Professional Documents
Culture Documents
HBTL3203
HBTL3203
SEMESTER
MEI 2020
HBTL 3303
TATABAHASA BAHASA TAMIL III
1.0 முன்னுரை
நாம் அனுபவிக்கும் உணர்ச்சியை அப்படியே பிறரும் உணர தூண்டுவது கலை எனலாம்.
உள்ளதை உள்ளபடி உரைக்காமல், இருப்பது போலவே உணர்ந்து கூறுவது கவிதைக்கலையாகும்.
கவிதை உலகில் கருப்பொருட்களை விளக்கும் வகையின் பல கவிதைகள் உண்டு. அந்த
கவிதைகள், கவிதைகள் வரலாற்றில் கவிதைகள் பெற்ற மாற்றத்தை எடுத்து உரைக்கின்றன.
அதிலும் புதுக்கவிதை மிகவும் சிறப்பானது.
கி.பி இருபதாம் நூற்றாண்டு தொடங்கியப் புதுக்கவிதை, தமிழலக்கியத்தில் தோன்றிச்
சிறக்கலானது. தமிழில் இருக்கும் புதுக்கவிதை இயற்றுவதற்கு முன்னோடியாக அமைந்தது,
பாரதியார் எழுதிய வசன கவிதைகளாகும். யாப்பிலக்கணத்திற்குக் கட்டுபடாமல் கவிதை
உணர்வுகளுக்குச் சுதந்திரமான எழுத்துருவம் கொடுக்கும் வகையில் உருவானதே புதுக்கவிதை.
எதுகை, மோனை, சீர், தளை சிதையாமை முதலான காரணங்களால் மரபுக் கவிதையில்
அடைமொழிகளாக பயனின்றி தொடுத்தல் அமைவதாக உணரத் தொடங்கியமையின் மடைமாற்ற
முயற்சி எனவும் இதனைக் கருதலாம்.
காலத்திற்குக் காலம் வாழ்க்கையை அடையாளம் காட்டும் முயற்சியில் தமிழ்க்கவிஞ்ர்களின்
சிந்தனை மாறுபட்டுள்ளது. இது போன்ற சிந்தனைகள் மாற்றங்கலை ஏற்றுள்ளது. மனித
வாழ்க்கையின் மாற்றங்களுக்கு ஏற்பக் கவிஞ்ர்களின் சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அந்த மாற்றங்களே கவிதையாக தோன்றுகிறது. கவிஞனின் அனுபவத்தில் ஏற்படுவதே
புதுக்கவிதையாக உருமாற்றம் அடைகிறது.
கடந்த காலங்களில் கவிதையானது அரண்மனையில் இருப்பவர்களும், பண்டிதப்
புலவர்களுக்கும் மட்டும் இருந்த நிலை மாறி எளீய மக்கள்களுக்கும் சென்றடைய வேண்டும்
என்று உருவாக்கப்பட்டது.
உத்தி 1- உவமை
ஒரு பொருளை இன்னோரு பொருளுடன் ஒப்பிடுவது மனிதர்களின் குணமாகும். அதே
போல், கவிஞன் ஒரு பொருளை காணும் போது, அதனுடன் இன்னொரு பொருளை
தொடர்ப்புப்படுத்தி இப்பிடுகிறார்கள். இதனைதான் உவமை என்று அழைப்பார்கள்.
புதுக்கவிதைகளில் உவமை இடம்பெற்று அந்த கவிதைக்கே மெறுகுட்டுகிறது. பெரும்பாலும்
இவ்வுமைகள் புதுமையாகவே அமையும். மீ.ப.சோமு தன் கவிதைத் தொகுதிகளில்
உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
உத்தி 2 - உருவகம்
புதுக்கவிதைகளிலும் உருவகம் இடம்பெறுவதை அறிகிறோம். ரோநாவைப் பாத்திகட்டி, நட்டு,
நீர்பாய்ச்சி மலர வைத்தாலும், மலரைப் பறிக்கும்போது வளர்த்தவரையே முள்ளால் கீறி
வடுப்படுத்துவதும் உண்டு, தொழிலாளர்களின் நிலைமையை ரோஜாவோடு
உருவகப்படுத்துகின்றார் இன்குலாப்.
HBTL 3303
“ தொழிற்சாலைப் பாத்திகளில்
வியர்வைநீர் ஊற்றி
இயந்திர ரோஜாக்களை
மலரவைத்தோம்.
இருந்து வறுமை முட்கள்
கீறிய வடுக்களே
பாடுபட்டதற்குக் கிடைத்த
பரிசுப் புத்தகங்கள்”
என்ற கவிதையில்,
தொழிற்சாலை - பாத்தி
வியர்வை - நீர்
இயந்திரம் - ரோஜா
வறுமை - முள்
வடுக்கள் - பரிசு நூள்கள்
என உருவாகம் அமைகின்றது.
உத்தி 3 - படிமம்
வாசிப்பர்களின் மனதில் மட்டும் உணர்வினை உண்டாக்குவதை படிமம் எனலாம்.
