You are on page 1of 13

மனநலப் பிரச்னை கொண்டோர் யாரிடம் செல்வது?

உடல் நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை தர மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதேபோல் மனநலப்


பிரச்னைகளுக்கும் தீர்வு காண நிபுணர்கள் இருக்கிறார்கள்உங்களுக்கு பல்லில் வலி வந்தால் அதற்கான
சிகிச்சைக்காக ஒரு பால் மருத்துவரிடம் செல்கிறீர்கள், மூட்டுகளில் வலி இருந்தால் ஓர் எலும்பு சிகிச்சை
நிபுணரிடம் செல்கிறீர்கள் இப்படி எந்தமாதிரி உடல் நலக் குறைவு ஏற்படுகிறதோ அதற்குச் சிகிச்சை
அளிக்கக்கூடிய பல்வேறு விதமான நிபுணர்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அதே சமயம் மனநலப் பிரச்னை
வந்தால் மட்டும், அதற்கு யாரிடம் சென்று சிகிச்சை பெறுவது என்று பெரும்பாலானவர்களுக்குத்
தெரிவதில்லை. எங்கே செல்வது யாரிடம் பேசுவது என்று புரியாமல் திகைத்து நிற்கிறார்கள். இந்தக்
கட்டுரையில், மனநலப் பிரச்னைகளைக் கண்டறிதல், சிகிச்சை வழங்குதல் ஆகியவற்றில் நிபுணத்துவம்
வாய்ந்த சிலரைப்பற்றி நாம் தெரிந்துகொள்வோம். யாருக்காவது மனநலம் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்னை
வரும்போது எவரிடம் செல்வது என்று புரிந்துகொள்வோம்.

மனநலம் சார்ந்த பிரச்னைகளைக் குணப்படுத்தக் கூடிய நிபுணர்களில் சிலர், உளவியலாளர்கள், மனநல


நிபுணர்கள், ஆலோசகர்கள், மனநலச் சமூகப் பணியாளர்கள், மனநலச் செவிலியர்கள். இந்த வகையில் உள்ள
ஒவ்வொருவரையும் பற்றியும் சுருக்கமாக இங்கே காண்போம். குறிப்பாக, இவர்கள் எதில் நிபுணத்துவம்
வாய்ந்து காணப்படுகிறார்கள், இவர்களுடைய திறன் என்னென்ன போன்றவற்றை நாம் தெரிந்துகொள்வோம்.
இதன்மூலம், யாருக்காவது மனநலப் பிரச்னைகள் வந்தால், அவர்கள் யாரைத் தொடர்புக்கொள்வது நல்லது
என நம்மால் ஆலோசனை வழங்க இயலும்.

மனநல மருத்துவர்

மனநலவியல் என்றால் என்ன?

மனநலவியல் என்பது உணர்ச்சிகள் மற்றும் அறிவாற்றல் போன்ற நடவடிக்கைகளைப் பாதிக்கக்கூடிய


பல்வேறு பிரச்னைகளை மதிப்பிட்டு, கண்டறிந்து, குணப்படுத்தி, கையாலக்கூடிய மருத்துவப் பிரிவு ஆகும்.
இந்தப் பிரிவில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களை மனநல மருத்துவர்கள் என்பார்கள்.

மனநல மருத்துவர் என்பவர் யார்?

மனநல மருத்துவர்கள் என்போர், மற்ற மருத்துவர்களைப் போலவே உடற்கூறியலைப் பயின்றவர்கள்,


அதேபோல மனநலம் தொடர்பான சிகிச்சை அளிப்பதிலும் இவர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள்
மருத்துவப் பயிற்சி பெற்றபோது மூளையின் செயல்பாடுகள், உடல் மற்றும் மூளையின் சிக்கலான உறவு
ஆகியவற்றைப்பற்றி விரிவாகப் பயின்றுள்ளார்கள். ஆகவே ஒருவருக்கு உடல் சார்ந்த துயரம்
ஏற்பட்டிருந்தாலும் சரி, மனம் சார்ந்த துயரம் ஏற்பட்டிருந்தாலும் சரி, அதற்குக் காரணம் உடல் பிரச்னையா
அல்லது மனநலப் பிரச்னையா என்று இவர்களால் சிறப்பாகக் கண்டறிய இயலும்.
ஒருவருக்கு என்ன பிரச்னை வந்திருக்கிறது என்று மனநல மருத்துவர்கள் எப்படிக் கண்டறிகிறார்கள்?

மனநல மருத்துவர்கள் உடற்கூறியலையும் அறிந்திருப்பதால், அவர்களால் பலவிதமான மருத்துவ மற்றும்


மனநல பரிசோதனைகளை நிகழ்த்த இயலுகிறது, அதன்மூலம் பாதிக்கப்பட்டவருடைய ஒட்டுமொத்த
உடற்கூற்றை அறிந்துகொள்ள இயலுகிறது. இவற்றின் அடிப்படையில் அவர்கள் பாதிக்கப்பட்டவருக்கு என்ன
பிரச்னை வந்திருக்கிறது என்பதைத் தீர்மானிக்கிறார்கள், உரிய சிகிச்சையைச் சிபாரிசு செய்கிறார்கள்.

மனநல மருத்துவர்கள் எந்தவிதமான சிகிச்சையை பயன்படுத்துகிறார்கள்?

மனநல மருத்துவர்கள் பலவிதமான சிகிச்சை முறைகளைப் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக, மருந்துகளின்


மூலம் சிகிச்சை தருதல், மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தருதல் போன்றவை. யாருக்கு எந்தச் சிகிச்சை
தரவேண்டும் என்பது பாதிக்கப்பட்டவரின் நிலை மற்றும் அவருடைய நோயின் தீவிரத்தன்மையைப்
பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு மருந்துகளுடன் உளவியல் சிகிச்சையும்
தேவைப்படுகிறது என்றால் அவரை ஒரு மருத்துவ உளவியலாளரிடம் செல்லுமாறு மனநல மருத்துவர்
சிபாரிசு செய்யக்கூடும்.

மனநல மருத்துவர்கள் எங்கே பணியாற்றுகிறார்கள்?

