You are on page 1of 8

யாருக்கெல்லாம் நீச பங்க ராஜ யோகம் உள்ளது?

வேத ஜோதிடத்தின் மிக முக்கியமான விதி:

 அதிகாரம், சொகுசுவசதியான வாழ்க்கை இவற்றையெல்லாம்


இவற்றையெல்லாம் ஒருவருக்கு அனுபவிக்கும் யோகம் இருக்க
வேண்டும் என்றால் அவருக்கு குருவின் பூரண ஆசி இருக்க
வேண்டும். அதாவது (1) முதலில் அவர் வலு பெற்று இருக்க
வேண்டும் (2) ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசியை அவர் பார்க்க
வேண்டும் அல்லது லக்னம், ராசி அதிகபட்ச சுபத்துவமாக இருக்க
வேண்டும். 
 பிரபலமானவர்களின் ஜாதகத்தில் பொதுவாக அதிக பலம்
பொருந்திய குருவின் பார்வை, லக்னம், ராசி, லக்னாதிபதி இந்த
மூன்றில் ஏதாவது ஒன்றின் மீ தாவது இருக்கும் அல்லது
மூன்றோடும் தொடர்பு கொள்வார். சாதாரண நிலையில் பிறந்து
வாழ்வில் உச்ச நிலைக்கு சென்றவர்கள் அனைவரின் ஜாதகத்திலும்
இந்த அமைப்பினை நிச்சயமாகப் பார்க்கலாம்.

ஒரு கிரகம் நீசபங்க ராஜயோகத்தை தர வேண்டுமெனில், அதற்கு ஒளி


பொருந்திய ஒரு உச்ச கிரகத்தின் தொடர்போ, பௌர்ணமி, பௌர்ணமிக்கு
அருகிலுள்ள சந்திரனின் பார்வையோ இணைவோ இருக்க வேண்டும். 

நீசம் என்பது வலுயிழந்த நிலை என்பதால், அந்த வலுவிழந்த


கிரகம், இன்னொரு ஒளியுள்ள கிரகத்திடமிருந்து ஒளியைக் கடன்
வாங்கிக் கொள்கிறது என்பது தான், நீசம் பங்கம் என்பதின்
அடிப்படை.

அப்படியிருக்கும் போது ஒரு கிரகம் எப்போது நீச பங்க ராஜ


யோகத்தை தரும் என்றால்,

 அது, எந்த வலிமையும் குன்றாதை உச்ச கிரகத்தின் இணைவு,


பார்வையோ அல்லது அதிக சுபத்துவமுள்ள குருவின்
தொடர்போ உள்ள போது மட்டுமே .அல்லது
 லக்னாதிபதியான கிரகம் நீசமாகி, பின் நீச பங்கத்தை
அடைவதும் கூட நீசபங்க ராஜயோக அமைப்பு தான்..
லக்னாதிபதி கிரகம் நீசமாகி இந்த அமைப்பு இருந்தால்
மட்டுமே அவர் வாழ்வின் பிற்பகுதியில், புகழுடன் உயரிய
அந்தஸ்தில் இருப்பார்கள். அதன் தசா காலத்தில் உச்ச
நற்பலன்களை அடைவார்கள். மற்றபடி ஜாதகத்தின் மற்ற
கிரகங்களான பாக்யாதிபதி போன்றவை அல்ல.

இந்த ஜாதகரின் ஜாதகத்தில் சனி செவ்வாயின் வட்டில்


ீ அமர்ந்து
நீசம் அடைந்து இருக்கிறார். ஆனால் அந்த மேஷ ராசியில்
செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்றதால், நீச்ச பங்க யோகம்
கிடைஹிருகிறது.

அதே போல 4ம வே௪டாந விருசிகத்தில், சந்திரன் நீசம்


அடைந்துள்ளார். ஜாதகர் பிறந்தது கிருஷ்ணா பட்சத்தில் என்பதால்
ஒளி இழந்த சந்திரன் இருக்கும் நிலையில் விருசிக ராசியின்
அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று இங்கு உள்ளதால், நீசாஸ் பங்க
ராஜ யோகம் இந்த ஜாதகருக்கு உண்டு.

