Professional Documents
Culture Documents
257018892 மலேசியப புதுக கவிதைகள தோற றமும வளர ச சியும
257018892 மலேசியப புதுக கவிதைகள தோற றமும வளர ச சியும
வரவழைக்கப்பட்டிருந்தனர்.
>
புதைக்க நினைத்த புதுக்கவிதை
விதைக்கப்பட்டு முட்டிமோதி, முளைத்து,
இன்று விருட்சமாக வளர்ந்துள்ளது.
மலேசியத் தமிழ் இலக்கியத்தில்
தனக்கென ஓர் இடத்தைப் புதுக்கவிதை
பதிவு செய்துள்ளது. மலேசியத் தமிழ்ப்
புதுக்கவிதை இலக்கியத்தின் இன்றைய
வயது 43 ஆகும்.
மலேசியாவில் புதுக்கவிதை
தோன்றுவதற்கு
பல காரணங்கள் பின்புலமாக
அமைந்துள்ளன. அவை இங்கே
விளக்கப்பட்டுகின்றன.
என்கிறார்.
இவை
புதுப்பூக்கள்
காலம் இவற்றை
அடையாளங் காணும்
எதுகைகளும் மோனைகளும்
ஒதுங்கியிருந்தால் போதும்"
இக்கருத்தரங்கில் புதுக்கவிதையாளர்களும்
ஆர்வலர்களும் கணிசமான
எண்ணிக்கையில் கலந்து பயனடைந்தனர்.
1964 ஆம் ஆண்டில் காலூன்றிய
புதுக்கவிதை வேரூன்றிய வரலாற்றையும்
எதிர்நோக்கிய எதிர்வினைகளையும்
புதுக்கவிதையின் போக்கினையும், தர
மதிப்பீடுகளையும் ஒருசேர தொகுத்து
தந்ததில், புதுக்கவிதையைப்பற்றி
பங்கேற்பாளர்கள் முழுமையாக
உள்வாங்கிக் கொள்ள முடிந்தது எனலாம்.
3. 2 புதுக்கவிதை திறனாய்வுக்
கருத்தரங்கு
புள்ளிங்கள
நல்லா படிக்க வை
பொம்பளயும்
கண்ணு கலங்காம
காப்பாத்து
............................
கடைசியா
ஒன்னு சொல்ல
மறந்துட்டேன்யா
நீ
கொண்டாந்து
சேத்தியே
ஆஸ்ரமம்
அத வேற இடத்துக்கு
மாத்திட்டாங்க
அட்ரச
எழுதியிருக்கேன்
மறந்துடாம படி.
பயனுள்ளதாக அமைந்தது.
"ஈழத்து மண்ணில்
முளைத்திருக்கும்
ஒவ்வொரு புல்லின்
நுனியைக் கிள்ளிப்பார்
வீர ரத்தம் சொட்டும்"
"குடும்பக் கட்டுப்பாடு
பிரச்சாரக் கூட்டம்
தலைவருக்கு
அவசர அழைப்பு
மனைவிக்குப்
பத்தாவது பிரசவம்"
இரண்டாம் நாளின் முதல் அங்கமாக
நவம்பர், டிசம்பர் (2000), ஜனவரி (2001) ஆகிய
மாதங்களில் வெளிவந்த
புதுக்கவிதைகளைப் "புதுப்பார்வை" எனும்
தலைப்பில் ஆய்வாளர் க. உதயகுமார்
ஆய்வு செய்தார். சுமார் 650 கவிதைகள்
ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு, அலசி
ஆராயப்பட்டது.
"ஊரைச் சுற்றி
அறிவிப்புப் பலகைகள்
குப்பைகளைக் கண்ட
இடத்தில் வீசாதீர்கள்!
இனி குப்பைத் தொட்டியிலும்
வைக்க வேண்டும்
தயவு செய்து
குழந்தைகளை இங்கே
வீசாதீர்கள்!"
இதனையடுத்து "புதுக்கவிதையில்
தொன்மக் கூறுகள்" எனும் தலைப்பில்
இணைப் பேராசிரியர் டாக்டர் வே. சபாபதி
அவர்கள், புதுக்கவிதை இலக்கியத்தில்
தொன்மக் கூறுகளின் பயன்பாட்டையும்
தொன்மங்கள் கருத்துப் புலப்பாட்டு
உத்தியாகப் பயன்படும் விதங்கள் பற்றியும்
விளக்கமாக எடுத்துரைத்தார்.