மனநல மருத்துவர்கள் பல்வேறு களங்களில் பணியாற்றுகிறார்கள். உதாரணமாக, கிளினிக்குகள், பொது


மற்றும் மனநல மருத்துவமனைகள், பல்கலைக் கழகங்களின் மருத்துவ மையங்கள், சமூக அமைப்புகள்,
முதன்மை நலப் பராமரிப்பு மையங்கள், நர்சிங் ஹோம்கள், மறுவாழ்வு மையங்கள், தொழில், அரசு, ராணுவ
பிரிவுகள், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள், நல்வாழ்வு
மையங்கள், மற்றும் பல இடங்கள்.

உளவியலாளர்

உளவியல் என்றால் என்ன?

உளவியல் என்பது மனித மனம் மற்றும் மனிதன் நடந்துகொள்ளும் விதத்தைப்பற்றி ஆராயும் பிரிவு ஆகும்.
மனிதனைச் செயல்படுத் தூண்டுகிற பலவிதமான சிந்தனைகள், உணர்வுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்ற
அம்சங்கள் இந்தத் துறையில் ஆராயப்படுகின்றன. இதற்கென்று பல பரிசோதனைகளும் உள்ளன. பலதரப்பட்ட
மனித செயல் பாடு சார்ந்த விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கும். தீர்ப்பதற்கும் இந்த உளவியல் பற்றிய
அறிவு பயன்படுத்தப்படுகிறது. இதில் மன நலப் பிரச்னைகளுக்கான மதிப்பீடுகள் மற்றும் சிகிச்சை முறைகள்
ஆகியவை உள்ளடங்கி இருக்கின்றன.
உளவியலாளர் என்பவர் யார்?

உளவியலாளர் என்பவர் உளவியல் துறையில் பட்டங்களைப் பெற்றவர், இவர் மனிதர்களுடைய


செயல்பாடுகளைப்பற்றி, அவர்களுடைய நடவடிக்கைகளைப்பற்றி நான்கு அறிந்த நிபுணர் ஆவார்.
உளவியலாளர்கள் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி மனிதர்களுடைய எண்ணங்கள், உணர்வுகள், புரிந்து
கொள்ளுதல் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை எந்தெந்த காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என
ஆராய்கிறார்கள். பொதுவாக உளவியலாளர்களிடம் வருகின்றவர்களுக்கு பல விதமான பிரச்னைகள்,
சவால்கள் இருக்கலாம். உதாரணமாக, சிலருக்கு உறவு சார்ந்த பிரச்னைகள், சிலருக்கு பெற்றோரிடம்
பிரச்னைகள், சிலருக்கு வளர் இளம் பருவம் பற்றிய பிரச்னைகள், சிலருக்கு வாழ்க்கை முறை மாற்றங்களால்
உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், சிலருக்கு நாள்பட்ட நோய்கள்... இப்படிப் பல்வேறு
பிரச்னைகளால் இவர்கள் உளவியலாளரிடம் வரும்போது, அவர்கள் சான்று அடிப்படையிலான ஊகங்களை
வைத்துத் தலையீடுகளை உருவாக்கி, அதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் சவால்களை அவர்கள்
சந்திக்கவும், சமாளிக்கவும் உதவுகிறார்கள். பதற்றம், மனச்சோர்வு, உண்ணுதல் குறைபாடு, அச்சக் குறைபாடு,
அளவுக்கு அதிகமாக பொருட்களை பயன்படுத்துதல் போன்ற மனநலக் குறைபாடு உள்ளவர்கள்
உளவியலாளர்களிடம் வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய மருத்துவத் திறன்களைப் பயன்படுத்தி
இவர்களுக்கு உதவுகிறார்கள்.

உளவியலாளர்கள் தரும் சிகிச்சையின் அடிப்படை அறிவியலும், கட்டமைப்பும் ஒரே மாதிரி இருந்தாலும்,


அவர்கள் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தும் விதம் பல வகைகளில் அமைகிறது.

மருத்துவ உளவியலாளர்கள்: இவர்கள் பாதிக்கப்பட்டவருடைய உள்ளம் சார்ந்த அழுத்தத்தை குறைக்க