பொதுவாக நீசம் பெற்ற கிரகம் நின்ற ராசி அதிபதி ஆட்சி அல்லது


உச்சம் பெற்றால், நீச பங்க ராஜ யோகம் உண்டாகிறது.

இந்த நீச பங்க ராஜ யோகம் பெற்றவர்கள் பெரிய சாதனை


செய்கின்றனர். சிலர் உலக சாதனை செய்கின்றனர்.

ஆறுக்குடையவன் நீசமாகி பங்கமடைந்து, ராஜயோகத்தை தரும்


நிலை அமைந்து அதன் தசை நடந்தால் நீங்கள் உயர்நிலைக்கு வர
முடியுமா? ஒரு கிரகம் நீசமடைந்து பின் வலுப்பெற்றால் அதன்
ஆதிபத்தியமும், காரகத்துவங்களும்தான் வலுப்பெறும். லக்னமோ,
லக்னாதிபதியோ அல்ல.

இன்னும் நுணுக்கமாக உள்ளே சென்று உணர்ந்தோமேயானால், நீசனோடு


இணைந்ததால் லக்னாதிபதி செவ்வாய் தனது வலிமையை இங்கே
இழக்கவே செய்கிறார். உண்மையில் செவ்வாயை சுபச் சந்திரன் பார்ப்பதே
சிறப்பு. நீச சந்திரன் இணைவது நன்மைகளைத் தராது. ஆகவே நீசனுடன்
இணைந்ததால் லக்னாதிபதி இங்கே பலமிழக்கிறார். 

ஒரு ஜாதகத்தில் லக்னத்தை அடுத்த, அதற்கு மாற்றாக


சொல்லப்படும் இணை அமைப்பான, ராசி எனப்படும் சந்திரன் ஒரு
மனிதனின் எண்ணம், செயலைக் குறிக்கக் கூடியது. பிறப்பு
ஜாதகப்படி சந்திரன் நீசமாகும் போது அந்த மனிதனின் மனம்
பலவனமாக
ீ இருக்கும். எண்ணங்கள் நிலையாக இருக்காது.
கோட்சாரத்தில் ஏழரைச் சனி நடக்கும்போது ஒருவரின் ராசியாகிய
சந்திரனை இருள் கிரகமான சனி நெருங்கி இருக்கும். இந்த இரு
நிலைகளும் ஒருவருக்கு ஒருசேர வரும்போது அவரது மனமும்,
மனதில் பிறக்கும் எண்ணங்களும் பாதிக்கப்பட்டு, எதிர்மறை
எண்ணங்கள் அவருக்கு அதிகமாகி நன்மைகள் நடக்காது.

