Professional Documents
Culture Documents
1.0 முன்னுரை
1
கல்வி என்பது எதிர்கால வாழ்வின் தயார்நிலையினது படிமுறை என்பது அன்றி வாழ்வியலின்
செய்முறையே ஆகும். கல்வி என்பது பொதுவாகக் கற்றல் என்பதுடன் இணைத்துக்
கூறப்படுகிறது (எஸ்.சந்தானம் & வி.கணபதி, 2010). பொதுமறையில் கல்விக்கென ஒரு
அதிகாரம் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. கல்வியெனும் பொக்கீஷத்தைக் களவாடுவது
முயற்கொம்பு. அதனை வாசித்து சுவாசித்து உட்கொணர்வதில்தான் பலன் உள்ளது.
அவ்வகையில் தமிழ்க்கல்வியின் அறிவு ஒருவனை நெறிப்படுத்தக்கூடிய ஒட்டுமொத்த
வேதமாக விளங்குகின்றது. பல நூற்றாண்டுகள் கடந்து இன்னமும் தன் மாண்பினை
இழக்காதிருக்கும் தமிழின் சிறப்பு பாராட்டத்தக்கது. இவ்விடுபணியில் மலேசியத் தமிழ்க்கல்வி
தொடர்பான விடயங்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. முதற்கண்ணாக அதன் வரலாறு
இயம்பப்படுகிறது.
2
கல்வி. இந்நிலையில் தமிழ்க்கல்வியினை உற்று நோக்கும் போது அதற்க்கேற்ற
கலைத்திட்டத்தினை அமைத்து அதனை சீர்மைப்படுத்தி இன்றைய கற்றல் கற்பித்தலில்
இணைத்திருப்பது தெரிகிறது. இது தமிழ்க்கல்வியினை மிகுந்த பயனுள்ளதாகவும்
மகிழ்ச்சிகரமானதாகவும் அமைய வழிவகுக்கிறது. மாணவர்கள் அறிவாற்றல், ஆன்மிகம், உடல்,
உள்ளம் ஆகியவற்றில் சமவளர்ச்சி அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது (DSKP,
2016).
3
பொழுதுபோக்கெனும் இயல்பைத் தாண்டி அறிவின் தேடலுக்கு முன்னுரிமை கொடுக்க
வேண்டியவர்கள் தொழில்நுட்பத்தின் அதீத தாக்கத்தினால் வாசிப்பதை குறிப்பாக
தமிழ்மொழியை வாசிப்பதை புறக்கணிக்கின்றனர். தமிழ்க்கல்வியின் நிரந்தரத்தன்மை
அதனை கற்றுக்கொள்ளும் மானுட வர்கத்தினைச் சார்ந்திருக்கிறது. தமிழறிவு
அடிப்படையில் இருந்தாலும் அதனைப் பயன்பாட்டிற்குட்படுத்துவதில் இன்னமும் சிரமம்
மேற்கொள்வது முறையான வாசிப்பின்மையே. அழகிய வரம்புகளுக்கு உட்படுத்தி
சீர்படுத்தப்பட்ட தமிழின் இனிமையை சுவைக்க மறுக்கும் சமூகம் உருவாகிக்
கொண்டிருப்பது தமிழ்க்கல்விக்கு பெருத்த சவால். வாசிப்பின்மையினால் பேச்சாற்றல்
முடங்கி போகும் அபாயமுள்ளது. இது தொடர்ந்தால் நாளடைவில் நம் தாய்மொழியே
அந்நிய மொழியினைப் போல் ஆகிவிடுமென்பது கவனத்திற்குள்ளா வேண்டிய விடயம்.
4
எதிர்காலவியல் அடிப்படையில் மாணவர்கள் நடந்தவற்றிலிருந்து நடக்கவிருப்பதை
அனுமானித்து அதன் விளைவை ஊகித்து தயார்படுத்திக் கொள்ளுதல் ஆகும்.
எதிர்காலவியலைக்கண்டிப்பாக எல்லா பாடத்திலும் ஆசிரியர் தொடர்பு படுத்த வேண்டும்
(சேகர் நாராயணன், 2017). காட்டாக, வாசிப்புத்திறனை வளப்படுத்தும் போது நன்னெறிப்
பண்பைப் போற்றும் வகையில் வாசிக்கப்பெறும் வாசகங்களில் நன்னெறி பண்பினை
உட்புகுத்தி முறையாக வாசிக்கப் பணித்து அதனை பிற்காலத்தில் பயன்படுத்த வேண்டிய
சூழல்களையமைத்து அதில் அவர்களை ஈடுபடச் செய்வது விளைப்பயன் தரும். அதோடு
மட்டுமின்றி வாசிப்பு பழக்கத்தைக் கூட்டிட அறிவியல் கதைகளை கொடுப்பது அவர்களின்
சிந்தனையை தூரநோக்கிற்குக் கொண்டு விடும். இதனால் கற்பனையாற்றல் வளர்வதோடு
வாசிப்பில் ஆர்வமும் ஏற்படுகிறது. இவ்வகை மதிர்ப்புயர்வு தரும் கூறுகள் தமிழ்க்கல்வியின்
சவால்களைத் தூர வீசியெறிகிறது.