முயற்சி செய்கிறார்கள். அதன் மூலம் அவர்களின் உள்ளம் சார்ந்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறார்கள்,
முன்னிறுத்துகிறார்கள். அசாதாரணமான உளவியலைப்பற்றிப் படித்த உளவியலாளர்கள், பதற்றம்,
மனச்சோர்வு, போதைப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துதல், அவற்றிற்கு அடிமையாதல் போன்ற
மனநலப் பிரச்னைகளைக் கொண்ட மக்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள், அவர்கள் குணம் பெற
உதவுகிறார்கள். ஆலோசகர்கள்: பொதுவாக ஓர் ஆலோசகரிடம் வருகிறவருக்கு எந்தவிதமான மனநோயும்
இருப்பதாகக் காணப்பட்டிருக்காது, அதே சமயம் அவர்களிடம் மனநலம் சார்ந்த சில பிரச்னைகள்
காணப்படலாம். அவற்றைப் பேசி புரிந்து கொள்வதற்காக இவர்கள் ஆலோசகரிடம் வருகிறார்கள். இப்படி
வருகிறவர்களிடம் ஆலோசகர்கள் பேசி அவர்களிடம் சமநிலையிமையை உண்டாக்கியிருக்கிற பிரச்னை
என்னவாக இருக்கும் என்று கண்டறிகிறார்கள், அதை குணப்படுத்துகிறார்கள். பொதுவாக மனநல
ஆலோசகரிடம் வருகிறவருக்கு பலவிதமான பிரச்னைகள் இருக்கக்கூடும். உதாரணமாக, தங்களுடைய
அன்புக்குரியவரின் மரணத்தைத் தாங்க இயலாதவராக இருக்கலாம், சிலர் இப்போதைய அல்லது முந்தைய
உறவுகளில் இருக்கும் பிரச்னைகளைத் தாங்க முடியாமல் சிரமப்படலாம், சிலர் நடவடிக்கை சார்ந்த
பிரச்னைகளின் மூலம் பாதிப்புகளைச் சந்திக்கலாம். இவர்கள் ஒவ்வொருவரிடமும் மனநல ஆலோசகர்கள்
விரிவாகப் பேசுகிறார்கள், அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் மனப்போக்கை மாற்றிக்கொள்வதற்கு,
புகைப்பழக்கத்தை விடுவதற்கு, அவர்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுகிறார்கள்.பள்ளியில் உள்ள
உளவியலாளர்கள்: இவர் குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருடன் இணைந்து பணியாற்றுகிறார்,
அவர்களுடைய கற்றல் மற்றும் வளர்ச்சிக்குத் துணை புரிகிறார். பள்ளி உளவியலாளர்கள் கல்வி
நிறுவனங்களுடன் இணைந்தும் பணியாற்றக் கூடும். அல்லது கல்வி சார்ந்த கொள்கைகளை உருவாக்குகின்ற
நிர்வாக அமைப்புக்களுடனும் சேர்ந்து பணியாற்றக்கூடும்.வழக்கு சார்ந்த உளவியலாளர்: இவர் சட்டச்
செயல்முறைகள் சார்ந்த உளவியல் அம்சங்களை ஆராய்கிறார், உதாரணமாக, குற்றவியல் விசாரணைகளில்
கோட்பாடுகளை அமல்படுத்துதல், குற்ற எண்ணத்துடன் செயல்படுகிற ஒருவருக்கு என்னவிதமான உளவியல்
பிரச்னை இருக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ளுதல், குற்றம் செய்தவர்களுக்குச் சிகிச்சை வழங்குதல்
போன்றவை. வழக்கு சார்ந்த உளவியலாளரைக் ‘குற்றவியல் உளவியலாளர்’ ‘ சட்ட உளவியலாளர்’ அல்லது
‘கிரிமினாலஜிஸ்ட்’ என்றும் அழைப்பதுண்டு.நரம்பியல்-உளவியலாளர்: இவர் மூளைக்கும் அதன் நரம்பியல்-
உளவியல் செயல்பாடுகளான பார்வை, ஞாபக சக்தி மற்றும் நுகரும் சக்தி ஆகியவற்றுக்கும் உள்ள
உறவைப்பற்றி ஆராய்கிறார். மூளைக்காயம் அல்லது பிற நரம்பியல் பிரச்னைகளான பக்கவாதம், டிமென்சியா,
கட்டி மற்றும் மூளைச்சிதைவுப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் புனர்வாழ்வுக்கு இவர்
உதவுகிறார்.பணி சார்ந்த உளவியலாளர்: இவர் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடமிருந்து சிறந்த
செயல்திறனைப் பெறுவதற்கும், ஊழியர்கள் தங்கள் பணியில் திருப்தி அடைவதற்கும் உதவுகிறார்.
இந்தத்துறையில் அனுபவம் பெற்ற உளவியலாளர்கள் நிறுவனங்களுக்கும் அவற்றில் பணிபுரியும்
ஊழியர்களுக்கும் பல வகைகளிலும் உதவுகிறார்கள்: ஊழியர்களை ஊக்கத்துடன் செயல்படச் செய்வதற்கான
வியூகங்களை உருவாக்குதல், ஒவ்வொரு பணிக்கும் சிறந்த நபர்களைத் தேர்ந்தெடுத்தல், தனி நபர்கள் புதிய
திறன்களைக் கற்றுக்கொள்ள உதவுதல், அவர்கள் தங்கள் பணி வாழ்க்கையைத் திட்டமிட உதவுதல்,
ஒரேமாதிரியான வேலையைச் செய்து சலிப்படைந்த ஒருவர் அதைச் சமாளிக்க உதவுதல் போன்றவை. ஒரு
குறிப்பிட்ட பொறுப்புக்கு ஒரு குறிப்பிட்ட நபர் பொருந்துவாரா இல்லையா என்பதை மதிப்பிடுவதற்கான
உளவியல் பரிசோதனைகளையும் பணி சார்ந்த உளவியலாளர்கள் வடிவமைக்கலாம், பயன்படுத்தலாம்.

உளவியல் மதிப்பீடு என்றால் என்ன?

உளவியல் மதிப்பீடு என்பது, ஒருவர் எப்படிச் சிந்திக்கிறார், எப்படி உணர்கிறார், எப்படி நடந்துகொள்கிறார், சில
குறிப்பிட்ட தூண்டுதல்களுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறார் என்பதைப்பற்றிய விவரங்களை ஓர்
உளவியலாளர் கண்டறியும் வழிமுறை ஆகும். உளவியல் மதிப்பீடு என்பது பல முறைகளில் நடத்தப்படுகிறது.
உதாரணமாக, சம்பந்தப்பட்டவருடன் உரையாடுதல், அவருடைய நடவடிக்கைகளைக் கவனித்தல்,
மதிப்பிடுதல், முறையான உளவியல் பரிசோதனைகளை நடத்துதல், பிற நிபுணர்களைத் தொடர்புகொண்டு
தொடர்புடைய விவரங்களைப் பெறுதல் போன்றவை.

குறிப்பு: உளவியல் மதிப்பீடு என்பது ஒரு பரிசோதனையின் அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது, பிறகு இந்தப்
பரிசோதனையின் முடிவுகள் நிபுணரால் மதிப்பிடப்பட்டு, புரிந்துகொள்ளப்பட்டு வெளியிடப்படுகின்றன.

பல்வேறு மதிப்பீடு முறைகளில் சேகரிக்கப்பட்ட வெவ்வேறு விவரங்களை நிபுணர்கள் தொகுக்கிறார்கள், அதன்


அடிப்படையில் ஒருவருடைய திறன்கள் மற்றும் நடவடிக்கைகளைப்பற்றிய ஒரு முழுமையான அறிக்கையை
உருவாக்குகிறார்கள். இந்த விவரத்தின் அடிப்படையில் அவருக்கு எத்தகைய சிகிச்சை தேவை என்பது சிபாரிசு
செய்யப்படுகிறது. உதாரணமாக, ஒரு குழந்தை அல்லது இளைஞருடைய உளவியல் மதிப்பீட்டை வைத்து
அவருடைய கல்வி அல்லது பணி வாழ்க்கையைத் திட்டமிடலாம், மனநல பாதிப்பு கொண்ட ஒருவருடைய
மதிப்பீட்டைக் கொண்டு அவருக்கு எத்தகைய சிகிச்சை தரவேண்டும் எனத் திட்டமிடலாம். மனநல மதிப்பீட்டில்
சேகரிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு, ஓர் உளவியல் அறிக்கையாக
வெளியிடப்படுகின்றன.
உளவியல் பரிசோதனை என்றால் என்ன?