சந்திரன் நீசமாகும் இந்த நிலையால்தான் பனிரெண்டு ராசிகளிலும்


மற்றவர்களை விட எப்போதுமே விருச்சிகம் ஏழரைச்சனி
காலங்களில் மிகுந்த வேதனைகளை அனுபவிக்கிறது. உங்களுக்கு
தெரிந்த வயதான விருச்சிகத்தினரை முப்பது ஆண்டுகளுக்கு முன்
1987, 1988 ம் வருடங்களில் எப்படியிருந்தீர்கள் என்று கேட்டுப்
பாருங்கள். உண்மை புரியும்.
தற்போதைய ஏழரைச் சனியால் மிகவும் கஷ்டப்பட்ட அனுஷம்,
கேட்டை நட்சத்திரக்காரர்களில் பலர் சந்திர தசையும்,
ஏழரைச்சனியும் சந்தித்த நிலையில்தான் கடுமையான
கெடுபலன்களை அனுபவித்தார்கள். ஆகவே நீசபங்க ராஜயோக
அமைப்பினால் மோடி அவர்கள் பிரதமர் போன்ற உச்ச பதவியை
அடைந்தார் என்பது தவறான ஒன்று. ஏழரைச் சனி நடந்து
கொண்டிருக்கும் நிலையில் ஒருவருக்கு மிகப் பெரிய
உயர்நிலையை அடைவதற்கு தடைகள் இருக்கும்.
நீசபங்க ராஜயோக அமைப்பில் உள்ள இன்னொரு கோணம்
என்னவெனில், ஒரு கிரகம் பலவனமானாலே
ீ அதனுடைய
காரகத்துவத்தில் முதலில் மோசமான நிலையைக் கொடுத்த
பிறகுதான் பின்னர் உயர்வான நிலையைக் கொடுக்கும். அதாவது
முதலில் நீசமாக்கித்தான் பிறகு பங்கமாக்கி காரக உயர்நிலையைத்
தரும். 
அதன்படி பிரதமர் தனது ஆரம்பக் கட்டங்களில் முடிவெடுப்பதில்
மனத் தடுமாற்றம் உள்ளவராகவும், அலைபாயும் தன்மை
கொண்டவராகவும் இருந்திருக்க வேண்டும்.
உங்கள் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய யோகக் கிரகங்கள்
வலிமை அடைந்தும், தீமை செய்யக்கூடிய பகைக் கிரகங்கள்
வலுவிழந்தும் இருந்தால் நீ ங்கள் இந்த உலகில் அனைத்துச்
செல்வங்களையும் பெற்று அதிர்ஷ்டசாலியாக வாழ்வர்கள்

என்பது ஜோதிட விதி.

ஒரு கிரகம் வலிமையுடன் இருக்கிறதா அல்லது வலு இழந்து


இருக்கிறதா என்பதை அக் கிரகம் இருக்கும் வட்டின்
ீ நிலையை
வைத்து கீ ழ்க்கண்டவாறு பிரிக்கிறது வேத ஜோதிடம்.

1) உச்சம்

2) மூலத்திரிகோணம்

3) ஆட்சி

4) நட்பு

5) சமம்

6) பகை

7) நீ சம்

மேற்கண்ட அமைப்பை வைத்து ஒரு கிரகத்திற்கு மதிப்பெண்


தருவதாக இருந்தால், நீ ச நிலைக்கு பூஜ்யமும், பகைக்குப் பத்து
மதிப்பெண்களும், சமத்திற்கு  இருபதும், நட்புக்கு நாற்பதும்,
ஆட்சிக்கு அறுபதும், மூலத் திரிகோணம் எண்பது, உச்சம் நூறு
எனத் தோராயமாகக் கொள்ளலாம்.

இதன்படி ஒரு கிரகம் தனது வலிமை அனைத்தையும் இழக்கின்ற


நிலை நீ சம் எனப் படுகிறது.

நீ சநிலையில் ஒரு கிரகம் இருந்தால் அந்தக் கிரகம் தனது


காரகத்துவப் பலன்களையும், ஆதிபத்தியப் பலன்களையும் தர
இயலாது என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்லுகிறது.
அதாவது ஒரு கிரகம் நீ சம் பெற்றால் அக் கிரகம் சம்பந்தமான
எந்த ஒரு விஷயமும் முழுமையாக உங்களுக்கு கிடைக்காது,
அந்தக் கிரகத்தால் உங்களுக்கு எவ்வித பயனும் இருக்காது
என்பது இதன் உட்பொருள்.

விதி என்ற ஒன்று இருந்தால் விலக்கு என்பது இருந்தே தீரும்


என்பதன்படி, ஒரு கிரகம் நீ சபங்கம் பெறும் பொழுது இழந்த தன்
வலுவை திரும்பப் பெறுகிறது என்பதும் வேத ஜோதிட விதிதான்.

அதன்படி இந்த நீ சபங்க அமைப்பில் மறைந்திருக்கும் சூட்சுமம்


என்னவெனில் ஒரு கிரகம் முறையான நீ சபங்கத்தைப் பெறும்
பொழுது, அது உச்சத்தை விட மேலான ஒரு வலிமையை
அடையும் என்பதே.