5
பல்வகை நுண்ணறிவு மிக்க மாணவர்களுக்குத் தமிழ்க்கல்வியை சுவையூட்டும் வகையினில்
போதிக்க, கற்றல் கற்பித்தல் மையமாகவும் இருவழித்தொடர்பாகவும் அமைவது மாணவனை
தேசியகல்வி கோட்பாடு அடிப்படையிலே முழுமை பெற்றமாந்தனாக உருவாக்க உதவும்
என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை ( ரூபனா தர்ஷினி, 2016). மொழித்திறன், ஏரணம், இசை,
இயக்கம், இடம், தன்னறி, சமூகம் போன்ற நுண்ணறிவுகளில் எதாவதொன்றில் மாணவர்கள்
சிறந்து விளங்குவதை அடையாளங்கண்டு அவற்றிகேற்ப விளைப்பயனான கற்றல்கற்பித்தல்
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மொழித்திறன் மற்றும் ஏரணத்தை மட்டும்
உயர்வாகப் பார்ப்பதை விடுத்து மாணவர்களுள் எழும் பிற நுண்ணறிவுகளையும்
அதற்கீடாக நினைத்து மதிப்பது அவசியமென அதனை உருவாக்கிய ஹோவர்ட் காட்னர்
எடுத்துரைக்கிறார்.
6
4.3 காலப்போக்கில் குறைந்து வரும் தமிழ்ச்சார்ந்த பயன்பாடுகள்
7
இக்கூற்றிற்கு வலு சேர்க்கிறது. எதிர்காலத்தில் தமிழ்ப்படைப்புகளை படைத்திட
முனைந்திடும் கற்றோர் தமிழ்த்தொடர்பான புத்தம் புதிய தரவுகளைப் பெறுவதில் அதிக
நாட்டம் காட்டி அதனை அடைய முற்படுவர். நாளைய பேச்சாளராக விளைய
நினைப்போருக்கு அத்துறைச் சார்ந்த தமிழ் தகவல்களை பாடவேளையில் கொடுத்தளித்தும்
அதனை மேலும் பெருவதற்கான வழிவகைகளை கலந்துரையாடுவதும் நன்மை தரும்.
8
கற்பித்தல் நடவடிக்கையில் கரும்பலகையினை இன்னமும் அதிக விழுக்காடு
பயன்படுத்துவது தவறாகவே கருதப்படுகிறது.
9
இதனால் தொழில்நுட்பத்தில் தமிழின் பயன்பாடு பெருகுகிறது. அதுமட்டுமில்லாமல்,
இணைப்பிலுள்ள மெய்நிகர் கற்றல் சூழல் சார்ந்த இணையத்தள வகுப்புகளை
மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அதனுள் ஈடுபடச் செய்து அதன் மூலம் காணொளிகள்,
ஒலிச்சார்ந்த தமிழ் தகவல்கள் போன்றவற்றை பதிவேற்றம் செய்து வீட்டிலிருக்கும்
பொழுதிலும் அதனை அணுகிய வழியமைப்பது தமிழ்க்கல்விக்கு வெற்றி மாலை
சூட்டுகிறது. எனவே தொழில்முனைப்பு திறனெனும் மதிர்புயர்வு தரும் கூறு தமிழின்
வளர்ச்சிக்கு வித்திடுவது அம்பலமாகிறது.
5.0 முடிவுரை
10
இடுபணி 1
1.0 முன்னுரை
11
பேராசிரியர் வி.கணபதி மற்றும் பூ.ஜெயராமன் (2010), மாணவர்கள் தமது சூழ்நிலையுடன்
தகுந்த பொருத்தப்பாட்டைப் பெற்று, உடல் நலத்துடனும் உளநலத்துடனும் வாழ அவர்களுக்கு
உதவுவதே கல்வி என செப்புகின்றனர். இக்கல்வியை முறைப்படுத்தி மாணவர்களிடத்தில்
விதைப்பதன் வேலையைத் தர ஆவண கலைத்திட்டம் பொறுபேற்றுக் கொள்கிறது.