உளவியல் பரிசோதனை என்பது, ஒருவருடைய மனப்போக்கு மற்றும் புத்திசாலித்தனத் திறன்களைப்


பரிசோதிப்பதற்காக நடத்தப்படுகிறது. இந்தப் பரிசோதனைகள் தரநிலைப்படுத்தப்பட்ட உளவியல் மற்றும்
அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைகின்றன.

உளவியல் பரிசோதனையின் வடிவமைப்பு பலவிதமாக மாறுபடலாம். உதாரணமாக, சில பரிசோதனைகளில்


பேனா, பென்சில் கொண்டு தாளில் ஏதாவது எழுத வேண்டியிருக்கலாம், கணினி சார்ந்த பரிசோதனைகளும்
உள்ளன. சில பரிசோதனைகளில் புதிர்கள் தரப்பட்டு அவற்றை விடுவிக்குமாறு கேட்கப்படலாம், சில
பரிசோதனைகளில், மதிப்பிடப்படுகிறவர் ஓவியங்களை வரையவேண்டியிருக்கலாம். கணக்குகளைப்
போடவேண்டியிருக்கலாம், அவருக்குச் சொல்லப்பட்ட ஏதாவது ஒரு விவரத்தை நினைவுக்குக் கொண்டுவர
வேண்டியிருக்கலாம். சில மனநல பரிசோதனைகளில் சம்பந்தப்பட்டவர் பிறருடன் எப்படி பழகுகிறார், எப்படி
நடந்து கொள்கிறார் என்பவையும் அளவிடப்படலாம்.

இந்தப் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில், ஒரு தனி நபருக்குள் இருக்கும் திறன்கள் மற்றும்
அவருடைய சாத்தியங்களைப்பற்றிய தங்களுடைய கருத்துகளை உளவியலாளர்கள் வழங்குகிறார்கள்.
மதிப்பிடப்படும் நபருக்குத் தெரியாத விஷயங்களை ஊகித்து அறியும் உத்திகளும் உள்ளன. உதாரணமாக
கருப்பொருள் அடிப்படையிலான தன்னை அறிதல் பரிசோதனை மற்றும் ரோர்ஸ்கார்ஷ் பரிசோதனை.

ஓர் உளவியல் பரிசோதனையில் எந்தெந்த அம்சங்கள் மதிப்பிடப்படுகின்றன?

ஓர் உளவியல் பரிசோதனையில், பலவிதமான தன்மைகள் மதிப்பிடப்படுகின்றன:

தகவமைப்புப் பதிவுமுறை மதிப்பீடுகள்: இந்த மதிப்பீடுகள் ஒருவருடைய சமூக மற்றும் இயல்பான


திறன்களை மதிப்பிடுவதற்காக நடத்தப்படுகின்றன. உதாரணமாக ஒரு குழந்தை சமூகச் சூழல்களில் எப்படி
நடந்துகொள்கிறது, பள்ளியில் அல்லது வட்டில்
ீ பல்வேறு சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கான வாழ்க்கைத்
திறன்கள் அதற்கு உள்ளவனவா போன்றவற்றை மதிப்பிடுவதற்கு இந்தப் பரிசோதனை பயன்படும். பொதுவாக
இந்தப் பரிசோதனை அறிவாற்றல் பரிசோதனையுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. குறிப்பாக, தினசரி
நடவடிக்கைகளைச் செய்ய இயலாதவர்கள் அல்லது குறைவான அறிவாற்றல் பிரச்னை உள்ளதோ என்று
சந்தேகிக்கப்படுகிறவர்களுக்கு இந்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

திறனறிதல் பரிசோதனை: இந்தப் பரிசோதனை, பல்வேறு செயல்பாடுகளை ஒருவரால் செய்ய இயலுகிறதா


என்பதை மதிப்பிடுகிறது. உதாரணமாக, சிலர் இயக்கவியல் சார்ந்த செயல்பாடுகளில் மற்றவர்களைவிடச்
சிறந்து விளங்குவார்கள், சிலர் மொழி மற்றும் புரிந்து கொள்ளுதல் திறன்களில் சிறந்து விளங்குவார்கள், சிலர்
படைப்புணர்ச்சி சார்ந்த விஷயங்களில் சிறந்து விளங்குவார்கள். இப்படி வெவ்வேறு திறன்களில் ஒருவர்
எவ்வளவு திறமைசாலி என்பதை அளவிடுவதில் இந்தப் பரிசோதனை கவனம் செலுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட
வேலைக்கு ஒருவர் சரிப்படுவாரா என்பதைத் தீர்மானிப்பதற்கு இந்தப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
இதன்மூலம், ஒருவருடைய திறன்கள் அடிப்படையில் அவருக்கு ஏற்ற வேலையைத் தீர்மானிப்பது
எளிதாகிறது.

அறிவாற்றல் பரிசோதனைகள்: இந்தப் பரிசோதனைகள் ஒருவருடைய பிரச்னையை தீர்க்கும் திறன்,


தர்க்கரீதியில் சிந்திக்கும் திறன், மொழி வளம், புரிந்துகொள்ளும் திறன், ஞாபகத்திறன் போன்றவற்றை
மதிப்பிடுகின்றன. இவற்றைப் புத்திசாலித்தன பரிசோதனைகள், IQ பரிசோதனைகள், பொதுத் திறன்
பரிசோதனைகள் என்றும் அழைப்பார்கள், இவை பெரும்பாலும் கல்வித்துறையில் அதிகம்
பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்கள் தங்களுடைய திறன்களை அடையாளம் கண்டு முழு சாத்தியங்களை
எட்டுவது இந்தப் பரிசோதனைகள் மூலம் சாத்தியமாகிறது.

கல்வி / சாதனைப் பரிசோதனைகள்: இந்தப் பரிசோதனைகள் ஒரு குறிப்பிட்ட தலைப்பை ஒருவர் எந்த
அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார் என்பதை மதிப்பிடப் பயன்படுகின்றன. உதாரணமாக கணிதம், வாசிப்பு
போன்ற திறன்களை ஒருவர் எந்த அளவுக்குப் பெற்றிருக்கிறார் என்பதை அறிதல், அவற்றைக் கற்பதில்
அவருக்கு ஏதேனும் சிரமங்கள் உள்ளனவா என்று அடையாளம் காணுதல் போன்றவை. இந்த வகையிலான
பரிசோதனைகள் பெரும்பாலும் கல்வித்துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன, ஒரு குழந்தையின்
முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு இவற்றை நிபுணர்கள் பயன்படுத்துகிறார்கள்.

