You are on page 1of 12

கிராமங்களில் வீட்டில் வளர்க்கும் கழுதைகளைப் பார்த்திருப்பீர்கள்.

பொதி சுமக்கும்
கோவேறு கழுதைகளைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். காட்டுக் கழுதைகளைப் பற்றிக்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆப்ரிக்காவில் காட்டுக் கழுதைகள் நிறைய உள்ளன. இவற்றை ‘சோமாலியக் கழுதைகள்’


என்று சொல்கிறார்கள். பார்ப்பதற்குப் பழுப்பும் வெள்ளையும் கலந்த வழக்கமான கழுதைகள்
போலவே தெரியும். ஆனால், வரிக்குதிரைகளைப் போல இந்தக் கழுதைகளின் கால்களில்
காணப்படும் அழகான வரிகள் இவற்றை வித்தியாசப்படுத்திக் காட்டும். சோமாலியா,
எத்தியோப்பியா, எரித்ரியா போன்ற நாடுகளில் இந்தக் காட்டுக் கழுதைகள் நிறைய உள்ளன.

இந்த நாடுகளை அடிக்கடி பஞ்சம் தாக்கும் என்பதால் உணவுக்கும் தண்ணீருக்கும் பல நாட்கள்


திண்டாட்ட மாகவே இருக்கும். அதன் காரணமாக இந்த இனம் வேகமாக அழிந்து வருகிறது.
காட்டுக் கழுதைகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்குள் இருக்கும் என்கிறார்கள் காட்டுயிர்
ஆர்வலர்கள்.

தகவல் திரட்டியவர்:
எல். சோமு, 7-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
ஆண்டிப்பட்டி.

நன்றி- தமிழ் தி இந்து காம்

பின்னூட்டமொன்றை இடுங்கள்

ஒரு மின்னலின் நீளம் -பொது அறிவு தகவல்


திசெம்பர் 29, 2015 இல் 7:34 முப (பொது அறிவு தகவல்) 
Tags: பொது அறிவு தகவல்

ஒரு மின்னலின் சராசரி நீளம் 6 கிலோ மீட்டர்

உலகிலேயே மிக கடினமான பொருள் வைரம்


பஞ்சாமிர்த வண்ணம் பாடி முருகனை அபிஷேகித்தவர் பாம்பன் சுவாமிகள்

திருத்தணி முருகனை காண்ணாடியில் தரிசித்த அருளாளர் வள்ளலார்

பலகை செய்ய முடியாத மரம் வாழைமரம்

பின்னூட்டமொன்றை இடுங்கள்

அரச மரம் – சிறப்புகள்


திசெம்பர் 26, 2015 இல் 8:46 முப (பொது அறிவு தகவல்) 
Tags: பொது அறிவு தகவல்

அத்தி, ஆல், பலா முதலிய மரங்களைப்போல் பூ பூக்காமல் காய்க்கும் மரங்களுள் அரச


மரமும் ஒன்றாகும். பூவாது காய்க்கும் மரம் என்பதை அறிய அடையாளமாக இவ்வினத்து
மரங்கள் தளிர் விடும்போது அந்தத் தளிர் மூங்கில் முளைபோல் மூடிக் கொண்டிருக்கும்.
ஆடை போன்ற ஒருவித இதழால் மூடப்பட்டிருக்கும். அவ்வாடை தளிர் முதிர்ந்தால், காய்ந்து
விழுந்து விடும் என்பதால் இதனை அறியலாம். வசந்த காலமாகிய சித்திரை, வைகாசி
மாதங்களில் இம்மரம் பழைய இலைகளை உதிர்த்துப் பின்னர் புதியதாகத் தளிர் எடுக்கும்.
இவ்விலைகளில் தாமிரச் சத்தும், மின்சாரமும் இருக்கின்றது. நோயினால்
துன்பப்படுபவர்களும், உடலும் மனமும் மெலிவடைந்திருப்பவர்களும் காலை, மாலை
ஆகிய இரு வேளைகளிலும் சுத்தமான நீரில் மூழ்கி, ஈரமான உடையுடன் அரச மரத்தினை
வணங்கிச் சுற்றி வருவதனால் உடல் குறைகள் நீங்கி நல்ல நலம் பெறலாம்.