அடுத்த அங்கமாக பயிற்சி பட்டறை
ஆரம்பமானது. தொன்மக் கூறுகள்
கொண்டு கவிதைகள் இயற்றப்பட்டன.
அவற்றில் தெறித்த கவிதைகள் சில இங்கே
தரப்பட்டுள்ளன.
"அய்யா முத்தப்பா
என்னை நம்பி
எட்டுச் சீவன்
உளிக்கு
ஓல வச்சி
பால தண்ணிராக்கி
சிவப்பு பொட்டுல
எங்க பொலப்ப
கண்ணீராக்கிடாதப்பா"
எனும் கவிதையில் "முத்தப்பா என்பது
தொன்மம்" என்றும் நம் முப்பாட்டன்
வழியில் முத்தப்பனை வணங்கும் வழக்கம்
இருந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.
"உலகத்தின் பரபரப்பான
சூழலுக்குமிடையே மலேசிய மண்ணில்
மட்டும் இலக்கிய வளர்ச்சிக்காகத்
திட்டமிட்டு செயல்படுவது என்னை
மெய்சிலிர்க்க வைக்கிறது" என்று கவிஞர்
அறிவுமதி உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார்.
"நம்முடைய இலக்கியப் பார்வைகள்
கடந்தகால வரலாறுகளையும் நமது
வேர்களையும் அறிந்து கொள்வதில்
இளைய தலைமுறையினர் அதிக நாட்டம்
கொள்ள வேண்டும்" எனும்
ஆலோசனையை முன் வைத்தார்.
இன்றைய இந்த முயற்சி நாளைய
விளைச்சலுக்கு அடித்தளம் அமைக்கும்
என்ற நம்பிக்கையை விதைத்தார்.
32.8.எட்டாவது புதுக்கவிதைத்
திறனாய்வுக் கருத்தரங்கு
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்
எட்டாவது புதுக்கவிதை திறனாய்வுக்
கருத்தரங்கு (மார்ச் 2002) திங்கள் 2, 3 ஆகிய
நாட்களில்) 2002 ஆம் ஆண்டு மார்ச் திங்கள்
2, 3 ஆம் தேதிகளில் கோலாலம்பூரில்
கோலாகலமாக நடைபெற்றது.
கருத்தரங்கின் தொடக்க விழா மலேசியத்
தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.
ஆதி. குமணன் அவர்களின் உரையோடு
தொடங்கியது.
"என் நண்பனாகவே
நீ இன்று
வாழ்கிறாய்
உண்மையில்
இன்று வரையிலும்
நான்
உனக்குத் தோழியாகவே
நடித்துக் கொண்டிருக்கிறேன்
"பால்மரக் காடுகளில்
எழுதி வைத்த
எங்கள் முதுகெலும்புகளில்
எனும் கவிதையும்
"உயர்வான செய்தி
அனுதினம்
விளம்பரம் செய்யும்
செய்தித்தாள் வானம்"
ஆலோசனையையும் முன்வைத்தார்.
சுட்டிக்காட்டினார்.
"உன்னைக் கொடுமைப்படுத்திய
ஆண்மையைத் தண்டித்து
வன்முறைக் கடிதம்
எழுதி விடுகிறேன்
இனி வேண்டாம்
தாலி என்ற இரண்டெழுத்தில்
வன்முறை"
இக்கருத்தரங்கில் "போர்ட்டிக்சன் -
பினாங்கு கவிதைக் கருத்தரங்கு்" தொகுப்பு
நூலை வெளியிட்ட, தண்டாயுதபாணி
ஆலயத் தலைவர் டாக்டர் ராமநாயுடு
அவர்கள், "நான்கு மாதங்களுக்கு
ஒருமுறை புதுக்கவிதைக்குத் திறனாய்வுக்
கருத்தரங்கு நடத்தப்படுவதோடு அந்த
நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து
புத்தகமாகவும் வெளியிடுவது மிகப் பெரிய
பணியாகும். அதனைச் சிறப்பாகச் செய்து
வரும் எழுத்தாளர் சங்கத்தை மனமாரப்
பாராட்டுகிறேன்" என்றார்.
"காலம் மாறி
பருவம் மாறி
உருவம் மாறி போயி
நீ மகள வீட்டுலேயும்
நான் மகன் வீட்டுலேயும்
இருக்கறப்ப மட்டும்
புரியவேயில்லை
பிள்ளைங்களுக்கு
நம்ம காதல்
காதலர் தினம்
காதலுக்குத்தானாம்
உலகமே சொல்லுது
நாம மட்டும்
ஒருத்தரை ஒருத்தர்
பார்க்க முடியாம...