வழக்கு சார்ந்த உளவியல் பரிசோதனைகள்: இந்தப் பரிசோதனைகள் பொதுவாக அறிவாற்றல், ஆளுமை,


நரம்பியல்-உளவியல் ஆகிய மதிப்பீடுகளின் தொகுப்பாக அமைகின்றன. இதன்மூலம் ஒருவர் ஒரு குறிப்பிட்ட
குற்றத்தைச் செய்தாரா இல்லையா என்பதை தீர்மானித்து உறுதிசெய்ய இயலும். ஆகவே இந்தப்
பரிசோதனைகள் பெரும்பாலும் சட்டத்துறையில் செய்யப்படுகின்றன.

மனநல மதிப்பீடு: இந்தப் பரிசோதனை ஒருவருடைய மருத்துவ வரலாறு, குடும்ப வரலாறு, இப்போதைய
மனநல நிலை ஆகியவற்றைப்பற்றிய விவரங்களைச் சேகரிக்கிறது, இதன்மூலம் அவருக்கு ஏதேனும் மனநலப்
பிரச்னை இருக்கக்கூடுமா என்பதை அடையாளம் காண்கிறது. இதன்மூலம் பிரச்னையை அடையாளம்
காணுதல், சிகிச்சை வழங்குதலுக்கு உதவுகிறது.

நரம்பியல்-உளவியல் பரிசோதனை: இந்தப் பரிசோதனை ஒருவருடைய மூளை எப்படி இயங்குகிறது என்பதை


ஆராய்கிறது. அவருடைய மூளையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதை அடையாளம் காண்கிறது.
உதாரணமாக, மூளைக்காயம் கொண்ட ஒருவர் அல்லது டிமென்சியா அபாயம் உள்ள ஒருவருடைய
ஞாபகத்திறன் பரிசோதிக்கப்படலாம் அதன் அடிப்படையில் அவருடைய மூளையின் இயங்குதிறனில்
ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பது தீர்மானிக்கப்படலாம்.
ஆளுமை மதிப்பீடு: இந்தப் பரிசோதனை ஒருவருடைய ஆளுமைப் பண்புகளில் கவனம் செலுத்துகிறது.
இதைக்கொண்டு ஒருவர் அதிகம் அகவயத் தன்மை கொண்டவரா அல்லது புறவயத்தன்மை கொண்டவரா சுய
உறுதிப்பாடு கொண்டவரா, அல்லது பிறருடன் பழகத் தயங்குபவரா என்பது போன்ற விஷயங்களைக்
கண்டறியலாம். இதன்மூலம் அவர்கள் வெவ்வேறு வாழ்க்கைச் சூழல்களுக்கு எப்படி எதிர்வினை
ஆற்றுவார்கள் அந்தச் சமயங்களில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதை மதிப்பிடலாம்.

ஆலோசகர்

ஆலோசனை வழங்குதல் என்றால் என்ன?

ஆலோசனை வழங்குதல் என்பது ஒரு சிறப்பான, செயல்முறைசார்ந்த உளவியல் ஆகும். இது பல்வேறு
வாழ்க்கைச்சூழல்கள் காரணமாக ஏற்படும் உணர்வுநிலை, நடவடிக்கை சார்ந்த அல்லது சமூகம் சார்ந்த
பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. உதாரணமாக ஒருவருக்குப் பணியிடத்தில் தொல்லைகள்
இருக்கலாம், பள்ளி அல்லது கல்லூரியில் தொல்லைகள் இருக்கலாம், குடும்பத்தில் தொல்லைகள்
இருக்கலாம், இவற்றின்மூலம் அவருக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளை ஆலோசனைமூலம் சரிசெய்ய
இயலும்.

ஆலோசனை வழங்குபவர் பல்வேறு கட்டமைப்பான செயல்முறைகளைப் பயன்படுத்துகிறார். இவை


வழிகாட்டுகிற அல்லது வழிகாட்டாத வழிமுறைகளாக அமைகின்றன. இதன்மூலம் ஆலோசனை பெறுபவர்
தர்க்கரீதியில் சிந்தித்து, சரியான தீர்மானங்களை அடைய உதவி வழங்கப்படுகிறது. ஓர் ஆலோசகரிடம்
பாதிக்கப்பட்டவர் பேசுகிற அனைத்து விஷயங்களும் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும்.

ஆலோசனை வழங்குவோர் பின்வரும் விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள்:

தீவிர மனநலப் பிரச்னைகளைவிட, இயல்பான அல்லது மிதமான பிரச்னைகளைத் தீர்ப்பதில்தான்


ஆலோசகர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். இந்தப் பிரச்னைகள் பொதுவாக வாழ்க்கை நிகழ்வுகளால்
மனத்திற்கு அழுத்தம் உண்டாக்கும் காரணிகளால் ஏற்பட்டவையாக இருக்கும்.இவர்கள் ஒருவருடைய
சிந்தனை முறை, நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள். காரணம்
இவைதான் அவர்களுடைய செயல்பாட்டிற்கு வழிவகுக்கின்றன.இவர்கள் பழைய நிகழ்வுகளைவிட
இப்போதைய நிகழ்வுகளுக்குதான் அதிக முக்கியத்துவம் தருவார்கள்.ஒருவருக்குத் தேவைப்படுகிற
படைப்புணர்ச்சி, தன்னை வெளிப்படுத்துதல், உறுதிப்பாடு போன்றவற்றை அவருக்குள் உண்டாக்குவதில்
கவனம் செலுத்துவார்கள்.இவர்கள் ஒருவருடைய உணர்வுப்பூர்வமான, அறிவார்ந்த சிந்தனையை
மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவார்கள், வாழ்க்கைச் சூழலுக்கு நேர்விதமான எதிர்வினையாற்றவேண்டும்
என்று வலியுறுத்துவார்கள்.

ஆலோசகர் என்பவர் யார்?


மனநல ஆலோசகர்கள் பலவிதமான பயிற்சிகளைப் பெற்றவர்களாக இருக்கலாம், சிலர் மனநல
ஆலோசனைக்கென்றே முதுநிலைப் பட்டம் பெற்றிருக்கலாம். சிலர் தபால் முறையில் சில மாதப்
பயிற்சிமட்டுமே பெற்றிருக்கலாம். ஆனால் இவர்கள் எல்லாருமே அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்கும்
கலையில் நல்ல பயிற்சி பெற்றிருப்பார்கள், அவர்களுடைய பிரச்னைகளை அவர்களையே அலசச்செய்து,
தர்க்கரீதியிலாகப் பொருந்தக்கூடிய ஒரு தீர்வைக் கண்டறிய உதவுவார்கள்.