அதற்குக் காரணம் இம்மரத்தின் காற்று ஆகும். மின்சாரமானது கூர்மையான முனைகளின்


வழியாகவே செல்லும் தன்மை உடையது. ஆதலினால் அரச மரத்தின் கூர்மையான இலை
நுனியின் வழியாக வரும் மின்சாரம் கூடிய காற்றானது, நனைந்து ஈரமான ஆடையுடன் சுற்றி
வருகின்ற நோயாளிகளின் உடலில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி நாளுக்கு நாள் வலிவைத்
தந்து குணப்படுத்துவதை “இரசாயன சாத்திர அறிஞர்கள்’ கூறுவதால் அறியலாம். உடலில்
உள்ள நோய், விஷக்கடி, பேய்பிடி ஆகியவற்றை நீக்கும் தன்மை சிறிதளவே உண்டு. நரம்புத்
தளர்ச்சிகள் நீங்கி வலிமை பெறும் என்றும், மகரிஷிகளும், ஞானிகளும் நாடோறும்
பலவகையாகப் பொருள்களில் அரசும் சேர்த்து யாகங்களைச் செய்ததால் உடல் வன்மையும்,
மனத் தெளிவும், நீண்ட ஆயுளும் பெற்று நெடுங்காலம் வாழ்ந்திருந்தனர்.

அரசிற்கு உரிய நாள் உரிய பூசைகள் செய்து 108 முறை வலம் வந்து வணங்குபவர்கள் கொடிய
நோய்கள் நீங்கப் பெற்று இன்பமாகவும், நல்ல குழந்தைப் பேற்றினையும் பெற்று மகிழ்வுடன்
வாழ்வார்கள். அரச மரத்திற்குப் போதி என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

“சாதகலங்காரத்தில் சித்தர் கருத்துகள்’ என்ற நூலில் சோதிடர் தி.கல்பனா தேவி.

 -தினமணி

பின்னூட்டமொன்றை இடுங்கள்

சான்டா க்ளாஸ்…
திசெம்பர் 25, 2015 இல் 6:23 முப (பொது அறிவு தகவல்) 
Tags: பொது அறிவு தகவல்

சான்டா க்ளாஸ்…

சான்டா க்ளாஸின் நிஜப் பெயர் செயின்ட் நிக்கோலஸ். பண்டைய கிரேக்கத்தின் பட்டாரா நகர்
மைரா என்கிற ஊரில் பாதிரியாராக இருந்த செயின்ட் நிக்கோலஸ், ஏழைகளுக்கு நிறைய
உதவிகளைச் செய்தார். அதிலும் சுட்டிகளுக்கு சிறு சிறு பரிசுகள் நிறையவே கொடுப்பார். ஒரு
ஏழை விவசாயி, தன் மூன்று பெண்களுக்குத் திருமணம் நடத்தப் பணம் இல்லாமல்
துன்பப்பட்டபோது, சாக்ஸின் உள்ளே தங்கக் கட்டிகளை வைத்துவிட்டு, கிறிஸ்துமஸ் தாத்தா
மாயமானார். அதனால், இன்று வரை கிறிஸ்துமஸ் மரத்தில் சாக்ஸைக் கட்டிவிட்டு பரிசுக்காக
ஆவலுடன் காத்திருக்கும் வழக்கம் உண்டு.

செயின்ட் நிக்கோலஸை ‘சின்டர்கிளாஸ்’ என நெதர்லாந்தில் அழைக்க, அதுவே பின்னர்


‘சான்டாகிளாஸ்’ என ஆனது!

-பூ.கொ.சரவணன்- சுட்டி விகடன்

https://www.facebook.com/ChuttiVikatan/

பின்னூட்டமொன்றை இடுங்கள்

ஐந்தின் ரகசியங்கள்!
திசெம்பர் 24, 2015 இல் 3:15 முப (பொது அறிவு தகவல்) 
Tags: பொது அறிவு தகவல்

• பஞ்சலோகம் – இரும்பு, பொன், வெள்ளி, செம்பு, ஈயம்.


• பஞ்சவர்ணம் – கருப்பு, சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை.
• பஞ்சவாசம் – ஏலம், இலவங்கம், கற்பூரம், திப்பிலி, ஜாதிக்காய்.
• பஞ்சரத்தினம் – பொன், சுகந்தி, மரகதம்,
• மாணிக்கம், முத்து.
• பஞ்சபூதம் – ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு.
• பஞ்சபாண்டவர் – தர்மர், பீமன், அர்ஜுனன்,
நகுலன், சகாதேவன்.
• ஐவகை நிலங்கள் – குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல், பாலை.
• ஐம்பெருங் குழு – மந்திரியர், புரோகிதர்,
சேனாதிபதியர், தூதர், சாரணர்.
• ஐம்பெருங்காப்பியம் – சிலப்பதிகாரம்,
மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
• ஐஞ்சிறு காப்பியங்கள் – நாக குமார காவியம், யசோதர காவியம், உதயன குமார
காவியம்,நீலகேசி, சூளாமணி.

