Professional Documents
Culture Documents
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
தோழர்களே, இந்தத் தியாகராயர் நகர் என்னும் மாபெரும் பிரபலமான இந்த நகருக்கு – இதற்கு
முன்னால் நான் வந்து – நண்பர்கள் சொன்னார்கள் – பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று.
இருக்கலாம், எனக்கு ஞாபகம் வரவில்லை. பக்கத்தில் இப்போது நான் வந்ததாக.
Advertisements
REPORT THIS AD
தோழர்களே!
இதை ஏன் சொல்கிறேன் என்றால், பழக்கத்திலே நம்மை ஈன ஜாதி என்கிறான். ஏன்டா என்றால், நீ
கோவிலுக்குள்ளே வரவேண்டாம்; நீ வந்தால் சாமி தீட்டாகிப் போய்விடும் என்கிறான். என்ன
அர்த்தம்? கல்லைத் தொட்டால் தீட்டாகி விடும் என்றால், நம்மை எவ்வளவு கீ ழ்ஜாதி என்கிறான்.
சாஸ்திரத்திலே தேவடியாள் மகன் என்கிறான். பார்ப்பானுக்குப் பிறந்தவன் என்கிறான்.
சூத்திரனுக்குப் பெண்டாட்டியே கிடையாது என்கிறான். சூத்திரச்சி எல்லாம் பார்ப்பானுடைய
வைப்பாட்டி மகன் என்று எழுதி இருக்கிறான். இதையெல்லாம் யார் கவனிக்கிறார்கள்? இன்னும்
அதே மாதிரிப் பல ஆதாரங்கள்.
சிந்து நதிக்கும், நமக்கும் எப்போ சம்பந்தம்? ஆரியன் வந்தபோதுதானே சிந்து நதி என்கிறது. அதை,
இந்த நாட்டுப் பழங்குடி மக்களுக்கு இந்து என்று பெயர் என்றான். சொல்லிட்டு
மரியாதையாகவாவது போகலையே! இந்து என்றால் இரண்டு ஜாதி. அதிலே ஒருவன் பார்ப்பான்;
ஒருவன் சூத்திரன். பார்ப்பான் எல்லாம் மேல்ஜாதி; சூத்திரன் என்றால் கீ ழ்ஜாதி. சூத்திரன்
பெண்டாட்டி என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி. இது சட்டத்திலே, சாஸ்திரத்திலே, பழக்கத்திலே
என்று சொன்னால், நமக்கு விடியதுதான் எப்போது? ஒரு மனுஷனை, என்னடா, அடே உன்
பெண்டாட்டியை… அப்படி என்று சொன்னால், கத்தியை எடுத்துக்கொள்கிறான். தனிப்பட்ட
மனுஷனே, உன் பெண்டாட்டியை என்று சொன்னால், கத்தியை எடுத்துக் கொள்கிறான். இத்தனை
பேரையும் தேவடியாள் மகன் என்கிறான் – ஒரு பயலுக்கும் மானம் இல்லை. மானம் இருந்தால்,
இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? இருக்க முடியுமா? ஒரு பயல் பூணூல் போட்டுக்கிட்டு
நம் எதிரிலே வருவானா? என்னடா அர்த்தம், இந்தப் பயலுக்குப் பூணூல் இருக்கிறது. ஏ,
அயோக்கியப் பயலே என்ன அர்த்தம்? நீ பிராமணன், நான் சூத்திரன் என்று அர்த்தம். அப்படி
என்றால் என்ன? உன்னுடைய வைப்பாட்டி மகன் என்று அர்த்தம். போடு செருப்பாலே – அப்படி
என்று ஆத்திரமல்லவா வரும் உனக்கு மானம் இருந்தால். இன்னொருவன் பெண்டாட்டியை
என்றால் என்ன ஆத்திரம் வருமோ, அதற்கு மேலே அல்லவா ஆத்திரம் வரணும். உன்னைச்
சூத்திரன் என்று ஒருத்தன் சொன்னால்?
