Professional Documents
Culture Documents
HBTL 3303
HBTL 3303
SEMESTER
MEI 2020
HBTL 3303
TATABAHASA BAHASA TAMIL III
1.0 முன்னுரை
அகத்திணை பாடல்கள் என்பது இன்பப்பொருள் இலக்கியம், காதல் இலக்கியம் எனவும்
கூறலாம். ஒருவனும் ஒருத்தியும் கண்டு விழைந்து கூடி இல்வாழ்க்கையேற்று வாழும் ஒழுகலாறு
அகப்பொரிளாக அமைகிறது. மணமக்களாவதற்கு முன்னர் கூறப்படும் கூறுகளைக்
களவொழுக்கம் எனவும், மணமான பின்னர் கூறப்படும் கூறுகளைக் கற்பொழுக்கம் என்றும்
கொண்டுள்ளதாகத் தெரிகிறது.” என்று அ.மணவாளன் விளக்கிறார்.
அகம் வாழ்வின் இன்றியமையாத கூறு என்பதை, “அகம் சிறப்படையாவிடில் புறம்
சிரக்கமுடியாது. பெரியதொரு மரமாக ஒரு பொருள் காட்சி நல்கினாலும் கண்ணுக்கே தெரியாத
சிறிய வேர்களாலேயே மரத்தின் வாழ்வு நடைபெறுகிறது. இச்சிறிய வேர்கள் நன்கு
அமையாவிடில் அப்பெரிய மரம் நன்கு வாழமுடியாது. அதே போலப் பிறர் அறியமுடியாத
சூழ்நிலையில் சிறிய வீட்டில் நடைபெறும் இல்லறம் செம்மையாக அமைந்தாதான் புரவாழ்வு
செம்மைப்படும்" என்று கூறுகிறார் அ.ச.ஞானசம்பந்தன். நம் வாழ்வின் இன்றியமையாத கூறாக
அகம் விளங்குகிறது என்கிறது.
காதல் வாழ்க்கையை கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும்.
ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம் களவு உன்று
வழங்கப்படும். அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் களவு தான் மிகுதியாகப் பேசப்படும்.
களவாவது, பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம். இயற்கையாகவே அத்த
இளமை, முதலிய அத்த தன்மைகளையுடைய ஒருவனும், ஒருத்தியும் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு
அன்பு கொண்டு காதலில் திளைப்பர். அக்காதலர் ஊரறிய மணவினை நிகழும் அளவு, களவு
நெறியில் இருப்பர். களவு நெறியயைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக்
கருதவில்லை. தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியலை
அடுத்து, களவியல் என்ற இயல் வருகின்றது.
களவு இன்பம் நீண்ட நாட்கள் தொடர முடியாது. காளவிற்குப் பல்வேறு இடையூறுகள்
உண்டு. அவை அம்பல், அலர் என இருவகைப்படும். அம்பல் என்பது பிறர் அறியாமல் இருவர்
தமக்குள் தலைவன், தலைவியின் காதல் செய்தியைப் பரிமாறிக் கொள்வது,. இது விரிந்த மலரின்
நறுமணத்தோடு ஒப்புமைப்படுத்தப்படும். ஊரில் அலர் தூற்றத் தொடங்கி விடுவார்கள். அலர்
என்றால் ஊரில் உள்ள மக்கள் இந்தத் தலைவன்- தலைவி காதல் பற்றி ஆங்காங்கே பேசத்
தலைப்படுதல் ஆகும். இத்தக சூழல் வரும்போது காதல் வெளிப்பட்டு, பெற்றோரின்
செவிகளுக்குச் செய்தி எட்டிவிடுவது உண்டு. பொற்றோரில் சிலர் இக்காதலை ஏற்றுக்கொண்டு
திருமண ஏற்பாட்டைச் செய்வர். பெற்றோரே கதலை அறிந்து, திருமணத்தை முடிக்காமல்
பெண்ணையோ, ஆணையோ காதல் நிலையில் இருந்து பிரிக்க நினைத்தால் இருவரும் சேர்ந்து
யாருமறியாமல் ஊரைவிட்டு வெளியூர் சென்றுவிடுதலும் உண்டு.
HBTL 3303
மேற்கோள் குறிப்புகள்
1. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/147502/8/08_chapter%202.pdf
2. http://www.tamilvu.org/library/nationalized/pdf/81-vallikannan/111-
puthukkavithaiyinthottramumvalarchchiyum.pdf
3. https://www.jeyamohan.in/290/
4. http://siragu.com
5. https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/b9ab99bcdb95-
b87bb2b95bcdb95bbfbafbaebcd-i-b85b95ba4bcdba4bbfba3bc8baabcd-
baabbeb95bc1baabbeb9fbc1#section-13
6. http://www.tamilvu.org/courses/diploma/c021/c0214/html/c0214116.htm
7. http://www.tamilvu.org/courses/diploma/d031/d0311/html/d0311661.htm