மனநல ஆலோசகர்கள் பலவிதமான பிரச்னைகளைக் கையாள்கிறார்கள், ஓர் உளவியலாளர், மனநல


மருத்துவர் மற்றும் உளவியல் சிகிச்சையாளர் சந்திக்கும் சிறிய, பெரிய, நடுத்தரமான பிரச்னைகள்
அனைத்தையும் ஒரு மனநல ஆலோசகரும் சந்திக்கக்கூடும்.

அதேசமயம், ஆலோசனை பெறுகின்ற ஒரு நபரின் பிரச்னை இந்த ஆலோசனைமூலம் தீர்வதாகத்


தெரியாதபோது, அந்த ஆலோசகரே பாதிக்கப்பட்டவரிடம் இதுபற்றித் தெரிவித்துவிடுவார். அவர் எத்தகைய
மனநல நிபுணரைச் சந்தித்தால் அவரது பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கக்கூடும் என்பதையும் அவர்
குறிப்பிடுவார். அதன்மூலம் அவருடைய பிரச்னை சரியாகக் கண்டறியப்படுவதையும், சிகிச்சை அல்லது
மருந்துகள் வழங்கப்படுவதையும் உறுதிசெய்வார்.

மனநலச் சமூகப் பணியாளர்

மனநலச் சமூகப் பணியாளர்கள், பயிற்சி பெற்ற மனநல நிபுணர்கள் ஆவர். இவர்கள் ஒருவருடைய மனநலப்
பிரச்னைகளோடு வரக்கூடிய வாழ்க்கை, சமூக பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிய உதவுவார்கள்,
அதன்மூலம் அவர் தன்னுடைய வாழ்க்கையை இயல்பாக வாழத் துணைபுரிவார்கள்.

மனநலச் சமூகப்பணியாளர்கள் பின்வரும் பணிகளில் கவனம் செலுத்துகிறார்கள்:

பாதிக்கப்பட்டவருடைய உணர்வுசார்ந்த, சமூக, பொருளாதார, மனநலத் தேவைகளை


மதிப்பிடுதல்.பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் அந்தப் பிரச்னையைப்பற்றிச்
சொல்லுதல், அதன்மூலம் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படுகிற சிகிச்சைத் திட்டத்தை அவர்கள்
புரிந்துகொள்ள வழிசெய்தல்.பாதிக்கப்பட்டவருடைய சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துதல்,
அவர்களுக்குப் பயன்படக்கூடிய சமூக வளங்களை அடையாளம் காணுதல்.தனிநபர், குழு, குடும்பச் சிகிச்சைக்கு
ஏற்பாடு செய்தல்.பாதிக்கப்பட்டவர், அவரது குடும்ப உறுப்பினர் மற்றும் நலப்பராமரிப்பு உறுப்பினர்களிடையே
தகவல் தொடர்பை மேம்படுத்துதல்.பாதிக்கப்பட்டவர் மீ ண்டும் சமூகத்துடன் ஒருங்கிணைவதற்கான ஒரு
திட்டத்தைத் தயாரித்தல்.சுருக்கமாகச் சொன்னால், மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள், சுமுகமாகக்
குடும்ப, சமூக வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு இவர்கள் முக்கியப்பங்காற்றுகிறார்கள்.

மனநலச் செவிலியர்
மனநலச் செவிலியர்கள், மனநலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களை மதிப்பிடுகிற, அவர்களுக்கு
வந்துள்ள பிரச்னைகளைக் கண்டறிகிற, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கிற திறன் வாய்ந்தவர்கள். இதற்காக
இவர்கள் தனிநபர்கள், குடும்பத்தினர், குழுக்கள் மற்றும் சமூகத்தினரோடு இணைந்து பங்காற்றுகிறார்கள்,
அவர்களுடைய மனநலத் தேவைகளை மதிப்பிட்டு அதற்கேற்பச் செயல்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள்
மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மனநலப் பிரச்னைகளைப்பற்றிச் சொல்லித்தருகிறவர்களாகவும்,
ஆலோசகர்களாகவும், சிகிச்சை வழங்குகிறவர்களாகவும்கூட இவர்கள் பங்காற்றுகிறார்கள்.

அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் இருக்கின்ற மனநலக் கோளாறுகளினால் ஏற்படும் பாதிப்புகள்


சொல்லில் அடங்காதவை. மனநலப் பிரச்னையின் அடையாளம் மற்றும் அறிகுறிகளை தெரிந்து
கொள்வதுதான், அதிலிருந்து மீ ண்டு வருவதற்கான முதல் படி.

வட்டில்
ீ ஒருவருக்கு மனநலப் பிரச்னை ஏற்பட்டால் நன்கு படித்த, விவரமறிந்தோர் கூட பல தருணங்களில்
‘சைக்கலாஜிஸ்டிடம் போவதா, சைக்கியாட்டிரிஸ்டிடம் போவதா’ என குழப்பமடைகின்றனர். சைக்கலாஜிஸ்ட்
(Psychologist), சைக்கியாட்டிரிஸ்ட் (Psychiatrist) இந்த இருவருக்கும் வித்தியாசம் என்ன?

இரண்டுமே வெவ்வேறு துறைகள். மனநோய் மருத்துவர் (Psychiatrist) என்பவர் உளவியல் துறையில் ‘மருத்துவ
டாக்டர்’ (M.D. Psychiatry) பட்டம் பெற்றவராக இருப்பார். இவர், மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சரியாகக்
கணித்து, பெரும்பாலும் மருந்துகள் மற்றும் மின் அதிர்வு மூலம் சிகிச்சை அளிப்பார்.

மனநல ஆலோசகர் என்பவர் உளவியல் படிப்பில் டாக்டர் பட்டம் (உளவியலாளர் / Psychologist) அல்லது மனநல
ஆலோசனை படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவராக இருப்பார் (Psychology / Psychiatric social work / Guidance
counseling). இவர் மருந்துகள் இன்றி கவுன்சலிங் மற்றும் சைக்கோதெரபி மூலம் சிகிச்சை அளிப்பார்.