நாதி இல்லையே, சொல்றதற்கு ஆள் இல்லையே; சிந்திக்க ஆள் இல்லையே! ஒரு ஓட்டுக்கு
என்னென்ன கொடுக்கிறான்? பெண்டாட்டியைத் தவிர மற்றதை எல்லாம் கொடுக்கிறானே – ஓட்டு
வாங்குவதற்கு. இதற்குக் கவலையே படமாட்டேன் என்கிறானே. முன்னேற்றக் கழகத்துக்காரன்
மற்றவனை எல்லாம் என்னை எல்லாம் வைவான் – இவனுக்கு என்ன கேடு, இந்த வேலையை
ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான் என்று. அவனுக்கு ஓட்டுதான் பெரிது. அவன் பெண்டாட்டி,
பிள்ளையைப்பற்றி அவனுக்குக் கவலை இல்லை. இன்னும் கொஞ்ச நாள் போனால், வழக்கத்தில்
வந்துவிடும் – பெண்டாட்டியைக்கூட கொடுத்து ஓட்டு வாங்குகிறாற்போல். ஏனென்றால், அந்த
உத்தியோகமும், அந்தப் பதவியும் அவ்வளவு உயர்வாய்ப் போச்சு.
அரசாங்கம் வரி வாங்குகிறது என்று சொல்கிறானே தவிர, மடப் பயல், இது குட்டிச் சுவராகப்
போகிறதே இந்தப் பணம் என்று ஒரு பயல்கூட நினைக்கிறதில்லையே! கோவிலுக்குப் போகாமல்
எவன் இருக்கிறான்? கோவிலுக்குப் போகணும், என்கிறான், குளிக்கிறான், முழுகுகிறான், பட்டுக்
கட்டிக்கிறான், எட்டிக் குதித்துக்கிட்டுப் போகிறான், ஏன்டா என்றால், தீட்டாகிறது என்கிறான்.
என்ன கொள்கைகள்?
1. கடவுள் ஒழியணும்
2. மதம் ஒழியணும்
3. காந்தி ஒழியணும்
4. காங்கிரசு ஒழியணும்
5. பார்ப்பான் ஒழியணும்.
முன்னேற்றக் கழகம் ஒழிந்தாலும், காங்கிரசு ஒழிக, ஜாதி ஒழிக என்கிற சீர்திருத்த உணர்ச்சி
உள்ளவர்கள்தான் இனி வருவாங்க; அதனாலே, இனி வளம்பெற முடியாது. காந்தியும் போய்ட்டான்;
காங்கிரசும் ஒழிந்து போய்ச்சு; கடவுளும் தெருவிலே சிரிப்பாய் சிரிக்கிறது. அதுதான் வரமணி
ீ
சொன்னாரு, செருப்பாலே அடித்தார்களே கடவுளை, என்ன ஆயிப்போயிற்று? செருப்பாலே
அடித்தான்; அதனாலே ஓட்டுப் பண்ணவேண்டாம் என்று காமராசர் முதற்கொண்டு தப்பட்டை
அடித்தார்கள். என்றைக்கும் வராத அளவுக்கு 200 பேருக்கு மேலே வந்துவிட்டார்களே! முன்னேற்றக்
கழகத்துக்காரன் 185 பேர்; அவர்களை ஆதரிக்கிறவர்கள் 20 பேர். காங்கிரசு, காந்தி, கடவுள்,
வெங்காயம் எல்லாம் சேர்ந்து 20 பேர்கூட வரவில்லையே! சாமியைத் திட்டுகிறான் என்று
சொல்லுகிறீர்களே – புத்தி இல்லாமல் சொல்லுகிறோமே தவிர, சாமியைச் செருப்பாலே அடித்த
பிரச்சினை மேலே 200 பேர் வந்துவிட்டார்களே. ஆனதினாலே மக்கள் அறிவு பெற்றுக்கிட்டு
வருகிறார்கள். பயன்படுத்திக்கொள்ள வேணும். அவர்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லணும்
– தெரியாது வெகுப் பேருக்கு.
இந்தப் பக்கம் இருக்கிறவன் வந்தால் தெலுங்கு பேசுவான்; இந்தப் பக்கம் இருக்கிறவன் வந்தால்
கன்னடம் பேசுவான்; இன்னும் கொஞ்சம் தாண்டினால் மராட்டி; இன்னும் கொஞ்சம் தாண்டினால்
குஜராத்தி; இன்னும் கொஞ்சம் தாண்டினால் இந்தி; வங்காளி. அந்தந்த பாஷை ஒன்று சேராமல்
இருப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் பண்ணிவிட்டான்.