இது மதிப்பெண் நிலையில் 100 க்கு 100 என்பதையும் தாண்டி 120


என்கிற ஒரு வினோத நிலையைப் பெறும். அதே நேரத்தில்
இன்னொரு விளைவாக நீ சபங்கம் பெறும் கிரகம் ஆரம்பத்தில்
நீ சத்தைத் தந்துதான் பிறகு வளர்ச்சியைத் தரும். அதாவது அந்தக்
கிரகம் முதலில் ஒன்றுமில்லாத நிலையை ஏற்படுத்தித்தான்
பிறகு உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.

உதாரணமாக லக்னாதிபதி கிரகம் நீ சம் அடைந்து, முறையான


நீ சபங்கம் பெற்றிருந்தால், நீ ங்கள் வாழ்க்கையில் முதலில்
கஷ்டப்பட்டு, ஒன்றுமில்லாத நிலையில் இருந்து, வாழ்க்கையின்
பிற்பகுதியில்  பிரமிக்கத்தக்க அளவில் முன்னேற்றம்
அடைவர்கள்.
ீ அதுபோலவே நீ சக் கிரகம் எந்த ஆதிபத்தியத்திற்கு
உரியதோ, அதுவும் முதலில் ஒன்றுமில்லாமல் இருந்து பிறகு
வளர்ச்சி பெறும்.

முறையான நீ சபங்கம் என்பது உச்சத்தை விட மேலான நிலை


என்பதற்கு என்னால் ஏராளமான உதாரணங்களைச் சொல்ல
முடியும்.

எடுத்துக்காட்டாக, சூரியன் நீ சம் பெற்றால் அரசு வேலை


இல்லை. அரச லாபம் கிடையாது. தலைமைப் பதவியைப் பற்றிக்
கனவுகூட காண முடியாது..!
சரி….

‘அரசன்’ என்றால் நம்மில் பெரும்பாலோருக்கு சட்டென்று


நினைவுக்கு வருவது யார்?

மன்னனாகும் வாய்ப்பு துளிக்கூட இன்றி இளையவனாகப் பிறந்து,


மூத்த அண்ணன் கொலையுண்டதாலும், முறை அரசனான
சித்தப்பன் இறந்ததாலும், வாழ்வின் பிற்பகுதியில் தற்செயலாக
அரசனானவன், இந்தியாவில் இருந்த அரசர்களிலேயே
வெளிநாடுகளை வென்ற ஒரே தமிழ்ப் பேரரசன், ஆயிரம்
ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம் நினைவில் உள்ளவன்,
அரசர்களுக்கெல்லாம் அரசன் என்ற “ராஜராஜன்” எனும்
பெயர்பெற்ற நம் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சூரியன் நீ சம்
பெற்ற நிலையில் பிறந்தவன்..!

சுக்கிரன் நீ சம் பெற்றால் கலைத்துறையைப் பற்றிக் கனவுகூடக்


காண முடியாது. நடிப்பு வராது. பொதுமக்கள் மத்தியில் புகழுடன்
தோன்ற முடியாது. குறிப்பாக சினிமாவில் ஜெயிக்க முடியாது.

இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகர், இந்திய சூப்பர் ஸ்டார் 


அமிதாப் பச்சன் சுக்கிரன் நீ சமான அமைப்பில் பிறந்தவர்.

புதன் நீ சம் பெற்றால் அறிவாளியாக முடியாது. நிபுணத்துவம்


இருக்காது. சிந்தனைத் திறன் சிறிதளவே இருக்கும். கணிதத்
திறன் வராது. எதையும் புதிதாக கண்டுபிடிக்க முடியாது.

உலக வரலாற்றில் இதுவரை பிறந்த விஞ்ஞானிகளில்


முதலாமவர் என்று போற்றப்படும் மாபெரும் விஞ்ஞானி,
பிரபஞ்சம் பற்றிய உண்மைகளைக் கூறும் சார்பியல்
தத்துவத்தைக் கண்டுபிடித்த இயற்பியல் மேதை,  ஆல்பர்ட்
ஐன்ஸ்டீன் புதன் நீ சம் பெற்ற நிலையில் பிறந்தவர்.