உளவியல் ஆலோசனை வழங்குவதற்கான உரிமமோ, சிறப்புப் பயிற்சி பெற்ற தகுதி பெற்றவரிடமோ மட்டுமே
ஆலோசனைக்கு செல்ல வேண்டும். மனது சார்ந்த விஷயமானதால், இதற்கென தகுதி பெற்றவர்கள் மட்டுமே
மனநல ஆலோசனை (counseling) மற்றும் சிகிச்சை (psychotherapy) வழங்க அங்கீ காரம் அளிக்கப்பட்டுள்ளது.

மனநல ஆலோசகர், ஒருவரிடம் அறிவியல் அணுகுமுறையில் பேசி, பிரச்னைகளை அவர்களின்


கண்ணோட்டத்திலிருந்து பொறுமையாக கேட்டுத் தெரிந்து கொள்வார். பின்னர் அதனை, உளவியல் ரீதியாக
ஆராய்ந்து அதற்கான சரியான வழிகாட்டல் மற்றும் ஆலோசனை அளிப்பார்.

அவர்களின் பிரச்னைக்கான தீர்வை அட்வைஸாக கொடுக்காமல், பாதிக்கப்பட்டவரே தேர்ந்தெடுக்க


வழிவகுப்பார். ஒருவரின் சிந்தனை (thinking), உணர்வுகள் (feeling) மற்றும் செயல்பாடுகளில் (behavior) சரியான
மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வழி வகுப்பார்.
வாழ்வியல் திறன்கள், ஆரோக்கிய வாழ்க்கை பாணி (Healthy Life Style) குறித்த பயிற்சி மற்றும் மனதின்
செயல்பாடுகளைக் குறித்த புரிதல் ஏற்படுத்தும் உள கல்வி (psychoeducation) போன்ற உத்திகளும் இதற்காக
பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக உளவியல் காரணங்களால் ஏற்படும் மனநலப் பிரச்னைகளான மனப்பதற்ற உள நோய் (Anxiety


Disorders), அளவுக்கு மீ றிய அச்சம் (Phobia), மனச்சோர்வு (Depression) மற்றும் மன அழுத்தம் (Stress), கணவன்,
மனைவி உறவுகளில் ஏற்படும் பிரச்னைகள், டீன் ஏஜ் மனக்குழப்பங்கள், விவாகரத்து,

நெருக்கமானவரின் மரணம்/பிரிவு, படிப்பில் கவனம் குறைதல் போன்ற பல பிரச்னைகளுக்கு மனநல


ஆலோசகர் (psychologist/professionally trained counselors) அளிக்கும் ஆலோசனை மற்றும் சைக்கோதெரபியே
போதுமானதாகும். உயிரியல் மற்றும் மரபணு காரணங்களால் ஏற்படும் மனநோய்களுக்கு (உதாரணம்:
மனச்சிதைவு நோய்), மனநோய் மருத்துவர் அளிக்கும் மருந்துகளும் தேவை.

பெரியவர்களுக்கான பொது அறிகுறிகள்

தெளிவற்ற சிந்தனை

நீடித்திருக்கும் கவலை அல்லது எரிச்சல்

மாறிவரும் அதிக சந்தோஷம் / அதிக கவலை

மிகுந்த / தேவையில்லாத பயம், சோகம் அல்லது பதற்றம்

தனிமையை நாடுவது, குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகுவது

உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் மிகுந்த மாற்றம் ஏற்படுவது

அளவுக்கு அதிகமான கோபம்/ குற்றவுணர்வு

இல்லாத விஷயத்தைப் பார்ப்பது / யாரோ தம் காதில் பேசுவது போல உணர்தல்

தினசரி செயல்பாடுகளைக் கூட சமாளிக்க முடியாமல் திணறுதல்

தற்கொலை எண்ணங்கள்

பல மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகும் கண்டுபிடிக்க முடியாத உடற்கோளாறுகள் (உதாரணம்: எரிச்சல்


கொண்ட குடல் நோய் / Irritable Bowel Syndrome)

அளவுக்கு அதிகமான, கட்டுப்படுத்த முடியாத மது / போதைப் பழக்கம்

எதிலும் நாட்டமின்மை

திரும்பத் திரும்ப தொந்தரவு செய்யும், விரும்பத்தகாத எண்ணங்கள் / திரும்பத் திரும்ப ஒரே செயலை
கட்டுப்பாடின்றி பதற்றத்துடன் செய்வது (உதாரணம்: அடுப்பை அணைத்து விட்டோமா என பலமுறை
சரிபார்ப்பது/ கையை கழுவிக்கொண்டே இருப்பது)
காரணமில்லாமல் மற்றவர் மீ து சந்தேகப்படுவது

எல்லாவற்றுக்கும் பிறரைச் சார்ந்திருப்பது

தன்னைத் தானே காயப்படுத்தி கொள்ளுதல்

அதீதமாக சுத்தம் பார்ப்பது

தொடர்ந்து பாலியல் எண்ணங்களோ/ ஆசையோ இல்லாமல் இருத்தல்

பாலுறவில் வெறுப்பு / துணையை இதுசம்பந்தமாக தவிர்ப்பது

விரைவாக விந்து வெளியேறுதல் / உச்சகட்டம் அடையாதிருத்தல் / அடைவதில் தாமதம்

வழக்கத்துக்கு மாறான பாலியல் விருப்பங்கள் (உயிரில்லாத பொருட்கள், ஆண் பெண்ணாக, பெண் ஆணாக
உடை மாற்றுதல், பிறரையோ, தன்னைத் தானோ துன்புறுத்துதல், அடுத்தவரின் படுக்கையறையை எட்டிப்
பார்த்தல், பிறப்புறுப்பை அந்நியரிடம் காட்டுதல், குழந்தையுடன் உறவு கொள்ளுதல் என ஆரோக்கியமற்ற
முறையில் பாலியல் உணர்வுகளால் தூண்டப்படுபவர்கள்.)