நமக்கு மதம் என்றான்; மதம் என்றால் என்னவென்று தெரியாது. நமக்குக் கடவுள் என்றான்;
கடவுள் என்றால் என்று தெரியாது. நமக்கு சாஸ்திரம் என்றான்; சாஸ்திரம் என்றால் என்னவென்று
தெரியாது. நமக்கு மனுதர்மப்படி என்றான்; மனுதர்மம் ரூபாய்க்கு எத்தனைப்படி என்றுதான்
தெரியும். ஒண்ணுமே தெரியாது. ஆனால், அதற்கெல்லாம் நாம் அடிமை.
நான் கேட்கிறேன், பெரிய மதக்காரனையே கேட்கிறேன். இந்து மதம் என்றால் என்ன அர்த்தம்? எப்ப
வந்தது? எவன் அதற்குத் தலைவன்? என்ன அதற்குக் கொள்கை? அதற்கு என்று இருக்கிற
சாஸ்திரம் என்ன?
கிறிஸ்துமதம் என்றால், கிறிஸ்து கடவுள். 2000 வருஷம் ஆயிற்று ஏற்பட்டு. பைபிள் வேதம்.
இஸ்லாம் மதம் என்றால், முகமது நபி தலைவர். ஆயிரத்து நானூற்றுச் சில்லரை
வருஷமாயிற்று. குரான் இருக்கிறது சட்டம். வேதம் உனக்கு என்ன இருக்கிறது? யார் தலைவன்?
எவனோ ஒரு காலிப் பயலைப் பிடித்து அவனை ரிஷி என்கிறே, அவனை முனி என்கிறே,
அவனை மகாத்மா என்கிறே அவனை வெங்காயம் என்கிறே. உனக்கு யார் இருக்கிறான்? யார்
அத்துப்படி? மதத் தலைவன் என்றால் வசிஷ்டன் என்கிறே, நாரதன் என்கிறே, விசுவாமித்திரன்
என்கிறே, இன்னும் எவன் எவனையோ சொல்ற. அவனுக்கு வயசு என்னடா என்றால், 5 கோடி
வருஷம், மூன்று கோடி வருஷம் என்கிறே. உன் சாஸ்திரம் எப்படா எழுதப்பட்டது என்றால், அது
மனுஷனாலே எழுதப்படவில்லை – கடவுளாலே எழுதப்பட்டது என்கிறே. எது நமக்குன்னு
இருக்கிறது ஒரு ஆதாரம் சொல்லுங்களேன்.
உன் கடவுளை உண்டாக்கினவன் யார்? உனக்கு எங்கே கடவுள் இருக்கிறான்? கடவுள் தன்மை
என்று ஒன்றைச் சொன்னேயானால், கடவுள் யோக்கியதை ஒன்றை சிந்திச்சியேனால், அந்தக்
கடவுள் தன்மைப்படி, அந்தக் கடவுள் யோக்கியப்படி, எந்தக் கடவுள் இருக்கிறான் உனக்கு?
கடவுளுக்கு உருவமில்லை என்றானே, எல்லாக் கடவுளுக்கும் உருவம். கடவுளுக்கு ஒன்றும்
வேண்டாம் என்றாய், உன் கடவுளுக்குப் பெண்டாட்டி, பிள்ளை, வைப்பாட்டி, சோறு, கல்யாணம்,
கருமாதி எல்லாம் வேணும். மனுஷன்தானே அவன். மனுஷனுக்குப் பிறக்காத கடவுள் எது அய்யா
உன்கிட்டே இருக்கிறது? மனுஷனுக்குக்கூடப் பிறக்கவில்லை என்று சொல்லவில்லை.
