யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு
எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.
கண் நோய் :
T.B.EKNATH BABU
கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ்
மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.
பொதுக் காரணங்கள் :
சிறப்புக் காரணம் :
சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும்,
தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம்
இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.
காசநோய் :
வெள்ளெழுத்து
தலைநோய் :
உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில்
தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள்
என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது,
கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது.
ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர்
தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும்,
அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால்
உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
அம்மை நோய் :
அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.
இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும்
T.B.EKNATH BABU
குறிப்பிடக் காணலாம்.
1. பனை முகரி
2. பாலம்மை
3. மிளகம்மை
4. வரகுதரியம்மை
5. கல்லுதரியம்மை
6. உப்புதரியம்மை
7. கடுகம்மை
8. கடும்பனிச்சையம்மை
9. வெந்தயவம்மை
10. பாசிப்பயறம்மை
11. கொள்ளம்மை
12. விச்சிரிப்பு அம்மை
13. நீர்கொள்ளுவன் அம்மை
14. தவளை அம்மை