கம்பர் தமிழ்ப்பள்ளியின் சாதனை விழா 2019 என்று பள்ளி
வாசலில் தொங்கிக்கொண்டிருந்த பதாகையின் மீ து பார்வையை வசினான் ீ மகிழன்.நிறைகுடம் தளும்பாது என்பதற்கொப்ப அவன் அமைதியாக தனது பெற்றோருடன் தன் பிஞ்சுப் பாதங்களைப் பள்ளி வளாகத்தில் பதித்தான்.
பள்ளி மண்டபத்தில் பெற்றோர்களின் கூட்டம் புற்றீசல்
போல் நிறைந்து வழிந்தது.அவைத்தலைவரான திரு.முருகன் இவ்வாண்டின் சிறந்த மாணவன் மகிழன் என்று ஒலிப்பெருக்கியில் அறிவிக்கும் போது பேரதிர்வுடன் எழும்பிய கரவோசை கம்பர் தமிழ்ப்பள்ளியின் மண்டபத்தை அதிரச் செய்தது.
கோபாலன் த/பெ மணிமாறன்
சிறுகதை 2 மகிழன் கம்பீரமாக மேடையில் ஏறினான்.பள்ளித் தலைமையாசிரியர் அவனுக்குச் சாதனை விருது வழங்கினார்.நான் பட்ட கஷ்டங்கள் வணாகல ீ என்று நினைக்கும் தருணம் அவன் பட்ட கஷ்டங்கள் எல்லாம் அவனுடைய கண் முன் நிழலாடியது.
ஒவ்வொரு நாளும் விடியற்காலை 4.00 மணிக்கெல்லாம்
தித்திரை தேவியின் அணைப்பிலிருந்து விடுபட்டான் மகிழன்.பாடங்களை எல்லாம் மீ ள்பார்வை செய்தான்.
பள்ளியில் ஆசிரியர் பாடம் போதிக்கும் போது கண்ணும்
கருத்துமாய் செவி சாய்த்தான்.பள்ளி முடிந்தவுடன் பிரத்தியேக வகுப்பிற்கும் செல்ல தவறவில்லை.
‘மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்’
என்பதற்கொப்ப பல இன்னல்களையும் தாண்டி கல்வி கற்றான்.இதற்கிடையே தேர்வுக்கு இரண்டு வாரத்திற்கு முன்பு அவர் கார் விபத்தில் சிக்கினான்.மருத்துவமனையில் தங்கியும் மனந்தளராமல் மீ ள்பார்வை செய்தான்.
இதையெல்லாம் நினைக்கையில் அவன் கண்கள்
குளமாகின.என் மகன் நினைச்சத சாதிச்சிட்டான் என்று
கோபாலன் த/பெ மணிமாறன்
சிறுகதை 2 மகிழனின் அம்மா நினைத்தவாறு தன் இரு கரங்களையும் தட்டினார்.
மேடையிலிருந்து கீ ழே இறங்கிய தன் அன்பு மகனைக்
கட்டியணைத்து அவன் கன்னத்தில் தன் அன்பு முத்தத்தைப் பதித்தார்.
மகிழனின் அம்மா “ஐயா உன்னை நினைக்கையில் எனக்குப்
பெருமையாக உள்ளது” என்று கூறுகையில் அவரின் குரல் தளுதளுத்தது.