குரு நீ சம் பெற்றால் ஆன்மீ கத்தில் உயர்வில்லை. தெய்வ அருள்


கிடைக்காது. ஆனால் தன் பக்தர்களால் தெய்வத்தின் நிலையில்
வைத்து வணங்கப்படும் புனிதர், பகவான்  ஸ்ரீசத்யசாய்பாபா  குரு
மகரத்தில் நீ சம் பெற்ற நிலையில் பிறந்தவர்.
இதைப்போல இன்னும் நிறைய உதாரணங்களை என்னால்
சொல்ல முடியும்.

அதேநேரத்தில் இது போன்றவர்கள் முதலில் வாழ்வில் நீ ச


நிலையில் (ஒன்றுமில்லாத நிலையில்) இருந்து பிறகு தம்
துறையில் உச்சத்திற்கு சென்றவர்களே.

பெரும்பாலான ஜோதிடர்களுக்கு இந்த நீ ச பங்கத்தை


அளவிடுவதில் குழப்பம் ஏற்படும். உனக்கு நீ ச பங்க ராஜயோகம்
இருக்கிறது என்று ஜாதகரிடம் சொல்லுவார். கேட்பவரும்
ராஜயோகத்தை எண்ணி கனவு காணும் நிலையில் அந்த தசை
அவரிடம் உள்ளதையும் பறித்துக் கொண்டிருக்கும்.

அப்படியானால் முறையான நீ சபங்கம் என்பது என்ன? அதை


எப்படிக் கணக்கிடுவது?

அதற்கு ஏராளமான விதிகள் உள்ளன. 

முக்கியமானவைகளைச் சொல்கிறேன்.

1) நீ சனுக்கு வடு
ீ கொடுத்தவன் ஆட்சி உச்சம் பெறுவது.

2) நீ சக்கிரகம் பரிவர்த்தனை பெறுவது.

3) நீ சன் வர்க்கோத்தமம் பெறுவது.

4) நீ சக்கிரகத்துடன் ஒரு உச்சன் இணைவது.

5) நீ சன் லக்னம் அல்லது சந்திர கேந்திரத்தில் இருப்பது.

6) நீ சனுக்கு வடு
ீ கொடுத்தவன் சந்திர கேந்திரத்தில் இருப்பது.

7) நீ சனின் ராசியதிபதி பரிவர்த்தனை ஆவது.

8) நீ சனை இன்னொரு நீ சக்கிரகம் பார்ப்பது

9) நீ சன் வக்கிரம் அடைவது

10) நீ சன் அம்சத்தில் சுபவர்க்கம் பெறுவது


இது போன்ற விதிகளில் பெரும்பாலானவற்றின்படி ஒரு
நீ சக்கிரகம், நீ சபங்கத்தைப் பெற்று, அதாவது ஒரு நீ சக்கிரகம்,
சந்திர கேந்திரத்தில் இருந்து, அதனுடன் உச்சக் கிரகமும்
இணைந்து, நீ சன் வர்க்கோத்தமும் பெற்று, நீ ச நாதன் சந்திர
கேந்திரத்தில் இருந்து, வடு
ீ கொடுத்தவன் பரிவர்த்தனையும்
பெற்று இதுபோல அதிகமான முறைகளில் நீ சபங்கம் பெற்றால்,
அதுவே முறையான நீ சபங்கம் ஆகும்.

இதுபோன்ற நிலைகளில் மட்டுமே அந்தக் கிரகம் நீ ச பங்க


ராஜயோகத்தைச் செய்யும். அப்போதுதான் அந்த நீ சன் உங்களை
தன் காரகத்துவங்களில் (செயல்பாடுகளில்) வாழ்க்கையின்
உச்சத்திற்கு கொண்டு செல்வான்.

You might also like