இப்பாடத்திட்டத்தின் மூலம் தேசிய கல்வி தத்துவத்திற்கொப்ப இறைநம்பிக்கை, இறைவழி
நிற்றல் எனுமடிப்படையில் அறிவாற்றல், ஆன்மிகம், உள்ளம், உடல் ஆகியவை ஒன்றிணைத்துச்
சமன்நிலையும் இயைபும் பெறத் தனிமனிதரின் ஆற்றலை முழுமையாக மேம்படுத்தும் ஒரு
தொடர் முயற்சி நடத்தப்படுகிறது (DSK KSSR, 2016). இதனை வகுப்பறையில்
ஆக்கப்பூர்வமான புத்தாக்கச்சிந்தனை மிகு கற்றல் கற்பித்தலின் மூலமும் சமகால
சவால்களுக்கேற்ப விளைப்பயன்மிக்க மதிபீட்டின் மூலமும் படைத்திடலாம். இம்மாதிரியான
கற்றல் கற்பித்தல் நடவடிக்கையையும் மதிபீட்டையும் விளக்குவதே இவ்விடுபணி எனக்கிட்ட
கட்டளை.
12
மாணவர்களைத் தூண்டி அவர்களைப் பாடத்தை நோக்கி ஈர்த்து நன்முறையில் ஆசிரியரின்
கற்பித்தலுக்குக் கவனம் செலுத்துவோராகச் செய்வது பீடிகையின் நோக்கமாக இருக்கிறது என
ஹஃயிஸ் (2010) கூறுகிறார். ஆசிரியர் “எண் எழுத்து” அட்டையை மாணவர்களின் பார்வைக்கு
முன் வைப்பர். மாணவர்கள் அட்டையின் துணையுடன் கணிதத்தைப் பூர்த்தி செய்து
விடைகளைக் கண்டறிவர். கண்டறிந்த சொற்களிடையே இருக்கும் ஒற்றுமையினை சுயமாக
ஊகித்துக் கூற அதனை ஆசிரியர் பாடத் தலைப்புடன் தொடர்புப்படுத்தி பின் பாடத்தினுள்
நுழைவது மாணவர்களின் தயார்நிலையினை உறுதிப்படுத்தி அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு
செல்கிறது.
13
பயன்படுத்தி இவ்விளையாட்டு வடிவமைக்கப்படுகிறது. “Hangman” எனும் ஏட்டு மற்றும்
கரிக்கோல் மூலம் விளையாடப்படும் விளையாட்டினைத் தொழில்நுட்பத்தில் இணைத்து
ஆக்கப்பூர்வமான புத்தாகச் சிந்தனையோடு படங்களை இணைத்துப் போதிய துப்புகளையும்
கொடுத்துக் கோடிடப்பட்டுள்ள காலியிடங்களைச் சரியான எழுத்துகளுடன் நிரப்புவர்.
இப்படியில் கொடுக்கப்பட்டப் படத்தையும் துப்பையும் துணையாகக் கொண்டு மாணவர்கள்
சரியான ணகர, நகர, னகர எழுத்துக் கொண்ட சொல்லைக் கூறுவர். அதனை ஆசிரியர்
கணிப்பொறியில் இணைக்கப்பட்டிருக்கும் சுட்டெலி மூலம் எழுத்து விசைகளைச் சொடுக்கி
நிரப்புவர். அதேவேளையில், அச்சுப்பிரதி எடுத்துக் கொடுக்கப்பட்ட அம்மொழி விளையாட்டின்
காலியிடங்களில் மாணவர்கள் கூறிய பதில்களை எழுதுவர். சரியான பதிலளிக்கும்
மாணவர்களுக்குப் பரிசுகளை ஆசிரியர் வழங்குவர். இவ்விடத்தில் விரவிவரும் கூறான
ஆக்கமும் புத்தாக்கமும் இடம்பெற, சிந்தனைத்திறனான ஊகித்தறிதலும் நடந்தேறுகிறது.
14
3.0 முடிவுரை
மேற்கோள் நூல்கள்
15
சந்தானம்.எஸ், கணபதி.வி. (2010). கல்வி சார் அறை கூவல்கள். சென்னை: சாந்தா
பப்ளிஷர்ஸ்.
மலேசிய மொழித்துறை மற்றும் மொழியியல் சார்ந்த மொழி மற்றும் மொழியிய
ஆசிரியர்க்குழு. (2011). மலேசியப் பன்மொழிச் சூழலில் தமிழ். கோலாலும்பூர்:
சம்பூர்னா பதிப்பகம்.
16
பின்னிணைப்
பு
17