Professional Documents
Culture Documents
மனநலப் பிரச்னை
மனநலப் பிரச்னை
மனநல மருத்துவர்
உளவியலாளர்
உளவியல் என்பது மனித மனம் மற்றும் மனிதன் நடந்துகொள்ளும் விதத்தைப்பற்றி ஆராயும் பிரிவு ஆகும்.
மனிதனைச் செயல்படுத் தூண்டுகிற பலவிதமான சிந்தனைகள், உணர்வுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்ற
அம்சங்கள் இந்தத் துறையில் ஆராயப்படுகின்றன. இதற்கென்று பல பரிசோதனைகளும் உள்ளன. பலதரப்பட்ட
மனித செயல் பாடு சார்ந்த விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கும். தீர்ப்பதற்கும் இந்த உளவியல் பற்றிய
அறிவு பயன்படுத்தப்படுகிறது. இதில் மன நலப் பிரச்னைகளுக்கான மதிப்பீடுகள் மற்றும் சிகிச்சை முறைகள்
ஆகியவை உள்ளடங்கி இருக்கின்றன.
உளவியலாளர் என்பவர் யார்?
உளவியல் மதிப்பீடு என்பது, ஒருவர் எப்படிச் சிந்திக்கிறார், எப்படி உணர்கிறார், எப்படி நடந்துகொள்கிறார், சில
குறிப்பிட்ட தூண்டுதல்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறார் என்பதைப்பற்றிய விவரங்களை ஓர்
உளவியலாளர் கண்டறியும் வழிமுறை ஆகும். உளவியல் மதிப்பீடு என்பது பல முறைகளில் நடத்தப்படுகிறது.
உதாரணமாக, சம்பந்தப்பட்டவருடன் உரையாடுதல், அவருடைய நடவடிக்கைகளைக் கவனித்தல்,
மதிப்பிடுதல், முறையான உளவியல் பரிசோதனைகளை நடத்துதல், பிற நிபுணர்களைத் தொடர்புகொண்டு
தொடர்புடைய விவரங்களைப் பெறுதல் போன்றவை.
குறிப்பு: உளவியல் மதிப்பீடு என்பது ஒரு பரிசோதனையின் அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது, பிறகு இந்தப்
பரிசோதனையின் முடிவுகள் நிபுணரால் மதிப்பிடப்பட்டு, புரிந்துகொள்ளப்பட்டு வெளியிடப்படுகின்றன.
இந்தப் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில், ஒரு தனி நபருக்குள் இருக்கும் திறன்கள் மற்றும்
அவருடைய சாத்தியங்களைப்பற்றிய தங்களுடைய கருத்துகளை உளவியலாளர்கள் வழங்குகிறார்கள்.
மதிப்பிடப்படும் நபருக்குத் தெரியாத விஷயங்களை ஊகித்து அறியும் உத்திகளும் உள்ளன. உதாரணமாக
கருப்பொருள் அடிப்படையிலான தன்னை அறிதல் பரிசோதனை மற்றும் ரோர்ஸ்கார்ஷ் பரிசோதனை.
கல்வி / சாதனைப் பரிசோதனைகள்: இந்தப் பரிசோதனைகள் ஒரு குறிப்பிட்ட தலைப்பை ஒருவர் எந்த
அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார் என்பதை மதிப்பிடப் பயன்படுகின்றன. உதாரணமாக கணிதம், வாசிப்பு
போன்ற திறன்களை ஒருவர் எந்த அளவுக்குப் பெற்றிருக்கிறார் என்பதை அறிதல், அவற்றைக் கற்பதில்
அவருக்கு ஏதேனும் சிரமங்கள் உள்ளனவா என்று அடையாளம் காணுதல் போன்றவை. இந்த வகையிலான
பரிசோதனைகள் பெரும்பாலும் கல்வித்துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன, ஒரு குழந்தையின்
முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு இவற்றை நிபுணர்கள் பயன்படுத்துகிறார்கள்.
மனநல மதிப்பீடு: இந்தப் பரிசோதனை ஒருவருடைய மருத்துவ வரலாறு, குடும்ப வரலாறு, இப்போதைய
மனநல நிலை ஆகியவற்றைப்பற்றிய விவரங்களைச் சேகரிக்கிறது, இதன்மூலம் அவருக்கு ஏதேனும் மனநலப்
பிரச்னை இருக்கக்கூடுமா என்பதை அடையாளம் காண்கிறது. இதன்மூலம் பிரச்னையை அடையாளம்
காணுதல், சிகிச்சை வழங்குதலுக்கு உதவுகிறது.
