கடந்த 20.1.2021-21.2.2021 MALAYSIAN INNOVATION INVENTION CREATIVITY
ASSOCIATION (MIICA) கல்வி அமைச்சின் அங்கிகாரத்தோடு நடத்திய அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் பேரா மாநிலத்தில் இயங்கி வரும் குறைந்த மாணவர்கள் கொண்ட தேசிய மாதிரி மெதடிஸ் மாலிம் நாவார் தமிழ் பள்ளியைச் சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவிகள் முதன் முறையாக இப்போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
தலைமையாசிரியர் திருமதி லோகேஸ்வரி அவர்களின் தலைமைத்துவத்தில் இயங்கும்
இப்பள்ளி அவர்களின் ஊக்குவிப்பில் இப்போட்டியில் கலந்து கொண்டது. ஏறக்குறைய 200 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் மாணவி ஹனுஷ்காபிரியா த/பெ தேவிந்திரன், அவிலா தீபிகா தியாகராஜன் ஆகிய இரண்டாம் ஆண்டு மாணவிகள் ஆசிரியர் திருமதி ஞானஜோதி அவர்களின் தலைமையிலும், பள்ளியின் மற்ற ஆசிரியர்களின் உறுதுணையுடனும் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றதோடு MACEDONIA SPECIAL AWARDS வென்று கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதனை நிருபித்துள்ளனர்.
இப்பள்ளி நச்சுத்தன்மையற்ற சுற்றுப்புறம் உருவாக்க வேண்டும் என்ற கொள்கையில்
மூலிகையிலிருந்து கரப்பான்பூச்சு விரட்டி மருந்தைத் தயாரித்து உள்ளனர். கரப்பான் பூச்சியைக் கொண்டு ஆய்வும் செய்துள்ளனர்.
பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தேசிய மாதிரி மெதடிஸ்
மாலிம் நாவார் தமிழ் பள்ளி தொடர்ந்து கல்வியிலும், புறப்பாட நடவடிக்கைப் போட்டியிலும் சிறப்பாக செயல்படும் என்பதனைப் பள்ளி தலைமையாசிரியர் திருமதி லோகேஸ்வரி உறுதியாகக் கூறினார். எனவே இவ்வாட்டார மக்கள் பிள்ளைகளை மெதடிஸ் மாலிம் நாவார் தமிழ் பள்ளியை நம்பி பிள்ளைகளைப் பதிவுச் செய்யலாம் என்பதனைத் தெரிவித்துக் கொண்டார்./