எருமைக்குப் பிறக்காதவன், கழுதைக்குப் பிறக்காதவன், ஆனைக்குப் பிறக்காதவன், சிவனும்
கடவுள் என்றால், எப்படிடா வந்தான் கந்தன் என்றால், சிவனும், அவன் பெண்டாட்டியும் லட்சம்
வருஷம் வேலை பண்ணினார்கள். சினையாகி பிடுங்கிக் கொண்டார்கள். ஒழுகிற்று, அதிலேருந்து
வந்தான் என்கிறான். என்ன தைரியமாக, அவன் கடவுளைச் சொல்லுகிறான்.
அது கீ ழே சொட்டி விழுந்தது – அப்படி என்று ஒரு புராணம், இராமாயணம். அப்புறம் இன்னொரு
பராணம், தேவர்கள் எல்லாம் வந்தார்கள், சும்மா இப்படியே பண்றியே அய்யா, இன்னும் இதிலே
ஒரு பிள்ளை வந்தால், உலகமே கெட்டுப் போகும். வேலையை நிறுத்தப்பா என்று சொன்னார்கள்.
நடுவிலே எப்படியடா வேலையை நிறுத்துவேன் என்றான். நாங்கள் எல்லாம்
பிழைக்கவேண்டாமா? என்று தேவர்கள் எல்லாம் அழுதார்கள். அப்படியானால், அது போகுமடா
வாய்க்காலாட்டம், எவனடா பிடிக்கிறது என்றான். நாங்கள் பிடித்துக் கொள்கிறோம் என்றார்கள்.
பிடுங்கினான், எல்லாருக்கும் கையிலே ஊற்றினான். விஷ்ணு எல்லாம் குடித்தான். இந்த மாதிரி
கதை எழுதி அல்லவா கடவுளை உண்டாக்குகிறான். சிரித்தோம் நாம் – இப்படி உண்டாக்கித்தானே
கடவுளை உண்டாக்கினான். அதிலே உண்டானவன்தானே கந்தன்.
கடவுள் என்றால்,
அப்பா இல்லை,அம்மா இல்லை, உருவமில்லை. கண்ணுக்குத் தெரியாது; கைக்குச் சிக்காது
அப்படியெல்லாம் சொல்லிவிட்டான். ஒன்றும் வேண்டாம் என்கிறான் – ஆறு வேளை சோறு
என்கிறான், கல்யாணம் என்கிறான். வருஷா வருஷம் கல்யாணமடா என்கிறான்.
5 கோடி பேரைக் கொன்றார் என்று கசாப்புக் கடைக்காரன் மாதிரிப் பண்ணிப் போட்டு, அவரைக்
கருணை உள்ளவர் என்றால் எப்படி? இப்படி எல்லாம் சொல்லி, நம்மைக் கழுதையாக்கிப்
போட்டான். ஒரு உணர்ச்சியும் இல்லாதவனாக்கிப் போட்டான். கடவுள் என்றால் கல்லைக்
கும்பிடவேண்டியது, பார்ப்பான் காலிலே விழ வேண்டியது. அவனுக்குக் காசு கொடுக்கவேண்டியது.
மந்திரி ஆகணும் என்றால் வாழ முடியாது – ஆகிறவன் ஆகிட்டுப் போறான். சட்டசபை மெம்பர்
ஆகணும் என்றால் ஆக முடியாது – ஆகிப் பொறுக்கித் தின்கிறவன் தின்னுட்டுப் போறான். இது
இரண்டும் வேணாம் என்கிறவன் நாமே உறைத்து இருக்கலாமா? இல்லையா? இத்தனைப்
பேருக்குமா மானம் இருக்காது? ஆனதினாலே, தயவு செய்து நீங்கள் விஷயங்களைத் தீவிரமாகக்
கவனிக்கணும். ரொம்பத் தீவிரமாய்க் கவனிக்கணும். ஜெயித்தே ஆகணும்! நான் சொல்கிறேன்,
என்று கேலி பண்ணாதீர்கள் – நீ என்ன நாளைக்கு சாகப் போறே, துணிந்து வந்திருப்பாய் என்று.
நானே பண்ண வேணும் என்று இல்லை; நீங்கள் பண்ண வேண்டிய காரியத்தைத்தானே நான்
செய்கிறேன். அதனாலே எல்லோரும் துணியணும்; மளமளவென்று கலந்துகொள்ளணும், ஆண்
பிள்ளைகள் வர முடியவில்லை என்றால், அவர்கள் வட்டுப்
ீ பொம்பளைங்களை அனுப்புங்கள்.