ஆலோசகர்
ஆலோசனை வழங்குதல் என்பது ஒரு சிறப்பான, செயல்முறைசார்ந்த உளவியல் ஆகும். இது பல்வேறு
வாழ்க்கைச்சூழல்கள் காரணமாக ஏற்படும் உணர்வுநிலை, நடவடிக்கை சார்ந்த அல்லது சமூகம் சார்ந்த
பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. உதாரணமாக ஒருவருக்குப் பணியிடத்தில் தொல்லைகள்
இருக்கலாம், பள்ளி அல்லது கல்லூரியில் தொல்லைகள் இருக்கலாம், குடும்பத்தில் தொல்லைகள்
இருக்கலாம், இவற்றின்மூலம் அவருக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளை ஆலோசனைமூலம் சரிசெய்ய
இயலும்.
மனநலச் சமூகப் பணியாளர்கள், பயிற்சி பெற்ற மனநல நிபுணர்கள் ஆவர். இவர்கள் ஒருவருடைய மனநலப்
பிரச்னைகளோடு வரக்கூடிய வாழ்க்கை, சமூக பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிய உதவுவார்கள்,
அதன்மூலம் அவர் தன்னுடைய வாழ்க்கையை இயல்பாக வாழத் துணைபுரிவார்கள்.
மனநலச் செவிலியர்
மனநலச் செவிலியர்கள், மனநலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களை மதிப்பிடுகிற, அவர்களுக்கு
வந்துள்ள பிரச்னைகளைக் கண்டறிகிற, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கிற திறன் வாய்ந்தவர்கள். இதற்காக
இவர்கள் தனிநபர்கள், குடும்பத்தினர், குழுக்கள் மற்றும் சமூகத்தினரோடு இணைந்து பங்காற்றுகிறார்கள்,
அவர்களுடைய மனநலத் தேவைகளை மதிப்பிட்டு அதற்கேற்பச் செயல்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள்
மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மனநலப் பிரச்னைகளைப்பற்றிச் சொல்லித்தருகிறவர்களாகவும்,
ஆலோசகர்களாகவும், சிகிச்சை வழங்குகிறவர்களாகவும்கூட இவர்கள் பங்காற்றுகிறார்கள்.
வட்டில்
ீ ஒருவருக்கு மனநலப் பிரச்னை ஏற்பட்டால் நன்கு படித்த, விவரமறிந்தோர் கூட பல தருணங்களில்
‘சைக்கலாஜிஸ்டிடம் போவதா, சைக்கியாட்டிரிஸ்டிடம் போவதா’ என குழப்பமடைகின்றனர். சைக்கலாஜிஸ்ட்
(Psychologist), சைக்கியாட்டிரிஸ்ட் (Psychiatrist) இந்த இருவருக்கும் வித்தியாசம் என்ன?
இரண்டுமே வெவ்வேறு துறைகள். மனநோய் மருத்துவர் (Psychiatrist) என்பவர் உளவியல் துறையில் ‘மருத்துவ
டாக்டர்’ (M.D. Psychiatry) பட்டம் பெற்றவராக இருப்பார். இவர், மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சரியாகக்
கணித்து, பெரும்பாலும் மருந்துகள் மற்றும் மின் அதிர்வு மூலம் சிகிச்சை அளிப்பார்.
மனநல ஆலோசகர் என்பவர் உளவியல் படிப்பில் டாக்டர் பட்டம் (உளவியலாளர் / Psychologist) அல்லது மனநல
ஆலோசனை படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவராக இருப்பார் (Psychology / Psychiatric social work / Guidance
counseling). இவர் மருந்துகள் இன்றி கவுன்சலிங் மற்றும் சைக்கோதெரபி மூலம் சிகிச்சை அளிப்பார்.