சிறுவர் மணி

பின்னூட்டமொன்றை இடுங்கள்
விஏஓ, குரூப் 2 – தேர்வுகளுக்கான மாதிரி வினா விடைகள்
திசெம்பர் 18, 2015 இல் 6:43 முப (பொது அறிவு தகவல்) 
Tags: பொது அறிவு தகவல்
நன்றி- தினமணி

பின்னூட்டமொன்றை இடுங்கள்

ஆங்கிலம் மிக அவசியம் – இந்த வார இடியம்ஸ்


திசெம்பர் 17, 2015 இல் 4:16 முப (பொது அறிவு) 
Tags: பொது அறிவு தகவல்

 
பேராசிரியர் கோ.கிருஷ்ணன்
தினத்தந்தி

பின்னூட்டமொன்றை இடுங்கள்

புத்தகங்களை நேசித்த மன்னன்


திசெம்பர் 17, 2015 இல் 3:59 முப (பொது அறிவு தகவல்) 
Tags: பொது அறிவு தகவல்
-பேராசிரியர் கோ.கிருஷ்ணன்
நன்றி- தினத்தந்தி

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பாடம் சொல்லித் தந்த பறவை!


திசெம்பர் 16, 2015 இல் 8:50 முப (பொது அறிவு தகவல்) 
Tags: பொது அறிவு தகவல்
அடர்ந்த பனி நிறைந்த பகுதிகளில் விமானங்கள் பறக்கும்போது பனியால் மூடப் பட்டு
விபத்துக்கு உள்ளாகின் றன. இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள் கின்றன.
இந்தப் பிரச்சினைக் குத் பெங் குயின்களிடமிருந்து ஒரு தீர்வை கண்டுபிடித்திருக் கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள். பெங்குயின்களின் இறகில் ஒருவித எண்ணெய் சுரப்பதால் அவை
நீந்தும்போது உடலில் தண்ணீர் ஒட்டிக்கொள்வதில்லை. அதேபோல மைனஸ் 40 டிகிரி
செல்சியஸுக்கு வெப்பநிலை போனாலும் பெங்குயின்களின் உடலில் மட்டும் பனி
படர்வதில்லை. இதற்கும் காரணம் அந்த எண்ணெய்ச் சுரப்புதான். பெங்குயின் வால்
பகுதியில் இருந்து சுரக்கும் எண்ணெய், அப்படியே இறக்கைகளுக்குப் பரவி விடுகிறது.

இந்த நுட்பத்தை விமானங்களின் இறக்கைகளில் செயல்படுத்தினால், பனிப் பிரதேசங்களில்


விமானங்கள் பறந்து செல்லும்போது பனியால் மூடப்படாது. விபத்துகளையும் தடுக்க
இயலும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பெங்குயின் இறகுகளைச் சேகரித்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
விமானங்களின் இறக்கைகளிலும் நீர்விலக்கியாக பெங்குயின் எண்ணெயைப் போல ஒரு
பொருளைப் பயன்படுத்த இருக்கிறார்கள்.

பறக்க இயலாத பறவை, பறக்கும் விமானத்துக்குப் பாடம் சொல்லித் தந்திருக்கிறது!


தமிழ் தி இந்து காம்

பின்னூட்டமொன்றை இடுங்கள்

திசெம்பர் 14, 2015 இல் 8:39 முப (பொதுவனவை) 


Tags: பொது அறிவு தகவல்

Who will cry when you die?” – ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்…

அதாவது,
“நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?” என்ற தலைப்பில் எழுதப்பட்ட
இப்புத்தகத்தில்…
“நீ பிறந்த போது, நீ அழுதாய்… உலகம் சிரித்தது…
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்” என ஆரம்பிக்கும்
ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்…

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை


சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்…

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும்


அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும்


மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து
சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.


எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும்
நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே


உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு
உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள்.


அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு


வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக
மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப
செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை,


புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த


சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே


பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக


செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை
அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை
வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும்
நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும்
போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள்.
பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/
குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள்.


வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
“ஆணவம் ஆயுளை குறைக்கும்…”

மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,


ஆனந்தமாக வாழுங்கள்..

You might also like