Professional Documents
Culture Documents
பழித்தாரா?
பெரியார் திருக்குறளை ஆதரித்தாரா?
பழித்தாரா?
திருக்குறள் வ.முனுசாமி
ீ என்பவர் 1935 இல் திருச்சி மலைக்கோட்டை
நூற்றுக்கால் மண்டபத்தில் திருக்குறள் பரப்புரையை மேற்கொண்டார்.
1941 இல் முதன்முதலாக சேலத்தில் திருக்குறள் மாநாட்டையும் அவர் தான்
கூட்டினார். உண்மைநிலை இவ்வாறு இருக்க பெரியார் வந்த பிறகு தான்
திருக்குறள் பரப்புரையும், மாநாடும் நடத்தப்பட்டதைப் போல கதை
சொல்லப்படுகிறது.
(பக். 169)
1950 இல் மீ ண்டும் பெரியார் என்ற வேதாளம் முருங்கை மரம் ஏறியது. அவர்
கூறுகிறார்: “வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு
ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்
போது பலர் என்னிடம் எல்லாம் போய் விட்டால் நமக்கு எது தான் நூல் என்று
கேட்டார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வசுகிறது.
ீ
அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா
கேட்பது என்று பதில் கூறினேன். (விடுதலை 1.6.1950)
பெரியாருக்கு சாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வரையிலும் திருக்குறளின்
மேல் நல்லெண்ணம் பிறக்க வில்லை.