உளவியல் ஆலோசனை வழங்குவதற்கான உரிமமோ, சிறப்புப் பயிற்சி பெற்ற தகுதி பெற்றவரிடமோ மட்டுமே
ஆலோசனைக்கு செல்ல வேண்டும். மனது சார்ந்த விஷயமானதால், இதற்கென தகுதி பெற்றவர்கள் மட்டுமே
மனநல ஆலோசனை (counseling) மற்றும் சிகிச்சை (psychotherapy) வழங்க அங்கீ காரம் அளிக்கப்பட்டுள்ளது.
தெளிவற்ற சிந்தனை
தற்கொலை எண்ணங்கள்
எதிலும் நாட்டமின்மை
திரும்பத் திரும்ப தொந்தரவு செய்யும், விரும்பத்தகாத எண்ணங்கள் / திரும்பத் திரும்ப ஒரே செயலை
கட்டுப்பாடின்றி பதற்றத்துடன் செய்வது (உதாரணம்: அடுப்பை அணைத்து விட்டோமா என பலமுறை
சரிபார்ப்பது/ கையை கழுவிக்கொண்டே இருப்பது)
காரணமில்லாமல் மற்றவர் மீ து சந்தேகப்படுவது
வழக்கத்துக்கு மாறான பாலியல் விருப்பங்கள் (உயிரில்லாத பொருட்கள், ஆண் பெண்ணாக, பெண் ஆணாக
உடை மாற்றுதல், பிறரையோ, தன்னைத் தானோ துன்புறுத்துதல், அடுத்தவரின் படுக்கையறையை எட்டிப்
பார்த்தல், பிறப்புறுப்பை அந்நியரிடம் காட்டுதல், குழந்தையுடன் உறவு கொள்ளுதல் என ஆரோக்கியமற்ற
முறையில் பாலியல் உணர்வுகளால் தூண்டப்படுபவர்கள்.)
அடிக்கடி கோபப்படுதல்
திரும்பத் திரும்ப வரும் துன்புறுத்தும் எண்ணங்கள், திரும்பத் திரும்ப கை கழுவுவது மற்றும் சரி பார்ப்பது
போன்ற நேரத்தை வணடிக்கும்
ீ செயல்பாடுகள்.
இந்த அறிகுறிகள் எல்லோருக்கும் இயல்பாக இருப்பது போலவே தோன்றக் கூடியவையே. எப்போது அவை
அளவுக்கு அதிகமாகவும் நீடித்தும் காணப்பட்டு, ஒருவரின் தனிப்பட்ட திறனைப் பாதித்து, தினசரி
வாழ்க்கைக்கு இடையூறாக உள்ளதோ, அப்போது உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டியது
அவசியமாகிறது. மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப தன்னைத் தானே மாற்றி கொள்பவன்தான்
மனநலம்வாய்ந்தவனாகக் கருதப்படுகிறான்.
உடலுக்கு வரும் ஜுரம் போன்ற சிறிய உபாதைக்கு மருத்துவரை அணுகி நலம் பெறுவது போலத்தான்
மனதுக்கு பிரச்னையெனில் மனநல ஆலோசகரை அணுகுவதும்... இதை எல்லோரும் உணர்ந்து விட்டால்
அதுவே ஆரோக்கியமான மாற்றம்தான். இம்மாற்றத்தினால் ஏற்படும் நல்ல மன ஆரோக்கியத்தால் நம்
மக்களின் திறனும் பல மடங்கு அதிகரிக்கும். மனம் தெளிவாக,
சந்தோஷமாக இருந்தால் மட்டுமே, ஒருவர் தன் முழுத்திறனுடன் செயல்பட முடியும். இதனால் வட்டில்
ீ
உறவுகளும் மேம்பட்டு குடும்பமேமகிழ்ச்சியாக இருக்கும். பச்சிளம் குழந்தை முதல் முதியோர் வரை
எல்லோரையும் பாதிக்கும் மன அழுத்தத்தைப் (Stress) பற்றி விரிவாக அடுத்து வரும் இதழ்களில் பார்ப்போம்.
பிள்ளைகளுக்கு உணவும், இடமும், ஐபேட், டி.வி.யும் தந்தால் மட்டும் போதாது. அவன் சந்தோஷமாக
உள்ளானா என கண்காணிக்க வேண்டியதும் பெற்றோரின் கடமையே. பெற்றோரிடம் எதையும் பகிர்ந்தது
கொள்ளலாம் என்ற நம்பிக்கையை பிள்ளைகளுக்கு விதைக்க வேண்டியதும் அவசியம்.