Professional Documents
Culture Documents
அகநானூறு
அகநானூறு
ஆற்றில் நீர் ஓடும்போது அதில் உள்ள மணல் உருண்டு ஓடுவது போல என் நெஞ்சு நெகிழ்ந்து ஓடுகிறது.
இப்படி ஓடும்படிச் செய்துவிட்டு என் கொடியவர் சென்றிருக்கும் தேசத்தில் இடைவிடாமல் வீச அங்குச்
செல்வாயாக. அங்குச் சென்றறு வீசினால், பொருளீட்டும் வினையில் முனைப்புடன் இருக்கும் அவர் உன்னால்
என்னைப் பற்றி அவர் நினைக்கவும் கூடும்.
சூரியன் தன் வெயில் கைகளால் ஈரத்தை வாங்குகிறான். எங்குமே பச்சை இல்லை. பயன்பாடு இல்லாமல்
போய்விட்டது. நிலம் வெடித்துக் கிடக்கிறது. இந்த நிலைமை மாறிக் காடெல்லாம் அழகு பெறும்படி இப்போது
பெருமழை பொழிகிறது.
காடெல்லாம் பூக்கள். எங்கும் வண்டுகளின் ஆரவார ஒலி. முல்லை, தோன்றி, பூக்களின் மணம் கமழ்கிறது.
அந்த மணம் காதல் வெறியை உண்டாக்குகிறது.
இப்படி அவள் நினைப்பாள்.
பகைவரின் மதில் வாயிலை ஒடித்து தந்தப் பூண் சிதைந்திருக்கும் யானையை, போரை விரும்பிக்
கட்டுத்தறியை முரிக்கும் யானையை வேந்தன் போர்தத ் ொழிலிருந்து விடுவித்தால் நல்லது.
இவ்வாறு தலைவன் நினைக்கிறான்.
அந்த மகிழ்நன் அவன் மனைவியிடம் அப்படிச் சொல்லித் அவளைத் தேற்றுகிறான் என்றால் நேற்று காவிரி
வெள்ளத்தில் (கோடு தோய் மலிர் நிறையில்) மாலை அணிந்த யானைபோல் மகிழ்ச்சித் திருமணம்
செய்துகொண்டு என்னை ஈரப்படுத்தி விளையாடினானே (உடலுறவு ஈரம்) அவன் யார்? தோழி, நீயே சொல்,
என்று பரத்தை தன் தோழியிடம் வினவுகிறாள்.
யாமப் பொழுது முழுவதும் உன்னோடு இன்பமாகக் கழித்தேன். ஆனால் என் நெஞ்சம் துன்பத்தில்
வருந்துகிறது. கண்ணீர்ப் பெருக்குடன் வாழ்கிறேன். இதனைத் தவிர்த்தல் வேண்டும். நீ வானளாவ உயர்ந்த
மலையின் தலைவன் ஆயிற்றே. களவு இன்பம் வேண்டாமே.
2
இப்படிப்பட்ட வழியில் வருகிறாய். என்னைப் பாதுகாக்கும் கானவர் உறங்கும் காலம் பார்த்து வருகிறாய். மான்
செல்லும் சிறிய காட்டுப்பாதையில் வருகிறாய். இப்படி எனக்கு அச்சம் தரும் வகையில் வருவதைத் தவிர்க்க
வேண்டும். (மணந்துகொள்ள வேண்டும்).
நண்டு
கடற்கரை நிலமாகிய கானலும் சொல்லாது. உப்பங்கழியும் சொல்லாது. தேன் துளிக்கும் மலர்களைக் கொண்ட
புன்னை மரமும் சொல்லாது. சொல்லக்கூடியவர் உன்னைத் தவிர வேறு யாரும் எனக்கு இல்லை. நீதான்
இந்தத் துறையில் இருக்கிறாய். கழியில் பூத்திருக்கும் நெய்தல் பூவின் மணத்தோடு தேன் அமிழ்தை உண்ட
வண்டினம் களிப்பு மயக்கத்தில் பறக்க முடியாமல் கிடக்கும் துறையை உடைய துறைவன் நீதான்.
நண்டே (அலவ) நீதான் எனக்குச் சொல்ல வேண்டும்.