அனுப்ப முடியவில்லை என்றால், ஒரு நாலு பேரைப் பிடித்து அனுப்புங்கள். நீ போ எனக்காக
என்று. நாம் எல்லோருமாகப் பாடுபட்டோம் என்று தெரியணும்.
நான் என்ன செய்கிறேன், இந்தச் சாக்கிலே நம்ம நாடு நம்மளது ஆகிடாதா? அவ்வளவுதான். நாம்
விட்டது தப்பு. அயோக்கியப் பசங்களுக்கு இடம் கொடுத்தோம் – காங்கிரசுப் பயல்களுக்கு. அவன்
பார்ப்பான், அதிலே பொறுக்கித் தின்னப் போனவன் நம்ம ஆளு. அதிலே முக்கால்வாசிப் பேர்
பார்ப்பானுடைய வைப்பாட்டி மகன் என்று ஒப்புக்கொள்கிறவன்கள்; அவர்களாலே கோளாறாகிப்
போச்சு – கலகம் பண்ண முடியவில்லை அப்பொழுது.
பிரம்மா உண்டாக்கினான் என்றால், என்ன என்று எழுதி இருக்கிறான்? பிரம்மா அப்பன், அவன்
பெண்டாட்டி சரஸ்வதி அவனடைய மகள், இரண்டு பேரும் சேர்ந்தார்கள், இப்படிக் கற்பனை
பண்ணி இருக்கிறான். இதுவெல்லாம் உண்மையாய் இருக்காது. அந்த மானங்கெட்ட காலத்திலே-
அறிவில்லாத, காட்டுமிராண்டிக் காலத்திலே உற்பத்தி பண்ணிய சாதனங்கள், நம்
முட்டாள்தனத்தினாலேயும், அவன் கெட்டிக்காரத்தனத்தினாலேயும் இதைப் பாதுகாத்துக் கொண்டே
வந்துவிட்டான். எவனாவது நாளைக்கு வந்தால் என்ன பண்ணுகிறது? என்று நினைத்து நிறையக்
கோவிலைக் கட்டிப் போட்டான், நிறையச் சாமிகளை வைத்துவிட்டான்; மறந்திடாமல்
இருக்கிறாற்போல நித்தமும் 4 வேளை, 5 வேளை பூசை என்கிறான். வாரத்திற்கு இரண்டு நாள்
உற்சவம் என்கிறான், வருஷத்துக்கு ஒரு தடவை, இரண்டு தடவை கல்யாணம் என்கிறான்.
எனவே, அருமைத் தோழர்களே! நேரமாயிற்று, மணி 10-க்கு மேல் ஆகிவிட்டது. ஏதோ எனக்குத்
தோன்றினதைச் சொன்னேன். முக்கியமாய்ச் சொன்னதினுடைய கருத்தெல்லாம், நாளைக்கு
நடக்கப் போகிற கிளர்ச்சியைப்பற்றி – அதனுடைய தத்துவம் என்ன? அவசியம் என்ன? என்கிறதை
விளக்கினோம். நம் கடமை என்ன என்கிறதை நீங்கள் சிந்திக்கவேணும்.
உங்கள் கடமை என்றால், உங்கள் ஒருவரைப் பொறுத்ததல்ல; தமிழர் என்று சொல்லுகிற நாம்
இத்தனைக் கோடி மக்களையும் பொறுத்தது. பிறகு நாம் வட்டியும், முதலுமாய் உயரலாம் –
ஒன்றும் தேங்கிப் போகாது நம் நாட்டு முன்னேற்றம் என்று உங்களை வணக்கத்தோடெல்லாம்
கேட்டுக் கொண்டு, இந்த ஏற்பாடு பண்ணி இவ்வளவு நேரம் பொறுமையாய் இருந்ததற்கெல்லாம்,
என்னைக் காது கொடுத்துக் கேட்டதற்கு என்னுடைய மனப்பூர்த்தியான நன்றியறிதலைத்
தெரிவித்துக் கொண்டு என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்.
வணக்கம்!
(19.12.1973 அன்று சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் அவர்கள்
ஆற்றிய இறுதி பேருரை)