அதைத்தவிர பொருளையும் அனுபவத்தையும் உணர்ச்சிகளையும் சொல்லிக் காட்டாமல்
வாசிப்பவர்களின் மனதில் எழுப்பிக் காட்டும் முறையே படிமம் எனலாம். படிமம் என்பது ஒரு
பொருளை விளக்குவதற்காக நிற்கின்ற பிறிதோன்று. இலக்கியத்தில் ஒரு பொருளையோ, ஒரு
நிகழ்ச்சியையோ குறிப்பிட வரும் ஒரு சொல் அல்லது சொற் தொகுதி, தன் இயல்பான
பொருளைத் தவிர்த்து பிறதொன்றினைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுவதே ஆகும்.
இக்காலத்தில் புதுக்கவிதைகளில் படிம உத்தியினை அதிகமாகப் பயன்படுத்திக் கவிஞர்கள்
கவிதை எழுதுகிறார்கள்.மீ.ப சோமு தன்னுடைய “மனப் பறவை" உனும் கவிதைத் தொகுப்பில்
படிமங்களைக் பயன்படுத்தியுள்ளார்.
“தியாகம்" என்ற நுண்பொருளை “ஊதுவத்தி" என்று பருப்பொருளின் வாயிலாக ஆசிரியர்
விளக்குகிறார். பிறருக்காத் தன்னை தியாகம் செய்து சாம்பலாகும் ஊதுவத்தியை,
HBTL 3303
உத்தி 4 - குறியீடு
குறியீடு, புதுக்கவிதையில் ஓர் இலக்கிய உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒன்றை
சொல்வதன் மூலமாக மற்றொன்றை உணரவைப்பதைக் குறியீடு என்று அழைக்கலாம்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கதில் தோன்றியது குரியீட்டியல் இயக்கமாகும். இ ந்த
இயக்கமானது 1838-ஆம் ஆண்டிலிருந்து 1920-ஆம் ஆண்டு வரை பிரெஞ்சு நாட்டில்
தழைத்துப் பின் ஆங்கில, அமெரிக்க நாட்டின் செல்வாக்கு பெற்றது.
கிரேக்க நாட்டுல் ஓர் உடன்பாட்டை உறுதி செய்து கொள்ளும் போது ஒரு நாணயத்தை
இரு சமபாகங்களாக்கி ஆளுக்கொரு பகுதியை உடன்படுவோர் கொண்டு செல்லும் வழக்கம்
இருந்திருக்கிறது. அப்பகுதி ‘சிம்பலான்' என்று அழைக்கப்படுகிரது. செம்பலான் என்ற வினைச்
சில்லில் இருந்து “சிம்பல்" என்ற சொல் பெறப்பட்டுள்ளது. ஒரு பாதி நாணயம் இன்னொரு பாதி
நாணயத்தைச் சுட்டி நிற்பதால் சேர்தல் அல்லது அனதல் என்ற அர்த்தத்தில் குறியீடு
பயன்படுத்தப்படுகிறது. ஆகையால், ஒன்று இன்னோறை உணர்த்துவதைக் குறியீடு என்று
கொண்டனர் எனக் கூறியுள்ளார் இரா.பாலச்சந்திரன்.
மீ.ப சோமுவின் “மனப்பறவை" என்னும் கவிதைத் தொகுப்பிலுள்ள “நிழல்கள்" என்னும்
கவிதையில் குறியீட்டைப் பயன்படுத்தியுள்ளார். “நிழல்கள்" என்ற தலைப்பில் அமைந்த
கவிதையில் தலைப்பே குறியீடாக அமைந்து உள்ளது. நிழல்கள் என்று மனித வாழ்க்கையில்
பொன், பொருளால் பெறும் போலி இன்பங்களைக் குறிப்பிடுகிறார்.
உலகிலுள்ள பொன்னும், பொருளும் நிலையற்றது. பொன்னும் பொருளும் முதலில்
இன்பத்தைத் தந்தாளும் மன அமைதியைத் தராது. உண்மையான இன்பம் பொன்னிளும்
பொருளிலும் இல்லை. இவ்வுலகமே மாயையால் ஆனது. இரைவனை நினைத்து அவன்
திருவடிகளைப் போற்றுவதே உண்மையான இன்பம். இறைவனைக் காண்பதே இன்பம், என்ற
கருத்துக்களை உணர்த்த விரும்பியது கவிஞர் தம் கவிதையில் குறியீட்டைக் கையாளுகிரார்.
HBTL 3303
HBTL 3303
HBTL 3303
HBTL 3303
HBTL 3303
HBTL 3303
மேற்கோள் குறிப்புகள்
1. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/147502/8/08_chapter
%202.pdf
2. http://www.tamilvu.org/library/nationalized/pdf/81-vallikannan/111-
puthukkavithaiyinthottramumvalarchchiyum.pdf
3. https://www.jeyamohan.in/290/
http://siragu.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE
%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE
%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/
https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-
ba8bc2bb2bcdb95bb3bcd/b9ab99bcdb95-b87bb2b95bcdb95bbfbafbaebcd-i-
b85b95ba4bcdba4bbfba3bc8baabcd-baabbeb95bc1baabbeb9fbc1#section-13
http://www.tamilvu.org/courses/diploma/c021/c0214/html/c0214116.htm
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE
%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_
%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE
%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
HBTL 3303
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE
%B5%E0%AF%81_(%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE
%A3%E0%AF%88)#%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE
%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88