.........................................
ஒன்னா இருக்கலாம்
வா செல்லம்மா...
முதியோர் இல்லத்துக்கு!
பெண்களைப்
பூக்களோடு ஒப்பிடாதீர்கள்
பூக்களெல்லாம்
இரத்தக் கண்ணீர்
வடிப்பதில்லை!
பெண்களை
நிலவுடன் ஒப்பிடாதீர்கள்
நிலவு பாலியல் கொடுமையால்
இம்சிக்கப்படுவதில்லை!
இக்கருத்தரங்கு கோலசிலாங்கூர்
எனுமிடத்தில் 7,8 அக்டோபர் 2006-இல்
நடத்தப்பட்டது. கடந்த கருத்தரங்குகளில்
நடைபெற்ற எல்லா அம்சங்களும் மிகவும்
உற்சாகமான முறையில் நடைபெற்றன.
2006 ஆம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி, மார்ச்
ஆகிய மாதங்களில் வெளிவந்த
கவிதைகளை பா. அ. சிவம் ஆய்வு
செய்தார். தமது ஆய்வுரையில் நமது
நாட்டில் கவிதைகளின் போக்கும் நிலையும்
இளம் தலைமுறையைச் சேர்ந்த
படைப்பாளர்களால் நவீன கவிதைத்
தளத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இடைப்பட்ட ஒன்றரை ஆண்டில்
இந்நிகழ்வு, இம்மாற்றம் பதிவு
செய்யப்பட்டிருந்தாலும், இது முந்தைய
அனுபவங்கள் மற்றும் வாசிப்பின்
நீட்சியாகத்தான் இருக்க முடியும்.
நீ
திரையிலும்
சுவரொட்டிகளிலும்
பார்த்து இரசிக்கிறாயே
அந்தப் பெண்
நானல்ல...
ஆடைகளுக்காக
அம்மணமாகவும்
காலுறைகளுக்காக
கால்களைக்
காட்டிக்
கொண்டும்
கண்களுக்காக
குருடாகவும்
நிற்கும்
அந்தப் பெண்
நானல்ல!"
*******
"அப்பாவையாவது
யாரோ ஒரு
பொம்பளையோடு
அடிக்கடி
அந்த அறையில்
பார்க்க முடிந்திருக்கிறது...!
ஏனோ தெரியவில்லை,
அம்மாதான்
கடைசிவரை
முனுசாமியையோ
கருப்பையாவையோ
அங்கு
அழைத்து வந்ததேயில்லை..!
பல்கலைக்கழகங்களில், உயர்க்கல்விக்
கூடங்களில், கல்லூரிகளில் பயிலும்
மாணவர்களுக்கென பிரத்தியேகமாக
இப்போட்டி 1997 முதல் 2007 வரை தங்கு
தடையின்றி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்தும் நடைபெறும்.
இப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை
இல்லாத சூழலிலும் இந்திய
மாணவர்களின் அரிய முயற்சியால்
புதுக்கவிதைப் போட்டி ஒவ்வோர் ஆண்டும்
நடத்தப்பட்டு, சிறந்த கவிதைகளுக்குப்
பரிசுகள் வழங்கப்படுகின்றன என்பது
குறிப்பிடத்தக்கது.
5.2 எம்.ஏ. இளஞ்செல்வன் புதுக்கவிதைப்
போட்டி
7.3 தமிழறிவு
இன்றைய புதுக்கவிதைகளின்
பாடுபொருள்கள் பன்முகங்களைக்
கொண்டவையாகவும், குறிப்பாக இனம்,
தேசம் கடந்த உலகப் பார்வை
விசாலமடைந்து வருவதாயும்
புதுக்கவிதைகள் காட்டுகின்றன. மேலும்,
இனமான கவிதைகளும், சமூகப் பார்வை
கொண்ட கவிதைகளும் புதுக்கவிதையின்
தரத்தைத் தூக்கிப் பிடித்திருக்கின்றன
எனலாம்.
9. மலேசியப் புதுக்கவிதையின்
எதிர்காலம்
10. முடிவுரை
--------------------------------------------------------------------
----------------
மலேசியாவில் புதுக் கவிதை
நன்றி.
சா.அன்பழகன்