டீன் ஏஜ் பருவத்தினருக்கான பொது அறிகுறிகள்

பள்ளி செயல்திறனில் மாறுதல், திடீரென மதிப்பெண் குறைதல்

தினசரி செயல்பாடுகள் மற்றும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் போவது

உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் திடீர் மாற்றம்

உடல் ரீதியான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுதல்

பள்ளிக்குச் செல்லாமலிருத்தல், திருடுதல், பொருட்களை சேதம் செய்தல், கட்டுப்படாமல் இருத்தல்

உடல் எடை குறித்த மிகுந்த பயம் / பதற்றம்

பசியின்மை மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் கூடிய நீடித்திருக்கும் எதிர்மறை மனநிலை

அடிக்கடி கோபப்படுதல்

கட்டுப்படுத்த முடியாத போதை / குடிப்பழக்கம்

பிடித்த விஷயத்தில் நாட்டமில்லாமல் போவது

குறிப்பிட்ட வயதுக்கு பின்னரும் கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர் கழித்தல்

திரும்பத் திரும்ப வரும் துன்புறுத்தும் எண்ணங்கள், திரும்பத் திரும்ப கை கழுவுவது மற்றும் சரி பார்ப்பது
போன்ற நேரத்தை வணடிக்கும்
ீ செயல்பாடுகள்.

சிறு குழந்தைகளுக்கான பொது அறிகுறிகள்

பள்ளி செயல்திறனில் மாற்றம் ஏற்படுதல்


முயற்சியெடுத்தும் குறைந்த மதிப்பெண் பெறுதல்

அதிகமான கவலை / பதற்றம் / பயம்

ஒரிடத்தில் உட்கார முடியாமல் நிலைகொள்ளாமல் இருத்தல் (Hyperactive)

தொடர்ந்து வரும் கெட்ட கனவுகள்

தொடர்ந்து நிர்வாகத்துக்கு பணிந்து போகாமல் இருத்தல் மற்றும் வன்முறைச் செயல்பாடுகளில் ஈடுபடுதல்

அடிக்கடி எரிந்து விழுதல் / கோபப்படுதல் (Temper tantrums)

கவனம் செலுத்த முடியாத நிலை ( கவனச் சிதறல் / Poor concentration)

வார்த்தைகளையும் ஒலியையும் தொடர்புபடுத்த முடியாமல் போவது

ஒருவர் சொல்வதை பின்பற்ற இயலாமை (not able to follow directions)

அம்மாவின் கண்ணை பார்க்காமலிருத்தல், சிரித்தால் பதிலுக்கு சிரிக்காமல் இருத்தல்

கற்றல் குறைபாடுகளான எழுதுவது, படிப்பது கணக்கு போடுவது போன்றவற்றில் ஏற்படும் குறிப்பிட்ட


பிரச்னைகள் (Learning Disabilities)

பேசத் தொடங்குவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருத்தல்.

இந்த அறிகுறிகள் எல்லோருக்கும் இயல்பாக இருப்பது போலவே தோன்றக் கூடியவையே. எப்போது அவை
அளவுக்கு அதிகமாகவும் நீடித்தும் காணப்பட்டு, ஒருவரின் தனிப்பட்ட திறனைப் பாதித்து, தினசரி
வாழ்க்கைக்கு இடையூறாக உள்ளதோ, அப்போது உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டியது
அவசியமாகிறது. மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப தன்னைத் தானே மாற்றி கொள்பவன்தான்
மனநலம்வாய்ந்தவனாகக் கருதப்படுகிறான்.

அப்படி மாற இயலாமல் வாழ்க்கை பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் போகும் பலவன


ீ மனநிலை
கொண்டிருப்பவர்களே பெரும்பாலும் மனநல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். முற்றிய மனநலக் கோளாறால்
பாதிக்கபட்டவர்கள்தான் மனநல சிகிச்சை பெற வேண்டும் என்பதில்லை. வாழ்க்கையில் ஏற்படும்
பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் உடைந்து போகும் தருணங்களிலும் ஆலோசனை பெறுவது அவசியம்.

உடலுக்கு வரும் ஜுரம் போன்ற சிறிய உபாதைக்கு மருத்துவரை அணுகி நலம் பெறுவது போலத்தான்
மனதுக்கு பிரச்னையெனில் மனநல ஆலோசகரை அணுகுவதும்... இதை எல்லோரும் உணர்ந்து விட்டால்
அதுவே ஆரோக்கியமான மாற்றம்தான். இம்மாற்றத்தினால் ஏற்படும் நல்ல மன ஆரோக்கியத்தால் நம்
மக்களின் திறனும் பல மடங்கு அதிகரிக்கும். மனம் தெளிவாக,
சந்தோஷமாக இருந்தால் மட்டுமே, ஒருவர் தன் முழுத்திறனுடன் செயல்பட முடியும். இதனால் வட்டில்

உறவுகளும் மேம்பட்டு குடும்பமேமகிழ்ச்சியாக இருக்கும். பச்சிளம் குழந்தை முதல் முதியோர் வரை
எல்லோரையும் பாதிக்கும் மன அழுத்தத்தைப் (Stress) பற்றி விரிவாக அடுத்து வரும் இதழ்களில் பார்ப்போம்.

கூட்டுக் குடும்பங்கள் உடைந்துபோன இந்தக் காலகட்டத்தில்தான் பெற்றோரின் பொறுப்பு இரு மடங்காகிறது.


பிள்ளைகளின் மனநிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், பிரச்னை சிறியதாக இருக்கும்போதே,
பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசி தெளிவுபடுத்தினால், எந்தப் பிரச்னையிலிருந்தும் மீ ட்கலாம். பெற்றோர்
இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில் பிள்ளைகள் கவனிப்பாரின்றி பாதுகாப்புணர்வு இழந்து, பலவித
பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர். இதற்காக, எல்லா நேரமும் பிள்ளைகளுடனே செலவிட வேண்டும்
என்பதில்லை. தரமான நேரம் எனப்படும் Quality Time செலவு செய்தால் போதும். 20 நிமிடமே என்றாலும் அதை
மகிழ்ச்சியாக பிள்ளைகளிடம் செலவழித்தாலே போதும்.

பிள்ளைகளுக்கு உணவும், இடமும், ஐபேட், டி.வி.யும் தந்தால் மட்டும் போதாது. அவன் சந்தோஷமாக
உள்ளானா என கண்காணிக்க வேண்டியதும் பெற்றோரின் கடமையே. பெற்றோரிடம் எதையும் பகிர்ந்தது
கொள்ளலாம் என்ற நம்பிக்கையை பிள்ளைகளுக்கு விதைக்க வேண்டியதும் அவசியம்.

You might also like